Blog

  • சிகரம் நோக்கி – 10

    சுரேஜமீ

    நம்பிக்கை!

    peak11111

    தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும் – குறள்

    உங்கள் குரல் இதனைத் திரும்பத் திரும்பச் சொன்னால், நிச்சயம் முடியாதது எதுவும் இல்லை! இதோ உங்களுக்காக, இன்போஸிஸ் நிறுவனத் தலைவர், திருவாளர். நாராயண மூர்த்தி அவர்கள் ஆற்றிய உரையை அப்படியேத் தமிழில் கவிதையாக விதைக்கிறேன்!

    நம்பிக்கை மலர்கள் பூத்துக் குலுங்கட்டும்!

    பத்ம விபூஷன் திரு. நாராயண் மூர்த்தி அவர்களின் உரை:

    மாதத்தில் இருபத்திரெண்டு நாட்கள்;
    அயல் நாட்டில்;
    எட்டு நாட்கள் என் தாய் நாட்டில்;
    இதுதான் எனது இன்றைய நிலை!

    இத்தகைய சூழலில்
    இந்த குவைத் கன்னட கூட்டா
    அமைப்பின் நிகழ்ச்சியில்
    “தொழில் முனைவோர்”
    என்ற தலைப்பில் பேச
    அழைத்திருக்கிறார்கள்!

    நண்பர்களே; குறிப்பாக இளையோரே;
    தொழில் முனைவோர் எப்படி
    ஒரு சமுதாயத்தை மாற்ற முடியும்
    என்பதை நாம் உணரவேண்டும்!
    தனி நபர் வருமானத்தில்;
    உலகத்தில் முதல் பத்து இடத்தில்
    இருக்கும் குவைத்துக்கும் கூட
    இது பொருந்தும்!!

    தனது “முயற்சியை”,
    குறிக்கோளை, தகுந்த முறையில்
    செல்வம் தரும் வகையில் மாற்றி,
    வேலை வாய்ப்பை உருவாக்கி,
    ஏழ்மையை விரட்டுவோமேயானால்;
    அதுதான், நம் வெற்றியின் அடையாளம்!

    “முடியாதது” எதுவோ; அதை
    “முடியும்” என மாற்றுவதே
    உங்களின் முயற்சியின்
    இலட்சியமாக இருக்க வேண்டும்!

    ஒரு “முயற்சி” வெற்றி பெற
    அடிப்படைத் தேவைகள் என்ன?

    1. நீங்கள் கூறுவது எளிமையாக இருத்தல் அவசியம்;
    கட்டுப்பாடுகள் அற்ற, தெளிவான வார்த்தைகளை
    உபயோகிக்க வேண்டும்;

    உங்கள் முயற்சி ஒரு நிறுவனத்தின்
    2. உற்பத்தி செலவை குறைப்பதாகவோ;

    3. உற்பத்தி சுழற்சியின் நேரத்தை குறைப்பதாகவோ;

    4. சந்தையைப் பெருக்குவதாகவோ;

    5. வாடிக்கையாளரை கவருவதாகவோ;

    இருத்தல் அவசியம்!

    இவை நான்குமோ;
    இதில் ஏதேனும் ஒன்றோ
    உங்கள் முயற்சியில்
    இருந்தால்; நிச்சயம் ஒருநாள்
    உங்கள் இலட்சியம் வெற்றியடையும்!

    உலகில் தொண்ணூற்று ஒன்பது
    சதவிகிதத்தினர்; மற்றவர்
    முயற்சியை; மெருகூட்டி
    வெற்றியடைவதால்; கால
    ஓட்டத்தில்; அவர்களால்
    நிலைக்க இயலவில்லை!

    தன்னுடைய முயற்சி
    வெற்றியடைந்ததால்;
    General Motors; Microsoft;
    Apple; Fed ex போன்ற
    நிறுவனங்கள் நிலைத்து
    நிற்கின்றன!

    உலகின் மாற்றங்களை
    உன்னிப்பாய் கவனியுங்கள்;
    உலக அளவில் ஏற்பட்ட
    நான்கு மாற்றங்கள் தான்;
    நான் அன்று வெறும்
    250 டாலரில் தொடங்கிய
    நிறுவனம் இன்று
    26 பில்லியன் டாலர்
    நிறுவனமாக உயர்ந்து இருக்கிறது!

    முதல் முயற்சி
    தோல்வியில் முடிந்தால்
    மூலையில் உட்கார்ந்து விடாமல்;
    உங்கள் மூளையைத் தீட்டி
    காரணம் அறியுங்கள்!

    ஒன்று; நீங்கள் உங்கள் முயற்சியை
    காலம் தாழ்த்த நேரலாம்!
    இல்லையெனில்,
    உங்களுக்கான சந்தை
    வேறு நாட்டில் இருக்கலாம்!

    வெற்றிக்கு இன்றியமையாத
    அடுத்த தேவை;

    தகுந்த நிபுணர்களை
    தன்னகத்தே கொள்ளுதல்;
    நிதி; மேலாண்மை;
    உற்பத்தி; மனித வளம்
    என்று ஒவ்வொரு துறைக்கும்;
    ஏற்றவாறு; ஒருமித்த
    கருத்துள்ள; நாளைய
    இலட்சியத்திற்காக
    இன்று தியாகம் செய்யத்
    தயாரான; தகுதியான
    நபர்களை உங்களுடன்
    வைத்திருத்தல் அவசியம்!

    இவை அனைத்தும்
    இருந்தாலும்; நம்பத் தகுந்த
    தலைமையாக தாங்கள்
    இருத்தல் அவசியம்!

    தலைமையைப் பற்றி
    ஒன்று சொல்ல விளைகிறேன்!
    அமெரிக்காவில்; பெருந்தொழில்
    அதிபர்களிடையே;
    நான் உரையாடும்போது
    என்னிடம் சிறந்த தலைமைப் பண்பைப்
    பற்றி பேசச் சொன்னார்கள்;

    நான் சொன்னேன்;
    நான் அறையில் நுழையும்போது;
    என்னால்
    ஒரு முகம் மலர்ந்த ஒரு
    மகிழ்ச்சியை;
    என்னை நம்பி வேலை
    செய்யும் சக தொழிலாளர்களிடம்
    ஏற்படுத்த முடிந்தால்;

    அவர்களுக்கு என்னால்
    வாழ்க்கைக்குத் தேவையான
    உபரி வருமானத்தைக்
    கொடுக்க முடிந்தால்;

    நான் ஒரு நல்ல தலைமையாளன்!!
    என்று.
    இவை இருந்து விட்டால்;
    இன்றைய காலத்தில்
    உங்கள் முயற்சியை
    செயல் படுத்த பணம்
    உங்களை நாடி வரும்!

    ஆதலால்; இளையோரே
    தொழில் முனைவோரே;
    இன்னல்களைப் பொருட்படுத்தாது
    இலட்சியங்களை வென்றெடுக்க
    உங்களுக்கு தேவை;

    உங்கள் முயற்சி எதாவது ஒரு
    மாற்றத்திற்கு வித்திட வேண்டும்!
    அதற்கான சந்தை மற்றும் சகாக்கள்;
    நல்ல தலைமைப் பண்பு;
    உங்களிடம் இருத்தல் வேண்டும்!

    வாருங்கள்; வெற்றி நம்
    பக்கத்தில்!!!!!!
    வரலாறு எழுதும் நம்
    பக்கத்தை!!!!!

    ஜெய் ஹிந்த்!!!

    (Padma Vibooshan Sri.Narayan Murthy’s speech at a function organized by Kuwait Kannada Koota on 9th November, 2012)

    தொடர்வோம் நம் நெடிய பயணத்தை………..

    அன்புடன்
    சுரேஜமீ

    Share
  • இறைவன் இருக்கின்றானா ?

    கவிஞர் காவிரிமைந்தன்.

    அவன் பித்தனாஇறைவன் இருக்கின்றானா?

    ‘பூனை ஒன்று குறுக்கே போனது! சகுணம் சரியில்லை என்றார்கள்!
    ஆமாம் என்றான் ஆஸ்திகன்!
    யாருக்கு என்றான் நாத்திகன்? பூனைக்கா??

    ஆஸ்திகத்தின் எல்லைகளையும் நாத்திகத்தின் எல்லைகளையும் கண்ணதாசன் தொட்டுத்திரும்பிய காரணத்தால் இரண்டைப்பற்றியுமே இவரின் சொல்லாட்சி தனித்துவமே!! நாத்திக மேடைகளில் பேசுவதற்கு தேவையான செய்திகளை அறிய கம்பராமாயணத்தைப் படித்த பேரறிஞர் அண்ணா அவர்கள் கம்பரசம் தந்ததுண்டு! கண்ணதாசன் இலக்கியக் களம்புகுந்த காரணமும் அதுதான் என்றாலும், கம்பனிடம் சரணடைந்தார் என்றே சொல்லலாம்! கட்டுக்கடங்காத கற்பனைத்திறன் வளர்க்க, சொல்லாட்சி, எல்லாம் கற்க கம்பராமாயணம் போதும் என்றார்! பன்னிரெண்டாயிரம் செய்யுள்களை மனனம் செய்து பாருங்கள் நீங்களும் கவிஞர் ஆகிவிடுவீர்கள் என்றும் உரைத்தார்.

    அவன் பித்தனா? என்கிற திரைப்படத்தில் ஒரு பாடல்! இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான். அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? திரு.ஆர். பார்த்தசாரதி அவர்களின் இசையமைப்பில் கவியரசு கண்ணதாசன் வரிகள். இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரன், நடிகை விஜயகுமாரியின் நடிப்பில் வினா விடை வகையாக, டி.எம்.எஸ்., பி.சுசீலா குரல்களில் பொங்கிவரும் உணர்ச்சி வெள்ளம்!

    இந்தப் பாடலின் தொடக்க வரிகளிலே ஒரு சூட்சுமத்தைக் கையாண்டுள்ளார் கண்ணதாசன் என்கிறார் கவிஞர் பிறைசூடன் அவர்கள்.

