
பாரீசன்(சிவ தனுசு) வில்லொடித்து பத்தினியாள் கைப்பிடித்து
மாரீச மானால் மனைபிரிந்து -பேராசை
மன்னனவன் லங்கேசன் மாளப்பின் வந்தமாயன்,
கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!

காட்டினில் புல்லாங் குழல் இசைத்திடும்,
மாட்டுக்கார் மாலர் மகானாக -வேட்டையாய்
கால்களை மேய, COWபீன பீதகத்தில்(பீதாம்பரம்)
பால்கண்ணன் பத்மநா பர்….!
காட்டுப் பகுதியில் கீதம் இசைத்திடும்,
மாட்டுத் தொழுவத்தில் மண்ணுண்டு -கேட்டிடும்
அன்னைக்கு வாய்க்குள் அகிலத்தைக் காட்டிடும்
கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்

சித்திபுத்தி வேழத்தை சாஷ்டாங் கமாய்வணங்க
அத்தைக்கு மீசமுளைச்(சு) ஆவாள்பார் -சித்தப்பா(சித் அப்பா)
தோத்தாலும் பாஸாவோம்(பரிட்சையில்) தோப்புக் கரணமிட
கூத்தாடும் பிள்ளையார் காப்பு…கிரேசி மோகன்…!
பிள்ளையார் பதினாறு
—————————-
ஷோடஸ நாயகர்
———————-
பெரியா அருள் வாக்கில் ‘’ஷோடஸ நாயகரைப்’’ பற்றி எழுதியதை
வாசித்ததால் விளைந்த வெண்பாக்கள் தங்கள் மேலான பார்வைக்கு….!(முன்பு(2012ல்) எழுதியது…..!
ஸுமுகர்
———–
சிரித்த வதன ஸுமுகரைப் போற்ற
விரித்த வலைவெவ் வினையை -அறுத்து
இழைத்திடுவான் அத்தச்சன் எண்ணென் கலையாய்
அழைத்திடுவாய் அவ்வை அளவு….(1)….06-03-2012
ஏகதந்தர்
———–
சோகம் களைந்து ஸுமுகம் குவித்திடும்
யோகம் விரும்பிட ஏற்றிவிடும் -ஏகதந்தன்
காப்பிருக்க கற்பூரம் கூடவேண்டாம், காரியக்கை
பூப்பறிக்கும் உன்வீட்டில் பார்….(2)….06-03-2012
கபிலர்
——–
சிந்தூர வண்ணனை சித்தி அருளேக
தந்தன் கபிலனைத் தோத்தரிக்க -வந்த
கருத்ததெல்லாம் பாலாக, கண்முன் விலகும்
வருத்தமெலாம் சாயம் வெளுத்து….(3)….06-03-2012
கஜகர்ணகர்
—————
கஜகர்ணம் மற்ற கடவுளர்க்கு போட
நிஜவர்ணம் காட்டும் நெகிழ்ந்து -கஜகர்
ணகர்கபிலர் காதினில் நாத்திக பூசை
பகர்அப லைக்கும் பலன்….(4)….07-03-2012
லம்போதரர்
————–
சம்போ மகாதேவர் செய்த தலைப்பிள்ளை
லம்போ தரனால் லகுவாக -வம்போடு
தும்பும் விலகும் துதிக்கை விரட்டிடும்;
நம்பாள் கஜகர் ணகர்….(5)….07-03-2012
விகடர்
———–
மகுடம் தரித்தரன் முப்புரம் ஏக
சகடத்தின் அச்சை சிதைத்த -விகடன்
லலிதாங்கி மைந்தனை லம்போ தரனை
எலிதாங்கும் ஆனையை ஏத்து….(6)….08-03-2012
விக்கினராஜர்
—————-
சுக்கிரன் பார்க்க சுரர்கள் பணிந்திட
இக்கிரக பூமியில் இந்திரனாய், -விக்கின
ராஜன் விகடனை ராப்பகலாய் வேண்டிட
