கிரேசி மோகன்

Hayagreevar - Keshav
Hayagreevar – Keshav

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)
———————————————————-
’’கண்ணன் வெண்பாக்கள்’’
————————————————-
எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் ‘’செட்டிப் புண்ணியம் அயக்ரீவர்’’ எழுந்தருளியபோது எழுதியவை….
——————————————————————————————————

Dialogues with Arjuna series. #Krishnafortoday Keshav
Dialogues with Arjuna series. #Krishnafortoday
Keshav

 

நிகமாந்த தேசிகன், நாவில் அமர்ந்து,
புகழ்வாய்ந்த பாதுகையைப் பாடி, -அகமகிழ்ந்த,
எண்ணியதை நல்கும், ஏற்றம் தரும்செட்டிப்,
புண்ணியத்தில் வாழும் பரி….(252)

புண்ணியச் செட்டியில், புண்ணாக்(கு) அளித்தனரோ!,
நண்ணிய(து) ஏனங்கு நாலுகாலில்!, -கண்ணனே,
பாரதப் போரில், பழகிய நன்றியோ!
நீரதைப் போலின் நிலத்து….(253)

கொள்ளுக்(கு) அடங்காய், கவிதே சிகன்கூறும்,
சொல்லுக்குள் பாயுமுயர் ஜாதியே, -கல்விக்கு,
வாய்த்த கடவுளே, வாணி அரிதாரா,
போய்த்தவம் செய்யப் பழக்கு….(254)

கட்டுக்(கு) அடங்காது, செட்டிக்குப் புண்ணியத்தை,
கொட்டுமருள் கல்விக் குதிரையே, -குட்டக்,
குளம்பால் தலையில், குருவே வருக,
தளும்பா அறிவினைத் தா….(255)

புல்லும், படிகநீரும், புண்ணாக்கும், கொள்ளும்நான்,
அல்லும் பகலும் அளித்திடுவேன், -மெல்லும்,
தலம்செட்டிப் புண்ணியத்தில், தங்கும் பரியே,
பலனெட்டெட் ஆயகலை போடு….(256)

ஊர்செட்டிப் புண்ணியத்தில், உய்யும் அசுவமே,
மார்தட்டிச் சொல்லும் மடையன்நான், -சீர்கொட்டும்,
வெண்பாக்கள் யாத்துன்மேல், வாழும் வரமருள,
பெண்பால் பாரதியே பார்….(257)

சண்டித் தனமாய், சகத்தில் உழல்கின்ற,
நொண்டிக் குதிரைநான் நாரணா, -அண்டி,
வருவாய் அருகே, குருவாகிக் காட்டு,
பரிமேல் அழகா பரிவு….(258)
—————————————————————————————————————

படங்களுக்கு நன்றி:

http://kamadenu.blogspot.in/2014_04_01_archive.html

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *