Blog

  • எட்டுக் கோணல் பண்டிதன் – 9

    எட்டுக் கோணல் பண்டிதன் – 9

    தி. இரா. மீனா

                     அத்தியாயம் பன்னிரண்டு

    உடல், வாக்கு, உள்ளச் செயல்களில் முற்றிலும் பற்றற்று, தன்னிலை நிற்றலை ஜனகர் ஷ்டவக்கிரருக்குக் கூறுவது இந்த அத்தியாயமாகும்.

    1. முதலில் உடல் செயல்களிலும், பின்பு வாக்கை வளர்ப்பதிலும், அதன்பின் நினைப்பிலும் வெறுப்புற்றதனால் நான் இவ்வாறே நிலைத்துள்ளேன்.

    2. சப்தாதி விஷயங்களில் மகிழ்ச்சியில்லாததாலும், ஆத்மாவின் காண முடியாத தன்மையாலும் மகிழ்வும் துயரமுமின்றி   இவ்வாறே நான் நிலைத்துள்ளேன்.

    3. விபரீதத் தோற்றம் முதலியவற்றால் மனம் சிதறும் போது சமாதி முயற்சி என்னும் நியதியை உணர்ந்து இவ்வாறே நான் நிலைத்துள்ளேன்.

    4. தள்ளுவதும் கொள்ளுவதும் இல்லாதது போல மகிழ்வதும் துன்பமடைவதும் இல்லாததால் நான் இவ்வாறே நிலைத்துள்ளேன்.

    5. ஆச்ரமம், ஆச்ரமமின்மை, தியானம், அகப்பற்று ஒழித்தல் ஆகியவற்றால் வரும் மாறுபாடு கருதி இவ்வாறே நான் நிலைத்துள்ளேன்.

    6. செயல் முனைவு எவ்வாறு அறியாமையாலோ அது போலத்தான் அதைத் துறத்தலும் என்ற உண்மையை நன்குணர்ந்து இவ்வாறே நான் நிலைத்துள்ளேன்.

    7. நினைக்க முடியாததை நினைக்க எண்ணினால் அது நினைவு வடிவமே என்பதால் இவ்வாறே நான் நிலைத்துள்ளேன்.

    8. இவ்வாறு எவர் செய்கிறாரோ அவர் கிருத கிருத்யன். இவ்வாறு தன்னை எவர் சார்வரோ அவர்  கிருத கிருத்யன் ஆவார். [செய்ய வேண்டியதைச் செய்து முடித்தவன்]

                     அத்தியாயம் பதிமூன்று

    இயல்பாகிய சொரூப நிலையில் எந்த மாறுபாடும் இல்லாமல் ஜனகர் தன் அனுபவத்தை ஷ்டவக்கிரருக்கு உரைப்பது இந்த அத்தியாயமாகும்.

    1. ஒன்றுமில்லாததில் உள்ள தன்னிலையின்பம் கோவணம் மட்டும் உடையவனுக்கு இல்லாமையால் தள்ளுவதும், கொள்ளுவதும் இல்லாமல் இன்பமாக இருக்கிறேன்.

    2. சில நேரம் உடல் வருந்துகிறது; சில நேரம் நாவு வருந்துகிறது. சில நேரம் மனம் துன்பமடைகிறது. ஆதலால் இவற்றை நீக்கி விடுதலை நிலையில் சுகமாக இருக்கிறேன்.

    3. உண்மையில் நான் எதையும் செய்பவன் இல்லை என்பதை உணர்ந்து எப்போது எதைச் செய்ய முடிகிறதோ அதைச் செய்து இன்பமாக இருக்கிறேன்.

    4. உடல் பொருந்திய யோகிக்கே கருமம், கரும நீக்கம், பந்தம் முதலான பாவனைகள். யோகமும், வியோகமும் எனக்கில்லாததால் இன்பமாக இருக்கின்றேன்.

    5. இருப்பது, நடப்பது, படுப்பது ஆகியவற்றால் எனக்கெதுவும் ஆவதும் போவதுமில்லை. ஆதலால் நின்றும் நடந்தும் படுத்தும் இன்பமாக இருக்கின்றேன்.

    6. தூங்குவதால் நான் இழப்பது ஒன்றுமில்லை. முயற்சி செய்வதால் அடைவது ஒன்றுமில்லை. ஆதலால் அழிவும் உயர்வும் இல்லாமல் இன்பமாக இருக்கிறேன்.

    7. விஷயங்களில் சுகம் முதலியவற்றிற்குக் குறித்த வடிவம் இன்மையைப் பலமுறை கண்டதால் நல்லது, தீமையானது இரண்டையும் நீக்கி இன்பமாக இருக்கின்றேன்.

                   அத்தியாயம் பதினான்கு

    நினைப்பற்று இருப்பது இயல்பாகி அதனால் ஆசையின்றி, உள்ளுணர்வில் நிலைபெற்றுச் சுதந்திரமாக உலவும் ஞானியின் போக்கை யாராலும் அறிய முடியாது என்று ஜனகர் உரைப்பதாகும்.

    1. தப்பித் தவறி விஷயத்தை நினைத்தாலும் இயற்கையில் யார் நினைவற்றவரோ, அவர் தூக்கத்தில் விழிப்பு கண்டவரைப் போல சம்சாரச் சுழற்சியற்றவர்.

    2. ஆசையற்றுப் போனதால் எனக்குச் செல்வமோ, நட்போ, பகையோ, நூலோ, அறிவோ எங்குள்ளது?

    3. பரமாத்மாவும் ஈசனுமாகிய புருஷனை அறிந்த பின்பு பந்த விடுதலையிலும் ஆசையற்றுப் போனதால் முக்திச் சிந்தனை எனக்கில்லை.

    4. உள்ளே மாறுபாடுகள் ஒழிந்து வெளியே சுதந்திரமாக உலவுகிற ஞானியின் நிலையை அத்தகையவர்களே அறிவார்கள்.

    [தொடரும்]

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 22

    கதை வடிவில் பழமொழி நானூறு – 22

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 45

    மறாஅ தவனும் பலரொன் றிரந்தால்
    பெறாஅஅன் பேதுறுதல் எண்ணிப் – பொறாஅன்
    கரந்துள்ள தூஉம் மறைக்கும் அதனால்
    ‘இரந்தூட்குப் பன்மையோ தீது’.

    பழமொழி 45 . இரந்து ஊட்குப் பன்மையோ தீது

    இந்தக் கோயில் வாசல்ல உக்காந்து பிச்சையெடுப்பேன்னு என்னிக்காவது கனவாது கண்டிருப்பேனா. அம்மா இருந்த வரை நல்லா பாத்துக்கிட்டாங்க. நானும் படிச்சவதான். அதனால அஞ்சு ரூபாசேத்து போடுங்க தட்டுலன்னா பிச்ச எடுக்கமுடியும். பசி காதை அடைக்குது. கண்ணை மூடி யோசிக்க ஆரம்பித்தாள் கோமு. கல்லூரியில இளங்கலை வேதியியல் படித்திட்டிருந்த காலம். அரசு கல்லூரிங்கறதால இலவச விடுதியில தங்க அனுமதி. ரெண்டு வாரத்துக்கு ஒருதடவை அம்மா வருவாங்க. எண்ணை சீயக்காய் எல்லாம் வாங்கித்தந்து குளிச்சிட்டு சாப்பிடும்போது தொட்டுக்க வச்சிக்கோன்னு மிக்சர் வாங்கித் தருவாங்க. இது மாசத்துக்குரெண்டு தடவ கண்டிப்பா நடக்கற ஒரு விசயமா இருந்திச்சு. நான் ஏதோ படிச்சு பெரிய கவுரவப் பதவியில உக்காந்து அவங்களக் காப்பத்தப் போறதா கனவு கண்டாங்களோ என்னவோ. அப்படித்தான் இருக்கணும். அவங்க பெத்த ரெண்டு பசங்களும் ஊருக்கு நோயா தண்ணியடிச்சுட்டு தொந்தரவு குடுத்துட்டு அலைஞ்சாங்களே.

    படிக்கிற காலம் நல்லாத்தான் இருந்திச்சு. அப்பறம் படிப்பு முடிஞ்சு வீட்டுக்கு வந்தவொடனே தான் உலகம் தெரிய ஆரம்பிச்சுச்சு. எங்க அண்ணன்களால பாதிக்கப்பட்ட எல்லாரும் என்னய எதிரியாப் பாக்க ஆரம்பிச்சாங்க. அது புரியாம எனக்கு படிச்ச கொழுப்புனு சொல்லி அண்ணனும் என் சர்டிபிகேட்ட எரிச்சுட்டான். அண்ணன் ரெண்டுபேருக்கும் பாதிநாள் ஜெயில்வாசந்தான். போலீஸ் வரதும் போரதுமா இருந்தாங்க வீட்டுக்கு.

    அம்மா வருத்தத்திலயே சீக்கிரம் செத்துட்டாங்க. தனியா அந்த வீட்ல நான் பட்டபாடு. என் சுயநம்பிக்கையே செத்துப்போச்சு. மானத்தோட வாழ முடியுமாங்கற கேள்விக்குறியோட கட்டின துணியோட வீட்டவிட்டு ஓடி வந்தேன். இதோ திருச்செந்தூர் கோவில் வாசல் பிச்சக்காரினு பட்டமும் கிடைச்சிருச்சி.

    கோவில் அய்யர் பாவம் பாத்து தினமும் பிரசாதம் கொஞ்சம் குடுப்பாரு. அவங்க வீட்டம்மாவும் உடுத்தறதுக்கு  துணி குடுக்குது. வாசப்பக்கம் பெருக்கி சுத்தப்படுத்தி வைப்பேன். அவ்வளவுதான்.

    இப்ப ஒருவாரத்துக்கு முன்னதான் இந்த ஆறு பசங்களும் வந்தாங்க. அதுல செம்பட்டனு ஒரு பையன் என்னயப் பாத்தவொடனேயே அக்கா அக்கானு ஒட்டிக்கிட்டான். எங்கேந்தோ தப்பிச்சு ஓடி வந்தாங்களாம். அவங்க முதலாளி சாப்பாடு ஒண்ணும் போடாம அடிச்சு அடிச்சு வேல வாங்கியிருக்கார் போல. ரெண்டு நாள் இங்க படுத்துக்கிடந்தாங்க. அப்பறம் இவன்மட்டும் என்கூட இருக்கப்போறேன்னு சொன்னதால உட்டுட்டுப் போயிட்டாங்க. பாவம் செம்பட்ட கை ரெண்டும் காச்சிக்கெடக்கு. இப்ப அவன அய்யர்கிட்ட ஏதாவது சாப்பிட வாங்கிட்டுவான்னு அனுப்பிச்சிருக்கேன். அவரு பிரசாதம் குடுக்கற நேரந்தான்.

    செம்பட்டையின் குரலால் யோசனை கலைந்தது.

    அக்கா இன்னிக்கு அய்யர் ஒண்ணுமே குடுக்கல. போ போன்னு விரட்டி உட்டுட்டார். ரொம்ப பசிக்குதுக்கா. வேற ஏதாவது யோசனை சொல்லேன். ஆமாங்கா. மத்த அஞ்சுபேரும் திரும்ப வந்துட்டீங்களா.

    நான் எங்கடா போவேன். அஞ்சு ரூபா இருக்கு. இதுக்கு ஏதும் கழிச்சுப்போட்ட பழம் கெடைக்குமானு கோவில் வாசல் கடைக்காரர்கிட்ட கேட்டுட்டு வாங்க. அனுப்பினேன்.

    ஏ கோமு. நோக்கு புத்தியிருக்கா. இவ்ளோ பேர அனுப்பி உடறியே பிரசாதம் வாங்க. பாவம் பாத்து உனக்குசாதம் குடுத்துண்டிருந்தேன். சரி போனா போறது ஒரு பிள்ளையாண்டான் தானேனு புதுசா சேந்தவனுக்கும் சேத்துக் குடுக்கறேன். இப்ப என்னடான்னா ஒரு படையையே அனுப்பறியே.

    நாங்களும் எங்காத்துல சாப்பட வேண்டாமா. முருகன் எனக்கு அந்த அளவு வசதியக் குடுக்கலம்மா. யாசகம் கேக்கப் போறச்சே கூட்டமா போகக் கூடாது. அப்டிப்போனா குடுக்கணும்னு மனசு இருக்கறவாக் கூட எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாதுனு பயந்து ஒளிச்சு வச்சுண்டு இல்லன்னு சொல்லிருவாளாம். இரந்து ஊட்குப் பன்மையோ தீது  னு பழமொழியே இருக்கு. இதையெல்லாம் படிக்காத உங்கிட்ட சொல்லிண்டிருக்கேனே உனக்கெப்படி புரியும். சொல்லிக்கொண்டே இருக்கும் தயிர்சாதத்தை என் பாத்திரத்தில் போட்டுவிட்டுப் போகிறார் அய்யர். அவருக்கு எப்படித்தெரியும் நான் படித்தவள் எனக்கும் இந்தப் பழமொழி தெரியும்னு.

    பாடல் 46

    இல்வாழ்க்கை யானும் இலதானும் மேற்கொள்ளார்
    நல்வாழ்க்கை போக நடுவுனின்(று) – எல்லாம்
    ஒருதலையாச் சென்று துணியா தவரே
    ‘இருதலையும் காக்கழித் தார்’.

    பழமொழி 46 – இருதலையும் காக் கழித்தார்

    இவ்வளவு வருசம் கழிச்சு என் அப்பானு சொல்லிக்கிட்டு உள்ள நுழைஞ்சிருக்கிற மனுசன மனசு ஒத்துக்க மாட்டேங்குது. அம்மா என்னடான்னா

    அப்பாக்கு தண்ணிகொண்டு குடு, காப்பி குடுனு என்னய உபசரிக்கச் சொல்லறாங்க. கல்லூரி மாணவியான எனக்கு மனதுக்குள் பல கேள்விகள்.