பூஜா பலனாய் பவிஷு….(7)….08-03-2012
வினாயகர்
————
வினாஅகம் கேட்க விசாரணை செய்யும்
மனோமுக மார்கம் முனிக்கே -வினாயகன்
விக்கின ராஜனை வேண்டித் துயில்வோர்க்கு
சொக்கிடும் போதேமோட் ஷம்….(8)….08-03-2012
தூமகேது
———–
சோமதேவன் சீமந்தன் மாமன்மால் அம்சமா
சாமகாதன் சீமந்தன் மாமன்மால் அம்சமாய்
தூமரூப துஷ்டனைத் தீர்த்திட -தூமகேது
தூமதீது துஷ்டனைத் தீர்த்திட -தூமகேது
வாக அவதரித்து வெற்றியை சூடிய
வாகை வினாயகனை வாழ்த்து….(9)….08-03-2012
கணாத்யஷர்
—————
அனாதியாதி அச்சன் அரசவை பூத
கணாதி களின்சேனைக் காவல் -ஜனாதிபதி
தூமகேது முன்புநின்று தோப்புக் கரணமிட
சாமகீதம் சம்சார சிந்து….(10)….09-03-2012
பாலசந்த்ரர்
————–
நாலுமுகன் செய்த நடிகர் களையியக்கும்
பாலமுக பாலசந்த்ர பிள்ளையார் -ஞால
கணாத்யஷன் காலில் கிடப்போர்க்கு நாளும்
தனாக்ஷர தீரம் தரும்….(11)….11-0302012
கஜானனர்
————-
அஜாதசத்ரு ஆனை அரக்கனுக்(கு) அன்று
கஜேந்திர மோட்ஷம் கொடுத்த -கஜானனன்
கோலசந்த்ரன் கொண்டமகா கர்வம் அடக்கிய
பாலசந்த்ரன் பாதம் புகு….(12)….11-03-2012
வக்ரதுண்டர்
—————
வக்ரதுண்ட சேயின் விடைபெறாமல், முப்புர
நிக்ரகம் செய்ய நினைத்தூர்ந்த -உக்ரகண்டர்
சக்ரதுண்டம் செய்த சதுர்த்தி கஜானனர்
விக்னகண்டம் தீர்ப்பார் விரைந்து….(13)….12-03-2012
சூர்ப்பகர்ணர்
—————-
வரம்தரும் போதே முறம்போல தீதை
புரம்தள்ளி நையப் புடைத்து -அறம்பொருள்
ஆர்ப்புகங்கை போலின்பம், அவ்வீடு சேர்த்திடும்
சூர்ப்பகர்ண வக்ரதுண்ட சேய்….(14)….12-03-2012
ஹேரம்பர்
————-
பேரம்பார் பண்ணிப்பார் பூவெருக்கம் புல்லருகம்
பேரன்பாய் பாதத்தில் போட்டுவிட்டு -ஆரம்பம்
ஹேரம்பா என்றழைக்க எப்படியும் வெற்றிதான்
நேரும்பார் சூர்ப்பகர்ண னால்….(15)….12-03-2012
ஸ்கந்தபூர்வஜர்
—————–
சீரும்பர் கோன்மகள் சேனை கரம்பிடித்த
சூரன்பால் வேலெறிந்த ஸ்கந்தனுக்கு -ஹேரம்பர்
முன்வந்த பூர்வஜர் ,பெண்ணாக வெற்றியாய்நம்
பின்வந்து நிற்கும் பிடி….(16)….
பலஸ்ருதி
————-
பதினாறும் பெற்று பெருவாழ்வு காண
பதினாறு பேர்களைப் பெற்ற -அதிகாரி
அக்கணேச ஆனைமுன் விக்கினங்கள் வைத்திட
மக்கிடுமே மண்புழுவாய் மாய்ந்து….()….05-03-2012…கிரேசி மோகன்….!
’’சாட்சி கணபதி பெருமாள்’’….
—————————————————
‘’காட்சி அளிக்கின்றார் கீழத் திருப்பதியில்
மாட்சிமை மாம(ன்)அல மேலுமண, -சாட்சியாய்:
நாம கணபதியை நாம வணங்கினால்,
ஷேமம் ஜரகண்டி ஸ்பீட்’’….கிரேசி மோகன்….!
