Blog

  • திருமால் திருப்புகழ் (123)

    கிரேசி மோகன்

    Hayagreevar - Keshav
    Hayagreevar – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)
    ———————————————————-
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ————————————————-
    எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் ‘’செட்டிப் புண்ணியம் அயக்ரீவர்’’ எழுந்தருளியபோது எழுதியவை….
    ——————————————————————————————————

    Dialogues with Arjuna series. #Krishnafortoday Keshav
    Dialogues with Arjuna series. #Krishnafortoday
    Keshav

     

    நிகமாந்த தேசிகன், நாவில் அமர்ந்து,
    புகழ்வாய்ந்த பாதுகையைப் பாடி, -அகமகிழ்ந்த,
    எண்ணியதை நல்கும், ஏற்றம் தரும்செட்டிப்,
    புண்ணியத்தில் வாழும் பரி….(252)

    புண்ணியச் செட்டியில், புண்ணாக்(கு) அளித்தனரோ!,
    நண்ணிய(து) ஏனங்கு நாலுகாலில்!, -கண்ணனே,
    பாரதப் போரில், பழகிய நன்றியோ!
    நீரதைப் போலின் நிலத்து….(253)

    கொள்ளுக்(கு) அடங்காய், கவிதே சிகன்கூறும்,
    சொல்லுக்குள் பாயுமுயர் ஜாதியே, -கல்விக்கு,
    வாய்த்த கடவுளே, வாணி அரிதாரா,
    போய்த்தவம் செய்யப் பழக்கு….(254)

    கட்டுக்(கு) அடங்காது, செட்டிக்குப் புண்ணியத்தை,
    கொட்டுமருள் கல்விக் குதிரையே, -குட்டக்,
    குளம்பால் தலையில், குருவே வருக,
    தளும்பா அறிவினைத் தா….(255)

    புல்லும், படிகநீரும், புண்ணாக்கும், கொள்ளும்நான்,
    அல்லும் பகலும் அளித்திடுவேன், -மெல்லும்,
    தலம்செட்டிப் புண்ணியத்தில், தங்கும் பரியே,
    பலனெட்டெட் ஆயகலை போடு….(256)

    ஊர்செட்டிப் புண்ணியத்தில், உய்யும் அசுவமே,
    மார்தட்டிச் சொல்லும் மடையன்நான், -சீர்கொட்டும்,
    வெண்பாக்கள் யாத்துன்மேல், வாழும் வரமருள,
    பெண்பால் பாரதியே பார்….(257)

    சண்டித் தனமாய், சகத்தில் உழல்கின்ற,
    நொண்டிக் குதிரைநான் நாரணா, -அண்டி,
    வருவாய் அருகே, குருவாகிக் காட்டு,
    பரிமேல் அழகா பரிவு….(258)
    —————————————————————————————————————

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2014_04_01_archive.html

     

    Share
  • இராணிப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி – மாணவர் பயிலரங்கம்.

    சொ. வினைதீர்த்தான்

    வணக்கம்.

    boy4
    இராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 6.6.2014 அன்று பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புக்களில் படிக்கும் 130 மாணவர்களுக்குத் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடத்தும் வாய்ப்பு அமைந்தது. 2014 – 15 கல்வியாண்டில் நான் நடத்தும் முதல் பயிலரங்கு இதுவாகும். இராணிப்பேட்டைக்கு என் மகன் வீட்டிற்குச் சென்றிருந்தபோது பள்ளியின் முதுநிலை ஆங்கில ஆசிரியர் திரு சரவணன் அவர்களை அணுகி என்னுடைய தன்னார்வப் பணி குறித்து அறிமுகம் செய்துகொண்டேன். தலைமை ஆசிரியை திருமதி சந்தானம் மிகுந்த ஆர்வத்துடன் அடுத்த நாளே பயிலரங்குக்கு ஏற்பாடு செய்தார். வாய்ப்பில்லாத அரசுப் பள்ளி மாணவர்க்கு மிகத் தேவையான பயிற்சி எனப் பாராட்டினார்.

    boy

    உயர்நிலைப் பள்ளி 1928ல் தொடங்கப்பட்ட சிறப்புடையது. இங்குள்ள காந்தியடிகள் சிலையின் பீடத்தில் இந்தியாவில் முதன்முதலாக அமைக்கப்பட்ட காந்தி சிலை என்ற குறிப்புள்ளது.

    boy2

    boy 5பயிலரங்கு கற்றல், நினைவாற்றல் பெருக்கல் (Registration,Retention,Recall), குறிக்கோள் உணர்தல், குறிக்கோளை நிர்ணயித்தல், அடைதல், காலம் போற்றல், பெரியாரைப் பேணிக்கொளல், மனித உறவுகள் வளர்த்தல் என்ற வகையில் திருக்குறள், சிறுசெய்முறைகள், கதைகள், நகைச்சுவைத் துணுக்குகள், வாழ்வியல்நெறி முறைகள் வழி அமைந்தது. பெற்ற தாய்க்கும், பிறந்த பொன்னாட்டிற்கும், வளர்த்த நூற்றாண்டு காணப்போகும் பள்ளிக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை மாணவர்க்கு உணர்த்தினேன்.

    வகுப்பறை 130 மாணவர் அமர்வதற்குச் சிறிய இடம் என்ற குறையன்றி நிறைவாகப் பயிலரங்கு அமைந்திருந்தது என்பது மாணவர்கள் எழுதித் தந்த பயிற்சி குறித்த கருத்துப் படிவங்கள் (FEED BACK)மூலம் புலனாகி மனதிற்கு நிறைவு தந்தது.
    நண்பர்கள் பார்வைக்குப் பள்ளி, பங்கேற்ற மாணவர், முதுநிலை ஆசிரியர் திரு சரவணன் படங்கள் பகிர்ந்துள்ளேன்.

    Share
  • விலைபோகும் விளை நிலங்களும், தொடரும் தவறான அணுகுமுறைகளும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    வாய்க்கால் பாசனம் பெறக்கூடிய விளை நிலங்கள் இன்று விற்கப்பட்டு அவைகளில் உயர்ந்த கட்டிடங்கள் கட்டப்பட்டோ அல்லது மாற்று வழி பயன்பாட்டிற்கோ கொண்டுவரப்படுகின்றன. குளங்களும், வாய்க்கால்களும் தூர் வாரப்பட்டு பாசனத்திற்கு பயன்படுத்தும் நிலை மாறி அவைகள் அழிக்கப்பட்டு மனை நிலங்களாகப் பிரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. நல்ல குளப் பாசனங்கள் பெறும் ஒரு சில விளை நிலங்களும் மனைகளாகப் பிரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இந்த நிலை பாரபட்சமில்லாமல் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறுகின்றன. இதனை எந்த அதிகாரிகளும், கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. இவ்வாறு விவசாய விளை நிலங்கள் மாற்று வழிகளுக்குப் பயன்படுத்தப் பட்டால் இன்னும் குறுகிய காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்பதில் ஐயமில்லை. அரசு இதில் கவனம் செலுத்தி விலை நிலங்கள் காக்கப்பட்டு வருங்காலத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படாமல் காக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது. அரசு, இந்த விற்பனையை உறுதி செய்பவர்கள், ஆவண பதிவாளர்கள் போன்றவர்கள் மூலமாகவோ அல்லது கிராம நிர்வாக அதிகாரிகள் மூலமாகவோ விளை நிலங்கள் பாழ்படுவதைத் தவிர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டியது உடனடித் தேவை.

