Tag: கவிஞர் காவிரி மைந்தன்

  • பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் – கவியரசு கண்ணதாசன்!

    கவிஞர் காவிரி மைந்தன்

    மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

     

    தென்றல் என்கிற சொல்கூட மென்மையானதுதான். தென்கோடி தென்றல் தரும் ராகங்களே என்று கிருஷ்ணகானத்தில் கண்ணதாசன் அழைக்கிறார்! திசைகள் எட்டு இருந்தாலும் தெற்கிற்கென பெருமைகள் அதிகம்தான்! வாடைக்காற்று என்று வடக்குப் பக்கமிருந்து வரும் காற்றை அழைப்பதுண்டு! ஆனால் வர வேண்டும் என நினைப்பது தெற்கிலிருந்து வருகின்ற தென்றல் ஒன்றைத்தான்! வருடவரும் அந்தக் காற்று வரவேண்டும் என நெஞ்சம் வரவேற்புக் கொடுப்பது தென்றலுக்கு மட்டும்தான்!!

    இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன் என்று கூட ஒரு பல்லவி தந்தார் கண்ணதாசன்!

    காலகாலமாகக் கவிஞர்களின் பாடுபொருளாய்.. நிலா, தென்றல் என விட்டுவிட இயலாத சொல்லாய், காற்றாய் தவழ்ந்து கொண்டிருக்கிறது! காற்றினிலே அவள் தென்றல் என்று இன்னும் காலங்களில் அவள் வசந்தம் பாடலில் அணி சேர்க்கிறார்! நீக்கமற நிறைந்திருக்கம் இத் தென்றலைப்பற்றி – பிரத்யேகமாக ஒரு காதல் பாடலில்.. அதுவும் தலைவியுடன் தலைவன் தனிமையிலிருக்கும் அந்தப்புரத்திற்கு வந்த தென்றல் பற்றி.. லாவகமான கவிதை யுக்தி ..கண்ணதாசனுக்கே கைவந்த கலை

    !

    விழிகள் தழுவிக்கொள்ளும் வேளையில், இருவருக்கும் இடையில் விளையாட வருகிறதாம் இந்த சாசகசத் தென்றல்! கற்பனையால் இப்படி கவிதை படைக்க முடியும் எனும்போது – அதைத் திரையிசையமைத்து இன்னும் கெளரவப்படுத்த தன்னால் முடியும் என்று நிருபித்திருக்கிறார் திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன்.. குரல் தந்திருக்கிறார்கள் பி.பி.சீனிவாஸ் மற்றும் பி.சுசீலா.

    தென்றல்வரும் வீதியெல்லாம் செந்தமிழர் மாண்பையெல்லாம் காட்டுகின்றார் கவியரசர். நாதஸ்வர ஓசையுடன் இணைந்த இசையில் தொடங்கும் பாடலிது! மங்கல நாதம் பொங்கிடும்போது.. இன்பத்திற்கு இங்கு எல்லைகள் ஏது? இழைந்தோடும் குரல்களில் இந்தத் தென்றல் பிறந்த இடம் முதல் புகுந்த இடம் என.. தன் வரலாறு சொல்கிறது கேளுங்கள்

    !

    பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ் – எஸ். ஜானகி
    இயற்றியவர்: கண்ணதாசன்
    இசை: கே.வி. மகாதேவன்
    திரைப்படம்: திருவிளையாடல்

    பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ஆடை
    பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
    பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ஆடை
    பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
    பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

    பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல்
    பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல் இந்தப்
    பாண்டியனார் பைங்கிளியைத் தீண்டிடும் தென்றல்
    பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

    கார்குழலை நீராட்டி கண்ணிரண்டைத் தாலாட்டி
    கார்குழலை நீராட்டி கண்ணிரண்டைத் தாலாட்டி
    தேனிதழில் முத்தமிட்டு சிரித்திடும் தென்றல் – வண்ண
    தேகமெங்கும் நீரெடுத்துத் தெளித்திடும் தென்றல்
    தேகமெங்கும் நீரெடுத்துத் தெளித்திடும் தென்றல்
    பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
    வான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் மதுரையிலே
    வான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் மதுரையிலே
    தான் பறந்து ஆட்சி செய்து தளிர்மணித் தென்றல் – அது
    வான் பிறந்த போது வந்த வாலிபத் தென்றல்
    வான் பிறந்த போது வந்த வாலிபத் தென்றல்
    பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ஆடை
    பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
    பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

    http://www.youtube.com/watch?v=rA1cuzhcTfQ

    http://www.youtube.com/watch?v=rA1cuzhcTfQ
    Podhigai Malai Uchiyile – Thiruvilayadal – Muthuraman & Devika

    Share
  • பேரறிஞர் அண்ணா

    காவிரி மைந்தன்images

    கனிந்த நல் இதழ்களில் தவழ்ந்திடும் புன்னகை 

     

    கவிதையில் சொன்னால் அண்ணா ஒரு  பாற்கடல்!

     

    பொதிகையும் புதுவையும் கலந்துவந்த கலவையவர்!

     

    தமிழ்க் கதிரவன் உதயமாகக் காரணம் ஆம்  அவர்!!

     

    கடற்கரையில் நிரந்தரமாய் காட்சிதரும் பொருளானார்!

     

    காலங்கள் உள்ளவரை காவியமாய் அவரானார்!!

     

    எளிமையில் இவரிருந்தும் ஏழ்மையை அகற்ற வந்தார் 

     

    எண்ணத்தால் உயர்ந்துநின்று இவ்வுலகைத்தான் அளந்தார்!

     

    சமுதாய அவலங்களைக் களைப்பின்றி சாடிநின்றார்!

     

    சாதிப் பேயொழிய பெரியாரின் வழி நடந்தார்!!

     

    முதல்வர் பதவியிது முள் வைத்த கிரீடமென்றார்!!

     

    முழுமூச்சாய் நாட்டிற்கே தன்னையே அர்ப்பணித்தார்!

     

    ஆங்கிலத்தில் புலமையுண்டு.. அனைவரையும் திகைக்க வைத்தார்.

     

    அண்ணாவின் பேச்சாற்றல் அனைத்துலகும் அறிந்த ஒன்று!

     

    கலைஞர் முதல் தலைவர்களை உருவாக்கிய களமவர்!

     

    கண்ணதாசன் முதலான கவிஞர்களை நேசித்தப் பேரறிஞர்

     

    புடம்போட்டு வைத்த தங்கம்!  புன்னகையால் நமை இழுக்கும்!

     

    பொடிபோடும் பழக்கமுண்டு!  புரட்சிக்கு அது நெருக்கம்!!

     

    ஒய்வுறக்கம் ஏதுமின்றி ஒர்தலைவர் யாரென்றால் – அது 

     

    காஞ்சியிலே தோன்றிய நம் தலைவர் அண்ணாவே!! 

     

    படத்துக்கு நன்றி

    http://www.mysixer.com/?p=13237

    Share
  • செந்தமிழ்க்கடல் சிலம்பொலி செல்லப்பனார்!

    காவிரி மைந்தன்

    வாழும் தமிழ் மொழியின் வற்றாத ஜீவ ஊற்றை.. வகை வகையாய் எடுத்துரைக்கும் இலக்கியங்கள்! வண்ணத்தமிழ் மொழிக்கு வசந்தகாலம் வந்ததுபோல்.. வந்திருக்கும் செந்தமிழ் அங்கீகாரம்!! வள்ளுவன் முதலாக வாழையடி வாழையாய் நற்றமிழைப் பனையேட்டில் பதித்து வைத்த பைந்தமிழ்ச் சான்றோர் பலர்! இவரெல்லாம் எடுத்துரைத்தப் பொக்கிஷத்தை செல்லரித்து தின்றதுபோக.. மீதமெனப் பத்திரப்படுத்த ஒரு தாத்தா.. உ.வே.சாமிநாத ஐயர் வந்தார்! கிட்டிய தமிழ்ச்செல்வம் அத்தனையும் உயிர்ப்பிக்க தன்னுயிரையே தந்தார்!!

    அத்திருமகனாரின் அளப்பரிய சேவையினால் தப்பித்த இலக்கியப் புதையல்கள்! இவைதான் எமதென்று இன்று மார்தட்டி நிற்கும் நாம்.. தமிழின மொழி கலாச்சாரம் பண்பாடு இவைகளின் ஒட்டுமொத்த உணர்வைப் பெற்றிருந்தால்.. உலகிலேயே உயர்ந்தவர்கள் நாமென்று ஓங்கிக்குரல் கொடுத்திருப்போம்! அடிமை உணர்வுக்கு ஒருபோதும் அடிபணியாதிருந்திருப்போம்! உரிமை வாழ்வென்று உலகிற்கே எடுத்துச்சொன்ன பரம்பரையின் வரலாறு அறிந்திருப்போம்! அகத்துறை புறத்துறை எனப் பகுத்தறிந்து வாழ்ந்தவன் தமிழன்! அவ்வழி நடந்தால் இவ் வையகம் உய்திடும் உண்மையை உரக்கக் கூறுவோம்!

