வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-42

0

தி. இரா. மீனா

நிக்களங்க சென்னசோமேஸ்வரா

“வெட்ட வெளியெலாம் திடமானால் வானம் மண்
பாதாளத்துக்கு இடம் எங்குள்ளதோ?
இடரைச் செய்ய முடியாத மனிதரெல்லாம்
சம்சாரத்தை விட்டோமென மொட்டையடித்துக் கொண்டால்
அறிஞன் விரக்தனாக முடியுமா? இதனால்
அஞ்ஞானம் விட்டு அறிவைக் காட்டுபவன்
நிக்களங்க சென்னசோமேஸ்வரன் தானே? “

நிஜமுக்தி இராமேஸ்வரா

“மாற்றத்தால் உடல் தேய்ந்து தேய்ந்து
நொந்து வெந்தவர் அனைவரும் வெறுமையாகி
இளமை நாளும் தேய்ந்து தேய்ந்து
கதி கெட்டோர் அனைவரும் வெறுமையாகி
தலைமுடியை மழித்து வெறுமையான பின்னர்
பொன் பெண் மண்ணுக்கு வசமாகாமலிருப்பதே வாழ்க்கை
புலன்களின் தாக்குதலுக்குட்படாமல் இருப்பதே வாழ்க்கை
கதிகெட்டு சக்தியிழந்து வீணே
வெறுமையான வாழ்க்கையது உலகில்
சங்கடமன்றோ சொல்வாய் நிஜமுக்தி இராமேஸ்வரனே“

நிர்தனப்பிரிய இராமேஸ்வரா 

“பிச்சைக்காரனெனும் நிலைக்கு என்னை நடத்திடுவாய்
சென்றங்கு பிச்சை பிச்சையெனில்
யாரும் தராதபடி செய்திடுவாய்
தவறியே கொடுத்தாலும்
கொடுக்கின்ற பாத்திரம் விழுந்து உடையுமாறு
செய்திடுவாய் நிர்தனப்பிரிய இராமேஸ்வரனே “

மர்க்கடேஸ்வரா

“இகபரத்தினுள்ளே பொன் பெண் மண் காற்று
இடையூறுகள் என்பன அடிப்படையாம்
காமத்தை விட்டொழித்தால் துறவியாம்
காணாய் மர்க்கடேஸ்வரனே “

மகாலிங்க வீரராமேஸ்வரா

“சூன்யத்துள் அடங்கின மின்னல் போலானதென்
குருவின் நல்லுரைகள்
மின்னலின் ஒளிக்கீற்று போலானதென்
குருவின் நல்லுரைகள்
படிகக் குடத்திலிட்ட சுடர் போலானதென்
குருவின் நல்லுரைகள்
மகாலிங்க வீரராமேஸ்வரன் போலானதே
குருவின் நல்லுரைகள் எனக்கு“

இந்தத் தலைப்பின் கீழ் 129 சரணர்கள் 30 பெண் வசனக்காரர்கள், 13 பெயர் தெரியாத சரணர்கள் என்ற நிலையில் மொத்தம் 172 எழுபத்திரண்டு வசனக்கார்களின் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

 – முற்றும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.