    நான் ஆஸ்திகனானேன் அவன் அகப்படவில்லை
    நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை

    என்ன சொல் விளையாட்டா? இல்லை, தோழர்களே. ஆஸ்திகனுக்கு அகப்படாத இறைவனை நாஸ்திகன் சந்தித்த ரகசியத்தை அதைவிட ரகசியமாய் பதிவு செய்திருக்கிறார். ஆம்!!! இறைவன் பயப்படவில்லையாம்!

    இருந்தால் இருந்த இடம், இல்லையேல் மறந்துவிடும்…
    ஒரு நாள் இருந்த மனம் மறுநாள் இருப்பதில்லை …
    குடிசையில் ஓர் நினைவு, கோபுரத்தில் ஓர் நினைவு …

    என்றும் குறிப்பிட்டு,
    மனிதனை மறந்துவிட்டு வாழ்பவன் இறைவனில்லை …என்கிற வரியோடு நிறைவு செய்யப்பட்டுள்ள பாடல்!

    பாட்டிலே ஒன்று பட்டிமன்றத் தலைப்பாக பல்லவியில் தொடுத்து, இரண்டு அணிகளிலுமே எதிர்த்து நின்று வாதிட்டு இறுதியில் தீர்ப்பும் சொல்லியிருக்கும் கவியரசே! யாருக்கு வரும் இந்தக் கலை?

    இறைவன் இருக்கின்றானா?
    இறைவன் இருக்கின்றானா?
    மனிதன் கேட்கிறான் – அவன்
    இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான் ?
    எங்கே வாழ்கிறான்?
    நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
    நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை

    மனிதன் இருக்கின்றானா?
    மனிதன் இருக்கின்றானா?
    இறைவன் கேட்கிறான் – அவன்
    இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்?
    எங்கே வாழ்கிறான்?
    நான் அன்பு காட்டினேன் அவன் ஆட்கொள்ளவில்லை
    இந்தத் துன்பம் தீர்க்கவும் அவன் துணை வரவில்லை

    கண்ணிலே உறுதியில்லை காதலுக்கோர் நீதியில்லை
    ஒரு நாள் இருந்த மனம் மறு நாள் இருப்பதில்லை
    குடிசையில் ஓர் மனது கோபுரத்தில் ஓர் மனது
    கூடாத சேர்க்கை எல்லாம் கூடினால் பல மனது
    மனிதன் இருக்கின்றானா?

    பார்ப்பவன் குருடனடி படிப்பவன் மூடனடி
    உள்ளதை சொல்பவனே உலகத்தில் பித்தனடி
    நீரோ கொதிக்குதடி நெருப்போ குளிருதடி
    வெண்மையைக் கருமை என்று கண்ணாடி காட்டுதடி
    இறைவன் இருக்கின்றானா?

    ஒன்றையே நினைத்திருந்தும் ஒன்றாக வாழ்ந்திருந்தும்
    பெண்ணாகப் பிறந்தவரை கண்ணாக யார் நினைத்தார்?
    இருந்தால் இருந்த இடம் இல்லையேல் மறந்து விடும்
    இவர்தான் மனிதர் என்றால் இயற்கையும் நின்றுவிடும்
    மனிதன் இருக்கின்றானா?

    சந்தேகம் பிறந்து விட்டால் சத்தியமும் பலிப்பதில்லை
    சத்தியத்தைக் காப்பவனும் சாட்சி சொல்ல வருவதில்லை
    வழக்கும் முடியவில்லை மனிதரின் தீர்ப்பும் இல்லை
    மனிதனை மறந்து விட்டு வாழ்பவன் இறைவன் இல்லை
    இறைவன் இருக்கின்றானா?

    மனிதன் இருக்கின்றானா?

    இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான் – அவன்
    இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? எங்கே வாழ்கிறான்?

     

    காணொளி: https://www.youtube.com/watch?v=WXKbXcbGjyQ

    https://www.youtube.com/watch?v=WXKbXcbGjyQ

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    ”விளக்கீசல் போலே, வியனுலகில் ஈசா,
    உளத்தாசை கொண்டிங்(கு) உதிர்ந்தேன், -அளப்பரிய,
    ஆதியே உந்தனனு பூதியில் மூழ்கிடும்,
    தேதியைச் சொல்லியெனைத் தேற்று….கிரேசி மோகன்….

    Share
  • கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-1

    மதுவருந்தும் அங்காடி

    ajay

    கவிஞானி ரூமியின் கவிதைகள்

    (கி. பி. 1207-1273)

    கவிதை -2 பாகம்-1

    மதுவருந்தும் அங்காடி

    (The Tavern)

    ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    “யாரிங்கு என்னை அழைத்துக் கொண்டு வருகிறாரோ அவர்தான் இல்லத்துக்கும் என்னை இழுத்துக் கொண்டு போக வேண்டும்.

    மது குடிக்கும் அங்காடி ஒரு கீர்த்தி பெற்ற நரகம் ! அங்கே மனித இனம் மகிழ்ச்சியாகத் துயருற்றுச் சத்தியத் தேடலில் பின்தங்கிப் போகிறது ! மதுவருந்தும் கடை ஓர் அபாயக் குடிக் கூடம் ! அங்கே சில சமயம் மாறு வேடம் தேவைப்படுகிறது ! ஆனால் உனது இதயத்தை அங்கு நீ மூடிக் கொள்ளாதே ! அதைத் திறந்து வை ! மன முறிவு, வீதியில் ஒரு கூப்பாடு – இவை மதுக்குடிக் கடைகளிலிருந்து தொடங்குபவை. அங்கிருந்து மனித ஆத்மா தன் இல்லப் பாதை தேடி மீள்கிறது.”

    கவிஞர் ரூமி (The Tavern)

    ரூமியின் கவிதைகள் பன்னாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அவரது ஞானக் கருத்துக்கள் அகில நாடுகளுக்கும் உகந்தவை. கவிஞர் ரூமி கொய்னாவைச் சார்ந்த “மெவ்லெவி மதக்குழு நெறி” (Mevlevi Dervish Order, called Whirling Dervishes) எனப்படும் “இசைப்பா ஆட்டக் குழுவின்” துவக்கப் பிதா. ரூமி இஸ்லாமியர், யூதர், கிறித்துவர் ஆகிய மூன்று மத இனத்தவர் மீதும் சமமான மதிப்பைக் கொண்டவர். பாரசீகக் கவிஞர் ரூமி உலகிலே மிகப்பெரும் “ஸூஃபி மாயப் புதிர்க் கவிஞராக” (Sufi Mystic Poet) மதிக்கப் படுகிறார். ரூமியின் கருத்து : “கடவுளைத் தவிர வேறோர் கடவுள் இல்லை. கடவுள் என்பவர் ஒருவரே.” 1273 டிசம்பரில் ரூமி நோய்வாய்ப் பட்டுத் தன் மரணத்தைத் தானே முன்கூட்டி அறிவித்துப் புகழ் பெற்ற கஜல் (Ghazal) கவிதை ஒன்றை எழுதினார் :

    +++++++++++

    மரண கானம்

    எப்படி நீ அறிவாய்

    என்னுள்ளே துணையாய்

    எத்தகைய

    மன்னவன் ஒருவனை

    மறைத்து வைத்துளேன் என்று ?

    என் பொன் முகத்தை

    நோக்காத வண்ணம்

    உன் ஓரக்கண் பார்வையைத்

    தவிர்த்திடு !

    ஏனெனில் இரும்பால் ஆனவை

    எனது கால்கள் !

    ++++++++++++++++

    கவிதை -2 பாகம்-1

    மதுவருந்தும் அங்காடி

    பகல் பூராவும் சிந்திப்பேன்

    அதைப் பற்றி

    பிறகு இரவில் அதைச் சொல்வேன் !

    எங்கிருந்து வந்தேன்

    நான் ?

    என்ன செய்திருக்க வேண்டும்

    நான் ?

    ஒன்றும் நான் அறிந்திலேன் !

    எங்கிருந்தோ வந்தது

    என் ஆத்மா

    எனக்கது உறுதியாய்த் தெரியும் !

    அங்கு போய்

    அடங்க முடிவில் ஆசை !

    ++++++++++++

    எனக்கு இந்தக் குடிப் பழக்கம்

    வேறோர் மதுக்கடையில் துவக்கம் !

    எனக்கில்லை குடிமயக்கம் !

    முழுச்சுய நினைவிருக்கும்

    மீண்டும் நானங்கு உலவும் போது !

    வேறு கண்டத்துப் பறவை போல்

    ஒரு பெருங் கூண்டுக்குள்

    அமர்ந்துளேன் !

    பறக்கும் நாளும் நெருங்கும் !

    ஆனால்

    யார் உள்ளார் காதருகில்

    என்குரல் கேட்க ?

    யார் பேசுவார்

    என் வாயுடன் சேர்ந்து ?

    ++++++++++++

    அப்பால் நோக்குவது யார்
    என் கண்களோடு ?

    ஆத்மா வென்றால் என்ன ?

    வாய் இனிக்கும் பதில்

    எனக்குள தென்றால்

    இந்தக் குடிச்சிறை

    உடைக்க முடியும் என்னால் !

    நானாகப் பிறந்திலேன்

    இங்கே என் இச்சைப்படி !

    நானதை நீங்கவும் இயலாது

    விருப்பப்படி !

    இங்கு என்னைக் கொண்டு

    வந்தவரே

    இழுத்துச் செல்ல வேண்டும்

    மீண்டும் வீட்டுக்கு !

    ++++++++++++

    இக்கவிதையில் என்ன சொல்வேன்

    என்பதை நான் அறியேன் !

    அதைத் திட்ட மிடுவ தில்லை !

    வெளியே நான் சொல்லும் போதில்

    மிக்க அமைதி யாக இருப்பேன்

    அபூர்வ மாகத் தான் பேசுவேன் !