    எனக்கு விவரம் தெரிஞ்ச வயசிலேந்து இந்த ஆள் நம்ம கூட இருந்ததேயில்ல. உங்கப்பா எங்கனு எவ்ளோ பேர் கேட்டிருப்பாங்க. அப்பயெல்லாம் எனக்கு அவமானமா இருக்கும் தெரியுமா. எவ்ளோ அழுதிருப்பேன். என் ப்ரெண்ட்ஸ் என்ன உங்கப்பா வேற யார்கூடவாவது ஓடிப்போயிட்டாரான்னெல்லாம் கேட்டு அவமானப்படுத்தி இருக்காங்க.   அப்பயெல்லாம் அந்த மனுசன் இருக்காருனு சொல்லி என்ன பிரயோசனம். நீ வேணும்னா உங்கப்பா செத்துட்டாருனு சொல்லிடுனு சொல்லியிருக்க.

    திடீர்னு காவி வேட்டி கட்டிக்கிட்டு பண்டாரம் மாரி ஒரு ஆளு வராரு. நீ இவர்தான் உங்கப்பாங்கற. அவரும் என்னமோ பாசமா இருக்கற மாதிரி உருகிக்கிட்டிருக்காரு.

    என்ன கேட்டாலும் அம்மாவிடம் பதில் இல்லை.

    எல்லா விசயத்தையும் செல்லம் மாமாகிட்டதான் புலம்புவேன். அவர் நான்சின்னதா இருக்கும்போதுலேந்து பக்கத்துவீட்ல இருந்தவரு. அவரும் அவரோட மனைவியையும் தான் நான் மாமா அத்தைனு கூப்பிடறது. எனக்கும் நிறைய சொந்தக்காரங்க இருக்காங்களாம்.

    அப்பா அம்மா லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டதால யாரும் பேசமாட்டாங்களாம். அப்பா எங்கள விட்டுட்டுப்போனவொடனே எங்க தங்களுக்கு பொறுப்பு வந்துடுமோனு இன்னும் தூரமா விலகிட்டாங்க.  எனக்கு ஆறுவயசிருக்கும் போதுலேந்து அம்மாதான் கஷ்டப்பட்டு வளத்தாங்க.

    மொதல்ல லட்சுமி அக்கா கடையில கூடமாட உதவிக்கு நின்னாங்க. அப்பறம் இப்ப நாங்களே தனியா சிப்ஸ், முறுக்கு எல்லாம் போட்டு விக்கறோம். வியாபாரம் நல்லா போயிட்டிருக்கு. மனஓட்டத்துடன் காலும் நடந்ததால் செல்லம் மாமா வீட்டுக்குள் வந்துவிட்டேன்.

    அத்தை ஆரம்பிக்கிறாங்க. இங்க பாரும்மா நீ ஒண்ணும் சின்னக் குழந்தை இல்ல. உங்கம்மா என்னடான்னா எம் புருசன் பதினைந்து வருசத்துக்கு முன்ன இந்த ஊர உட்டுட்டுப் போனவுடனே திருவண்ணாமலையில போய் துறவி ஆயிட்டாரு. இவ்ளோ வருசத்துக்குப் பின்ன அவருக்கே மனசுல தோணிச்சாம் ஊருக்குப் போயி நல்லபடியா மனைவி குழந்தையோட வாழ்க்கை நடத்துனு. அதனால வந்துட்டாராம். அப்டிங்கறாங்க.

    இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு. இந்தமாதிரி குடும்பத்தையும் காப்பாத்தாம துறவறத்துக்குப் போறென்னு அதையும் ஒழுங்கா செய்யாம பாதியில திரும்பி வரவங்க காவடி எடுக்கறேன்னு சொல்லிட்டு அதோட ரெண்டுபக்கத்துப் பொருட்களையும் நீக்கிட்டு வெறும் தண்ட மட்டும் தூக்கிட்டுப் போறது மாதிரிதான். ஊர் சிரிப்பாச் சிரிக்கும். அதத்தான் ‘இருதலையும் காக் கழித்தார்’ னு பழமொழியாச் சொல்லுவாங்க.  ஆனா எனக்கென்னமோ இந்த மனுசனப் பாத்தா பொறுப்பில்லாம ஊதாரியா கெட்ட பழக்கங்களோட சுத்திட்டிருந்துட்டு இப்போ வயசானப்புறம் போக்கிடம் இல்லாம நூறு ரூபாய்க்கு காவித்துணி கட்டிக்கிட்டு பட்டையப் போட்டுக்கிட்டு வந்து கதை சொல்ற மாதிரிதான் தோணுது. இன்னும் கெட்ட பழக்கங்கள் இருக்கா இல்லையானு தெரிஞ்சுக்காம வீட்டுக்குள்ள சேக்காத. அவ்வளவுதான் சொல்லுவேன். என்னை உசுப்பேற்றிவிட்டாள் அத்தை. யோசனையுடன் எழுகின்றேன் வீட்டுக்குச் செல்ல.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 277

    படக்கவிதைப் போட்டி – 277

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    எம்.மோகன் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (27.09.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 276இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 276இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கூரிய அலகும் விரிந்த குடைபோன்ற சிறகுகளுமாய் வானில் வலம்வரும் நாரையை நளினமாய்ப் படமெடுத்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்து வழங்கப்பட்டிருக்கும் படமிது. ஒளிப்படக் கலைஞருக்கு என் நன்றியை அளித்து மகிழ்கின்றேன்.

    தமிழரைத் தலைநிமிரச் செய்யும் சிறப்பமை சங்கப் பாடல்களில் பறவைகள் பலவற்றின் இயல்புகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

    ”அடும்பவிழ் அணிமலர் சிதைஇமீ னருந்தும்
    தடந்தாள் நாரை” (குறுந்: 349) என்று அடும்பின் கொடியிடத்தே மலர்ந்த அழகிய மலரைச் சிதைத்து ஆர்வமாய் மீனருந்தும் வளைந்த காலுடைய நாரையைப் பற்றிப் பேசுகின்றது குறுந்தொகைப் பாடலொன்று!

    நீர்நிலைகளையும் காடுகளையும் மனிதர்கள் தம்முடைய குடியிருப்புகளுக்காகத் தொடர்ந்து அழித்துவருவதனால் காட்சிக்கினிய பறவையினங்கள் உணவையும் உறைவிடத்தையும் இழந்து தவிக்கின்றன. இதேநிலை நீடித்தால் வருங்காலங்களில் பறவையினங்களை நாம் படங்களிலும் கதைகளிலும் மட்டுமே காணமுடியும் எனும் அவலநிலை வாய்த்துவிடும்!

    இதோ…சிறகுவிரித்துப் பறந்துவரும் எழிற்பறவையைப் பிடித்துத் தம் பாட்டெனும் கூட்டிலடைக்க நம் கவிஞர்களும் கற்பனைச் சிறகுகளோடு காத்திருக்கின்றார்கள். அவர்களை வரவேற்போம்!

    *****

    ”குஞ்சுகளுக்கு இரைதேடிச்சென்ற பறவை திரும்பிவந்தபோது தன் கூடிருக்கும் மரம் மனிதனால் வெட்டப்படாதது கண்டு நிம்மதிப் பெருமூச்சுவிட்டது” என ஏற்கனவே மனிதனால் கூட்டையும் குஞ்சுகளையும் இழந்த பறவையின் பதைபதைப்பைக் காட்சிப்படுத்தியுள்ளார திரு. செண்பக ஜெகதீசன்.

    மாறுவானா…

    குஞ்சுகளுக்கு இரைதேடிய
    பறவை
    கூட்டை நாடி வந்தது..

    நெடுந்தூரம் பறந்த
    களைப்பிலும் விட்டது
    நிம்மதிப் பெருமூச்சு-
    கூடிருக்கும்
    மரம் இருக்கிறது
    மனிதனால் வெட்டப்படாமல்…

    முன்பு
    கூட்டோடு குஞ்சுகளோடு
    மரம் வெட்டப்பட்டது
    மறக்கவில்லை பறவைக்கு,
    மனம் குமுறுகிறது
    மனிதனை நினைத்து..

    மனிதன் ஏன் இப்படி
    மாறிவிட்டான் இப்போது-
    தன்னினம் அழிக்கிறான்,
    தாயாய் உதவும்
    இயற்கையை அழித்து
    எங்களை வாட்டுவதுடன்
    தனக்கும்
    தேடுகிறான் கேடு..
    மாறுவானா மனிதன்…!

    *****

    ”உட்கார்ந்து ஓய்வெடுக்க மரம் கிடைக்காதா என்றெண்ணி நீ ஏங்கிய வேளையில் மரத்தினை உன் கண்ணில்காட்டிய இறைக்கு நன்றிசொல்!” என்று பறவைக்கு அறிவுறுத்துகின்றார் திரு. கோ. சிவகுமார்.

    பட்ட மரமும் பறவையும்

    விட்டுவிட்ட உறவுகளால்
    விரக்திதனை மிக அடைந்து
    எட்ட எட்டப் பறந்து
    எங்கெல்லாமோ திரிந்து
    சுட்டுப் பொசுக்கும் வெயிலால்
    சோர்வடைந்த பறவையே!

    உட்கார்ந்து ஓய்வெடுக்க
    ஓரிடம் கிடைக்காதா என்று
    கஷ்டம் கண்டு மனமிரங்கும்
    கடவுளிடம் முறையிட்டாயோ நீ!?

    பட்டமரக் கிளையொன்றை
    உன் பார்வையிலே பட வைத்துக்
    கஷ்டமதைத் தீர்த்து வைத்த
    கடவுளுக்கு நீ நன்றி சொல்!

    எந்தக் கவலையானாலும்
    இறைவனிடம் சரணடைந்தால்
    வந்த கவலை தீரும்
    வழி ஒன்று பிறக்குமென்று
    இந்தப் படம் விளக்கும்
    விந்தை கண்டு வியக்கின்றேன்!

    *****

    அந்நிய தேசத்துப் பறவையின் வாயிலாய் இந்திய நாட்டின் சிறப்புகளை, தனித்தன்மையினை விரிவாய்ப் பேசவைத்திருக்கின்றார் திரு. சீ. காந்திமதிநாதன்.

    அந்நிய தேசத்துப் பறவை நான்
    இந்திய தேசத்தில் தான்
    எத்தனை எத்தனை விதமாக
    வேறுபாடுகள் இருக்கின்றன!

    அத்தனை வேறுபாடுகள்
    இத்துணைக் கண்டத்தில்
    இந்தியன் ஒற்றைச் சொல்லில்
    இமயம் முதல் குமரி வரை
    கட்டுண்டு இருக்கும் அழகு
    உலகில் எங்கும் காண முடியாது!

    சுதந்திரமான பறவை நான்
    அதேபோல்
    சுதந்திரமான
    மக்கள் இந்திய மக்கள்!

    கருத்துச் சுதந்திரம்
    பத்திரிகைச் சுதந்திரம்
    தனிமனிதச் சுதந்திரம்
    பேச்சுச் சுதந்திரம்
    எழுத்துச் சுதந்திரம்
    மாபெரும் ஜனநாயக நாடு!

    இந்தியனின் அறிவு
    இதனாலே செறிவு!

    சிந்தனைக்கு
    எழுத்தாற்றலுக்கு

    இந்த மண்ணில் தான்
    சுதந்திரம்
    பறவையாகிய
    என்னைப் போல!

    சுதந்திர இந்தியா காண
    எத்தனை எத்தனை
    உயிர்த் தியாகங்கள்!

    பெருமைப் படு
    இந்த மண்ணில்
    பிறந்ததற்கு!

    பெருமைப் படு
    இந்த மண்ணில்
    வாழ்வதற்கு!

    பெருமைப் படு
    இந்த மண்ணில்
    மீண்டும் பிறப்பதற்கு!

    சுதந்திரத்தின் மகிமை
    சுதந்திரத்தின் அருமை
    குடிமக்களுக்குத்
    தராது
    வல்லரசு என்றால்
    அங்கே எங்கே
    தனிமனிதச் சிந்தனை
    தலைசிறந்து விளங்கும்??

    உலகிலேயே
    சுதந்திரமாகப்
    பறவை போல்
    வாழ்பவர்கள்
    கருத்துச் சுதந்திரத்தில்
    இந்தியர்களே!

    ******

    ”உறுமீனைக் கண்டறிந்து, காலமும் தானறிந்து இலக்குநோக்கிப் பாய்வோரே திறன்வாய்ந்த செயல்வீரர்” என்று மனிதர் வாழ்வில் வெற்றிபெறும் வழியைப் பறவையின் பண்பைவைத்து விளக்குகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    செயல்வீரர்

    உறுமீனைக் கண்டறிந்து
    இலக்கு நோக்கிப் பாய்ந்து
    வான் நோக்கி மீண்டெழுந்து
    இரை தேடும் பறவையெனக்
    காலமதைத் தானறிந்து
    கனியும்வகை தெளிந்து
    காரியங்கள் செய்திடுவார்
    திறன் வாய்ந்தோர் செயல்வீரர்!

    கொட்டும் மழை பொய்த்ததென
    வெட்டியாய் நேரம் கடத்திடாமல்
    கால்வாய் வெட்டிக் கழனி திருத்தி
    நிலம் கொழிக்க வழி செய்வார்!
    பட்டினியால் வாடினாலும்
    விதைநெல்லைச் சேர்த்துவைத்து
    வருங்காலச் சந்ததிக்கு
    வாழ வழி செய்திடுவார்!