    அறநெறி தழைக்க வேண்டி அன்றுமுதல் புலவர் பெருமக்கள் அய்யன் முதலாக.. வரைந்துவைத்த பாக்கள்.. படிவங்கள்.. செய்யுள்கள்.. செப்புவதென்ன? வீரமும் காதலும் தமிழர் வாழ்க்கை என்கிற சீரும் சிறப்புமான வரலாற்றுப் பெட்டகங்கள் எனத் திகழும் இலக்கியப் பக்கங்களை இனிவரும் தலைமுறைகளுக்கும் எடுத்துரைக்கும் கடமையும் நம்மைச் சார்ந்ததே!

    அவ்வழியே.. தமிழர்தம் சிறப்புகளை தாங்கிநிற்கும் இலக்கியமாய்.. தன்னிகரில்லாப் பெருங்காப்பியமாய்.. ஆள்கின்ற சேரனின் தம்பியாய் பிறந்திருந்தும்.. தனிமை நாடி தவக்கோலம்பூண்டு ஒப்பிலா இலக்கியமாய் ஓங்குபுகழ் சிலப்பதிகாரம்தனை இயற்றி நீங்கிடாப் புகழ்பெற்ற இளங்கோவடிகள்!

    ஆங்கு அதனை பாரினிலே அவையோர் சபையெல்லாம் தினம் முழக்கம் செய்தவராய்.. வாழ்கின்ற வாழ்வெல்லாம் தமிழ்.. தமிழ்.. என்றே வாழ்பவராய்.. எளிமையின் இலக்கணத்தை எடுத்துரைக்கும் வல்லோனாய்.. புன்முறுவல் பூத்ததுபோல் திருமுகம் கொண்டவராய்.. சொல்லேதும் கடினமாய் தன்னகத்தேக் காணாதவராய்.. அல்லும் பகலும் பட்டிதொட்டியெங்கும் பயணம் கொண்டேனும் பைந்தமிழைக் காத்துநிற்கும் சீலராய்.. பாவலராய்.. நாவலராய்.. எதிரிகளே இல்லாத ஏகோபித்த மனிதராய்.. இன்னுமின்னும் இவர் புகழைச் சொல்லச் சொல்ல.. செந்தமிழ் மணக்காதோ? தென்னவரின் பெருமை சிறக்காதோ?

    அன்னவரின் அகவை 85ஆம்! நம்பவே முடியவில்லை.. நாட்டோரே.. நடமாடும் தமிழுக்கு அகவை இங்கேது? அவர் புகழைப் பாடுதலில் எந்தன் பங்கேது? சுகம் சுகமாய் இருப்பதனால் தமிழே உந்தன் சுவைஞன் நான் என்றே வாழ்கின்றேன்! சிலம்பின் பெருமையெல்லாம் உலகை வலம்வந்து எடுத்துரைத்த ஏந்தலிவர்! அருமை மிகநிறைந்த மாமனிதர்! யுகம் யுகமாகத் தேடினினும் காணக்கிடைக்கா மனிதரிவர்! வாழ்கின்ற யுகத்தில் நாம் வாழ்ந்த பெருமையுடன்.. வாழ்த்துரைக்க வயதின்றி வணங்கி மகிழ்கின்றேன்!

    Share
  • ஆயிரம் கைகள் மறைத்துநின்றாலும் – கவிஞர் முத்துக்கூத்தன்

     கவிஞர் முத்துக்கூத்தன்

     

    ஆயிரம் கைகள் மறைத்துநின்றாலும்

    · ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை-

    ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை..

    · இந்தப்பல்லவிஎழுதப்பட்டதுகவிஞர்ஆலங்குடிசோமுஅவர்களால்! அவர் இல்லத்திற்கு சென்றிருந்த அவர்தம் நண்பர் முத்துக்கூத்தன் அவர்கள் கண்ணில் இந்தப்பல்லவிபட.. அண்ணே.. ரொம்பநல்லாயிருக்கு.. இதைநான்எடுத்துக்குறேன்..என்றார்.

    · கழைக்கூத்தாடியாய் தன்வாழ்க்கையை ஓட்டிவந்த முத்துக்கூத்தன் அவர்களை இந்தப் பல்லவி உந்தித்தள்ள.. அவர் உள்ளத்திலிருந்து பொங்கியவரிகள் சரணங்களாகின!

    · அரசகட்டளையில் தமிழ்த்திரையில் முதன்முறையாக .. சண்டைக்காட்சியில் திரைப்பாடல் ஒன்று இடம்பெற்றது அன்றுதான்!

    · மக்கள்தீர்ப்புக்கு எதிராக எவரும் அரசாள முடியாது என்கிற அருமையான வரியையும்.. அவர் மேற்கோள் காட்டிய அனைத்துவரிகளுமே புரட்சித்தலைவருக்குப் பிடித்துப்போக.. அரசகட்டளையில் இடம்பெற்ற பாடலானது. அன்றும் இன்றும் இந்தவரிகள் நெஞ்சில் மனனமானது!

    · ஆடிவா …

    ஆயிரம்கைகள்மறைத்துநின்றாலும்

    ஆதவன்மறைவதில்லை
    ஆணைகள்இட்டேயார்தடுத்தாலும்
    அலைகடல்ஓய்வதில்லை

    ஆடிவா..ஆடிவா.. ஆடிவா..

    · ஆடப்பிறந்தவளேஆடிவா
    புகழ்தேடப்பிறந்தவளேபாடிவா
    ஆடிவாஆடிவாஆடிவா

    இடைஎன்னும்கொடியாடநடமாடிவா
    இசைகொண்டுஅழகேநீதேராடிவா
    தரைமீதுபோராடசதிராடிவா
    செந்தமிழேநீபகைவென்றுமுடிசூடிவா
    (ஆடிவா )

    மயிலாடவான்கோழிதடைசெய்வதோ
    மாங்குயில்பாடகோட்டான்கள்குறைசொல்வதோ
    முயல்கூட்டம்சிங்கத்தின்எதிர்நிற்பதோ
    அதன்முறையற்றசெயலைநாம்வரவேற்பதோ
    (ஆடிவா )

    உயிருக்குநிகர்இந்தநாடல்லவோ
    அதன்உரிமைக்குஉரியவர்கள்நாமல்லவோ
    புயலுக்கும்நெருப்புக்கும்திரைபோடவோ
    மக்கள்தீர்ப்புக்குஎதிராகஅரசாளவோ
    (ஆடிவா )

     

    புரட்சிக்கும் தலைவருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தியபாடல் என்றுகூடச் சொல்லலாம்! நாட்டுப்பற்று, நமக்குள்ள உரிமை, எதிரிகளை எள்ளாடல், நமது வீரம் என்று எல்லாவற்றையும் பட்டியலிட்டு படைத்துள்ள பாட்டுப் படையலிது! எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கான கொள்ளைவிருந்து.. நாட்டிய மயிலாய் திரையில் தோன்றிநடைபோட்ட கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியின் கூட்டணியில் திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன்வழங்கிய இசையில் உணர்வுகளை மீட்டிடும் பாட்டு!! உள்ளம்எழும்இதைக்கேட்டு!!

    Share
  • சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது மனம் பேதை மனம் – கவியரசு கண்ணதாசன்

    சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது மனம் பேதை மனம்

    1967ல் வெளியான தங்கை திரைப்படத்திற்காக கவியரசு கண்ணதாசன் எழுதி மெல்லிசை மன்னர் அமைத்த இசையில் பி.சுசீலாவின் சுகமான பாடலிது!

    புன்னகைஅரசி கே.ஆர்.விஜயா நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் இயக்கம் தந்திருக்கிறார் ஏ.சி.திருலோகசந்தர்.

    இந்தப் பாடல் இடம்பெறும் இடத்தில் ஒரு இறுக்கம். அந்த இடத்தில் எப்படி இப்படி ஒரு பாடல் என்று எண்ணாதோர் இருக்க முடியாது!

    நாயகன் தவறான வழியில் செல்ல.. அதை தடுக்கிற நாயகியின்மீது கோபத்தின் கணைவீசி சொற்களை அள்ளிவீச.. அங்கே இருவருக்கும் இடையில் அனல் பறக்கிறது.

    மெல்லிசை மெதுவாக குரல் தருகிறது.. சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது மனம் பேதை மனம் .. கனிவான பெண்ணால் எந்தச் சூழ்நிலையையும் வென்றெடுக்க முடியும் என்று காட்டியிருக்கும் காட்சியிது!

    நெஞ்சம் அறியாமல் ஒரு வார்த்தை நீ என்றது
    என் பெண் உள்ளம் எதிரொலி போல் நான் என்றது
    நான் என்றும் நீ என்றும் ஏன் சொல்வது
    நான் வேறோ நீ வேறோ யார் சொன்னது

    பாடலின் பக்கபலம் இசை.. அதை நம்மிடம் சேர்க்கும் பொறுப்பில் குரல்.. திரையில் இடம்பெறும் பாத்திரங்கள் நம் மனதில் இடம்பெறுவதில் வியப்பில்லையே!

