சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்கள்.

மிகவும் அதிகமாக பேசப்பட்ட, பேசப்படுகின்ற ஒரு கணிப்பீடு இலண்டனின் ஜனத்தொகை பற்றிய கணக்கீடு ஆகும். சமீபத்திய இங்கிலாந்து அரசு நடத்திய ஜனத்தொகை கணிப்பீட்டின் லண்டன் பற்றிய கணிப்பீடு ஒரு தொகுதி மக்களிடையே கொஞ்சம் அச்சத்தைக் கிளப்பி விட்டிருக்கிறது என்று கூடச் சொல்லலாம்.

அது என்ன என்கிறீர்களா?

லண்டன் வெள்ளை இணத்தவரின் எண்னிக்கை என்றுமில்லாதவாறு குறைந்திருக்கிறது என்கிறது இப்புதிய ஜனத்தொகை கணிப்பீடு. ஆமாம் லண்டனிலுள்ள வெள்ளை இனத்தவரின் எண்ணிக்கை 620000 த்தால் குறைந்துள்ளதாம்.

இது ஏறக்குறைய ஸ்கொட்லாந்தின் நகரமான கிளாஸ்கோவின் மொத்த ஜனத்தொகையே அந்நகரத்தை விட்டுக் குடிபெயர்ந்ததிற்குச் சமனாகும் என்கிறது இவ்வறிக்கை.

லண்டனின் மொத்த ஜனத்தொகையில் முதன்முரையாக வெள்லை இனத்தவரின் எண்ணிக்கை ஆக 45% ஆகக் கணிக்கப்பட்டிருக்கிறது.

ஆ ! அடடா? அப்படி என்னதான் நடந்து விட்டது இந்த வெள்லை இனத்தவருக்கு ? என்ன நாங்கள் புலம் பெயர்ந்து வந்து அவர்களையே அவர்களது புலத்திலிருந்து பெயர்த்து விட்டோமா?

ரொம்பக் குழப்பமாயிருக்கிறதே !

இவ்வறிக்கையை பல அரசியல் கட்ச்சிகள் தமது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தத் தவர மாட்டார்கள். குறிப்பாக இங்கிலாந்து நாட்டின் இனத்துவேஷக் கட்சியாகக் கருதப்படும் தேசிய முன்னனிக் கட்சியான “பிரித்தானியத் தேசியக் கட்சி” பார்த்தீர்களா சொன்னோமே கேட்டீர்களா ? அந்நிய நாட்டுக்காரரை அளவு கணக்கில்லாமல் இங்கு குடியேற விட்டதால் வந்த விளைவைப் பார்த்தீர்களா ? அடித்து, அடித்துச் சொன்னோமே , குடிமூழ்கி விட்டதே ! என்று ஒரேயடியாகக் கூப்பாடு போடத் தொடங்கி விடுவார்கள்.

ஏன் பழமைவாதக் கட்ச்சியான கன்சர்வேடிவ் கட்ச்சி கூட தமது குடிவரவுக் கொள்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திற்கு ஆதரவாக இவ்வறிக்கையை உபயோகிக்கத் தயங்க மாட்டார்கள்.

கொஞ்சம் இனத்துவேஷம் கொண்டவர்களோ க்ட்ட்கவே வேண்டாம் போங்கள் …….

ஆனால் ஒரு அரசியல் விமர்சகரான மார்க் ஈஸ்டன் என்பவர் இவ்வரிகையைப் பார்க்கும் விதமே வித்தியாசப்படுகிறது. லண்டனில் வெள்ளை இனத்தவர்களின் எண்னிக்கை குறைவதற்கும் வெளிநாட்டுக்காரர் இங்கிலாந்திற்கு வருவதற்கும் பெரிய தொடர்பொன்றுமில்லை அதௌதான் இதற்குக் காரணமுமில்லை என்கிறார்.

அது தவ்ர வெள்ளை இனத்தவர் லண்டனை விட்டு வெளியேறியதற்குக் காரணம் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது என்று ஒரு முன்னேற்ரமான காரணத்தை முன்வைக்கிறார்.

அதாவது வெள்ளை இனத்து மக்கள் நடுத்தர வர்க்கத்தினராக இருக்கும் போது லண்டனையும் அதைச்சுற்றியும் வாழ்ந்து வந்தார்கள் ஆனால் அவர்களது வாழ்க்கைத்தரம் பெரும்பான்மையாக மேல்வர்க்கமாக மாறியவுடன் இயற்கைச் சூழல் நிறைந்த அதிக விலைகூடிய இடங்களில் வீடுகளை வாங்கி அங்கு குடிபெயர்ந்து விட்டார்கள் என்கிறார்.

அதுமட்டுமின்றி அந்நியநாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் தான் பொருளாதாரக் கஷ்டத்தில் இருப்பதால் வேலைவாய்ப்பு அதிகமுள்ள லண்டனைச் சுற்றி வாழ்வதனால் அவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகி விட்டது என்கிறார். அது மட்டுமின்றி வெளிநாட்டு மாணவர்களும் லண்டனில் அதிகமாக படிப்பதனால் அவர்களது தொகையும் கணக்கிடப்பட்டுள்ளது என்கிரார்.

ஒரே அரிக்கை வித்தியாசமான கோணங்களுக்கூடாக பார்க்கப்படும் போது வித்தியாசமான வியூகங்களைத் தருகிறது. ஆனால் அது எத்தனை பேருடைய வாழ்க்கையச் சிலசமயங்களில் திசை திருப்பி விடுகிறது இல்லையா?

அப்பாடா ! ஒரு வழியாக இங்கிலாந்தின் குடிவரவுக்காரர்களாகிய நாங்கள் காப்பாற்றப்பட்டு விட்டோமா?

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
27.02.2013

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *