Tag: சக்தி சக்திதாசன்

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…..(55)

    சக்தி சக்திதாசன்

     அன்பினியவர்களுக்கு ,

    அடுத்தொரு மடலில் அன்புடன் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன்.

     ஒவ்வொரு புலம்பெயர் தமிழனின் வாழ்விலும் தான் வாழும் நாட்டில் “குடியேறுதல்” (Immigration) எனும் கொள்கையினால் ஏற்படும் தாக்கங்களைப் பற்றிய அக்கறை எப்போதுமே தகித்துக் கொண்டிருக்கும்.

     காரணம்?…..

    அதன் எதிர்மறையான தாக்கம் அவர்களது அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள், தாம் வாழும் சமுதாயத்தில் அந்நாட்டின் சொந்த ம்க்களெனக் கருதப்படுவோர் தம்மை நோக்கி காட்டப்போகும் உணர்வுகள் என்பனவற்றைப் பற்றிய பிரதிபலிப்புகளே !

    அவ்வகையில் நான் வாழும் இந்த இங்கிலாந்து தேசத்திலே வெளிநாட்டவரின் வருகையால் “குடியேறுதல்” எனும் இந்தக் கொள்கையின் அழுத்தம் தற்போதைய அரசியல் வானிலே வாக்குப் பெறும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது.

    இங்கிலாந்து தேசத்து வெள்ளை இன மக்களிடையே தாம் தமது சொந்த நாட்டிலேயே சிறுபான்மையினராக மாறிக் கொண்டிருப்பதாக எழும் ஒரு பிரமைக்கு பல அரசியல் கட்சிகளும் அதன் பங்களிப்பாளர்களும் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால் , இத்தகைய ஒரு பீதி இந்நாட்டு மக்களிடையே எழுவதன் பின்னனியைச் சற்று ஆராய்ந்தோமானால் அதற்கு வலுவான காரணங்கள் உண்டு என்பதனையும் நான் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

    அவ்வெளிநாட்டவர் “குடியேறுதல்” கொள்கைவழி எனது வாழ்வினை இந்நாட்டில் மேற்கொள்ளுபவர்களின் பட்டியலில் நானும் ஒருவனாக இருந்தாலும், இத்தகிய பீதியின் உருவாக்கத்திற்கு எம்மைப் போன்றவர்களின் நடவடிக்கைகள் வழிகோலாமலில்லை என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

    பி.பி.சி நிறுவனத்தின் அரசியல் அவதானிப்பாளர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான “நிக் ரொபின்சன் ” (Nick Robinson) என்பவர் சமீபத்தில் ஒரு ஆய்வொன்றை நடத்தியிருந்தார்.

    இங்கிலாந்தின் “கேம்பிரிட்ஜ்சையர் (Cambridgeshire)” எனும் மாவட்டத்தைச் சேர்ந்த “பீட்டபரோ (Peterborough)” எனும் இடத்தில் ஒரு சிறிய மாதிரி ஆய்வை நடத்தியிருந்தார்.

    சுமர் 40 வருடங்களின் முன்னே ஒரு முற்றிலும் ஆங்கில நகரமாயிருந்த இந்நகர் இன்றைய வெளிநாட்டவரின் “குடியேறுதலை” அடுத்து எவ்வகையான மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது என்று ஒரு சிறிய காணோளியை எடுத்துள்ளார்.

    இன்றைய பீட்டர்பரோ நகரில் சுமார் 24000 வெளிநாட்டவர் குடியேறியுள்ளார்கள். இவர்களில் பல வருடங்களுக்கு முன்னால் மிகவும் அன்புடன் வரவேற்கப்பட்ட பல ஆசிய நாட்டு மக்களுடன் சமீபத்தில் குடியேறிய கிழக்கு ஜரோப்பிய மக்கள் பலரும் அடங்குகிறார்கள்..

    நிக் ரொபின்சன் அவர்கள் பலரை நேர்காணல் கண்டுள்ளார். அப்போது அவருடன் உரையாடிய ஒரு பீட்டர்பரோ நகரைல் பல தலிமுறைகளாஅக வாழ்ந்து வரும் வெள்ளை இனத்தவர் தான் அந்நகரை விட்டு வெளியேறப் போவதாகவும், தனது குழந்தைகளின் கல்வியைப் பற்றி தான் சச்சம் கொண்டுள்ளதாகவும் கூறினார்.

    வகுப்பறைகளில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் அவர்களின் கல்வியின் தரம் குறைகின்றது என்று குற்றம் சாட்டியதோடு, பல வெளிநாட்டவர் பொது இடங்களில் தமது சொந்த மொழிகளில் உரையாடும் போது அருகிருக்கும் தனக்கு அவர்கள் எதைப்பற்றிப் பேசுகிறார்கள் என்று தெரியாததினால் அவர்களின் மீது சந்தேகக் கண் கொண்ட பார்வையையே வீசத் தோன்றுகிறது என்றும் குறிப்பிட்டார்.

    அதே போல இரண்டு, மூன்று தலைமுறைகளாக பீட்டர்பரோ நகரில் வாழ்ந்து வரும் குடியேறிகளில் ஒருவரான சீக்கியர் ஒர்வருடன் நிக் ரொபின்சன் பேசியபோது அவரது கருத்துக்கள் ஆச்சரியமானவைகளாக இருந்தது.

    சமீபத்திய வெளிநாட்டவர் இங்கிலாந்து சமுதாயத்துடன் கலந்து வாழாமல் தாம் தனிக்குழுக்களாக வாழ்ந்து வருகிறார்கள். இது இப்பிரச்சனைகளுக்கு மூல காரணம் என்கிறார் இவர்.

    அட ! ஒரு வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறிய சமூகத்திலிருந்து வந்த உங்களுக்கே இப்படியான கருத்து இருக்கிறதா ? என ஆச்சரியப்பட்ட நிக் ரொபின்சனிடம் தற்போதைய “குடியேறுதல்” கொள்கை அளவுக்கதிமான வெளிநாட்டவரின் வருகைக்கு இடமளிக்கிறது என்று வேறு அந்தச் சீக்கியர் குறிப்பிட்டார்.

    உண்மையான தெளிவான வகையில் யதார்த்தத்தை முன்னிலைப்படுத்தி கூற வேண்டுமானால் வேறுநாடுகளில் இருந்து இங்கிலாந்து தேசத்தில் குடியேறிய எம்மைப் போன்றவர்கள் சமுதாய ஒருங்கிணைப்புக்கு எவ்விகிதத்தில் எமது பங்களிபினைச் செய்திருக்கிறோம் என்பது கெள்விக்குறியே !

    எமது நாடுகளில் கிடைக்காத அளவு சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் நாம் எமது காலாச்சாரங்களைப் பேணிப் பாதுகாக்கிறோம் எனும் மன்ப்பான்மையினால் எம்மை இந்தச் சமுதாயத்தினின்றும் வேறுபடுத்தி வைத்துக் கொள்கிறோமா? என்று எம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய நிலையிலிருக்கிறோம்.

    மொழியைத் தக்க வைத்துக் கொள்வது, கலாச்சார விழுமியங்களைப் பாதுகாத்துக் கொள்வது, எமது தனித்தன்மையைப் பேணிக்கொள்வது இது ஒருபோதும் தவறாகாது.

    ஆனால் இவைகளைச் செய்கிறோம் என்று எண்ணிக் கொண்டு எமது சுயாதீன எல்லைகளைக் கடந்து மர்றவரின் தனித்தன்மையைப் பறிக்கும் அள்விற்கு எமது வாழ்வியலை உபயோகிப்பது தவறு என்பதே எனது கருத்து.

    எமது அடுத்த தலைமுறை தமக்கு கலாச்சாரம் எனும் பெயரால் போடப்படும் தடைகளைக் கடந்து இச்சமுதாயத்தில் முக்கிய பொறுப்புக்களை வகிப்பதற்கு வழிவகுப்பது இத்தலைமுறையாகிய எமது கைகளிலேயே தங்கியுள்ளது.

    எம்மை இன்முகத்துடன் வரவேற்று எமக்கு ஒரு நிம்மதியான வாழ்வை அமைத்துக் கொள்வதற்கு உதவிய இந்நாட்டவரின் மனதில் பீதியை உருவாக்க நாம் காரணமாகலாமா?

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    30.04.2013

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…. (54)

    சக்தி சக்திதாசன்                                                                                                                                                                                                                                                                                                                                                                                            

    அன்பினியவர்களே !

     இனிய என் புதுவருட வாழ்த்துக்களுடன் இம்மடலில் உங்களைச் சந்தீஈஈஈஈப்பதில் மகிழ்வடைகிறேன்.

     சென்ற புதன்கிழமை மறைந்த முன்னால் பிரதமர் திருமதி மார்கிரெட் தாச்சர் அவர்களின் இறுதிச் சடங்குகள் தேசிய அளவிலான பரிமாணங்களுடன் நடைபெற்றது. இதற்குரிய செலவு ஏறக்குறைய 10 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ஸ் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

     இன்றைய பொருளாதாரச் சிக்கல் நிறைந்த சூழலிலே இத்தகியத்ப்ப்ர் செலவுடன் கூடிய முன்னால் பிரதமருக்கான இறுதி நிகழ்வு மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்பட வேண்டுமா ? எனும் கேள்வி நாட்டின் பல பாகத்தில் இருந்து எழுந்தாலும்,இந்நாட்டின் முதலாவது பெண் பிரதமர் , தொடர்ந்து அதிகாலம் பிரதமராக வீற்றிருந்து ஒரு சாதனையைப் படைத்தவர் ரெனும் வகையில் இவருக்காக இது செய்யப்படலாம் எனும் வாதம் ஜெயித்து விட்டது என்பதே உண்மையாகிறது.

     இது ஒருபுறமிருக்க பிரித்தானியப் பிரதமர் திரு டேவிட் கமரன் அவர்கள் ஒரு புதுச் சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறார்.

     அது என்ன என்று பார்ப்போமா?

     திருமதி தாச்சரின் பதவிக்காலம் இங்கிலாந்தை ஆக்கப்பாதையிலா அன்றி அழிவுப் பாதையிலா இட்டுச் சென்றிருக்க்க்கிறது எனும் வாதத்தைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் ” இன்று இங்கிலாந்தில் நாமனைவருமே “தாச்சரியவாதிகள் (Thatcherites)” “என்றொரு வாதத்தை முன்வைத்து அதைச் சுற்றி ஓர் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

     அதுசரி “தாச்சரியவாதிகள் அன்றி Thatcherites “ என்றால் என்ன ? “ தாச்சரிசம்” என்றொரு “இசம்” உண்டா ? எனும் கேள்விகள் மனதினுள்ளே பூதாகரமாக விளைகிறது.

     திருமதி தாச்சர் 1979ம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்ற போது இங்கிலாந்தின் அரசியல் ஒரு சங்கடமான நிலையிலிருந்தது என்பது உண்மையே !

     தொழிற்சங்கங்களின் அனுசரணையுடன் கூடிய “லேபர்” கட்சியின் அரசாங்கம் “தொழிலாளர் சங்கங்களின் ” அழுங்குப் பிடியினுள் சிக்கிக் கொண்டிருந்தது.

     இங்கிலாந்தின் ஆலைகள் தொழிலாளர்களுக்கான கூலிகளை தொழிற்சங்கங்களின் ஆணப்படி உயர்த்த வேண்டி வந்ததினால் இங்கிலாந்தின் உற்பத்திப் பொருட்களின் விலை மிகவும் அதிகமாக இருந்தது. இதனால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருந்தது.

     அது மட்டுமின்றி தொழிற்சங்கங்களின் கெடுபிடி அதிகரித்து இருந்ததினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கிலாந்தில் முதலீடு செய்வதற்கு தயங்கினார்கள்.

     இதன் விளைவாக இங்கிலாந்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. ஜரோப்பிய நாடுகளில் இங்கிலாந்தே மிகவும் பின் த்ங்கிய ஒரு நிலையை அடையும் அபாயம் ஏற்பட்டிருந்தது.

     இத்தகைய சஞ்சலங்களுக்காட்பட்டிருந்த மக்களின் முன்னே திருமதி தாச்சரின் தலைமையில் தேர்தலில் போட்டியிட்ட கன்சர்வேடிவ் கட்ச்சி முன்வைத்த கொள்கைகள் குறிப்பாக தொழிற்சங்கங்களின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் வகையிலான கொள்கைகள் மக்களைக் கவர்ந்தன.

     அதுமட்டுமின்றி தேசிய நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தும் திட்டங்களை மிகவும் துரிதமாக நடைமுறைப்படுத்தினார் திருமதி தாச்சர்.

     தொழிற்சங்கங்களின் அதீத செல்வாக்கினால் விரக்தியடைந்திருந்த பொதுமக்கள் இவரது கொள்கைகளின் அமுலாக்கலினால் செல்வாக்கிழக்கும் தொழிற்சங்கங்களின் நிலையை வரவேற்றார்கள்.

     தொடர்ந்து பல தேசிய நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டன. பல நிறுவனங்கள் பங்குச் சந்தையில் புகுத்தப்பட்டு அந்நிறுவனங்களின் ஊழியர்கள் சீஇரிய அளவிலான பங்குகளை வாங்கி பங்குதாரர்களாக்கப்பட்டார்கள்.

     அதுவரை சாதாரண தொழிலாளர்கள் எனும் நிலையிலிருந்தவர்கள் தாம் பணிபுரியும் நிறுவனத்தில் தாம் பங்குதாரர்கள் எனும் ஓர் மாயையினால் முதாளித்துவ மனப்பான்மையை இலகுவாக ஏற்றுக்கொண்டார்கள்.

     அரசாங்கத்தின் உடமையாகவிருந்த பல வீடுகள் அவ்வீட்டில் வாடகைதாரர்களாக மலிவுவிலையில் குடியிருந்தவர்களுக்கே குறைந்த விலையில் விற்கப்பட்டது.

     அதன் மூலம் திருமதி தாச்சர் , சொந்தமாக வீடு வாங்கவே முடியாது என்ற நிலையிலிருந்த பலரை வீட்டின் சொந்தக்காரர்கள் எனும் நிலைக்கு உயர்த்தினார்.