    எதிர்காலம் கனவென்று
    எதிர்வாதம் செய்துவிட்டு
    நிகழ்காலம் வீணாக்கும் – வெற்று
    வேதாந்தம் விட்டுவிட்டு
    வருங்கால வெற்றிக்குத்
    திட்டங்கள் தீட்டிவைத்து
    முயலாமை தனை விழுங்கி
    முன்னேற்றப் பாதையிலே
    சிறகடித்துப் பறந்திடுவர்!

    *****

    பறவையைக் கண்ட அறிவியல்வல்லார் விமானத்தைப் படைத்தனர்; கற்பனைவல்லாரான  நம் கவிஞர்களோ வாழ்வியல் உண்மைகள் பேசும் கவிதைகளைப் படைத்துக் காட்டியுள்ளனர். அவர்களைப் பாராட்டி மகிழ்வோம்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    நல்ல பண்பு

    நாடு விட்டு நாடு வந்து
    கூடு கட்டும் பறவையே!
    கூடு கட்ட இடம் தந்து
    குஞ்சுகளையும் காத்த மரம்
    காடு கண்ட காட்டுத்தீயால்
    கட்டையான சேதி கேட்டு
    நாடு விட்டு நாடு வந்து
    நலம் விசாரிக்க வருகின்றாயோ
    நன்றிதனை மறவாமல்!?
    நாட்டில் வாழும் மனிதரும்
    காட்டத் தயங்கும் பண்பினைக்
    கூட்டில் வாழும் பறவைக்கு
    கொடுத்தது அந்த இறைவனோ!?

    ”கூடுகட்ட இடம் தந்த மரம் காட்டுத்தீயால் கருகியதுகண்டு மனங்கசிந்த இப்பறவை, அம்மரம் நாடி வந்தது நலம் விசாரிக்க!” என்று மனிதரிடத்தும் காணவியலாத பறவையின் நன்றியறிதலைக் கவிதையில் படைத்துக் காட்டியிருக்கும் திரு. கோ. சிவகுமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • Dr.Sesha Srinivasan and Gage Roper gain prestigious Fulbright appointments

    Dr.Sesha Srinivasan and Gage Roper gain prestigious Fulbright appointments

    A Florida Polytechnic University assistant professor and a senior computer science student have been selected by the Fulbright Program for prestigious academic appointments.

    Dr. Sesha Srinivasan, chair of Florida Poly’s Department of Natural Sciences, was selected to the Fulbright Specialist Program. The effort allows overseas universities, cultural centers, and other institutions to develop collaborative projects with leading U.S. academic professionals.

    Gage Roper, a senior majoring in computer science with a concentration in cybersecurity, was selected to take part in Fulbright Canada’s Killam Fellowship Program. Killam Fellows study at a leading Canadian university for a semester.

    “These help build our reputation in the international community,” said Srinivasan, who will serve in the Fulbright Specialist Program for three years.

    Srinivasan nominated Roper for the fellowship. The two met when Roper took Srinivasan’s physics 2 class two years ago.

    “After the first exam, I did not do well. I went to him afterward and I said, ‘I don’t know what’s going on. I think I’m going to drop the course,’” Roper said. “He was like, ‘No, stay in it and I’ll help you out.’ He ended up setting up tutoring sessions with the TA for me and I put in a lot of work in the class and end up with an A.”

    Roper said if he can progress from doing poorly in that class to being named a Killam Fellow, anything is possible.

    “This is a very competitive selection. I was competing against people from Harvard and Yale,” he said. “To be selected means they saw something in me, and I was able to prove myself.”

    Roper was unable to travel to Canada to take part in the program this semester due to COVID-19 restrictions, but he is hopeful he will be able to do so in January 2021.

    “I never thought I was going to have a college degree in the first place, but now being on the cusp of achieving that and receiving something so great as the Killam Fellowship, it has inspired me to pursue my master’s degree,” said the graduate of Chamberlain High School in Tampa, Florida.  

    Selection to the Fulbright Specialist Program was a years’ long effort for Srinivasan, who first applied in 2016.

    “It is a very competitive, prestigious award,” he said. “These are professionals from around the nation who are counted as experts for the U.S. Department of State and the Fulbright Program.”

    During his three-year tenure, Srinivasan can be called upon to collaborate on a variety of projects that can benefit from his research and academic experience. The projects may include consulting on faculty development, developing curricula and materials, lecturing, or evaluating a program.

    “This international collaboration will be a benefit to Florida Poly’s graduate program,” Srinivasan said. “I think that it will motivate and bring more students to Florida Poly for their higher education.”

    Contact:
    Lydia Guzman
    Director of Communications
    863-874-8557

    Source: https://floridapoly.edu/news/articles/2020/09/092220-fulbright.php

    Share
  • உலகம் பின்னோக்கிச் செல்கிறதா?

    உலகம் பின்னோக்கிச் செல்கிறதா?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நாங்கள் 1966 செப்டம்பரில் அமெரிக்கா வந்தபோது கருப்பர்களில் பலர் பெரிய பதவிகளில் இல்லை. பலர் கட்டடத் துப்புரவுத் தொழிலாளிகளாகவும் வசதியான வீடுகளில் வீட்டுவேலை செய்பவர்களாகவும் இருந்தனர். பல்கலைக்கழகங்களில் பேராசியர்களாக/மாணவர்களாக இருந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.  அரசியலிலும் அப்படியே.  அமெரிக்காவை விட்டுச் சென்று 23 வருடங்களுக்குப் பிறகு திரும்பவும் அமெரிக்கா வந்தபோது கருப்பர்களின் நிலைமை மிகவும் மாறிப்போயிருந்தது. விமானநிலையத்திலேயே பலர் நல்ல பதவியில் இருந்ததைப் பார்க்க முடிந்தது. கல்விக்கூடங்களிலும் பலர் வேலைபார்த்தனர். இந்தியாவில்போல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அமெரிக்காவில் பிரத்தியேக சலுகை எதுவும் கிடையாது. பல்கலைக்கழகங்களில் மட்டும் ஏதோ பெயருக்கு சில சலுகைகள் இருக்கின்றன. அப்படியிருந்தும் அவர்கள் முன்னேறியிருக்கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியாக இருந்தது.

    ஆனால் அப்போதிருந்ததைவிட இனத்துவேஷம் இப்போது மிகவும் அதிகமாகியிருக்கிறது. அதிலும் ட்ரம்ப் ஜனாதிபதி ஆன பிறகு வெள்ளை இனவாதிகள் அமெரிக்கா என்ற நாடு தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று எண்ண ஆரம்பித்திருக்கிறார்கள்.  மேலும் வெளியிலிருந்து குடியேறிகளை அமெரிக்காவிற்குள் அனுமதிக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். இப்படிக் குடியேறிகள் அமெரிக்காவுக்கு வந்து வெள்ளை அமெரிக்கர்களுடைய வேலைகளை எடுத்துக்கொண்டு வெள்ளை அமெரிக்கர்களுக்கு அந்த வேலைகள் கிடைக்காமல் செய்கிறார்கள் என்று நினைக்கிறார்கள்.  இந்த ரீதியில் அவர்கள் நினைப்பதற்கு ட்ரம்ப் ஜனாதிபதியானது ஒரு முக்கிய காரணம். உலகில் அமெரிக்காவின் பிம்பத்தை உயர்த்தப் பாடுபட்ட ஒபாமாவின் கொள்கைகளையெல்லாம் தலைகீழாக மாற்றிக்கொண்டிருக்கிறார் இந்த ட்ரம்ப். உலகம் அமெரிக்காவைப் பற்றி என்ன நினைக்கிறது என்று ட்ரம்ப் கவலைப்படுவதே இல்லை.  அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒன்பது பேரில் உருவரான ரூத் கின்ஸ்பர்க் நேற்று இறந்துபோனவுடன் அவருக்குச் சரியாகத் துக்கம்கூட அனுசரிக்காமல் அவருடைய இடத்தில் ஒரு பழமைவாத நீதிபதியை உடனடியாக நியமித்து உச்சநீதிமன்றத்தை பழமைவாதிகளின் கூடாரமாக ஆக்கப் பார்க்கிறார்.

    ட்ரம்ப் இது மட்டுமா செய்துகொண்டிருக்கிறார்? உலகிலேயே சிறந்த ஜனநாயக நாடு என்று பெயர் வாங்கியிருந்த அமெரிக்காவை ஒரு சர்வாதிகார நாடாக ஆக்கிவிடுவாரோ என்று பலர் பயப்படும் அளவுக்குக் காரியங்கள் செய்து வருகிறார். வரும் நவம்பர் மாதத் தேர்தலில் என்னென்னவோ தகிடுதத்தங்கள் பண்ணி தேர்தல் முடிவை மாற்றிவிடுவாரோ என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பயப்படுகிறார்கள். அமெரிக்கா ஆப்பிரிக்காவிலிருந்து ஆப்பிரிக்க அப்பாவி மக்களை அடிமைகளாகக் கொண்டுவந்து மிருகங்களைப்போல் நடத்தியதாகக் கூறப்படுவதெல்லாம் சரியில்லை என்றும், அதனால் அமெரிக்க சரித்திரத்தையே மாற்றி எழுத வேண்டும் என்று கூற ஆரம்பிதிருக்கிறர்.  இவ்வளவு தூரம் கருப்பர்களை வெறுக்கும் இந்த இன வெறியருக்கு இன்னும் 40 சதவிகித அமெரிக்க மக்களிடம் ஆதரவு இருக்கிறதாம். இதை என்னவென்று சொல்வது? உலகில் இனவெறி, மதவெறி எல்லாம் ஒழிந்து உலக மக்கள் எல்லோருக்கும் சமமான, நியாயமான உரிமைகள் கிடைத்து உலகம் முன்னேற்றப் பாதையில் செல்வதற்குப் பதிலாக இது என்ன பின்னேற்றம்?

    அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஜனநாயகம் தோன்றி எல்லா மக்களுக்கும் ஜனநாயக உரிமைகள் கிடைக்கும் என்று நம்பியதற்கு மாறாக உலகில் பல நாடுகளில் சர்வாதிகாரிகள் தோன்றிக்கொண்டிருக்கிறார்கள். மார்க்ஸின் போதனைகள் கம்யூனிஸ நாடுகளில் வலுவடைவதற்குப் பதிலாக அங்கு சர்வாதிகாரிகள் தோன்றிக்கொண்டிருக்கிறார்கள்.  முடியாட்சியை ஒழித்துப் பாட்டாளி மக்களாட்சியை லெனின் ஆரம்பித்த நாட்டில் இப்போது புதின் தன் வாழ்நாளுக்கும் பதவியில் இருப்பதற்கு ஏதுவாக சட்டத்தையே மாற்றியிருக்கிறார்.  மாசேதுங் சீனாவில் வளர்த்த கம்யூனிஸம் உருமாறி சீனா இப்போது ஷியின் சர்வாதிகார நாடாக மாறியிருக்கிறது. என்றென்றும் தன்னை ஆட்சியில் தக்கவைத்துக்கொள்வதற்குத் தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறார் இந்தியப் பிரதமர் மோதி. இந்தியா சுதந்திரம் அடைந்ததும் ‘இனி எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’ என்று ஆனந்தத்தோடு பாடினோம். அரசு தவறு செய்தால் எந்தக் குடிமகனாலும் அரசைத் தட்டிக்கேட்க முடியும் என்ற நிலை மாறி மோதியைக் குறைகூறுபவர்கள் எல்லோரும் தேசத்துரோகிகள் என்று கருதப்பட்டு சிறைக்கு அனுப்பப்படும் அளவுக்கு இந்தியாவில் ஜனநாயகம் மறைந்துகொண்டிருக்கிறது.

    இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு உலகில் அமைதி நிலவவும் உலக மக்கள் அனைவரும் சுபிட்சம் பெறவும் ஐ.நா. சபை, யுனெஸ்கோ, உலக சுகாதார நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் தோன்றின. உலக நிதி நிறுவனம், உலக வங்கி ஆகிய பொருளாதார நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன.  உலகிலேயே பணக்கார நாடான அமெரிக்கா இந்த நிறுவனங்களுக்கு நிதி உதவிசெய்து வந்தது.  இப்போது ட்ரம்ப் அந்த நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்வதை நிறுத்தப் போகிறார்.

    ஹிட்லர் யூதர்களுக்கு இழைத்த அநீதிக்குப் பரிகாரம் தேடுவதுபோல் ஜெர்மனியின் தலைவர் ஏஞ்சலோ மெர்கல் பல அகதிகளை ஜெர்மனிக்குள் அனுமதித்து அவர்களுக்கு புதுவாழ்வு கொடுக்க முயற்சிக்கிறார்.  அங்கும் இப்போது நாஜிக்களைப் பின்பற்றும் ஒரு கூட்டம் இருக்கிறது என்பதோடு அவர்கள் ஜெர்மனியின் ராணுவத்திலும் காவல்துறையிலும் இப்போது ஊடுருவி இருக்கிறார்களாம்.  எப்படிப்பட்ட துயரச் செய்தி இது.

    குறைகள் உள்ளன என்றாலும் இருக்கிறவற்றில் சிறந்த அரசியலமைப்பு என்று ஜனநாயகம் கருதப்பட்டது. அடுத்த கட்டமாக ஜனநாயகத்திலுள்ள குறைகள் களையப்பட்டு இதைவிட ஒரு சிறந்த அரசியலமைப்பு உண்டாகும் என்று நம்பியதற்கு மாறாக ஜனநயகமே அல்லவா உலகிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறது. மனிதனுடைய சின்னத்தனங்கள் ஒவ்வொன்றாக மெதுவாக மாறி மனிதன் இறைத்தன்மைகளைப் பெறுவான் என்று நினைத்ததெல்லாம் பொய்யாகிப் போய்விடுமா?

