கிரேசி மோகன்

 Bhagavatha - Narakasura vadham - Keshav
Bhagavatha – Narakasura vadham – Keshav

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
——————————————————–
’’கண்ணன் வெண்பாக்கள்’’
————————————————–

Krishna as Andal. #krishnafortoday
Krishna as Andal. #krishnafortoday

ஆயிரம் பேருடையான், ஆண்டாளின் தாருடையான்,
பாயிரம் நாலா யிரமுடையான், -ஆயினன்,
சீரடைவு கொண்டு, சுமங்கலியாய் வாழ்ந்திட,
காரடையான் நோன்பில்கால் கட்டு….(240)

பாம்பில் படுத்தானை, பாரேழ் கடந்தானை,
தாம்பில் தணிந்து கிடந்தானை, -சோம்பல்,
கடந்தானை சோகம், இடர்ந்தானை நெஞ்சம்,
குடைந்தானைக் கண்டுகை கூப்பு….(241)

காயாம்பூ வண்ணத்தை, கற்றோர்தம் எண்ணத்தை,
ஆயர்தம் சின்னத்தை மண்ணையுண், -ஓயாத
மாயத்தை ஒப்பில்லா, சீயத்தை நேயத்தில்,
தாயொத்த தாயத்தைத் தேடு….(242)

பட்டும் படாமலே, பாம்பின் தலைமேலே,
கெட்டும் கெடாமலே கோகுலத்தில், -இட்டும்,
இடாமலே போரில், இருந்த இடையன்,
தொடாமல் தகிக்கின்ற தீ….(243)

ஒருத்தி கருத்தரிக்க, வேறொருத்தி காத்த,
கருத்த நிறக்கண்ணன் நின்போல், -பிறப்பில்,
அனாதை ஆனாலும், ஆய்ச்சியர் அன்பால்,
அனாதி அவன்கதை ஆச்சு….(244)

ஆவின்தன் கன்றோடு, ஆடிக் கலந்திடும்,
கோவிந்தன் நாமம் குதூகலம், -யாவும்தன்,
உள்ளே அடக்கியன்று, உண்டுமிழ்ந்த ஓணத்தான்,
புள்ளேறும் வாகனனைப் போற்று….(245)

—————————————————————————————————————

படங்களுக்கு நன்றி:

http://kamadenu.blogspot.in/2014_01_01_archive.html

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.