     இது வெளிப்பார்வைக்கு ஒரு அருமையான திட்டம் போலக் காட்சியளித்தாலும் கன்சர்வேடிவ் கட்ச்சியின் முதாளித்துவ கொள்கைக்கான சில அடிப்படைத் தகமைகளை உள்ளடக்கியிருந்தது.

     அரசாங்கத்தின் உதவியுடன் அர்சாங்க மனைகளில் குறைந்த வாடகைக்கு வசித்தவர்கள் அவ்வீட்டின் சொந்தக்காரர்கள் ஆனதும் அவர்களைப் பராமரிக்கும் பளு அரசாங்கத்திற்கு குறைந்தது, அத்துடன் நாம் ஏதுமற்ற ஏழைகள் என்று எண்ணியிருந்தவர்கள் இப்போ தாம் ஒரு மனையின் சொந்தக்காரர்கள் என்று எண்ணி தம்மையும் முதலாளித்துவ கூட்டத்துடன் இணைத்துக் கொண்டார்கள்.

     இதனால் சமூகத்தினிடையே ஒரு விதமான புது மனப்பான்மை குடி கொள்ளத் தொடங்கியது. நாம், நமக்கு எனும் நிலை தொய்ந்து நான், எனக்கு எனும் நிலை கோலோச்சத் தொடங்கியது.

     இத்தகைய ஒரு மனப்பான்மை வளரத் தொடங்கிய மக்களிடையே இடதுசாரக் கொள்கைகளைப் பேசிய லேபர் கட்சி எவ்வகையிலும் தமது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ள முடியவில்லை.

     அதன் விளைவாக லேபர் கட்சி மீண்டும் அரசு கட்டில் ஏறுவதனால் தமது கொள்கைகளை இடதுசார வாதத்திலின்றும் சிறிது நகர்த்தி வலதுசார எல்லைக்குள் புகுத்த வேண்டியதாகியது. இதன் அதிஉச்ச கட்டமாகவே டோனி பிளேயர் அவர்களீஈன் கொள்கைகள் வலதுசாரத்தையே பிரதிபலித்தன.

     இத்தகைய பின்னனியில் பார்க்கும் போது பிரதமரின் க\ணிப்புச் சரியானதோ என்று எண்ணத் தோன்றும். ஆயினும் அனைவரும் தாச்சர் அவர்களின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் சமுதாயமாக இங்கிலாந்துச் சமுதாயத்தைக் கணிப்பது சரியானதாக இருக்காது.

     அனைவருமே திருமதி தாச்சர் அவர்களின் கொள்கைகளின் பாதிப்புக்களை எதிர்நோக்குபவர்களாஅக இருக்கிறார்கள் என்ற வாதம் உண்மையானது. ஆனால் அனைவரும் அவரது வழி நடப்பவர்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்க்கூடிதொன்றல்ல.

     இன்றைய காலகட்டம் வித்தியாசமானது. மிகவும் அவசர் கதியில் இலத்திரனியல் ஊடகங்களின் செயற்பாட்டுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்றைய சமுதாயத்தின் தேவைகள் பல அளவில் மாற்றங்களுக்குள்ளாகியிருக்கிறது.

     இம்மாற்றங்களை உள்வாங்கி கொள்லும் வகையில் அரசியலும் மாற்றமடைய வேண்டிய தேவைக்குள்ளாகிறது.

     இடது, வலது எனும் அன்றைய அரசியல், சோஷலிசம் , முதலாளித்துவம் என்ற இரு நிலைகளுக்குட்பட்டதுதான் இன்ரைய அரசியல் என்று கூறிவிடமுடியாது.

     இவை இரண்டையும் அனுசரிப்பதாக , இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிலையை உருவாக்க வேண்டிய தேவையிருக்கிறது.

     இன்றைய இளைய தலைமுறையின் அரசியலை நோக்கிய பார்வை முற்றிலும் வேறுபட்டது. வெறும் முரண்பாடு எனும் அரசியலுக்கப்பாற்பட்டு ஒருமை காணும் அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவையுள்ளது.

     கடந்தகால அரசியலின் குழந்தைகள் நாம் என்று சொல்லிக் கொண்டிருப்பதை விடுத்து எதிர்காலத்தை நோக்கி ஒரு புது அரசியலை நகர்த்திச் செல்லும் குழந்தைகள் என்று செலாக்கம் காணும் தலைமுறையாக எமது தலைமுறையை உருமாற்ற அரசியல் தலைவர்கள் முனைவார்களா ? என்பதுவே எம்முன்னால் எழுந்து நிற்கும் கேள்வி

     மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    19.04.2013

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • விஜய ஆண்டில் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    சக்தி சக்திதாசன்
    பங்குனித் தாயின் திரு உத்தரத்தில்
    பதமாய்ப் பிறந்த சித்திரைத் திருமகளே
    பைந்தமிழ் அகவையின் பூ மகளே
    பல நலம் கொண்டு நீ உதித்தாயோ ?
    முத்தமிழ் மொழியின் நல் புத்தாண்டாய்
    முப்பொருள் கொண்ட சுவைக் கற்கண்டாய்
    வித்தகர் விளைந்த இந் நானிலத்தில்
    விடியலைக் கொண்டு நீ வந்தாயோ ?
    கற்றவர் சபையில் ஒளிரும் செம்மொழியின்
    காலத்தின் பெருமைகொள் சரித்திரங்கள்
    யாதும் ஊரெனப் பரந்திருக்கும் இன்ப
    யவ்வன மொழியின் புதிய வருடமென்றேன்
    இத்தரை மாந்தர்கள் மனங்களிலெல்லாம்
    சித்திரைப் பூமகள் வலம் வந்திடுவாள்
    முத்திரை பதித்திடும் பெருங் காவியங்கள்
    பத்தரைப் பொன்னிலும் மிகும் செல்வங்களே
    விஜய ஆண்டிதன் வரவதனை நாமும்
    விரிந்திடும் மனம் கொண்டு மகிழ்ந்திடுவோம்
    வாட்டிய வேதனைக் காலங்கள் அனைத்தும்
    ஓட்டிய வருடம் இதுவென்றாகட்டும்
    கிட்டாதன அனைத்தையும் வெட்டென மறந்து
    கிட்டியவை அனைத்தாலும் சட்டென மகிழ்ந்து
    மனதின் மகிழ்ச்சியின் மந்திரம் ஒன்றே
    மகிழ்வோம் நம்மிடம் இருப்பதைக் கொண்டு
    அன்பிலும் பண்பிலும் சிறந்து விளங்கிடும்
    அன்பினும் இனிய உள்ளங்கள் அனைத்துக்கும்
    விஜய ஆண்டில் புத்தாண்டு வாழ்த்துக்கள்
    வாழிய அனைத்தும் பெற்றே உம் வாழ்வில்
    படத்துக்கு நன்றி
    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . (53)

     சக்திசக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இங்கிலாந்துப் பிரதமர்களில் அதிகளவு சர்ச்சைக்குள்ளாக்கியவரும் மிகவும் பிரபலமானவரும், சரித்திரத்தில் இடம் பெற்றவருமான திருமதி மார்கரெட் தாச்சர் (Mrs.Margeret Thatcher) தனது 87 வது வயதில் லண்டனினுள்ள ரிட்ஸ் (Ritz) எனும் ஹோட்டல் அறையிலே காலமான செய்தியைத் தாங்கி இம்மடல் உங்களை வந்தடைகிறது.

    இங்கிலாந்து நாட்டின் பிரதமர்களில் மிகவும் பிரசித்தி பெற்றவராக திருமதி மார்கரேட் தாட்சர் விளங்கியதற்குக் காரணங்கள் பலவுண்டு.

    இங்கிலாந்து நாட்டின் பிரதமர்களில் முதலாவது பெண் பிரதமரும், இதுவரை ஒரேயொரு பெண் பிரதமரும் ஆகிய காரணம் இவற்றில் முக்கியமான காரணங்களாகும்.

    அடுத்து இங்கிலாந்து நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் துணிச்சலான பல கொள்கைகளை எடுத்த வகையில் பிரபலமடைந்திருந்தார்.

    இங்கிலாந்து நாட்டில் லிங்கன்சையர் (Lincolnshire) என்னும் இடத்தைச் சேர்ந்த ராபெர்ட்ஸ் (Roberts) எனும் ஒரு பலசரக்குக் கடை உரிமையாளரின் மகளாக 1925ம் ஆண்டு ஜனித்தார் திருமதி தாட்சர். இவரது இயர்பெயர் மார்கரேட் ஹில்டா ராபெர்ட்ஸ் ( Margret Hilda Roberts ) ஆகும்.

    ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர் இரசாயணவியல் ஆராய்ச்சியாளாரகப் பணியாற்றினார். அதன் பின்பு 1951ம் ஆண்டு வெல்வ வளம் கொழித்த வர்த்தகரான டெனிஸ் தாட்சர் (Dennis Thatcher) அவர்களை மணமுடித்தார். வழக்குரைஞர் கல்வியில் அதிபர் பட்டமான பாரீஸ்டர் பட்டம் பெறுவதற்கான பயிற்சியை மேற்கொண்டு 1955ம் ஆண்டு அதை நிறைவு செய்தார்.

    தன் தந்தைவழி கன்சர்வேடிவ் கட்சியின் அரசியலில் குதித்த இவர் 1959ம் ஆண்டு இலண்டனிலுள்ள ஃபின்ச்லி (Finchly) எனும் இடத்தின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து இதே தொகுதியில் தொடர்ந்து 1992ம் ஆண்டு வரை பாராளுமன்ற அங்கத்தினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

    இவரது முதலாவது பாராளுமன்ற அமைச்சுப்பதவி 1964ம் ஆண்டு ஹரோல்டு மக்மிலன் (Harold Macmillan) எனும் பிரதம மந்திரியின் கீழ் ஓய்வூதியத் துறையின் துணை அமைச்சர் பதவியேயாகும்.

    அதைத் தொடர்ந்து எட்வேர்டு ஹீத் (Edward Heath) கன்சர்வேடிவ் பிரதம மந்திரியாக விருந்த சமயம் கல்வித்துறை அமைச்சர் பதவி வகித்தார்.

    1972ம் ஆண்டு எட்வேர்டு ஹீத் அவர்களின் தலைமையில் கன்சர்வேடிவ் கட்சித் தேர்தலில் தோல்வியைத் தழுவிய போது அவரின் தலைமைத்துவத்திற்கு எதிராகப் போட்டியிட்டு பலரின் ஆச்சர்யத்திற்குள்ளாக கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றார்.

    அதைத் தொடர்ந்து 1979ம் ஆண்டுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி தேர்தலில் வெற்றியடைந்ததும் அதன் பிரதம மந்திரியாகப் பதவியேற்று இங்கிலாந்து நாட்டின் முதல் பெண் பிரதமர் எனும் சரித்திரம் படைத்தார்.

    அரசு நிறுவனங்களையும், தேசிய ஸ்தாபனங்களையும் தனியார் மயப்படுத்தும் கொள்கையில் மிகவும் அழுத்தமான் கொள்கைகளைக் கொண்டிருந்தார். இவரது முக்கிய அரசியல் விஞஞாபங்களாக சமூக சேவைகளுக்கான செலவுகளைக் குறைப்பதும், மக்களின் வரிப்பணத்தைக் குறைப்பதும் ஆன கொள்கைகள் முக்கிய இடங்களை வகித்தன.

    இவரது பதவிக் காலத்தில் பண்வீக்கத்தைக் குறைத்தாலும் வேலையில்லாதோர் தொகை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    1982ம் ஆண்டு அர்ஜெண்டீனா இங்கிலாந்து நாட்டின் இறைமையிலிருந்த வோக்லண்ட்ஸ் (Falklands) தீவினை ஆக்கிரமித்த போது தனது நாட்டின் படையை அனுப்பி அத்தீவினை மீட்டெடுத்தது இங்கிலாந்து மக்களிடையேயும், சர்வதேச அளவிலும் இவரது செல்வாக்கை அதிகரித்தது. அதைத் தொடர்ந்து வந்த 1082ம் ஆண்டு தேர்தலில் மாபெரும் வெற்றியீட்டி மீண்டும் பிரதமரானார்.

    அக்காலப்பகுதியில் அமெரிக்க ஜ்னாதிபதியாக இருந்த ரொனால்ட் ரீகன் (Ronald Regan) அவர்களுடன் மிக நெருக்கமான அரசியல் உறவுகளைப் பேணி வந்தார். இருவருக்கும் கம்பூனிசத்தின் மீது இருந்த எதிர்ப்புத்தன்மையும், கட்டுப்பாடற்ற வியாபாரக் கொள்கையில் இருந்த ஈடுபாடும் இவர்களைப் பலமாக இணைத்தது.

    அந்நாளைய சோவியத் யூனியனால் இவரது அழுங்குப்பிடியான கொள்கைகளினால் “இரும்பு மனுஷி” (Iron Lady) என்று அழைக்கப்பட்டார்.

    அப்போதைய சோவியத் யூனியனின் அதிபரான் கோர்பச்சேவ் அவர்களின் கம்பூனிசத் தளர்வுக் கொள்கைக மனப்பான்மையை அறிந்து கொண்ட தாட்சர் அவர்கள் அவரை மேற்குலக ஜனநாயகப் பாணியிலான அரசியலமைப்பை நோக்கி நகர்த்தும் முயற்சிகளில் முன்னின்றார்.

    1987ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டி மூன்றாவது முறையாக பிரதமராகிய முதலாவது நபர் எனும் சரித்திரம் படைத்தார். இக்காலகட்டத்தில் இவரது கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் அபிலாஷைகளைப் புரிந்து கொள்ள முடியாத தலைவர் எனும் பெயர் பெருமளவிற்கு பொதுமக்களால் மிகவும் எதிர்க்கப்பட்ட “போல் டக்ஸ்” (Poll Tax) எனும் கொள்கை உட்பட பல கொள்கைகளை அமுல்படுத்த முயன்றதினால் இவரது கட்சிக்குள்ளிருந்தே இவருக்கு எதிர்ப்புக் கிளம்பியது.