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-42

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-42

    தி. இரா. மீனா

    நிக்களங்க சென்னசோமேஸ்வரா

    “வெட்ட வெளியெலாம் திடமானால் வானம் மண்
    பாதாளத்துக்கு இடம் எங்குள்ளதோ?
    இடரைச் செய்ய முடியாத மனிதரெல்லாம்
    சம்சாரத்தை விட்டோமென மொட்டையடித்துக் கொண்டால்
    அறிஞன் விரக்தனாக முடியுமா? இதனால்
    அஞ்ஞானம் விட்டு அறிவைக் காட்டுபவன்
    நிக்களங்க சென்னசோமேஸ்வரன் தானே? “

    நிஜமுக்தி இராமேஸ்வரா

    “மாற்றத்தால் உடல் தேய்ந்து தேய்ந்து
    நொந்து வெந்தவர் அனைவரும் வெறுமையாகி
    இளமை நாளும் தேய்ந்து தேய்ந்து
    கதி கெட்டோர் அனைவரும் வெறுமையாகி
    தலைமுடியை மழித்து வெறுமையான பின்னர்
    பொன் பெண் மண்ணுக்கு வசமாகாமலிருப்பதே வாழ்க்கை
    புலன்களின் தாக்குதலுக்குட்படாமல் இருப்பதே வாழ்க்கை
    கதிகெட்டு சக்தியிழந்து வீணே
    வெறுமையான வாழ்க்கையது உலகில்
    சங்கடமன்றோ சொல்வாய் நிஜமுக்தி இராமேஸ்வரனே“

    நிர்தனப்பிரிய இராமேஸ்வரா 

    “பிச்சைக்காரனெனும் நிலைக்கு என்னை நடத்திடுவாய்
    சென்றங்கு பிச்சை பிச்சையெனில்
    யாரும் தராதபடி செய்திடுவாய்
    தவறியே கொடுத்தாலும்
    கொடுக்கின்ற பாத்திரம் விழுந்து உடையுமாறு
    செய்திடுவாய் நிர்தனப்பிரிய இராமேஸ்வரனே “

    மர்க்கடேஸ்வரா

    “இகபரத்தினுள்ளே பொன் பெண் மண் காற்று
    இடையூறுகள் என்பன அடிப்படையாம்
    காமத்தை விட்டொழித்தால் துறவியாம்
    காணாய் மர்க்கடேஸ்வரனே “

    மகாலிங்க வீரராமேஸ்வரா

    “சூன்யத்துள் அடங்கின மின்னல் போலானதென்
    குருவின் நல்லுரைகள்
    மின்னலின் ஒளிக்கீற்று போலானதென்
    குருவின் நல்லுரைகள்
    படிகக் குடத்திலிட்ட சுடர் போலானதென்
    குருவின் நல்லுரைகள்
    மகாலிங்க வீரராமேஸ்வரன் போலானதே
    குருவின் நல்லுரைகள் எனக்கு“

    இந்தத் தலைப்பின் கீழ் 129 சரணர்கள் 30 பெண் வசனக்காரர்கள், 13 பெயர் தெரியாத சரணர்கள் என்ற நிலையில் மொத்தம் 172 எழுபத்திரண்டு வசனக்கார்களின் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

     – முற்றும்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 98 (மங்கலம்)

    சேக்கிழார் பாடல் நயம் – 98 (மங்கலம்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    மங்கலம்   பெருக  மற்றென்  வாழ்வுவந்  தணைந்த  தென்ன
    இங்கெழுந்   தருளப்   பெற்றது   என்கொலோ?  என்று  கூற
    ‘’உங்கள்   நாயகனார்   முன்னம்  உரைத்த  ஆகமநூல்  மண்மேல்
    எங்கும்  இல்லாத  தொன்று  கொடுவந்தே   னியம்ப ‘’ என்றான்.

    பொருள்

    “மங்கலம்பெருக மற்றும் எனது வாழ்வேவந்து அணைந்தது என்னும்படி இங்குத் தேவரீர் எழுந்தருளும் பேறு வாய்க்கப்பெற்ற தென்கொல்?“ என்று சொல்ல, “உங்கள் நாயகராகிய இறைவனார் முன் சொல்லிய ஆகமநூல் இம்மண்ணுலகத்தின் மேலே எங்கும் இல்லாததாகிய ஒன்று உமக்கு இயம்புதற்காகக் கொண்டு வந்திருக்கிறேன்“ என்று (முத்தநாதன்) சொன்னான்.

    விளக்கம்

    மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து அணைந்தது – மங்கலம் பெருக – இஃது மங்கல வழக்காகப் பின்நிகழ்ச்சிக் குறிப்பாய்ப் பிறிதொரு அமங்கலப் பொருள் தொனிப்பது காண்க. வாழ்வு வந்து – வாழ்வே ஓர் உருப்பெற்று என் முயற்சியின்றித் தானே வந்தது, வாழ்வுக்கு இறுதி எல்லையாகவந்து என்ற குறிப்புமாம்.

    அருளப் பெற்றதென் கொலோ? – தேவரீர் இதுபோழ்திலே இங்கு வந்த காரியம் யாது? என்ற சொன்னயமும், அடியார்பால் வணங்கி வினாவும் மரபும் காண்க.

    உங்கள் நாயகனார் – இங்கு உங்கள் என்பது மிக்க உரிமைப்பாடு குறிப்பதோர் வழக்கு. “இசையாழ் உங்க ளிறைவருக்கிங் கியற்றும்“ (திருஞான – புரா – 134); “அப்பர்! உங்கள் தம்பிரானாரைநீர் பாடீரென்ன“ (திருநா – புரா – 186)

    என்றஇடங்களில் தமக்கு உரிமையுள்ள தோணியப்பரை, ஆளுடைய பிள்ளையார், திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கும், திருநாவுக்கரசு நாயனா ருக்கும்  தம்மிலும் உரிமையுடையராக்கி உரைத்த சொல்லாட்சிகள் காண்க. உலக வழக்கிலேயும் பெண்கள் தமக்குரிய நாயகனைப்பற்றிப் பேசும்போது முன்னிற்பாருக்கு அவனது மிக்க உரிமை புலப்படுமாறு உங்கள் அண்ணன்; மைத்துனர்; என்று குறிக்கும் வழக்கும் காண்க. ஆயின் இங்கு முத்தநாதன் அந்நாயகனார்க்குத் தொடர்பில்லாமற் புறம்பாயினவன் என்று குறிப்புத் தருதலுங் காண்க.

    முன்னம் – சிருட்டியாரம்பத்திலே, ஆகம நூல் – ஆகமம். (1)உயிர்களின் பாசம் போக்கி வீடு தருவது, (2) பதிபசுபாச இயல் தெரித்து உண்மை உணர்த்துவது என இருவகையிலும் இதற்குப் பொருள் கூறுவர்.

    மண்மேல் எங்குமில்லாதது – இவன் ஏந்திய படையாகிய நூல் உண்மையில் மண்மேலன்றி, விண், பாதலங்களிலும் எங்கும் இல்லாததொன்றேயாம். அப்படையினை ஆக்கிய இரும்பு  என்னும் உலோகமும்  மண்ணினுள் இருப்பதன்றி மண்மேல் உள்ள தன்று என்பதுமாம். மண்மேல் ஒருவரும் இதுவரை அறியாதது என்றலுமாம்.

    இயம்பக் கொடுவந்தேன் – என்று மாற்றுக. இவ்வாறன்றிச் சொன்மாறிக் கூறுதல் அவனது உள்ளக்கரவினால் உளதாகிய தடுமாற்றங் குறித்தது. இதனால் உறுதி பயக்கும் ஞானங்கள் காலமிடம் கருதாது எக்காலத்தும் எவ்விடத்தும் கேட்கத்தக்கன என்ற விதியினை அவன் குறித்து உரைத்தான் என்பர்.

    Share
  • நித்திலாவின் ஓவியங்கள்

    நித்திலாவின் ஓவியங்கள்

    அண்ணாகண்ணன்

    எங்கள் மகள் நித்திலா, சென்னையில் இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார் (வயது 7). அவரது ஓவியங்கள் சில, உங்கள் பார்வைக்கு.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 10

    பரிமேலழகர் உரைத்திறன் – 10

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ‘சொல்’ வரவும் பொருள் நிறைவும்

    முன்னுரை

    ‘நல்வரவு’ என்பது சடங்குகளிலும் விழாக்களிலும் பெருவழக்கு. ‘சொல்வரவு’ உரையாசிரியர்களுக்கு உரியது. சொல்வரவு என்றால் என்ன? நூலாசிரியரின் உள்ளக் கருத்தினை முற்றுணர்ந்து உரையெழுதுங்கால் அக்கருத்தினை முழுமையாக வெளிப்படுத்தும் சொற்கள் அல்லது சீர்கள் அப்பாட்டில் காண இயலாதபோது உரையாசிரியர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களை வருவித்துக் கொள்வதற்கே சொல்வரவு என்று பெயர்.   சொல்லை வரவு வைப்பது. சொல்வரவாகும். செல்வமாகிய பொருளை வரவு வைப்பது உலகியல்பு. ஆனால் பாட்டில் இல்லாத சொற்களைப் பெய்து பாட்டுக்கான முழுப்பொருளையும் வரவு வைப்பது உரையாசிரியர் சிந்தனைத் திறனாகக் கொள்ளப்படும். திருக்குறளின் குறுகிய வெண்பா யாப்பு என்னும் வடிவத்தைப் பரிமேலழகர் எப்போதும் நினைவிற்கொண்டே உரையெழுதுகிறார். அதனால்தான் ஆழமான பொருள் அடங்கிய யாப்புக்குள் அமைகிறபோது ‘உய்த்துணர்தல்’ என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடுகிறது. உய்த்துணர்வும்  உரை சிறப்பும் நேர்விகிதத்தில் அமைவதே சிறப்பு.

    ‘சொல்வரவு’ ஓர் விளக்கம்

    கட்டுரையின் தோரண வாயிலாகச் சொல்வரவு என்பதைப் புரிந்து கொள்வது அதன் உள்ளடக்கத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள ஏதுவாகலாம்.

    “சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
    ஏமப்புணையைச் சுடும்” (306)

    என்னும் குறட்பாவில் “சினமென்னும் நெருப்பு தனக்கு இடமானவரையே யன்றி அவர்க்கு இனமாகிய ஏமப்புணையைச் சுடும்’ என்று உரையெழுதினார் பரிமேலழகர். ‘இனத்தை ஏமப்புணையாக’ உருவகம் செய்த திருவள்ளுவர் அப்புணையால் கடக்கும் பிறவியைக் கடலாக உருவகம் செய்யவில்லை என்பதைப் பரிமேலழகர் அறிந்து கொள்கிறார். கொண்டு,

    “இன மென்னும் ஏமப்புணை என்னும் ஏகதேச உருவகத்தால் பிறவிக்கடலுள் அழுந்தாமல் வீடு என்னும் கரையேற்றுகின்ற என வருவித்து உரைக்க”

    என்று புணைக்கேற்ற எதிர்நிலை உருவகத்தைத் தம் சிந்தனையாற்றலால் சில சொற்களை வருவித்து உரையெழுதுவதன் மூலம் கண்டறிந்து கூறுவதைக் காணலாம். மேற்கண்ட சில சொற்களை வருவித்து உரைக்காமல் குறட்பாவின் ஏழு சீர்களுக்கு மட்டும் உரைசொன்னால் ‘இனமென்னும் ஏமப்புணை’ என்னும் உருவகம் விளக்கம் பெறாத நிலையில் வெகுளாமையினால் வரும் நன்மையும் வெகுளியினால் வரும் இழப்பும் முற்றும் புலப்படாது.

    புகழ்வதற்கும் தகுதி வேண்டும்!

    இன்றைய நடப்பியல் உலகில் சில பொருத்தமற்ற செயல்பாடுகளை அனைவரும் காண முடியும். குறிப்பாக அரசியற்களத்தில் இது அதிகம். ஒரு நிகழ்வு. தகுதி வாய்ந்த ஒருவரைத் தகுதியே இல்லாதவர் பாராட்டுவது. அதுபோலவே பெருந்தகுதி வாய்ந்த ஒருவரைத் தகுதியே இல்லாதவர் விமர்சிப்பது. ‘உரிமை’ என்ற பெயரால் நடக்கும் இந்தக் கூத்து பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனால் அச்சான்றோர்கள் உயிரோடிருக்கும் நிலையில் அவ்விரண்டனையும் ஒன்றாகவே பாவித்துப் புன்னகையோடு அமைதியடைவர். இந்தப் பின்புலத்தை நன்கு உள்வாங்கிக் கொண்டால்தான் பின்வரும் குறட்பாவிற்குப் பரிமேலழகர் எழுதிய உரை நுட்பம் புரியக்கூடும்.

    “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச்
    சான்றோன் எனக் கேட்ட தாய்” (69)

    என்ற குறட்பாவிற்குத் (தான் தாயான அத்தருணத்தில்)

    “தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும்; தன் மகனைக் கல்வி கேள்விகளால் நிறைந்தானென்று (அறிவுடையோர்) சொல்லக் கேட்ட தாய்”

    என்று உரையெழுதிய பரிமேலழகர் குறட்பாவில் இல்லாத ஒரு எழுவாயைப் பற்றிச் சிந்திக்கிறார். ‘தன் மகன் சான்றேன்’ எனக் கேட்ட தாயைக் காட்டிய வள்ளுவர், ‘சான்றோன் எனப் புகழ்ந்தவரைச்’ சுட்டவில்லை. ‘பாம்பறியும் பாம்பின் கால்’ என்பதும் ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்பதும் வழக்கு. இவற்றை முற்றும் அறிந்த பரிமேலழகர், ‘தந்தை அவையத்து முந்தியிருப்பச் செய்த மகனை அறிவுடையார் சான்றோன் எனப் புகழக்கேட்டால்தான் தாய் மகிழ்வாள்’ என்று சிந்தித்து உரையெழுதினார். ஆனால் ‘அறிவுடையார்’ என்னும் சொல் குறட்பாவில் இல்லை. பரிமேலழகர் அதனை வருவித்து எழுதி அதற்கான காரணத்தையும் பதிவு செய்கிறார்.