    ***************************

    தகவல் :

    1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

    Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

    2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

    3. Life of Rumi in Wikipedia

    +++++++

    Share
  • SRI LANKAN HINDU VINAYAKA TEMPLE DESTROYED

    NEWS

    Please pass this news to those concerned for publication in Hindi and Marathi languages.

    SRI LANKAN HINDU VINAYAKA TEMPLE DESTROYED

    TO MAKE WAY FOR BUILDING BUDDHIST VIHARA

    Buddhist monk along with BUDDHIST-SINHALA SRI LANKAN AGRRESSOR military obstruct territorial contiguity of Hindu-Tamil homeland at Kokku’laay

     astt

    An extremist Buddhist-Sinhala monk, Sri Thissapura Gunarathna Thero, who has occupied the lands of Eezham Hindu-Tamils at Kokku’laay, located along the coastal Mullaiththeevu – Batticaloa Road, has deployed the occupying Sri Lanka Army (BUDDHIST-SINHALA SRI LANKAN AGRRESSOR) soldiers to proceed with the construction of the BUDDHIST-SINHALA  Vihara, completely ignoring an interim order issued last week by Mullaiththeevu District Secretariat to not to proceed with the construction of the ‘Sri Sambodhi Vihara’ until the dispute of lands occupied by the Incumbent monk is solved.

    The monk and the soldiers of the occupying army continue to the work despite the pressure and objection coming from the Eezham Hindu-Tamils.

    The area surrounding Kokku’laay is the focus of Buddhist-Sinhala colonisation presently, as it is the key location for wedging the demographic contiguity of the North and East as well as direct communication between Mullaiththeevu and Trincomalee.

    BUDDHIST-SINHALA SRI LANKAN AGRRESSOR has not opened the land link between the North and East through Mukaththuvaaram in Kokku’laay. Instead, the people using the costal road from Mullaiththeevu to Kokku’laay have to travel through the Buddhist-Sinhala settlement in Padaviya and reach Pulmoaddai.

    While BUDDHIST-SINHALA SRI LANKAN AGRRESSOR ‘s ministries are involved in the Buddhist-Sinhalicisation of Kokku’laay using the 1959 declaration of wildlife sanctuary surrounding the areas of the lagoon, the Buddhist-Sinhala monk is deployed with BUDDHIST-SINHALA SRI LANKAN AGRRESSOR military backing to construct the Buddist Vihara as a key installation to facilitate the Buddhist -Sinhalicisation of the strategic strip.

    A section of the lands seized by the monk belong to three Hindu-Tamils, one of them Mr Manivannathas, the son of former postmaster Mr Thirugnanasamapanthan, who had established a Saiva Pi’l’laiyaar koayil (Hindu VINAYAKA TEMPLE) at the location.

    Ven. Gunarathna Thero has also seized portions of public lands that belong to the post office and the base hospital at the site, according to officials at the District Secretariat of Mullaiththeevu.

    A public road has also been absorbed into the Buddhist-Sinhala establishment, Hindu-Tamil villagers say.

    The occupying BUDDHIST-SINHALA SRI LANKAN AGRRESSOR Army soldiers have been deployed on the construction work of the Stupa. They are working in a hurry, probably with a plan to complete the Stupa before the upcoming general elections, the Hindu-Tamil villagers further said.

    In the meantime, BUDDHIST-SINHALA SRI LANKAN AGRRESSOR military intelligence operatives have been threatening the Hindu-Tamil land owners, who staged a peaceful fasting campaign on 05 June 2015 demanding their lands.

    Gunarathana Thero imagines himself as a commander of the BUDDHIST-SINHALA SRI LANKAN AGRRESSOR military in the area, a Hindu-Tamil neighbour told Hindu Vartha

    Three years ago, the Buddhist-Sinhala soldiers had put up a temporary hut for Thissapura Gunarathana Thero with the donations from Sampath Bank.

    A private surveyor, Wilmot Silva, brought down from Maharagama in Colombo by the Thero with the ‘approval’ of the then Divisional Secretary C Dayananda, to surveyed more than three acres of the seized lands in 2012.

    In the meantime, a tube well was dug at the premises and the locality became popular for fresh water.

    The monk transformed the site of the tube well into a ‘Pinthalaya’, a term used for a holy site where Buddhist pilgrims were given potable water at no cost.

    The Pinthalaya was also transformed into a memorial site of two fallen Buddhist-Sinhala military soldiers. The Hindu-Tamil villagers were told to honour the Buddhist-Sinhala ‘war heroes’ each time they went to the Pinthalaya to tap potable water from the locality.

    On 12 June 2015, Land Registry officials who held a mobile service meeting at Mullaiththeevu District Secretariat inspected the land deeds of the original owners of the lands and instructed the Divisional Secretary of Karai-thu’raip-pattu division to issue an interim ban on the construction activities at the Buddhist Vihara.

    The new Divisional Secretary Mr Thiruchelvam Sureshkumar, personally handed over the interim order to the Buddhist-Sinhala monk.

    However, BUDDHIST-SINHALA SRI LANKAN AGRRESSOR soldiers were still continuing the construction work at the site of the Buddhist Vihara, said Northern Provincial Councillor K. Ravikaran, who inspected the site three days ago.

    There is also a court case pending verdict on the land dispute.

    In addition to the buildings of Chamber (a tri-part structure with Buddha statue in the central chamber), bell tower, Stupa (shell dome) which will be 10 meter high to its crest and rested upon a 2-meter high round structure, Dhammasala (preaching hall) with eight peripheral columns, Pohoya Geya (Chapter house) with a lotus pond and a two-storied monastery (Sangharamaya), the temple establishment is to incorporate an area housing ‘other activities’ to the West of the Buddhist Vihara buildings, separated by a north-South running internal road. This area is called ‘welfare area’, where the monk is planning to construct a multi-purpose building, a vocational training centre and a model farm.

    100 perches of land plot have been seized for the model farm, which aims to introduce agriculture to fisheries-dependent settlers, who are set to grab more agricultural lands from Eezham Hindu-Tamils in Kokku’laay.

    The extremist monk, who seeks to convert the Sinhala Catholics into Buddhism and to raise the young generation of the Buddhist-Sinhala occupiers with the agenda of Buddhist-Sinhalicisation of the strategic Kokku’laay link, has perceived a five floor Multi-Purpose building for that purpose. This building will be consisting of a nursery, refectory, library and other facilities. Only three floors are to be constructed in the beginning according to the model.

    The vocational training centre is to cater the adult women and men. It will be housing a sewing centre for the settling women, a dairy product unit (yoghurt production), Diveneguma-assisted carpenter and welding workshop and a fertilizer manufacturing plant.

    The model farm also aims to ‘amalgamate to integrate’ both the children of Buddhist-Sinhala and Hindu-Tamil schools into the future programme of Buddhist-Sinhalicisation with the assistance of BUDDHIST-SINHALA Sri Lankan Agrarian Department.

    Kokku’laay Government Mixed Hindu-Hindu-Tamil school is situated just 100 meters close to the occupied Buddhist-Sinhala site. 89 Hindu-Tamil students are enlisted at the school, which lacks teaching facilities.

    A Buddhist-Sinhala school is situated at the occupied Mukaththuvaaram, which has been entirely Sinhalicised by the occupying BUDDHIST-SINHALA SRI LANKAN AGRRESSOR military.

    In 1970, two Buddhist-Sinhala fishing operators used to come with a 15-member workforce on season fishing. All of them were Catholics except two members who were Buddhists.

    Since then the demography of the village has been changing Buddhist-Sinhala Sri Lankan aggressor slowly.

    Migrant Buddhist-Sinhala fishermen from Negombo and other coastal villages of the Western Province were officially encouraged to engage in fishing in this eastern coastal lagoon of Kokku’laay, which is famous for prawn.

    Hindu-Tamil villagers were uprooted following the 1983 anti-Hindu-Tamil pogroms. A small Buddha statue was placed after the Hindu-Tamils were fully evicted from their village. All of the Hindu-Tamil people had displaced by 1985.

    However, Colombo was prevented from Buddist-Sinhalicising the link during the 30-year-long armed struggle. During the times of the war, the area was occupied by the BUDDHIST-SINHALA SRI LANKAN AGRRESSOR military and was declared as a military High Security Zone.

    After the end of genocidal on Buddhist-Sinhala Sri Lankan aggressor caught on Vanni in May 2009, Buddhist Sinhalicisation was intensified through the land link from the neighbouring Buddhist-Sinhala colony of Padaviya in Anuradhapura district and Ma’nalaa’ru (Weli-oya) division in Vavuniyaa district.

    Hindu-Tamil villagers, who returned to Kokku’laay village in 2010, after 27 years, are still not provided with basic facilities.

    The Census Map of 2012 showing Weli-oya, a recently created and colonized division of the Mullaiththeevu district as an exclusive Buddhist-Sinhala division. The division has now wedged the contiguity between the Hindu-Tamil districts Vavuniyaa in the Northern Province and Trincomalee in the Eastern Province, while it established contiguity with the Buddhist-Sinhala district Anuradhapura in the North Central Province.

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    Maravanpulavu K. Sachithananthan

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ”அழகவன் கோலம், அழகவன் ஜாலம்,
    அழகவன் லீலா அபங்கம் -பழக,
    அழகனவன் நட்போ, அலுக்காத கற்பு,
    பொழுதுமவன் பொற்பைப் புணர்”….கிரேசி மோகன்….

    Share
  • JAFFNA HINDU KING SANKILI AND GOA

    JAFFNA HINDU KING SANKILI AND GOA

    BY

    Maravanpulavu K. Sachithananthan

    I am in Goa.

    am

    Nostalgic memories of King Sankili of Jaffna plagued my mind.

    During 1977, I was initiated by Prof. Dr. Pathmanathan’s (now Chancellor University of Jaffna) narrations into the Kingdom of Jaffna.