    விளைவாக ,

    1990ம் ஆண்டு நவம்பர் மாதம் தலைமைத்துவப் போட்டியில் ஜான் மேஜர் (John Major) அவர்களினால் தனது தலைமைப் பதவியை இழந்தார்.

    1992ம் ஆண்டு இவர் பாராளுமன்ற அரசியலில் இருந்து விலகினார். இவருக்கு இங்கிலாந்து நாட்டின் அரசியல் கெளரவமான ” லேடி” எனும் பட்டம் வழங்கப்பட்டது. 1995ம் ஆண்டு தாட்சர் பவுண்டேஷன் எனும அமைப்பைத் தோற்றுவித்து புதிதாக கம்யூனிச கட்டமைப்பில் இருந்து விடுபட்ட கிழக்கு ஜரோப்பிய நாடுகளுக்கு ஜனநாயகத்தைப் பற்றிய பல சொற்பொழிவுகளையும், விரிவுரைகளையும் செய்தார்.

    பல சிறிய ஸ்ட்ரோக் எனும் இதய வியாதிகளால் பாதிக்கப்பட்டதினால் 2002ம் ஆண்டிலிருந்து பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கினார்.

    இவரது கொள்கைகள் நாட்டினைப் பிளவு படுத்தியது எனும் வாதம் இவரின் மறைவிற்குப் பின்னரும் கூட இன்றும் பலமூலைகளில் விவாத வடிவில் விவாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

    நிலககரிச் சுரங்கத் தொழிலாளர்களின் யூயனின் பலத்தைச் சிதைத்து இங்கிலாந்தில் பல யூனியன்களின் பலத்தை தான் கொண்டு வந்த சட்டங்களின் மூலம் பலமிழக்கச் செய்தார்.

    வீடு வாங்கும் வசதியர்ரோருக்கு மாநகர சபைகளினால் வழங்கப்பட்டு வந்த அர்சாங்க வாடகை வீடுகளை அவ்வீடுகளில் குடியிருப்போருக்கு மிகவும் குறைந்த விலையில் அநேகர் வீட்டுச் சொந்தக்காரர் ஆக்கினார்.

    இது பலருக்கு வாழ்வில் தகுதியை உயர்த்த உதவியது என்ற வாதம் இவரது ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டாலும் பலர் இன்றைய சமூக வீடுகளின் தட்டுப்பாட்டுக்கு இவரே காரணம் என்று மறுபகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஜாரோப்பிய யூனியன் இக்கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளின் மீது பல அநியாயமான கட்டுப்பாடுகளை விதித்து நாட்டின் இறைமையைப் பாதிக்கின்றன எனும் வாதத்தை மிகவும் ஆணித்தரமாக முன்னெடுத்தவர்களில் இவர் முதன்மையானவர்.

    இன்றைய ஜரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நெருக்கடிகள் இவரது வாதத்திற்கு வலுச் சேர்க்கிறதோ என்று எண்ணச் செய்யும் வகையில் இன்றைய நிலைமைகள் இருக்கின்றன.

    சரியான வகையிலோ அன்றித் தவறான வகையிலோ பிரித்தானிய சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக இவரது ஆட்சிக்காலம் அமைந்திருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

    இங்கிலாந்தின் முதலாவது பெண் பிரதமர் எனும் பெயரெடுத்திருந்த போதும் தனது பதவிக்காலத்தில் பெண்களை அரசியலில் முன்னனிக்கு கொண்டுவருவதற்காக இவர் எவ்வகையிலும் சேவை ஆற்றவில்லை என்று பல பெண்ணியவாதிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

    இவரது மாற்றங்களின் தாக்கம் இங்கிலாந்தைப் பொறுத்தவரை எவ்வகையில் அமைந்தது என்பதற்கான தீர்ப்பை சரித்திரம் வழங்கும்.

    “அயர்ன் லேடி” என்று அழைக்கப்பட்ட இவ்வுறுதி மனத்தைக் கொண்ட தலைவியின் ஆத்ம சாந்திக்காக இப்புலம்பெயர் தமிழனின் மனம் பிரார்த்திக்கின்றது.

    அடுத்த மடலில் சந்திக்கும்வரை
    சக்தி சக்திதாசன்
    லண்டன்
    10.04.2013

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (52)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் இம்மடலை வரைகின்றேன். என்னுடைய மடல் வரிசையில் இது 52 வது மடல். ஆமாம் ஜம்பத்திரண்டு வாரங்களாக தொடர்ந்து உங்களுடன் இம்மடல் வாயிலாக உறவாடி வருகிறேன்.

    52 வாரங்கள் ! ஓ ! ஒரு வருடமல்லவா? ஆமாம் இம்டலின் உறவாடலுக்கு இத்தோடு ஓராண்டு பூர்த்தியாகிறது. இவ்வோராண்டு காலமாக இப்புலம்பெயர் தேசத்திலேயிருந்து புலம்பும் இச்சிறியேனின் புலம்பல்களை பொறுமையுடன் படித்து ஆதரித்து வந்த உறவுகள் அனைவருக்கும், இம்மடலை அழகாக தவறாமல் பதிப்பித்து வரும் எனதினிய வல்லமை நிர்வாகத்தினருக்கும் முதற்கண் எனது பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புத்தம்பி அண்ணாகண்ணனின் அன்பான ஆதரவுடன் வல்லமையில் இதுவரை நான் படைத்து வந்த அனைத்தையும் அதேபோல அன்பான ஆதரவுடன் பவள சங்கரி அவர்களும் தொடர்ந்து பதிப்பித்து வருவது மனதை நிறைக்கிறது.

    நான் எனது முதலாவது மடலில் குறிப்பிட்டது போல ஒரு காலத்தின் பதிவு என்பது காலத்தின் கண்ணாடியைப் போன்றது. நாம் வாழும் காலத்தின் நிகழ்வுகளை எதிர்காலச் சந்ததியினரின் பார்வைக்கு எடுத்துக் கொண்டு செல்லும் ஒரு உன்னத ஊடகக் கண்ணாடியே பதிவுகளாகும்.

    எனது 38 வருட புலம்பெயர் வாழ்க்கையில் நானடைந்த, கண்கூடாகக் கண்ட மாற்றங்கள் பல. இதே மாற்றங்களை ஒவ்வொருவரும் பார்க்கும் கோணங்கள் வித்தியாசமானவை. ஓ! இப்படி நடந்திருக்கிறது என்று நாம் நினத்திருக்கும் வேளையில் மற்றொருவரின் பார்வையில் அது வேறுவிதமாகப் பதிந்திருக்கிறது என்பதை அறியும் போது மிகவும் விசித்திரமாகவும், வினோதமாகவும் இருக்கிறது.

    வாழ்க்கையெனும் இந்த அற்புதக் கல்லூரியில் நான் இன்னமும், மாணவனே. தினமும் புதிதாக பலவற்றை பலவிதமான என்னை விட வயது முதிர்ந்தவர்கள், வயதில் இளையவர்கள் கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவை அனைத்தும் எனக்கு அளிப்பது எவ்வளவு உழைத்தாலும் அடைய முடியா அனுபவச் செல்வங்களே !

    இவ்வேளையில் எனக்கு இப்படியான ஒரு மடல் வகையிலான பதிவைச் செய்ய வேண்டும் எனும் ஆர்வத்தை அளித்த அமரர் அலிஸ்டர் குக் ( Akister Cook) அவர்களை எண்ணிக் கொள்கிறேன்.

    1975ம் ஆண்டு 18 வயதே நிரம்பிய கல்லூரி மாணவனாக இங்கிலாந்தில் வாழ்ந்திருந்த வேளை எனது வாழ்வாதாரத்திற்காக பகுதி நேர காவல் ஊழியனாக ( Security Guard) பணி புரிந்த வேளை தனிமையான ஆபிஸ் கட்டிடங்களின் இரவுநேரக் காவல்காரனாக பணிபுரிகையில் எனது தனிமையைப் போக்க உதவுவது பி.பி.ஸி வானொலியில் அவர் தன்னுடைய சொந்தக்குரலில் நடத்தி வந்த “அமெரிகாவிலிருந்து ஒரு கடிதம் ( A Letter From America) “ எனும் நிகழ்ச்சியேயாகும்.

    இங்கிலாந்திலிருந்து, புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் ஒரு புலம்பெயர் இங்கிலாந்து தேசத்தவரின் அனுபவங்களை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகும்.

    எனது உங்களுடனான இந்த மடல் வடிவான உரையாடலுக்கு பின்னனி இந்த நிகழ்வின் மீது நான் கொண்டிருந்த நெகிழ்வாகும்.

    நான் வாழ்ந்த வாழும் காலத்தில் இங்கு நடைபெறும் பல நிகழ்வுகளை எனது பார்வையில் பட்டவாரு உங்களுக்கு கொண்டு வருவதே எனது நோக்கமாகும். இந்நோக்கத்தில் நான் எத்தனை தூரம் முன்னேறியிருக்கிறேன் என்பதன் நீதிபதி நீங்களே. எனது இந்த மடல் வல்லமையின் ஆத்ரவு நீடிக்கும் வரை, உங்களின் அன்பான ஆதரவு தொடரும் வரை எனது வாழ்வு இப்பூவுலகில் நிலைத்திருக்கும் வரை தொடர வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

    “தம்பி உன் உள்ளத்தில் உண்மையிருந்தால் எழுதுகோலை எடு , எழுது” என்றான் புரட்சிப் பாவலன் பாரதி.

    என்னுடைய முயற்சிக்கு எனது உள்ளத்தில் குடியிருந்து என்னை என்றும் வழிநடத்தும் அண்ணாமலையானின் அருள் தொடர்ந்து கிடைக்கும் எனும் நம்பிக்கையோடு அடுத்த மடலில் சந்திக்கிறேன்.

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    04.04.2013

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (51)

    சக்திசக்திதாசன்

    அன்பினியவர்களே !

    ஸ்பிரிங் என்று அழைக்கப்படும் வசந்தம் ஆரம்பமாகும் காலமிது என்றாகியும் கூட விண்டர் எனப்படும் மாரிகாலம் இங்கிலாந்தை விட்டு அசைய மனமில்லாமல் தத்தளிக்கிறது. ஆமாம் அதிபயங்கரக் குளிரில் இங்கிலாந்தின் பல பாகங்களையும் பனிமழையால் இயற்கையன்னை அபிஷேகித்துக் கொண்டிருக்கும் வேளையிலே கதகதப்பான சூழலில் தகிக்கும் கதிரோனின் வெப்பத்துள் வதங்கும் உங்களுடன் அடுத்த மடலில் இணைகிறேன்.

    இங்கிலாந்தின் அரசியல் பயணம் ஒரு விசித்திரமான சந்தியில் வந்து நிற்கிறது. 2013ம் ஆண்டு இங்கிலாந்தின் இளைய சமுதாயத்தினர் அரசியலின் மேல் கொண்டுள்ள பார்வை ஒரு புதிய பரிணாமத்தை எடுத்துள்ளது.

    நாட்டின் பொருளாதார நிலைமை, அரசியல்வாதிகளின் மீதான நடத்தை அதிருப்தி, நாகரீகம் எனும் பெயரில் சமுதாயமும் அன்றாட வாழ்க்கையில் விஞ்ஞான வளர்ச்சி ஏற்படுத்தியுள்ள தாக்கமும் எதிர்கால அரசியல்  பாதையின் மீதான் கண்ணோட்டத்தின் திசையைத் திருப்பியுள்ளது போன்றே தென்படுகிறது.

    சமீபத்தில் நடைபெற்ற ஒரு பாராளுமன்ற இடைத் தேர்தலில் முன்னணி கட்சிகள் மூன்றும் தாக்கங்களைச் சந்திக்க ஜரோப்பிய முன்னணிக்கு எதிரான கருத்துக்களை முன்னெடுக்கும் ஜக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி என்றழைக்கப்படும் UKIP  எனும் கட்சி அதிக முன்னேற்றம் கண்டிருந்தது. இக்கட்சி தற்போது ஆட்சியிலிருக்கும் கூட்டரசாங்கத்தின் முக்கிய பங்காளியான கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து அக்கட்சி ஜரோப்பிய யூனியனை நோக்கிக் கொண்டிருந்த கொள்கைகளின் பால் வெறுப்புற்று அக்கட்சியிலிருந்து நீங்கி அமைக்கப்பட்ட கட்சியாகும்.

    இக்கட்சிக்கு விழுந்த வாக்குகளில் பெரும்பான்மையானவை கன்சர்வேடிவ் கட்சி ஆதரவாளர்களிடமிருந்து கிடைக்கப் பெற்றவையாகும். இதனால் கன்சர்வேடிவ் கட்சி பீதியடையத் தொடங்கியிருக்கிறது.

    விளைவு,

    பிரதமர் டேவிட் கமரன் அவர்களின் இன்றைய பேச்சின் காரணம். அது என்ன “இன்றைய பேச்சு ” என்கிறீர்களா ? அடுத்த வருடம் ஜரோப்பிய ஒன்றியத்தின் கதவுகள் பல்கேரியா மற்றும் ரோமானிய நாடுகளுக்குத் திறக்கப்படவிருக்கிறது. இதன் மூலம் பல்கேரிய மக்களும், ரோமேனிய மக்களும் ஜரோப்பிய நாடுகளுக்குள் எதுவித தடங்களுமின்றி பிரயாணம் செய்யலாம். அது மட்டுமின்றி இங்கிலாந்து நாட்டின் வேலையில்லாதவர்களுக்கு கொடுக்கப்படும் உதவிப் பணத்தைப் பெறும் தகுதியும் இவர்களுக்குக் கிடைக்கிறது.

    இதைப் பற்றிய பெரிய அளவிலான பிரச்சாரத்தை UKIP  கட்சி மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது இது கன்சர்வேடிவ் கட்சிக்கு மிகுந்த தலையிடியைக் கொடுத்துள்ளது.