    “அறிவுடையார் என்பது வருவிக்கப்பட்டது சான்றோன் என்றற்கு உரியவர் அவராகலின்”

    பரிமேலழகர் இதனை வருவித்து உரைக்காவிட்டால் புகழுதற்குரியார் யார் என்பது புலப்படாததோடு, தகுதியுள்ள ஒருவனைத் தகுதியற்றவர்களும் புகழும் நிலை வரலாம் என்னும் பிறழ உணரும் நிலை வந்துவிடும். திருவள்ளுவரின் கருத்து அதுவல்லவாதலின் ‘புகழ்வதற்கும் தகுதி வேண்டும்’ என்னும் நுட்பத்தை உணர்ந்துரைக்கிறார் பரிமேலழகர்!.

    எதுவரை இருக்கும் ‘இசை’?

    உலக வழக்கில் ஒரு தொடரைப் பலரும் செவிமடுத்திருக்கலாம். ‘அவர் மறைந்தாலும் அவர் புகழ் இருக்கும்’ சரி!. எதுவரை இருக்கும்? அவர்தான் மறைந்துவிட்டாரே? அவரை யார் புகழ்வர்? அவரைத் தவிர மற்றவர்கள் அவரைப் புகழ்ந்து கொண்டிருப்பார்கள். அது எதுவரை நீளும்? இந்த உலகத்தின் இறுதி மனிதன் இருக்கிறவரை நீளும். அப்படியானால் புகழ் என்பது இந்த உலகம் உள்ளவரை அழியாது நிற்கும். இதுபற்றிய திருக்குறள் ஒன்று இப்படி அமைந்திருக்கிறது.

    “ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்குப்
    பொன்றும் துணையும் புகழ்” (156)

    “தமக்குத் தீங்கு செய்தாரை ஒறுத்தார்க்கு உண்டாவது அவ்வொருநாளைய இன்பமே. அதனைப் பொறுத்தார்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம்“ என்று உரையெழுதுகிறார் பரிமேலழகர். புகழுக்குரிய காரணங்கள் ‘கல்வி, ஆண்மை’ (231) எனப் பல. அக்காரணங்களைச் செய்கிறவன் மறைகிறான். அவன் தேடிய புகழ் இறவாமல் நிற்கிறது. ‘இறவாது நிற்கும் கீர்த்தி’ (புகழ் அதிகார முன்னுரை)  ‘செய்தவர் இறந்து போக தான் இறவாது நிற்கும்’ (238) என்றெல்லாம் பரிமேலழகர் சொற்பொருள் விரிப்பார். அது இவ்வுலகம் உள்ளளவும் அழியாது நிற்கும். உலகம் அழிகிறபோது புகழும் அழியும். ‘பொன்றுந் துணையும் புகழ்’ என்றாரேயன்றி ‘எது பொன்றும்? என்பதற்கான எழுவாய் பாட்டில் இல்லை. வாழையடி வாழையாகத் தோன்றும் உலகத்துச் சான்றோர் புகழைச் செய்வதனைத் தொடர்ந்து புகழ்ந்து கொண்டேயிருப்பர். இத்தகைய பொருள் விரிப்பதற்கு ஏதுவான ‘உலகம்’ என்னும் சொல் குறட்பாவில் இல்லையென்பதை உணர்ந்து கொண்ட பரிமேலழகர்,

    “ஆதாரம் ஆகிய உலகம் பொன்ற புகழும் பொன்றுமாகலின் ஏற்புடைய உலகு என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது”

    என்று விளக்கவுரை எழுதுகிறார். புகழ் அழியாது நிற்பது. புகழைச் செய்தவர் மறைந்தாலும் அவரைப் புகழ்வார் தோன்றிக் கொண்டே இருப்பர். இச்சான்றோர்களையே ‘உலகம்’ என்னும் சொல் சுட்டும். உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்பது சேந்தன் திவாகரம். சான்றோர்களைக் குறிக்கும் இச்சொல் இத்திருக்குறளில் இல்லையாதலின் அதனை வருவித்து உரைக்கிறார் பரிமேலழகர். இவ்வாறு ‘உலகம்’ என்னும் இச்சொல்லை வருவித்து உரைக்காவிட்டால் ‘எது பொன்றும் அளவும்?’ என்னும் வினாவுக்கு விடையின்றிக் குறட்பா ‘குன்றக்கூறல்’ என்னும் குறைபடுதற்கு வாய்ப்பு உண்டு. ஒரே ஒரு சொல்லை வருவித்து உரைத்ததன் மூலம் “பிறருடைய தீமையைப் பொறுத்துக் கொண்டவர்கள் உலகம் உள்ளவரை (அதாவது உலகம் அழியும் வரை) புகழப்படுவார்கள் என்னும் முழுமையான குறட்பாவின் கருத்து புலப்படுகிறது!.

    சொன்னால்தான் சிக்கல்

    சொல்லுக்கு இரண்டு பண்புகள் இன்றியமையாதன. ஒன்று அது சொல்வானுக்கும் கேட்பானுக்கும் நன்மை தர வேண்டும். இரண்டு பண்போடு கூடிய சொற்களாக அமைதல் வேண்டும். இவ்விரண்டு தன்மைகளும் இல்லாத சொற்களைப் பல்லார் நிறைந்த அவைக்கண் பேசுவது அவர்மாட்டு நீதியோடு படாததாய்ச் சொல்பவனை நற்குணங்களின் நீக்கும். இந்தக் கருத்தமைந்த திருக்குறள் பொறையுடைமை அதிகாரத்தின் நான்காவது குறட்பாவாக அமைந்திருக்கிறது.

    “நயன் சாரா நன்மையின் நீக்கும் பயன்சாரா
    பண்பிற் சொல் பல்லாரகத்து” (194)

    “பயனோடு படாத பண்பில் சொற்களை ஒருவன் பலரிடைச் சொல்லுமாயின் அவை அவர்மாட்டு நீதியோடு படாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும் எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “பண்பு – இனிமையும் மெய்ம்மையும் முதலாய சொற்குணங்கள். சொல்லுமாயின் என்பதும் அவர் மாட்டு என்பதும் எச்சமாக வருவிக்கப்படடன”

    என்று விளக்கமளிக்கிறார். இந்த விளக்கத்தில் குறட்பாவில் இல்லாத ‘சொல்லுமாயின்’, ‘அவர்மாட்டு’ என்னும் இரண்டு சொற்களை வருவித்துக் கொண்டு உரையெழுதுவதாகக் கூறுகிறார். சொல்லப்படும்போதுதான் சொற்களுக்கான விளைவுகள் உண்டு. மனத்துக்குள்ளேயே இருந்தால் அது சொல் அல்ல. பின் விளைவும் கிடையாது. அதிகாரமும் பயனில  சொல்லாமையேயன்றிப் ‘பயனில எண்ணாமை’ என்பதன்று. பாட்டில் இனிமையும் பயனும் இல்லாத சொற்களை ஒருவன் சொன்னால்தான் அந்த அவையினின்றும் நீக்கப்படுவான். அமைதியாக இருந்துவிடின் நீக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. பாட்டில் ‘சொல்லுமாயின்’ என்பதற்கான குறிப்பு இல்லை. குறிப்பு இல்லாதபோது பாட்டின் கருத்து தெளிவாகாது. எனவே பரிமேலழகர் ‘இனிமையும் பயனுமற்ற சொற்களைச் சொல்லுமாயின்’ என உரைகண்டு ‘சொல்லுமாயின்’ என்னும் சொல்லை வருவித்துக் கொண்டதாக எழுதுகிறார். இனி அவனை யார் நீக்குவது என்பதற்கும் குறட்பாவில் பொருத்தமான சொல்லாட்சி இல்லை. ‘பல்லார் அகத்து’ என்னும் தொடர்கொண்டு ‘அவர்மாட்டு அச்சொற்கள் நீதியோடு படாவாய்’ என எழுதுகிறார். எனவே ‘அவர்மாட்டு’ என்னும் சொல்லை வருவித்துக் கொள்வதாகக் கூறி உரைநிறைவு காண்கிறார். இவ்வாறு இவ்விரண்டு சொற்களையும் வருவித்து உரை கண்டிருக்காவிட்டால் என்ன நேர்ந்துவிடும் எனச் சிலர் நினைக்கக்கூடும். பயனும் இனிமையும் அற்ற சொற்களை நினைத்தாலும் கேடுவருமா என்னும் ஐயத்தைக் குறட்பா களைந்திருக்க முடியாது. ‘பயன்சாராப் பண்பில் சொல் பல்லாரகத்து நயன் நீக்கும்’ என்றுதான் இருக்கிறதே தவிர, ‘பல்லாரகத்துச் சொன்னால்தான் நீக்கும்’ என்பதாகவோ யார் அவனை நீக்குவார்கள் என்பதற்கான விடையோ குறட்பாவில் இல்லை. இவ்விரு ஐயங்களையும் களையுமாறு பரிமேலழகர் உரை அமைந்திருப்பதைக் காணலாம்.

    மேகம் மழையாகலாம்! மழை மேகமாகாது!

    இயற்கையை மனிதன் பயன்படுத்திக் கொள்ளலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் அதன் கோரத்தாண்டவத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.  ஆனால் அதனை மறுதலிக்கவோ மாற்றவோ எதிர்த்து நிற்கவோ இயலாது. காரணம் அது இயற்கை. இறைவனின் மறுவடிவம். இதனை முற்றும் உணர்ந்தவர் திருவள்ளுவர். மழையின் சிறப்பை முற்றச் சொல்லும் ‘வான்சிறப்பு’ என்னும் அதிகாரத்தில் விடுபட்ட கருத்தொன்றினை நினைவோடு ஒப்புரவறிதல் என்னும் அதிகாரத்தில் உவம அளவையால் பதிவு செய்து நிறைவு செய்கிறார். ஒப்புரவை யாரும் செய்யலாம். ஆனால் மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளுக்கு எதிர்வினை ஆற்ற இயலாது. இந்தக் கருத்தினைச் சொல்லவரும் திருவள்ளுவர் அவருக்கு மேகத்தை உவமமாகக் கொள்கிறார்.

    “கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு
    என்னாற்றும் கொல்லோ உலகு?” (211)

    என்னும் குறட்பாவிற்குத்,

    “தமக்கு நீர் உதவுகின்ற மேகங்களினிடத்து உயிர்கள் என்ன கைம்மாறு செய்யா நின்றன? அம்மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு நோக்குவன அல்ல”.

    எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “என் ஆற்றும்? என்ற வினா யாதும் ஆற்றா என்பது தோன்ற நிற்றலின் அது வருவித்து உரைக்கப்படும்”

    என்று விளக்கவுரை தருகிறார். இந்த விளக்கவுரையில் ‘யாதும் ஆற்றா’ என்னும் குறட்பாவில் இல்லாததொரு சொல்லை வருவித்துப் பயன்படுத்துகிறார். அதற்கான காரணத்தையும் அவரே பதிவு செய்கிறார். ‘உன்னால் முடியுமோ எனின் முடியாது’ என்பது போல ‘என் ஆற்றும்?’ என்ற வினா ஆற்றாது என்பது தோன்ற நிற்கிறதாம். அதனாலேயே ‘யாதும் ஆற்றா’ என்பதை வருவித்து உரைத்ததாகக் கூறுகிறார்.

    • யாதும் ஆற்றா என்னும் இரண்டு சொற்களை வருவித்து உரைத்திருக்காவிட்டால் ஏதேனும் ஆற்றக் கூடுமோ? என்னும் ஐயம் களையும் ஆறில்லையாம் என்க.

    இந்த உவமத்தில் சிறப்பு என்னவென்றால் மேகம் மழையாகுமேயன்றி அம்மழை மேகமாகாது. மேகத்தையொப்பார் செய்யும் ஒப்புரவு அத்தகையது. அதாவது திரும்பச் செய்ய இயலாது என்பதாம். குறட்பாவின் நுட்பம் என்னவெனின் மழையான மேகம் கலைந்துவிடுமாம்!. பரிமேலழகர் உரை நுட்பம் என்னவெனின் மாரிக்கு மழையென்னும் பொருளிருக்க ‘மேகம்’ என்று பொருள் உரைத்ததுதான்!

    உளர் சிலராகிய காரணம்

    இவ்வுலகில் செல்வர் சிலராகவும் வறியவர் பலராகவும் இருப்பதற்கு ஒவ்வொரு துறை சார்ந்தவரும் ஒவ்வொரு கருத்தினைச் சொல்வர். அது இயற்கையே. அறம் உரைக்க வந்த திருவள்ளுவர் இதற்கு அறவழிக் காரணம் காண்கிறார். இல்லாதவர் பலராக இருப்பதற்கு நோலாதவர் அதாவது தவம் செய்யாதவர் பலராக இருப்பதுதான் காரணம். இருப்பவர் சிலராக இருப்பதற்குக் காரணம் நோற்பார் அதாவது தவம் செய்பவர் சிலராக இருப்பதுதான் காரணம் எனத் தெளிவாக்குகிறார். இந்தக் கருத்திலும் காரண, காரிய விளக்கத்திலும் நாம் செல்லவில்லை. இந்தக் கருத்தினைத் திருவள்ளுவர் பதிவு செய்திருக்கிற முறை கற்பாருக்கு எளிதாக இருக்கிறது எனக் கருதுமாறு இல்லை. பாடல் எப்படியிருக்கிறது?