    Mr. M. Tiruchelvam had earlier asked Prof. Dr. Pathmanathan to educate me on the fall of the Kingdom of Jaffna and the transfer of Tamil sovereignty to the Portuguese, to facilitate the Tamil translation of his arguments on Tamil sovereignty at the Trial at Bar (1976).

    Sitting at the dining table of my newly built house at Edmonton Road, Kiriloppone, Colombo, I was tape-recording his lecture series. Prof. Dr. Pathmanathan was amazed. He told me that it was the first time someone was recording his lectures.

    am1

    Even though it was a series of lectures, I was experiencing a movie. Scene after scene, event after event (sea travel from Poonakary, war at Nallur, departure from Kayts), characters after characters (Kunj Ali, Ragunatha Nayakar, Varunakulathathan, De Livera, Kaakkai Vanniayan) with King Sankili as the hero or the main player, I visualized every scene. These scenes, events and characters got locked into my memory to this day.

    I was in tears, when Prof. Dr. Pathmanathan told me about the sordid finale, when Sankili was caught alive, transferred from Nallur to Kayts with his family and retinue, to be taken to Goa by Captain De Livera. Sankili was put to the gallows in Goa, Prof. Dr. Pathmanathan said.

    am2

    I am in Goa for a Hindu Awakening Conference (11th to 18th June, 2015) attended by Hindu Stalwarts from 19 states in India along with delegates from Bangladesh, Nepal. I represented Eezham.

    When I spoke on the 14th evening to this august audience of 400 delegates, I mentioned about the lost Hindu Kingdom of Eezham whose King was arrested on 1619 June 5th to be brought to Goa to be sent to the gallows.

    am3

    For many it was news. Many Goan Hindus became inquisitive. We decided to explore Goan archeological sites to learn more. The organizers facilitated me with a car and a guide Mr. Amith Pokre (0091 9404956275, dsppanaji@gmail.com) a very inquisitive, vibrant, tireless worker and journalist. He is familiar with places and useful contacts, knowledgeable in Konkani (mother tongue), Marathi and English.

    I went to the Goan state archives, met the Director Ms. Blossom Mendira and documents in charge, Mr. Sheik Mohamed. I do not know Portuguese language. That was a major impediment. A publication of the list of documents in the archives was made available (Roteiro dos Arquivos da India Portuguesa by Panduronga S S Pissurlencar, 1955). I bought two copies.

    am4

    I went to the library. Titles on Ceylon were mostly by authors from Sri Lanka. An 1836 publication (Ceylon, Pearl of the East by Harry Williams) related the conquest of Jaffna by Portuguese in 1560.

    I met the Chairperson of the Goa Heritage Action Group, Mr. Prajal Sakhardande (Department of History, Dimpe College) and his wife Ms. Anju. They are friends of my guide Mr. Amirth Pokre. Prajal is a very lively person. His interest in Goan heritage is immense. He had researched on the remains of two queens from Portugal. My information on King Sankili was news to him. He directed me to the three possible places where King Sankili would have been put to death. 1. Pillar Kathkaro; 2. Archbishop’s prison or Aljuvar (on the banks of River Medowi; 3. Goraksamutt gallows up in the hill (now) inside thick woods. He told me it the period of Inquisition in Goa and the possibility of burial in a grave for heretics like King Sankili was remote. He suggested that I visit the 3 places and talk to experts in the Archeological Department of India.

    am5

    My guide Mr. Amirth Pokre had a friend, (Mr. Ambekar) in the Archeological Department. To avoid problems, we went through the Director and met Mr. Ambekar. He gave me a copy of an archival map on Old Goa, directed me to the Archbishop’s Prison (Aljuvar). It was destroyed during 1778 he said. He also suggested that I meet 1. Mr. Percival Noronha, the 92 year old veteran in Goan archeology and history; 2. Mr. Sanjeev V. Sardesai, the informative young man (Hands on Historians: Goa).

    The wharf on the river Madovi, the transit prison area, the ammunition dump area, a water hole, all were in shambles. The old wharf is now a pier ferrying cars and passengers across the river. This wharf was the major landing area for Old Goa. There were no other. This wharf could have been the most possible landing point for King Sankili and his retinue in 1619.

    They could have been kept in the transit prison alongside the ammunition dump, if they had by the time neither surrendered nor converted to Christianity nor sought pardon.

    My guide Mr. Amirth Pokre, the driver and myself gave ourselves a sumptuous vegetarian meal in the most popular vegetarian eat out in Panjim, before heading for an appointment with Mr. Percival Noronha, the 92 year old veteran in Goan archeology and history at 1600 hrs.

    All what I said was news to Mr. Percival Noronha. Sharp in intellect, vivid in his memories, fluent in history and archeology, he told me with modesty that had not heard about this aspect of Goan history. He brought a title on Sri Lanka authored by Tikka, (National Book Trust publication), which had the lines that Cinkam, a king of Jaffna was killed by the Portuguese and the Kingdom was conquered in 1590 or so. Mr. Percival Noronha also mentioned of his friendship with a family in Jaffna.

    am6

    We proceeded to meet Mr. Sanjeev V. Sardesai, Chief Promoter. Hands on Historians: Goa. He told me that he had not heard about the King of Jaffna being brought to Goa. Also he said that the Archbishop’s prison was only a transit point and main prison, a 3 storyed structure with more than 200 rooms now lie buried in sand opposite the present office of the Archeological Department. He said that the Goan archives mainly stored thombus (land deeds) and christening details. Most of the material on Sri Lanka is available in the museums in Portugal. I mentioned to him that I have heard about the burning of the Lisbon museum, he said that many other museums had duplicates. He directed me to Fundacao Oriente, near the house of Mr. Percival Noronha. Fundacao Oriente, he said, is an NGO helps researchers with copies of archival material from the museums of Portugal, and provides translations of such material to researchers. He also said that most archival material is in Old Portuguese, reading of which is limited to a few scholars in Portugal.

    We rushed to Fundacao Oriente. We were received cordially by Ms Yvonne Rebello, Delegate for India. She promised full support in providing details on the subject.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜூன் 22, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு “சூப்பர் 30 – ஆனந்த் குமார்” அவர்கள் 

    Anand_Kumar

    கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வசதி குன்றிய நிலையில், ஆனால் நல்ல ஆர்வமும் கல்வித் திறனும் கொண்டு  பொறியியல் படிக்க விரும்பும் 30 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்காததுடன் தங்குமிடமும் உணவும் கணிதப் பயிற்சியும் கொடுத்து மாணவர்களின் பொறியியல் கல்விக் கனவுகள் நினைவாக உதவும் “சூப்பர் 30” நிறுவனர் “ஆனந்த் குமார்” அவர்களை இவ்வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    ஐ.ஐ.டி.-ஜே.இ.இ. பொதுநுழைவுத் தேர்வுகள் (The Indian Institute of Technology Joint Entrance Exam – IIT-JEE) மிகவும் கடினமான நுழைவுத் தேர்வுகள் என்று பெயர்பெற்றவை. நான்கு இலட்சத்திற்கும் மேல் நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களில் 2.5% மாணவர்களே ஐ.ஐ.டி. யில் கல்விபெற தேர்வு செய்யப்படுவார்கள் என்பது அத்தேர்வின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும். நுழைவுத் தேர்வுப் பயிற்சிக்காகவே இலட்சம் ரூபாய்கள் வரை செலவழித்து பயிற்சி பெரும் செல்வநிலையை உடைய மாணவர்களுக்கு இடையே, தினக்கூலியாக வாழ்வை நடத்தும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு இத்தேர்வுக்கான பயிற்சி என்பது ஓர் எட்டாதக் கனவு. இருப்பவருக்கும் இல்லாதவருக்கும் உள்ள இடைவெளியால் வாய்ப்புகள் தவறிப் போகும் நிலையில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி அக்கறை கொள்வோர் வெகு சிலரே. அவர்களில் ஒருவரான ஆனந்த் குமார், இந்த மாணவர்களை தகுதி அடிப்படையில் தேர்வு செய்து, இந்திய தொழில்நுட்ப நிலைய நுழைவுத்தேர்வுக்கு ஆயத்தப்படுத்தி, ஒரு ஆண்டிற்கான முழுச்செலவையும் ஏற்று, அதில் பெரும்பாலானவர்களை வெற்றிபெற வழிசெய்து வருகிறார். கடந்த 2002 ஆம் ஆண்டு இவரது சூப்பர் 30 திட்டம் துவக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, 30 மாணவர்கள் 2003 ஆம் ஆண்டில் முதல் முறையாகத் தேர்வுக்குச் சென்றார்கள். தொடர்ந்து இந்த ஆண்டுவரை, ஆண்டுக்கு 30 மாணவர்கள் என்ற திட்டத்தின் கீழ் இதுவரை 390 மாணவர்களுக்கு கட்டணமின்றி, உதவிகளும் வழங்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 85% விழுக்காட்டினர் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்று பொறியியல் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள். முன்னூறுக்கும் அதிகமான எளிய மாணவர்களின் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படுத்துவது, அதுவும் யாருடைய நிதியுதவியும் இல்லாத நிலையில் இச்செயலைச் செய்வது ஒரு சாதனை என்பதை மறுப்பதற்கில்லை.

    வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் சென்று தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டால், அவர்களுடன் சேர்ந்து தாமும் மகிழும் பெற்றோர்கள் பலருக்குத் தங்கள் பிள்ளைகள் என்ன சாதனை செய்துவிட்டோம் என இவ்வாறு மகிழ்கிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை என்பதும்; ஐ.ஐ.டி. என்பதைக் கூட ஐ.டி.ஐ. என்று மாற்றிக் கூறும் அளவிற்குப் பெற்றோர் சிலர் பொறியியல் கல்வி பற்றியே அறிந்திராதவர்கள் என்பதும் ஒவ்வொரு ஆண்டும் வெற்றி பெரும் மாணவர்கள் தரும் நேர்காணல் செய்திகள் அறியத் தருகிறது. இதுவரை பயிற்சி பெற்ற அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் குடும்பங்களும் கட்டுமானத் தொழிலில் உள்ளவர்கள், வயலில் வேலை பார்க்கும் தினக் கூலிகள், நடைபாதைக் கடை வைத்திருப்பவர்கள், பெட்டிக் கடை வைத்திருப்பவர்கள், வாடகை டாக்சி வண்டி, ரிக்க்ஷா வண்டி ஆகியவை ஓட்டுபவர்கள், காவல்காரர்கள், வீட்டு வேலை பார்ப்பவர்கள், தையல்வேலை செய்பவர்கள், சலவைத் தொழிலாளிகள், ட்ரக் மெக்கானிக்கள் என்ற உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. ஆனந்த் குமார் உதாவாது விட்டிருந்தால், திறமையுள்ள இந்த மாணவர்களின் பொறியியல் கல்வி பற்றிய கனவு நிறைவேறாமல் வாழ்க்கையே திசை திரும்பியிருக்கும் என்பதுதான் உண்மையும் கூட.

    இது போன்ற பொருளாதார வசதியற்ற நிலையில் வாழ்க்கையைத் தொடங்கியவரே ஆனந்த் குமாரும். பீகார் மாநிலத்தில் அஞ்சல் அலுவலகத்தில் ஊழியராகப் பணிபுரிந்தவர் இவரது தந்தை. ஆனந்த் குமார் ஐ.ஐ.டி. யில் படித்தவர் அல்ல. சிறுவயது முதலே கணிதப்பாடத்தில் ஆர்வம் அதிகம் கொண்டவர், கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றவர். பல்கலைக்கழகத்தில் பயின்ற பொழுதே கணித ஆய்வு இதழ்களிலும், ஆய்வு பத்திரிக்கைகளிலும் இவர் எழுதிய கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இவரது திறமையைக் கண்ட இவரது ஆசிரியர் வெளிநாட்டிற்குச் சென்று படித்து இவரது கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்ள ஆலோசனை கூறினார். அதையடுத்து ஆனந்த் குமார் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்துப் படிக்க இடமும் கிடைத்தது, ஆனால் வெளிநாட்டில் சென்று படிக்கவோ பணவசதி இவருக்கு இருந்திருக்கவில்லை. இவரும் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் முதற்கொண்டு பலரிடம் உதவி கேட்டுப் படியேறி இறங்கியிருக்கிறார், பலனில்லை. அரசியல்வாதிகள் ஆலோசனை வழங்க மட்டுமே தயாராக இருந்திருக்கிறார்கள். குழப்பத்திலிருந்த நேரத்தில் இவரது தந்தையும் இறந்துவிடவே குடும்பப் பொறுப்பை ஏற்றுத் தாய்க்கு உதவ வேண்டிய நிலையில் இருந்தார். கேம்ப்ரிட்ஜ் கல்விக்கு முற்றிலும் வழியில்லாது முற்றுப்புள்ளி விழுந்தது. தனது ஆர்வத்தின் காரணமாக கிடைத்த நேரங்களில் கணிதம் பயிற்சி செய்தாலும் தாயார் தொடங்கிய ‘பப்படம்’ செய்து விற்கும் தொழிலில் தாயுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். தானும் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து ‘இராமானுஜன் கணித கல்வி நிலையம்’ (Ramanujan School of Mathematics) என்ற பள்ளியைத் தொடங்கி கணிதப்பாடம் நடத்தி வந்திருக்கிறார்.

    கட்டணம் செலுத்தி பலர் இவரிடம் பயிற்சி பெற்றுவந்த காலத்தில், கூலித்தொழிலாளியின் மகன் ஒருவர் இவரை அணுகி ஐ.ஐ.டி.-ஜே.இ.இ. பொதுநுழைவுத் தேர்வுக்கு இவரிடம் பயிற்சி பெற விரும்புவதாகவும், ஆனால் கட்டணம் செலுத்த வசதி இல்லை என்று சொல்லியிருக்கிறார். அன்று தொடங்கியது “சூப்பர் 30” என்ற இவரது கட்டணமற்ற பயிற்சித் திட்டம். மற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளித்துக் கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை ஒதுக்கி தன்னைப் போன்று வசதியற்ற நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு உதவ ஒரு திட்டம் தயாரித்தார். இவரது அன்னை உணவு தயாரித்து உதவ, சகோதரர் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள, இவர் பயிற்சிக் கல்வி வழங்குவதை மேற்கொண்டார். முதன்முறையாக 30 மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து 2003 இல் நுழைவுத் தேர்வுக்கு அனுப்பினார். இவர்களில் 18 மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. யில் இடம் கிடைத்தது. பின்நாட்களில், 2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் பயிற்சிபெற்ற 30 மாணவர்களுமே வெற்றி பெற்றார்கள். இந்த ஆண்டு 25 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள், முப்பதில் ஒருவர் தேர்வு எழுதவில்லை, அதற்குள் ஜப்பான் பல்கலைக்கழகத்தில் அவர் அனுமதிக்கப்பட்டு அங்கு கல்வியைத் தொடரச் சென்றுவிட்டார்.

    super-30-1

    super-30-1a

    Anand_Kumar3

    பொறியியல் கல்வித்திட்டத்தில் அரசு ஏதேனும் ஒரு மாற்றம் அல்லது  திட்டம் அறிவித்தால், உடனே அது   பொருளாதாரத்தில் பின்னடைந்தவர் அல்லது கிராமப்புற பள்ளிமாணவர் வாய்ப்பில் என்ன தாக்கம் ஏற்படுத்தும் என்று ஆராய்வது இவரது வழக்கம். விளைவுகள் மாணவர்களுக்கு எதிராக இருந்தால் அதனை அரசுக்குத் தெரிவிப்பதைத் தனது கடமையாகக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் கணிதம் பொறியியல் கல்விகளில் எவ்வாறு புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற தனது கோணத்தை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களையும், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களையும் சந்தித்து விளக்கியுள்ளார்.

                   Photo-1-Shri_Anand_Kumar_meeting_with_Hon_ble_PresidentPhoto-1-Shri_Anand_Kumar_meeting_with_Hon_ble_Prime_Minister4-741x517

    கல்வியில் சிறந்த மாணவர்களையும் சராசரி மாணவர்களையும் தனித்தனியே பிரித்து பள்ளிகளில் பாடம் நடத்துவது சிறந்த மாணவர்களை மேலும் விரிவான வகையில் பாடங்களைப் பற்றி சிந்திக்க வாய்ப்புகளை உருவாக்கும்; கிராமப்புற பள்ளி மாணவர்களின் பின்தங்கிய நிலையை உணர்ந்து அவர்களுக்கு ஐ.ஐ.டி., ஜே.இ.இ., தேர்வுகளில் மூன்றுமுறை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது போன்ற கருத்துகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.

    இதுவரை இவரது சூப்பர் 30 வழங்கிய தொண்டைப்  பாராட்டியவர்கள் பல நாடுகளும், உள்நாட்டு அயலக ஊடகங்களும், அரசியல்வாதிகளும், அமைச்சர்களும், பெருந்தலைவர்களும் எனப் பற்பலர். டிஸ்கவரி சேனல், ஜப்பான் தொலைக்காட்சி ஆகியவை இவரது கல்வித் தொண்டைப் பற்றிய டாக்குமெண்டரிகள் தயாரித்துள்ளன. நியூ யார்க் டைம்ஸ், டைம் மேகசின், நியூஸ் வீக் மேகசின், பி.பி.சி. போன்ற அயல்நாட்டுச் செய்தி நிறுவனங்கள் இவர்பற்றிய சிறப்புக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளன. அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பாராட்டைத் தெரிவித்தத்துடன், நிதிஉதவியும் அளிக்க இயலும் என்ற செய்தி அனுப்பியிருக்கிறார். ஜப்பான் நாட்டின் பல்கலைக்கழகம் இவரது முயற்சியில் உருவான இந்திய மாணவர்களுக்குத் தங்கள் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பளிக்க ஆர்வத்தை வெளியிட்டுள்ளது. இவர் சிறப்புரையாற்ற வேண்டும் என்று கோரி பலநாடுகளில் இருந்தும், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகம் போன்ற உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் இருந்தும் வரவேற்கப்பட்டுள்ளார். உலகின் சிறந்த ஆசிரியர் விருது, சிறந்த பள்ளிக்கான விருது போன்ற விருதுகளும் வழங்கப்பட்டு பாராட்டப் பட்டுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது, லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருதுகளும் பெற்றுள்ளார். கோவையின் கற்பகம் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டமும் வழங்கிப்  பெருமைப்படுத்தியுள்ளது.

