Blog

  • தீபவிளக்கு எரிகிறது!

    -தேனுகாமணி

    விடியல் விடிகிறது
    நல்விடியல் விடிகிறது
    அனுதினம் மனம்கொண்ட
    தீமைகள் மடிகிறது
    இயலாமைகள் முடிகிறது!

    அதிகாலை நீராடுவோம்
    மனத்தீமைகளுக்குத் தீயூட்டுவோம்
    எண்ணெயில் இலட்சுமி தேவி  dewali
    அரப்பில் சரஸ்வதி தேவி
    தண்ணீரில் கங்கா தேவி
    குங்குமத்தில் கெளரி தேவி
    சந்தனத்தில் பூமா தேவி
    ஆம் இவர்கள்
    வாசம் புரிகிறார்கள்…
    மனத்தின்
    பொய்வேசம் களைகிறார்கள்!

    தீப ஒளித்திருநாள்
    நரகன் உயிர் மடிந்த நாள்
    ராமன் வனவாசம் முடித்த நாள்
    மகாவீரர் நிர்வாணம் அடைந்த  நாள்
    பொற்கோயில் பணி தொடக்க நாள்
    ஆம் இப்படித்தான்…
    தீப ஒளித்திருநாளை
    பல நாடுகள்
    பல இனங்கள்
    கொண்டாட வேறு வேறு
    காரணங்கள்
    கொண்டாட்டங்களில் தான்
    மனம் அடைகிறது
    உண்மை நெறியின்
    பூரணங்கள்!

    வாருங்கள்…
    புத்தாடை அணிந்து
    புதிதாகப் பிறப்போம்
    இனிப்புகள் பகிர்ந்து
    இனிதாக இருப்போம்
    இயன்றதைச் செய்து
    இவ்வுலகில்
    மானுடம் காப்போம்!

    விடியல் விடிகிறது
    நல்விடியல் விடிகிறது
    தீபவிளக்கு எரிகிறது
    தீமைகள் மடிகிறது!

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171017 -New Forever -wm

    ”படிகாரப் பச்சை, பவளச்செவ் வாயும்,
    (எழுப்பும்)கடிகா ரமுரளியின் கீதம், -அடிசேர்ந்து,
    கன்றுண்ணும் கோவிந்தன், என்றும் புதியவர்(NEW FOR EVER)
    நன்றவர் தாளை நினை’’கிரேசி மோகன்….

    முரளி -வேணுகானம்…..

    Share
  • சிவபிரதோஷம் “வெண்பனித் தீயினன்”

    மீ.விசுவநாதன்

    ஸ்ரீ மகாசன்னிதானம்

     “அன்பே சிவம் “

    இறைவனுண்டா ஏமாற்றா? – என்
    ஏக்கத்தைத் தாய்க்குத் தெரிவித்தேன்
    நிறைமனத்தில் அன்புவைநீ – அந்த
    நிமிடமுதல் இறையே நீயென்றாள் .

    தெய்வமுண்டா கிடையாதா ? – குருவே
    தெளிவுதாரீர் எனக்கே எனக்கேட்டேன்
    ஐயமின்றி உண்டென்றார் – அதை
    அனுபவத்தில் கண்டே உணரென்றார்.

    கடவுளுண்டா கற்பனையா ? – இரு
    கண்மூடிக் கேட்டேன் எனக்குள்ளே
    அடமனிதா உன்னைநம்பி – நீ
    வைக்கின்ற அடியே கடவுள்தான்.

    (இன்று 17.10.2017 பிரதோஷம்)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    171015 - Goverdhan Uddhaarañ -lr

    “காதலுக்குக் கண்ணில்லை, கண்ணனின் பக்திக்கண்
    காதலி கோபியரைக் கண்டுகொள்ள:-ஆதலினால்
    காதலிப்பீர் கண்மூடி காற்றிசைக்கும் கீதத்தை;
    யாதுமான யாதவனே யாப்பு”….!

    யாப்பு-Grammar….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன
    தான தானன தத்தன தத்தன -தனதான
    மயிலை சீனிவாச பெருமாள்
    ———————–

    171014 - Srinivāsa -lr
    171014 – Srinivāsa -lr

    “ஆல வாயினில் செத்துணர் வுற்றவர் நானை யாரென கற்றுடல் விட்டவர்
    சோணை மாமலை உற்றது ரைத்திடு -ரமணேச
    ஞான மாமுனி செப்பிய சத்தினில் நானும் வாழயில் பற்றுவி ருப்பினை
    கீதை நாயக விட்டுவி ரக்தியில் -விஜயோனாய்

    தோளி லாளிடும் விற்கணை விட்டது போல யாவையும் விட்டுயர் வெற்றியை
    வாழும் நாளிலே வெற்றிலை வட்டிலில் -எளிதாக
    ராஜ யோகமும் ,பக்தியும் ,கர்மமும் ஞான மார்க்கமும் வைத்தருள் இக்கணம்
    ராசா லீலையில் முக்திய ளித்திடும் -குருநாதா

    கால நேமிவ லக்கரம் விட்டிட ஆழி ஊதலி டக்கரம் பற்றிட
    தோளி லாடிட விற்சுமை மற்றிரு -கதைவாளை
    ஆளு மாதவ விக்ரம சொப்புரு வான வாமன நச்சர வத்துயில்
    ஆதி நாரண உச்சரி பத்திரு -திருநாமம்

    நாளு மோதிட நற்கதி பெற்றுயர் வான வாசலில் விட்டுவின் நித்திய
    சூரி யாகுவர் இப்பிற விப்பிணி -குணமாகும்
    கோல மாமயி லைப்புகழ் கற்பக பாலி ஈசனின் பக்கஅ கத்துறை
    சீனு வாசம கத்துவ மைத்துன -பெருமாளே”….!
    ————————————————————————————————

    பெருமாள் திருப் புகழ்….

    தான தானன தனன தனத்த
    தான தானன தனன தனத்த
    தான தானன தனன தனத்த -தனதான

    மயிலை சீனிவாச பெருமாள்
    ———————————–

    “மாலை நாடகம் மதியம் உறக்கம்
    காலை ராவினில் கவிதை வழக்கம்
    நாளும் வாழ்ந்திடும் நிறைவை எனக்கு -அருள்வாயே
    கோல வாகன மயிலில் குறத்தி
    தேவ யானையும் அருகில் இருக்க
    வான வீதியில் விரையும் குகற்கு -முறைமாம

    சேலை மோகமும் சினமும் செருக்கும்
    ஆசை ஆர்வமும் அறிவு மயக்கம்
    மோச மாகுமுன் முளையில் எடுக்க -வருவாயே
    ஊறும் ஆணவம் உதியும் இடத்தில்
    நானை யாரென நினைவு படுத்தி
    பேசி டாதுயர் பிரம நினைப்பில் -ரமணேசர்

    கோலம் கோவணம் கடமை இருப்பு
    பாறை யாசனம் பதவி ப்ரபத்தி
    சோணை ஈசனின் சரண முனைப்பு -எனவாழும்
    வாழ்வு நானுற வழியை வகுத்து
    கோழை யானவில் விஜயர் தமக்கு
    கீதை யாலுரம் அளியும் அச்சுத -தருவாயே

    காலில் பூமகள் களைய சொடுக்கை
    பாலி னாழியில் படவி டமெத்தை
    சாயும் யோகசு கமதை விடுத்து -எழுவாயே
    ஏறு வாகனம் வினதை பிறப்பில்
    சேரு மோகனென் அகம தில்நிற்க
    சீனு வாசம ழைமுகில் நிறத்து -பெருமாளே”….கிரேசி மோகன்….!

    Share
  • படக்கவிதைப் போட்டி 130-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    bangles

    தளிர்க்கர மழலைக்குத் தகவோடு வளையலிடும் பெரியவரையும், அணிஅணியாய்க் கண்ணைப் பறிக்கும் வளையல்களையும் கச்சிதமாய்ப் புகைப்படமெடுத்து வந்திருக்கும் திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணனுக்கும், கவினான இந்தக் காட்சியைக் கவிதைப் போட்டிக்குத் தேர்தெடுத்துத் தந்திருக்கும் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றிகள்!

    பெண்களின் எழிலைப் பேரெழிலாக மாற்றும் மந்திரவித்தை கற்றவை  வளையல்கள். விலையுயர்ந்த பொன் வளையல்களைவிட விலைமலிவான கண்ணாடி வளையல்களும் இரப்பர் வளையல்களும் கூடுதல் பொலிவைக் கரங்களுக்குத் தரவல்லவை.

    பார்த்தவுடனேயே மனத்தில் வண்ண வண்ணக் கற்பனைகளைச் சிறகடித்துப் பறக்கவைக்கும் சிறப்பான புகைப்படம்! எனவே கவிஞர்கள் தம் கைவரிசையைக் காட்டத் தயாராகியிருப்பார்கள் என எண்ணுகிறேன். 

    இதோ போட்டியை ஆரம்பித்துவிடுவோம்!

    *****

    ”ஆடம்பர விளக்கொளியில் மின்னும் பெருங்கடைகளில் வாங்கியணியும் வளையல்களைவிடக் கீற்றுவேய்ந்த எளிய திருவிழாக் கடைகளில் கிடைக்கும் வளையல்களின் அழகே அழகு!” என உளம் பூரிக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    எளிமை அழகு…

    அடுக்கு மாடிக் கட்டிடத்தில்
    அழகு விளக்குகள் ஒளியினிலே
    எடுத்துக் கொடுக்கும் காப்புகளின்
    எண்ணிலா வகையிலே இன்பமில்லை,
    தடுத்து வைத்தே கீத்துகட்டிய
    திருவிழா வளையல் கடையினிலே
    எடுத்துப் போட்டே அழகுபார்க்கும்
    எளிய வளையலுக் கீடிலையே…!

    ***** 

    வளையோசையின் சிறப்பை மெட்டியோசையோடு சேர்த்துக்கட்டித் தன் பாட்டில் ஒலிக்கவிட்டிருக்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

    நன்மனத்துடன் வளையல்களை அணிவிக்கக் கையை நீட்டச்சொன்னார்
    கைகளின் அளவிற்குக்கேற்ப வளையலைப் பெண்ணிற்கு அணிவித்தார்
    என்றுமே வண்ணக் கண்ணாடி வளையல் அணிய விருப்பமுண்டு
    இதில் ஏழை, பணக்காரன் என்ற மாறுபாடு இல்லாமல் இருப்பதுண்டு!
    வண்ண வளையல்களைக் கன்னிப்பெண்களுக்கு அதிக விருப்பமுண்டு
    அணிந்தவுடன் அவள் முகத்தில் புன்னகை மலர்வதுண்டு
    அந்த வளையோசையுடன் பிறர்க்குக் காண்பிப்பதில் பெருமையுண்டு
    வளையோசையும், மெட்டிஓசையுமே ஆடவன் மனதை அசைப்பதுண்டு!
    ஆபரணங்களிலே வளையலே பெண்களை அதிகம் மகிழ்விக்கும்
    வளையோசையும், மெட்டி ஓசையுமே ஈர்க்கும் தன்மை அதிகம்
    பெண் வளையல்களை அணிவதன் காரணம்தான் ஏனோ?
    கணவன் தன்னை வளைய வளைய வருவதற்குத்தானோ?
    தாய்மையின் சிறப்பை வளைகாப்பின் மூலம் சிறப்படையச்செய்யுதே
    வண்ண வளையல்கள் அணிந்த கருவுற்ற தாயும் மகிழ்ச்சி அடைந்ததே
    தானும் அணிந்து, பிறர்க்கும் அவை வெகுமதியாய்க் கொடுக்கப்படுதே
    வளையலின் ஓசை அவள் குழந்தைக்கும், கணவனுக்கும் சொந்தமானதே!

     *****

    ”பெண்மணிகள் அணியும் அழகான அணிகலன் இந்த வளையல்; வாழ்ந்தால் இணையாகவே வாழவேண்டும் எனும் இணையற்ற பாடம் சொல்லும் அணியிது! மெட்டியும் கொலுசும் பயன்பாடின்றிப் பெட்டிக்குள் போனதுபோல் வளையலும் கைநழுவிப்போகும் காலம் வந்திடுமோ?” என்று கவலுகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    வளையலோ வளையல்..!
    நலமுடன் வாழமஞ்சள் குங்கும் வரிசையில்..

    நற்பொருளாய் நடுவே வளையலும் உண்டாம்.!