    “இலர் பலராகிய காரணம் நோற்பார்
    சிலர் பலர் நோலா தவர்” (270)

    ‘இலர் பலராகிய காரணம் நோற்பார் சிலர்’ என்று இருக்கிறது!. எவ்வளவு பெரிய முரண்? நோலாதவர் பலராக இருப்பதால்தான் இலர் பலராகின்றனர். ஆனால் திருவள்ளுவர் யாப்புக்கட்டமைப்பைக் கருதிக் குறுகத் தறித்த காரணத்தால் நோற்பார் சிலர் என்பதற்கான காரியத்தைச் சொல்லாமல் விடுகிறார் என்பதை உய்த்துணரலாம். ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர்’ என்பது போன்ற உடன்பாட்டைப் பலவிடங்களில் முன்னெடுத்த திருவள்ளுவர் இங்கே இல்லாதவராகிய எதிர்மறையை முன்னெடுக்கிறார். எடுத்தவர் அதனை இன்னும் குழப்பமாக ‘நோற்பார் சிலர்’ என்று காரணத்தைக் கூறுகிறார். இந்தத் தொடர் எப்படி இருந்திருக்க வேண்டும்? இலர் பலராகிய காரணம் நோலாதவர் பலர் என்றல்லவா இருந்திருக்க வேண்டும்? அப்படியில்லையே? எனவே  உரையாசிரியர் பரிமேலழகர் தனது கடமையை உணர்ந்து ‘நோற்பார் சிலர்’ என்னும் காரணத்திற்கான காரியத்தை வருவித்து உரைக்கிறார், எப்படி? இப்படி!

    “நோற்பார் சிலர் எனக் காரணம் கூறினமையின் காரியம் வருவித்து உரைக்கப்பட்டது”

    இலர் பலராகிய காரணம் – உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின் நோற்பார் சிலர் நோலாதவர் பலர் – தவம் செய்வார் சிலராக அது செய்யார் பலராதல்.

    • இலர் பலராகிய காரணம் என்றே பாட்டில் அமைந்திருக்க, பரிமேலழகர் உளர் சிலராகிய காரணத்தையும் குறட்பாவிலிருந்து எடுத்து மொழிகிறார்.
    • நோற்பார் சிலர் என்னும் காரணத்திற்கான காரியத்தைக் கண்டறிந்து உளர் சிலர் என்பதையும் எடுத்து மொழிகிறார்.

    இவ்வாறு ‘நோற்பார் சிலர்’ என்பதற்கான காரியத்தைக் கண்டறிந்து அதனை வருவித்துக் கூறியிருக்காவிட்டால் ‘நோற்பார் சிலராக இருப்பதனால் இலர் பலரானார்’ என்னும் பொருள் மயக்கம் நிலவும். மேலும் நோற்பார் சிலர் என்பதற்கான காரியம் இறுதிவரைக் கண்டறிய இயலாமற் போயிருக்கும்.

    இளமையில் துறப்பதே இன்பம்

    அறத்துப்பால் துறவறவியலில் அமைந்திருக்கிற அதிகாரங்களில் துறவு என்பதும் ஒன்று. அதனுள் இரண்டாவது பாடலாக அமைந்திருப்பது,

    “வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின்
    ஈண்டு இயற்பால பல” (342)

    என்னும் குறட்பாவாகும். இக்குறட்பாவுிற்குத்,

    • துறந்தபின் – எல்லாப் பொருள்களையும் துறந்தால்
    • ஈண்டு இயற்பால – ஒருவர்க்கு இம்மைக்கண்ணே உளவாம் முறைமையையுடைய இன்பங்கள் பல
    • வேண்டின் – அவ்வின்பங்களை வேண்டின்
    • உண்டாகத் துறக்க – அவற்றைக் காலம் பெறத் துறக்க

    எனப் பொழிப்புரை எழுதுகிறார். ‘துறக்க’ என முதலில் ஏவிய திருவள்ளுவர் அவ்வாறு (துறந்தால்) ‘அதன் பயனாக இம்மையில் கிட்டுகின்ற இன்பங்கள் பல’ எனத் தொடர்ந்துரைக்க, பரிமேலழகர் இன்பங்களை முதலில் காட்டி அவ்வின்பங்கள் வேண்டுமானால் நீ துறக்க என மாற்றி உரையெழுதுகிறார்.  அவ்வாறு எழுதியவர்,

    “இன்பங்கள் என்பதும் காலம் என்பதும் வருவிக்கப்பட்டன”

    என்றும் எழுதுகிறார்.

    • பாட்டில் வேண்டின் என்றிருக்கிறதேயன்றி “எவை வேண்டின்?” என்னும் செயப்படுபொருள் இல்லை.
    • அதுபோலவே பாட்டில் துறக்க என்றிருக்கிறதேயன்றி எப்போது என்னும் பொழுது இல்லை.

    பரிமேலழகர் வருவித்தவையும் அவற்றிற்கான காரணங்களும்

    மேற்கண்ட குறட்பாவின் விளக்கவுரையில் இன்பங்கள் என்பதையும் காலம் என்பதையும் பரிமேலழகர் வருவித்து உரைத்தமைக்குச் சில காரணங்கள் உண்டு. துறவு பொதுவாயினும் இளமையில் துறத்தலே சிறப்பு. ஏனெனில் அவ்வாறு இளமையிலேயே துறந்துவிடின் துறக்கப்பட்ட நாளிலிருந்து பெறக்கூடிய இன்பங்களின் கால அளவு கூடும். இதனை அந்தக் குறட்பாவின் விளக்கவுரையில்,

    “மனமொழி மெய்கள் அலையாது நிற்றலானும், அவை நன்னெறிக்கண் சேறலானும் வருவன”

    என்று எழுதிக்காட்டுகிறார். எனவே துறவு பொதுவாயினும் இளமையில் துறத்தல் பற்றிய சிந்தனையும் அதன் பயன்களையும் பரிமேலழகர் தெள்ளிதின் உணர்ந்தவர்.

    • “நரைவரும் என்றெண்ணி நல்லறிவாளர் குழவியிடத்தே துறந்தார்” (நாலடியார்1.)
    • “மற்று, ‘அறிவாம் நல்வினை’ ‘யாம் இளையம்” நாலடியர்9)

    என்றெல்லாம் விரவி நிற்கும் சிந்தனைகளை நன்கு உள்வாங்கிய காரணத்தால் ‘உண்டாகத் துறக்க’ என்பதற்குக் ‘காலத்தால் துறக்க’ என்னும் சிறப்புரை கண்டார் பரிமேலழகர். ஒன்றினைத் துறக்க வேண்டின் அதற்கு மாற்றாக மற்றொன்றினைக் காட்ட வேண்டுமாதலின் ‘வேண்டின்’ என்பதற்கான செயப்படுபொருளாகிய ‘இன்பங்கள்’ என்பதை வருவித்து உரைக்கிறார். இவ்வாறு வருவித்து உரைக்காவிடின் எவை வேண்டின் என்னும் தெளிவும் எப்போது துறப்பது என்னும் காலமும் புலப்படாதாம்!.

    நிறைவுரை

    எழு சீர்களுக்குள் எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய கடப்பாடு திருவள்ளுவருக்கு இருந்திருக்கிறது என்பதை நன்கு உணர்ந்தவர் பரிமேலழகர். எழுவாய் இல்லாமல் குறள் அமைகிறது. செயப்படுபொருள் இல்லாமல் அமைகிறது. உவம விளக்கம் இருந்து பொருள் விளக்கம் குன்றி அமைகிறது.  பொருள் விளக்கம் இருந்து உவமம் தனித்து நிற்கிறது. உவமமும் பொருளும் தனித்தனியே நிற்கின்றன. காரணம் இருக்க காரியம் புலப்படுவதில்லை. காரியம் தெளிவாகக் காரணம் அறியுமாறு இல்லை. இவ்வாறு திருவள்ளுவரின் உள்ளத்தின் முழுப்பரப்பையும் சொற்களால் காட்ட இயலாதபோது அதனைத் தம் நுண்மாண் நுழைபுலத்தால் கண்டறிந்து ஆங்காங்கே சில சொற்களை  வருவித்து உரைகாண்பதன் வழித் தமது உரைப்பணியை நிறைபணியாகச் செய்து முடித்திருக்கிறார் பரிமேலழகர் என்பதே மேற்கண்ட சில சான்றுகளின் வழிப் பெறப்படும் அவருடைய உரைத்திறனாகும்.

    (தொடரும்…)

    Share
  • வேட்டி போர்த்திய உடல் (சிறுகதை)

    வேட்டி போர்த்திய உடல் (சிறுகதை)

    பாஸ்கர் சேஷாத்ரி

    “சார், அந்தப் பக்கம் போகாதீங்க, இட்ஸ் ஹாரிபல்”

    “ஏன் என்னாச்சு?”

    “எவனோ ஒருத்தன் குடிச்சிட்டு துணி மணி இல்லாம இருக்கான். எதிர்த்த பக்கம் போங்க.”

    நான் நகர்ந்து அந்தப் பக்கம் சென்றாலும் என் கண்கள் அவன் இருந்த திசை நோக்கி இழுக்க அவனை நோக்கிச் சென்றேன் .

    மெலிந்த தேகம். எலும்பெல்லாம் தெரியும் ஒடிசலனா உடல். இந்த நிலையிலும் போதை என்ற விஷயம் எவ்வளவு பெரிய வேதனை. மனம் கலங்கியது.

    நேர அங்கே போய் அவனைப் பார்த்தேன். கிட்டதட்ட முழு நிர்வாணம். பக்கத்தில் இருந்தார் ஒருவர்.

    “சார், ஒரு சின்ன ஹெல்ப்” என்றேன்.

    “சொல்லுங்க சார்”

    “எதிர்க்க ரேவதில ஒரு நாலு முழ வேட்டி வாங்கி வர முடியுமா? இந்தாங்க பணம்.”

    “தோ சார். பில் யாரு பேர்ல?”

    “அதெல்லாம் வேணாம் ப்ளீஸ்.”

    “இவரை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போலாமா?”

    “போலாம் சார். ஆனா பக்கத்துல போனா ஒரே கலீஜ். ஆனா உயிர் இருக்கு.”

    வேட்டி வந்தது. “கொஞ்சம் போர்த்த முடியுமா?” எனக் கேட்டேன். பதில் வரவில்லை.

    நெருங்கிப் போர்த்தினேன். “இவரைப் பத்தி யாருக்காவது தெரியுமா?” எனக் கேட்டேன்.

    “தெர்ல சார். ஆனா இங்க தான் குந்தினு இருப்பான் பேரல்லாம் தெர்ல.”

    “ரெண்டு தபா வந்து போலீஸ் துரத்திச்சு..  அவன் போல. என்னா தில்லு பாரு.”

    ஒரு காவலர் இரு சக்கர வண்டியில் வந்தார்.

    “சார் நீங்க?”

    சொன்னேன்.

    “இப்ப ஆம்புலன்ஸ் வரும்” என்றார்.

    உங்க நம்பரைக் கொடுங்க என்றார் . கொடுத்தேன்.

    “பயப்படாதீங்க. எங்களுக்கு இதெல்லாம் சகஜம்” என்றார் .

    “இட்ஸ் ஒகே.” அவர் எண்ணை வாங்கிக்கொண்டேன்.

    “ஏன் சார் இவரை ஏதாவது மறுவாழ்வு இல்லத்துல சேர்க்க முடியுமா?”

    பதில் வரவில்லை ..

    “சார். நீங்க கிளம்புங்க, அது உங்க காரா?”

    இல்லை என்றேன்.

    ஆம்புலன்ஸ் வர நான் புறப்பட்டேன்.

    “சார் என்ன பேர் சொன்னீங்க?”

    “ராமஸ்வாமி.”

    “நன்றி. ராயப்பேட்டை தான் போறேன். கூப்பிடுறேன்” என்றார்

    இந்தக் குடி பற்றியும், அதன் தாக்கத்தையும் பற்றியும் உள்ளே நிறைய கேள்விகள் எழுந்தன. தீர்வாக ஏதும் கைகூடவில்லை.

    கைப்பேசியில் ஓர் அழைப்பு .

    “சார். நான் சண்முகம். மார்னிங் பாத்தீங்களே”

    “சொல்லுங்க, இ ஒன் தானே?”

    “ஆமா சார்.”

    “என்னாச்சு?”

    “அவர் இரண்டு மணிக்கு இறந்துட்டார் சார்”

    “மை காட்” என்றேன் .

    ஆர் எம் ஒ ரிப்போர்ட் இப்போதான் வந்தது. ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. அவருக்கு கொரோனாவும் இல்லை . அவர் ஆல்ககாலிக் கூட இல்லை.”

    “அப்ப என்னா தான் ஆச்சு?”

    “ஸ்டார்வேஷன் சார். பட்டினிச் சாவு.”

    இணைப்பு துண்டிக்கப்பட்டது .

    அவன் உடலைக் கட்டிப் பிடித்து அழ வேண்டும் போல இருந்தது.

    Share
  • வாழ்த்தும் மனமே வாழும்!

    வாழ்த்தும் மனமே வாழும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    இறைத்த கிணறு ஊறும்
    இறையாக் கிணறு  நாறும்
    நடக்கும் கால்கள் வலுக்கும்
    நடவாக் கால்கள் முடக்கும்
    படிக்கும் காலம் சிறக்கும்
    படியாக் காலம் இழக்கும்!

    உழைக்கும் கரங்கள் வலுக்கும்
    உழையாக் கரங்கள் படுக்கும்
    கொடுக்கும் குணமே சிறக்கும்
    கொடுக்கா குணமே குறுக்கும்
    தாழ்த்தும் தலையே நிமிரும்
    தாழாத் தலையே குனியும்
    வாழ்த்தும் மனமே வாழும்
    வாழா மனமே வீழும்!