    உந்தன் நிழலாக நான் மாறும் நாள் வந்தது
    வரும் சுகம் துன்பம் சரிபாதி கேள் என்றது
    பூவாகிக் காயாகி கனியானது
    நீயாகி நானாகி நாமானது

    உணர்வுபூர்வமான கதையமைப்பில் உள்ளம்தொடும் பாடலுக்கு வழியுண்டு என்பதை நிரூபிக்கும் பாடல்! வரிகளில் உள்ள சுகம் நாயகனை தன்வழிப்படுத்தும் என்கிற நம்பிக்கையோடு நாயகி பாடும் பாவமென்ன? நளினமென்ன? சுகமான குரல் என்றால் சுசீலாவின் குரல் என்று சும்மாவா சொன்னார்கள்?

    சுகம் சுகம்
    சுகம் சுகம்
    சுகம் சுகம்
    அது துன்பமான இன்பமானது
    சுகம் சுகம்
    அது துன்பமான இன்பமானது
    மனம் பேதை மனம்
    அது மாறாத சொந்தமானது
    இனம் பெண்களின் இனம்
    அது பூப்போல மென்மையானது

    சுகம் சுகம்
    அது துன்பமான இன்பமானது

    நெஞ்சம் அறியாமல் ஒரு வார்த்தை நீ என்றது
    என் பெண் உள்ளம் எதிரொலி போல் நான் என்றது
    நான் என்றும் நீ என்றும் ஏன் சொல்வது
    நான் வேறோ நீ வேறோ யார் சொன்னது

    சுகம் சுகம்
    அது துன்பமான இன்பமானது
    மனம் பேதை மனம்
    அது மாறாத சொந்தமானது
    இனம் பெண்களின் இனம்
    அது பூப்போல மென்மையானது

    உந்தன் நிழலாக நான் மாறும் நாள் வந்தது
    வரும் சுகம் துன்பம் சரிபாதி கேள் என்றது
    உந்தன் நிழலாக நான் மாறும் நாள் வந்தது
    வரும் சுகம் துன்பம் சரிபாதி கேள் என்றது
    பூவாகிக் காயாகி கனியானது
    நீயாகி நானாகி நாமானது

    சுகம் சுகம்
    அது துன்பமான இன்பமானது
    ஆ ஆ ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ

    P சுசீலா அம்மாவின் சுகமான ஒரு பாடல்.

    திரைப் படம்: தங்கை (1967)
    நடிப்பு: சிவாஜி, K R விஜயா
    இசை: M S விஸ்வனாதன்
    இயக்கம்: A C திருலோகசந்தர்

    http://www.divshare.com/download/16924027-d85

    Share
  • ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி – கவிஞர் வாலி

    கவிஞர் காவிரி மைந்தன்

    ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி
    ஆயிரம் இருக்குது சுப தினம்

    சுபதினம் என்கிற திரைப்படத்திற்காக கவிஞர் வாலி எழுதிக்கொடுத்த மங்கலச்சீட்டு.. வரிக்கு வரி சுபதினம் என்று எழுதுவது என்பது அந்த வரிகள் எல்லாம் சொல்கின்ற சேதியைப் பொறுத்து பெருமை பெறுகின்றது. வாழ்த்திப்பாடும் மங்கலங்களை அந்நாள்முதல் அரசர் முதல் ஆண்டி வரை அனைவரும் வரவேற்று மகிழ்ந்தார்கள். அதுவும் கற்றறிந்த புலவர்தம் திருவாயில் கிட்டும் அமுதமொழியது என்பதால்தான்! நான்கே வரிகளில் நல்வாழ்த்து கிடைத்தாலும் கிடைத்தற்கரிய பேறு என்பது உண்மைதானே!
    திரைப்படத்தின் பெயரில் உள்ள சுபதினத்தைப் பற்றி கவிஞரின் எண்ணரதம் ஊர்வலம் வருகிறது! எழுதிக்குவித்த அனைத்துவரிகளிலும் சுபதினத்தைத் தருகிறது!

    அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்
    இதைவிட வேறென்ன சொல் வேண்டும் நண்பர்களே.. எண்ணம்போல் வாழ்வு என்பார்கள்.. நல்லன எண்ணி நாளும் பொழுதும் வாழும் உள்ளங்கள் ஒருநாளும் அல்லலுறுவதில்லை. தானும் வாழ்வதுடன் இத்தரணியில் எல்லா உயிர்களும் நலம்பெற வாழவேண்டும் என்கிற எண்ணம்தானே உயர்ந்தது. அதுவும் அடுத்தவர் நலத்தை நினைப்பவர்களுக்கு ஆயுள்முழுவதும் சுபதினம் அமையவேண்டும் என்று கவிஞர் வாழ்த்தியிருக்கிறார்.

    தன்னலம் மறக்கச் சொல்லவில்லை.. பொதுநலம் எண்ண வேண்டும்.

    தன்னைப் போல பிறரையும் எண்ணுதல் தவத்தினும் பெரியதாம்.

    லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால்
    கிடைத்தவருக்கு அது சுபதினம்
    வள்ளலின் கையில் பல லட்சம் இருந்தால்
    எளியவர்க்கெல்லாம் சுப தினம்

    எதார்த்தங்களைக்கூட இந்தப் பட்டியலில் இட்டு சராசரி மனிதனையும் தட்டி எழுப்புகிற யுக்தி வாலியினுடையது. மொத்தத்தில் வெண்கலக் குரலோன் தெய்வத்திரு சீர்காழி கோவிந்தராஜன் பாடிய மறக்க முடியாத பாடல்களுள் இதுவும் ஒன்று!

    ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
    அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்
    ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
    அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்

    வள்ளுவன் பிறந்து குறளைச் சொன்னால் அறிவுக்கு அது தான் சுப தினம்
    வள்ளுவன் பிறந்து குறளைச் சொன்னால் அறிவுக்கு அது தான் சுப தினம்
    புத்தன் பிறந்து போதனை செய்தால் அன்புக்கு அதுதான் சுபதினம்
    புத்தன் பிறந்து போதனை செய்தால் அன்புக்கு அதுதான் சுபதினம்

    காந்தி பிறந்து விடுதலை தந்தார் காந்தி பிறந்து விடுதலை தந்தார்
    உரிமைக்கு அதுதான் சுப தினம்

    ஒருவன் துணிந்து தியாகம் செய்தால்
    உலகுக்கு அதுதான் சுப தினம்

    ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
    அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்

    நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால்
    ரசிகனுக்கு அதுதான் சுப தினம்
    நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால்
    ரசிகனுக்கு அதுதான் சுப தினம்
    உழுதுண்டு வாழும் மக்களுக்கெல்லாம்
    அறுவடை நாளே சுப தினம்
    உழுதுண்டு வாழும் மக்களுக்கெல்லாம்
    அறுவடை நாளே சுப தினம்

    லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால்
    கிடைத்தவருக்கு அது சுபதினம்
    லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால்
    கிடைத்தவருக்கு அது சுபதினம்
    வள்ளலின் கையில் பல லட்சம் இருந்தால்
    எளியவர்க்கெல்லாம் சுப தினம்

    ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
    அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்.

    Share
  • உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டதோ

     

    கவிஞர் காவிரி மைந்தன்

     

    1970ல் வெளிவந்த நவக்கிரகம் திரைப்படத்திற்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் பி.சுசீலா பாடிய பாடல்! வி.குமார் இசையில் சிவக்குமார் லட்சுமி திரையில் தோன்றும் பாடல்!

    கவிஞர் வாலியின் கற்பனையில் இசையின் இணை பக்க பலமாய் அமைந்திட பருவகாலக் காற்றுபோல இந்தப் பாடல் நம் மனதில் இடம் பிடித்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

    பாடலின் பல்லவியில் உள்ள கவித்துவம் பாடல் முழுவதும் நிறைந்திருக்க.. காதலின்துடிப்பை ஒவ்வொரு வரியும் சொல்லிமகிழ..

    பூத்துக்குலுங்கும் ரோஜாச் செடிபோல் துளிர்விட்டு.. கிளைவிட்டு.. மலர்விட்டு வளரும் காதலின் சுகங்கள் கோடியன்றோ?

    இயற்கையாய் நடக்கும் மழைத்துளி

    .. சாரல்.. இவற்றையெல்லாம் தனக்கேற்றவாறு கவிஞர் பாடலுக்குள் பிடித்துவர.. அலைகள்கூட இவர்களை இணைக்கப் பாலமிட்ட கதையையும் சொல்கிறார் பாருங்கள்!

    அலைமோதும் எண்ணங்களில் இளங்கிளிகள் பருவப் பாடத்தை பயின்றுகொண்டிருக்க.. பெண்ணுக்கே பெருமை சேர்க்கும் நாணம் இங்கே என்ன செய்கிறது பாருங்கள்..

    இந்த நேரம் பார்த்து நாணம் வந்து கோலமிட்டது

    கொஞ்சநாள் வரையில் பொறுத்திருக்க ஆணையிட்டது

    இந்த கற்பனை வளம் மிக்க கவிஞர்களுக்கே கைவரும்! கவிஞர் வாலியின்கைவண்ணம் அக்கற்பனையை கொடிகட்டிப்பறக்கவிடுகிறது இங்கேதான்!

    உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டதோ

     

    உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டதோ

    அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக்கொண்டதோ

    வரலாம்.. தொடலாம் மணநாள் வரும்போது

    தருவேன் பெறலாம் பக்கம் நீ வரும்போது..

     

    உன் பாதம் தொட்ட அலைகள் என் பாதம் தொட்டது

    நம்மிருவரையும் ஒன்றுசேர்க்க பாலமிட்டது

    இந்த நேரம் பார்த்து நாணம் வந்து கோலமிட்டது

    கொஞ்சநாள் வரையில் பொறுத்திருக்க ஆணையிட்டது

     

    மழைத்தூரல்போட்டு சாரல்வந்து உன்னை நனைத்தது – அது

    உன்னை நனைத்து தெறித்தபோது என்னை நனைத்தது

    அது துளித்துளியாய் எனது தோளில் இடம்பிடித்தது

    இந்த இயற்கையெல்லாம் இருவரையும் இணைத்துப் பார்க்குது!
    http://www.youtube.com/watch?v=zBj3r9Xweds
    http://www.youtube.com/watch?v=zBj3r9Xweds

    உன்னை தொட்ட காற்று – Unnai thotta kaatru vanthu
    Share
  • இளமை கொலுவிருக்கும் – கவிஞர் கண்ணதாசன்

    இளமை கொலுவிருக்கும்..

     

    கவிஞர் காவிரி மைந்தன்

     

    அந்தக் காலத்தில் இந்தப் பாடல் பெற்ற வரவேற்பு அமோகம்!  ஆம் மோகம் குடியிருக்கும் வரிகள்!  அதற்கேற்ற காட்சியமைப்பு!! இந்தப் பாடல் இரண்டு முறை படத்தில் வரும்! கதாநாயகி பாடுவதாகவும்.. மற்றுமொரு முறை கதாநாயகன் பாடுவதாக!

    மொத்தத்தில் இப்பாடல் வரிகள் பெண்மையைப் போற்றுகின்றன. பெண் இல்லையென்றால் இவ்வுலகில் என்ன இருக்கிறது என்கிற கேள்வியை நம் முன் வைக்கிறது!  கவிஞரின் இதயத்திலிருந்து ஆழமான அழுத்தமான வரிகள் விழுந்திருக்கின்றன!

    அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ?

    அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ?

    Statement of facts.. வார்த்தைகளில் சொல்லிவைத்தால் அது வரியாக இருக்கும்!  வளமையாக கவிதையில் சொல்லி வைத்தால் அது பாடலாகும்! இரண்டு வரிகள்தான்!  எத்தனைப் பொருள்!!

    கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும்
    இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ? பெண்
    இயற்கையின் சீதனப் பரிசல்லவோ?

     

    பெண்ணைப் பாடாத கவிஞன் எங்கே?  இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ..  அவள் இயற்கை தந்திருக்கும் சீதனப் பரிசல்லவோ?

    பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா? ஒரு
    பூவைக்கு மாலையிடும் மணம் வருமா?
    செல்வம் சிரித்தபடி அமுதிடுமா? எந்த
    செல்வமும் பெண்மையின் சுகம் தருமா?

     

    பழைய பாடல்தான்!  மனதில் பதியும் பாடல்!  இளமையை ஏற்றிவைத்து பெண்மையைப் போற்றிவைக்கும் பாடல்!

     

    பாடல்: இளமை கொலுவிருக்கும்  

    திரைப்படம்: ஹ்லோ மிஸ்டர் ஜமீன்தார்
    பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
    இயற்றியவர்:  கவிஞர் கண்ணதாசன்

    இசை: விஸ்வநாதன் இராமமூர்த்தி
    ஆண்டு: 1962

    ஒஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
    அஹா அஹா ஹ ஹா ஹா ஹா ஒஹோ ஒஹோ ஒஹோஹோ

    இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
    இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
    இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
    இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
    இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
    இல்லாமல் சுகமில்லை உலகத்திலே

    அணத்து வளர்ப்பவளும் தாயல்லவோ?
    அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ?
    அணத்து வளர்ப்பவளும் தாயல்லவோ?
    அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ?
    கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும்
    இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ? பெண்
    இயற்கையின் சீதனப் பரிசல்லவோ?

    இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
    இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
    இல்லாமல் சுகமில்லை உலகத்திலே

    பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா? ஒரு
    பூவைக்கு மாலையிடும் மணம் வருமா?
    பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா? ஒரு
    பூவைக்கு மாலையிடும் மணம் வருமா?
    இன்று தேடி வரும் நாளை ஓடிவிடும்
    செல்வம் சிரித்தபடி அமுதிடுமா? எந்த
    செல்வமும் பெண்மையின் சுகம் தருமா?

    இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
    இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
    இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
    இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
    இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
    இல்லாமல் சுகமில்லை உலகத்திலே

     

    http://www.youtube.com/watch?v=MGUAdeSS0xA

     

    http://www.youtube.com/watch?v=K1eC8lxqusk

    இளமை கொலுவிருக்கும் (ஆண்) – Ilamai koluvirukkum (male)
    இளமை கொலுவிருக்கும் (பெண்)-Ilamai Koluvirukkum (Susila)
    Share
  • கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா – கவிஞர் குழந்தை அழ.வள்ளியப்பா!

    கவிஞர் காவிரி மைந்தன்

    கலைகள் என்றதுமே நம் நினைவிற்கு வருவது சிலைகள்! சிலைகள் என்றதும் சிற்பக்கலையில் சிறந்து விளங்கிய பல்லவ ராஜ்ஜியமம் நெஞ்சில் நிழலாடுகிறது! காஞ்சியைத் தலைநகரமாய்க் கொண்ட பல்லவ மன்னன் மகேந்திர பல்லவன் மகன் நரசிம்மராஜ பல்லவன் சிற்பக்கலை ஆர்வத்திற்கு தக்கதொரு எடுத்துக்காட்டு! மாமல்லன் என்னும் அவன் நினைவால் உருவான மாமல்லபுரம்!

    காலவெள்ளத்தால் சிதைந்துவந்த சிற்பங்களை மத்திய அரசின் தொல்லியல் ஆராய்ச்சித்துறை கண்டெடுத்து காத்து வருதல் பழமையைப் போற்றிப்பாதுகாத்திடவும், வருகின்ற தலைமுறையினர் நம் முன்னோர் பற்றி அறிந்திடவும் கலை, பண்பாடு இவற்றில் தமிழர்கள் தலைசிறந்து விளங்கினர் என்பதற்கு சரித்திர சான்றுகாட்ட ஏதுவாக இருக்கும்!

    பள்ளிகளில் நாம் படிக்கும்போது குழந்தைகளுக்கு புரியும்வகையில், மிக மிக எளிய சொற்களைப் பயன்படுத்தி, குழந்தைகளுக்காகவே பாடல்கள் இயற்றித் தருவதில் பெயர்பெற்ற குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள் வா ராஜா வா திரைப்படத்திற்காக வடித்துத் தந்த பாடல்!

    கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா.. அந்தக்

    கதை சொல்ல வந்தேனே சின்ன ராஜா.. வா.ராஜா வா..

    ஒட்டுக்கல்லை சேர்க்காம..

    ஒரே கல்லை குடைஞ்செடுத்து

    கட்டி வச்சா மண்டபத்தை பல்லவராஜா

    அதைக் கச்சிதமா சொல்ல வந்தேன் சின்ன ராஜா..

    சொல்லு ராஜா சொல்லு..

    பல்லவ மன்னவனின் படைப்பில் உருவான மகாபலிபுரத்தின் சிறப்புகளை எவரும் உணரும் வண்ணம் பட்டியலிடுகிறது இப்பாடல்!

    கடலோரம் கோபுரம் மலைமேலே மண்டபம்

    எப்படித்தான் செஞ்சானோ பல்லவராஜா..

    அதை அப்படியே சொல்ல வந்தேன் சின்ன ராஜா

    ஆமா ராஜா ஆமா…

    சிற்பியரைக் கூட்டிவந்து சிற்பங்களை செய்யச்சொல்லி

    கற்பனையைக் காட்டிவிட்டான் பல்லவராஜா

    அந்த அற்புதத்தை சொல்ல வந்தேன் சின்ன ராஜா..

    வா.ராஜா வா..

    ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் குழந்தை அழ.வள்ளியப்பா அவர்கள் எழுதிய இப்பாடலுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் எல்.ஆர். ஈஸ்வரி குரல் கொடுத்திருக்கிறார் பிள்ளைத்தமிழாய்!

    ஒரு வரலாற்றைக்கூட நான்கே சரணங்களில் வார்த்தளித்துக் கொடுத்திட இயலும் என்று எடுத்துக்காட்டும் வல்லுனராய் கவிஞர் குழந்தை அழ.வள்ளியப்பா!

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்!..

    கவிஞர் காவிரி மைந்தன்

    MGR ... MGR ....

    மனதில் நிறைந்த மக்கள் திலகம்!..