    மணிக்கட்டின் மேலே அழகு சேர்க்கும்..பெண்
    மணிகள் மட்டுமே அணியும் அணிகலனாம்.!

    வட்டமாய் அமைந்ததால் அது வளையலாகும்
    எட்டவிரட்டும் சக்தியால் எதிர்வினை யகலும்.!

    காதல் வலையில் மயங்கும் காளையர்கள்தன்
    காதலிக்குப் பரிசாக இதைக் கொடுப்பதுண்டு.!

    கலைநயம் கொண்ட தங்கம்வெள்ளி முத்தென
    வளையலும் வரலாறு பல சொல்லுமணிகலன்.!

    வளைந்து வருகின்ற வயிற்றின் ரகசியத்தை
    வளையல்கள் சேர்ந்து வருமுன் அறிவிக்கும்.!

    வகை வகையாய்ச் செய்தபல வண்ணங்களில்
    வளைகாப்பு எனும்பெயரில் ஓரிடத்தில் கூடும்.!

    வளையலின் உரசலில் எழும் மெல்லிசையை
    வயிற்றுளே இருக்கும் குழந்தை கேட்டுமகிழும்.!

    வாழ்ந்தால் ஜோடியாகத்தான் வாழ முடியுமென
    வாழ்வியல் பாடம் சொல்லும் அற்புதணிகலன்.!

    பத்திரமாக அணியும் வளையலுக்குக் புகழான
    உத்திரப்பிரதேச மாநிலத்தை உலகம் அறியும்.!

    அன்னமிடும் கையில் வளையலிருக்க வேணும்
    சொன்னது சாஸ்திரம்தான் யார் கேட்கிறார்கள்.?

    மெட்டியும் கொலுசும் காணோம்..வளையலும்
    எட்டியே தூரமாகக் கைநழுவிப் போய்விடுமோ.!

    *****

    ஆகா…எத்தனை வண்ண வண்ண வளையல்கள்! நிலவைப் பழிக்கின்ற வெள்ளை வளையல்கள்! மாலைச்சூரியன்போல் மஞ்சள் வளையல்கள்! என வியக்கும் திரு. பழ.செல்வமாணிக்கம், வளையல்கள் பேசும் வன்னமொழி (வன்னம் – அழகு) கேளுங்கள்! வளத்தோடு வாழுங்கள்! என்று வாழ்த்துகிறார்.

    வண்ண வண்ண வளையல்கள்:

    வளையல் வியாபாரி வந்து விட்டார் வாருங்கள்!
     வண்ண வண்ண வளையல்கள் இங்கே பாருங்கள்!
    சின்னக் கை பிடித்து வளையல் மாட்டுகின்ற அழகைப்
    பாருங்கள்!
    நிலவைப் பழிக்கின்ற வெள்ளை வளையல்கள்!
    கடலின் நிறம் கொண்ட ஊதா வளையல்கள்!
    கார் மேக நிறம் கொண்ட கறுப்பு வளையல்கள்!
    மாலைச் சூரியன் போல் மஞ்சள் வளையல்கள்!
    வானவில் நிறமுள்ள வண்ண வண்ண வளையல்கள்!
    பிள்ளை பிறந்தவுடன் கறுப்பு வளையல்கள்!
    பிள்ளளை கருவில் வளர்கையில் சீமந்த வளையல்கள்!
    ஆடிப் பூரத்தில் அம்மனுக்கும் வளையல்கள்!
    ஆதி முதல் அந்தம் வரை கூட வரும் வளையல்கள்!
    ஒரு முறை வளையலை அணிந்து பாருங்கள்!
    வளையல்கள் பேசுகின்ற அழகு மொழி கேளுங்கள்!
    வளை நிறை கை தரும் வளத்தோடு வாழுங்கள்!

    ***** 

    கிராமத்துத் திருவிழாவில், மக்கள் கூடிவாழும் ஒருவிழாவில், வண்ண வளையல்களை எண்ணம்போல் அணிந்துகொண்டு சுற்றிவரும் கிராமத்து மின்னலைப் பிடித்து நம்முன் நிறுத்துகிறார் திருமிகு மா. பத்ம பிரியா.

    கிராமத்து மின்னல் இவள்
    கிராமத்து திருவிழாவாம்
    கூடி வழும் ஒருவிழாவாம்
    பெரியவர் மகிழ்வுடனே
    சிறியவர் மகிழ்வு தான் சிந்தை மயக்குதடி
    பல்லாங்குழியாடி பாண்டி விளையாடி
    அல்லியிதழ் பறித்தாடி
    ஆலவிழுதுகளில் குதித்தாடி
    கூட்டாஞ்சோறு கதைபேசி
    குதூகலிக்கும் பிள்ளை மனம்
    பெண்ணவளின் கிள்ளைமொழி
    பேதமையைச் சுட்டுதடி

    கோயில் திருவிழாவில்
    கோதையவள் ஒய்யாரம்
    கோயில் சிலை ஊர்வலமாய்
    வீதியெல்லாம் சுற்றிவர
    கடை கடையாய் வலம் வரும்
    கன்னியவள் விழிகளிலே ஆனந்தம் பரவுமடி
    வண்ண வண்ண வளையல்களை
    வளைக்கரத்தில் அணிந்து கொண்டு
    விருந்தினர் கைப்பிடித்து
    விருந்திடுவாள் விந்தை மகள்
    பரிமாறும் அழகினிலே
    பந்தபாசம் மனம் நாடுமடி
    பூலோகம் சுற்றினாலும்
    பேரின்பம் கிட்டாது
    கண்டுகொண்டேன் கிராமத்தில்
    இயற்கையெனும் தாய்மடி.

    ***** 

    வண்ண வளையல்கள் கிறங்கவைக்கும் கவிதைகளை நமக்குப் பரிசாய்ப் பெற்றுத் தந்துள்ளன. கவிஞர்களுக்கு என் பாராட்டும் நன்றியும்! 

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது அடுத்து…

    வண்ண வண்ண வளையல்களை
    வகைவகையாய் அடுக்கி வைத்து
    பெண்ணவளின் கைப்பிடித்து யாவாரி
    அண்ண அண்ண நோகுதென்று
    அவள் இழுத்தும் போகுதென்று
    இன்னுமின்னும் போடுகிறான் யாவாரி

    அறியாப் பெண் அவள் கேட்க அதையே சாக்காய் வைத்து
    அடுக்கடுக்காய் போடுகையில் யாவாரி – அட
    புரியாமல் போடுறியே போதுமினி யென்று தந்தை
    பொக்கட்டைப் பார்த்துரைப்பான் தடுமாறி –

    ‘காப்புக் காப்புக்காப்பாய் எடுத்து அவள்
    கையினிலே மாட்டுகிறாய்
    சேப்புக் காலியாகுதடா தம்பி – ஊர்போய்
    சேர்ந்திடவும் காசுவேணும் தம்பி
    ஆப்பிழுத்த குரங்கானேன்
    அவளையிங்கு கூட்டிவந்து
    கூப்புகிறேன் கையுனக்குத் தம்பி – சேரும்
    கோடிபுண்ணியம் நிறுத்து தம்பி.‘

    சிறுவியாபாரிகளுக்குப் பெரிய வருமானம் எப்போதுமில்லை. ஆகவே, திருவிழாக் காலங்களில் தம் கடைகளுக்கு வருவோரிடம் தம் சரக்குகள் அனைத்தையும் விற்றுத் தீர்த்துவிடவேண்டும் எனும் பேரார்வம் அவர்களிடம் இருப்பது இயல்பே. அப்படித்தான் இந்த வியாபாரியும் தன் சேப்பு (pocket) காலியாகும்வரை சிறுமிக்குக் காப்புப் போடுகிறானே என்றஞ்சி, ”வளையல் போட்டது போதுமையா! நான் ஊர்போய்ச் சேரக் காசு வேணுமையா!” என்று கெஞ்சிநிற்கும் தந்தையைத் தன் கவிதையில் நகைச்சுவையாய்ப் படம்பிடித்துக் காட்டியிருக்கும் திரு. எஸ். கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவித்துப் பாராட்டுகிறேன்.

     

     

     

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (244)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக யது கிருஷ்ணா அவர்களை அறிவிக்கிறோம்.

    இவ்வாரம் கேரளாவில் முதல்முதலாக பத்தனம்திட்டா திருவில்லா மகாதேவ ஸ்வாமி ஆலய கருவறையில் நுழைந்து பூசை செய்த முதல் பட்டியல் சாதி குருக்கள் எனும் சிறப்பைப் பெற்றுள்ளவர் யது கிருஷ்ணா. அதிலும் கேரளாவின் மிகச்சக்தி வாய்ந்த ஆன்மிக அமைப்பான திருவாங்கூர் தேவசம் போர்டில் இணைந்துள்ளார் யது கிருஷ்ணா.

    யது கிருஷ்ணாவின் கதை நம் மனதை உருக்கும் சக்தி கொண்டது. அவர் பிறந்தது பட்டியல் சாதியான புலையர் எனும் சாதியில். அவரது குடும்பத்தில் ஆறாவது பிள்ளை அவர். அவரது தந்தை ரவியும் தாய் லீலாவும் தினக்கூலிகள். சிறுவயது முதல் ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர் யது கிருஷ்ணா. தினமும் வீட்டுக்கு அருகே உள்ள பத்திரகாளி கோயிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். தன் தாய் மிகுந்த பக்தி உள்ளவர் என்றும் பூஜை சமயம் பூக்களை மாலையாகக் கட்டி அவர் தர அதைத் தான் எடுத்துச்சென்று காளியை வணங்கியதாகவும், தன் தாயே தன் ஆன்மிக குரு எனவும் கூறுகிறார் யதுகிருஷ்ணா

    1

    10ஆம் வகுப்பு முடித்தபின் சமஸ்கிருதம் கற்றார் யதுகிருஷ்ணா. வித்யாபீடம் எனும் அமைப்பில் சேர்ந்து தந்திரி தந்திரம் எனப்படும் பூஜை வழிமுறைகளையும் கற்றுத்தேர்ந்தார். அப்போதெல்லாம் அவருக்கு தான் பூசாரி ஆவோம் என்றே தெரிந்திருக்கவில்லை. ஆன்மிக நம்பிக்கையாலேயே இவற்றை கற்றுத்தேர்ந்தார். முழுமையாகக் கற்று முடிப்பதற்கு 20 ஆண்டுகள் ஆகலாம் என்ற நிலையில், இவர் தந்திரி தந்திரா பூஜை வழிமுறைகளை 10 ஆண்டுகளில் கற்றுத்தேர்ந்தார்.

    அதன்பின் பரவூர் பத்திரகாளி கோயிலில் குருக்களாக பணியில் அமர்ந்தார். அங்கே பணியாற்றியபடி சமஸ்கிருதம் மற்றும் பூஜைமுறைகளைக் கற்றுக்கொண்டு கல்லூரிக்கும் சென்று வந்தார்.

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் சட்டம் நிறைவேறியபின் முதல் பட்டியல் சாதி பூசாரியாக தேர்வாகி திருவாங்கூர் தேவசம் போர்டிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார் யதுகிருஷ்ணா

    தன் சாதியால் அவர் கோயிலில் அல்லது வித்யாபீடத்தில் அவமதிக்கப்பட்டதுண்டா என கேட்கப்பட்டபோது “ஒரு இடத்திலும் அவமதிக்கப்பட்டதில்லை. நான் சம்ஸ்கிருதம் படிக்கத் தங்கிய வீட்டில் என்னுடன் தங்கிய அறைத்தோழர் ஒரு கவுட சரஸ்வதி பார்ப்பனர். என் சாதி மனித சாதி என்றே அவர் கருதி என்னுடன் அன்புடன் பழகினார். அவர் மட்டுமல்ல குருதேவ வித்யாபீடத்திலும் பார்ப்பனர், பிறசாதியினர் என்ற பேதமே இருந்ததில்லை.

    எனக்கு பத்தனம்திட்டா ஆலயத்தில் வேலை கிடைத்ததும் நான் பணியாற்றிய பரவூர் பத்திரகாளி அம்மன் கோயில் நிர்வாகிகளும், பக்தர்களும் என்னைப் பிரிவதை நினைத்து வருந்தினாலும், பதவி உயர்வு கிடைத்து செல்வதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பாராட்டி வாழ்த்தினார்கள். மற்றவர்கள் பூசாரி வேலையை ஒரு தொழிலாகக் கருதலாம். எனக்கு இது ஒரு ஆன்மிக சேவை. எனக்கு விடுமுறை எடுக்காமல் சனி, ஞாயிறு அன்றுகூட பூசை செய்வதே விருப்பமானது” என்கிறார்

    குறைவற்ற பக்தி, நிறைந்த ஆன்மிகம் ஆகியவற்றைக் கொண்ட யதுகிருஷ்ணா குருக்கள் அவர்களை வாழ்த்தி, அவரை வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மிகுந்த பெருமை அடைகிறது.