    ரயில்வே நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே இன்று பயணிகள் கட்டணம் 14.2 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சரக்குக் கட்டணமும் 6.5 சதவிகிதம் கூட்டப்பட்டுள்ளது. இதற்கு நிர்வாகம் கூறக்கூடிய காரணம் நிதி பற்றாக்குறை என்பதே. ஒவ்வொரு அரசும் நிதிநிலை பற்றாக்குறை என்று கூறி பயணிகள் கட்டணத்தையும், சரக்குக் கட்டணத்தையும் உயர்த்துவதே வழமையாகக் கொண்டுள்ளது. பற்றாக்குறையை சரி செய்வதற்கு மாற்று வழியை சிந்திக்க வேண்டியதை விடுத்து கட்டணத்தைக் கூட்டி மக்களின் தலையில் சுமையை அதிகரிப்பது வருத்தத்திற்குரிய விசயம். பயணிகளுக்குப் பயன்படும் தனியார் உணவகங்கள் அனைத்து புகைவண்டி நிலையங்களிலும் கொண்டுவருதலும், அங்கு பயன்படுத்தாமல் இருக்கக்கூடிய பரந்த இடங்களில் எரிபொருள் விற்பனை நிலையங்கள் கொண்டு வருதலும், மின்சார ரயில் அதிகமாகப் பயன்படுத்தும் நேரங்களில் சூரிய ஒளி மின்சாரம் பயன்பாட்டிற்குக் கொண்டு வருதலும், நவீன முறையில் விளம்பரங்கள் செய்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தினால் கிடைக்கும் அதிகப்படியான வருமானம் மூலமாக இந்தப் பற்றாக்குறையை சரி செய்ய முடியும் . இது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளில் அரசு ஈடுபடுவதால் மக்கள் சுமை ஏறாமல் இருப்பதோடு, வேலை வாய்ப்புகளும் கூடுகிறது.

    மற்ற ஆட்சிகளைப் போலவே பாரபட்சமே இல்லாமல் விலை உயர்வுக்கு வரி விதிப்பே இந்த ஆட்சியிலும் காரணமாகியிருக்கிறது. சர்க்கரை ஆலைகளில் 4000 கோடி ரூபாய் வட்டி இல்லாத கடனாக அளித்து விவசாயிகளின் பாக்கிகளை நேர் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதுவுமின்றி அவர்கள் கட்ட வேண்டிய சுங்க வரி செலுத்துதலையும் ஐந்து ஆண்டுகள் வரை காலக்கெடு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆலைகளுக்கு கரும்பு வந்தவுடன், அதிலிருந்து சர்க்கரை எடுக்கப்பட்டு, ஆலைகளை விட்டு அது வெளியேறும்போது சுங்க வரியுடனும், அவர்களுடைய இலாபத்துடனும், பணமாகப் பெற்றுக்கொண்டு அதற்குப் பிறகே சர்க்கரை வெளியேறுகிறது. இது ஒரு கிலோ சர்க்கரையாக இருப்பினும் அல்லது 120 மூட்டை (12 டன்) ஏற்றக்கூடிய அளவாக இருப்பினும் ஆலை முதலாளிகள் பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகே சர்க்கரை வெளியேறுகிறது. இப்படி ஒரு நிலையில் 4000 கோடி ரூபாய் வட்டியில்லாத கடன் அளித்தும், சுங்கவரி கட்டுவதற்கும் காலக்கெடுவை நீட்ட வேண்டிய தேவை என்ன என்ற ஐயமும் எழுகிறது. ஏழை விவசாயிகளின் கரும்புக்குத் தர வேண்டிய தொகையைக் கொடுக்காமல் இயங்கக் கூடிய ஆலைகளின் நிர்வாகத்தை சீர் செய்யவேண்டியதும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டியதும் அரசின் கடமை. அது போலவே ஆலைகளில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களைக் காப்பதும் அரசின் கடமை. நிர்வாகங்கள் செய்யக்கூடியத் தவறுகளால் வறுமையின் காரணமாகத் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் விவசாயிகளைக் காக்க வேண்டியது அவசியம். திரு மோடி அவர்களின் அரசு மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கும் நிலையில் இது போன்ற முக்கிய பிரச்சனைகளில் அரசு கவனம் செலுத்தி நம் பொருளாதார நலிவுகளுக்கு முக்கிய காரணமாக இது நாள் வரை இருந்த நிர்வாகச் சீர்கேடுகளை சீர் செய்து வளமான பொருளாதாரத்திற்கு வழி வகுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இறக்குமதி செய்யக்கூடிய சர்க்கரைக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தியதால், ஒரு கிலோவிற்கு 10 ரூபாய் விலை ஏற்றம் மக்களுக்குச் சுமையாகியுள்ளது. விலை ஏற்றத்தைத் தவிர்க்காமல் விலை ஏற்றத்திற்கு அரசு துணை போவதால் பண வீக்கம் அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாமல் போகும்.

    Share
  • சொட்டு மருந்து … 1

    –இன்னம்பூரான்.

    Evening-Tamil-News-Paper_96997797490

    சிறு துளி பெருவெள்ளம். இதுவும் அதுவுமாக சட்டம், தணிக்கை, விழுப்புணர்ச்சி, ஆலோசனை நேரம் போன்ற தகவல்களை தொகுத்தும், அவிழ்த்தும், சங்கிலித்தொடராகவும், தனிமொழியாகவும், அவ்வப்பொழுது சிறு துளிகள், உஜாலா சொட்டு நீலம் போல் இங்கே காட்சி தருகின்றன. அவற்றால் ஏற்படும் பிரகாசமோ, பெருவெள்ளமோ, உமது பாடு.

    உலகமெங்கும் வினாடி தோறும் பற்பல நிகழ்வுகள்.

    சில வியக்க வைக்கின்றன; மீனா ஐஏஎஸ் பாஸ் செய்து விட்டார். இத்தனைக்கும் அவர் தன் கையால் பரிக்ஷை எழுதவில்லை. ஆள் வைத்து எழுதினார். படித்தது மற்றவர்கள். அதை உள்வாங்கியது, அவர். செவிவாய் செய்திகளை அவர் ஜீரணம் செய்த விந்தை சாகசம் பற்றி கேட்கும்போது, நமது மனம் பாகாய் உருகி விடுகிறது. சர்வ வல்லமை புகழ் ஆண்டவனே! உனக்கு கண் இல்லையா? உங்களுக்கு ஹெலென் கெல்லரை பற்றியும், வேத் மேஹ்த்தா பற்றியும் தெரியுமோ?  ஆம். மீனாவும், அந்த சாதனையாளர்களைப்போல, கண்பார்வை இழந்தவர். நேர் காணலில் அவரளித்த பதில்கள் பொன் வாக்கு.  வாருங்கள். அவரை வாழ்த்துவோம்.

    “பெண்புத்தி பின்புத்தி”,”ஏழை சொல் அம்பலம் ஏறாது.” “இஸ்லாமில் பெண்களுக்கு மதிப்பில்லை.” இது போன்ற குப்பைகளை அகற்றுங்கள் என்கிறார், சுல்தானா பேகம். ஷிமோகா-வாழ் பெண்ணரசியான இவர், சிசேரியன் அறுவை சிகிச்சையில் திருமகனை பெற்றவர். மயக்கம் தெளிந்தவுடனேயே, ஆசிரியர் தகுதி தேர்வு எழுத போய்விட்டார். இடது கையில் ஐ வி.திரவம், ஊசி மூலம். வலது கை பிடித்தது, பேனாவை. உறுதுணை: வாடகை வண்டி ஓட்டுனராகிய கணவர், அஹ்மத். மகவை பார்த்துக்கொண்டது அம்மாவும், மாமியாரும். வசதி செய்து கொடுத்தவர்கள், தேர்வு மைய அதிகாரிகள். என் மகன் கூட ஆஸ்பத்திரியிலிருந்து போய் தான், முதல் வருட டாக்டர் பரிக்ஷை எழுதினான். மூன்றாவது மாடியில் பரிக்ஷை. இவனுக்கு தனி அறை, கீழே. எழுதும் விரல் ஒரு விபத்தில் நசுங்கியும் ஐ.ஏ.எஸ். எழுதிய எனக்கு ஒரு உதவியும் கிட்டவில்லை. எழுத்து கோணா மாணா என்று மார்க் குறைத்திருப்பார்கள்!அது அந்த காலம்.