    அன்றலர்ந்த தாமரைபோல் அழகியநல்முகம்! செக்கர்வானம் தந்துவைத்த பொன்னிறம்! கொடுத்துச்சிவந்த கரங்களால் அவரும் பாரி! பறங்கிமலை அருகினில் தோட்டம்! தோட்டம்! ராமனின் கால்பட்டதால் அகலிகை பெற்ற விமோசனம்போல் எங்கள் ராமச்சந்திரன் வாழ்ந்த காரணத்தால் அது ராமாவரமாய் ஆனதோ? திரையில் தோன்றிய நாயகன் மக்கள் மனதில் வாழ்கிற காவியம்! இதற்கு முன்னோ இதற்குப் பின்னோ இப்படி ஒருவரில்லை! ஈடில்லை. உவமையில்லை!

    கும்பகோணத்தில் தன் தாய் ஒரு கவளம் சோறுதர முடியாமல் தவித்த தவிப்பை தன் மனதில் பதி்த்து தமிழகத்தில் எந்த தாய்க்கும் அந்த நிலை வரக்கூடாது என்று ஆர்ப்பரித்து சத்துணவுத் திட்டம் விரிவாக்கிய தலைமகன்! வாழ்ந்த நாளெல்லாம் மக்கள்..மக்கள் என்று மக்களை எண்ணியே தான் வாழ்ந்த ஓர் மகன்! அவனுக்குப் பிள்ளையில்லை என்று சொல்வார்கள். அட. அவனே பிள்ளைதானே தமிழருக்கெல்லாம்! எங்கவீட்டுப் பி்ள்ளை என்பது யாரை இங்கே? தமிழுக்குத் தலைவணங்கி தன் கையெழுத்தை எப்பொழுதும் தமிழில்தான் இட்டமகன்! தமிழ்க்கவிஞர்களை எல்லாம் கட்டித்தழுவி உச்சிமுகர்ந்து பாராட்டி பரிசளித்து அவர்கள் இதயங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்தமகன்! சமுதாயம், நாடு, மொழி, இனம் என்பதற்கு என்றைக்கும் முன்னிலைதந்து முழுமூச்சாய் உழைத்தவன்! ஏழைகள்மீது பரிவுகாட்டுதல், சாதிப்பாகுபாடு இல்லாமல் சமத்துவத்தை விரும்பியவன்!

    ஆதியிலே பெரியாரும். அடுத்துவந்த அண்ணாவும் திராவிட உணர்வூட்டித்தந்ததனால் தன்னுழைப்பை தவறாமல் தந்தானே! அண்ணாவின் பெயர்தாங்கி கழகம் கண்டு தேர்தல்களம் கண்ட நாள் முதலாய் வெற்றியையே அறிந்தானே! முதல் அமைச்சர் என ஆன 1977முதல் அவன் வாழ்ந்த நாள்வரைக்கும் அவனே ராஜா! வாய்பேச முடியாமல் போனபோதும். மக்கள் வாக்குகளோ அவனைத்தான் சேரும்! சேரும்!! அன்றொரு நாள் அவனுக்கு உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை. ஜப்பான் நிபுணர் முதல் உலக மருத்துவர்கள் கவனம்குறையாமல் காத்திருந்த எங்கள் ரோஜா! வாடிநிற்கும் காட்சி்யைத்தான் ஏடுதனில் பார்த்தோம். ஐயகோ. எங்கள் தங்கத்திற்கா இப்படி ஒரு நிலை? அழகுக்கு இலக்கணம் வகுத்துவைத்த அன்புத்தலைவனுக்கு வரலாமோ என்றெல்லாம் மனமுருக பிரார்த்தனைகள் உலகமெங்கும்!

    தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் . சிறுசிறு கோயில்முதல் அறுபடைவீடுவரை. எங்குபார்த்தாலும் மதங்களைக் கடந்து மக்களின் பிரார்த்தனை. அனலில்விழுந்து துடித்தனர் ஏழையரெல்லாம்! என்னுயிரை எடுத்துக்கொள். மன்னன் உயிர் காத்திடு என்று ஆயிரமாயிரம் உள்ளங்கள் தொழுதன! அழுதன! ஆண்டவன் காலடியில் விழுந்தன! தமிழகத்தின் திரையரங்குகளில் எந்தப் படம் ஓடினாலும் அதற்கு முன் இரண்டு பாடல்கள் காட்டப்படுவது எழுதப்படாத விதியானது! நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற. இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற. என்கிற புலவர் புலமைப்பித்தன் அவர்களது பாடலும் இறைவா உன் மாளி்கையில் எத்தனையோ மணிவிளக்கு . தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு என்கிற கவிஞர் வாலியின் பாடலும். (இரண்டுமே மெல்லிசை மன்னரின் இசை) ஒளிபரப்பானது. இந்தச் சரித்திரத்தை எங்கே பார்த்திருக்கிறோம்?

    அப்படி ஒரு அதிகாலை அமெரிக்காவிலிருந்து உடல்நலத்தோடு மக்கள்திலகம் வந்து நம் மண்ணில் இறங்குகிறார். என்கிற செய்தி. ஒருசில நாட்களுக்கு முன்னர் எட்ட அவர் உருவாக்கிய அ.தி.மு.க.வின் சார்பிலும் எம்.ஜி.ஆர். ரசிகர்மன்றத்தினர் சார்பிலும் மாபெரும் வரவேற்பு பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு தமிழகமெங்கிலுமிருந்து மக்கள் கூட்டம் தலைநகரில் அலைமோதியது! அன்று பறங்கிமலை அருகே உள்ள ராணுவ மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில்.

    இரவென்றும் பாராமல். பனியென்றும் பாராமல். மக்கள் கூட்டம் இலட்சக்கணக்கில் திரண்டது ஓரிடத்தில்! எம்.ஜி.ஆர் வருகிறார். எங்கள் தலைவர் வருகிறார். இன்னல்நீங்கி புதுப்பொலிவுடன் தமிழகத்தை ஆள. எங்கள் ராஜா வருகிறார். என்று உணர்வால். உள்ளத்துடிப்பால். கூடிநின்ற கூட்டமது! இரவெல்லாம் மக்களுக்காக மக்கள் திலகம் நடித்த ஐந்து திரைப்படங்கள் அங்கே திரையிடப்பட்டன! பொழுது மெல்ல விடிந்தது! பார்வைபடும் இடங்களெல்லாம் மக்கள் தலைகள்! அழகாக அமைக்கப்பட்ட மேடை. அதிலே எளிதாக எம்.ஜி.ஆர் கார் ஏறுவதற்கு தகுந்தாற்போல் ஏற்பாடுகள். காத்திருந்த மக்கள் எல்லோர் மனதிலும் வேறெந்த நினைவுகளும் இல்லை. இல்லை! காலை மணி 6.50க்கு சென்னை வானொலியில் செய்திகள். அமெரிக்காவில் படுத்துக்கொண்டே இங்கே தமிழகத்தின் முதல் அமைச்சராய் மூன்றாம் முறை வெற்றிபெற்ற சத்தியத்தாயின் தவப்புதல்வன்! தாயைத் தெய்வமாகப் போற்றியவன்! தமிழகத்தை உயிராக நேசித்தவன்!

    அவன் வந்த வானூர்தி தரையிறங்கிவிட்டது. பனிமூட்டம் இருப்பதனால் முதல் அமைச்சர் வருகையிலே தாமதம் என்று செய்திகள் ஒருபக்கம் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்க. மக்களின் உற்சாகக் கரகோஷம் விண்ணைப்பிளக்க. உயிரையே பெற்றதுபோல் மக்கள் மகிழ. உலக வரலாற்றில் இப்படி ஒரு காட்சி நடந்ததுண்டா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்! புராணப் புருஷர்களைப் பற்றி கதைகள் புனையப்பட்டு கேள்வியுற்றிருக்கிறோம். அன்று கண்முன்னே கண்ட காட்சி. புரட்சித்தலைவர் என்னும் சாதனைச் சரித்திரத்திற்கு மட்டுமான பிரத்யேக காலப்பதிவு!! இத்தனை உயிரோட்டத்தை நேரிலே கண்டு தரிசித்து திரும்பியது என் வாழ்வின் மறக்க முடியாத நாள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

    எம்.ஜி.ஆரின் ரசிகன் என்கிற தகுதியோடு. அன்றைக்கு முதல் நாள் அவருக்காக எழுதிய கவிதையொன்று இதயக்கனியே வருக. வருக வென்று! அதனையும் சுதேசமித்திரன் நாளிதழில் ஒரு வார்த்தை மாற்றாமல் தலைப்பை மட்டும் தர்மங்கள் வென்றது தலைப்பிட்டு வெளியிட்டார்! நான் விவரம்அறிந்த நாள் முதலாகப் பார்த்த பெரும் தண்ணீர் பிரதேசம் காவிரி! கொள்ளிடம்! திருச்சிக்கருகே உள்ள எங்கள் சொந்த ஊருக்குப் பயணிக்கும் போதெல்லாம் என் கண்ணில் பட்ட காவிரி நினைவுக்கு வந்தது! மண்ணின் மைந்தன் என்பது போல் நதியின் மைந்தன் ஆனேன். காடு விரி்ந்ததனால் உருவான நதி காவிரி என்று கம்பன் சொல்லுவான். காவிரிமைந்தன் என்கிற புனைப்பெயர் புரட்சித்தலைவருக்காக புனைந்த கவிதைக்குத்தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. அதில் இடம்பெற்ற இரண்டு வரிகள் என்னால் மறக்க முடியாதவை.