    இத்தனை உயர்ந்த பக்தி கொண்ட உங்களுக்கு பூசை செய்ய வாய்ப்பளித்ததால் பத்தனம்திட்டா மகாதேவஸ்வாமி ஆலயமே பெருமை அடைவதாகத் தான் நான் கருதுகிறேன்.

    “தாயினும் நல்ல தலைவர் என்று அடியார்

    தம்அடி போற்றிசைப் பார்கள்

    வாயினும் மனத்தும் மருவிநின்று அகலா

    மாண்பினர் காண்பல வேடர்” (தேவாரம்)

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • படக்கவிதைப் போட்டி (131)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    22385220_1449644231756438_127407991_n (1)

    முத்துகுமார் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (21.10.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • நிசப்த வெளியில்..!

    பெருவை பார்த்தசாரதி 

    man-writing

     

     

     

     

     

     

     

     

    எத்தனையோ எண்ணங்கள் எழுகிறது ஏட்டிலெழுத..

    ……….ஏனைய கவிஞர்பாவலரின் எழுச்சிமிகு சிந்தனையால்.!

    புத்தகத்தைப் புரட்டிப்பார்த்து வித்தகனாய் வலம்வந்து..

    ……….பூவுலகில் வாழ்வோருக்கு புதியசெய்தி சொல்லவேணும்.!

    சொத்தாவதெலாம் எழுதிச்சேர்க்கும் வரிகளொன்றே..நாம்..

    ……….செத்தபிறகும் நிலைத்திருக்கும் எழுதிய எழுத்தேயாம்.!

    முத்தானக் கவிதைவரிகள் மூளையிலே முளைப்பதற்கு..

    ……….முனையும் எண்ணமும் நிசப்தமுமங்கே நிலவவேண்டும்.!

     

    காலத்தால் அழியாத காப்பியத்தைக் கவிச்சக்கரவர்த்தி..

    ……….கம்பனும் வடிவமைத்தான் கடவுளிடம் பெற்றருளாலே.!

    ஞாலத்தில் நிலைபெற்ற எழுச்சிதரும் கவிதையையே..

    ……….மணக்குள விநாயகனின்முன் புனைந்தான் மஹாகவியும்.!

    காலத்துக்கும் பொருந்துகின்ற கவிதையைக் கொடுத்தான்..

    ……….கவியரசன் கண்ணதாசன் தன்கையில் கோப்பை ஏந்தி.!

    நீலவானும் விண்வெளியும் கவியெழுதக் கைகொடுக்க..

    ……….நிசப்த வெளியிலமர்ந்து இயற்கையை நானெழுதுவேன்.!

     

    கண்ணில் தோன்றுமியற்கைக் காட்சிகளுக் கிடையில்..

    ……….கதிரவன் தோன்றுமற்புத நேரம்தெய்வ நினைப்பூறும்.!

    மண்ணிலோடும் சிற்றோடை மெல்லிசை எழுப்பும்போது..

    ……….மகரந்தக் கருத்தெலாம் மலர்போன்ற கவிதையிலுதிக்கும்.!

    விண்ணிலுலவும் விண்மீன்களைக் காண மண்ணின்மீது..

    ……….விரியும் பூஞ்சோலைக் களியூட்டுமதில் கவியூற்றெழும்.!

    பண்ணிலெழும் மகுடிச்சப்தத்திற் கெழும் பாம்புபோல..

    ……….எண்ணிலாச் சிந்தனைகளெழும் நிசப்தச் சூழ்நிலையில்.!

     

    அழகான சூழலில் அடர்த்தியான மரங்களுக்கிடையில்..

    ……….அடுத்திருக்கும் அருவியில் எழுமெல்லிசைச் சப்தமும்.!

    பழுத்திருக்கும் கனிகளைப் பறவைகளும் மந்திகளும்..

    ……….பகுத்துண்ணும் காட்சிகளால் பார்ப்பவர் மனம்துள்ளும்.!

    நிழல்தருமரமும் புல்வெளியும் மழைநோக்கி நிமிரும்..

    ……….நெடுநேரமங்கே அமர்ந்திருக்க நெஞ்சமும் இசையும்.!

    சூழலோடுசுற்றமும் சுகமானநிசப்தமும் சேரும் போது..

    ……….சாமரங்கள்வீசும் தென்றலால் பாவெழுதும் திறன்வரும்.!

     

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::14-10-17

    நன்றி படம்:: கூகிள் இமேஜ்

     

     

    Share
  • வளையல்

    ரா.பார்த்தசாரதி

     

     

    நன்மனத்துடன்  வளையல்களை அணிவிக்க கையை நீட்டச்சொன்னார்

    கைகளின்  அளவிற்கேற்ப வளையலை பெண்ணிற்கு அணிவித்தார்

    என்றுமே வண்ண  கண்ணாடி வளையல் அணிய விருப்பமுண்டு

    இதில் ஏழை, பணக்காரன் என்ற மாறுபாடு இல்லாமல் இருப்பதுண்டு!

     

    வண்ண வளையல் அணிய  கன்னிப்பெண்களுக்கு அதிக விருப்பமுண்டு

    அணிந்தவுடன் அவள் முகத்தில் புன்னகை மலர்வதுண்டு

    அந்த  வலையோசையுடன் பிறர்க்கு காண்பிப்பதில் பெருமையுண்டு

    வலையோசையும், மெட்டிஒசையுமே ஆடவன் மனதை அசைப்பதுண்டு!

     

    ஆபரணங்களிலே வளையலே பெண்களை அதிகம்  மகிழ்விக்கும்

    வலையோசையும், மெட்டி ஓசையுமே, ஈர்க்கும் தன்மை  அதிகம்

    பெண் வளையல்களை  அணிவதன் காரணம்தான்   ஏனோ ?

    கணவன் தன்னை வளைய,வளைய வருவதற்குத்தானோ ?

     

    தாய்மையின் சிறப்பை, வளைகாப்பின் மூலம் சிறப்படையச்செய்யுதே

    வண்ண வளையல்கள் அணிந்த கருவுற்ற  தாயும் மகிழிச்சி அடைந்ததே

    தானும் அணிந்து, பிறர்க்கும் அதனை வெகுமதியாய் கொடுக்கப்படுதே

    வளையலின் ஓசை அவள் குழந்தைக்கும், கணவனுக்கும் சொந்தமானதே !

     

     

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (77)

    நிர்மலா ராகவன்

    பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான்!

    நலம்

    தீபாவளிக்குச் சில நாட்களே இருந்தன. பல வருடங்களுக்குமுன், என்னுடன் வேலை பார்த்த ஒரு பெண்மணி கேட்டாள், “பண்டிகைக்கான ஆயத்தங்களை ஆரம்பித்துவிட்டாயா?”

    “என் மாமியார் வீட்டில் அழைத்திருக்கிறார்கள். அதனால் நான் ஒன்றும் செய்யப்போவதில்லை!” என்றேன்.

    “அப்படியானால், குழந்தைகளுக்கு பண்டிகை வரும் மகிழ்ச்சியே இருக்காதே!”

    பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான். பெரியவர்களுக்கு வேலை அதிகம் என்றாலும், பழைய கதைகளைப் பேசிக்கொண்டு, ஒன்றாக இணைந்து வேலை செய்வதில் ஒரு தனி மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. குழந்தைகளுக்கும் (ரவை உருண்டை பிடிக்கச் செய்வதுபோல்) சிறு சிறு வேலைகளைப் பகிர்ந்து கொடுப்பதன்மூலம் அவர்களது பொறுப்புணர்ச்சியை அதிகரிக்கச் செய்ய இதுதான் தக்க சமயம்.

    மலேசியாவில் தீபாவளிக்குப் பொது விடுமுறை. (தைப்பூசத்திற்கு சில மாநிலங்களில் விடுமுறை உண்டு). அதனால் எல்லா மக்களுக்குமே குதூகலம்.

    பேரங்காடிகளில் இச்சமயத்தில்தான் வருடத்திலேயே மிக மலிவாக துணிமணிகள கிடைக்கும். அதனால், இந்துக்கள் மட்டுமின்றி, பலரும் கடைகளில் மொய்த்துக்கொண்டிருப்பதைக் காணலாம்.

    `தீபாவளி சிறப்பு விற்பனை!’ என்று நடைபாதையை அடைத்துக் கடைகள் போட்டிருப்பார்கள். எங்கும் தமிழ் ஒலிக்கும். சூடிதார், வளையல், வீட்டுக்கு அலங்காரமாக பிளாஸ்டிக் தோரணங்கள் என்று தடபுடல் படும்.

    “`தோரணம் ஏன் கட்டுகிறீர்கள்?’ என்று பலரைக் கேட்டுவிட்டேன். சம்பிரதாயம் என்கிறார்கள்,” என்று எங்கள் இல்லத்திற்கு ஒரு சீன விருந்தினர் குறைப்பட்டுக்கொண்டார். “விஞ்ஞான ரீதியாக ஏதாவது காரணம் இருக்குமே!”

    நல்ல வேளையாக, நான் அவ்வருடம்தான் ஏதோ ஆன்மிக பத்திரிகையில் அதைப்பற்றிப் படித்திருந்தேன். விருந்தினர் பலர் நம் வீட்டுக்கு வருகை புரியும்போது அவர்கள் விடும் மூச்சுக்காற்றிலுள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக்கொண்டு விடுகிறது மாவிலை என்று விளக்கி, என் `அறிவுத் திறமையை’ அவரிடம் காட்டிக்கொண்டேன்.

    கோலாலம்பூரிலுள்ள ஒரு பாலர் பள்ளியில் குத்துவிளக்கு, தோரணம், பாவாடை, புடவை என்று எல்லாவற்றையும் வைத்துச் சொல்லிக் கொடுக்கிறார்கள். தீபாவளியை ஒட்டி அவர்கள் நடத்தும் விழாவில் — எல்லாக் குழந்தைகளும் (பலர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்), அவர்களுடைய பெற்றோர்களும் — வித்தியாசமின்றி, இந்திய ஆடைகள் அணிகிறார்கள். அங்கு வழங்கப்படும் தோசை, சப்பாத்தி வகைகளை சட்னி, சாம்பாருடன் சாப்பிடுகிறார்கள். பிரபலமான தமிழ், இந்தி படப் பாடல்கள் ஒலிக்கும். ஓர் ஆசிரியை, தெரியாத்தனமாக `கொலவெறி’ பாட்டைப் போட்டுவிட்டு, அவசரமாக நிறுத்தினாள்!

    சீன ஆசிரியை குழந்தைகளுக்கு பாலிவுட் படங்களில் வருவதுபோல் நடனம் ஆடச் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு கற்பனை வற்றிவிட்டபோது, நான் என் பங்குக்கு டப்பாங்குத்து ஆடச் சொல்லிக்கொடுத்தேன்!

    அரசியல் பிரமுகர்கள் அவரவர் மதப் பண்டிகைகளை ஒட்டி OPEN HOUSE என்று கொண்டாடுவார்கள். அரண்மனையிலோ, ஸ்டேடியத்திலோ அல்லது ஒருவரது வீட்டிலோ நடைபெறும் இந்த `திறந்த வீட்டிற்குள்’ நுழைய மைல் கணக்கில் வரிசை பிடித்து நிற்பார்கள் பொதுமக்கள்.

    மலேசிய கின்னஸ் ரெகார்டில் “திறந்த வெளியில் நடைபெறும் மிகப் பெரிய சந்தை” என்று பெயர் வாங்கிய சந்தைக்குப் போயிருந்தேன். கோலாலம்பூர் புக்கிட் ஜலில் (BUKIT JALIL) என்ற இடத்திலிருக்கும் ஸ்டேடியத்தின் வெளிப்புறத்தில் கார் நிறுத்துமிடத்தில் தீபாவளிக்கு பத்து நாட்கள் முன்னதாக நடைபெறும். தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக நடைபெறுகிறது. இது ஒன்பதாம் ஆண்டு. இந்தியாவிலிருந்து இதற்காகவே வரும் வியாபாரிகள் கூட்டத்தை மனதில் கொண்டு, பொருட்களை பாதி விலையில் விற்பார்கள், `வாங்கே! வாங்கே!’ என்று கூவி அழைத்தபடி. அந்த வட இந்தியர்களுக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்தவர் ஆரவாரமான அந்த வரவேற்பைச் சரியாகச் சொல்லிக் கொடுத்திருக்கலாம். ஆனால் அதுவும் வேடிக்கையாகத்தான் இருந்தது.