    Share
  • குறளின் கதிர்களாய்…(319)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(319)

    உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்
    கூம்பலு மில்ல தறிவு.

    – திருக்குறள் – 425 (அறிவுடைமை)

    புதுக் கவிதையில்...

    உலக மாந்தரில்
    உயர்ந்தோரை நட்பாக்கிடல்
    ஒருவனுக்கு
    உயர்ந்த அறிவுடைமையாகும்..
    இந் நட்பில்
    முதலில் முகம்மலர்தலும்,
    பின்னர்
    வருந்தி வாடுதலுமிலாமல்
    ஒன்றாய்
    வைத்துக்கொள்வதுதான்
    சிறந்த அறிவுடைமை…!

    குறும்பாவில்...

    உயர்ந்தோரை நட்பாக்கிடல் அறிவுடைமை,
    நட்பதில் முகம்மலர்தல் வாடுதலொன்றாய் வைத்திருத்தல்
    மிகவும் சிறந்த அறிவாம்…!

    மரபுக் கவிதையில்...

    உலகி லுயர்ந்த குணத்தோரை
    உற்ற நட்பாய்க் கொள்ளுதலே
    பலமே மிக்க அறிவுடைமை,
    பார்க்கு மிந்த நட்பினிலே
    நலமா யிருந்தால் நகைத்திடலும்
    நலிந்தால் முகமே வாடுதலும்
    இலதா யொன்றாய்க் கொள்வோனின்
    இருப்பா மறிவே மிகச்சிறப்பே…!

    லிமரைக்கூ..

    அறிவினுக் கடையாள மிதுதான்
    உயர்ந்தோரை நட்பாக்குதல், முகமலர்தல் வாடுதலிலாதொன்றாய்ப்
    பார்த்தாலதில், பேரறிவே அதுதான்…!

    கிராமிய பாணியில்...

    அறிவிருக்கணும் அறிவிருக்கணும்
    கொறயில்லாம வாழவேதான்
    அறிவிருக்கணும்- நல்ல
    அறிவிருக்கணும்..

    ஒலக வாழ்க்யில
    அறிவுங்கிறது ஒருத்தன்
    கொணத்தில ஒசந்தவங்கள
    நட்பாக்கறதுதான்..

    அந்த நட்புல
    மொதலுல ரெம்ப
    மொக மலர்ச்சியாவும்,
    அப்புறமா
    மொக வாட்டமுமில்லாமப்
    எப்பவும் ஒண்ணுபோல
    வச்சிருக்கதுதான்
    ஒசந்த அறிவு..

    அதால
    அறிவிருக்கணும் அறிவிருக்கணும்
    கொறயில்லாம வாழவேதான்
    அறிவிருக்கணும்- நல்ல
    அறிவிருக்கணும்…!

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 13

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 13

    -மேகலா இராமமூர்த்தி

    பஞ்சவடி நோக்கி அடிவைத்து நடந்தனர் இராம இலக்குவரும் சீதையும். ஒரு மலையுச்சியில் அமர்ந்திருந்த கழுகரசனான சடாயு, அவ்வழியே வந்துகொண்டிருந்த மூவரையும் காண்கின்றான். ’கழுகு’ப் பார்வையொடு அவர்களைக் கூர்ந்துநோக்கியவன், ”ஒருவன் கருத்த மலைபோல் இருக்கிறான்; இன்னொருவன் செம்மலையாய்க் காட்சிதருகின்றான். வெற்றித் திருமகள் உறைகின்ற மார்பினையும், சிவந்த கண்களையும் கொண்ட இவர்கள் இருவரும் அருங்குணங்கள் நிரம்பிய என் இனிய நண்பன் தயரதனின் தோற்றத்தை ஒத்திருப்பதுபோல் தோன்றுகின்றதே…இவர்கள் யாராக இருக்கக்கூடும்?” என்று தன்னுள் சிந்தித்தான்.

    கரு மலை செம் மலை அனைய காட்சியர்
    திரு மகிழ் மார்பினர் செங் கண் வீரர்தாம்
    அருமை செய் குணத்தின் என் துணைவன் ஆழியான்
    ஒருவனை இருவரும் ஒத்துளார் அரோ.
    (கம்ப: சடாயுகாண் படலம் – 2795)

    அவர்கள் யார் என அறியும் ஆவல் மேலிட்டதால் தானே அவர்களின் எதிர்சென்ற சடாயு, ”நீங்கள் யார்?” என்று அவர்களை ஆர்வத்தோடு வினவுகின்றான்.

    பொய்யுரைத்தல் அறியா இராமனும், ”நாங்கள் தயரதனின் மக்கள்” என்றுரைக்க, அவர்களைத் தன் சிறகுகளால் அன்போடு தழுவிக்கொண்ட சடாயு, ”என் நண்பன் நலந்தானே?” என்று கேட்கின்றான் ஆவலோடு.

    தயரதன் வானகம் ஏகிவிட்ட செய்தியறிந்து கண்ணீர்விட்டுக் கதறிய சடாயு, ”நண்பா! சம்பராசுரப் போரின்போது, ”சடாயு! நீயே என் உயிர்; நான் உடல்” என்று என்னிடம் இயம்பினையே! இன்று உயிராகிய நான் இருக்க உடலாகிய உன்னை மட்டும் எமன் கொண்டு போனதென்ன விந்தை!” என்று சிந்தை நொந்து புலம்பினான்.

    அதைத் தொடர்ந்து…”என் மக்களே! என்னுயிர் நண்பன் தயரதன் போன பின்னரும் நான் உயிர்வாழ விரும்பவில்லை! இப்போதே எரியில் மூழ்கி என் உயிரைவிட எண்ணுகின்றேன்; எனக்கும் ஆற்றுவீர் ஈமக்கடன்!” என்று சாற்றவே, ”எந்தையை இழந்தோம்; இப்போது எந்தை போன்ற நீரும் இறப்பேன் என்றால் எங்களுக்கு ஆருளர் ஆதரவு?” என்று இராம இலக்குவர்கள் வருந்திக்கூறினர்.

    அவர்கள் வார்த்தையில் நெஞ்சம் நெகிழ்ந்த சடாயு, ”நீங்கள் கானகம் நீங்கி அயோத்தி சேர்ந்தபின் நான் வானகம் சேருவேன்!” என்றுகூறி அவர்களின் துன்பத்தை மாற்றினான்.

    பின்னர் அவர்கள் கானகம் வந்த காரணத்தைக் கேட்டறிந்து, இராமனின் உயர்ந்த செயலுக்காக அவனை உச்சிமோந்தான். மூவரும் தங்குவதற்காகச் சென்றுகொண்டிருக்கும் பஞ்சவடி எனும் இடம் வரையில் அவர்களுக்குத் தன் சிறகை விரித்து நிழல்தந்தபடி உடன்வந்தான் அந்தக் கழுகரசன்!

    சடாயு போனபின்னர், பஞ்சவடியில் தாங்கள் மூவரும் தங்குதற்கேற்ற அழகியதோர் இலைக்குடிலை (பர்ணசாலை) கலைநயத்தோடு அமைத்தான் குடிலமைப்பதில் தேர்ந்தவனான இலக்குவன்.

    பஞ்சவடிக்கருகே நெஞ்சையள்ளும் வகையில் பாய்ந்துகொண்டிருந்த கோதாவரி ஆற்றின் அழகைப் பார்க்கின்றனர் இராமனும் இலக்குவனும். இந்நிகழ்ச்சியைப் பாடவந்த கவிவலார் கம்பர்,

    ”புவிக்கோர் அணிகலன்போல் அழகூட்டுவதாய் அமைந்து, சிறந்த பொருள்களைத் தந்து, வயல்களுக்குப் பயன்படுவதாய் ஆகித் தன்னுள் பல நீர்த்துறைகளைக் கொண்டு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்நிலப் பகுதிகளின் வழியே பரவிச்சென்று, செவ்வையாய், தெளிவுடையதாகிக் குளிர்ந்த நீரோட்டமும் உடையதாய்க் கல்விவல்ல சான்றோரின் செய்யுள்போல விளங்கிய கோதாவரி ஆற்றை இராம இலக்குவராம் வீரர்கள் பார்த்தனர்” என்று விவரிக்கிறார்.

    புவியினுக்கு அணிஆய் ஆன்ற பொருள்தந்து புலத்திற்றுஆகி
    அவிஅகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறிஅளாவி
    சவிஉறத் தெளிந்து தண்ணென் ஒழுக்கமும்தழுவிச் சான்றோர்
    கவிஎனக் கிடந்த கோதா வரியினை வீரர்கண்டார்.
    (கம்ப: சூர்ப்பனகைப் படலம் – 2829)

    கோதாவரியை மட்டுந்தான் இப்பாடல் பேசுகின்றதா? இல்லை!

    சான்றோர் கவியையும் அதனோடு இணைத்தே பேசுகின்றது. அந்த அடிப்படையில் இப்பாடல் நல்கும் இன்னொரு பொருளையும் காண்போம்!

    ”உலக மக்களுக்குப் பல அணியாகி (வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள் – நன்னூல்-268), சிறந்த அறம், பொருள், இன்பம், வீடு எனும் உறுதிப் பொருள்களை உணர்த்தி, அறிவிற் தங்கி, செவ்விதாய் அமைந்த அகப்பொருள் துறைகளை ஏற்று, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்த அக ஒழுக்கங்கள் விரவப்பெற்று, ஐயத்திற்கிடமின்றிப் பொருள்தெளிவுற அமைந்து, நல்லொழுக்கத்தையும் மக்களுக்கு உணர்த்தி நிற்கும் சான்றோரின் செய்யுள்” என்பது அப்பொருள்.

    இவ்வாறு கோதாவரி ஆற்றுக்கும், சான்றோர் கவிக்கும் பொருந்துகின்ற வகையில் அணி, பொருள், திணை, துறை முதலியனவற்றைப் பாங்குறப் பொருத்திக்காட்டி இரட்டுற மொழிந்துள்ள (சிலேடை) கம்பரின் கவிநயம் இரசிக்க வைக்கின்றது.

    இலைக்குடிலில் இராம இலக்குவரும் சீதையும் இனிதே வாழ்ந்துவந்த காலத்தில் புதியதோர் பிரச்சினை முளைத்தது பெண்ணொருத்தி வடிவில்!

    அவள்தான் இராவணனின் தங்கை சூர்ப்பனகை!

    கூனியைத் திடுமென்று காப்பியத்தில் நுழையவிட்டது போலவே சூர்ப்பனகையையும் எவ்வித முன்னறிவிப்புமின்றிக் கம்பர் காப்பியத்தில் கொண்டுவருகின்றார்.

    இராமாயணக் கதையின் முதல் திருப்புமுனையாகத் திகழ்பவள், தூயவளான கைகேயியைத் தீயவளாக்கிய கூனி. இரண்டாவது திருப்புமுனையாகத் திகழப்போகின்றவள் இந்தச் சூர்ப்பனகை. இவளை நான்கு பாடல்களில் நமக்கு அறிமுகம் செய்யும் கம்பர்,

    ”நீலமணி போலும் நிறத்தையுடைய இராக்கதர் அரசனும், பராக்கிரமசாலியுமான இராவணனை வேரோடு அழியுமாறு சூழ்ச்சிசெய்யும் வலிமை உடையவளும், முற்காலத்தில் உயிரோடு கூடவே பிறந்து தான் செயல்படுவதற்குத் தக்க காலத்தை எதிர்பார்த்து, அவ்வுயிருடனேயே தங்கியிருக்கும் கொடிய நோய் போன்றவளுமானவள் இந்தச் சூர்ப்பனகை” என்கிறார்.

    ஆக, அவளால் இராவணனின் குலமே வேரோடு அழியப்போவதை இங்கேயே நமக்கு அறியத் தந்துவிடுகின்றார்.

    நீல மாமணி நிற நிருதர் வேந்தனை
    மூல நாசம்பெற முடிக்கும் மொய்ம்பினாள்
    மேலைநாள் உயிரொடும் பிறந்துதான் விளை
    காலம் ஓர்ந்து உடன்உறை கடிய நோய் அனாள்.
      (கம்ப: சூர்ப்பனகைப் படலம் – 2836)

    ”நம் உடன்பிறந்தாரையெல்லாம், நமக்கு நன்மைசெய்யும், சுற்றத்தார் என்று எண்ணி ஏமாறவேண்டாம்; ஏனெனில் நம்முடம்பில் தோன்றிய நோயானது நம்மையே அழித்துவிடும் தன்மைகொண்டது. ஆனால் எங்கோ மலையிலிருக்கும் மருந்தானது நம் நோயைத் தீர்க்கின்றது அல்லவா? அதுபோல் நமக்குத் தொடர்பே இல்லாத சிலர் நம் துன்பத்தைத் தீர்க்க உதவுவதும் உண்டு!” என்ற மாதரசி ஔவையின் மூதுரை இங்கே எண்ணிப்பார்க்கத் தக்கது.

    உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
    உடன்பிறந்தே கொல்லும் வியாதி – உடன்பிறவா
    மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
    அம்மருந்து போல்வாரும் உண்டு.
    (மூதுரை: 20)

    பஞ்சவடியை ஒட்டிய காட்டுப்பகுதியில் வசித்துவருபவளான சூர்ப்பனகை, தொலைவில் தெரிந்த ஓர் இலைக்குடிலின் வாயிலில் அமர்ந்திருந்த இராமனைக் கண்டாள்; அவன் அழகில் சொக்கிப் போய் அவன்மீது ஆசை கொண்டாள். எனினும் அந்த அழகனின் தவ வேடம் அவளுக்கு வித்தியாசமாகப் படுகின்றது.  