படமும் பாடலும்….!
——————————————–
பிஸியாகப் பார்வதி பூரணம் செய்ய
பசியோடு பிள்ளையார் பார்க்க -ருஸியான
மோதகம் ஏனுனக்கு மைந்தா பஸியென்றால்
போதகப்பன் கையில் பழம்….கிரேசி மோகன்….!
பூரணத்தை தாயார் பூரணமே செய்திடும்
காரணத்தைக் காணும் கணேச -வாரணமே
நாளை சதுர்த்தி நலமாய் நிகழ்ந்ததும்
வேலையில்(கடலில்) மூழ்த்துவோம் வா….கிரேசி மோகன்….!

சுதாமன் அவலுக்கு சொத்தை அளித்த
கதாதரன் கண்ணன் பரம -பிதாவாம்
அலர்மேல் அன்னை அரியின் சிபார்சால்
மலரும்நாள் காசின் பிறப்பு….!
அவலுக்கு செல்வம், அழகுமயில் ராதை
அவளுக்குக் காதல், விஜயன் -கவலைக்கு,
கீதை, அடியார்தம் கண்ணீர் திவலைக்கு
தாதை அளிப்பான் துடைப்பு….!
திகட்டும் அளவு திரவியம் தந்தாய்
புகட்டிய நஞ்சை புசித்தாய் -நகத்தால்
உரித்தெறிந்த உற்சாகம் இன்றெங்கு போயிற்று
தரித்திரநா ராயணா தா….!
வெறும்வாயில் மெல்லும் அவலா கிடாது
குருவாயூ ரப்பா எனக்கும் -திருவாயால்
பாடிய நாரண பட்டர்க்குப் போட்டாற்போல்
போடுநீ ஆமாம்சா மி….!
அந்தரங்க சுத்தியுடன் அந்தணங்கு ஆண்டாள்போல்
அந்தரங்க ராஜனை அர்ச்சிக்க -வந்திறங்கி
வைகுண்டம் வாவென்று கைகொடுத்து தூக்கிவிடும்
பைகொண்ட நாகமுற்ற பொற்பு….!
தீனர்க்(கு) அருளூற்றாய் ஈனர்க்(கு) இருள்கூற்றாய்
மீனமாய் ஏனசிம்ம வாமன -மூணான
ராம கிருஷ்ண கலிபுருஷ னாய்வந்த
நாம சகஸ்ரனாய் நாடு….கிரேசி மோகன்….!
நீராடும் வேளை நிலைவாசல் காவலுக்கு
ஓராளைத் தேடினாள் ஓங்காரி -சேறாக
மேனியில் பூசிய மஞ்சளால் செய்தனள்
ஞானி வினாயக னை….!
ஆதியே ஆனாலும் அன்னை குளிக்கையில்
பாதியில் வந்த பரம்பொருளை -வீதியில்
தள்ளிய பிள்ளைத் தலையைத் தகப்பனீசர்
கிள்ளியங்கு வைத்தார் கஜம்…கிரேசி மோகன்….!
அட்வான்ஸ் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்….!