    பெரும்பாலும், பெண்களுக்கான பொருட்கள்தாம். தெரியாத்தனமாக, மனைவிகளுடனோ, காதலியோடோ வரும் ஆண்களின் முழி பிதுங்குவது ரசிக்கும்படியாக இருந்தது.

    `எல்லாக் கடைளையும் சுற்றிப் பார்க்கப்போகிறாயா!” என்று ஆயாசத்துடன் கேட்கும் காதலன், `உனக்குப் பார்ப்பதை எல்லாம் வாங்கிவிட வேண்டும்!’ என்று பலர் கேட்க கடிந்துகொள்ளும் கணவனாக சில வருடங்களில் மாறிவிடுகிறான். அனேகமாக, எல்லா பெரிய கடைகளிலும் யாராவது தமிழர் இப்படிக் கத்திக்கொண்டிருப்பார். எவரும் அதிர்ந்து, திரும்பிப் பார்ப்பதெல்லாம் கிடையாது. பழகிவிட்டது.

    `மகிழ்ச்சியாகச் சுற்றிப் பார்க்கும்போது எதற்கு இப்படி ஒரு அவதி!’ என்று தெளிந்து, பல இளம்பெண்கள் ஒன்றுசேர்ந்து வருகிறார்கள். சற்று வயதானவர்களை அவர்களுடைய மகள் அழைத்து வருகிறாள். சாமான்களைத் தூக்கிச் செல்ல வசதியாக பதின்ம வயது மகனை அழைத்து வந்திருந்தார்கள் சில தாய்மார்கள். அந்தப் பையன்கள், `தெரியாமல் மாட்டிக்கொண்டோமே!’ என்று எந்த நிமிடமும் அழுதுவிடுவார்கள்போல் இருந்தார்கள்.

    சலிப்படைந்த ஆண்களின் மனப்போக்கு புரிந்து ஒரு பஞ்சாபி நான்கு இடங்களில் பால்கோவா போன்ற இனிப்புவகைகள் விற்கும் கடை போட்டிருந்தார். `மசாலா டீ!’ என்று அவர் கூவிக் கூவி விற்க, தம் ஆயாசத்தைச் சற்றே குறைத்துக்கொள்ள ஆண்கள் அக்கடைகளை மொய்த்திருந்தனர்.

    எல்லா தரப்பினரும் வாங்குவதற்கு ஏற்ப கண்ணாடிக் கற்கள், அல்லது ஜெய்ப்பூர் மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட கம்மல், நெக்லஸ் முதலியவை கண்களைப் பறித்தன. பெண்கள் திரளும் இடத்திற்கு பாத்திரங்கள், கைப்பை விற்கும் கடைகளும் இல்லாமலா!

    `என் மகள் மறுக்கு வாங்கி வரச்சொன்னாள்!’ என்ற மலாய்க்குரல் கேட்டது. (தேன்குழல் போன்ற பொரித்தவைகளின் பெயர் முறுக்கு). எவ்வளவு திருத்தினாலும், `முறுக்கு’ என்ற வார்த்தை அப்படித்தான் மருவிவிட்டது.

    பழங்காலத்துச் சித்திரங்கள், மரச்சாமான்கள் என்று ஓரிரு கடைகள். பல்லாயிரக்கணக்கான ரிங்கிட் விலையில், அவைகளை வேடிக்கைதான் பார்க்க முடியும் என்ற நிலை அனேகருக்கும்.

    ஒரு மூதாட்டியை சக்கர வண்டியில் ஒரு பெண்மணி அழைத்து வந்திருந்தாள். வாங்குகிறோமோ, இல்லையோ, ஜொலிக்கும் பொருட்களையும், அவைகளை பெருமகிழ்ச்சியுடன் வாங்கிப்போகிறவர்களையும் பார்த்தாலே அவர்களது மகிழ்ச்சி நம்மையும் தொத்திக்கொண்டு விடுகிறது.

    இதைப் படிப்பவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் என் மனங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் – 99

     க. பாலசுப்பிரமணியன்

    இருத்தலியல் நுண்ணறிவு (Existential Intelligence)

    education-1-1-1-1

    கற்றலிலும் கற்றல் சார்ந்த துறைகள் மற்றும் வல்லமைகளிலும் அதிகமாகப் பேசப்படாத நுண்ணறிவு இருத்தலியல் நுண்ணறிவு. பொதுவாக இந்த நுண்ணறிவு தத்துவங்கள் கொள்கைகள், வாழ்வு பற்றிய தேடல்கள் மற்றும் அக- புற  வாழ்வுகளின் தொடர்புகள் பற்றிய சிந்தனைகளைத் தூண்டும் மற்றும் கேள்விக்கணைகளால் துளைக்கும் அறிவுடன் சம்பந்தப்பட்டதாக உள்ளது. இந்த நுண்ணறிவு  பல்லாயிரம் ஆண்டுகள் தொட்டு மனித இன வளர்ச்சியுடனும் மனிதஅறிவின் தேடல்கள் மற்றும் மேம்பாட்டுடனும் இணைத்தே இருந்திருக்கின்றது. இந்தத் தேடல்கள் பல நேரங்களில் தத்துவ அறிவை வளர்ப்பதற்கு மட்டுமின்றி அதன் வாயிலாக அறிவியல் ஆர்வங்களையும் உண்மைகளைத் தேடியும் அலசியும் ஆராய்ந்தும் வெளிப்படுத்தியும் வருவதற்கு மிக்க துணையாக இருந்து வந்திருக்கின்றது.

    இந்த அறிவின் சின்னங்கள் உலக அளவில் பல நாடுகளின்  மதக் கோட்பாடுகள், இனப்பிரிவுகள், பழக்க வழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சமுதாயப் போக்குகள், நடைமுறைகள், மறைகள், இலக்கிய வளர்ச்சியின் திசைகள் ஆகியவற்றை நிர்ணயிப்பதற்கு காரணமாக இருந்துள்ளது. இந்த நுண்ணறிவின் தேடல்களிலும் வளர்ச்சியிலும் அந்த நாடுகளின்  சிந்தனைகளின் சின்னங்களின் போக்கும் திசைகளும் அவற்றின் அளவுகளும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன.

    இந்திய கலாச்சாரத்தின் ஆணிவேராகக் கருதப்படும் பல மறைகளும், பல மொழிகளின் இலக்கியங்களும் இந்த நுண்ணறிவின் வெளிப்பாடாகக் கருதப்படலாம். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக தமிழ் மறையாகக் கருதப்படும் திருக்குறள் ஆகும். அக-புற வாழ்வின் சிந்தனைகளுக்கு வழிகாட்டியாகவும் கலங்கரை விளக்கமாகவும் விளங்கும் இந்த அரிய நூல் இந்த நுண்ணறிவை விளக்குவதற்கு பல முன்னுதாரணங்களைத் தன்னுள் கொண்டதாக விளங்குகின்றது .

    இந்த நுண்ணறிவில் சிறந்து விளங்கியவர்களாகக் கருதக்கூடிய சிலர்:

    1. புத்தர்
    2. சாக்ரடீஸ்
    3. கலீல் கிப்ரான்
    4. குரு நானக்
    5. கபீர்தாஸ்
    6. அரிஸ்டோடில்
    7. பிளாட்டோ

    இது போன்ற பலரை நாம் மேற்கோளாகக் காட்ட முடியும் .இந்த நுண்ணறிவில் சிறப்புடையவர்களிடம் உள்ளத்தில் ஏற்படுகின்ற சில கேள்விகள்:

    1. நான் ஏன் பிறந்தேன்?
    2. எனக்கும் இந்த உலகிற்கும் என்ன உறவு ?
    3. எனது மற்றும் மனித இனத்தின் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன ?
    4. மரணம் என்பது என்ன?
    5. மரணத்திற்கு பிறகு பிறப்பு உண்டா?
    6. சொர்க்கம், நரகம் என்பது உண்மையா அல்லது கற்பனையின் வெளிப்பாடா?
    7. இறைவன் என்று ஒருவன் இருக்கின்றானா? அவனுக்கும் நமக்கும் என்ன தொடர்பு?
    8. மனித இனத்திற்க்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு என்ன?

    இது போன்ற பல கேள்விகளும் அதற்கான தேடல்களும் இவர்களின் கற்றலிலும் பேச்சுக்களிலும் வெளிப்படையாகத் தெரியும்

    இந்த விதமான கற்றலில் சிறந்து விளங்குபவர்கள் பிற்காலங்களில் கீழ்கண்ட தொழில்களில் சிறப்படைய வாய்ப்புண்டு

    1. தத்துவம்
    2. மத வளர்ச்சி மற்றும் ஈடுபாடுகள்
    3. மன இயல்
    4. கவிதை, இலக்கியம்
    5. மனித நேயம்
    6. சேவைகள் .

    இந்த நுண்ணறிவைச் சார்ந்தவர்கள் பொதுவாக அதிகமாக மற்றவர்களுடன் உறவாடாமல் தனிமையைப் போற்றக்கூடியவர்களாக இருப்பார்கள். தங்களுடைய சிந்தனைகளை அதிகமாக வெளிப்படையாகப் பரிமாறிக் கொள்ளாமல் அடக்கத்துடன் இருப்பார்கள். இவர்களின் சிந்தனை உள்நோக்கியதாக இருக்கும். தியானம், தடத்துவ சிந்தனை, உடல் பயிற்சி, யோகப் பயிற்சிகள் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள்.

    ஹோவர்ட் கார்டனரால் கருதப்பட்ட ஒன்பது விதமான நுண்ணறிவுகளை முடிவானவை அல்ல  காலப்போக்கில் இந்த நுண்ணறிவுகள் தவிர  விதமான நுண்ணறிவுகளின்  வளர்ச்சியும் ஏற்பட  .வைப்புக்கள் உண்டு. உதாரணமாக தற்போதைய மனித வளர்ச்சி  மற்றும கற்றல் சார்ந்த வளர்ச்சிகளில் டிஜிட்டல் நுண்ணறிவு ஒரு முக்கிய பங்காகக் கருதப்படுகின்றது தற்காலத்தில் ஏழு மட்டும் எட்டு வயது சிறுவர் மற்றும் சிறுமியர்கள் கணினிக்களையும் அதைச் சார்ந்த தொழில்நுட்பங்களையும் எளிதாகவும் திறனுடனும் வேகமாகவோ கையாளும் முறைகள் கண்டு நாம் வியந்து நிற்கின்றோம். அவர்களுடைய திறனுடனும் வேகத்துடனும் வயதில் முதிர்ந்த பலராலும் ஈடு கொடுக்க்க முடிவதில்லை. ஆகவே டிஜிட்டல் நுண்ணறிவு தற்காலத்தில் அவசியமாகி கருதப்படுகிறந்து.

    இதுபோன்று டேனியல் கோலெமென் என்பவர் சமூக நுண்ணறிவின் முக்கியத்துவதைப் பற்றிய ஆராய்ச்சியின் காரணமாக அதை பத்தாவது அவசிய நுண்ணறிவாகக் கருதுகின்றனர். இதைப் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    தொடரும்

    Share
  • சிலப்பதிகாரத்தில் தெய்வ ஆக்கமும் பொருள் பங்கீடும்

    -முனைவர் ரா. மூர்த்தி 

    சிலப்பதிகாரம் தமிழின் முதல் காப்பியம்; ஒரு முதன்மைக் காப்பியம்; முத்தமிழ்க் காப்பியம்; மூவேந்தர்களின் வரலாற்றை எடுத்தியம்பும் காப்பியம்; நெஞ்சையள்ளும் காப்பியம்; இலக்கிய உன்னதம் நிரம்பிய காப்பியம்; கி.பி. இரண்டாம் நூற்றாண்டையொட்டி எழுந்த காப்பியம் என்றெல்லாம் புகழப்படுகிறது.