    ”இன்பம் அளிக்கும் இப்படிப்பட்ட அழகையும், புதுமையை உண்டாக்கத்தக்க தாமரை மலர் போன்ற கண்களையும் உடைய இவன் எதைப் பெறுவதற்காகத் தன் அழகிய திருமேனி வருந்தத் தவம் செய்கிறான்?” என்று சிந்திக்கின்றாள்.

    உடனே தன் எண்ணத்தை மாற்றி, ”அதனாலென்ன? இவன் தவம் செய்வதற்கு அந்தத் தவம் அல்லவா முன்னாளில் தவம் செய்திருக்கவேண்டும்!” என்று சமாதானமும் செய்துகொள்கிறாள்.

    எவன் செய இனிய இவ்
         அழகை எய்தினோன்
    அவம் செயத் திரு உடம்பு
         அலச நோற்கின்றான்
    நவம் செயத்தகைய இந்
         நளின நாட்டத்தான்
    தவம் செய தவம் செய்த தவம்
         என் என்கின்றாள். (கம்ப: சூர்ப்பனகைப் படலம் – 2846)

    தவம் செய்வது அரக்க குலத்தோர்க்கு வெறுப்பைத் தருவது; ஆனால், இராமனின் தவக்கோலம் அரக்கர் குலமகளின் மனத்திலும் தவத்தைப் பற்றி உயர்வானதோர் எண்ணத்தை விதைக்கின்றது! எனினும், தவம் செய்வதால் அந்த அழகனின் திருமேனி வருந்துமே என்றெண்ணித் தானும் வருந்துகின்றாள் சூர்ப்பனகை!

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

     

    Share
  • பழகத் தெரிய வேணும் – 34

    பழகத் தெரிய வேணும் – 34

    நிர்மலா ராகவன்

    அடக்கம் — ஆணவம்

    ஆறு வயதான சிறுமியிடம், `உன் அக்காளிடம் பாடம் கற்றுக்கொள்,’ என்று சொன்னால், `அவ ரொம்பத்தான் காட்டிப்பா,’ என்ற சிணுங்கல் வரும்.

    ஓரிரு வயதே பெரியவளான அக்காளுக்குப் பெருமை, தனக்கு தங்கையைவிட அதிகம் தெரிந்திருக்கிறதே என்று. அவளை மட்டம்தட்டிப் பேசத் தோன்றும்.

    பெரியவர்கள் இப்படி நடந்தால், `அகம்பாவம்’ என்று முத்திரை குத்திவிடுகிறோம். ஆனால், அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்கள்.

    தம்மீது நம்பிக்கை இல்லாததாலேயே அப்படி நடக்கிறோம் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

    `என்னைப்போல் யார்!’ என்று மார்பை உயர்த்திக்கொண்டு ஒருவன் நடந்தால், தன்னை யாராவது வீழ்த்திவிடுவார்களோ என்ற அச்சம் அவனுக்குள் இருக்கிறது என்று அனுமானிக்கலாம்.

    ஏதாவது துறையில் அவன் தன் திறமையைக்கொண்டு சாதித்திருக்கலாம்.

    அதற்கென்ன! அந்த சாதனையை வீழ்த்த வேறொருவர் வரமாட்டாரா, என்ன!

    `நான் சொல்வதுதான் சரி!’ என்று ஒருவன் அழுத்திக் கூறிக்கொண்டே இருந்தால், பலர் அவன் பின்னால் நடப்பார்கள். எல்லாம், அவனைச் சார்ந்திருந்தால் ஏதாவது காரியம் நடக்குமே என்றுதான்! அவனுடைய கர்வமும் ஓங்குகிறது.

    இந்த கர்வத்திற்கு ஆண், பெண் என்ற வித்தியாசம் கிடையாது. மனிதனின் பிறவிக் குணம். அவ்வளவுதான்.

    “முட்டாள்தனத்திற்கு அடுத்து அபாயகரமானது ஆணவம்” என்கிறார் ஐன்ஸ்டீன்.

    தான்தான் உயர்ந்திருக்கிறோம் என்ற அகந்தை கொண்டவனுக்கு, `இன்னும் எப்படி முன்னேறலாம்?’ என்ற யோசனை கிடையாது. அதுவரை கிடைத்ததே போதும் என்று மெத்தனமாக இருப்பான்.

    கதை

    எப்போதும் ஒரு நமட்டுச் சிரிப்புடன் நடப்பான் லிங்கம். வெளிநாட்டிலிருந்து கலைக்குழுவினரை வரவழைப்பது அவன் தொழில்.

    அதிகப் படிப்போ, பணமோ அவனிடம் கிடையாது. எப்படியோ ஒரு பெரிய நிறுவனத்தினருடன் தொடர்புகொண்டு, அவர்களுக்காகப் பெரிதும் உழைப்பதுபோல் `காட்டிக்’கொண்டான். எப்போதும் அங்கேயே உட்கார்ந்திருப்பான்.

    அங்குள்ள பிரமுகர்களுடன் – காலில் விழாத குறையாக — பழகி, எந்த விழாவாக இருந்தாலும் அதை நடத்திக்காட்டும் பொறுப்பை ஏற்றான்.

    கலைக்குழுவினரை மட்டமான இடங்களில் தங்கவைப்பது, பெரிய விருந்திற்குச் சுமாரான உணவை ஏற்பாடு செய்வது என்றெல்லாம் தில்லுமுல்லு செய்தால் சம்பாதிக்க முடியாதா, என்ன!

    `நான் இல்லாவிட்டால் இவர்கள் இப்படி நடத்திக்காட்டி இருக்க முடியுமா?’ என்ற பெருமிதம் ஏற்பட்டது.

    ஒரு நிகழ்ச்சியில், “என்ன தம்பி!” என்று அதிகாரி ஒருவர் குசலம் விசாரித்தது இரண்டு வரிசை பின்னால் உட்கார்ந்திருந்த எனக்கே கேட்டது. அவன் ஏன் பதிலளிக்கவில்லை என்று ஆச்சரியமாகப் பார்த்தேன். அலட்சியமாக இருந்தான்.

    சிறிது பொறுத்து, அப்போதுதான் அவரைக் கவனித்ததுபோல், “அட! ஹலோ, டத்தோ! ஹௌ ஆர் யூ?” என்றான், ஆரவாரமாக. (டத்தோ என்பது மலேசியாவில் மாமன்னரோ, மாநில சுல்தான்களில் ஒருவரோ அளிக்கும் பட்டம்).

    உயர்ந்த இடத்தில் பழகியதால் தானும் உயர்ந்தவன்தான் என்று நம்பிய முட்டாள் அவன்.

    “ஆணவம் விவேகத்தைக் குறைத்துவிடும்” (அரபு நாட்டுப் பழமொழி)

    அதிகாரியைக் கவனிக்காது விட்டது ஆணவம் — `நானும் நீங்களும் ஒரே தரத்தில்தான் இருக்கிறோம்,’ என்பதுபோல். இல்லாத தன்னம்பிக்கையை வரவழைத்துக்கொள்ளும் உபாயம் அது.

    அவனுடைய போக்கு அங்கிருந்தவர்களுக்கு எரிச்சலை ஊட்ட, விரைவில் வீழ்ந்தான்.

    இத்தகையவர்கள் தெரிந்தவர்களுடன் மட்டுமே பழகுவார்கள். ஏனெனில், அவர்கள்தாமே ஏற்பார்கள்! அதிகம் தெரியாதவர்களுடன் விறைப்பாக நடப்பார்கள்.

    படித்து, பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்களையும் ஆணவம் விட்டு வைப்பதில்லை.

    இவர்கள் தாம் செய்யும் தவற்றுக்குக்கூட `ஒழுக்கம்’ என்ற சாயத்தைப் பூசுவார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இதோ!

    கதை

    இரவு நேரம்.

    தலைமை அதிகாரியின் வீட்டில் ஒரு பார்ட்டி.

    தன் கையில் ஒரு கோப்பை மதுவுடன், அமர்ந்திருந்த ஒவ்வொருவரிடமும் வந்து, “குடி!” என்று அவர் மிரட்டினார். `என்ன! நீ இன்னும் குடிக்க ஆரம்பிக்கலியா?’ என்ற கேலி வேறு, அவ்வப்போது.

    விருந்தினரில், `குடிப்பது நல்லொழுக்கம் இல்லை’ என்று நம்பியவர்கள் சிலர் இருந்தார்கள். இருந்தாலும், ஒழுக்கத்தைவிட மேலதிகாரியின் நல்லெண்ணமே பெரிது என்று பயந்து, அவருக்குக் கீழ்ப்படிந்தார்கள்.

    மறுத்தால், அவர் செய்வது தவறு என்பதுபோல் ஆகிவிடாதா!

    ஒரு வேளை, இப்படி அதிகாரமாக, ஆணவத்துடன் நடப்பதால்தான் பெரிய மனிதராக ஆனாரோ என்று, அவரைப் பின்பற்றுகிறவர்களும் உண்டு.

    கதை

    அமீர் எங்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அடக்கமான சிறுவன். படிப்பும் சுமாராக இருந்தது.

    அவனது பணிவால் கவரப்பட்டு, அவனை prefect (சட்டாம்பிள்ளை) ஆக்கினார் கட்டொழுங்கு ஆசிரியர்.

    பள்ளியில் எந்த மாணவன் தவறு செய்தாலும், அதைத் தட்டிக்கேட்கும் உரிமை அவனுக்குக் கிடைத்தபோது, அந்த ஆசிரியருக்கு அடுத்தபடி தான்தான் என்று நிச்சயித்துக்கொண்டான்.

    பிற ஆசிரியர்களை மதிப்பது அறவே நின்றுபோயிற்று. எதிர்த்துப் பேச ஆரம்பித்தான்.

    “உனக்கு ஏதோ பதவி கிடைத்துவிட்டதால், நீ ஆசிரியர்களைவிட உயர்ந்த நிலைக்குப் போய்விட்டதாக எண்ணமா?” என்று நான் திட்ட, “சரியாகச் சொன்னீர்கள், டீச்சர்!” என்று மாணவிகள் ஆமோதித்தார்கள். அவர்களுக்கும் அவனுடைய புதிய போக்கால் எரிச்சல்.

    சில வாரங்களிலேயே பொறுக்கமுடியாது போக, என் சக ஆசிரியரிடம் புகார் செய்தேன்.

    “இவனுக்கெல்லாம்போய் பெரிய பதவி கொடுத்திருக்கிறீர்களே! அதைப் பிடுங்கினால்தான் இவன் வழிக்கு வருவான். படிப்பிலும் அக்கறை போய்விட்டது,” என்று எடுத்துச்சொன்னேன்.

    அவருக்கு அவமானமாகப் போய்விட்டது.

    அடுத்த முறை அமீர் என் வகுப்புக்கு வந்தபோது, பயந்தவனாகக் காணப்பட்டான். பதவி போய்விட்டால், தன் மதிப்பு குறைந்துவிடுமே என்ற பயம்.

    சில காலம் இந்த மாற்றம் நிலைக்கும்.

    இன்னொரு கதை

    மலேசிய அரசாங்கப் பள்ளிகளில் காலை, மத்தியானம் என்று இரு அமர்வுகள் உண்டு. காலையில் பதினைந்து வயதுக்கு மேற்பட்டவர்கள்.

    வயதில் சற்றுக் குறைந்தவர்களுக்கு மத்தியானப்பள்ளி.

    அதில் போதிக்கும் ஓர் சீன ஆசிரியை என்னிடம் வலிய வந்து, குழைந்து குழைந்து பேசுவாள். எனக்கோ அவள் பெயர்கூடத்தெரியாது.

    `இவள் ஏன் நம்மிடம் இவ்வளவு இழைகிறாள்?’ என்று என் யோசனை போயிற்று.

    நான் பெரிய வகுப்புகளில் போதித்த மூத்த ஆசிரியை. அவள் என்னைவிட வயதில் மூத்தவளாக இருந்தாலும், பட்டதாரி இல்லை. அதனால் வந்த அடக்கம்.

    பள்ளி அரசாங்கப் பரீட்சை ஒன்றில் அவளுடைய மகள் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்தாளாம். மகள் பெற்ற வெற்றியால் தானும் உயர்ந்துவிட்டதாக அவள் நினைத்திருக்க வேண்டும்.

    அதன்பின், `நான் உன்னைவிட உயர்த்தி!’ என்று மார்தட்டிக்கொள்வதுபோல் என்னிடம் மரியாதைக்குறைவாகப் பேசினாள்.

    இவளைப்போன்ற பலருக்கு, மற்றவர்களைவிடத் தாங்கள் உயர்ந்திருக்க வேண்டும்.

    உயர்ந்த நிலையில் இருப்பவர்களுடன் இணைந்து பழகினால் தாமும் உயர்ந்துவிட்டதாகப் பிறர் எண்ணுவார்களே என்ற நப்பாசை.

    அல்லது, பிறருடன் ஒப்பிட்டுக்கொண்டு, தாழ்வாக இருக்கிறோமோ என்ற மனக்கலக்கம்.

    அவ்வப்போது அசடு வழி

    `நான் இருக்கிறபடி இருந்துவிட்டுப்போகிறேன். பிறருடன் என்னை ஒப்பிட்டுக் கொண்டிருப்பானேன்!’ என்ற விவேகம் இருந்தால்தான் நிம்மதி கிடைக்கும்.

    எந்த சூழ்நிலையிலும், `பிறர் நம்மைப்பற்றி என்ன நினைத்துவிடுவார்களோ!’ என்ற பயத்துடன் நடக்க வேண்டியதில்லை.

    அவ்வப்போது அசட்டுத்தனமாக நடந்தால், நமக்கே நாம் உற்சாகமூட்டிக்கொள்ள முடியும்.

    Share