    புவியில் கவிதை புறப்பட்டுவிட்டது. உன்
    புன்னகை ஒன்றே வெற்றியைத் தொட்டது!

    Share
  • தங்கத்தில் முகமெடுத்து.. – கவிஞர் முத்துலிங்கம

    கவிஞர் முத்துலிங்கம்

     

    தங்கத்தில் முகமெடுத்து..

     

    ஸ்ரீதர் இயக்கிய திரைப்படம் மீனவ நண்பன். படம் முழுவதும் எடுக்கப்பட்டு முடிந்த நிலையில் ஒரு நாள் காலை ராமாவரம் தோட்டத்தில் புரட்சித்தலைவரை சந்திக்க கவிஞர் முத்துலிங்கம் செல்கிறார். கவிஞரைக் கண்டதும் அகமகிழ வரவேற்று.. என்ன கவிஞரே.. இப்போது நான் நடித்து முடித்துள்ள மீனவ நண்பன் திரைப்படத்தில் நீங்கள் பாடல் எழுதவில்லையே.. இருக்கட்டும் இயக்குனரிடம் கேட்டு ஒரு கனவுப் பாடலையாவது நீங்கள் எழுத வைக்கிறேன் என்று சொல்லி இயக்குனரைத் தொடர்பு கொண்டார்.

    மறுக்க முடியாமல்.. இயக்குனரும், ஒரு கனவுக்காட்சியை இடம்பெறச் செய்தார்.

    திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் வெற்றி பெற்றன என்றாலும் – கவிஞர் முத்துலிங்கம் எழுதி.. அமோக வெற்றி பெற்ற இந்தப்பாடல்.. இதோ..

    தங்கத்தில்முகமெடுத்து, சந்தனத்தில்உடலெடுத்து
    மங்கைஎன்றுவந்திருக்கும்மலரோ
    நீ… மாலைநேரபொன்மஞ்சள்நிலவோ
    தங்கத்தில்முகமெடுத்து, சந்தனத்தில்உடலெடுத்து
    காமன்போலவந்திருக்கும்வடிவோ..
    அந்ததேவலோகமன்னவனும்நீயோ…

    வண்ணரதம்போலவேதென்றல்நடைகாட்டவா
    புள்ளிமான்போலவேதுள்ளிநான்ஓடவா
    வண்ணரதமாகினால்அதில்சிலைநானன்றோ
    புள்ளிமான்தேடும்கலைமானும்நானல்லவோ
    அசைந்து.. தவிழ்ந்து …அருகில்நெருங்குஅமுதாகவேஓஓஒ
    (தங்கத்தில்…)

    முல்லைமலர்செண்டுகள்கொண்டுகொடிஆடுது
    தென்றல்சதிராடினால்அந்தஇடைதாங்குமா?
    இந்தஇடைதாங்கவேகைகள்இருக்கின்றது
    கொஞ்சிஉறவாடமலர்மஞ்சம்அழைக்கின்றது
    மலர்ந்து.. கனிந்து.. சிரித்துகுலுங்கும்கனியாகவோ..

    எந்தன்மணக்கோயிலில்தெய்வம்உன்னைகாணுகிறேன்
    உந்தன்நிழல்போலவேவரும்வரம்கேட்கிறேன்
    இந்தமனராஜ்ஜியம்என்றும்உனக்காகவே.
    சொந்தமகராணிநீஎன்றுநான்சொல்லுவேன்
    நினைக்க.. இனிக்க.. கொடுத்துமகிழ்ந்தமுத்தாரமே…
    (தங்கத்தில்….)

    படம்: மீனவநண்பன்
    பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ், வாணிஜெயராம்
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடல்வரிகள்: முத்துலிங்கம்

    ஒரு கவிஞனின் உள்ளம் என்ன? எதிர்பார்ப்பு என்ன என்பதை துல்லியமாய் கணக்கிட்டு வைத்த ஒரு கதாநாயகன் உண்டென்று சொன்னால், அது எம்.ஜி.ஆர் மட்டுமே!!
    அவன் வாழ்க்கை முழுவதும் தமிழைக் காதலித்த காரணத்தால், புலவர்களுக்கும் கவிஞர்களுக்கும் அவன் மனதில் சிம்மாசனம் காத்திருந்தது!

    எந்த ஒரு திரைப்பாடலாசிரியனும் எம்.ஜி.ஆர். திரைப்படத்தில் எழுதிய பின் புகழின் உச்சிக்கு செல்லாமல் இல்லை.

    கவியரசு கண்ணதாசனை அரசு கவியாக்கி அழகு பார்த்த பொன்மனச்செம்மல்.. அவ்வரிசையில் புலவர் புலமைப்பித்தனையும், கவிஞர் முத்துலிங்கம் அவர்களையும் அமரவைத்த வரலாறு தமிழுக்குக் கிடைத்த பேறுதானே?

    http://www.youtube.com/watch?v=LUF4NzXhMbk

    Share
  • சிரித்தாலும் கண்ணீர் வரும்.. அழுதாலும் கண்ணீர் வரும்..- கவியரசு கண்ணதாசன்

    கவிஞர் காவிரி மைந்தன்

    சிரித்தாலும் கண்ணீர் வரும்..

    அழுதாலும் கண்ணீர் வரும்..

     

    மனித ஜாதியின் மகத்துவம் சிரிப்பினிலும் அழுகையிலும்தான் கலந்திருக்கிறது. எந்த நிலையிலும் இந்த இருகூறுகள் மட்டுமே இவ்வுலகை இயக்கி வருகின்றன என்றுகூட கூறலாம். மனித மனதை ஆள்கின்ற இரண்டு உணர்வுகள் அல்லவா இவை? இவைகளைக் கடந்த மனிதன் இன்னும் பிறக்கவில்லையே! இன்ப துன்பங்களின் கலவையில் மனித வாழ்க்கை நெய்யப்பட்டிருக்கிறதோ? இரண்டிற்கும் அடிப்படைக் காரணம் மனமே என்றும் சொல்லப்பட்டிருக்கிறது! கண்கள் பார்வையைத் தருகின்றன! பாதையையும் காட்டுகின்றன! பெண்கள் இன்பத்திற்கும் காரணமாகின்றனர்! துன்பத்திற்கும் அவள்தானே மூலமாகிறாள் .. இந்தக் குற்றச்சாட்டு ஆண் வர்க்கத்தின் அப்பட்டமான குற்றச்சாட்டு!! பேதமை, மடமை என்கிற சமுதாயப் பூச்சுகளிடப்பட்ட வரலாற்றில்.. பெண் என் செய்வாள்?

    பெண் என்றால் பெண் என்கிற திரைப்படத்தில் .. கவிஞரின் எண்ணரதம் வருகிறது பாருங்கள்! கதையின் போக்கில் கதாநாயகன் சிரிப்பை ஏற்கிறான். பாடல் வரிகளில்அதன் பரிணமிப்பு இடம்பெறுகிறது. கதையின் நாயகி.. கண்ணீரைச் சுமக்கிறாள்.. கருத்திலும் அதை நிறைக்கிறாள்.. ஏதோ பாடலலல்ல! இதயம் தொடும் பாடல்!

    ஒவ்வொரு வரியிலும் உண்மை பட்டவர்த்தனமாய் உலா வருகிறது! அது என்ன கண்ணதாசன் என்ன எழுதினாலும் இப்படி நியதிகள் பதிவாகிவிடுகின்றன என்று கூட நான் எண்ணியதுண்டு! இந்தப் பாடல் அதற்கான அத்தாட்சி!

    குழந்தை உள்ளம்..
    கனிந்த எண்ணம்
    கொண்டு பார்த்தால் புன்னகை
    காதல் பாதி
    கவலை பாதி
    கலந்து பார்த்தால் சஞ்சலம்
    காதல் மன்னன் ஜெமினி கணேசனும் நடிகை.. விஜயகுமாரியும் கலந்து தந்திருக்கிறார்கள்..

    இன்பம் என்ன துன்பம் என்ன
    மனதுதானே காரணம்..
    மனது பாடும் பாட்டுக்கெல்லாம்
    கண்கள்தானே காரணம்..

    கண்கள் பார்க்கும் பார்வைக்கெல்லாம்
    பெண்கள்தானே காரணம்..
    பெண்கள் வாழும் வாழ்வுக்கெல்லாம்..
    (ஆண்கள் தானே காரணம் என்றல்லவா வர வேண்டும்) …

    தெய்வம்தானே காரணம்.. என்றே முடிக்கிறார்!