    அடுத்த‌ தேர்த‌லில் எங்கே விலாச‌மேயில்லாத‌ அளவிற்குத் தோல்வியைத் த‌ழுவி விடுவோமோ ? எனும் அச்ச‌ம் ஒருபுற‌மிருக்க‌ , பொருளாதார‌ நெருக்க‌டியிலிருந்து த‌ம‌து கொள்கை இங்கிலாந்தை மீட்சிப்பாதைக்குக் கொண்டு போகும் என்று தெரிவித்த‌ திட‌மான‌ ந‌ம்பிக்கை வலுவிழ‌ந்த‌ வ‌கை ஒருபுற‌ம் கொடுக்கும் தாக்க‌மும் சேர்ந்த‌தினால் மிக‌வும் க‌டுக‌தியாக‌ புதிய‌ கொள்கைப் பிர‌க‌ட‌ன‌ம் செய்ய‌ வேண்டிய‌ நிலைக்கு க‌ன்ச‌ர்வேடிவ் க‌ட்சி த‌ள்ள‌ப்ப‌ட்ட‌து.

    இந்த‌ப் பின்ன‌ணியின் கார‌ண‌மே ச‌மீப‌த்தில் வெளியான‌ பிர‌த‌ம‌ர் டேவிட் க‌ம‌ர‌னின் குடியேற்ற‌க் கொள்கை ப‌ற்றிய‌ க‌ரிச‌னை மிகுந்த‌ பேச்சு.

    நிலைகுலைந்த‌ பொருளாதார‌த்தினால் த‌லைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்ட‌த்திற்கு இங்கிலாந்துக்குள் வ‌ந்திற‌ங்கும் வெளிநாட்ட‌வ‌ரின் வ‌ருகையைக் கார‌ண‌ம் காட்டித் த‌ப்பித்துக் கொள்வ‌து அனைத்துத் த‌ர‌ப்பின‌ருக்கும் ஒரு இல‌குவான‌ செய‌லாகிற‌து.

    அது த‌விர‌ த‌ம‌து விற்ப‌னையின் வீழ்ச்சியைத் த‌டுப்ப‌த‌ற்கான‌ ம‌க்க‌ளின் ம‌ன‌தில் நிலைகொண்டுள்ள‌ வெளிநாட்ட‌வ‌ரின் வ‌ருகையின் மீதான‌ அச்ச‌ம் மிகுந்த‌ ம‌னோநிலையைச் சாத‌க‌மாக்கி அதைப் பெரிதுப‌டுத்தி செய்தி வெளியிடும் ஊட‌க‌த்துறையின் ப‌ங்க‌ளிப்பும் மிகையான‌தே !

    விளைவாக‌ ம‌க்க‌ளின் ஆத‌ர‌வைப் பெறுவ‌த‌ற்கு முக்கிய‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் அனைத்தும் இக்கொள்ள‌கையில் தாம் மிக‌வும் க‌ட்டுப்பாட்டுட‌ன் இருப்ப‌தாக‌க் காட்டிக் கொள்ளும் தேவையை உண‌ர்ந்து இக்குடியேற்ற‌ப் பிர‌ச்ச‌னையைக் கொஞ்ச‌ம் மிகைப்ப‌டுத்த‌த் தொட‌ங்கியுள்ள‌ன‌ என‌ ந‌டுநிலையான‌ அர‌சிய‌ல் அவ‌தானிக‌ள் க‌ருத்துத் தெரிவிக்கின்ற‌ன‌ர்.

    வெளிநாட்ட‌வ‌ர் அதுவும் குறிப்பாக‌ ஜ‌ரோப்பிய‌ நாட்டின‌ர் இங்கிலாந்தில் ஆறுமாத‌ கால‌த்திற்கும் மேலாக‌ வேலையில்லாதோருக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் அர‌சாங்க‌ உத‌வித் தொகையைப் பெற‌முடியாது எனும் அடிப்ப‌டையில் ஊதிய கொள்கைக‌ளைப் பிர‌த‌ம‌ர் குறிப்பிட‌, லிப‌ர‌ல் டெம‌கிர‌ட்ஸ் க‌ட்சியின் த‌லைவ‌ர் நிக் கிளேக் அவ‌ர்க‌ளோ ஜ‌ய‌ம் மிகுந்த‌ நாடுக‌ளில் இருந்து வ‌ரும் விருந்தின‌ர் விசா பெறுப‌வ‌ர்க‌ள் தாம் திரும்பிச் செல்வ‌தை உறுதிப்ப‌டுத்துவ‌த‌ற்காக‌ ஒரு க‌னிச‌மான‌ தொகையை விசா பெறும்போது க‌ட்டி , தாம் த‌ம‌து விடுமுறை முடிந்து திரும்பும் போது அப்ப‌ண‌த்தை திரும்ப‌ பெற்றுக் கொள்ள‌லாம் எனும் கொள்கையை பிர‌ஸ்தாபிக்கிறார்.

    இத‌னிடையே பிர‌தான‌ எதிர்க் க‌ட்சியான‌ லேப‌ர் க‌ட்சியின் த‌லைவ‌ர் எட் மில்லிபாண்ட் ம‌க்க‌ள் ம‌ன‌தில் வெளிநாட்ட‌வ‌ர் குடியேற்ற‌க் கொள்கையைப் ப‌ற்றிய‌ அச்ச‌த்தின் ஆழ‌த்தை த‌ம‌து க‌ட்சியின‌ர் உண‌ர‌த் த‌வறிய‌மைக்காக‌ தாம் ம‌ன்னிப்புக் கோருவ‌தாக‌க் கூறி தாம் அவ‌ர்க‌ளை விட‌ ஒருப‌டி மேலேறி நிற்கிறார்.

    ஆனால் ந‌டுநிலையான‌ புள்ளி விப‌ர‌ங்க‌ளின் ப‌டி இந்நாட்டில் குடியேறி வாழும் வெளிநாட்ட‌வ‌ர் ப‌ணிபுரிந்து செலுத்தும் வ‌ரிப்ப‌ண‌ம் இங்கிலாந்தின் பொருளாதார‌த்திற்கு மிக‌வும் பெரிய‌ அள‌விலான‌ ப‌ங்க‌ளிப்பைச் செய்கிற‌து என்று குறிப்பிடுகிற‌து.

    உண்மையான‌ அர‌சிய‌ல் அவ‌தானிக‌ளின் அச்ச‌ம் என்ன‌வென்றால் குறுகிய‌ கால‌ க‌ண்ணோட்ட‌த்தில் தேர்த‌ல் அனுகூல‌த்தை ம‌ட்டும் க‌ருத்தில் வைத்து கிள‌றிவிட‌ப்ப‌டும் இப்பிர‌ச்ச‌னை இன‌த்துவேஷ‌ அதிக‌ரிப்புக்கு வ‌ழி வ‌குத்து விட‌க்கூடாது என்ப‌தே.

    நாட்டுக்காக‌வே ம‌க்க‌ள் , ம‌க்க‌ளுக்காக‌வே அர‌சிய‌ல் இந்த‌க் கோட்பாட்டை ஞாப‌க‌த்தில் கொண்டுள்ளார்க‌ளா இந்நாட்டின் ம‌க்க‌ள் பாதுகாவ‌ல‌ர்க‌ள் என்று த‌ம்மை அறிமுக‌ப்ப‌டுத்திக் கொள்ப‌வ‌ர்க‌ள் ?

    ப‌தில் கால‌த்தின் கையில் …….

    மீண்டும் அடுத்த‌ ம‌ட‌லில்

    அன்புட‌ன்
    ச‌க்தி ச‌க்திதாச‌ன்
    27.03.2013

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!……(50)

     சக்தி சக்திதாசன்

    அன்பினிய நெஞ்சங்களே !

     

    இனியதோர் மடலினிலே மீண்டும் உங்களுடன் இணைவதில் மகிழ்கிறேன், .
    குழந்தைகளாக இருப்போர் எப்போது வாலிபர்களாக மாறுகிறார்கள் ? இவ்வாலிபர்கள் எனும் அந்தஸ்தையடைந்தவர்களுக்கு கொடுக்கப்படும் உரிமைக தானென்ன ? தாமாகவே வாழ்வில் பல தீர்மானங்களை எடுக்கக்கூடிய வயதை அடைந்து விட்டார்கள் எனும் முடிவுக்கு வருபவர்கள் தமது முடிவில் எத்தனை வீதம் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் ?

    என்ன இது கேள்விக்கு மேல் கேள்வியாக வருகிறதே ! எதை நோக்கி இவனது இந்த மடல் நகர்கிறது என்று எண்ணுகிறீர்களா ?

    ஸ்கொட்லாந்து நாட்டிலே தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை 16 வயது அடைந்தவர்களுக்கும் விஸ்தரிப்பது எனும் சட்டமூலம் அமூலாக்கப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

    என்ன ? எதற்கிந்த அவசரம் ? 16 வயதே நிரம்பியவர்களுக்கு தமது நாட்டை வழி நடத்திச் செல்லக்கூடியவர்கள் யார்? என்று நிர்ணயிக்கக்கூடிய அளவிற்கு வாழ்க்கை அனுபவமும் அதனுடன் கூடிய அரசியல் ஆய்வுத் திறனும் உண்டா ?

    சிந்திக்க வேண்டிய கேள்விதான் !

    இதற்கான விடைக்காக நம் சிறிது ஸ்கொட்லாந்து நாட்டின் அரசியல் நிலைப்பாடுகளைச் சிறிது உள்நோக்கிப் பார்க்க வேண்டும். ஸ்கொட்லாந்து , ஜக்கிய இராச்சியத்தில் ஒரு பகுதி அது ஒரு தனிநாடாக இல்லை. ஆனால் ஸ்கொட்லாந்திலே அந்நாட்டின் ஒரு பெரிய அரசியல் கட்சி தாம் ஜக்கிய இராச்சியத்திலிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்று அரசியல் போராட்டம் நடத்தி வருகிறது.

    இதன் காரணமாக சில வருடங்களுக்கு முன்னால் இங்கிலாந்து அரசாங்கம் ஸ்கொட்லாந்து, வேல்ஸ் வட அயர்லாந்து ஆகிய பிராந்தியங்களுக்கு மாநில சுயாட்ச்சி வழங்கியது. அதன்படி அவர்களுக்கு என்று தனியான பாராளுமன்றமும் முதன் மந்திரியும் , மாநில அளவிலான மந்திரி சபையும் உண்டு. ஓரளவு இந்தியாவிலுள்ள அமைப்பு போல் என்று வைத்துக் கொள்ளலாம்.

    ஆனால் அது போதாது தமக்கு தனிநாடு தேவை எனக் கோஷமெழுப்புகிறார்கள் தற்போது அங்கு மாநில ஆட்சி நடத்தும் கட்சியினர். அவர்களின் கோரிக்கையை திருப்திப்படுத்துவதற்காக அவர்களுக்கு தனிநாடு வேண்டுமா ?இல்லையா ? என்பது குறித்து ஸ்கொட்லாந்து மக்களைக் கேட்கும் பொது வாக்கெடுப்பு நடத்தும் அதிகாரத்தை இங்கிலாந்து அரசாங்கம் அளித்துள்ளது.

    இவ்வாக்கெடுப்பு அடுத்த வருடம் 2014ம் ஆண்டு நடுப்பகுதியில் நடைபெறவுள்ளது . இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையான மக்கள் ஜக்கிய இராச்சியத்திற்குள் இருப்பதையே விரும்புவார்கள் என்பதுவே எதிர்பார்க்கப்படுகிறது . இந்நிலையில் மிகவும் இளைய வயதினர் தனிநாட்டுக்கு சார்பாக இருப்பார்கள் அத்தோடு அவர்களைத் பிரச்சாரத்தின் மூலம் இலகுவாக தம் வயப்படுத்தி விடலாம் என நம்பும் மாநில அரசே இவ்வாறு 16வயதானவர்களும் தேர்தலில் வாக்களிக்கலாம் எனும் சட்டத்தை அமுலாக்க முயல்கிறது என்பது அரசியல் அவதானிகளின் கணிப்பு .

    இந்தப் பதினாறு எனும் பருவம் இருக்கிறதே ! அது மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு பருவம் . அவர்களின் நிலை திரிசங்ட்கு சொர்க்கம்தான் !

    இங்கிலாந்தைப் பொறுத்த வரையில் 18 வயது வந்த ஒருவரைத்தான் வயதுக்கு வந்த ஒரு இளைஞனாகவோ அன்றி யுவதியாகவோ சட்டமூலம் கணிக்கிறார்கள்.

    பதினாறு வயது கொண்டவர்கள் சிறுவர்களே ! அவர்களின் கைகளில் இத்தகைய பொறுப்புகளைச் சுமத்துவது ஏற்கக்கூடியதா ? எனும் வாதம் பலமாகக் கிளம்புகிறது.

    16 வயது உடைய ஒருவர் திருமணம் புரியலாம் , இராணுவத்தில் சேரலாம் தனியாக வாழலாம் என்றெல்லாம் அனுமதிக்கிறோம் வாக்களிக்க மட்டும் முடியாதா என்ன ? என்கிறார்கள் ஒரு சாரார்.

    உன்னிப்பாக பார்த்தால் உண்மை அதுவல்ல.

    16 வயது உடைய ஒருவர் இங்கிலாந்தி திருமணம் செய்வதற்கு பெற்றோரின் அனுமதி தேவை , அது தவிர இராணுவத்தில் சேர்வதற்கும் பெற்றோரின் அனுமதி தேவை. அது மட்டுமின்றி 18 வயதுக்குக் குறைந்த இராணுவத்தினர் எவரும் யுத்தமுனைக்கு அனுப்பப்படுவதில்லை. இதுவே இங்கிலாந்து அரசின் சட்டம் . சமீபத்தில் இங்கிலாந்து இராணுவம் ஈடுபட்ட யுத்தங்கள் எவற்ரிலும் 18 வயதிற்குட்பட்ட எவரும் இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் ஸ்கொட்லாந்து மாநில அரசின் சட்டப்படி 16 வயது உடைய ஒருவர் பெற்றோரின் அனுமதி இன்றித் திருமணம் செய்து கொள்ளலாம் .

    ஆனால் இங்கிலாந்திலோ தற்போதைய அரசு 18 வயது வரை ஒருவர் கல்லூரியிலோ அன்றி வேலைக்கான பயிற்சியிலோ ஈடுபட்டு இருக்க வேண்டும் என்பதைச் சட்டமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

    கடந்த காலங்களை விட தற்போதைய குழந்தைகளின் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. அதனால் முந்தைய 16வயதுடைய ஒருவரின் பொது அறிவிற்கும் , தற்போதைய 16 வயதுடைய ஒருவரின் பொதுஅறிவிற்கும் இடைவெளி அதிகம் அதனால் வாக்களிப்பு எனும் ஜனநாயக உரிமையை 16 வயதுடையவர்களுக்கு கொடுப்பதில் எதுவிதத் தவறுமில்லை என்று வாதாடுகிறார்கள் ஒரு சாரார்.

    பாலியல் சம்மந்தமான குற்றங்களில் 18 வயதுடையவர்களுக்கு கீழுள்ளவர்களை ஈடுபடுத்தினால் அது கிரிமினல் குற்றமாக்கப்பட்டிருக்கிறது. அப்புறம் எப்படி 16 வயதுடையவர்கள் வாக்களிக்கலாம் ? இது மறு சாரார்

    அதேபோல் வாணவேடிக்கைகளில் பயன்படுத்தப்படும் வாணங்களை வாங்குவதற்கு 18 வயது ஆக இருக்க வேண்டும் என்பதும் சட்டமாக உள்ளது. அப்புறம் எப்படி ? . . . வாதம் வலுக்கிறது.

    ஆமாம் 16 வயதுக்கும், 18 வயதுக்குமிடைப்பட்டவர்கள் ஒரு கலங்கிய நிலையில் உள்ள காலத்துக்குள்ளே சிக்கப்பட்டிருப்பது போலத் தோன்றுகிறது. .

    சரி 18 வயதுக்குக் குறைந்த ஒருவரால் பட்டாசு வெடிகளை வாங்க முடியாது ? அப்புறம் எப்படி அவர்களுக்கு வாக்குரிமை அளிப்பது கேள்வி எழுகிறது ?

    வெடி கையில் வெடித்து விடக்கூடும் ! ஜனநாயக முறையிலான வாக்குரிமை அதுவும் கையில் வெடித்து விடுமோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    14.03.2013

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திருந்து ஓரு மடல்!……(49)

     

     

    சக்தி சக்திதாசன்

     

     

     

     

    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்களுடன் வசந்த கால வாசலிலே நின்று இங்கிலாந்திலிருந்து இம்மடலை வரைகிறேன்.
    காலம் யாருக்காகவும் காத்து நிற்பதில்லை கடலிலே வீசும் காற்று எந்தத் திசையில் வீசுகிறது என்பதை ஒரு பாய்மரக் கப்பலின் மாலுமி நிர்ணயிப்பதில்லை ஆனால் அக்காற்றின் திசையிலே தனது பாய்மரத்தைக் கட்டி தான் போக எண்ணும் திசையிலே தனது கப்பலை ஓட்டிச் செல்வதுதான் அம்மாலுமியின் திறமை .
    அது போலத்தான் ஓடும் காலத்திற்கேற்ப தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அந்தத் திசையிலே தனது வாழ்க்கைப் பயணத்தைச் செலுத்திச் செல்பவர்களே ஓரளவு நிம்மதியான வாழ்வைத் தேடிக் கொள்கிறார்கள்.
    புலம்பெயர் வாழ்க்கை என்பது பலருக்கு பலவிதமான சூழல்களிலே நிகழ்ந்துள்ளதுசிலர் மீது திணிக்கப்பட்டது ,சிலர் தாமாகவே தேடி எடுத்துக் கொண்டார்கள் வேறு சிலரோ காற்றுத் திசைமாறி வீசியதால் வேண்டாத கரையொதுங்கிய படகினைப் போல ஏதோ ஒரு காரணத்தினால் புலம்பெயர் வாழ்க்கையினுள் புகுந்து கொண்டார்கள்.
    சரி இத்தனை ஆலாபனையோடு எதைச் சொல்ல வருகிறேன் எனும் கேள்வி எழுவது இயற்கை விடயத்திற்கு வருகிறேன்.
    புலம் பெயர்ந்த நாம் எத்தனையோன் வித்தியாசமான நாடுகளிஉல் இருந்து வித்தியாசமான கலாச்சாரங்களிலிருந்து உதித்தவர்கள்ஆனால் எம்மையெல்லாம் ஒன்றிணைப்பது நாம் வாழ்வதற்காக வந்து சேர்ந்த இப்புதிய சமுதாயத்தின் கலாச்சாரம்.
    பல நாடுகளில் இருந்து வந்த பலரும் தமது கலாச்சார விழுமியங்களைத் தம்மோடு தக்க வைத்துக் கொள்வதற்காக தத்தமது கலாச்சாரங்களைத் தாம் புகுந்த நாடுகளில் வித்தியாசமான வகைகளிலே விதைக்கிறார்கள் இதுதான் யதார்த்தம்.
    கலாச்சார விழுமியங்களைப் பாதுகாத்து தமது முகவரிகளைத் தக்க வைத்துக் கொள்ள எடுக்கும் நடவடிக்கைகள் நியாயமானவையே ஆனால் அந்நடவடிக்கைகள் தாம் வாழும் தமது சமுதாயத்தின் யதார்த்த வாழ்விலிருந்து அவர்களைப் பாகுபடுத்தத் தொடங்கும் போது அதைத் தவிர்த்துக் கொள்ள வகுக்க வேண்டிய எல்லைகளைப் பற்றிச் சிந்திப்பது அவசியமாகிறது. .
    இதற்கான அவசியம் என்ன வந்தது என்னும் கேள்வி சில முனைகளில் இருந்து எழுவது சகஜமே !
    புலம் பெயர்ந்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களின் அடுத்த தலைமுறை எதிர்நோக்கும் பிரச்சனைகள் அலசி ஆராயப்பட வேண்டியது அவசியமே !
    நான் இங்கிலாந்துக்கு வந்தி இப்போது 38 ஆண்டுகள் ஆகி விட்டதுஎன்னோடு சமகாலத்தில் புலம் பெயர்ந்தவர்களின் கண்ணோட்டத்திலே எடுத்துப் பார்க்கும் போது எமது அடுத்த தலைமுறை தமது வாழ்க்கையின் நடுப்பகுதியை விரைவாக அணுகிக் கொண்டிருக்கிறது .
    கல்வியின் அவசியத்தை எத்தனை ஆணித்தரமாக வர்களின் மனதிலே பதிவிக்கிறோமோ அத்தனை ஆணித்தரமாக சமுதாயத்தோடு எமது கலாச்சார முகவரியை இழக்காமல் எவ்வகையில் கலக்கலாம் என்பதை எடுத்துச் சொல்லுகிறோமாஎன்பது சந்தேகமே !
    என் சமகாலத் தலைமுறையைச் சேர்ந்த பலர் தாம் வாழும் இச்சமூகத்திலே சிருபான்மையாக நடக்கும் இனத்துவேஷ நிகழ்வுகளை முக்கியமாகக் கணித்து வளரும் தலைமுறையின் மனதில் தன்னம்பிக்கையின் அளவைக் குறைத்து விடுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது .
    நான் அறிந்தவர்களில் பலரின் அடுத்த தலைமுறை தமது வாழ்க்கைத் துணைகளைத் தமது சமூக எல்லைகளுக்கப்பால் தேர்ந்தெடுக்கும் ஒரு நிலை பரவலாகக் காணப்படுகிறது .
    இன்றைய இங்கிலாந்துச் சமுதாயத்தை எடுத்துக் கொண்டால் மேம்பட்ட கல்வியறிவு ஒன்று மட்டும் வாழ்வைச் சரியான முறையில் நடத்திச் செல்ல உதவும் என்று சொல்ல முடியாது.
    இந்தச் சமுதாயத்தில் இச்சமூகத்தின் பெரும்பான்மையினராகிய வெள்ளை இனத்தவருடன் சமாளவில் பணிகளுக்காக போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்லப்படும் இளையதலைமுறையின் மனதில் தாழ்வு மனப்பான்மை எனும் தன்னம்பிக்கையைச் சிதைக்கும் மனோநிலை கணப்படுமாயின் அவர்கள் வாழ்க்கை எனும் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்வதே கடினமாகிவிடும்..
    நாம் தேடிக் கொண்ட வாழ்க்கையில் வாழ்வாதரத்திற்குத் தேவையான வசதிகளை நல்கி எம் வாழ்வில் ஓரளவு வெற்றியீட்டக்கூடிய சந்தர்ப்பங்களை அளிப்பதில் இச்சமூகத்தின் பொதுவான பெரும்பான்மை இனத்தவரில் பெரும்பான்மையோரின் ஆதரவு கிட்டிய உண்மையையும் வளரும் சமூகத்தின் இளமைப்பிராயங்களிலே எடுத்துச் சொல்வது பெரியோரின் கடமையாகிறது .
    கசப்பான உண்மை ஒன்று உண்டெனில் அது பல புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வில் தாம் நிலையாக வாழும் இப்புலம்பெயர் நாடு வாடகை வீடு என்றும் தாம் பிறந்த மண்ணே தமது சொந்த வீடு எனும் மனப்பான்மையும் மேலோங்கி இருக்கிறது என்பதே .
    இத்தகிய மனப்பான்மையின் விளக்கத்தை நான் எமது கலாச்சாரத்தைக் கைவிட்டு அந்நியக் கலாச்சாரத்தை பின்பற்றுவதை ஆத்ஹ்ஹ்ஹரிக்கிறேன் எனும் பிழையான விளக்கமாகப் புரிந்து கொள்ள வேண்டாம் .
    கலாச்சாரத்தின் அடையாளங்களை நிச்சயம் காத்துக் கொள்ல வேண்டும்ஆனால் அக்கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு நாம் அடுத்தவருடன் பழகும் பண்பின் தன்மையில் தங்கியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகிறது .
    அடையாளத்தைத் தொலைத்து விடாமல் நாம் வாழும் சமுதாயத்தின் வாழ்வோட்டத்தில் எஏஎம்மை இணைத்துக் கொண்டு புலம்பெயர் நாட்டின் வளர்ச்சியில் நாம் முக்கிய பங்கு வகிக்கிறோம் ந்ன்பதில் பெருமிதம் கொண்டு வாழ்வதே ,
    ” தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ” எனும் வாசகத்தை வாழ வைக்கும் .
    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    Share
  • வாழிய ! வாழிய ! புகழுடன் வாழிய !

     

    சக்தி சக்திதாசன்

     

    சிந்தனை செய்யுங்கள் தோழர்களே


    சித்தத்தில் உண்மையைக் காணுங்கள்
    மாதர் தம் பெருமைகளை உணர்ந்து
    மகளிர்க்கோர் தினத்தைக் கொடுத்து

    அன்னையாய் ஒரு வடிவம் கொண்டு
    அன்பை எமக்கு பாலோடு ஊட்டியவள்
    சகோதரியராய் உடன்பிறந்து அணைத்து
    சாத்திரங்கள் பலவும் ஓதியவள்

    காதலியாய் கண்களிலே புகுந்து எமைக்
    கைப்பிடித்து மனையாளாய் மகிழ்விப்பாள்
    எத்தனை வடிவங்கள் எடுத்திடும் மாதர்களை
    ஏற்றி நாமும் போற்றுவதற்கு ஒருநாள்

    அன்றொருநாள் எம் பாட்டன் பாரதியும்
    அநீதி கண்டு ஆர்ப்பரித்து எழுந்திட்டான்
    கொழுந்து விட்டெறியும் கவிதைகளால்
    கொளுத்தினான் பெண்ணடிமைக் கருத்துக்களை

    இன்றொரு புது யுகமாய் பிறந்திட்டு
    இகத்தினிலே மகளிர் பலர் உயர்ந்திட்டார்
    இருப்பினும் இன்னும் சில மனங்களில்
    இருள் சூழ்ந்த எண்ணங்கள் உறையுது

    ஆணுக்குப் பெண் என்றும் சளைத்தவளல்ல
    அவனியிலே நாமெல்லாம் சமனென்றே
    அனைவரும் ஒன்றாகக் குரல் கொடுத்து
    அர்ப்பணிப்போம் இந்நாளை மகளிருக்காய்

    புதுமைப் பெண்களாய் மிளிர்ந்திடும் தோழியரே
    புதுமைகள் படைத்து நீரும் சிறந்திடவே
    பூரிப்புடன் வாழ்த்துகிறேன் உமையெல்லாம்
    புரட்சி மலர்களாய் பூமியிலே பூத்திடுவீர்

    இந்நாளில் என்னெஞ்சக் கருத்தொன்றை
    இயல்பாக உம்முடனே பகிர்ந்திடுவேன்
    பாரதி கண்ட புதுமைப் பெண்கள் உலகில்
    பண்போடு உயர்ந்திட்ட புரட்சிக் கண்கள்

    புரியாத சிலபேர்கள் வாழும் வகை
    புண்ணாகும் நெஞ்சம் அதைக் கண்டு கண்டு
    அரைகுறை ஆடையல்ல அடையாளம்
    அதுவல்ல புது உலக நாகரீகம்

    நிலையான உள்ளம் கொண்டு உலகில்
    நீவீர் சமதளத்தில் ஆண்களோடு பணிபுரிந்து
    மடந்தையர் என்பது அழகேயன்றி வெறும்
    மடமையல்ல என்பதனை உணர்த்திடுவீர்

    சர்வதேச மகளிர் தினத்திலின்று நானும்
    சந்தோஷம் பொங்க நண்பனாக அண்ணனாக
    தம்பியாக , தோழியரை, சகோதரியரை
    தங்கமான வாழ்த்துகள் பொழிந்து வாழ்த்துகிறேன்

    வாழிய ! வாழிய ! புகழுடன் வாழிய !

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    படத்திற்கு நன்றி:

    http://www.lankasripoems.com/?conp=poem&pidp=208788

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…. (47)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள்.

    மிகவும் அதிகமாக பேசப்பட்ட, பேசப்படுகின்ற ஒரு கணிப்பீடு இலண்டனின் ஜனத்தொகை பற்றிய கணக்கீடு ஆகும். சமீபத்திய இங்கிலாந்து அரசு நடத்திய ஜனத்தொகை கணிப்பீட்டின் லண்டன் பற்றிய கணிப்பீடு ஒரு தொகுதி மக்களிடையே கொஞ்சம் அச்சத்தைக் கிளப்பி விட்டிருக்கிறது என்று கூடச் சொல்லலாம்.

