HAPPY GOKULASHTAMY….!

 

மழைத்துளி மழைத்துளி மலரில் சங்கமம்
தேன்துளி தேன்துளி உயிரினில் சனனம்
விழித்துளி விழித்துளி கலையினில் மனனம்
கனித்துளி கலந்து கவித்துளியாய் மலருது!

நள்ளிரவில் தோன்றிய கண்ண பெருமாளை நள்ளிரவில் அழைத்தல் தானே முறை….!
பெருமாள் திருப் புகழ்….!

காப்பு
—————
பெருமாள் திருப் புகழ்….!
———————————————————-

“சிந்தை மகிழ சிவநேசர்செ விதனில்
மந்த்ர வடிவ உபதேசம ருளிய
கந்த முருக கதிர்காமம ருகனின் -முறைமாம
அந்த ரிவயி ரவிவாமமி றைவனின்
பங்கு திரும யிலைவாழுமை இளைய
தங்கை வருகை சினமாமனி டம்உரை -சிறைபால
முந்தை வினைகள் முளையோடுவி டுபட
சிந்தை வடிவில் பலநாள்பழ கியவ
கந்தை விலக ரமணேசர்வ ழிதனில்-நடமாட
எந்தை வருக ரகுநாயக வருக
என்று அருண கிரியார்புகழ் தமிழின்
சந்த நடையில் வரவேணும்நெ டிதுயர் -பெருமாளே”….கிரேசி மோகன்….!

“மரத்தடி குளக்கரை
படித்துறை தவத்தினில் -கழியாது
வலப்புற மனத்திரு
விரற்கடை புறத்தினில் -நிலையான

இருப்பினை நெருக்கிட
மலைப்புற சிவக்கனி -ரமணேசன்
உரைத்ததை தினப்படி
உளத்தினில் உறைத்திட -அருள்வாயே

விரற்கடை பொருப்பினை
உயர்த்திட இடைக்குடி -மழையாலே
தவிப்பினை விரட்டிவ
யிரத்தினை மிரட்டிய -கருநீல

நிறத்தவ ,விடத்தலை
நிருத்தியம் நிகழ்த்திய -முலையேறி
அரக்கியை அழித்தவ
இடைக்குடி ஜனித்திடும் -பெருமாளே”….கிரேசி மோகன்….!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *