சக்தி சக்திதாசன்                                                                                                                                                                                                                                                                                                                                                                                            

அன்பினியவர்களே !

 இனிய என் புதுவருட வாழ்த்துக்களுடன் இம்மடலில் உங்களைச் சந்தீஈஈஈஈப்பதில் மகிழ்வடைகிறேன்.

 சென்ற புதன்கிழமை மறைந்த முன்னால் பிரதமர் திருமதி மார்கிரெட் தாச்சர் அவர்களின் இறுதிச் சடங்குகள் தேசிய அளவிலான பரிமாணங்களுடன் நடைபெற்றது. இதற்குரிய செலவு ஏறக்குறைய 10 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ஸ் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

 இன்றைய பொருளாதாரச் சிக்கல் நிறைந்த சூழலிலே இத்தகியத்ப்ப்ர் செலவுடன் கூடிய முன்னால் பிரதமருக்கான இறுதி நிகழ்வு மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்பட வேண்டுமா ? எனும் கேள்வி நாட்டின் பல பாகத்தில் இருந்து எழுந்தாலும்,இந்நாட்டின் முதலாவது பெண் பிரதமர் , தொடர்ந்து அதிகாலம் பிரதமராக வீற்றிருந்து ஒரு சாதனையைப் படைத்தவர் ரெனும் வகையில் இவருக்காக இது செய்யப்படலாம் எனும் வாதம் ஜெயித்து விட்டது என்பதே உண்மையாகிறது.

 இது ஒருபுறமிருக்க பிரித்தானியப் பிரதமர் திரு டேவிட் கமரன் அவர்கள் ஒரு புதுச் சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறார்.

 அது என்ன என்று பார்ப்போமா?

 திருமதி தாச்சரின் பதவிக்காலம் இங்கிலாந்தை ஆக்கப்பாதையிலா அன்றி அழிவுப் பாதையிலா இட்டுச் சென்றிருக்க்க்கிறது எனும் வாதத்தைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் ” இன்று இங்கிலாந்தில் நாமனைவருமே “தாச்சரியவாதிகள் (Thatcherites)” “என்றொரு வாதத்தை முன்வைத்து அதைச் சுற்றி ஓர் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

 அதுசரி “தாச்சரியவாதிகள் அன்றி Thatcherites “ என்றால் என்ன ? “ தாச்சரிசம்” என்றொரு “இசம்” உண்டா ? எனும் கேள்விகள் மனதினுள்ளே பூதாகரமாக விளைகிறது.

 திருமதி தாச்சர் 1979ம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்ற போது இங்கிலாந்தின் அரசியல் ஒரு சங்கடமான நிலையிலிருந்தது என்பது உண்மையே !

 தொழிற்சங்கங்களின் அனுசரணையுடன் கூடிய “லேபர்” கட்சியின் அரசாங்கம் “தொழிலாளர் சங்கங்களின் ” அழுங்குப் பிடியினுள் சிக்கிக் கொண்டிருந்தது.

 இங்கிலாந்தின் ஆலைகள் தொழிலாளர்களுக்கான கூலிகளை தொழிற்சங்கங்களின் ஆணப்படி உயர்த்த வேண்டி வந்ததினால் இங்கிலாந்தின் உற்பத்திப் பொருட்களின் விலை மிகவும் அதிகமாக இருந்தது. இதனால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருந்தது.

 அது மட்டுமின்றி தொழிற்சங்கங்களின் கெடுபிடி அதிகரித்து இருந்ததினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கிலாந்தில் முதலீடு செய்வதற்கு தயங்கினார்கள்.

 இதன் விளைவாக இங்கிலாந்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. ஜரோப்பிய நாடுகளில் இங்கிலாந்தே மிகவும் பின் த்ங்கிய ஒரு நிலையை அடையும் அபாயம் ஏற்பட்டிருந்தது.

 இத்தகைய சஞ்சலங்களுக்காட்பட்டிருந்த மக்களின் முன்னே திருமதி தாச்சரின் தலைமையில் தேர்தலில் போட்டியிட்ட கன்சர்வேடிவ் கட்ச்சி முன்வைத்த கொள்கைகள் குறிப்பாக தொழிற்சங்கங்களின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் வகையிலான கொள்கைகள் மக்களைக் கவர்ந்தன.

 அதுமட்டுமின்றி தேசிய நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தும் திட்டங்களை மிகவும் துரிதமாக நடைமுறைப்படுத்தினார் திருமதி தாச்சர்.

 தொழிற்சங்கங்களின் அதீத செல்வாக்கினால் விரக்தியடைந்திருந்த பொதுமக்கள் இவரது கொள்கைகளின் அமுலாக்கலினால் செல்வாக்கிழக்கும் தொழிற்சங்கங்களின் நிலையை வரவேற்றார்கள்.

 தொடர்ந்து பல தேசிய நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டன. பல நிறுவனங்கள் பங்குச் சந்தையில் புகுத்தப்பட்டு அந்நிறுவனங்களின் ஊழியர்கள் சீஇரிய அளவிலான பங்குகளை வாங்கி பங்குதாரர்களாக்கப்பட்டார்கள்.

 அதுவரை சாதாரண தொழிலாளர்கள் எனும் நிலையிலிருந்தவர்கள் தாம் பணிபுரியும் நிறுவனத்தில் தாம் பங்குதாரர்கள் எனும் ஓர் மாயையினால் முதாளித்துவ மனப்பான்மையை இலகுவாக ஏற்றுக்கொண்டார்கள்.

 அரசாங்கத்தின் உடமையாகவிருந்த பல வீடுகள் அவ்வீட்டில் வாடகைதாரர்களாக மலிவுவிலையில் குடியிருந்தவர்களுக்கே குறைந்த விலையில் விற்கப்பட்டது.

 அதன் மூலம் திருமதி தாச்சர் , சொந்தமாக வீடு வாங்கவே முடியாது என்ற நிலையிலிருந்த பலரை வீட்டின் சொந்தக்காரர்கள் எனும் நிலைக்கு உயர்த்தினார்.

 இது வெளிப்பார்வைக்கு ஒரு அருமையான திட்டம் போலக் காட்சியளித்தாலும் கன்சர்வேடிவ் கட்ச்சியின் முதாளித்துவ கொள்கைக்கான சில அடிப்படைத் தகமைகளை உள்ளடக்கியிருந்தது.

 அரசாங்கத்தின் உதவியுடன் அர்சாங்க மனைகளில் குறைந்த வாடகைக்கு வசித்தவர்கள் அவ்வீட்டின் சொந்தக்காரர்கள் ஆனதும் அவர்களைப் பராமரிக்கும் பளு அரசாங்கத்திற்கு குறைந்தது, அத்துடன் நாம் ஏதுமற்ற ஏழைகள் என்று எண்ணியிருந்தவர்கள் இப்போ தாம் ஒரு மனையின் சொந்தக்காரர்கள் என்று எண்ணி தம்மையும் முதலாளித்துவ கூட்டத்துடன் இணைத்துக் கொண்டார்கள்.

 இதனால் சமூகத்தினிடையே ஒரு விதமான புது மனப்பான்மை குடி கொள்ளத் தொடங்கியது. நாம், நமக்கு எனும் நிலை தொய்ந்து நான், எனக்கு எனும் நிலை கோலோச்சத் தொடங்கியது.

 இத்தகைய ஒரு மனப்பான்மை வளரத் தொடங்கிய மக்களிடையே இடதுசாரக் கொள்கைகளைப் பேசிய லேபர் கட்சி எவ்வகையிலும் தமது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ள முடியவில்லை.

 அதன் விளைவாக லேபர் கட்சி மீண்டும் அரசு கட்டில் ஏறுவதனால் தமது கொள்கைகளை இடதுசார வாதத்திலின்றும் சிறிது நகர்த்தி வலதுசார எல்லைக்குள் புகுத்த வேண்டியதாகியது. இதன் அதிஉச்ச கட்டமாகவே டோனி பிளேயர் அவர்களீஈன் கொள்கைகள் வலதுசாரத்தையே பிரதிபலித்தன.

 இத்தகைய பின்னனியில் பார்க்கும் போது பிரதமரின் க\ணிப்புச் சரியானதோ என்று எண்ணத் தோன்றும். ஆயினும் அனைவரும் தாச்சர் அவர்களின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் சமுதாயமாக இங்கிலாந்துச் சமுதாயத்தைக் கணிப்பது சரியானதாக இருக்காது.

 அனைவருமே திருமதி தாச்சர் அவர்களின் கொள்கைகளின் பாதிப்புக்களை எதிர்நோக்குபவர்களாஅக இருக்கிறார்கள் என்ற வாதம் உண்மையானது. ஆனால் அனைவரும் அவரது வழி நடப்பவர்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்க்கூடிதொன்றல்ல.

 இன்றைய காலகட்டம் வித்தியாசமானது. மிகவும் அவசர் கதியில் இலத்திரனியல் ஊடகங்களின் செயற்பாட்டுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்றைய சமுதாயத்தின் தேவைகள் பல அளவில் மாற்றங்களுக்குள்ளாகியிருக்கிறது.

 இம்மாற்றங்களை உள்வாங்கி கொள்லும் வகையில் அரசியலும் மாற்றமடைய வேண்டிய தேவைக்குள்ளாகிறது.

 இடது, வலது எனும் அன்றைய அரசியல், சோஷலிசம் , முதலாளித்துவம் என்ற இரு நிலைகளுக்குட்பட்டதுதான் இன்ரைய அரசியல் என்று கூறிவிடமுடியாது.

 இவை இரண்டையும் அனுசரிப்பதாக , இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிலையை உருவாக்க வேண்டிய தேவையிருக்கிறது.

 இன்றைய இளைய தலைமுறையின் அரசியலை நோக்கிய பார்வை முற்றிலும் வேறுபட்டது. வெறும் முரண்பாடு எனும் அரசியலுக்கப்பாற்பட்டு ஒருமை காணும் அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவையுள்ளது.

 கடந்தகால அரசியலின் குழந்தைகள் நாம் என்று சொல்லிக் கொண்டிருப்பதை விடுத்து எதிர்காலத்தை நோக்கி ஒரு புது அரசியலை நகர்த்திச் செல்லும் குழந்தைகள் என்று செலாக்கம் காணும் தலைமுறையாக எமது தலைமுறையை உருமாற்ற அரசியல் தலைவர்கள் முனைவார்களா ? என்பதுவே எம்முன்னால் எழுந்து நிற்கும் கேள்வி

 மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

19.04.2013

http://www.thamilpoonga.com

http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.