    அது என்ன என்கிறீர்களா?

    லண்டன் வெள்ளை இணத்தவரின் எண்னிக்கை என்றுமில்லாதவாறு குறைந்திருக்கிறது என்கிறது இப்புதிய ஜனத்தொகை கணிப்பீடு. ஆமாம் லண்டனிலுள்ள வெள்ளை இனத்தவரின் எண்ணிக்கை 620000 த்தால் குறைந்துள்ளதாம்.

    இது ஏறக்குறைய ஸ்கொட்லாந்தின் நகரமான கிளாஸ்கோவின் மொத்த ஜனத்தொகையே அந்நகரத்தை விட்டுக் குடிபெயர்ந்ததிற்குச் சமனாகும் என்கிறது இவ்வறிக்கை.

    லண்டனின் மொத்த ஜனத்தொகையில் முதன்முரையாக வெள்லை இனத்தவரின் எண்ணிக்கை ஆக 45% ஆகக் கணிக்கப்பட்டிருக்கிறது.

    ஆ ! அடடா? அப்படி என்னதான் நடந்து விட்டது இந்த வெள்லை இனத்தவருக்கு ? என்ன நாங்கள் புலம் பெயர்ந்து வந்து அவர்களையே அவர்களது புலத்திலிருந்து பெயர்த்து விட்டோமா?

    ரொம்பக் குழப்பமாயிருக்கிறதே !

    இவ்வறிக்கையை பல அரசியல் கட்ச்சிகள் தமது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தத் தவர மாட்டார்கள். குறிப்பாக இங்கிலாந்து நாட்டின் இனத்துவேஷக் கட்சியாகக் கருதப்படும் தேசிய முன்னனிக் கட்சியான “பிரித்தானியத் தேசியக் கட்சி” பார்த்தீர்களா சொன்னோமே கேட்டீர்களா ? அந்நிய நாட்டுக்காரரை அளவு கணக்கில்லாமல் இங்கு குடியேற விட்டதால் வந்த விளைவைப் பார்த்தீர்களா ? அடித்து, அடித்துச் சொன்னோமே , குடிமூழ்கி விட்டதே ! என்று ஒரேயடியாகக் கூப்பாடு போடத் தொடங்கி விடுவார்கள்.

    ஏன் பழமைவாதக் கட்ச்சியான கன்சர்வேடிவ் கட்ச்சி கூட தமது குடிவரவுக் கொள்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திற்கு ஆதரவாக இவ்வறிக்கையை உபயோகிக்கத் தயங்க மாட்டார்கள்.

    கொஞ்சம் இனத்துவேஷம் கொண்டவர்களோ க்ட்ட்கவே வேண்டாம் போங்கள் …….

    ஆனால் ஒரு அரசியல் விமர்சகரான மார்க் ஈஸ்டன் என்பவர் இவ்வரிகையைப் பார்க்கும் விதமே வித்தியாசப்படுகிறது. லண்டனில் வெள்ளை இனத்தவர்களின் எண்னிக்கை குறைவதற்கும் வெளிநாட்டுக்காரர் இங்கிலாந்திற்கு வருவதற்கும் பெரிய தொடர்பொன்றுமில்லை அதௌதான் இதற்குக் காரணமுமில்லை என்கிறார்.

    அது தவ்ர வெள்ளை இனத்தவர் லண்டனை விட்டு வெளியேறியதற்குக் காரணம் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது என்று ஒரு முன்னேற்ரமான காரணத்தை முன்வைக்கிறார்.

    அதாவது வெள்ளை இனத்து மக்கள் நடுத்தர வர்க்கத்தினராக இருக்கும் போது லண்டனையும் அதைச்சுற்றியும் வாழ்ந்து வந்தார்கள் ஆனால் அவர்களது வாழ்க்கைத்தரம் பெரும்பான்மையாக மேல்வர்க்கமாக மாறியவுடன் இயற்கைச் சூழல் நிறைந்த அதிக விலைகூடிய இடங்களில் வீடுகளை வாங்கி அங்கு குடிபெயர்ந்து விட்டார்கள் என்கிறார்.

    அதுமட்டுமின்றி அந்நியநாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் தான் பொருளாதாரக் கஷ்டத்தில் இருப்பதால் வேலைவாய்ப்பு அதிகமுள்ள லண்டனைச் சுற்றி வாழ்வதனால் அவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகி விட்டது என்கிறார். அது மட்டுமின்றி வெளிநாட்டு மாணவர்களும் லண்டனில் அதிகமாக படிப்பதனால் அவர்களது தொகையும் கணக்கிடப்பட்டுள்ளது என்கிரார்.

    ஒரே அரிக்கை வித்தியாசமான கோணங்களுக்கூடாக பார்க்கப்படும் போது வித்தியாசமான வியூகங்களைத் தருகிறது. ஆனால் அது எத்தனை பேருடைய வாழ்க்கையச் சிலசமயங்களில் திசை திருப்பி விடுகிறது இல்லையா?

    அப்பாடா ! ஒரு வழியாக இங்கிலாந்தின் குடிவரவுக்காரர்களாகிய நாங்கள் காப்பாற்றப்பட்டு விட்டோமா?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    27.02.2013

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் … (46)

    சக்திசக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன்.

    இன்று நான் இக்கடிதத்தை வரைந்து கொண்டிருக்கும் நாள் காதலர் வாழ்வினில் ஒரு இனிய நாளாகிறது. ஆமாம் பெப்பிரவரி 14ம் திகதி ஆங்கிலத்தில் ” Valantines day ” என்று அழைக்கப்படும் காதலர் தினமாகும்.

    இதை நான் வாழும் இவ்விங்கிலாந்து தேசத்திலே மிகவும் விமரிசையாக கொண்டாடுகிறார்கள். 1975ம் ஆண்டு ஜனவரி மாதம் நான் லண்டனில் காலடி வைத்தேன். அதைத் தொட‌ர்ந்து வந்த அந்த பெப்பிரவரி மாதம் 14ம் திகதி தொலைக்காட்சிப் பெட்டியிலும், வானொலிப் பெட்டியிலும் இத்தினத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை எண்ணி வியந்தேன்.

    காதலர்க்கு என்று ஒரு தினமா? என்னடா இது விசித்திரமாகவிருக்கிறதே ! என்று எண்ணினேன். நாம் வாழும் பின்புல நாடுகளிலே காதலை நெஞ்சங்களுக்குள் புதைத்து வைத்து ஏதோ தவறு செய்கிறவர்கள் போல ஒளிவிலும் மறைவிலும்  நடப்பதே காதல் என்று எண்ணியிருந்தவனுக்கு காதலர்களுக்கு ஒரு தினத்தையே ஒதுக்கியிருப்பதைக் கண்டதும் வியப்பேற்படுவதில் வினோதமொன்றுமில்லையே !

    இதன் பின்பு பல வருடங்கள் உருளும் உலகோடு உருண்டு செல்வது போல இத்தினமும் தன்பாட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தது.

    அதன் பின்பு நானும் காதலித்தேன், காதலியை மணமுடித்தேன் அப்போது கூட இத்தினத்தின் தாத்பரியத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.

    ஒருமுறை என்னோடு வேலை செய்யும் ஒரு ஆங்கில சக ஊழியருடன் இதைப்பற்றி ஆழமாக உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது.

    காதலுக்கு என்று ஒரு தனித்தினம் தேவைதானா? எனும் கேள்விக்கு மிகவும் ஆணித்தரமாக எதிர்த்தரப்பு வாதங்களை நான் முன் வைப்பதை மிகவும் அமைதியாக செவி மடுத்த அந்நண்பர் முறுவலித்தபடியே ” நீ நாளை உயிருடன் இருப்பாய் என்பதற்கு என்ன உத்தரவாதம் ? ” என்றார் என்னால் பதில் கூறமுடியவில்லை. தொடர்ந்த அவர் ” ஒவ்வொரு வருடமும் உன் மனைவியின் மீதுள்ள அன்பை போற்றிப் புகழும் ஒரு திருநாளாக இதை ஏன் உபயோகிக்கக் கூடாது?” என்று கேட்டு விட்டு, மிகவும் இளமையிலே காலமாகி விட்ட தனது தந்தை அவர் மறையும் வரை ஒவ்வொரு காதலர் தினத்திற்கும் தனது மனைவிக்குக் கொடுத்த பரிசுப்பொருட்களை அவரின் அன்னை மிகவும் பாதுகாப்பாகப் பேணி ஒவ்வொரு வருடமும் அதைப்பார்த்து பூரிப்படைவதாகவும் கூறினார்.

    அந்நாளின் முக்கியத்துவம் சிறிதளவில் எனக்குப் புரிந்தது.

    அதன் ஆரம்பத்தைச் சற்றுப் புரட்டிப் பார்த்தேன்.

    இத்தினக் கொண்டாட்டத்தின் ஆரம்பம் கிறித்துவ முனிவர்களான வ”வலென்டைன்ஸ் ( Valentinus)” என்பவர்களின் வழி ஆரம்பமாகியது என்று கூறுகிறார்கள்.

    சரி அப்படியானால் இத்தினத்திற்கும் இவ்  Valentinus என்பவருக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் ? உங்கள் குழப்பம் புரிகிறது.

    புராதான ரோம ஆதிக்கத்தின் கீழ் திருமண்ம் செய்யக்கூடாதென த்டைவிதிக்கப்பட்டிருந்த சிப்பாய்களுக்கும், தண்டிக்கப்பட்டவர்களுக்கும் திருமணம் செய்து வைத்தமைக்காக இவர் சிறை வைக்கப்பட்டதே இவருக்கும் காதலுக்குமான தொடர்பு என்கிறார்கள்.

    அத்துடன் அவர் சிறையிடப்பட்டபோது அவரைக் காவல் செய்த சிறையதிகாரியின் மகளின் நோயை இவர் குணப்படுத்தியதாகவும், இவர் தூக்கிலிடப்பட்ட போது ஒரு மட்டையில் ” உன்னுடைய வலென்டையினிடமிருந்து (From your Valentine)” என்று எழுதியனுப்பயதாகவும் கூறப்படுகிறது.

    அந்த அடிப்படியில் ஆரம்பிக்கப்பட்ட இக்காதலர் தின விழாவானது பல வடிவங்களில், பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இத்தினத்தில் பலர் தமது காதலை தாம் விரும்புகிறவர்களிடத்தில் வெளிப்படுத்துவார்கள், மற்றும் சிலர் தமது திருமண விருப்பத்தைத் தெரிவிப்பார்கள்.

    பல வண்ணத்திலான காதலர் தின வாழ்த்து அட்டைகள், பலவகையான பரிசுப்பொருட்கள் என்பன காதலர்களிடம் கைமாறப்படும்.

    அது மட்டுமின்றி இரகசியக் காதலர்களிடம் இருந்து குறிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்து அட்டைகள் பரிசுகள் என்பன கொடுக்கப்படும். இதைத் தமக்கு யார் கொடுத்திருப்பார்கள் என்று அறிவதில் பெரிய முனைப்பைக் காட்டுவார்கள் அவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள்.

    எது எப்படியாயினும் காதலுக்கு மொழி, இனம், மதம், நிறம் இல்லையே ! அனைவர்க்கும் பொதுவான இக்காதல் கூட அனைவர்க்கும் பொதுவான இறையின் ஒரு அம்சமோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்தி தாசன்
    இலண்டன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…. (45)

    சக்தி சக்திதாசன்

     

     

     

     

    அன்பினியவர்களே !

    உலகம் இன்று ஒரு சிறிய பந்தாகி விட்டது . எப்படி என்கிறீர்களா? நாட்டுக்கு நாடு பறப்பது என்பது மிகவும் சுலபமான ஒரு விடயமாகி விட்டது. கடல் கடந்து சீமை செல்கிறோம் எனும் ஒரு நிலைமாறி ” இதோ நாளை காலை அங்கு வந்து விடுகிறேன் ” என்று மிகவும் நம்பிக்கையுடன் ஆயிரம் மைல்களுகளுக்கப்பால் இருப்பவர்களுக்கு கூறக்கூடிய ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

    வாழ்க்கை முறையிலும் சரி, வியாபார விடயங்களிலும் சரி இலகப்பொருளாதாரம் ஒன்றுடன் ஒன்ரு பின்னிப்பிணைந்து இருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

    இத்தகிய ஒரு காலகட்டத்திலே தான் இன்று இங்கிலாந்து நாட்டின் மக்கள் முன்னே ஒரு பெரிய விவாதம் தலைதூக்கியுள்ளது.

    ஜரோப்பிய ஒன்றியத்தில் ஜக்கிய இராச்சியத்தின் பங்கு பற்றிய விவாதமே அது. ஜரோப்பிய பாராளுமன்றத்தினால் ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் மீது விதிக்கப்படும் விதிமுறைகளுக்கு இன்று இங்கிலாந்தில் கடுமையான எதிர்ப்பு ஒரு பக்கத்தில் இருந்து கிளம்பியுள்ளது.

    இது ஏதோ இப்போதுதான் புதிதாக கிளம்பியுள்ள ஒரு பிரச்சனை அல்ல. நீறுபூத்த நெருப்பு போல பலகாலமாக அனைத்து அரசியல் கட்ச்சிகளில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களிடையே உள்ள ஒரு பகுதியினரின் மனதில் நிலவு வந்த அபிப்பிராயமே அதுவாகும்.

    காலத்துக்குக் காலம் தேர்தல் சமயங்களில் அடிக்கடி வெளிக்கொண்டு வரப்படும் இப்பிரச்சனையினால் அதிகம் பாதிக்கப்படும் அரசியல் கட்ச்சி தற்போதைய இங்கிலாந்து கூட்டரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான் கட்சியான கன்சர்வேடிவ் கட்ச்சியினருக்கே ஆகும்.

    கன்சர்வேடிவ் கட்சி அதன் பெரைக் கொண்டே கூறிவிடக்கூடிய பழைய மரபுகளைக் கட்டிக்காக்கும் ஒரு கட்சியாகும். இக்கட்ச்சியில் இருக்கும் பலர் தமது பழைய பிரித்தானிய பேரரசின் ஏகாதிபத்திய அபிலாஷைகளை மனதில் தக்க வைத்துக் கொண்டுள்ளவர்களாகும்.

    அதற்காக ஜரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து வகிக்கும் பங்கு குறித்து இவர்கள் கூரும் எதிரான கருத்துக்களில் உண்மை இல்லாமலில்லை.

    ஜரோப்பிய ஒன்றியம் போடும் பல சட்டங்கள் பிரித்தானிய நாட்டின் அரசியல் சட்டங்களில் தலியிடுவதாக அமைந்துள்ளது அரசுக்கு ஒரு பெரும் தலையிடியாகவுள்ளது.

    குறிப்பாக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என்று கண்டு பிடிக்கப்பட்டு அகைது செய்யப்பட்டு நாடுகடத்த முயற்ச்சி செய்யும் போது அவர்கள் ஜரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைச் சட்டங்களை உபயோகித்து தமது நாடு காடத்தலைலிருந்து பலகாலமாக தப்பித்துக் கொண்டு வருவது மக்களிடையே மிகுந்த மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அதுமட்டுமன்றி ஜரோப்பிய ஒன்ரியத்தில் புதிதாக இணைந்துள்ள கிழகு ஜரோப்பிய நாடுகளின் பிரஜைகள் இலகுவாக பிரித்தானியாவுக்குள் நுழைந்து இந்நாட்டின் அரச உதவிப்பணத்தை இலகுவாகப் பெறுகிறார்கள் என்பதும், இத்தகிய நடவடிக்கைகள் இந்நாடு பொருளாதாரச் சிக்கலுக்குள் சிக்கித் தவிக்கும் வேளையில் நடைபெறுகிறது என்பதும் மேலும் மக்களின் மனதில் பல எதிரான உணர்வலைகளுக்கு வித்திடுகின்றன.

    நாளொன்றுக்கு ஜரோப்பிய ஒன்றியத்துக்கான பிரித்தானிய நாட்டின் செலவு ஏறத்தாழ 50 பில்லியன் பவுண்ஸ் என்பது மக்களுக்கு முகிந்த எரிச்சலை உண்டு பண்ணி வருகிறது.

    ஆனால் அதே சமயம் பிரித்தானிய ஒன்ரியத்தில் அங்கம் வகிப்பதனால் இங்கிலாந்து நன்மை அடையாமலுமில்லை. கண்க்கெடுப்புகளின் படி ஏறத்தாழ 30 சதவீததத்திர்கு அதிகமான இங்கிலாந்தின் ஏற்றுமதி இவ்ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தின் உதவியினாலேயே நடக்கிறது என்று கூறப்படுகிறது.

    அத்தோடு இங்கிலாந்தில் குற்றச்செயல்களைப் புரிந்து விட்டு ஏனைய ஜரோப்பிய நாடுக\ளில் மரைந்து வாழ்ந்து வந்த பல குற்றவாளிகள் ஜரோப்பிய அங்கத்துவத்தினால் கிடைத்த ஒத்துழைப்பினால் கைது செய்யப்படுளார்கள் எனப்தும் உண்மை.

    பல பெரிய இங்கிலாந்து நிறுவனங்களின் முகவர்கள் இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் முன்னிலை வகிப்பதனால் மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்படுத்தலாம் என்று றிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

    அதேசமயம் ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தினால் வளரும் பொருளாதாரங்களான சீனா, இந்தியா ஆகியவற்ருடன் இங்கிலாந்து ஏற்படுத்தக்கூடிய கூட்டுறவுகள் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள் இதற்கு எதிரானவர்கள்.

    ஜரோப்பிய அங்கத்துவத்திற்கு எதிரானவர்கள் எனும் கொள்கை ஒன்றின் அடிப்படியில் அமைந்த “ஜக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி” மக்களின் கருத்துக் கணிப்பில் ஆதரவு பெர்று வருகிறது. இவர்களுக்கு கிடைக்கும் ஆதரவு கன்சர்வேடிவ் கட்ச்சியின் அங்கத்தவர்களில் ஜரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரானவர்களினாலேயே பெருகுகிறது என்பது பெரும்பான்மையான அரசியல் அவதானிகளின் கருத்து.

    இதனால் ஜரோப்பிய ஒன்றியத்துடனான உறவை மீள்பரிசோதனை செய்ய வேண்டும் எனும் கோரிக்கை கன்சர்வேடிவ் கட்ச்சியில் வலுவடைந்து பிரதமர் டேவிட் கமரனுக்கு தலியிடியைக் கொடுத்து வருகிறது.

    அவரது கூட்டரசாங்கத்தின் அடுத்த கட்ச்சியான லிபரல் டெமகிரட்ஸ் முற்றுமுழுதாக ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தை ஆதரிக்கிறார்கள்.

    இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்ரியத்துடனான ஊரவை வலுப்படுத்த வேண்டுமேயன்றி வழுவிழக்கச் செய்யக்கூடாது என்று அமெரிக்க அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

    இந்நிலையில் அடுத்தவாரம் இது பற்றிய தனது கருத்தை வெளியிடப்போகும் பிரதமர் டேவிட் கமரன் அவர்களி உரையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் வெறும் வாய்களுக்கு கிடைக்குமா அவல் ?

    பொறுத்திருந்து பார்ப்போம்

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (44)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    நாம் வாழ்வில் எத்தனையோ மனிதர்களைச் சந்திக்கிரோம், பேசுகிறோம், பழகுகிறோம் ஆனால் அவர்களில் அனைவருமே எமது மனங்களில் நிரந்தரமாகத் தங்குவார்கள் என்பது நிச்சயமல்ல.

    அதேசமயம் சிலபேரைச் சந்திப்பதில்லை தோலைபேசியில் பேசியோ அன்றிக் கடித, மின்னஞ்சல் தொடர்பு மூலமாகவோ அறிந்து கொள்கிறோம் ஆனால் அவர்கள் எமது மனங்களில் ஒரு நிரந்தரமான இடத்தைப் பிடித்துக் கொள்கிறார்கள்.

    மற்றும் சிலரைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்களாக அந்நிகழ்ச்சியின் நடத்துனர்களாகக் காண்கிறோம்.

    அவர்களில் சிலரும் எமது மன‌ங்களிலே தமக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொள்வார்கள்.

    எனது பணியின் நிமித்தம்  ஜந்து வாரங்களுக்கு ஒருமுறை வாரவிடுமுறை நாட்களான சனி, ஞாயிறு தினங்களில் நான் பணிமனைக்குச் செல்ல வேண்டிவரும்/. அந்த ஞாயிறுகளைத் தவிர்ந்த மற்றைய ஞாயிறுகளில் வீட்டில் இருக்கும் தினங்கள் அனைத்திலும் நானும் என் மனைவியும் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சிகளில் ஒன்றுதான் “ The Andrew Marr Show ” அன்ட்ரூ மார் ஷோ , இது ஞாயிறு காலை 9 மணிக்கு நடைபெறும்.

    இந்நிகழ்ச்சியின் விஷேசமாக பத்திரிகைத் தலைப்புகளைப் பற்றியும், முக்கிய செய்திகளைப் பற்றியும் விவரமாக அலசுவதற்காக வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்குச் சார்பான பத்திரிக்கைத் துறையினருடன் நிகழ்ச்சித் தொகுப்பாளர் “அன்ட்ரூ மார் (Andrew Marr)”  அவர்கள் கலந்துரையாடலை மிகவும் சுவாரஸ்யமாக நடத்துவார்.

    அது தவிர அந்நிகழ்ச்சியில் ஒவ்வொருவாரமும்  அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் என பல்வேறு வித்தியாசமானவர்களுடனான நேர்காணல்கள் இடம்பெறும்.

    இந்த நேர்காணலை மிகவும் காரசாரமாக நடத்துவதில் அன்ட்ரூ மார் அவர்கள் அற்புத ஆற்றல் மிகுந்தவர். மக்களின் மனங்களிலே நீந்தும் முக்கிய்மான கேள்விகளை இவ்வரசியல்வாதிகளை நோக்கி வீசி அவர்களைத் திக்குமுக்காட வைத்து விடுவார்.

    இவரின் மற்றுமோர் தனிப்பட்ட திறமை, கேட்கப்படும் கேள்விகளைத் தமக்கேயுரிய சமயோசித புத்தியினால் தமக்கேற்றவாறு திசைதிருப்பி விட முனையும் அரசியல்வாதிகளை திரும்பத் திரும்ப அக்கேள்விக்கே அழைத்து வந்து அவர்களின் திசைமாற்றும் போக்கை பார்வையாளர்களுக்கு புரியவைத்து விடும் தன்மையாகும்.

    இத்தகைய அற்புத ஆற்றல் மிக்க ஒரு ஊடகவியலாளரான அன்ட்ரூ மார் அவர்களின் வயது வெறும் 53 தான். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் “ஸ்ட்ரோக் (Stroke)”  எனப்படும் ஒருவகை இருதய நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.

    தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளர்களைப் பார்க்கிறோம் ரசிக்கிறோம், வானொலியில் எத்தனையோ அறிவிப்பாளர்களைக் கேட்டு ரசிக்கிறோம், பத்திரிக்கைகளில், புத்தகங்களில் அருமையான எழுத்தாளர்களின் பல ஆக்கங்களைப் படித்து மகிழ்கின்றோம். ஆனால் ஏனோ தெரியவில்லை அன்ட்ரூ மார் அவர்களின் இச்சுகயீனச் செய்தி எம் மனதில் ஒருவகை சோகத்துடனான தாக்கத்தை ஏற்படுத்தியது.

    1959ம் ஆண்டு ஸ்கொட்லாந்து நகரில் பிறந்த இவர் தனது ஆங்கில மொழி பட்டப்படிப்பினை உலகப் பிரசித்தி பெற்ற “கேம்பிரிட்ஜ் (Cambridge)” பல்கலைக்கழத்தினில் பயின்று பட்டம் பெற்றார்.

    இவர் அப்பல்கலைக்கழகத்தில் பயிலும் போது தீவிர இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது.

    இவரது பத்திரிக்கைத் துறையிலான ஊடகப்பிரவேசம் 1981ம் ஆண்டு ஸ்கொட்லாந்து பத்திரிக்கையான ” ஸ்கொட்ஸ் மான்(Scots Man)” எனும் பத்திரிக்கை வாயிலாக நிகழ்ந்தது. இப்பத்திரிக்கையின் வியாபார சம்பந்தமான செய்திகள் பிரிவில் ஒரு பயிற்சிபெறும் நிருபராகத்தான் இவரது ஊடகத்துறை பிரவேசம் ஆரம்பித்தது.

    “த இன்டிபென்டன்ட் (The Independant) ” பத்திரிகையினூடாக அரசியல் நிருபராக வளர்ச்சியடைந்த இவரின் ஊடகத்துறையின் மகுடமாக பி.பி.ஸி தொலைக்காட்சிச் சேவையின் செய்திப்பிரிவின் ஆசிரியராக கடமையாற்றியதே.

    தனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவதற்காக இப்பதவியினின்றும் விலகினார்.

    அதைத் தொடர்ந்து பி.பி.ஸி தொலைக்காட்சிக்காக பல தொடர்களைத் தாயரித்து தொகுத்து வழங்கியுள்ளார் அவற்றிலே குறிப்பிடப்படக்கூடியவை ,

    ” நவீன இங்கிலாந்தின் சரித்திரம் ( History of the modern Briton)”  , ” அன்ட்ரூ மாரின் உலகச் சரித்திரம் (Andrew Marrs History of the world”  என்பன ஆகும்.

    இவரின் நேர்காணல்களில் பெயர் பெற்றதாக 2004ம் ஆண்டு அப்போதைய பிரதம மந்திரி டோனி பிளேயர் அவர்களுடனான நேர்காணலில் நான்காவது முறை பிரதமராகத் தான் வரமாட்டேன் எனும் டோனி பிளேயரின் பிரசித்தி பெற்ற வாக்கினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

    மற்றும் இவருடைய அரசியல் நிகழ்வுகளின் பாதிப்பாக அப்போதைய லேபர் அரசாங்கத்தின் வியாபார அமைச்சராக இருந்த பீட்டர் மண்டல்சன் பற்றிய விபரங்களை வெளியிட்டமை அவர் தனது பதவியிலிருந்து ராஜினாமாச் செய்வதற்கு வழி வகுத்தது.

    இத்தகைய ஒரு இளைய பிரசித்தி பெற்ற ஊடகவியலாளர் குணமடைந்து மீண்டும் ஊடகத்துறைக்கு பல உன்னதமான ஆக்கங்களை அளிக்க வேண்டுமென எண்ணுவோம்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (43)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    மனிதன் தோன்றிய காலம் முதல் இன்றுவரை அவனுடைய சரித்திரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் எண்ணிலடங்காதவை. கலாச்சாரம், மொழி, வாழ்க்கைமுறை என்று பலதரபட்ட மாற்றங்களுக்குள்ளாகிய சரித்திரம் மனித சரித்திரம் என்பதுவே உண்மையாகும்.

    அத்தகைய மாற்றங்களுக்குட்பட்டதொன்றே தற்கால போக்குவரத்து முறைகளாகும். இத்தகைய முன்னேற்றங்களில் முன்னிடம் வகித்தது மேலைத்தேசங்களில் இங்கிலாந்து என்று சொன்னால் மிகையாகாது.

    2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி இங்கிலாந்து தேசத்தின் போக்குவரத்து முன்னேற்றம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும்.

    என்ன அது ? அப்படி அது என்ன பெரிய சாதனை ? உங்கள் கேள்வி புரிகிறது.

    “London Underground ” இலண்டன் நிலத்துக்குக் கீழான சுரங்க இரயில் சேவை ஆரம்பித்து அன்று 150வது வருடமாகும். ஆமாம் லண்டனின் முதலாவது சுரங்க ரயில் ஓடத் தொடங்கியது 1863ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதியாகும்.

    இன்றைய லண்டன் “சுரங்க இரயில் ” இன்றி இயங்க முடியாது எனும் நிலையை எட்டியுள்ளது. இச்சுரங்க இரயில் மூலம் தமது அன்றாடப் பய்ணங்களை தமது வேலைத்தளங்களுக்கு மேற்கொள்ளும் பிரயாணிகளின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    நான் இங்கிலாந்தில் காலடி வைத்து இப்போ 37 வருடங்கள் ஓடி விட்டன. நான் மாணவனாக லண்டனில் வலம் வந்த நேரம் இரவு நேரங்களில் பகுதி நேர காவலாளியாகப் பணிபுரிந்து விட்டு பகல் பொழுதுகளில் கல்லூரி செல்ல வேண்டிய நிலை அப்போது.

    18/19 வயதுகளில் மிதந்த நான் அன்று எனது வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ள உதவியது இந்த இலண்டன் சுரங்க ரயில் சேவையே. ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு விரைவாகப் பயணம் மேற்கொள்ள வேண்டிய தேவை இருந்த நேரத்தில் இந்த ரயில் சேவையின் மகத்துவம் புரிந்தது.

    லண்டனில் வாழ்ந்த சார்ள்ஸ் பியர்சன் என்பவரின் வாழ்க்கைக் காலம் 1793 தொடக்கம் 1862 வரையுமாகும். இல்ண்டனில் ஒரு நிலத்துக்குக்கீழான சுரங்க இரயில் சேவை அமைப்பதை கற்பனையில் உருவாக்கியவர் இவரேயாகும்.

    இவரது கனவுக்கு செயலாக்கம் கொடுக்கும் பணி 1817 தொடக்கம் 1898 வரை வாழ்ந்த ஜான் வவுலர் என்பவருக்கு அளிக்கப்பட்டது.

    இத்திட்டம் செயல்வடிவம் கொடுக்கப்பட்டது 1860ம் ஆண்டு  பெப்பிரவரி மாதம் ஆகும். ஜான் வவுலர் இத்திட்டத்தை செயல் வடிவப் படுத்தத் தொடங்கினார். ஆனால் இது முழு வடிவம் பெற்ற போது இதக் கற்பனையில் தீட்டிய சார்ல்ஸ் பியர்சன் உயிருடன் இருக்கவில்லை.

    மெட்ரோபொலிட்டன் சேவை என அழைக்கப்பட்ட முதலாவது லண்டன் சுரங்க இரயில் சேவை படிங்டன் Padington)  எனும் இடத்திற்கும் பரிங்டன் (Farringdon) எனும் இடத்திற்கும் இடையில் முதன் முதலாக 1863ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதன் நீளம் நான்கு மைல்களாகும்.

    இச்சேவையின் பரீட்சார்த்த ஓட்டம் அன்று முடிவுற்றதும் அடுத்த நாளே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இச்சேவை ஆரம்பித்து சில மாதங்களில் நாளொன்றிற்கு சுமார் 26000 பயணிகள் இச்சேவையை உபயோகித்தார்கள்.

    இச்ச்சேவை பிரத்தியேக கம்பெனியின் நிதி உதவியுடனேயே முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது.

    1884ம் ஆண்டு உள்ளடங்கிய வட்டத்தில் சுமார் 800 சுரங்க இரயில்கள் ஓடின என்று கூறப்படுகிறது. இச்சுரங்க இரயில்களுக்கான நிலத்துக்குக் கீழான சுரங்கமைப்புக்கான யோசனை 1840ம் ஆண்டளவில் தேம்ஸ் நதிக்குக்கீழாக சுரங்கப்பாதை அமைத்த பொறியியலாளர் ப்ரூனல் என்பவரின் செலாக்கத்தினாலேயே உருவானது எனப்து குறிப்பிடத்தக்கது.

    முதலாவது இலவச சுரங்க இரயில் பாதைக்கான வரைபடம் 1908ம் ஆண்டே வழங்கப்பட்டதாம். முதலாவது உலக மகாயுத்தத்தின் போது ஆண்கள் ஆனைவரும் இராணுவத்தில் இணைந்ததினால் ஏற்பட்ட ஊழியர் பஞ்சத்தைத் தீர்க்கவே இச்சுரங்க இரயில் சேவையில் முதன்முதலாக பெண்கள் இணைக்கப்பட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

    இச்சேவையின் முக்கியத்துவத்தை அதை உபயோகித்து அனுகூலத்தை அனுபவித்தவன் எனும் வகையில் நான் பெருமையுடன் நினைவு கூறுகிறேன். இத்தகைய கண்டுபிடிப்புகள் மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு ஈடர்ன வகையில் சேவையாற்றியிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (42)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அரசியல் என்பது இன்று பல  கோணங்களில் இருந்து பலவகையான கண்ணோட்டத்திற்கு உள்ளாக்கப்படுகின்றது. ஆனால் தெரிந்தோ, தெரியாமலோ அன்றி சரியாகவோ , தவறாகவோ இவ்வரசியலே மனிதர்களுடைய அன்றாட வாழ்க்கையைத் தீர்மானிக்கும் காரணியாகிறது.

    வெளிப்படையாக இது தெரியாவிட்டாலும் பலருடைய மனங்களில் அரசியலும், தம்முடைய வாழ்க்கையும் வேறுபட்டன எனும் எண்ணம் இருந்தாலும் இரண்டும் ஒன்றோடொன்று பின்னப்பட்டிருப்பது தவிர்க்கப்படமுடியாத உண்மையாகும்.

    ஆனால் ஒவ்வொருவரும் இவ்வரசியலில் எத்துனை தூரம் பங்குபெறுகிறார்கள் என்பது ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுகிறது. சிலர் “ராமன் ஆண்டாலென்ன ? இராவணன் ஆண்டாலென்ன ? தட்டிலே சோறும், பையிலே பணமும் இருந்தால் சரி ” எனும் வகையில் நடந்து கொள்வார்கள். வேறு சிலரோ தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் அரசியலே நிர்ணயிக்கிறது எனவே அதைப்பற்றிய தனது கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது என்று நூறு சதவிகிதம் அரசியலோடு தம்மைப் பிணைத்துக் கொள்வார்கள்.

    மற்றும் சிலரோ இவை இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிலையை எடுத்துக் கொள்வார்கள்.

    தான் வாழும் நாட்டினதும், தனது மக்களினதும் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதில் தமக்கு முக்கிய பங்கு இருக்க வேண்டும், தான் சார்ந்த சமூகத்தின் அபிலாஷைகளை உரக்க உச்சரிக்கும் உரிமை தனக்கு வேண்டும் என்னும் மனிதர்கள் தமது வாழ்வாதாரத்தையே அரசியலில் தங்க வைத்து அரசியல் கட்சிகளில் தம்மை இணைத்துக் கொண்டு பணியாற்றுவார்கள்.

    மனிதர்கள் அனைவரும் மனிதர்களாக வாழ்கிறார்கள் என்பது யதார்த்தமாகாது. மனிதர்களின் மனதை பேராசை ஆட்டிப்படைக்கிறது. ஆனால் அது ஒவ்வொருவருடைய மனங்களிலும் வித்தியாசமான விகிதங்களில் வித்தியாசமான வடிவங்களை எடுக்கிறது.

    அத்தகைய வடிவங்களில் ஒன்றாக சில சந்தர்ப்பங்களில் அரசியலைத் தமது பேராசைகளுக்கு சாதகமான ஒரு கருவியாகப் உபயோகிக்கும் சில அரசியல்வாதிகளைப் பார்க்கிறோம் அதற்காக அனைத்து அரசியல்வாதிகளும் அத்தகைய மனப்பான்மை கொண்டவர்கள் எனும் கருத்தை உள்வாங்கிக் கொள்வது சரியாகாது.

    என்ன சக்தியின் இக்கருத்து எதற்கு நம்மை அழைத்துச் செல்கிறது என்று எண்ணுகிறீர்களா ?

    இன்று அதாவது 10ம் திகதி ஜனவரி மாதம் 2013 இலிருந்து ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் இங்கிலாந்தின் பிரபல்யமான கருத்தாடல் வானொலியான எல்.பி.சி (L.B.C) எனும் வானொலியில் காலை ஒன்பது மணிக்கு இங்கிலாந்தின் கூட்டரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் தலைவரும். இங்கிலாந்தின் உதவிப் பிரதருமான திரு.நிக் கிளெக் (Nick Clegg) அவர்கள் மக்களுடனான நேரடி வானொலிக்கூடான கருத்தாடல் ஒன்றில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

    இவ்வானொலியின் புகழ் பெற்ற பல விருதுகளைப் பெற்ற அறிவிப்பாளரான நிக் வெராரி (Nick Ferrari) அவர்கள் நடத்தும் காலை நிகழ்ச்சியிலே இவரது கருத்தாடல் நிகழ்கிறது.

    மிகவும் பிரபல்யம் இழந்த நிலையிலுள்ள கூட்டரசாங்கத்தின் தலைவர்களில் ஒருவர், தனது கட்சியின் செல்வாக்கு நிறைந்த ஒரு காலப்பகுதியில் இத்தகைய துணிச்சல் மிக்க ஒரு நடவடிக்கையில் இறங்கியதன் பின்னனியில் இரு காரணங்கள் இருக்கலாம்.

    முதலாவதாக தான் கொண்ட கொள்கையில், தான் மேற்கொண்ட நடவடிக்கையில், தான் தனது கட்சியை இட்டுச் சென்ற பாதையில் தனக்கிருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கையின் அடித்தளத்தில் இருந்து எழுந்த ஒரு உத்வேகமான நடவடிக்கையாக இருக்கலாம்.

    இரண்டாவதாக தனது கட்சியோ செல்வாக்கு இழந்து விட்டது. இக்கூட்டரசாங்கத்தின் செயல்பாடுகளின் விளைவுகள் எதிர்மறையாகத்தான் இருக்கப் போகிறது, இன்னும் இரண்டரை வருடங்களில் பொதுத்தேர்தலை எதிர்கொள்ள‌ வேண்டிய நிலையில் இனி இழப்பதற்கு எதும் இல்லை எனும் “தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன ? முழமென்ன ? ” என்பது போன்ற ஒரு தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த நடவடிக்கையாக இருக்கலாம்.

    நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு வித்தியாசமான யுகம். இங்கு  தர்மத்தின் வழி நடந்தால் வெற்றி நிச்சயம் என்று நம்பும் தலைமுறை குறுகிக் கொண்டே செல்கிறது. காந்தி, காமராஜர், மொரார்ஜி தேசாய், அறிஞர் அண்ணா போன்ற அரசியல் தலைவர்கள் அருகிக் கொண்டு வருகிற காலம்.

    இன்றைய அரசியல் களம் வெறும் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் மட்டுமல்ல சமூகவலைத்தளங்கள் இன்றைய அரசியலில் பெரும் பங்களிக்கிறது.

    இது எவ்வாறாயிருப்பினும் இன்றைய காலகட்டத்தில் இங்கிலாந்தின் உதவிப் பிரதமர் இக்கருத்தாடலில் பங்கு கொள்ள முன்வந்திருப்பது மிகவும் ஒரு துணிச்சலானதும், வரவேரற்கப்படக் கூடிய ஒரு விடயமாகும்.

    உலகமெங்கிலும் ஜனநாயக அரசியல் ஒரு ஆட்டம் கண்டு தளர்ந்த நிலையிலுள்ளது. இளைய தலைமுறையினர் அரசியலிலும், ஜனநாயகத் தேர்தல்களிலும் சலிப்படைந்து கொண்டு வருகிறார்களோ என்று எண்ணத்தோன்றும் வகையில் சமீபத்திய தேர்தல்களில் மக்களின் பங்கெடுப்பின் விழுக்காடு அச்சமடைய வைத்திருக்கிறது.

    இப்போது எமக்குத் தெவையானது எமது அரசியல்வாதிகள் தாம் நடத்தும் அரசியல் நேர்மையானதும் சமூகத்தின் வளர்ச்சியிலும், நல்வாழ்வினிலும் அக்கறை கொண்டுள்ளது எனவும் மக்களுக்கு உணர்த்தும் வகையில் முன்னெடுக்கும் நேர்மையான அரசியலே ஆகும்.

    ஒவ்வொரு அரசியல் கட்சியும் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள், தலைவர்கள் வெவ்வேறு அபிப்பிராயங்களைக் கொண்டிருப்பதே யதார்த்தம். ஆனால் தமது கொள்கைகளில் அவர்களுக்கு உண்மையான பிடிப்பும், அதன் அடிப்படையில் தாம் எடுக்கும் நடவடிக்கைகளை நியாயப்படுத்தக்கூடிய வலுவும் இருந்தால் மக்களுடன் எத்தகைய கருத்தரங்குகளிலும் ஈடுபடுவதில் தயக்கம் காட்ட வேண்டிய தேவையிருக்காது.

    இன்று காலை நடைபெற்ற கருத்தரங்கிலே திரு.நிக் கிலெக் அவர்களிடம் மிகவும் சிக்கலான கேள்விகள் தொடுக்கப்பட்டன. அவரது கட்சித்தொண்டர் ஒருவர் அவரிடமன் தமது கட்சி செல்லும் பாதையைக் கண்டு தான் வெட்கப்படுவதாகக் கூறி தனது கட்சி அங்கத்துவ அட்டையைக் கிழித்தெறிவதாகக் கூறினார்.

    தான் எதிர் நோக்கிய சிக்கலான வினாக்களுக்கு அவர் அளித்த விடைகள் எத்தனை துல்லியமானவை என்பதோ அன்றி கட்சியின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்த அங்கத்தவர்களை அவர் சமாளித்த விதத்தையோ ஆதரிப்பதோ அன்றி எதிர்ப்பதோ அல்ல எனது நோக்கம்.

    இவரது இம்மாதிரியான ஒரு வழிகாட்டுதல் இங்கிலாந்தில் மட்டுமல்ல உலகெங்கிலும் ஒரு திடகாத்திரமான அரசியல் கருத்தாடலுக்கு வழிவகுக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுவதே எனது நோக்கமாகும்.

    இவரது இந்நடவடிக்கை சரிந்து போயிருக்கும் இவரது செல்வாக்கையும், இவரது கட்சியின் செல்வாக்கையும் தூக்கி நிறுத்துமா ? அன்றி இன்னும் சரித்து விடுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share