கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

ஊதா நிறத்தவர் ஊதிக் களைத்தனர்
ராதை கழுத்தென்னும் சங்கை – போதை
தலைக்கேற கண்ணனவர் தோளைத் தழுவி
வளைக்கரத்தால் போரென்றாள் மாது…. !
ஆலிங் கனித்தராதை தோளிங்க நர்த்தனத்தால்
காளிங்கக் காட்சி கவனத்தில் – மாலிங்கு
ராதையித் தோள்சுமந்து காதல்கூத் தாடுகிறார்
கீதை வரிகள் மறந்து….கிரேசி மோகன்….!