    ஒரு மடலாடலில் படைப்பாற்றல் பேசப்பட்டது. ஒரு எட்டு வயது சிறுவனின் அபாரமான படைப்பு. ஆம். சிந்தனை ஒரு கொடுப்பினை. அதை விட பெரியது கற்பனை. கற்பனை இல்லையேல், இலக்கியம், கலை, அழகு, சுவை, மொழி எல்லாமே சூன்யம். முருகன் என்ற பெரிய கயிறை பற்றியும், வள்ளி என்ற சிறிய கயிறை பற்றியும் எழுதிய மகா கவி பாரதியார், வாயு தேவனையும், தன்னையும் முன்னிறுத்தி, ஒரு காதல் அமர காவியம் படைத்து விட்டார். கற்பனை வளத்தைப் பேணாத கல்வி, ஏட்டுச்சுரைக்காய்.

    ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயிலாண்டி. நுகர்வோர்கள் அந்த ரகம். அவர்களை துரும்பாக மதிப்பவர்கள் பெரிய மைனரும், சின்ன மைனரும். ஆனால், இந்த நுகர்வோர் நீதி மன்றங்கள் மடியில் கை வைத்து நாடி பார்க்கிறார்கள்; நாட் அல்வேஸ் என்றாலும். ‘force majeure’ என்ற லத்தீன் சொல்லுக்கு பொருள்: கடவுள் துணை? இல்லை. கடவுள் துணை இல்லை. கடவுள் செய்த தீவினை -உதாரணம்: சுனாமி.

    வேளாண்மை செய்ய சென்ற ‘ரூம் பாட்ச்சா’ அறுந்து கிடந்த மின்கயிறு தாக்கி மரணம்: செப்டம்பர் 4 , 2009. அவரது மனைவியும், மகன்களும், விபத்தின் காரணம் மின்வாரியத்தின் பரிமாரிப்பு கடமை தவறுதல் என்று குற்றம் சாட்டி, ரூ.6 லக்ஷம் நஷ்டஈடு கேட்டார்கள். ‘சே! சே! அதெல்லாம் ஆண்டவன் தீவினை என்று சொல்லி, ‘போடா பொக்கை’ என்று உதறி விட்டனர், மின் வாரியம். ‘டெக்னிகல்’ என்று சொல்லப்பட்ட மண்ணாங்கட்டி வாதங்களை தீர விசாரணைக்குப் பின் நிராகரித்த சென்னை உச்ச நீதி மன்றம் சொன்னது:

    ‘அறுந்த மின்கயிறு அடித்த ஷாக் என்பதை மின் வாரியம் ஒத்துக்கொண்டதும், பின்னர் செய்த சீரமைப்பும் ஆவணங்களில் உள்ளன. ஒம்மாச்சியை குற்றம் சொல்லாதே. ரூ 5 லக்ஷம் நஷ்ட ஈடு.’

    தர்மமிகு சென்னையில் நூற்றுக்கணக்கான இடங்களில் மின்கயிறுகள் தாறுமாறாக  தொங்கலாட்டம் போடுகின்றன. மாநிலம்/ தேசம் முச்சூடும் அதே. யாராவது சாகுவதற்கு முன், விழிப்புணர்ச்சி இயக்கம் நடத்துங்கள்.

    மற்றொரு இளிச்சவாயன். திரு. எஸ். நாகராஜன்,”மேக் மை ட்ரிப்” என்ற சுற்றுலா கம்பெனியிடம் ரூ.90.000/- கட்டி, குடும்ப சுற்றுலாவுக்கு பதிவு செய்தார். சிலருக்கு வீஸா கிடைக்காததால், ரத்து செய்ய கோரினார். ஒரு மாதமே இருக்கும் காலகட்டத்தில் ரத்து செய்தால், ஒரு காசு கூடக்கிடைக்காது என்று போட்ட கண்டிஷனை காட்டி, ‘போடா பொக்கை’ என்று விட்டார்கள். அந்த கண்டிஷனே தப்பு என்று அந்த தன்னிச்சை கண்டிஷனையே நிராகரித்து, ரூ. 90,000/- + நஷ்ட ஈடு ரூ.7,000/- திரு.நாகராஜனிடம் கொடுக்கும்படி ஆணையிட்டது. You must always read the fine print.

    வீராதி வீரன்! சூராதி சூரன்! யாரு? ஆர்.கே.சத்பதி, ராணுவ மைய விஞ்ஞானி (DRDO). அய்யா ஹைதராபாத் போன இடத்திலெ, ஒரு கலாட்டா.  போறாத காலம். போறப்போக்கில், ஓடிப்போன இளைஞன், இவரை கத்தியால் குத்தி விட்டான்.  ரத்த மயம். வலி பொறுக்காவிடினும், மனம் தளராமல், தானே நடந்து சென்று போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளித்தார். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்னால், ‘மஞ்சள் பத்திரிகை’ புகழ் லக்ஷ்மீகாந்தன் மாம்பலம் சாரங்கபாணி தெருவில் ரிக்க்ஷாவில் வரும் போது, ஒருவன் வயிற்றில் குத்த, ஒரு கையால் குடலை அமுக்கிக்கொண்டு, ஒரு கையால் குத்தியவனை பிடித்துக்கொண்டு, போலீஸிடம் போனதாக, படித்த ஞாபகம். பாடபேதம் இருக்கலாம்.

    சித்திரத்துக்கு நன்றி:http://www.tamilmurasu.co.in/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_96997797490.jpg

    Share
  • உன் புன்னகை மறையாது…

     

    தாரமங்கலம் வளவன்

     

     

    இன்றைய நான்

    நீ சிந்திய வியர்வையினால் வந்தது..

     

    எனக்காக

    நீ இழந்ததை எல்லாம்

    என்னால் திருப்பி தர இயலாது…

     

    நீ பட்ட அவமானங்கள்

    நீ அமைதியாய் ஏற்றுக் கொண்ட வசவுகள்

    நீ தொலைத்த இளமை என்று

    நீ எனக்காக இழந்தவை எதையும்

    என்னால் திருப்பித்தர இயலாது..

     

    ஆனால் இன்று

    நீ பெற்ற இந்த புன்னகையை

    நீ இழக்காமல்

    என்னால் பார்த்துக் கொள்ள முடியும்..

     

    உன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாமல்-

    இன்று நிமிர்ந்த உன் தலை

    இனியொரு முறை கவிழாமல்-

    நீ பெற்ற இந்த புன்னகை

    உன் கடைசி பயணத்தில் கூட

    உன் முகத்திலிருந்து மறையாமல்-

    நான் பார்த்துக் கொள்வேன்.

     

    அதைத் தவிர நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்..  

     

    Share
  • காற்று வாங்கப் போனேன் (12)

    கே.ரவி-

    ‘நந்திவர்மன்’ நாடகம். அதில் நந்திவர்ம பல்லவனாக நான் நடிக்கிறேன். நந்திவர்மன் சகோதரன் காடவர்கோன் என்ற புலவனாக நண்பன் சுகி சிவம் நடிக்கிறான். நாடகம் அரங்கேறும் இடம், சென்னை, புனித தோமையர் தேவாலயத்துக்கு எதிரில் உள்ள சாந்தோம் உயர்நிலைப் பள்ளி வளாகம். நாடகத்துக்குத் தலைமை, அப்போதுதான் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த அறிஞர் அண்ணா. 1968-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி என்று நினைக்கிறேன்.

    kr

    நாடக உருவாக்கம் எங்கள் தமிழ் ஆசிரியர் தண்டமிழ்க் கொண்டல் சிதம்பரம் சுவாமிநாதன். மிகுந்த எதிர்பார்ப்போடு பெருந்திரளாகக் கூடியிருந்த மக்கள் கூட்டம். பின்னாளில், ‘ஆயிரம் நிலவே வா’ என்று எம்.ஜி,ஆரை அழைத்துத் திரைப்படத் துறையில் பிரபல பாடலாசிரியராகப் போகும் புலவர் புலமைப் பித்தன் அப்பொழுது சாந்தோம் உயர்நிலைப் பள்ளியின் தமிழ்த்துறையில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அண்ணாவின் தீவிரத் தொண்டராக அரசியலிலில் கால்பதித்திருந்த அவர் நந்திவர்மன் நாடகத்தில் தண்டமிழ்க் கொண்டல் எழுதியிருந்த அழகுதமிழ், அடுக்குமொழி வசனங்களுக்கெல்லாம் கைத்தட்டலோடு, விசிலும் அடித்துக் கொண்டிருக்கிறார். அந்த அளவுக்கு ஆர்வத் துடிப்பு மேலோங்க எல்லாரும் காத்திருக்கின்றனர், அண்ணாவின் வருகைக்கு.

    சிவமும், நானும் பொழிந்து தள்ளும் அடுக்குமொழி வசனங்களுக்கெல்லாம் பலத்த கரகோஷம் காதைப் பிளக்க, அப்போது மேடையில் அவன் வருகிறான். அவன் யார்? என் இனிய நண்பன்; அன்றைய தமிழ்நாட்டு அமைச்சர்கள் பலர் தமிழில் தேர்ச்சி பெறக் காரணமாயிருந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் அ.சிதம்பரநாதன் செட்டியாரின் சகோதரி மைந்தன்; பின்னாளில், கவிஞர் வசந்தப்பிரியன் என்று புகழ்பெற்றுச் சமீபத்தில், அகால மரணத்தால் அமரனாகிவிட்ட அன்றைய அமிர்தலிங்கம். அவன் நந்திவர்ம பல்லவனின் அமைச்சராக அந்த நாடகத்தில் நடிக்கிறான்.

    நாடகக் கதை நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். நந்திவர்மனை வீழ்த்தி விட்டுத் தான் நாடாள வேண்டும் என்று அவன் தம்பி காடவர்கோன் திட்டமிடுகிறான். நந்திவர்மனோ மாவீரன். மன்னிக்க வேண்டும், இன்றுபோல் அன்று அந்தச்சொல் ஒரு கெட்ட வார்த்தையில்லை!. மாவீரன் ஆனாலும் அவன் தமிழ்ப்பித்தன். எனவே அவனைப் போர்க்களத்தில் வீழ்த்துவதைக் காட்டிலும் மிக எளிதாகத் தன் புலமையால் வீழ்த்திவிட எண்ணிக் காடவர்கோன் தன் அண்ணா நந்திவர்மன் மீது அறச்சொற்கள் விரவிவரும் வண்ணம் பாடல்கள் புனைகிறான். அப்பாடல்களைப் பாடக் கேட்டால் நந்திவர்மன் தீப்பற்றிக் கொண்டு கருகிப் போய்விடுவான். இதுதான் அவன் திட்டம். பாடல்கள் தயார், ஆனால், கடைசி நேரத்தில் சகோதர பாசம் மேலிட்டுத் தடுக்க, அந்தப் பாடலைப் பாட அவன் மறுக்கிறான். அவன் பாடத் தான் கேட்டால் எரிந்து விடுவோம் என்று தெரிந்த பின்னும், தமிழார்வத்தால் அவன் பாடியே தீர வேண்டும் என்று நந்திவர்மன் தூண்டுகிறான். காடவன் தொடர்ந்து மறுக்க, அவன் பாடத்தான் வேண்டும் என்ற அரச கட்டளையோடு, அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்து “காடவா” என்று நந்திவர்மன், நான் தான், கர்ஜிக்க வேண்டும், உடனே வேறு வழியின்றித் தழுதழுத்த குரலில், “பாடவா” என்று காடவனாக நடிக்கும் சிவம் கேட்டுவிட்டு அறம் பாட வேண்டும். இப்படித்தான் காட்சியமைக்கப் பட்டிருந்தது.

    உணர்ச்சி வேகத்தில், ‘காடவா’ என்ற முழக்கத்தோடு நான் சிவத்தின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை, நிஜமாகவே, பலமான அறை, பளார் என்று அடித்துவிட, நிஜமாகவே வலிபொறுக்க முடியாமல் சிவம், ‘பாடவா’ என்று குரல் தழுதழுக்கச் சொன்னதும் எல்லாரும் பலத்த கரகோஷம் எழுப்ப, அந்தச் சத்தம் ஓயவே சற்று நேரமாகியது.

    எப்படியும் தானும் கைத்தட்டல் வாங்க வேண்டும் என்ற ஆவலில், நாடக எழுத்துருவில் இல்லாத, தண்டமிழ்க் கொண்டல் எழுதாத ஒரு சுயவசனத்தைச் சொல்லிக் கைத்தட்டலும் வாங்கி விடுகிறான், அமைச்சனாக நடிக்கும் நண்பன் அமிர்தலிங்கம். எப்படி? அது என்ன வசனம்? இப்போது காட்சியைப் பார்ப்போம்.

    காடவன் அறம்பாடுகிறான்:

    வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
    வையகம் அடைந்ததுன் கீர்த்தி
    கானுறு புலியை அடைந்ததுன் வீரம்
    கற்பகம் அடைந்தவுன் கரங்கள்
    தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
    செந்தழல் புகுந்ததுன் மேனி
    யானுமென் கவியும் எவ்விடம் புகுவேம்
    நந்தியே எந்தயா பரனே

    இப்படித் தான் தண்டமிழ்க் கொண்டல் நந்திக் கலம்பகப் பாடலை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தார். பல பதிப்புகளில் வெவ்வேறு வடிவில் உள்ளது இப்பாடல். ஆனால் மேற்சொன்ன பாடமே மற்றவற்றைக் காட்டிலும் பொருத்தமாகவும், சிறப்பாகவும் உள்ளது என்பது என் பணிவான கருத்து.

    அறச்சொற்கள் மிகுந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் நந்திவர்மனாகிய என்னைச் சுற்றி எரிதழல் மூண்டெழ, நான் அத்தழலில் உயிரிழக்க, அப்போது அமைசச்சர், அதுதான் நம் அமிர்தலிங்கம் தன் சுயவசனத்தைப் பேசிக் கைத்தட்டல் வாங்குகிறான். அந்த சுயவசனம் இதுதான்: “ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்ட அண்ணா மீண்டு வருவாரா” என்று நந்திவர்மனின் தம்பி காடவனிடம் அமைச்சராக நின்று அமிர்தலிங்கம் பேசுகிறான்.

    காட்சி முடிந்து திரை விழுகிறது. அமிர்தலிங்கத்தின் கன்னத்தில் பலமாக ஓர் அறை விழுகிறது. அடிப்பவர் எங்கள் ஆசான், நாடக ஆசிரியர் தண்டமிழ்க் கொண்டல். “ஏற்கனவே அறம் பாடும் நாடகத்தில் இப்படி நீவேறு சொந்தச் சரக்காக அறம்பாடி விட்டாயே! மாண்ட அண்ணா என்று சொல்லி விட்டாயே!” என்று அவர் குமுறுகிறார். திரைவிழும் முன் ஓர் அறை விழுந்தது; திரை விழுந்ததும் ஓர் அறை விழுந்தது. முதலில் சிவத்துக்கு, அடுத்தது அமிர்தலிங்கத்துக்கு. மொத்தத்தில் அன்றைய நாடகம் இரண்டு அறைகளோடு நிறைவுபெற்றது.

    அடுத்த ஆண்டே, அதே மாதம் அதே நாளில் அறிஞர் அண்ணா மாண்டார் என்ற செய்தி இடிபோல் செவிப்பறையில் பலத்த அறையாக விழும் என்று அப்பொழுது யார் நினைத்திருக்க முடியும்?

    என்ன சிகா, இப்பொழுது புரிந்து கொண்டாயா, சொல்லின் வலிமையை. கவிஞன் அழைத்தால் அமாவாசையன்றும் நிலா வரும். இசைக்கவி ரமணனின் அருட்குறளில் வருவது போல், தீயென்றால் காடெரியும், தேன் என்றால் பூ மகிழும். அதுதானப்பா வாய்நின்ற பேரருள் வாக்கு!

    சிகா முணுமுணுக்கிறான்: “மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்!”

    முணுமுணுக்காதே சிகாமணி! மந்திரங்கள் முணுமுணுப்பதற்கல்ல. முழங்குவதற்கு.

    நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
    சுற்றி வந்து முணுமு ணென்று சொல்லும் மந்த்ரம் ஏதடா
    நட்ட கல்லும் பேசுமோ நாதனுள் இருக்கையில்
    சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

    சிவவாக்கியர் சொன்ன சட்டிக்கும், சட்டுவத்துக்கும் தெரியுமோ என்னமோ, எங்கள் வீட்டுச் சட்டுவத்துக்குத் தெரியும். நேற்றுத் தேங்காய் எண்ணையில் அவியலுக்குத் தாளித்த வாசனை இன்று உருளைக்கிழங்குக் கறியிலும் தொற்றிக் கொண்டிருக்கிறதே! சட்டுவத்தை எப்படித் தேய்த்தாலும் மூன்று நாட்களுக்கு அந்த வாசனை இருக்கிறதே! பூர்வ ஜன்ம வாசனையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் போகாது சாமி! சட்டுவமோ, சத்துவமோ! ராஜஸமோ, பூண்டு ரஸமோ! எதுவானால் என்ன?

    அதெல்லாம் சரி, இப்பொழுது உருளைக் கிழங்குக் கறியின் வாசனை என் மூக்கைத் துளைக்கிறது. சாப்பிட்டுவிட்டு, உண்ட களைப்புத் தீர்ந்த பிறகு மீண்டும் சந்திப்போம்!

    (தொடரும்)

    Share
  • கலங்காதிரு மனமே

    –கவிஞர் காவிரிமைந்தன்.

     

    கலங்காதிரு மனமே

    கலங்காதிரு

    காரைக்குடிக்கருகே ஒரு சிறிய கிராமம்.. சிறுகூடற்பட்டி.. வாணிபக்குலத்தில்  வகையாய் செழித்தவர்கள் மத்தியில் வாழ்க்கையெனும் போராட்டத்தில் வேலைதேடிப் புறப்பட்ட முத்தையா என்னும் இளைஞர்! எட்டாம் வகுப்பு வரை மட்டுமே எட்டிப்பிடிக்க முடிந்த நிலையில் எழுதுதலும் பல்வகை நூல்களைப் படித்தலுமாய்.. இலக்கிய தாகம் கொண்டு தொடங்கிய பயணத்தில்.. பதிப்பகத் துறையில் உதவி ஆசிரியராக .. பணி புரிய விண்ணப்பித்து.. நின்றார் அந்த முதலாளியிடம். அப்போது உன் பெயர் என்ன என்று  கேட்கப்பட்ட கேள்விக்கு விடை தர முத்தையா எடுத்துக்கொண்ட நிமிடம் அரை நிமிடமே.  கற்பனையாக தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயர்தான்.. இதோ கால வரலாற்றில் நிலைத்த புகழுக்கு உரியவராய்.. அவரின் பெயராக நிலைத்துவிட்டது. கண்ணதாசன்..  அந்தக் காலக்கட்டத்தில் கம்பதாசன், வாணிதாசன், என  காளிதாசன் வரிசையில் கவிஞர்கள் புகழ் பெற்றிருக்க.. அதே பாணியில் தன் பெயரை வழிமொழிந்திருக்கிறார்.. கவிஞர்.  அதைக் கேட்ட முதலாளியும்..  ஆம்… நான் கூட கேள்விப் பட்டிருக்கிறேன்.. ஒரு சில கவிதைகள்.. கதைகள் படித்திருக்கிறேன் என்றாராம்..  இதுதான் உலகம்.. அப்படி சூட்டப்பட்ட புனைப் பெயர்தான்.. தமிழ்த் திரையுலகில் .. இலக்கிய உலகில்.. கவிஞர் என்கிற பெயர் உச்சரிக்கப்படுகிற போதெல்லாம் கண்ணதாசனாய் நினைவிற்கு வருகிற வரலாறாய் மாறியிருக்கிறது.

    kkkkஅதைத் தொடர்ந்து.. கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில்.. வாழ்வின் திருப்பமாக.. இயக்குனர் ராம்நாத் அவர்களின் ஆதரவில்.. கண்ணதாசன் திரைப் படத்திற்காக முதன் முதலாய் பாடல் எழுத வாய்ப்பு அமைந்தது.  அந்தப் பாடல் இதோ..  கன்னியின் காதலி திரைப்படத்தில்..

    கலங்காதிரு மனமே
    நீ கலங்காதிரு மனமே
    உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே

    நம்பிக்கையும் ஆறுதலும் என எண்ணிலாப் பாடல்கள் எழுதிக் குவித்த கவியரசர் தனது முதல் பாடலிலேயே முத்திரைப் பதித்திருக்கும் விதம் மெய் சிலிர்க்க வைக்கிறது! மகா கவிஞனே!  உன் யுகம் கவிதைகளின் பொற்காலம்! தமிழ் மொழியை  சிம்மாசனத்தில் அமர்த்தி அழகு பார்த்த முத்தையா என்னுமெங்கள் கண்ணதாசனே..  நின் திறம் எண்ணி வியப்பது.. இப்பாடல் முதல் துவக்கமே என்பேன்!

     

    காணொளி: -http://youtu.be/okJTPVr3bUI

     

    பாடல்: கலங்காதிரு மனமே
    படம்: கன்னியின் காதலி

    கலங்காதிரு மனமே
    நீ கலங்காதிரு மனமே
    உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே

    கடினப்படாமல் ஏதும் கைக்கு வராது
    கஷ்டப்படுவார் தம்மை கை நழுவாது
    அடுத்தடுத்து முயன்றால் ஆகாததெது ஆகாததெது
    ஆண்வாடை கூடாதென்ற அல்லியும் ஒருநாள்
    அர்ஜுனன் வலைதனில் வீழ்ந்தாள் சரியாய்
    (கலங்காதிரு மனமே )

    பகட்டுக்காக உம்மை பார்க்கவே மறுத்தாலும்
    பருவக்காலம் அவளை பாடாய் படுத்திவிடும்
    அடுத்த கணம் உன்மேல் ஆசையும் வைப்பாள்
    ஆஹா என்று முத்தம் கொடுப்பாள்
    (கலங்காதிரு மனமே )

    தனது வருகையைப் பதிவு செய்த முதல் பாடலிலேயே நம்பிக்கை நங்கூரங்களை தந்திருக்கும் அதிசயத்தை என்னென்பது?  வர கவிஞரா மலையரசி அருள்பெற்ற மகா கவியா?  ..