பிள்ளையார் வெண்பாக்கள்
———————————————
சோமன்த னைச்சென்னி சூடும் சிவகுடும்ப
சீமந்த மைந்தன் சதுர்த்தியின்று -மாமன்தன்
சக்கரத்தை உண்டுமிழ்ந்த சித்தி வினாயகனை
வக்கிர துண்டனை வாழ்த்து….(1)
தம்பிக்கு காதல் துணைசென்ற தந்தியே
தும்பிக்கை வேழமே, தேவர்கள் -ஸ்தம்பிக்க
ஆட்சி கயிலாயத்தை அவ்வைக்(கு) அளித்தவா
காட்சிக்(கு) இனியபிள்ளாய் காப்பு….(2)
தொந்தி குலுங்கிட தந்தி ஜொலித்திட
முந்தி முழுமுதல் மோதகன்முச் -சந்தி
அரசடியில் வீற்று அருள்பாலிக் கின்றான்
முரசடித்தேன் தந்திக்கு முந்து….(3)
ஆனைக்கா அம்மையும் ஊனைக்கொள் ஊர்த்தவர்க்கும்
சேனைக்கா வேலன் சகோதரனாய்-தீனர்க்காய்
தோன்றிய பிள்ளாய், தமிழாக அவ்வைக்கோல்
ஊன்றிய வேழா உதவு….(4)
அக்கினிக்கு முப்புரத்தை ஆட்படுத்த தேரேறி
உக்கிரமாய் சென்ற உருத்திரர்க்கே -விக்கினமாய்
அச்சொடித்து உன்னிருப்பை எச்சரிக்கை செய்தவரை
உச்சரிக்க வைத்தாய் ஒழுங்கு….(5)
கணபதி ராயா மனிதச காயா
பனிபதி கைலாசப் பையா -தனபதி
மாலின் மருகோனே மயிலோனின் மூத்தோனே
கோல வினாயகனே காப்பு….(6)
கயிலாய சீதனம் கற்பகச் செல்லம்
மயிலாப்பூர் தோழன் மகோதரன் -பயிலோரும்
பள்ளிப் பரிட்சையில் பெற்றிட வெற்றியை
அள்ளித் தருவான் அவன்….(7)
அருகம்புல் தேங்காய் எருக்கம்பூ, மாலின்
மருகன்பால் வைக்க மகிழ்ந்து -ஒருகொம்பால்
நான்முகன் நம்தலையில் நட்ட விதையினை
ஆனைமுகம் ஆக்கும் அரசு….(8)
cowசுகள் பேணிடும் கண்ணன் மருகோனே
mouseயிக வாகனா மோதகா -houseனுள்
வாராய் வினாயகா வேளை சதுர்த்தியில்
தாராய் அறிவில் தெளிவு….(9)
மூஷிக வாகனனை தோஷ விநாசகனை
பாஷைகள் போற்றும் ப்ரணவனை -வேஷமாய்
வேழத்தோல் போர்த்திய தோழக் கடவுளை
ஏழைகள் ஈசனை ஏத்து….(10)
அரச மரத்தடியில் ஆகாசம் பார்த்து
உரசும் எலியோடு ஒண்டி -பெருசாய்
எதிர்பார்ப்பு ஏதுமின்றி ஏழெட்டு தேங்காய்
சதிராக யாதுமருள் வான்….(11)
கமர்கட் கடலையுண்டை குச்சிஐஸ் மூன்றும்
சமர்பிப்பேன் நானுக்கு என்றும் -அமர்ந்திட்டு
செங்கழுநீர் பிள்ளையாரே சாப்பிட்டு த்ருப்தியாய்
சங்கத் தமிழ்மூன்றும் தா….(12)…..கிரேசி மோகன்….!

“மயிலிறகு சூடும் முடிகொண்ட கண்ணன்
DAILYயொரு கோலத் திகழ்வு; -வெயிலுருகும்
சித்திரை மாதத்தை சீதக் களபமாயுன்
சித்திரம் மாற்றுதுகே சவ்”….!
மெய்யே அகலாக மேவுமுயிர் நெய்யாக
உய்யும் ஒரேஆன்மன் ஒளியாக -அய்யநின்
ஆரா தனையல்லால் வேறே துமெண்ணாத
சீரான வாழ்வில் செலுத்து….கிரேசி மோகன்….!
மோதகப் பிள்ளை முழுங்க, பதைபதைத்து
பீதகப் பட்டாடை பாழாக -காதினை
கைகளால் பற்றி கரணமிட்(டு) ஆழியைக்
கொய்தகோ பாலனே காப்பு….!(வருகின்றது வினாயக சதுர்த்தி….!)
ஆவின் விளக்காகும், ஆயர் விளக்காகும்
தாவிக்(தேவகி விட்டு யசோதை) குடல்விளக்கும் தாமு(தாமோதர்) -சேயெந்தன்,
மாரியருள் பெய்கின்ற காரிருள் கண்ணனே
வேறிருள் போக்க விளக்கு….!

பக்திக்(கு) அவன்பதங்கள், சக்திக்(கு) அவன்சரணம்
முக்திக்(கு) அவனின் மலர்த்தாள்கள் -யுக்தியாய்
கண்ணினுன் தாம்பினால் கட்டும் உரிமைக்குக்
கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!
பக்திக்(கு) அவன்பதங்கள், சக்திக்(கு) அவன்சரணம்
முக்திக்(கு) அவனின் மலர்த்தாள்கள் -யுக்தியாய்
கண்ணினுன் தாம்பினால் கட்டும் உரிமைக்குக்
கண்ணனை நெஞ்சே கருது….

ஆன்மக் கண்ணனே நேரில் வந்து வாத்ஸல்யமாய்
கீதை உரைத்தாலும் காடுறும்(சுடுகாடுறும்)
ஜீவன் கூழாட்பட்டு மேய்ச்சல் சோத்துக்குத்தான்
ஓடும் ஐம்புலக் காய்ச்சலில்….யோசிக்க வைத்தமைக்கு நன்றி கலந்த
சபாஷ் கேசவ்….!
”ஓடுற மாட்டுடன் ஓடிக் கறக்கின்றான்
காடுறும் கன்றுக்குக் கால்கொடுத்து, -பாடுறான்
காய்ச்சல் பசுவுக்கு கீதையை வாசித்து:
மேய்ச்சல் விருப்பத்தில் மாடு’’….கிரேசி மோகன்….!
KRISHNA FOR TODAY….!(ஹேப்பி கண்ணன் பிறந்தநாள்)….!
———————————————
கடந்த பத்து வருடங்களாக, அடியேன் ’’காலைக் கடன்’’
கேசவ் அனுப்பும் கண்ணன் ஓவியத்திற்கு வெண்பா வடிக்கும் (திரு)’’மாலைகடன்’’….நன்றி கேசவ்….!தொடரட்டும் நம் பணி….!
“ஏறுமயில் ஏறிவிளை யாடும்முகம் ஒன்று” மெட்டில் எழுதியது….!

கண்ணன் திருப் புகழ்
————————–
“கோலுயர கன்றுகளை காத்தமுகம் ஒன்று
கோபியர்கள் கூட்டமதில் கொஞ்சுமுகம் ஒன்று
நீலயமு னாநதியில் நீந்துமுகம் ஒன்று
நச்சரவம் மீதுநட மாடும்முகம் ஒன்று
பால்நிலவு ராதைமுகம் பார்க்கும்முகம் ஒன்று
பாரமுலை பூதகியின் ப்ராணமுகம் ஒன்று
காலனென மாமனுயிர் கொண்டமுகம் ஒன்று
ஆலிலையில் பாலனென ஆழ்ந்தபெரு மாளே”….
இராமன் திருப் புகழ்….!
“கோசலைகு மாரனென கொஞ்சுமுகம் ஒன்று
தேசுமுனி வாசிஷ்ட யோகமுகம் ஒன்று
கோசிகனின் சீடனென கண்டமுகம் ஒன்று
கோரமகள் தாடகையை கொன்றமுகம் ஒன்று
ஈசன்சிலை யாகசிலை இற்றமுகம் ஒன்று
வாசமகள் ஜானகியின் ஆசைமுகம் ஒன்று
ஆசுகவி மாருதியின் நட்புமுகம் ஒன்று
ஆதிகவி ஒதுமிதி காசபெரு மாளே”….!
நிவேதனம் கோகுலாஷ்டமி
———————————-
திருக்கண் ணமுது திரள்கின்ற வெண்ணை
பருப்புதயிர் சாதம் பழங்கள் -உருக்குலைந்து
அண்டாவில் சாறு அதிரசம் சீடைமுறுக்கு
உண்டேனுன் நாமம் உரைத்து….!
மார்கழி மாதத்தில் மாடுகள் மேய்த்திரவில்
ஓர்கழி ஊது குழலோடு -ஊர்புகும்
கார்முகில் வண்ணன்மேல் கோதூளி மின்னிட
பார்மிசை ராப்பக லாச்சு….!
