கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

காட்டினில் புல்லாங் குழல் இசைத்திடும்,
மாட்டுக்கார் மாலர் மகானாக -வேட்டையாய்
கால்களை மேய, COWபீன பீதகத்தில்(பீதாம்பரம்)
பால்கண்ணன் பத்மநா பர்….!
காட்டுப் பகுதியில் கீதம் இசைத்திடும்,
மாட்டுத் தொழுவத்தில் மண்ணுண்டு -கேட்டிடும்
அன்னைக்கு வாய்க்குள் அகிலத்தைக் காட்டிடும்
கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்