    Share
  • உறவும், நட்பும்!

    -ரா. பார்த்தசாரதி 

    மனிதனே! உறவையும் நட்பையும் உதறிவிடாதே!
    பழகும் விதத்தில் பழகினால் பகையும்  நட்பாகும்!
    மண்எனப்  பிரித்தால் மனிதம் என்றும் சாகும்!
    இனம்எனப் பிரித்தால் இனிமை இல்லாமல் போகும்!

    சொந்தம் என வாழ்ந்தால் என்றும் சுகமாகும்!
    மனிதநேயத்துடன்  வாழ்ந்தால் என்றும் நலமாகும்!
    பாசத்தையும் நேசத்தையும் பாலமாக அமைத்திடு!
    சாதி மத பேதத்தை வேரோடு அழித்திடு!

    வயதிற்கும் படிப்பிற்கும் என்றும் மரியாதை கொடுத்திடு!
    நட்பும் உறவும் உன் உடன்பிறப்பு  என நினைத்திடு!
    மன்னிக்கத் தெரிந்த மனிதனை நல்லவன் எனக் கருதிடு!
    கோபத்தையும் ஆணவத்தையும் அடக்கி உறவினைக் காத்திடு!

    Share
  • திருமால் திருப்புகழ் (122)

    கிரேசி மோகன்

    Bhagavatha: The story of Rama Keshav
    Bhagavatha: The story of Rama
    Keshav

    கண்ணன் திருப்புகழ்….
    ——————————————-
    ”கண்ணன் வெண்பாக்கள்’’
    ———————————————–
    ராமன் வெண்பா
    ——————————-

    Sri Rama   - Keshav
    Sri Rama – Keshav

    அவனியைக் காக்க, அவதார மாக,
    நவமியில் வந்தோய் நினக்கு, -உவமையாய்,
    தந்தைதாய் போற்றியொரு, தாரத்துடன் வாழ,
    சிந்தையை ராமா செலுத்து….(246)

    தீதண்ட வந்தாலும், மோதுண்டு மாய்ந்திடும்,
    ஸ்ரீமுண் டகத்தாய் சமேதனாய், -கோதண்ட,
    ராமனையே எண்ணியி, ராப்பகல் வாழ்வோர்கள்,
    காமனையே வெல்வார் களித்து….(247)….
    ———————————————————————————————————-

    விடையேழ் அடக்க, வளைக்கரம் கொண்ட,
    இடையா எனையடக்கு ஏறே, -தடையான,
    பாழும் வினைகளும், பஞ்சப் புலன்களும்,
    வீழ வகைசெய் விரைந்து….(248)

    ஆயர்தம் சேயினை, ஆசையோ(டு) ஆய்ந்திட,
    ஆயிரம் பேருண்டு ஆயினும், -மாயிருள்
    சாயலான் கட்டுண்டு, சாதுவாய் நிற்பது
    தாயுரை தாமோ தரன்….(249)

    பேரா யிரமோதி, நாரா யணன்சீரை,
    பாரா யணம்செய்வாய் பாழ்மனமே, -ஆரா,
    அமுதனைப் பாடு, அனுதினம் நாடு,
    குமுதமாய்ப் பூத்துக் குலுங்கு….(250)

    சீரவன்காண், பாற்கடல் நீரவன்காண், பாரதப்,
    போரவன்காண், பாண்டவர், நூறவன்காண், -பாரினைப்பூண்,
    மாரவன்காண், உண்கின்ற, சோறவன்காண், உந்தியனல்,
    ஜீரணம்காண், ஜீவனவன் ஜீன்(GENE)….(251)

    ——————————————————————————————————

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/2014_04_01_archive.html

     

    Share
  • காதலால் வாழ்த்துகிறேன்

     
    ( எம். ஜெயராமசர்மா – மெல்பேண் )

     
    காலத்தை வென்று நிற்கும்kana1
    கவி எலாம் தந்தவனே
    ஞாலத்தை மகிழ்விக்க
    நற் கருத்தைத் தந்தவனே
    மூலைக்கு மூலை உந்தன்
    முழுக்கவியும் ஒலிக்கிறது
    பாவாடை போர்த்தி உனை
    பாராட்டி மகிழ்கின்றேன்

    பிறந்த நாள் உனக்கின்று
    பெரியளவில் எடுக்கின்றார்
    பெரி யவரும் சிறியவரும்
    பெருமையுடன் நினைக்கின்றார்
    பெருங் கவிதை தந்தவனே
    பிறந்த நாள் சிறக்கட்டும்
    உறங்கு கின்ற மனிதரெலாம்
    உன்கவியால் விழிக்கட்டும்

    வாழ்த்துகள் கூறுதற்கு
    வரவில்லை தமிழெனக்கு
    வாழநாம் வேண்டுதற்கு
    வழிகள் பல சொன்னவனே
    காலமுள்ள வரையினிலும்
    கவியரசன் நீதானே
    காதலால் வாழ்த்துகிறேன்
    கவியரசே வாழ்த்துக்கள்

    Share
  • கண்ணதாசன் ஒரு சகாப்தம்

    சு. ரவி

     

    திரைப்பாடல்களில் ஒருவரியிலேயே திரைக்கதையைச் சுருக்கித் தரும் திறமையும், வளமான சொல்லாட்சியும், வற்றாத கற்பனை ஊற்றும்.. கண்ணதாசன் ஒரு சகாப்தமாக வாழ்ந்தார்.

    “ரஸமான தத்துவம், ரஸமானதத்துவம்
    ராட்சஸச் சிந்தனைகள்…..”
    “சுட்டெரித்தாலிந்த மேனியும் சாம்பலாய்ச்
    சுடுகாட்டு மண்ணிலுருளும்
    சுவையான பாவலன் போயினான் எனச் சொல்லி
    சொந்தமும் வீடுசெல்லும்…”

    என்ற மரபு வரிகளிலும்,

    “நாயகனைச் சிலை வடிவில் நாட்டி வைத்த சைவர்திருக்
    கோயிலுக்குள் நான் போனேன் தோழீ-நிலை
    கொள்ளவிலை வநதுவிட்டேன் தோழீ!”
    “………………………………………………- இந்தக்
    கொக்குக்குத் தேவைதன் கூரிய மூக்கினில்
    சிக்கிடும் மீன் மட்டுமே-அதன்
    தேவைகள் வாழட்டுமே”
    “தோட்டத்திலே தென்னை இரண்டு
    முற்றித் திரண்டு
    பக்கம் உருண்டு”

    போன்ற சிந்து நடையிலும்

    “மெத்தைச் சுகத்துக்கும் மேலெழுமோர் வேட்கைக்கும்
    தத்தைச் சுகத்துக்கும் தத்தளிக்கும் ஆசைக்கும்..
    எத்தைத் தான் நம்புவதோ எதனைத் தான் நாடுவதோ
    அங்கொருகால் இங்கொருகால் ஆடும் சிறுமனமே”

    போன்ற சுயதரிசனக் கவிதைகளிலும்,

    பழுத்த ஆன்மிகவாதியாகத் தன் அர்த்தமுள்ள இந்துமதம் கட்டுரைகளிலும் பலபரிமாணங்களில் மின்னிய கவியரசரை மரியாதையுடன் நினைவு கூர்கிறேன்.

