கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

“மயிலிறகு சூடும் முடிகொண்ட கண்ணன்
DAILYயொரு கோலத் திகழ்வு; -வெயிலுருகும்
சித்திரை மாதத்தை சீதக் களபமாயுன்
சித்திரம் மாற்றுதுகே சவ்”….!
மெய்யே அகலாக மேவுமுயிர் நெய்யாக
உய்யும் ஒரேஆன்மன் ஒளியாக -அய்யநின்
ஆரா தனையல்லால் வேறே துமெண்ணாத
சீரான வாழ்வில் செலுத்து….கிரேசி மோகன்….!
மோதகப் பிள்ளை முழுங்க, பதைபதைத்து
பீதகப் பட்டாடை பாழாக -காதினை
கைகளால் பற்றி கரணமிட்(டு) ஆழியைக்
கொய்தகோ பாலனே காப்பு….!(வருகின்றது வினாயக சதுர்த்தி….!)
ஆவின் விளக்காகும், ஆயர் விளக்காகும்
தாவிக்(தேவகி விட்டு யசோதை) குடல்விளக்கும் தாமு(தாமோதர்) -சேயெந்தன்,
மாரியருள் பெய்கின்ற காரிருள் கண்ணனே
வேறிருள் போக்க விளக்கு….!