    காப்பியத் தன்மையோடு கதைகளாகச் சொல்லப்பட்ட இப்பனுவல் முழுக்க முழுக்க இனவரைவியல் தன்மையில் கோவலன் கண்ணகி ஆகியோர்களின் வாழ்வின் குடிச்சிறப்பினை எடுத்துரைக்கிறது. இதில்  “தமிழர்களின் தொல்குடி முதல் முன்னேறிய வணிகச் சமூகம் வரையிலான பன்முகப்பட்ட சமூகப் பண்பாட்டு முறைகள், வாழ்வியல் நெறிகள், இசைக்கூத்து மரபுகள், பன்மைச் சமய மரபுகள் அவற்றின் விழாக்கள், வழிபாட்டு முறைகள், கலைகள், அரசுமுறை,  நீதிநிர்வாகம்,  பெண்களின் சமுதாய நிலை,  வரலாறு1 ” எனப் பல விரிந்து பட்ட வாழ்வியல் முறைகளையெல்லாம் எடுத்தியம்புகிறது.

    சிலப்பதிகாரம் அடிப்படையில் மீவியல் தன்மை கொண்ட காப்பியம்.  இதன் நிகழ்வுகள் யாவும் அவை நிகழ்ந்தேறிய காலம், இடம் இவை இரண்டையும் கடந்து பிரதிபலித்து வருகிறது. கண்ணகி வேங்கை மரத்தின் அடியில் நின்று தன்னுடைய கணவனான கோவலனை அடைந்த கோலம்,  அக்காட்சினைக் கண்ட குறவர்கள் அப்பெண்ணைத் தெய்வமாக உருவகித்துக்கொண்டு தெய்வநிலைக்கு உயர்த்தியது. ஆகிய அனைத்தும் மீவியல் தன்மையில் வெளிப்பட்டு நிற்கின்றன.

    ஒரு முதன்மையான இனவரைவியல் விளக்கத்தை முன்வைக்க மீவியல்பு தன்மைகள் அதன் உன்னதத்திற்குக் காரணமாக அமைகிறது. இங்கு ‘மீவியல்பு’ என்பதை அசாதாரணமானது என்ற பொருளில் கொள்ளுதல் இல்லாமல் அனைத்தையும் உள்ளடக்கியது என்ற கருத்துருவாக்கத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது2” ஏனென்றால் குறவர்களின் கண்முன்னே கண்ணகி வானுலகம் அடைந்த காட்சி உயிருடன் இருந்த ஒரு பெண் தெய்வநிலையை அடையும் தன்மையை வெளிக்காட்டுகிறது. மீவியல்பு என்பது இயல்பு நிலையிலிருந்து மாறி வேறொரு புதிய உலகத்தில் தோன்றச் செய்வது. அச்சூழலில் உடலின் தோற்றத்தில், குரலின் வெளிப்பாட்டில், உடல் அசைவுகளில் தங்களை வெளிப்படுத்திக் காட்டுவதற்கு அடையாளப்படுத்துவதற்கு மீவியல்பு தன்மை உறுதுணை புரிகிறது. கண்ணகியின் தோற்ற வெளிப்பாடும் இவ்வாறே இருந்தன. இதனை,

    மலைவேங்கை நறுநிழலின்
    வள்ளி போல்வீர் மனம் நடுங்க
    முலை இழந்து வந்து நின்றீர்
    மண மதுரையோடு அரசுகேடுற வல்வினை வந்து வருத்த காலைக்
    கணவனை அங்கு இழந்து போந்த கடுவினையேன் யான் என்றாள்
    என்றலும் இறைஞ்சி அஞ்சி இணைவளைக்கை எதிர்கூப்பி
    நின்ற எல்லையுள் வானவரும் நெடுமாரி மலர்பொழிந்து
    குன்றவரும் கண்டு நிற்பக் கொழுநனொடு கொண்டு போயினார் 3

    என்ற பாடல் வரிகள் இதனைச் சுட்டுகிறது. இப்பாடலின் மீவியல்பு வெளிப்பாடு இயல்பு நிலையிலிருந்து ‘மனம் நடுங்க’ கண்ணகி கோபமுற்று உயிருடன் தனது கணவனான கோவலனுடன் வானுலக்கத்திற்குச் சென்று தெய்வநிலை அடைந்ததை வெளிக்காட்டுகிறது.

                    கண்ணகி தெய்வநிலை அடைவதற்கு முன்பு அவளின் உடல் தோற்றம் மனஒழுங்கமைவு மாறி மாறியே தென்பட்டன. கணவனைக் காணப்பெறாத துன்பத்தில் உள்ளம் கொதித்து, உலைக்களத்துத் துருத்திபோலச் சுடுமூச்சு விட்டாள். வீதிகளில் சுழன்று திரிந்தாள். குறுந்தெருக்களில் கவலையுடன் நின்றாள். அங்குமிங்குமாக எவ்வித நோக்கமுமின்றி நடந்தாள். மயங்கி நின்றாள் இவை மீவியல் நிலைக்கு மாறுவதற்கான தொடக்கமாகும். இதனை,

                    காதலன் கெடுத்த நோயோடு உளம் கனன்று
                     ஊதுஉலைக் குருகின் உயிர்த்தனள் உயிர்த்து
                     மறுகுஇடை மறுகும் கவலையிற் கவலும்
                     இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும்
                     ஆர் அஞர் உற்ற வீரபத் தினி”4

    என்று சுட்டுகிறது. தெய்வநிலை குறித்து மானிடவியலாளர்கள் கூறும்போது ஷாமானிசத்தின் மூலம் நிகழும் தெய்வமுறுதலை பிரெஞ்சு மானிடவியலர் லூயிதூய்மோன் (அதீத உணர்வு சார்ந்த பக்தி) என்கிறார். இந்து சயத்தில் காணப்படும் இவ்வாறான கூறுகளை மிக விரிவாக ஆராய்ந்த மேலை நாட்டு வல்லுநர்கள் அருள்நிலையடைந்து ஆடுவதில் இரண்டு வகையுண்டு என்கின்றனர். முதல்வகை: ‘தெய்வமுற்று ஆடுதல்’ அல்லது ‘சாமியாட்டம்’ ஆகும்.  இரண்டாம் வகை: ‘ஆவியேறி ஆடுதல்’ அல்லது ‘பேயாட்டம்’ ஆகும்.”5 கண்ணகியின் தெய்வநிலை  முதல்வகை நிலையில் தெய்வமாக மாறி விண்ணுலகை அடைதலாகும். மனித நிலையிலிருந்து தெய்மாக வணக்கப்பட்ட பெண்ணையே பின்பு கடவுளாக வழிபடத் தொடங்கினர். காலம் கடந்தும் இவை தொடர்ந்து பண்பாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

     தொல்குடியினரின் தெய்வ ஆக்கம்

                    குறவர்கள் தமிழகத்தின் பூர்வ குடிகளாவர். தொடக்க காலத்தில் இயற்கையைத் தெய்வமாக வழிபட்ட மக்கள் தமது கண்முன்னே ஒரு பெண் ஏழு நாட்கள் தனித்து கணவன் இறந்த துன்பச் செய்கையை எண்ணி மனமுற்று பின்பு கணவனோடு சேர்ந்த காட்சியைக் கண்ட குறவர்கள் இயற்கை வழிபாட்டை, விலங்கு வழிபாட்டை,  முருக வாழிபாட்டை,   காற்று வழிபாட்டைக் கடந்து ஒரு பெண்ணை தெய்வமாக ஏற்று வணங்கி வழிபடும் முறையை அறிமுகம் செய்து வைக்கின்றனர். இவை இனம் சார்ந்த ஒரு சமூக மரபிற்குள் இருப்பினும் உயிரோடு இருக்கும் பெண்ணைத் தெய்வ நிலைக்கு மாற்றி வழிபடும் கருத்தாக்கத்தை வழிபாடாகக் கொணர்ந்தவர்கள் தொல்குடியான குறவர்களாவர். இதனை பின்வரும் பாடல் உறுதி செய்கிறது.

    சிறுகுடியீரே! சிறுகுடி யீரே!
    தெய்வம் கொள்ளுமின் சிறுகுடியீரே!
    நிறம்கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை
    நறுஞ்சினை வேங்கை நல்நிழல் கீழ்ஓர்
    தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே!
    தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின்
    கோடுவாய் வைம்மின் கொடுமணி இயக்குமின்
    குறிஞ்சி பாடுமின் நறும்புகை எடுமின்
    பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை நிறுமின்
    பரவலும் பரவுமின் விரவுமலர் தூவுமின்
    ஒருமுலை இழந்த நங்கைக்குப்
    பெருமலை துஞ்சாது வளம் சுரக்க”6

    என்று கூறுகிறது. பாடலின் பொருள் பின்வருமாறு கூறுகிறது.

                    வேட்டுவக் குடியில் உள்ள மக்கள் இக்கற்புடையாளை நம் தெய்வமாக ஏற்றுக் கொள்ளுங்கள். இப்பெண் வெண்மையானதும் மனத்தைக் கிளர்ச்சியுறச் செய்கின்ற அருவி  வீழும் இந்நெடிய குன்றின் அடிவாரத்தில்,  நறுமணங்கமழும் மலர்களையுடைய வேங்கை மர நிழலில் துயருடன் வந்து,  நின்ற இப்பெண்ணை ஒப்பற்ற தெய்வமாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வேட்டுவ குலத்தின் குடித்தலைவர்களால் முன்மொழியப்படுகிறது. அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு அத்தெய்வத்திற்கு வேட்டுவர்கள் குறிஞ்சிப் பறையினைக் கொட்டுங்கள். சிறுபறையை முழங்குங்கள்,  கடமாக் கொம்புகளை வாயில் வைத்து ஊதுங்கள். ஓசைமிக்க மணிகளை ஒலிக்கச் செய்யுங்கள். குறிஞ்சிப்பண்ணைப் பாடுங்கள். மணமிக்க அகிற்புகையினை ஏந்துங்கள். மலரினைக்கொண்டு அருச்சனை செய்யுங்கள் என்று அறிவுறுத்தப்படுகின்றது. அத்தோடு அத்தெய்வத்திற்குக் கோவில் அமைத்துச் சுற்றும் மதில் எழுப்பி அதன் புகழைப் புகழ்ந்துபாடி பரவச் செய்யுங்கள். மலர்தூவி வழிபாடு செய்யவும் செய்யுங்கள் என்று வேட்டுவக் குடிக்குக் குலத்தலைவர்கள் வாயிலாகச் சொல்லப்படுகிறது. மேலும் இப்பெருமலை நாடு என்றும் வற்றாது வளஞ்சுரக்க வேண்டுமென்று அருள் புரிக என்று வேண்டிக் கொள்ளவும் செய்யுங்கள் என்று சொல்லப்படுகிறது.

                    இப்பாடலின் வாயிலாக பார்க்கும்போது,  வேட்டுவர்கள் பெண் தெய்வத்தை உருவாக்கியவர்கள். வழிபாட்டில் இசைக்கருவிகள்,  வழிபாடு செய்யும்முறை,  கோவில் கட்டிடங்கள் கட்டுதல் முதலிய தேவை சார்ந்த கொள்கைகளையும் உருவாக்குகின்றனர். இங்கு வேட்டுவர்களின் தேவை ‘பெருமலை நாடு’வளம் சுரக்க வேண்டும் என்ற முடிவேயாகும். பெருமலைநாடு வளம் சுரக்காமலும் சிலகாலங்களில்  பாலையாக வறட்சியுற்று காணப்பட்டுள்ளது. நிலம் வறட்சியுற்றுப் பாலையாக இருந்ததிற்கான தொடக்கச் சான்று சிலப்பதிகாரத்திலே கிடைக்கிறது. அத்தகைய சூழலில் இருந்து மாறி வளமையோடு இருக்க வேண்டும். திங்கள் மும்மாரி மழைபொழிய வேண்டும் என்ற கருத்தமைவு வேட்டுவர்களிடம் இருந்துள்ளது. “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்7 சிலப்பதிகாரத்தில் தொடக்கத்திலே மழையைப் போற்றும் மரபு அரசர்களிடத்தில்,  மக்களிடத்தில் இருந்துள்ளது.