    ” படகோடு கங்கை குகனாக வேண்டும்
    பணிவான ஆசை ரகுராமா”

    என்கிற அவர்தம் வைரவரிகளுக்குக் காணிக்கை யாக இந்த ஓவியத்தை சமர்ப்பிக்கிறேன்!

    5DABB29D-9765-4862-AB7B-BD87167F448E

     

    B82CEDAF-888E-4292-AA72-B97ACD0922C0

    சு.ரவி

     

     

    Share
  • பால்கி என்று சொல்லப்படும் பல்லக்குப் பயணம்

    — சு.ரவி.

    வணக்கம், வாழியநலம்

    one-A433C84C-FEF4-43C3-B40C-C66B85662B48

    இன்று பால்கி என்று சொல்லப்படும் பல்லக்குப் பயணம்.

    ஆடிப் பட்டம் விதைத்து நடவு முடித்த விவசாயப் பெருமக்கள் பண்டரிபுரம் நோக்கி 250 கி.மீ நடைபயணம் மேற்கொள்ளும் தினம்.

    மஹான்  ஞானேஸ்வர் மற்றும் மஹான் துக்காராம் ஆகியோரின் பாதுகைகளைத் தாங்கிய பல்லக்குகளை இரட்டைக் காளைகள் பூட்டிய வண்டிகள் சுமக்க, புனே நகரின் அருகில் உள்ள ஆலந்தி மற்றும் தேஹு கிராமங்களில் இருந்து புறப்பட்டுப் பந்தர்பூர் விட்டலனை ஆஷாட ஏகாதசி அன்று தரிசிக்கப் பெருந்திரளாகச் செல்லும் தினம்.

    ஒரே நேரம் சுமார் பத்துப் பதினைந்து லக்ஷம் பக்தர்கள்! ஒவ்வொரு ஆணின் கையிலும் தம்புரா அல்லது டோல்கி அல்லது ஜாலரா.ஒவ்வொரு பெண்ணின் தலையிலும்  ராதையை ஆவாஹனம் செய்த துளசிமாடம்….

    அனைவர் நாவிலும் விட்டலன் நாமம்..அனைவர் பாதங்களிலும்  ஒரு துள்ளல்..

    வீதியெங்கும், விண்வெளியெங்கும் அபங்க முழக்கம்.

    பாண்டுரங்க ஹரி! ராமக்ருஷ்ண ஹரி! என்ற கோஷம்!

    இந்த பக்திப் பரவச வெள்ளத்தைக் காணக் கண்கோடி வேண்டும்.

    புகைப் படங்களையும் என் விட்டலன் ஓவியத்தையும்

    பார்க்க, ரசிக்க.

    two-23991446-E41A-467D-8349-FA18D957A475

    three-3B10E9EE-8C28-497B-AA3B-B18F259B5702

    5795E970-F685-44B6-8FA8-5424D5367122

    Share
  • கலைமகள் வீணை கண்ணதாசன்!- கவியரசு கண்ணதாசன் 88வது பிறந்த நாள் சிறப்புப் பதிவு

    –காவிரிமைந்தன்.

    kkarsu333530

    கவியரசரது சிந்தனையில் பிறந்துவந்த கற்பனையில்
    கொடிகட்டிப் பறக்கும் இனிய பாடல்கள் எத்தனையோ?
    கவிதை நயம், கற்பனை வளம், சொல்லாட்சி, பொருள்நயம் என
    பட்டியலிட்டால் பல காத தூரம் நீளும்!!

    காதலா.. தத்துவமா.. பக்தியா.. பாசமா.. மனித
    உணர்வுகளை வார்த்தைகளால் மீட்டித்தந்த
    கலைமகள் வீணை கண்ணதாசன்!
    ஏகாந்தமாய்.. எழுத்துக்களாய்.. எண்ணமின்னலாய்
    வந்தவையும் இங்கே வரவில் உண்டு!

    எண்ணற்ற கவிஞர்பெருமக்கள் நம் தமிழை எடுத்து ஆண்டாலும்
    என்றைக்கும் நம் நெஞ்சில் கவிஞர் என்றால் ‘கண்ணதாசன்’
    பண்டிதர்மட்டுமே பயின்றிருந்த பைந்தமிழை – இங்கே
    பாமரனும் முணுமுணுக்க வைத்தவர் கண்ணதாசன்!

    உறவுக்கும் பிரிவுக்கும் உயிர்கொடுக்கும் வார்த்தைகளை – நம்
    உள்ளங்களில் பதியவைத்தவர் கண்ணதாசன்!
    அனுபவப் பிழிவுகளின் சாரங்களாம் தத்துவங்கள்!
    அணிவகுத்துப் பாடல்களில் கொடுத்தவர் கண்ணதாசன்!

    கனிந்துருகும் காதலினைக் கெளரவமாய் எழுதிவைத்து
    காலங்களைக் கடந்துநிற்கும் கவியரசர்  கண்ணதாசன்!
    பெருகிவரும் உணர்வலைகள் யாவுமிங்கே ..
    பெரும்பாலும் அவன்வரைந்த பல்லவியில் சரணமன்றோ?

    பொருள் பொதிந்த வேதங்களையும் உள்வாங்கி
    நயமான வார்த்தைகளால் பாடல்தந்து
    எளிமையுடன் எடுத்துச்சொன்னப் பாவலனை..
    எந்நாளும் மறவாமல் நாடு போற்றும்!!

    அழகான வார்த்தை வரும்
    அதற்கேற்ற ஓசை தரும்
    ஆழ்ந்தபல அர்த்தங்களும்
    ஆங்காங்கே நிறைந்திருக்கும்!

    பழகியநல் மொழியினிலே
    பல்லவிகள் கண்திறக்கும்!
    சகஜமாய் நம்முடனே
    சரணங்கள் தொடர்ந்துவரும்!!

    பரபரப்பு மிகுந்திருக்கும் வாழ்க்கையிலே
    படபடப்பு அதிகமாகி வாழுகின்றோம்!
    துடிதுடிப்பு இதயத்திற்கு வேண்டும்தான்
    துவளாமல் இருப்பதற்கு வழிகளுண்டு!!

    அமைதியாய் சிலநேரம் கடக்க வேண்டும்!
    ஆனந்தமாய் சிந்தையது நிறையவேண்டும்!
    அன்புநதி ஓடிவரும் பாதையில்தான்
    இன்பமது கிடைக்குமென்று நாம் அறிவோம்!

    துன்பநிலை என்பதுவும் வந்துபோகும்
    துயரமில்லை என்பதற்கே நெஞ்சம்வேண்டும்!
    கண்ணயர்ந்து உறங்கிவிடும் முன்பாக..
    காதில்விழும் தேனருவி கேட்கவேண்டும்!!

    கவிதையுடன் இசைநடந்து வரும்அழகை
    ரகசியமாய் தென்றல்நமைத் தொடும்விதத்தை
    வரிகளிலே முழுதும்சொல்ல வழிகளில்லை!
    ரகம்ரகமாய் ரசிப்பதற்கு பொருள்களுண்டு!

    புன்னகையும் பூங்காற்றும் நம்மைத்தழுவ
    பூத்திருக்கும் மலரிதழ்கள் போல்சிரிப்போம்!
    கண்ணசைவில் கற்பனைகள் மொட்டவிழ
    கனிந்துவரும் பாடல்களில் நமைமறப்போம்!!

