உன் புன்னகை மறையாது…
தாரமங்கலம் வளவன்
இன்றைய நான்
நீ சிந்திய வியர்வையினால் வந்தது..
எனக்காக
நீ இழந்ததை எல்லாம்
என்னால் திருப்பி தர இயலாது…
நீ பட்ட அவமானங்கள்
நீ அமைதியாய் ஏற்றுக் கொண்ட வசவுகள்
நீ தொலைத்த இளமை என்று
நீ எனக்காக இழந்தவை எதையும்
என்னால் திருப்பித்தர இயலாது..
ஆனால் இன்று
நீ பெற்ற இந்த புன்னகையை
நீ இழக்காமல்
என்னால் பார்த்துக் கொள்ள முடியும்..
உன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாமல்-
இன்று நிமிர்ந்த உன் தலை
இனியொரு முறை கவிழாமல்-
நீ பெற்ற இந்த புன்னகை
உன் கடைசி பயணத்தில் கூட
உன் முகத்திலிருந்து மறையாமல்-
நான் பார்த்துக் கொள்வேன்.
அதைத் தவிர நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்..