    திரைப்படம் – பெண் என்றால் பெண்
    பாடல் – கவிஞர் கண்ணதாசன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
    குரல்கள் – டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா

    சிரித்தாலும் கண்ணீர் வரும்..
    அழுதாலும் கண்ணீர் வரும்
    உறவினிலே சிரிப்பு வரும்
    பிரிவினிலே அழுகை வரும்
    அழுதாலும் சிரித்தாலும்
    சுகமாக அமைதி வரும்.. (சிரித்தாலும்)
    குழந்தை உள்ளம்.. கனிந்த எண்ணம்
    கொண்டு பார்த்தால் புன்னகை
    காதல் பாதி கவலை பாதி
    கலந்து பார்த்தால் சஞ்சலம் (சிரித்தாலும்)
    இன்பம் என்ன துன்பம் என்ன
    மனதுதானே காரணம்..
    மனது பாடும் பாட்டுக்கெல்லாம்
    கண்கள்தானே காரணம்..
    கண்கள் பார்க்கும் பார்வைக்கெல்லாம்
    பெண்கள்தானே காரணம்..
    பெண்கள் வாழும் வாழ்வுக்கெல்லாம்..
    தெய்வம்தானே காரணம்.. (சிரித்தாலும்)

    கால வெள்ளங்களைத் தாண்டி இதோ மானுட இனத்திற்காக கண்ணதாசன் வரைந்திருக்கும் மற்றுமொரு சாசனம் பாடலாக!!

    Share
  • நான் கடவுளைக் கண்டேன்..

    கல்லும் கனியாகும் என்கிற திரைப்படத்தில் இடம்பெறும் இப்பாடலைக் கேட்டுப் பாருங்கள்! உணர்ச்சியில் உள்ளம் உணர்த்திடும் வார்த்தைகள் வரிகளாய் வந்துவிழ.. கவிஞர் வாலியின் எண்ணச் சிறகுகள் கதையின் களத்தில் விரிகின்றன. சொற்கள் கூட சுகம்தரும் என்னும் சூத்திரம் அறிந்தவர் கவிஞர் என்பதால் வேதனையைக்கூட தன் கற்பனையால் திறம்பட தருகின்ற அழகினைப் பாருங்கள்!

    உனக்கொரு தாய்போல்

    தனக்கில்லையே என்று இறைவன் கேட்டானோ

    எனக்கென உன்னைக் கொடுத்து உன் அன்னை அங்கே போனாளோ?

    பொருத்தமான இசையால் இந்தப் பொன்னான வரிகளை நம் உள்ளத்தில் ஆழமாய் பதிக்கின்றார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்! பாசத்தில் விளையும் உறவுகள் தாய் தந்தை மகன்.. இவற்றுள் ஒன்றை இழந்து தவிக்கும் இன்னொரு உறவு.. என்பதன் கொடுமை .. இருக்கின்ற உறவை பாராட்டி..சீராட்டி.. தாலாட்டும் தந்தை.. தன் மகன் நாளை வளரும் நாளை நோக்கி காத்திருக்கும் காட்சி..

    தன் வெண்கலக்குரலால் ஜீவனைத்தருகின்ற டி.எம்.செளந்திரராஜன் இப்பாடலை பாடியிருக்கிறார் என்பது தகவல்! கூடுதல் தகவல் என்ன தெரியுமா.. இந்தப்படத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பதே! வித்தியாசமான தோற்றத்தோடு ஏழிசை வேந்தர் திரையில் தோன்றி பாடியிருக்கும் தாலாட்டுப் பாடல் இது எனலாமா? வரிகளில் எல்லாம் ஸ்வரங்களை நிரப்பி நம் உள்ளம் தொடும் பாடல் தந்த மெல்லிசை மன்னரைப் பாராட்டலாமா? இந்தக் கருத்தை எழுத்தில் கொடுக்க.. இதுதான் உகந்ததென்று சொற்களை எல்லாம் பூக்களாக்கித் தந்தவரைப் புகழலாமா?

    நல்லதோர் பாடல் இது என்பதில் இருவேறு கருத்தில்லை! நாளும் தனது குரலால் நம் வாழ்வில் இணைந்த டி.எம்.எஸ். திரையில் தோன்றிப் பாடிய பாடல் என்கிற பெருமையால் இந்தப் பாடலும் நினைவில் நிழலாடுகிறதே!!

    நான் கடவுளைக் கண்டேன் என்
    குழந்தை வடிவிலே..
    அவன் கருணையைக் கண்டேன்
    கொஞ்சும் மழலை மொழியிலே..
    பால்வடியும் உன் முகத்தில்
    ஆயிரம் கனவு கண்டேன்
    நாளைவரும் நல்ல வாழ்வு எனும்
    அந்த நினைவில் வாழ்கின்றேன்
    உனக்கொரு தாய்போல்
    தனக்கில்லையே என்று இறைவன் கேட்டானோ
    எனக்கென உன்னைக் கொடுத்து உன் அன்னை அங்கே போனாளோ?
    ஆலமரம் என நீ வளரும் நாள்தான் வரவேண்டும்
    கலைமகள் அருளும் அலைமகள் பொருளும்
    நிறைந்தேபெறவேண்டும்.. அறிவுடன் திகழும் திருமகன் புகழும்
    கடல்போல் பெருகாதோ
    பார்த்ததும் கேட்டதும் ஈன்றவர் நெஞ்சம் பனிபோல் உருகாதோ..

    மற்றுமொரு தகவல் இத் திரைப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் அவர்களுடன்
    ஏ எல். ராகவன் அவர்களும் நடித்திருப்பதோடு இருவரின் கூட்டுத் தயாரிப்பில் உருவான படம் என்பது நண்பர் ராகப்ரவாகம் சுந்தர் தரும் செய்தியாகும்.

    http://www.youtube.com/watch?v=pbqQHFzDUOE

    கவிஞர் வாலி……..!

    கவிஞர் வாலி அவர்கள் கிருஷ்ண விஜயம் எழுதத் தொடங்கியபோது -கவியரசு கண்ணதாசன் பற்றி நன்றியுடன் தனது முன்னுரையில் குறிப்பிட்ட வரிகள் கண்டு மெய்சிலிர்த்து – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் சார்பில் வரைந்த நன்றிமடல்!

    பெறுகை
    காவியக் கவிஞர் வாலி
    சென்னை

    கட்டி வெல்லப் பாடல்களை மெட்டுக்குள் கட்டிவைக்கும்
    வித்தகம் தெரிந்த கவிஞர் வாலி – நீவிர்
    கண்ணதாசன் தமிழ் போல் வாழி!

    கவியரங்கமானாலும் கலையரங்கமானாலும்
    நின் தமிழ் நாட்டியத்தில் நித்தில சுகமுண்டு!
    தொட்டால் பூ மலரும் என்கிற பல்லவியின் சுகம்
    தொடாதார் யாரிங்கே? உணராதார் எவரிங்கே?

    காதலின் லயஸ்வரத்தில் நுனிவிரல் படுகின்றபோது
    முதன் முதலில் உடலுக்குள் பாய்கிறதே மின்சாரம்!
    காவியமாய் திரைப்பாடலைச் செதுக்கி வைத்தவனே..
    நெஞ்சில் ஓவியமாய் நின் கை வண்ணங்கள் ஆயிரமே!

    ஆன்மீக நெறியில் வந்த அத்தனைக் குணங்களையும்
    அடம் பிடிப்பதுபோல் நீ பிடித்த காரணத்தால்
    ஆசிர்வாதங்கள் அனுகூலங்கள் அத்தனையும்
    ஆண்டவன் சந்நிதானத்தில் உனக்கும் நித்தமும் படி..

    எனவேதான் .. அவதாரபுருஷன் முதல் பாண்டவர் பூமியென்றும்
    ராமானுஜர் காவியமும் .. உன் பேனா முனையில்
    பூக்களைப்போல் பாகல் விரித்து பவனி வந்தன!

    ஆனந்த ஸ்வரங்களென அவதரித்த கவிநடையில்
    ஆனந்த விகடன் வாரஇதழ் வாய் மலர்ந்தது!
    அடுத்து ஒரு அறிவிப்பு.. கிருஷ்ண விஜயம்
    அடடா .. முதல் இதழ் நுகர்ந்தோம்!

    தேனெனத் தித்திக்கும் செந்தமிழ் மா புலவா – நீ

    யாரெனக் கூறியிருக்கும் நற்றமிழ் மரபு கண்டோம் !

    கண்ணனின் அவதாரம் பற்றிய – நின்

    கருத்துக் குவிப்பில் மின்னிடும் புண்ணியன் தோற்றம் !

    எடுத்து கொடுப்பவன் அவன்! எழுத வைப்பவன் அவன்
    என்னுள் இருப்பவன் அவன் ! இயங்க வைப்பவன் அவன்!
    என்று கண்ணனைச் சரணடைந்தே – நற்
    காவியம் துவங்கியுள்ளாய்! நன்று! நன்று!!

    தன்னிலே கண்ணன் வைத்து தன்னையே தாசெனன்று – இம்
    மண்ணிலே வாழ்ந்து மறைந்த மானுடக் கவிஞர்தம்மை
    எண்ணியே வரிகள் பலவும் வரைந்திட்ட வாலியே!
    இன்னமும் இம்மண்ணிலே ஈரம் இருப்பதற்கு சாட்சியென்போம்!