    மானிட வாழ்வியலை மணி மணியாய் வகுத்து – அதில்
    மறைந்திருக்கும் உண்மைகளை தத்துவமாய் கொடுத்து
    மாபெரும் கவியரசராய் உயர்ந்தவர் கண்ணதாசன்!

    “மணி கொண்ட சரம் ஒன்று கனல் கொண்டு வெடிக்கும்” –

    – இராமாயணத்தில் சீதையின் நிலையை (சுயவரம் நடக்கின்ற போது) எடுத்து சொல்லும் விதம் – ராமன் மேல் கொண்ட காதலினால் – அவன் வில்லை வளைப்பானா என்ற கவலை கொண்டு சோகமே உருவாகி இருந்த சீதையின் நிலையை கண்ணதாசன் தனது பாடலில் – கவலை, சோகம், துயரம் கொண்ட சீதையின் கொதிக்கின்ற மூச்சினால் எழுந்த வெப்பக் காற்றினால் அவளது கழுத்தின் மணி மாலை கருகி வீழ்கின்றது – இதை “மணி கொண்ட சரம் ஒன்று கனல் கொண்டு வெடிக்கும்” போன்ற வரிகளால் நிறைத்த கர்ணன் திரைப்பாடல்கள் காலத்தை வென்று இன்றம் கண்ணதாசன் பெயர் சொல்லித் திகழ்கின்றன.

    சொல்லுக்குள்ளே சூத்திரங்கள் இத்தனை இத்தனையா
    எண்ணியெண்ணிப் பார்க்கும்போது எத்தனை வியப்பு!
    ஒற்றைவரியெழுத உனக்குள் ஓராயிரம் எண்ண அலைகள்!
    முத்துக்குளித்தன்றோ முகிழ்த்துவரும் உன் பாடல்!

    தத்துவம் எதுவென்று எவரும் கேட்டால்
    தவறாமல் உன் ஒற்றைப் பாடல் போதுமென்பேன்!

     

    Share
  • திருமால் திருப்புகழ் (121)

    கிரேசி மோகன்

     Bhagavatha - Narakasura vadham - Keshav
    Bhagavatha – Narakasura vadham – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ——————————————————–
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ————————————————–

    Krishna as Andal. #krishnafortoday
    Krishna as Andal. #krishnafortoday

    ஆயிரம் பேருடையான், ஆண்டாளின் தாருடையான்,
    பாயிரம் நாலா யிரமுடையான், -ஆயினன்,
    சீரடைவு கொண்டு, சுமங்கலியாய் வாழ்ந்திட,
    காரடையான் நோன்பில்கால் கட்டு….(240)

    பாம்பில் படுத்தானை, பாரேழ் கடந்தானை,
    தாம்பில் தணிந்து கிடந்தானை, -சோம்பல்,
    கடந்தானை சோகம், இடர்ந்தானை நெஞ்சம்,
    குடைந்தானைக் கண்டுகை கூப்பு….(241)

    காயாம்பூ வண்ணத்தை, கற்றோர்தம் எண்ணத்தை,
    ஆயர்தம் சின்னத்தை மண்ணையுண், -ஓயாத
    மாயத்தை ஒப்பில்லா, சீயத்தை நேயத்தில்,
    தாயொத்த தாயத்தைத் தேடு….(242)

    பட்டும் படாமலே, பாம்பின் தலைமேலே,
    கெட்டும் கெடாமலே கோகுலத்தில், -இட்டும்,
    இடாமலே போரில், இருந்த இடையன்,
    தொடாமல் தகிக்கின்ற தீ….(243)

    ஒருத்தி கருத்தரிக்க, வேறொருத்தி காத்த,
    கருத்த நிறக்கண்ணன் நின்போல், -பிறப்பில்,
    அனாதை ஆனாலும், ஆய்ச்சியர் அன்பால்,
    அனாதி அவன்கதை ஆச்சு….(244)

    ஆவின்தன் கன்றோடு, ஆடிக் கலந்திடும்,
    கோவிந்தன் நாமம் குதூகலம், -யாவும்தன்,
    உள்ளே அடக்கியன்று, உண்டுமிழ்ந்த ஓணத்தான்,
    புள்ளேறும் வாகனனைப் போற்று….(245)

    —————————————————————————————————————

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2014_01_01_archive.html

     

     

    Share
  • கோதண்ட ராமன்

    சு. ரவி

     

    “நீதிதன்னைநிலைநாட்ட-

    நைந்தவர்க்கு வழிகாட்ட

    வேதமந்த்ர சுகமார்க்கம்-மண்ணில்

    வாழ்ந்துகாட்ட வந்த மேகம்”

    என்றும்,

    “விழிகளரவிந்தம்-அதில்

    கருணை மகரந்தம்

    விதி கதி கலங்கவரும் கோதண்டம்”

    என்றும்,

    நணபன், கவிஞன் க.ரவியின் சொல்வண்ணத்திலே தீட்டப்பெற்ற

    கோதண்ட ராமனின் நெடிதுயர்ந்த திருக்க்கோலத்தை, ஶ்ரீவைகுண்டம் கோயிலில் உள்ளபடி

    அனுமன் மற்றும், சீதை சமேதனாகக் கோட்டோவியத்தில்

    முயற்சித்துள்ளேன் (இணைப்பு காண்க). Scroll down

    பார்க்க, படிக்க, ரசிக்க…..

    தனுவினை இடக்கரத்தில்

    தாங்கிடும் தடந்தோள் வீரா

    இனகுலம் விளங்க வந்த

    இணையிலாக் கருணை ஊற்றே!

    அனுமனை வலக்கரத்தால்

    அணைந்து நீ நிற்கும் கோலம்

    மனமெலாம் நிறைத்ததையா!

    மலரடி சரணம் ராமா!

    வில்லிலே வீரம் வைத்தாய்

    விழியிலே ஈரம் வைத்தாய்

    சொல்லிலே வாய்மை வைத்தாய்

    செயலிலே நேர்மை வைத்தாய்

    இல்லிலெம் ஜானகித்தாய்

    ஒருத்தியை இருத்திவைத்தாய்

    கல்லிலும் உயிர்கொடுத்தாய்

    கழலிணை சரணம் ராமா!

    விண்திரள் கார்மேகம் போல்

    விளங்கிடும் கரியமேனி

    கண்களோ பொய்கை பூத்த

    கமலமாய் விரிந்திருக்கும்

    திண்திறல் புஜங்கள் எங்கள்

    துயரெலாம் தாங்கிக் கொள்ளும்

    மண்ணிலே நடந்து சென்ற

    மலரடி சரணம் ராமா!

    கங்கையின் ஓடக்காரன்,

    குகனொரு தம்பி என்றாய்

    அங்கொரு வானரர் கோன்

    அவனையும் தம்பிஎன்றாய்

    வெங்களம் சரண்புகுந்த

    வீடணன் தம்பியானான்

    இங்கெனை ஏற்றுக் கொள்ள

    இன்னுமேன் தயக்கம் ராமா!

    வயோதிகம் நெருங்கும் போது

    வார்த்தையும் வருவதில்லை!

    வியாகுலம் சூழ்ந்த நெஞ்சில்

    விளைவகள் விளங்கவில்லை

    அயோத்தியின் அரசே, நானுன்

    அடைக்கலம், ஏற்றுக்கொள்வாய்!

    தயாபரா! தாமதம் ஏன்?

    தளிர்ப்பதம் சரணம் ராமா!

    AE2C233C-25F8-44A9-8C36-E29CBAB64993

     

    சு.ரவி

     

    Share