திருவிருந்த மார்பன் திருத்துழாய் மார்பன்
மருவிருந்த மார்பன் மகனாய்ச் -சிறையில்
கருவிருந்த மார்பன் தெருவிருந்த மண்ணை
பெருவிருந்தாய் உண்ட புதிர்….!
காலை எழுந்தவுடன் கண்ணன் பெயர்சொல்லி
மூளை அடுப்பை மூட்டிடு -மாலை
மலைவனம் சென்றாயர் மாடுகள் மேய்க்க
அலைபவன் பேரால் அணை(SWITCH OFF)….!
பூந்தன மாதோடு சாந்தமும் பூசிய
காந்தனே கண்துயில்ஏ காந்தனே -நான்தினம்
நின்புகழ், நின்னெழில், நின்கதை, நின்னருள்
வெண்பாவில் பாட விரும்பு….!
டோங்க்ரே மகராஜ் பாகவதத்திலிருந்து….
—————————————————-
அங்கை படுக்கையாய் அதரம் தலையணையாய்
செங்கமலக் கண்ணிமைகள் சாமரமாய் -தொங்குமெழில்
புல்லாக்கு மேல்குடையாய் வல்லா னுடன்வாழும்
புல்லாங் குழலுந்தன் பேறு….கிரேசி மோகன்….!
மழைத்துளி மழைத்துளி மலரில் சங்கமம்
தேன்துளி தேன்துளி உயிரினில் சனனம்
விழித்துளி விழித்துளி கலையினில் மனனம்
கனித்துளி கலந்து கவித்துளியாய் மலருது!
நள்ளிரவில் தோன்றிய கண்ண பெருமாளை நள்ளிரவில் அழைத்தல் தானே முறை….!
பெருமாள் திருப் புகழ்….!
காப்பு
—————
பெருமாள் திருப் புகழ்….!
———————————————————-
“சிந்தை மகிழ சிவநேசர்செ விதனில்
மந்த்ர வடிவ உபதேசம ருளிய
கந்த முருக கதிர்காமம ருகனின் -முறைமாம
அந்த ரிவயி ரவிவாமமி றைவனின்
பங்கு திரும யிலைவாழுமை இளைய
தங்கை வருகை சினமாமனி டம்உரை -சிறைபால
முந்தை வினைகள் முளையோடுவி டுபட
சிந்தை வடிவில் பலநாள்பழ கியவ
கந்தை விலக ரமணேசர்வ ழிதனில்-நடமாட
எந்தை வருக ரகுநாயக வருக
என்று அருண கிரியார்புகழ் தமிழின்
சந்த நடையில் வரவேணும்நெ டிதுயர் -பெருமாளே”….கிரேசி மோகன்….!
“மரத்தடி குளக்கரை
படித்துறை தவத்தினில் -கழியாது
வலப்புற மனத்திரு
விரற்கடை புறத்தினில் -நிலையான
இருப்பினை நெருக்கிட
மலைப்புற சிவக்கனி -ரமணேசன்
உரைத்ததை தினப்படி
உளத்தினில் உறைத்திட -அருள்வாயே
விரற்கடை பொருப்பினை
உயர்த்திட இடைக்குடி -மழையாலே
தவிப்பினை விரட்டிவ
யிரத்தினை மிரட்டிய -கருநீல
நிறத்தவ ,விடத்தலை
நிருத்தியம் நிகழ்த்திய -முலையேறி
அரக்கியை அழித்தவ
இடைக்குடி ஜனித்திடும் -பெருமாளே”….கிரேசி மோகன்….!

ஊதா நிறத்தவர் ஊதிக் களைத்தனர்
ராதை கழுத்தென்னும் சங்கை – போதை
தலைக்கேற கண்ணனவர் தோளைத் தழுவி
வளைக்கரத்தால் போரென்றாள் மாது…. !
ஆலிங் கனித்தராதை தோளிங்க நர்த்தனத்தால்
காளிங்கக் காட்சி கவனத்தில் – மாலிங்கு
ராதையித் தோள்சுமந்து காதல்கூத் தாடுகிறார்
கீதை வரிகள் மறந்து….கிரேசி மோகன்….!