    அதனால் தனது கண்முன் நிகழ்ந்த கண்ணகியின் கோலத்தையும் அவள் கணவனோடு தெய்வக்கோலம் அடைந்த காட்சியை வேட்டுவர்கள் பார்த்ததால் கண்ணகியைத் தெய்வமாக வழிபடத் தொடங்குகின்றனர். இக்காட்சியால் தங்களது பெருமலை நாடும் வளம் பெற்றுச் சிறக்கும் என்ற எண்ணப் போக்கும் மக்களிடத்தில் உருவாகத் தொடங்குகிறது. அதனால் இச்செயலை முன்னெடுத்துச் செய்கின்றனர். பெண் வழிபாட்டைக் கையிலெடுத்துக் கொண்ட வேட்டுவர்களைப் போன்று வேந்தர்களுக்குக் காணிக்கைப் பொருட்களை வழங்கி வாழ்த்தும் மரபையும் முதலில் தொடங்கி வைத்தவர்கள் தொல்குடியினரான குறவர்களாவர்.

    பொருள் பங்கீடு செய்தல்

                    தொல்குடியினரின் இனக்குழு வாழ்க்கை ஒரு கூட்டத்திற்குள்ளே ஒரு குழுவுக்குள்ளே அகமணத் தன்மையில் இணைந்து பயணிப்பது ஆகும். இதில் உணவுப் பரிமாற்றம், கரணமுறை (திருமணமுறை), பொருள் பங்கீடு, தொழில்சார்ந்த செயல்பாடு அனைத்தும் ஒரு குழுவுக்குள்ளே நிகழும். வேற்றுப் பண்பாட்டு நிலை, புறமணம் கடைபிடிக்கப்படுவதில்லை. இந்நிலை தொல்குடி மாந்தர்களிடம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது.

                    அகமணத் தன்மை பெரும்பாலும் சடங்கு வயமான வளமைச்சடங்கு, இறப்புச் சடங்கு,  கடவுள் வழிபாட்டுச்சடங்கு, திருமணச்சடங்கு இவைகளிலே அதிகம் கடைப்பிடிக்கப்பட்டன. இதில் பிற குழுமரபைப் பேணுவதில்லை. பொருட்களும் நிலவயத்தில் கிடைத்ததையே (தினை, நெல், வாசனைப்பொருட்கள்) பங்கிட்டுக் கொண்டனர். சடங்கு வயத்தில் ஊர் சார்பாக ஒருவர் முன்னிறுத்தப்பட்டு  இச்செயல்களைச் செய்வர்;. அவரே பாதுகாவலனாகவும்,  குழுத்தலைவனாகவும் அங்கீகரிக்கப்பட்டான்.

                    இந்நிலை அரசுருவாக்கம் நிகழ்ந்த பின்பு மாற்றத்தைச் சந்தித்துள்ளது. தொல்குடிகளும் அரசின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு வாழும் முறைமைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பண்பாடு சார்ந்த வாழ்க்கைமுறை, வழிபாடு, உணவுமுறை, குலமரபு அனைத்தும் மரபு வயத்தளத்தில் இருக்கலாம். ஆனால் வேந்தர்களின் உணவு,  உடல்சார்ந்த தேவைகள்,  மருத்துவக் குணமுள்ள பொருட்கள், வாசனை திரவியங்கள்,  விலங்குகள், விலங்குகளின் பொருட்கள், நிலம் அனைத்தும் வேந்தர்களின் தேவைக்கு ஏற்ப பங்கீடு கொடுக்கும் தன்மை வேந்தனுக்கே உரித்தானதாக மாறின. இதன் மூலம் வேந்தன் தனது படையை வலிமை கொள்வதற்கும்,   உயர்த்துவதற்கும்,  விலங்குகளைப் போரிடுவதற்கும் பழக்கப்படுத்திக் கொண்டனர். இத்தேவைகளுக்கு மூலதாரமாக இருப்பவர்கள் தொல்குடியினராவர்.

                    சேரன் செங்குட்டுவனின் ஆட்சிக் காலத்தில் அவனது எல்லைக்குட்பட்டு மலைகளில் வாழ்ந்த குறவர்கள் உணவுப்பொருட்கள், விலங்குகள், பல்வேறு விதமான பொருட்கள் ஆகியவற்றை பங்கீடு செய்து கொடுத்து தனது கட்டுப்பாட்டில் வாழ்ந்தனர். இதனை,

    அளந்து அறியா அருங்கலம் சுமந்து
    வளம்தலை மயங்கிய வஞ்சி முற்றத்து
    திறைசுமந்து நிற்கும் தெவ்வர் போல
    யானைவெண் கோடும் அகிலின் குப்பையும்
    மான்மயிர்க் கவரியும் மதுவின் குடங்களும்
    சந்தனக் குறையும் சிந்துரக் கட்டியும்
    அஞ்சனத் திரளும் அணிஅரி தாரமும்
    ஏல வல்லியும்; இருங்கறி வல்லியும்
    கூவை நூறும் கொழுங்கொடிக் கவலையும்
    தெங்கின் பழனும் தேமாங் கனியும்
    பைங்கொடிப் படலையம் பலவின் பழங்களும்
    காயமும் கரும்பும் பூமலி கொடியும்
    கொழுந்தாள் கமுகின் செழுங்குலைத் தாறும்
    பெருங்குலை வாழையின் இருங்கனித் தாறும்
    ஆளியின் அணங்கும் அரியின்; குருளையும்
    வாள்வரிப் பறழும் மதகரிக் களபமும்
    குரங்கின் குட்டியும் குடாஅடி உளியமும்
    வரையாடு வருடையும் மடமான் மறியும்
    காசறைக் கருவும் ஆசுஅறு நகுலமும்
    பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும்
    கானக் கோழியும் தேன்மொழிக் கிள்ளையும்
    மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டு ஆங்கு
    ஏழ்பிறப்பு அடியேம் வாழ்க நின் கொற்றம்”8

    என்று வாழ்த்திப் பாடுகின்றனர். இதன் பொருளானது. குறவர்கள் இவ்வளவு என்று அளந்து அறுதியிட்டுக் கூறமுடியாத அளவிற்கு அருமையான அணிகலன்களைக் காணிக்கைப் பொருளாகச் சுமந்து வந்து வளம்பல நிறைந்த வஞ்சி மாநகரின் முற்றத்திலே சேர அரசனைக்காணும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்து நிற்கும் பகை மன்னர்போல மலைக்குறவர்கள் அரசனுக்குரிய காணிக்கைப் பொருள்களுடன் நின்றனர்.

                    குறவர்கள் கொண்டாந்த காணிக்கைப் பொருட்களாவன: யானையின் வெண்மையான தந்தங்கள், அகிற் கட்டைகளின் குவியல்கள், மான் மயிரால் கட்டப்பட்ட வெண்சாமரம், தேன்குடங்கள், சந்தனக் கட்டைகள், சிந்துரக் கட்டைகள்,  நீலக்கற்கள், அழகிய கத்தூரி, ஏலக்கொடி, கரிய மிளகுகொடி, கூவைக் கிழங்கின் மா, கவலைக் கிழங்கு,  தென்னை நெற்றுக்கள்,  இனிய மாங்கனிகள், பச்சிலை மாலைகள்,  பலாப் பழங்கள்,  வெள்ளுள்ளி,  கரும்பு,  பூங்கொடிகள்,  வளம் மிகுந்த கமுகிலிருந்து வெட்டியெடுக்கபட்ட செழுமையான பாக்குக் குலைகள், பெரிய குலைகளை ஈனும் பழம் நிறைந்த வாழைத் தாறுகள், ஆளிக்குட்டி,  சிங்கக்குட்டி,  புலிக்குட்டி,  யானைக் கன்று,  குரங்குக்குட்டி, வளைந்த அடியையுடைய கரடிக்குட்டி, மலையில் துள்ளி விளையாடும் மலையாட்டுக்குட்டி,  இளைய மான்குட்டி,  கத்தூரி மான் குட்டி, குற்ற மற்ற கீரிப்பிள்ளை,  தோகை மயில்,  புனுகு,  பூனைக்குட்டி,  காட்டுக்கோழி,  தேன் போன்று பேசும் கிளி ஆகியவற்றை குறவர்கள் தம் தலைமேல் வைத்து சுமந்து வந்து அரசனுக்குக் கொடுப்பதற்காக நின்றனர்.

                    குறவர்கள் தங்களது குலக்குழுவுக்குள்ளே தங்களது உபரிப் பொருட்களைப் பங்கீடு செய்து கொண்ட மக்களாவர். அத்தகையோர்,  ஒரு நிலையிலிருந்து மாறி அரசனுக்குக் கொடுக்கும் காலச்சூழலுக்கு மாறியுள்ளனர். ஆனால் சங்கப்பாடல்களில் குறவர்கள் விருந்து உபசரிப்பு செய்ததிற்கான சான்றுகள் உள்ளன. குறவரினக் கொடிச்சியர் விருந்து உபசரிப்பில் விருந்து வேண்டி வரக்கூடிய விருந்தினர்களுக்கு கொடுப்பதற்கு உணவு இன்றி வெயிலில் காய வைத்த விதைத் தினையை சந்தன மரத்தாலான உரலில்,  யானையின் கொம்பைக் கொண்டு குற்றி சமைத்து வந்திருந்த விருந்தினர்களுக்கு உணவு பரிமாறி பின்பு அனுப்பியுள்ளனர்.

                    இங்கு வருகின்றவர்களுக்கு மட்டும் உணவுப் பங்கீடு செய்தனர். இவை பெரும்பாலும் திணைக்குடிகளுக்குள்ளே நிகழ்ந்தன. இந்நிலையிலிருந்து மாறி தலைமீது சுமந்து சென்று அரசனுக்குப் பல்வேறு வகையான உணவுப்பொருட்கள் கொடுக்கும் குறவர்களின் வாழ்வினை பின்னோக்கிக் கொண்டு செல்கிறது. ஒரு புறம் குறவர்களின் காலமாற்றம்,  மறுபுறம் அரசு உருவாக்க வளர்ச்சி இனக்குழு, குலமுறை வாழ்க்கை ஒழிந்து பொருள் பங்கீடு செய்யும் வழக்கமுறை சமூகத்தில் நிலவியுள்ளது.

                    பொருள் பங்கீடு செய்யும்முறை மட்டுமில்லாமல் அரசனை வாழ்த்தி வணங்கி வழி அனுப்பும் நிலையாகவும் மாறியுள்ளது. தொல்குடியிரான குறவர்கள் அரசனை வாழ்த்தும்போது “ஏழ் பிறப்பும் உமக்கு அடியவராய் இருப்போம்” வாழ்க நின் அற நீதி எனப் போற்றினர். அத்தோடு “பன்னூறு ஆயிரம் ஆண்டுகள் நீ வாழ்வாயாக”  என வாழ்த்தும் மரபினையும் சொல்லும் மரபிற்கு குறவர்கள் உள்ளாக்கப்பட்டனர்.

                    இக்காலச் சூழலிலிருந்து பார்க்கும்போது தொல்குடியினரான மலைக்குறவர்கள் அரசர்களுக்குத் தேவையான உணவுகள், போரில் பயன்படுத்தப்படும் விலங்குகள்,  செல்வச் செழிப்புடைய உயர்ந்த ஆபரணங்கள் எல்லாம் கொடுத்து அறிமுகம் செய்து வைத்ததும் இத்தொல்குடியினராவர். குறவர்கள் பொருட்களைக் கொடுப்பதற்கான காரணம் என்ன? ஆட்சி – அதிகாரம் –  வரி (பங்கீடு) என்று கொண்டால் அரசர்கள் தொல்குடியினரையும் அடிமையாகத் தங்களது ஆளுகைக்குள் உட்படுத்திக் கொண்டது தெரிய வருகிறது.