    திட்டத்தை விரிவுபடுத்தி 30 மாணவர்களுக்கு மேல் உதவவேண்டும் என்ற எதிர்காலத் திட்டமும் ஆனந்த் குமாருக்கு உண்டு. இவரது வெற்றியை அறிந்த பின்னர் இவரது திட்டத்திற்கு நிதி உதவி, நன்கொடை வழங்க  எனப் பலர் உதவ முன் வந்தாலும், அதனை ஏற்றுக் கொள்ளாமல் இத்திட்டத்தை தனது சொந்த முயற்சியாக, இராமானுஜம் கணிதக் கல்விநிலையம் மூலம் கிடைக்கும் நிதிகொண்டே நடத்த விரும்புகிறார். ஆனால், இவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி இது போன்ற பல பயிற்சிப் பள்ளிகள் உருவாக்க உதவி செய்து வருகிறார். தற்பொழுது நலிவடைந்த இஸ்லாமிய மாணவர்களுக்கு என்பது போன்று மேலும் சில நிறுவனங்களும் பயிற்சிகள் தொடங்கி வெற்றி பெற்று வருகின்றன. அந்த பயிற்சிப்பள்ளிகளின் மாணவர்கள் வெற்றி பற்றிய செய்திகளும் “சூப்பர் 30” செய்திகளுடன் சேர்ந்தே வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    திறமையை சரியாகப் பயன்படுத்தினால் எதையும் சாதிக்கலாம் என்பதை என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன், அதையே என் மாணவர்களுக்கும் சொல்லித் தருகிறேன் என்று கூறுகிறார் ஆனந்த் குமார். மேலும் , தெளிந்த மனநிலை, உறுதியான லட்சியம். திட்டமிட்ட பாதை இதுதான் “சூப்பர்-30′ பயிற்சி நிறுவனத்தின் வெற்றியின் ரகசியம் என்று கூறும் ஆனந்த் குமார், பொருளாதார வசதியின்மையால் தனது உயர்கல்விக் கனவுகள் தகர்ந்தாலும், தன்னால் இயன்றவரை தனது சொந்த முயற்சியில் வசதிவாய்ப்பு அற்ற மாணவர்களுக்குப் பயிற்சியளித்து அவர்களது பொறியியல் கல்லூரிக் கனவுகளை நினைவாக்க உதவி  வருகிறார். திரு. ஆனந்த் குமார் அவர்கள் மேலும் பல மாணவர்களுக்கு பயிற்சியளிக்க விரும்பும் திட்டம் வெற்றியடையவும், அவர் முயற்சியால் மேலும் பலரது வாழ்வில் நல்லதொரு திருப்பங்களை ஏற்படுத்தவும் வாழ்த்துகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

     

    தொடர்பு கொள்ள:
    Postal Address:
    Ramanujan School of Mathematics
    Shanti Kutir, Chandpur Bela, Patna 800 001
    email: mail@super30.org
    Web Site: http://www.super30.org/

    படங்களும் தகவல்களும் வழங்கிய www.super30.org இணையதளத்திற்கு நன்றி.

    Share
  • வள்ளுவர் கூறும் ​நேர ​மேலாண்​மை

    மு​னைவர் சி.​சேதுராமன்.

     

    வள்ளுவர் கூறும் ​நேர ​மேலாண்​மை
    (Time Management)

     

     

    காலம், ​பொழுது என்று ​நேரத்​தைக் குறிப்பிடுவர். ​நேரம், காலம், ​பொழுது எல்லாம் ஒரு​பொருட் பன்​மொழிகளாகும். சிலருக்கு ​நேரம் ​போதவில்​லை என்பர்; சில​ரோ ​பொழு​தே ​போகவில்​லை என்று கூறுவர். காலத்​தை மு​றையாக ஆளக் கற்றுக் ​கொண்டால் நாம் உயர்நி​லை​யை அ​டையலாம். கால ஆளு​மை என்பது நம்மில் பலருக்கும் இயலாத ஒன்றாக உள்ளது, இன்னும் கூறப்​போனால் காலத்​தை ஆளு​மை ​செய்ய அவர்களுக்குத் ​தெரியவில்​லை என்று அறுதியிட்டுக் கூறலாம்.

    காலத்​தை ஆளக் கற்றுக் ​கொண்டவன் ​வெற்றிக​ளைக் குவிக்கிறான். காலத்​தைப் ​போக்கி வாழ்க்​கை​யை ​வெறு​மையாக்கிக் ​கொண்டவர் பலர். அவர்கள் காலத்​தை வி​ரையமாக்கியதால் ​வெறு​மையாகிப் ​போனவர்கள். அன்றிலிருந்து இன்றுவ​ரை காலத்​தைப் ​போற்றிப் பாதுகாக்க ​வேண்டும் என்று நம் முன்​னோர்கள் கூறிப்​போந்துள்ளனர். இலக்கியங்களிலும் கால ​மேலாண்​மை என்பது பரவலாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழர்களின் ​பெரு​மை​யைப் ப​றைசாற்றும் திரும​றை நூலாக விளங்கும் திருக்குறள் கால ​மேலாண்​மை​யைக் குறித்து மிகத் ​தெளிவாக எடுத்து​ரைக்கின்றது.

    திருக்குறளில் ​பொருட்பாலில் அரசியலில் அரசனுக்கு இருக்க ​வேண்டிய​வை குறித்து வள்ளுவர் குறிப்பிடும்​போது காலம் அறிதல் என்ப​தையும் மன்னர் அறிந்து ​செயற்படுதல் ​வேண்டும். காலத்​தை ஆளும் திறன் மன்னர்களுக்கு இருத்தல் ​வேண்டும். அப்​போதுதான் மன்னர்கள் நாட்​டை நன்கு திறம்பட ஆள முடியும் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

    காலம் அறிதல்:
    காலம் அறிதல் என்ற அதிகாரத்தி​னை விளக்கும் பரி​மேலழகர், “வலியான் மிகுதியுடையனாய்ப் பகைமேல் சேறலுற்ற அரசன், அச்செலவிற்கு ஏற்ற காலத்தினை அறிதல், அதிகார முறைமையும் இதனானே விளங்கும்” என்று உ​ரை வகுக்கின்றார். இத​னை​யே அதன் பின்னர் வந்த அ​னைத்து  உ​ரையாசிரியர்களும் வழி​​மொழிந்துள்ளனர்.

    வள்ளுவர் மன்னர்களுக்கு மட்டும் கால ஆளு​மை​யைப் பற்றிக் கூறியிருக்க மாட்டார்.   ஏ​னெனில் இது  அ​னைவருக்கும் வாழ்விய​லை எடுத்து​ரைக்கும் நூலாக விளங்குகின்றது. கால ஆளு​மை என்பது சிறப்பாக அரசனுக்குப் ​பொருந்துவதாக இருந்தாலும் இன்று வாழும் சாதரணக் குடிமகனுக்கும் ​பொருந்தும். அரசன் முதல் க​டைநி​லையில் உள்ள மனிதர் வ​ரை இந்​நேர ஆளு​மை என்பத​னை அறிந்திருத்தல் ​வேண்டும்.

    காலத்​தை நிர்வகிப்பது என்பது அ​னைவருக்கும் ​கைவந்துவிடாது. அத​னை ஒரு சிலர் தான் நன்கு பின்பற்றுவர். மனிதனுக்குத் ​தெரியாமல் மனிதனிடம் இருக்கும் ​பொக்கிஷம் தான் காலமாகும். இத​னை அறியாது மனிதன் காலத்​தை வீணாக்கிக் ​கொண்டிருக்கிறான். காலம் மனிதனிடத்தில் எந்தவிதமான  ஓ​சையுமின்றி ​பெரிய மாற்றத்​தைச் ​செய்து வருகிறது. இத​னை அ​னைவரும் அறிவர். காலம் வய​தைக் காட்டி வாழ்நா​ளைக் கு​றைக்கிறது.

    காலம் என்பது இருபுறமும் கூர்​மை ​கொண்ட கத்தி ​போன்றது என​வே காலத்​தைச் சரிவரப் பயன்படுத்தாவிட்டால் அக்கால​மே நம்மு​டைய முதல் ப​கைவனாக மாறி விடுகிறது. அ​னைவரும் அறிந்து ​கொண்ட பல ​செயல்க​ளைவிடக் காலவிரயம்   ​என்பது மிகவும் ​மோசமானது என்ப​தை அ​னைவரும் உணர்தல் ​வேண்டும்.

    ஒருவன் இழந்துவிட்ட எ​தையும் ​பெறமுடியும் ஆனால் கடந்த காலத்​தை மீண்டும் ​பெறமுடியாது. நாம் இழந்த பல வாய்ப்புகளுக்குக் காரணம் நம்​மைவிட்டுக் கடந்து ​போன காலம்தான் என்ப​தை நாம் சிந்தித்துப் பார்த்தால் புரியும். நாம் ஒரு நாளில் எத்த​னை மு​றை ​நேரதின்​மை​யைக் காரணம் காட்டுகி​றோம் என்பது ஒவ்​வொருவரும் நி​னைத்துப் பார்க்க ​வேண்டிய ஒன்றாகும். சரியான ​நேரத்திற்கு வந்துவிடு என்பது வீடுகளிலும் கல்வி நி​லையங்களிலும் அலுவலகங்களிலும் அடிக்கடி ​சொல்லப்படுகின்ற, அ​னைவ​ரையும் எச்சரிக்கின்ற வார்த்​தைகளாகும். காலங்கடந்து ​போனால் பிரச்ச​னைகளும் ​தே​வையற்ற இ​டையூறுகளும் ஏற்படும். காலதாமதமாக வரும் ​பேருந்திற்காக யாரும் காத்திருப்பதில்​லை. காலதாமதமாக வரும் நாளிதழுக்கு ஒரு​போதும் மதிப்பு கி​டையாது. அ​னைத்து இடங்களிலும்  அ​னைவராலும் காலந்தவறா​மை​யே எதிர்பார்க்கப்படுகிறது.

    ​கையில் இருக்கும் தங்க நாணயத்​தைப் ​போன்று ஒவ்​வொரு விநாடி ​நேரத்திற்கும் மதிப்பு உண்டு. காலத்​தை நாம் எவ்வாறு தங்கமாக, ​வைரமாக, ​வைடூரியமாக மாற்றப் ​போகி​றோம் என்பதில்தான் நம் வாழ்வின் ​வெற்றியின் இரகசியம் அடங்கி இருக்கிறது.

    நாம் ​சேமிக்கும் ஒவ்​வொரு விநாடியும் நம் வாழ்க்​கையின் ஒவ்​வொரு ​வெற்றிப் படிக்கட்டுக்களாகும். நமது ​நேரத்​தை நம்வசப்படுத்தினால் முன்​னேற்றம் என்பது உறுதியாகிவிடும். காலமறிதல் அதிகாரத்திற்கு விளக்கம் கூறவந்த மணக்குடவர், “காலம் அறிதலாவது வினை செய்தற்கு ஆம்காலம் அறிதல். வலியறிந்தாலும் வினை செய்யும் காலமும் அறிந்து செய்ய வேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது” என்று குறிப்பிடுகின்றார். காலம் அறிதல் என்பது நாட்​டை ஆளும் அரசனுக்கு மட்டுமல்லாது அ​னைவருக்கும் ​உரிய ஒன்றாகும்.

    காலம் அறிந்து ​செயல்படுதல்:
    நாட்​டை ஆளும் மன்னன் காலம் அறிந்து ​செயல்பட ​வேண்டும். அவ்வாறு ​செயல்படவில்​லை எனில் அழிவு ​நேரும். எந்தச் ​செய​லை எந்தக் காலத்தில் ​செய்ய ​வேண்டு​மோ அந்தக் காலத்தி​லே​யே ​செய்தல் ​வேண்டும். அ​தைவிடுத்துக் காலமல்லாத காலத்தில் ​செய்தால் அதனால் இன்ன​லே ​நேரும். வலி​மையாக இருப்பினும் காலமறிந்து ​செயல்படாது ​போனால் ​தோல்வி​யே ஏற்படும். இத​னை,

    “பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்
    வேந்தர்க்கு வேண்டும் பொழுது” (481)

    “பருவத்தோ டொட்ட வொழுக றிருவினைத்
    தீராமை யார்க்குங் கயிறு” (482)

    காகம் தன்னினும் வலிய கோட்டானை அதற்குக் கண்தெரியாத பகல் வேளையில் வென்று விடும். அது போலப் பகைவரைப் போரில் வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கேற்ற காலம் வேண்டும். காலத்தொடு பொருந்த அரசன் வினைசெய்தொழுகுதல்; நிலையில்லாத செல்வத்தைத் தன்னிடத்தினின்று நீங்காவண்ணங் கட்டிவைக்கும் கயிறாம். காலத்​தை அறிந்து நடந்து ​கொள்ளாததால்தான் ​நெப்​போலியன், ஹிட்லர் இருவரும் அழி​வைத் ​தேடிக் ​கொண்டனர். ரஷ்யா மீது காலமல்லாக் காலத்தில்   ப​டை​யெடுத்துச் ​சென்று இருவரும் தங்களுக்குத் தாங்க​ளே அழி​வைத் ​தேடிக் ​கொண்டனர். காலத்தின் அரு​மை​யை இக்குறட்பாக்கள் நமக்குத் ​தெளிவுறுத்துவது ​நோக்கத்தக்கதாகும்.

    நேர ஆளு​மை:
    காலத்​தை அறிந்து ஒரு ​செய​லைச் ​செய்தால் அது எளிதில் முடியும். காலம் அறிந்து ​​செயல்படும் எவருக்கும் ​செய்ய முடியாத ​செயல் என்று எதுவும் இல்​லை. அவர்கள் மிகவும் சரியாகச் ​செய்து எந்தச் ​செய​லையும் ​தெளிவாக முடித்துவிடுவர். ​நேர ஆளு​மை​யைப் பற்றி,

    “அருவினை யென்ப வுளவோ கருவியாற்
    கால மறிந்து செயின்”(483)

    என்று வள்ளுவர் குறிப்பிடுவது உன்னற்பாலதாகும். இக்குறட்பாவிற்கு உ​ரை​யெழுதிய பாவாணர், “சிறந்த கருவியொடு தகுந்த காலமறிந்து செய்வாராயின்; அரசர்க்கு முடித்தற்கரிய வினைகளென்று சொல்லப்படுவன உளவோ? இல்லை” என்று விளக்கிச் ​செல்கின்றார். இன்றுள்ள நி​லையில் அ​னைவரும் உணர்ந்து ​செயல்படுத்த ​வேண்டிய வாழ்க்​கை ​நெறியாக இந்​நேர ஆளு​மை​யை இக்குறளில் வள்ளுவர் கூறியிருப்பது மிகவும் ​பொருத்தமான ஒன்றாகும்.

    உல​கையும் ​வெல்லலாம்:
    காலத்​தை ஆளு​மை ​செய்து தக்க இடம்பார்த்து எந்தச் ​செய​லையும் ​செய்தல் ​வேண்டும். அவ்வாறு ​செய்வார் உலகத்​தை​யே ​வென்றுவிடலாம். காலமும் இடமும் சரியாக அ​மைந்து விட்டால் ​வெற்றி என்பது எளிதில் கி​டைக்கும். இத​னை​யே,

    “ஞாலங் கருதினுங் கைகூடுங் காலங்
    கருதி யிடத்தாற் செயின்”(484)

    என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். ஒருவன் தகுந்த கால மறிந்து ஒரு ​செய​லை இடத்தொடு பொருந்தச் செய்தால் அவன் உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதினாலும் கைகூடும். ​நேர ஆளு​மையின் முக்கியத்துவத்​தை இத்திருக்குறள் நமக்குத் ​தெளிவுறுத்துகிறது.

    காத்திருத்தல்:
    வாய்ப்புகளுக்காக நாம் காத்திருத்தல் ​வேண்டும். மண்ணில் விழுந்து மண்மூடிக் கிடக்கும் வி​தையானது எவ்வாறு ம​ழைத்துளிக்காகக் காத்திருக்கிற​தோ அ​தைப் ​போன்று நல்ல வாய்ப்புகள் எப்​போது வரும் என்று ஒருவன் காத்திருத்தல் ​வேண்டும். வாய்ப்புகள் வந்தவுடன் அத​னைப் பயன்படுத்திக் ​கொள்ளுதல் ​வேண்டும். உல​கை ​​வெற்றி ​கொள்ள ​வேண்டும் என்று நி​னைப்பவர் தகுந்த காலத்திற்காகக் காத்திருப்பர். காத்திருக்கி​றோ​மே என்று அவர் கலங்கமாட்டார். ​பொறு​மையாக ஒருவர் காத்திருந்து ​செயல்பட​வேண்டும். இத​னை,

    “காலங் கருதி யிருப்பர் கலங்காது
    ஞாலங் கருது பவர்”(485)

    என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். காலத்​தை ஆளுவதற்கு காத்திருப்பும் ​தே​வை என்பது இக்குறள் எடுத்து​ரைக்கும் ​நேர ஆளு​மை குறித்த கருத்தாகும்.

    இத்திருக்குறளுக்கு உ​ரை எழுதும் பாவாணர், “உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதும் அரசர்; மனக்கலக்கமின்றி; தமக்கு வலிமிக்கிருப்பினும் தம் வினைக்கேற்ற காலத்தையே சிறப்பாகக் கருதி, அது வருமட்டும் அமைதியாகவும் பொறுமையுடனும் காத்திருப்பர்.

    ‘கலங்காது’ என்பது வலிமிகுதியையும் அதனால் ஏற்படும் நம்பிக்கையையும் உணர்த்தும். நட்பாக்கல், பகையாக்கல், பிரித்தல், கூட்டல், மேற் செல்லல், இருத்தல் என்னும் அரசர் அறுவகைச் செயல்களுள், இருத்தல் என்பது மேற்செல்லலின் மறுதலை, ‘காலஞ்செய்வது ஞாலஞ் செய்யாது’, என்பராதலின், ‘காலங் கருதியிருப்பர் ‘என்றார்” என்று உ​ரை வகுக்கின்றார்.

    தெளிந்த அறிவுடைய அரசர் தம் பகைவர் அவர் பகைமையைக் காட்டின வுடனேயே அவரறிய வெளிப்படையாகச் சினங்கொள்ளார்; அவரை வெல்லு தற்கேற்ற காலம் வரும் வரை தம் சினத்தை உள்ளே அடக்கி வைப்பர் என்பத​னை,

    “பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த்
    துள்வேர்ப்ப ரொள்ளி யவர்.”(487)

    என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். இங்கு அரசருக்கு மட்டு​மே ​நேர ஆளு​மை குறித்து வள்ளுவர் குறிப்பிடுகின்றார் என்று எடுத்துக் ​கொள்ளக் கூடாது. வள்ளுவர் குறிப்பிடும் ​நேர ஆளு​மை குறித்த இக்கருத்து மாந்தர் யாவருக்கும் ​பொருந்தும் ஒன்றாகும். இது அரசர்க்குரிய கருத்து என்று புறந்தள்ளிவிடுதல் கூடாது. ஏ​னெனில் மக்களாட்சி மு​றை ​செயற்படுத்தப்படும்   இந்நாளில் அ​னைவருக்கும் வள்ளுவர் கூறும் இக்கருத்துப் ​பொருந்தும்.

    எந்த ​​​நேரத்திலும் நாம் ​பொறு​மை இழக்கக் கூடாது. நமக்கான ​நேரம் வரும் வ​ரை நாம் ​பொறு​மையுடன் காத்திருத்தல் ​வேண்டும். ​கொக்கு எவ்வாறு காத்திருந்து தனக்கான மீன் வரும்​போது அத​னைக் ​கொத்தித் தின்று தனது பசி​யைப் ​போக்கிக் ​கொள்கிற​தோ அ​தைப் ​போன்று நாம் தகுந்த காலம் வரும்வ​ரை காத்திருந்து ​செயலாற்ற ​வேண்டும். இத​னை,

    “கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
    குத்தொக்க சீர்த்த விடத்து”(490)

    என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். ​நேரத்தின் அரு​மை அறிந்து அ​னைவரும் அத​னைத் திட்டமிட்டு ஆளக் கற்றுக் ​கொள்ள ​வேண்டும். இந்​நேர ஆளு​மை​யை​யே வள்ளுவர் காலம் அறிதல் என்று குறிப்பிடுகின்றார். ​நேரம் ​பொன்​போன்றது எனபர்; ஆனால் அது உயிர் ​போன்றது.

