தங்கத்தில் முகமெடுத்து.. – கவிஞர் முத்துலிங்கம
கவிஞர் முத்துலிங்கம்
தங்கத்தில் முகமெடுத்து..
ஸ்ரீதர் இயக்கிய திரைப்படம் மீனவ நண்பன். படம் முழுவதும் எடுக்கப்பட்டு முடிந்த நிலையில் ஒரு நாள் காலை ராமாவரம் தோட்டத்தில் புரட்சித்தலைவரை சந்திக்க கவிஞர் முத்துலிங்கம் செல்கிறார். கவிஞரைக் கண்டதும் அகமகிழ வரவேற்று.. என்ன கவிஞரே.. இப்போது நான் நடித்து முடித்துள்ள மீனவ நண்பன் திரைப்படத்தில் நீங்கள் பாடல் எழுதவில்லையே.. இருக்கட்டும் இயக்குனரிடம் கேட்டு ஒரு கனவுப் பாடலையாவது நீங்கள் எழுத வைக்கிறேன் என்று சொல்லி இயக்குனரைத் தொடர்பு கொண்டார்.
மறுக்க முடியாமல்.. இயக்குனரும், ஒரு கனவுக்காட்சியை இடம்பெறச் செய்தார்.
திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் வெற்றி பெற்றன என்றாலும் – கவிஞர் முத்துலிங்கம் எழுதி.. அமோக வெற்றி பெற்ற இந்தப்பாடல்.. இதோ..
தங்கத்தில்முகமெடுத்து, சந்தனத்தில்உடலெடுத்து
மங்கைஎன்றுவந்திருக்கும்மலரோ
நீ… மாலைநேரபொன்மஞ்சள்நிலவோ
தங்கத்தில்முகமெடுத்து, சந்தனத்தில்உடலெடுத்து
காமன்போலவந்திருக்கும்வடிவோ..
அந்ததேவலோகமன்னவனும்நீயோ…
வண்ணரதம்போலவேதென்றல்நடைகாட்டவா
புள்ளிமான்போலவேதுள்ளிநான்ஓடவா
வண்ணரதமாகினால்அதில்சிலைநானன்றோ
புள்ளிமான்தேடும்கலைமானும்நானல்லவோ
அசைந்து.. தவிழ்ந்து …அருகில்நெருங்குஅமுதாகவேஓஓஒ
(தங்கத்தில்…)
முல்லைமலர்செண்டுகள்கொண்டுகொடிஆடுது
தென்றல்சதிராடினால்அந்தஇடைதாங்குமா?
இந்தஇடைதாங்கவேகைகள்இருக்கின்றது
கொஞ்சிஉறவாடமலர்மஞ்சம்அழைக்கின்றது
மலர்ந்து.. கனிந்து.. சிரித்துகுலுங்கும்கனியாகவோ..
எந்தன்மணக்கோயிலில்தெய்வம்உன்னைகாணுகிறேன்
உந்தன்நிழல்போலவேவரும்வரம்கேட்கிறேன்
இந்தமனராஜ்ஜியம்என்றும்உனக்காகவே.
சொந்தமகராணிநீஎன்றுநான்சொல்லுவேன்
நினைக்க.. இனிக்க.. கொடுத்துமகிழ்ந்தமுத்தாரமே…
(தங்கத்தில்….)
படம்: மீனவநண்பன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ், வாணிஜெயராம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்வரிகள்: முத்துலிங்கம்
ஒரு கவிஞனின் உள்ளம் என்ன? எதிர்பார்ப்பு என்ன என்பதை துல்லியமாய் கணக்கிட்டு வைத்த ஒரு கதாநாயகன் உண்டென்று சொன்னால், அது எம்.ஜி.ஆர் மட்டுமே!!
அவன் வாழ்க்கை முழுவதும் தமிழைக் காதலித்த காரணத்தால், புலவர்களுக்கும் கவிஞர்களுக்கும் அவன் மனதில் சிம்மாசனம் காத்திருந்தது!
எந்த ஒரு திரைப்பாடலாசிரியனும் எம்.ஜி.ஆர். திரைப்படத்தில் எழுதிய பின் புகழின் உச்சிக்கு செல்லாமல் இல்லை.
கவியரசு கண்ணதாசனை அரசு கவியாக்கி அழகு பார்த்த பொன்மனச்செம்மல்.. அவ்வரிசையில் புலவர் புலமைப்பித்தனையும், கவிஞர் முத்துலிங்கம் அவர்களையும் அமரவைத்த வரலாறு தமிழுக்குக் கிடைத்த பேறுதானே?
http://www.youtube.com/watch?v=LUF4NzXhMbk