    மாமுனியின் தோற்ற்றம் உன்னில் வந்தமைக்கு காரணங்கள்
    பாபுனையும் ஆற்றல் உன்னில் சரணடையும் ரகசியங்கள்..
    தேன்மதுரக் கவிநயங்கள் நின் தெள்ளுத் தமிழின் துள்ளல்கள்
    பருகி மகிழக் காத்திருக்கும் பலகோடி நெஞ்சங்களுள்..
    நேரிலே உம்மோடு உரையாடி உறவாடும்
    உரிமை பெற்ற உள்ளங்கள் ..
    யாரென இன்னுமா தெரியவில்லை?
    கண்ணதாசன் தமிழ்ச் சங்க நண்பர்கள் (பம்மல்) நின்
    கைவிரல்களில் கண்கள் பதித்து முத்தமிட்டு நன்றி பகர்கிறோம்!

    அன்புடன்..
    காவிரிமைந்தன்

    Share
  • கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்..கவிஞர் மருதகாசி

    கவிஞர் மருதகாசி

     

    கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்..

    நினைத்ததை முடிப்பவன் என்கிற திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து சேர்ந்த நாயகனாய் ஒரு தோற்றம்! கொள்ளையடிப்பதில் தேர்ந்தவனாய் மறு தோற்றம்! காட்சியமைப்பில் இரு கதா பாத்திரங்களும் நம் கண் முன்னே தோன்ற – மாறுவேடங்களில் காவலர்கள் கூடுகின்ற சபையில்.. கதையின் நாயகன் தான் பாடும் பாடலாக இடம் பெறும் பாடல்!

    கவிஞர் மருதகாசியின் கைவண்ணத்தில் – உதித்த எண்ணங்களிவை! சொல்ல வேண்டிய கருத்தை நச்சென்று பல்லவியிலே சொல்வதென்பது அத்தனை எளிதன்று! தொட்டுக்காட்ட வேண்டிய பாத்திரப் படைப்புகளையும் பாடலில் பளிச்சென்று இடம்பெறச் செய்வது மக்கள் திலகத்திற்காகவே வரையப்பட்ட திரைப்பாடலிது!
    சமுதாயத்தில் நடக்கும் அவலங்களைத் தோலுரித்து – வேடதாரிகளை இனம்கண்டு சரியான சாட்டையடி கொடுக்கும் சத்திய வரிகள்!

    எத்தனைக் காலமானாலும் இவ்வுலகில் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே இருப்பர் என்பது உண்மையென்றால் – காலங்களைக் கடந்து அவர்களின் நிறம் காட்டும் இப்பாடலும் சென்றே தீரும் என்பதும் உண்மை!

    ஒவ்வொரு திரைப்பாடல் வரியிலும்கூட புரட்சித்தலைவர் கவனம் செலுத்திடுவார் என்பதற்கு இந்தப்பாடல் இன்னொரு சாட்சியாகும்!

    பாடல் ஒலிப்பதிவு முடிந்தபின்பு தனது இராமாபுரம் தோட்டத்திற்கு அனுப்பப்படுவதும் அன்றிரவே தனிமையில் கேட்பதும் எம்.ஜி.ஆரின் வாடிக்கை! அப்படி இப்பாடல் எம்.ஜி.ஆரிடம் அனுப்பப்படுகிறது!

    பொன் பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்துவிட்டு
    கண்மூடிப் போகிறவர் போகட்டுமே!

    என்கிற வரியில் உள்ள கண்மூடிப் போகிறவர் என்னும் வார்த்தைகளை நீக்கிவிட்டு தன்வழியே போகிறவர் போகட்டுமே என்று மாற்றச் சொன்னார் என்றால் கவிஞர்தம் சொற்களில் அறச்சொற்கள் வந்துவிடக்கூடாது என்பதில்கூட எம்.ஜி.ஆர் எத்தனை கவனம் கொண்டிருந்தார் என்பது புலனாகிறது!

    திரைப்படம் – நினைத்ததை முடிப்பவன்
    பாடியவர் – டி.எம்.செளந்திரராஜன்
    இசையமைப்பு – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடலாசிரியர் – மருதகாசி

    கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
    உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
    உண்மையில்லாதது.. உண்மையில்லாதது
    அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது..
    காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில்
    கண்முன்னே தோன்றுவது சாத்தியமே
    காத்திருந்து கள்வருக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
    கண்ணுக்கு தோணாத சத்தியமே (…)
    போடும் பொய்த்திரையைக் கிழித்துவிடும் காலம்
    புரியும் அப்போது மெய்யான கோலம்..

    ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
    உருத்திராட்சப் பூனைகளாய் வாழுறீங்க
    சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
    ஏமாற்றிக் கொண்டாட்டம் போடுறீங்க..
    பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை
    உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை..
    பொன் பொருளைக் கண்டவுடன் வந்தவழி
    மறந்துவிட்டு கண்மூடிப் போகிறவர் போகட்டுமே..
    என்மனதை நான் அறிவேன்..என் உறவை நான் மறவேன்
    எதுவானபோதிலும் ஆகட்டுமே.. நன்றி மறவாத நல்ல மனம் போதும்.. என்றம் அதுவே என் மூலதனமாகும்

    http://www.youtube.com/watch?v=Y4uvAc9QKnE

     

    NEENAITHATHAI MUDIPAVAN****KANNAI NAMBATHE UNNAI**** M.G.R. & MANJULA

    Share
  • பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –

    பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் – பீ. சுசீலா – பி.பி.ஸ்ரீனிவாஸ் – கே.வி. மஹாதேவன்

    பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன்

    வீர அபிமன்யூ திரைப்பாடல். திரையிசைத் திலகத்தின் தேனான இசை.. கண்ணதாசன் தேன் என்கிற வார்த்தையைத் தேன் சொட்டச் சொட்ட வடித்தெழுதிய பாட்டு! விட்டில் பூச்சிகள் விளக்கின் வெளிச்சத்தில் மயங்கி விழுவதைப் போல நமைச் சுண்டியிழுக்கும் பாட்டு! தமிழில் மட்டும்தான் இப்படி வார்த்தைகளில் விளையாட முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தும் பாட்டு! அதுசரி.. இதையெல்லாம் ரசிக்க நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? களம் என்ன களம்.. காதல் களம்.. காட்சி என்ன காட்சி.. கணவன்.. மனைவி.. இன்னும் என்ன.. கவிஞர் கேட்க.. மற்றுமொரு ரகசியமும் பாடலில் இடம் பெற வேண்டும் என்கிறார் இயக்குனர். அதனை கவிஞரின் காதில் கூறினார். வார்த்தைகளில் சிந்திய தேன் அத்தனையும் எழில்சிந்த, அழகிய பொருள் சிந்த, பாடலை நாம் பல முறை கேட்டிருக்கிறோம். ரசித்திருக்கிறோம்..

    காதல் பாடலிது.. கதாநாயகன் அபிமன்யூ.. தன் மனைவியோடு கழிக்கும் கடைசி இரவு! பாடல் பிறக்கிறது! இயக்குனர் ரகசியமாய் கேட்டது என்ன தெரியுமா? அபிமன்யூ அடுத்த நாள் களத்தில் மரணத்தைத் தழுவுகிறான். அவன் வகுத்த வியூகத்தில் வெளிவர மறந்துவிடுவதால் களத்தில் மாண்டு போகிறான். அவன் கதை முடியப்போகிறது என்பதையும் சூசகமாய் சொல்லிவிட வேண்டும் பாடலில் என்பதை கண்ணதாசன் உள்வாங்கி.. கவிதையில் சரியான விதம் சற்றும் சந்தேகத்திற்கிடமின்றி இறக்குமதி செய்துள்ளார்..

    பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
    அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
    பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
    உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

    பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
    அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
    பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
    உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்

    கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என
    ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
    கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என
    ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
    துளித் தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு
    துளித் தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில்
    அணைத்தேன் அழகினை ரசித்தேன்

    பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
    உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்

    மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
    வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
    மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
    வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
    எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
    எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனி தேன்
    இல்லாதபடி கதை முடித்தேன்

    பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
    உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

    நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைத்தேன்
    உலகத்தை நான் இன்று மறந்தேன்
    உலகத்தை மறந்தேன் உறக்கத்தை மறந்தேன்
    உன்னுடன் நான் ஒன்று கலந்தேன்

    பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
    உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

    இப்போது கவனியுங்கள்.. இனித்தேன் இல்லாதபடி கதை முடித்தேன்.. என்கிற சிலேடையை லாவகமாக கையாண்டு கதையையும் சொல்லிவிட்டார்.. கவிதையையும் இனிதே முடித்திருக்கிறார் என்பது புதிய செய்திதானே!

    திரைப் படம்: வீர அபிமன்யு
    பாடியவர்கள்: பீ. சுசீலா – பி.பி.ஸ்ரீனிவாஸ்
    இசை: கே.வி. மஹாதேவன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    ஆண்டு: 1965

    http://www.youtube.com/watch?v=qtnPiMd6-7Q

     

    Share