                    இல்லையேல் அரசன் காணிக்கையாக அரசனுக்கு கொடுப்பதென்றால் அரசன் வாயிலாகத் தொல்குடியினருக்கு கிடைத்த பங்கீடு எத்தகையது? என்ற வினாக்கள் எழுகிறது. இது குறித்த வழக்காறு சார்ந்த தரவுகளை நோக்கும்போது இன்றும் கிராமப்புறங்களில்  காணிக்காரர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது தொழில் வயல் வெளிகளைக் காவலிடுவது. மடை திறந்து விடுவது. அடைப்பது. இரவு நேரங்களில் காவல் காப்பது. அறுவடைக் காலங்களில் நெல், தானியங்களுக்குக் குறியீடு செய்து வருமுடி (காணிக்கை) வாங்குவது ஆகியனவாகும். அத்தகைய செயல்களுக்காக நெல்,  கம்பு,  சோளம் முதலிய தானியங்கள் அளவிடப்படுகிறது. இது ஒவ்வொரு கண்மாய் மடையைப் பொறுத்தும் இப்பங்கீடு கொடுக்கப்படுகிறது. இதற்காகப் பட்டயமும் கொடுக்கப்பட்டுள்ளன.  இப்பங்கீடுகள் அனைத்தும் சோழர்கள்  காலத்தில் அதிகமாக வழக்கில் இருந்துள்ளன. நிலம் சார்ந்த குடிகளுக்கு இப்பங்கீடு வழங்கப்பட்டுள்ளன. இதே செயல்பாடு குறவர்களுக்கும் இருந்திருக்கிறதென்றால் இல்லை. அவர்களிடம் இருந்த பூர்வீகம் பறிக்கப்பட்டு இன்று நடோடி வாழ்க்கையாகத் தங்களது வாழ்கையை அமைத்துக்கொண்டு வாழ்கின்றனர். அரசர்களுடைய (சேரன்) காலத்தில் தொல்குடியினரிடம் இருந்து பொருட்களைக் கைப்பற்றும்முறை,  அவர்களை வழிநடத்தும் பொறுப்பு ஆகியன மட்டுமே வேந்தர்களிடத்தில்  இருந்துள்ளன.

    முடிவுகள்

                    தொல்குடி மாந்தர்கள் இனக்குழு,  குலக்குடி முறையில் வாழ்ந்த வாழ்வில்,  தாங்கள் வணங்கப்பட்ட தெய்வத்திலிருந்து சற்று மாற்றம் பெற்று உயிரோடு வானுலகம் செல்லும் பெண்ணின் சக்தியைக் கண்டு பார்த்து உணர்ந்து அப்பெண்ணைத் தெய்வமாக ஏற்று வழிபடும் பெண்தெய்வ வழிபாட்டை தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கியவர்கள் தொல்குடியினரான குறவர்கள் ஆவர். பின்பு வருகின்ற காலகட்டங்களில் மனிதனாக இருந்து தெய்வமாக்கப்பட்ட பல்வேறு பெயர்களைக் கொண்ட பெண் தெய்வங்கள் (மாரியம்மன்,  பட்டத்தரசி,  பண்ணாரி,  வனபத்திரகாளி, செல்லாண்டியம்மன்) அனைத்தும் குறவர்களின் வழித்தோன்றல்களே ஆகும். அவர்கள் மரபில் பல்வேறு மக்கள் பெண் தெய்வ வழிபாட்டை தொடங்கி வழிபட்டு வந்தவர்களாவர்.

                    அதுமட்டுமில்லாமல் அரசனுடைய தாட்டிமை இல்லாமல் வாழ்ந்த தொல்குடியினர் வாழ்க்கையில் அரசுருவாக்கம் என்ற முறையில்  மன்னர்களின் ஆளுகைக்கு உட்படும்போது தனக்கிருந்த உணவுகளையோ? விலங்குகளையோ? முன்னின்று கொடுக்கும்  நிலைக்கு மாறியுள்ளனர். அத்தோடு தொடர்ந்து அரசனை வாழ்த்தும் மரபும் ஓர் ஆளுகைக்கு ஆட்படும் அடிமை நிலைக்கும் தொல்குடியினர் மாறியுள்ளனர். ஆக, தொல்குடியினரின் வாழ்வு பெண்தெய்வ வழிபாடுகளைத் தொடங்கி வைத்தல்,  அரசனுக்குத் தேவையான போர்க்கருவி,  படை,  விலங்குகள், உணவுப் பொருட்கள் ஆகியவைகளை உருவாக்கி கொடுப்பதில் முன்னோடியாக இருந்துள்ளது தெரிய வருகிறது.

    அடிக்குறிப்புகள்

    1. பக்தவத்சல பாரதி – சாலினி வாக்குரைத்தல் இனவரைவியல் நோக்கு, (கட்டுரை) புதிய பனுவல் (பன்னாட்டு இணையவழி ஆய்விதழ்) ப.28
    2. மேலது. ப.28
    3. சிலப்.வஞ்சி.குன்றக்:5-12
    4. சிலப். மதுரை.அழற்படுகாதை.151-155
    5. மேலது. நூ. ப.38
    6. சிலப்.வஞ்சி.குன்றக்:11-20
    7. சிலப்.புகார்.மங்க.8
    8. சிலப்.வஞ்சி.குன்றக்:33-45

     

     

    Share
  • சென்ரியு கவிதைகளின் உள்ளடக்கங்கள்

    -முனைவர் .வே.மணிகண்டன்

    தமிழ்க்கவிதை இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட  வரலாற்றினை  உடையது.  காலந்தோறும் சமூகம், பொருளாதாரம்,  அரசியல் ஆகியவற்றில்  ஏற்படும் மாற்றங்களால் கவிதை இலக்கியமானது புதுப்புது வடிவங்களையும் பொருண்மைகளையும் தன்னகத்தே பெற்றுவந்துள்ளது. தொன்மையான  தமிழ் இலக்கியக் கவிதைகள் யாப்பிலக்கணங்களைப் பின்பற்றி படைக்கப்பட்டன. ஆங்கிலேயர்களின் வருகையினால் இந்தியாவில் கல்வி முறையில் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆகையினால், மேனாட்டு இலக்கிய வடிவங்கள் பல இந்திய மொழிகளில் தோற்றம் பெற்றன. அவற்றில், புதுக்கவிதை வடிவமும் ஒன்றாகும். ’வால்ட் விட்மன்’ எனும் மேனாட்டுக் கவியின் புதுக்கவிதைப் படைப்பான ’புல்லின் இதழ்கள்’ எனும் கவிதைத்தொகுப்பின் மீது கொண்ட ஈடுபாட்டினால், பாரதியார் வசன கவிதைகளைப் படைக்கத் தொடங்கினார். பாரதியாரின் வசன கவிதை முயற்சிகள்  தமிழில் புதுக்கவிதையின் தோற்றத்திற்கு வித்திட்டன. புதுக்கவிதை இலக்கியம் தமிழில் மாபெரும் வளர்ச்சி நிலையை அடைந்தது. சப்பான் நாட்டுக் கவிதையான ஹைக்கூவை  பாரதியார் தமிழில் அறிமுகப்படுத்தினார். சென் தத்துவம், இயற்கை சார்ந்த பாடுபொருள் ஆகியவற்றைப் பொருண்மையாகவும் மூன்றடிகளை அடிவரையறையாகவும் கொண்ட ஹைக்கூ கவிதைகள் தமிழில் மாபெரும் செல்வாக்கினைப் பெற்றன.

    சப்பானின் பிற கவிதை வடிவங்களான லிமரைக்கூ, சென்ரியு, ஹைபுன் ஆகிய கவிதை இலக்கியங்களும் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்ச்சி நிலையை அடைந்து வருகின்றன. இவற்றில், சென்ரியு கவிதைகள் ஹைக்கூ கவிதைகளுக்கு அடுத்து தமிழில் மிகுந்த செல்வாக்கினை பெற்றுத் திகழ்கின்றன. சென்ரியு கவிதைகள் ஹைக்கூ கவிதைகளைப் போன்று மூன்றடி வடிவத்தை பெற்றுத்திகழ்ந்தாலும், பொருண்மை அடிப்படையில் வேறுபடுகின்றன. ஏனெனில், சென்ரியு  கவிதைகள் மானுடத்தைப் பற்றி பாடுகின்றன. சென்ரியு கவிதைகள் தமிழில் வளர்ச்சிநிலையை அடைந்து வரும் நவீன கவிதை இலக்கிய வடிவமாகும். எனவே, சென்ரியு கவிதைகளின் தனித்தன்மைகளை ஆராய்ந்து அறியும் அடிப்படையில் இக்கட்டுரை அமைகின்றது.

    மனித நடத்தைகளை  நகைதோன்ற வெளிப்படுத்துவது சென்ரியு. இக்கவிதை வடிவம் தமிழில் ’நகைப்பா’ எனும் பெயரில் வழங்கப் பெறுகின்றது. சென்ரியு கவிதைகள் மனித வாழ்வை அங்கதப் படுத்துவதுடன் மானுடப் புலனுணர்வையும் மிகுதியாக சார்ந்திருக்கின்றன. சென்ரியு கவிதைகள் பொருண்மை நிலையில் அறிவுரை, பொதுத்தன்மை, முரண், பொன்மொழி, அங்கதம், வேடிக்கை, விடுகதை, நகைச்சுவை  ஆகிய பல நிலைகளில் விரிந்து வெளிப்படுகின்றன.

    அறிவுரை வழங்கும் தன்மை

    நன்மை பயக்கும் என்ற நோக்கத்தில் வழங்கப்படும் புத்திமதி, கருத்து, ஆலோசனை ஆகியவை அறிவுரை என வரையறுக்கப்படுகின்றது. அறிவுரை கூறும் பாங்கு படைப்பிலக்கியப் பொருண்மைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது. இப்பொருண்மையானது தமிழ்க் கவிதை இலக்கியங்களில் விரவிக்காணப்படுகின்றது. அத்தன்மையானது, சென்ரியு என்கின்ற நகைப்பா கவிதைகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் பதிவுசெய்யப்படுகின்றது. இத்தகைய கவிதைகளில் கவித்துவம் மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன.

    ஏழ்மையும் வறுமையும் மிகுந்த இந்தியத் திருநாட்டில், மக்கள்தொகை பன்மடங்கு மிகுந்துள்ள நிலையில் குடும்பக்கட்டுப்பாட்டின் அவசியத்தை அறிவுரையாக வலியுறுத்தும் வே.மணிகண்டனின் இக்கவிதை,

    கடமை கண்ணியம் கட்டுப்பாடு
    தெரிந்தவனுக்கோ
    தெரியவில்லை
    குடும்பகட்டுப்பாடு”

    கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தெரிந்தால் மட்டும் போதாது. நூறு கோடிக்கு மேல் மக்கள் தொகை மிகுந்துள்ள இத்திருநாட்டில் மக்கள் தொகை பெருகாமல் இருக்க குடும்பக்கட்டுப்பாட்டினை அறிந்திருக்க வேண்டும் என மென்மையான நகையுடன் அறிவுறுத்துகிறது.

    பொதுத்தன்மை உடையன

    சென்ரியு கவிதைகள் தமிழ் நாட்டில் தற்காலத்தில் பெரும்பான்மையான கவிஞர்களால் படைக்கப்பட்டுவருகின்றன. சென்ரியு கவிதைகளின் தனித்தன்மைகளில் ஒன்றான பொதுத்தன்மை உடையதாகத்தான் பெரும்பான்மையான சென்ரியு கவிதைகள் படைக்கப்படுகின்றன.

    சென்ரியு கவிதைகளில் பொதுத்தன்மையை உள்ளடக்கத் தனித்தன்மையாகக் கொண்ட கவிதைகள் பெரும்பாலும்  வார்த்தைகளை வைத்து விளையாடும் வார்த்தை விளையாட்டுகள் போலவே படைக்கப்படுக்கின்றன. எடுத்துக்காட்டாக,

    பட்டாம்பூச்சி
    பிடிக்கும்
    சிறுவன் பாட்டிலும்
    பட்டாம்
    பூச்சி”

    இக்கவிதை கவித்துவத்தையும் கருத்துச்செறிவையும் மிகவும் குறைந்த அளவே  பெற்றுள்ளது. மேலும், வார்த்தைகளால் மட்டுமே இக்கவிதை கட்டமைக்கப்பட்டுள்ளது. எனினும், பொதுத்தன்மை எனும் பொருண்மை அடிப்படையில் இச்சென்ரியு கவிதை சிறப்புத்தன்மை வாய்ந்ததாகத் திகழ்கின்றது.

    முரண்

    ஒன்றுக்கு ஒன்று எதிரானவைகளைக் கொண்டு அமைப்பது முரண் என்னும் உத்தியாகும். மரபுக் கவிதைகளில் முரண்தொடை எனக் கூறப்படும். மாறுபட்ட இரு பொருள்களை அடுத்தடுத்து இணைத்துப் பார்ப்பதில் புதுத்தன்மையுடன் கவித்துவம் கூடும். முரணானது சென்ரியு கவிதைகளில் மூன்று வகையாக பயின்று வருகின்றன. அவை,

    1. சொல் முரண்: முரண்பாடான சொற்களின் இணையடுக்கைச் சொல் முரண் என்பர்
    2. பொருள் முரண்: கவிதையில் சொல்லளவில் மட்டுமல்லாது கருத்தளவில் மாறுபட்டிருப்பது பொருள்முரண் எனப்படும்.
    3. நிகழ்ச்சி முரண்: கவிதையில் இருவேறு கூறான நிகழ்ச்சிகளை விவரிப்பது நிகழ்ச்சி முரண் தோன்றுகிறது, முன்னுக்குப்பின் மாறுபட்ட செயல்கள் நிகழ்ச்சி முரணாக அமைகின்றன.

    சென்ரியு கவிதைகளில் முரணைத் தனித்தன்மையாகக் கொண்டு படைக் கப்படும் கவிதைகள் கவித்துவம், நகைப்புத்தன்மை ஆகிய கூறுகளை உள்ளடக்கமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் முரண்களால் அமைக்கப்படும் கவிதைகள் கருத்துக்கு முன்னுரிமை தருவதில்லை நகைப்புத்தன்மைக்கே முக்கியத்துவம் தருகின்றன.

    மாமதயானையின் கடவுளின் கடைசிக் கவிதை தொகுப்பில் உள்ள நிகழ்ச்சி முரண் கவிதைகள்,

    ஆசிரியர் பாடத்தில் அசோகன்
    மாணவனின்
    மனதில்
    மரம்
    வெட்டும் தந்தை”

    இக்கவிதையானது இரு மாறுபட்ட செயல்களை விவரிக்கின்றது. ஆசிரியர் பாடத்தில் வரும் அசோகச் சக்கரவர்த்தி தம்முடைய நாட்டில் மரங்களை வளர்த்தவர். ஆனால், மாணவனின் மனதில் வரும் அவனுடைய தந்தை மரங்களை வெட்டுபவர். எனினும், இரு வேறுபட்ட பாத்திரங்களை உள்ளடக்கமாக கொண்டு முரணாக இக்கவிதை படைக்கப்பட்டுள்ளது. இக்கவிதையில் காருமி என்கின்ற மெல்லிய நகையுணர்வும் பிறக்கிறது.

    பொன்மொழிப் போன்றவை

    சான்றோர்களின் அறிவுரைகளில் முத்தாய்ப்பாய் விளங்கக்கூடிய வார்த்தைகளே பொன்மொழிகள் என்கின்றோம். பொன்மொழிகள் மனிதனின் மனத்தில் பெறும் மாற்றத்தையும் புதுஉத்வேகத்தினையும் ஏற்படுத்துபவை. சென்ரியு கவிதைகளில் பொன்மொழி போன்ற உள்ளடக்கங்களில் மிகவும் குறைந்த அளவே கவிதைகள் படைக்கப்படுகின்றன.

    பணம் பத்தும் செய்யும் என்னும் பொன்மொழியினை மீட்டுருவாக்கம் செய்து ஈரோடு தமிழன்பன் படைத்துள்ள சென்ரியு,

    பணம்
    எதையும்
    செய்யும் தெரிந்தவர்கள்
    பணம்
    செய்தார்கள்”

    இக்கவிதையானது பணம் எதையும் செய்யும் எனத் தெரிந்தவர்கள் பணத்தை செய்வதாகக் கவிஞர் கவிநயத்துடன் நகைப்புத்தன்மைமிக்க கவிதை படைத்துள்ளார்.

    அங்கதத்தன்மை உடையன

    அங்கதம் என்பது பிறருடைய குறைகளைச் சுட்டிக்காட்டித் திருத்தும் நோக்கமுடையது. அங்கதம் தமிழ்க் கவிதை மரபில் புதிதல்ல. தொல்காப்பியக் காலம் முதலே இருந்து வருகின்றது. அங்கதம் பிறருடைய தவறுகளை எள்ளி நகையாடும் தன்மையுடையது.

    அங்கதத்தன்மையுடன் படைக்கப்படும் சென்ரியுக்களில் மனிதச் சமுதாயத்தில் நிலவுகின்ற சாதி, மதம், இனம், பொருளாதாரம் சார்ந்த ஏற்றத்தாழ்வுகளையும் அதனால் ஏற்படும் சிக்கல்களையும் வெளிப்படையாகப் பதிவுசெய்கின்றன. மாமதயானையின் கடவுளின் கடைசிக் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள இத்தகைய தன்மையை உடைய கவிதைகள்,

    ஆதிக்க வர்க்கத்தின்
    ஆட்டத்தை
    அடக்கவே
    அதிர்கிறது
    பறை”

    வெட்டியான் மரணம்
    திடீர்
    குழப்பம்
    எரிப்பதா?
    புதைப்பதா?”85

    இக்கவிதைகளில் பெரும்பாலும் யுகாச்சி என்கின்ற சொல்ல வந்த செய்தியை நேரடியாக வெளிப்படையாக சொல்லும் தன்மையுடையன. மேலும், இக்கவிதைகளில் எள்ளல், நையாண்டி செய்யும் பண்புகள் மிகுதியாக இருக்க காண்கின்றோம். கவித்துவமும் கருத்தாழமும் பெற்ற இக்கவிதைகள் சமுதாயத்தில் நிலவுகின்ற ஏற்றத்தாழ்வுகளையும், அரசியல்வாதிகள் தலித்துகளை ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தும் நிலையினையும் வெளிப்படையாக எடுத்துரைக்கின்றன.

    விடுகதைத்தன்மை

    ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விவரிக்காமல்) விவரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே விடுகதை ஆகும். இதைப்  பழந்தமிழில் ’பிசி’ என்றும் கூறலாம். விடுகதையைப் பொதுமக்கள் இலக்கிய வடிவமாகவும் வாய்மொழி இலக்கியமாகவும் சிலர் அடையாளப்படுத்துவர்.

    விடுகதைத் தன்மையுடையதாக சென்ரியு கவிதைகள் தமிழில் மிகவும் குறைந்த அளவிலேயே படைக்கப்படுகின்றன. எனினும், சென்ரியு கவிதைகள் மூன்றடிகளை மட்டுமே பெற்றுள்ளதால் பெரும்பாலான கவிதைகள் விடுகதை அமைப்பை பெற்றுள்ளதாக தோன்றும். விடுகதை அமைப்புடைய சென்ரியுக்கள் பெரும்பாலும் வினா விடை அமைப்பில் படைக்கப்பட்டிருக்கும். இத்தகைய கவிதைகளில் காருமி என்கின்ற மென்மையான நகைச்சுவையும் சமுதாயக் கருத்தும் மிகுந்து காணப்பெறும்.

    ஈரோடு தமிழன்பனின் விடுகதைத் தன்மையுடைய நகைப்பாக்கள்,

    எறியப்பட்ட
    கல்மனத்தில்
    கலவரம்
    எது
    காயப்படுமோ?

    இக்கவிதையானது வெளிப்படையாக விடுகதைத்தன்மையுடையதாகத் தம்மை நிலைநிறுத்துகின்றது. இக்கவிதையில் நகைப்புத்தன்மை இல்லையெனினும் கருத்துச்செறிவும் கவித்துவமும் கவிதையினைச் சிறக்கச் செய்துள்ளன.

    வேடிக்கைத்தன்மை

    சென்ரியு கவிதைகளின் தனித்தன்மைகளில் வேடிக்கை  இன்றியமையாத ஒன்றாகும். தமிழில் கவிஞர்கள் வேடிக்கையான சம்பவங்களை சென்ரியு கவிதைகளின் பாடுபொருளாக நகைஉணர்வும் கவித்துவமும் மிளிரப் படைக்கின்றனர். இக்கவிதைகள் முரண்களால் உருவாக்கப்பட்டாலும் வேடிக்கையே முதன்மையான இடத்தினைப் பெறுகின்றது. இத்தனித்தன்மையில் அமைந்த கவிதைகளில் பெரும்பான்மையாக எவ்விதப் பொருளழமும் இன்றி கவிதைகள் படைக்கப்பட்டிருக்கும்.

    பதவி ஆசையில்  திரியும் மனிதர்களுக்கு உலக நிலையாமையின் தத்துவத்தினை நகைச்சுவையுடன் வேடிக்கையாகச் சொல்லும் சென்ரியு,

    எப்பதவியும்
    கிடைக்காதவருக்குக்
    கிடைத்தது
    சிவலோகப் பதவி”

    இக்கவிதையில் சிவலோகப் பதவி என்னும் வார்த்தையைப் பயன்படுத்திய விதம்  இக்கவிதையினை நகைப்பண்பும் வேடிக்கைத் தன்மையையும் அதி சிறப்பாக அமைய காரணமாக திகழ்கின்றது.

    நகைச்சுவைத்தன்மை

    சென்ரியு தமிழில் நகைப்பா என்னும் பெயரில் வழங்கப்படுகின்றது. சென்ரியு கவிதைகளின் முதன்மையான தனித்தன்மை நகைச்சுவை உணர்வு ஆகும். தமிழில் பெரும்பான்மையான சென்ரியு கவிதைகள் நகைச்சுவை உணர்விற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக படைக்கப்படுகின்றன.

    ஈரோடு தமிழன்பனின் ஒருவண்டி சென்ரியு எனும் கவிதை நூலில் இடம்பெற்றுள்ள,

    சண்டைக் கோழி
    வென்றாலும்
    தோற்றாலும்
    பிரியாணி”

    எனும் இக்கவிதையானது யுகாச்சி என்கின்ற உண்மையை வெளிப்படை யாகக் கூறும் தன்மையுடையதாகப் படைக்கப்பட்டுள்ளது. கருத்துச்செறிவை விட நகைச்சுவை உணர்விற்கே முக்கியத்துவம் அளிப்பதாக திகழ்கின்றது.

    சென்ரியு கவிதைகள் மனித வாழ்வை அங்கதப்படுத்துவதுடன் மானுடப் புலனுணர்வையும் மிகுதியாகச் சார்ந்திருக்கின்றன. சென்ரியு கவிதைகள் பொருண்மை நிலைசார்ந்த தனித்தன்மைகளில் அறிவுரை, பொதுத்தன்மை, முரண், பொன்மொழி, அங்கதம், வேடிக்கை, விடுகதை, நகைச்சுவை ஆகிய பல நிலைகளில் விரிந்து வெளிப்படுகின்றன.

     

     

     

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(188)

     –செண்பக ஜெகதீசன்

     

     

    யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்

    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

    -திருக்குறள் -127(அடக்கமுடைமை)

     

    புதுக் கவிதையில்…

     

    ஐம்பொறி யதனில்

    மனிதன்

    எதைக் கட்டுப்படுத்தவில்லையெனிலும்,

    எதையும் பேசும்

    நாக்கைக் கட்டுப்படுத்தவேண்டும்..

     

    இல்லையெனில்,

    சொற்குற்றம் ஏற்பட்டு

    துன்பம்தான்

    தொடர்ந்து வரும்…!

     

    குறும்பாவில்…

     

    எதைக் கட்டுப்படுத்தவில்லையெனிலும், ஐம்பொறிகளில்

    நாவை மட்டுமாவது கட்டுப்படுத்தவில்லையெனில்,

    துன்பம்தான் வரும் சொற்குற்றத்தினால்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    மனிதன் தனது புலன்களிலே

    மற்றதைக் காட்டிலும் நாவைமட்டும்

    தனியே அடக்கி வாழ்ந்தால்தான்

    தரணி வாழ்வில் நிலைபெறலாம்,

    இனிதாய் இதனைக் கொள்ளாதே

    எதையும் பேசிட நாவைவிட்டால்,

    கனிவது வாழ்வில் இடரேதான்

    காண்நீ சொல்லின் தவறாலே…!

     

    லிமரைக்கூ..

     

    ஐம்புலன்களில் அடக்கிவாழ் நாவை,

    அடக்கிடாமல் அதன்போக்கில் பேசவிட்டால்

    அதுகொணரும் வாழ்வினில் நோவை…!

     

    கிராமிய பாணியில்…

     

    அடக்கிவாழு அடக்கிவாழு

    நாக்கத்தான் அடக்கிவாழு,

    எதயடக்க முடியல்லண்ணாலும்

    நாக்கமட்டும் அடக்கிவாழு..

     

    நாக்கயடக்கி வாழல்லண்ணா

    நட்டந்தான் வாழ்க்கயில,

    சொல்லுஞ்சொல்லு பழுதாலே

    சேந்துவரும் தும்பமெல்லாம்..

     

    அதால,

    அடக்கிவாழு அடக்கிவாழு

    நாக்கத்தான் அடக்கிவாழு,

    எதயடக்க முடியல்லண்ணாலும்

    நாக்கமட்டும் அடக்கிவாழு…!

     

     

    Share