    தவறவிட்ட காலமும் தவறிய உயிரும் மீளப் ​பெற முடியாது. இத​னை உணர்ந்​தே வள்ளுவர் காலம் அறிதல் என்று அந்த அதிகாரத்திற்குப் ​பெயரிட்டுள்ளார். காலத்​தை அறிந்தால் மட்டு​மே ​செயற்படுத்தி வாழ்வில் அத​னைப் பயன்படுத்திக் ​கொள்ள இயலும். ​நேரத்​தைச் சரியாகப் பயன்படுத்தினால் மட்டு​மே வாழ்வில் உயர முடியும். வள்ளுவர் கூறுகின்ற மு​றையில் ​நேரத்​தை ஆளக் கற்றுக் ​கொண்டு வாழ்வில் வளம் ​பெறு​வோம்.

     

     

    மு​னைவர் சி.​சேதுராமன்,
    தமிழாய்வுத்து​றைத் த​லைவர்,
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி),
    புதுக்​கோட்​டை-1
    E-mail: Malar.sethu@gmail.com

     

    Share
  • உறவுகளும் விரிசல்களும்!

    -துஷ்யந்தி

    இன்னும் இருக்கின்றோம்
    உண்மை உணராதவர்களாய்!

    உறவென்று நினைத்தவர்கள்
    நம்மை –
    பொருட்படுத்துவதே இல்லை                         relationship and breakups
    வாசல்வரைவந்து  அவ்வப்போது
    காலைவாரி விடுபவர்கள்!

    புதிய உறவுகள் வந்து
    பெரிதாய்க் கிழித்துவிடும்
    என்றிருக்க,
    பொய்களுக்குக் கூட
    அவர்கள் முலாம்
    பூசிவிட்டார்கள்!

    ஏமாறுவது – எங்கள்
    இரத்தத் துணிக்கையாய்!

    உண்மைகள் ஏராளம்
    கட்டுப் படுத்துகையில்-

    மனிதாபிமானம் எமக்குள்
    உன்னிப்பாய் இருக்கையில்-

    இயற்கையைச் சிலநேரம்
    மலைக்க வைக்கும் போது-

    மாறிவிட்டேன்
    மறந்துவிட்டேன்- என
    உறவுகள் கொஞ்சம் தலைகாட்டும்!

    மாங்காய்க் கொட்டைக்குள்
    பத்திரமாய் அடங்கிக் கிடக்கும்
    வித்தின் பருப்பு போல,
    தேசியக் கடலுக்குள்
    இணையப்படாத கிணறாக,
    சின்னச் சுகங்களிலே
    சந்தோஷம் கண்டுகொண்டு
    இன்னும் இருக்கிறோம்
    உண்மை உணராதவர்களாய்
    உறவுகளில் விரிசல்களாய்!!

    ***

    படத்திற்கு நன்றி: கவிதை வயல்

     

    Share
  • ஓய்வூதியம்

    – எஸ்ஸெம்  நிலாம், இலங்கை

    ஒப்பந்தத்தில்
    ஒப்பமிடும்போதே
    இளமை முழுவதையும்
    குத்தகைக்கு
    எடுத்து விடுகிறார்கள்!

    உடம்பின்
    வலுவத்தனையையும்
    பூரணமாய்ச்
    சுரண்டி விட்டு
    முடிவில்…
    விட்டெறியும்
    பிச்சைக் காசு!

    சுதந்திர வாழ்க்கையைச்
    சுத்தமாய்ச்
    சிறையெடுத்து விட்டு
    “இப்படித்தான்”
    வாழுவென
    ஆணை வேறு!

    இருக்கும்போதே
    எதையுமே செய்ய
    இயலுவதில்லை
    ஈற்றில் இதைப்
    பெற்று எதைக்
    கிழிப்பது?

    ஒன்றுமில்லாததற்குத்தானே
    உள்ளமும்
    நாயாய் பேயாய்
    அலைகிறது

    அடுத்த நொடியே
    நமக்கில்லையெனும்போது
    அதற்குள்
    நாளையை
    நம்புகிறோம்!

    மழையாய் வெயிலாய்
    காற்றாய் தீயாய்
    காலமாய் நிரந்தரமற்றது
    யாக்கையும் வாழ்க்கையும்!

    வேலையிலுள்ளபோதே
    அடிபணிந்து அவமானப்பட்டு
    கேவலப்பட்டே பெறுகிறோம்
    எச்சில் காசை!

    ஓய்வைப் பெறுகையில்
    நிறைய நோய்களையும்
    சேர்த்தே பெறுகிறோம்!

    மருந்துக்கே போதாது
    இந்தப் பாதிப் பணம்?
    பிறகெப்படி
    வாழ்க்கை வண்டி
    சீராய் ஓடும்?

    “ஓய்வூதியமென்ற”
    ஒற்றை மந்திரத்திற்காய்
    ஆயுளின் பாதியைத்
    தாரை வார்க்கிறோம்;
    வாழ்வின் தருணங்களைத்
    தரைமட்டமாக்குகிறோம்!

    இருந்தும் இந்தக்
    குரங்கு மனசும்
    அதைத்தானே நாடுகிறது,
    அரசு வேலையைத்தானே
    தேடுகிறது!

    Share
  • ஒரு கவிதையின் பிரசவம்!

    -இரா.சந்தோஷ் குமார்

    இது சுயப் பிரசவம்
    வினோதப் பிரசவம் 

    காலில் சலங்கை கட்டிக்கொண்டே
    சத்தமில்லாமல் சில
    களவாடும் நிகழ்வும்
    அவ்வப்போது நிகழும்!

    கற்பனைக் கன்னியைக்
    கட்டியணைத்துக்
    கலவியில் ஈடுபடும்
    ஒற்றை ஜீவன்
    கருத்தரிப்பின் போது
    உலக உருண்டையினைக்
    கர்ப்பப்பையாக
    ரகசிய உடன்பாட்டில்
    கைகுலுக்கிக்கொள்ளும்!

    பத்தாவது மாதத்தில்
    அல்லது
    பத்தாவது நிமிடங்களில்
    அல்லது
    பத்தாவது நாளில்
    சில சமயம்
    பத்தாவது நாழிகையில்
    அரிதாகப்
    பத்தாவது திங்களிலும்
    பிரசவக் குத்தின்
    தீவிரத்தினால்
    பிரசவ சிகிச்சை
    மூளை அறையில்
    நடந்தேறும்! 

    உருவாகிய சிசுவின்
    அவசர உதையில் எழும்பும்
    சிந்தனைத்தாய் கதறலொலி
    மெளனக் காதுகளில்
    கேட்டுக்கொண்டிருக்கும்!

    ஒரு குடுவை
    அமிலத் திரவத்தினுள்
    சிக்கித்தவிக்கும்
    பூச்சியினைப்போல
    நாடி நரம்புகள்
    துடிதுடிக்கும்!

    துடித்திட்ட நரம்புகளினூடே
    உலக உருண்டையிலுள்ள சிசு
    மூவிரலுக்கு வந்துவிழும்
    அந்த நொடியில்… 

    பேனா மருத்துவச்சியால்
    எழுத்து உடலோடு
    மொழி உயிரோடு
    ஒரு கவிப்பிள்ளை
    காகிதத் தொட்டிலில்
    பிரசவம் செய்திருக்கும்! 

    உண்மையில்
    கவிதை மழலையுடன்
    விமர்சனங்களில்
    மரணித்த
    ஒரு கவிஞனும்
    பிரசவமாகியிருப்பானாம்!

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (18)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    11425292_850420451678822_1064748056_n

    122677713@N07_rதிரு. திவாகரன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (27.06.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • விபத்தின் முகமாய் இருக்கிறது!

    -கவிஜி

    காடு தேடும் பாதையைத்
    தொலைத்த பாதங்களே
    கண்டு பிடிகின்றன!

    ***

    வளைந்து கொண்டே
    சென்ற மனதில்
    சட்டெனப் புகுந்த முடிதல்
    ஒரு விபத்தின்
    முகமாய் இருக்கிறது!

    ***

    நிறங்களின் கதைகளில்
    கருப்பு வெள்ளை
    நாயகனும் வில்லனும்!

    ***

    பலியாடுகளின் தேசத்தில்
    ஒரு கத்தியாவது 
    உடைந்து கிடக்க, வேண்டும்
    அய்யனார்
    மீசை முறுக்காதவராக
    இருக்கிறார்!

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 43

    அஞ்சல்தலை அருங்காட்சியகம், வாடூஸ், லிக்ஸ்டஸ்டைன்

    சுபாஷிணி

    இளம் பிராயத்தில், பள்ளியில் படிக்கும் காலங்களில், அஞ்சல் தலை சேகரிப்பு என்பது ஒரு சுவாரசியமான பொழுதுபோக்காக, பலருக்கும் இருந்திருக்கும். எனது அனுபவத்திலும் அப்படியே. முன்பெல்லாம் இணைய வசதி என்பது இல்லாத சூழலில், ஈமெயில் என்பதே என்ன என்று தெரியாத காலகட்டத்தில், வீட்டில் பெற்றோருக்கு வருகின்ற எல்லா கடிதங்களையும் பார்க்கும் போது அதிலிருக்கும் அஞ்சல் தலைகள் தான் என் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தன. கடிதத்தில் இருக்கும் அஞ்சல் தலையை வெட்டி அதனை தண்ணீரில் லேசாக நனைத்து தாளிலிருந்து அகற்றி பின்னர் மிதமான வெயிலில் உலர்த்தி அஞ்சல் தலை சேர்க்கும் ஆல்பத்தில் சேர்த்து விடுவது என் வழக்கம். நம்மில் பலரும் இதே போல செய்தது இப்போது நினைவுக்கு வரலாம்.

    அஞ்சல் தலைகளில் பல்வேறு வடிவங்கள் இருக்கின்றன. பொதுவாக நாம் பார்க்கும் பல அஞ்சல் தலைகள் சதுர வடிவமானவை என்றாலும், நீள் சதுரம், முக்கோணம், வட்டம், என்ற வடிவிலும் அஞ்சல் தலைகள் வெளியிடப்படுகின்றன. சிறப்பு வெளியீடுகளாக வருகின்ற அஞ்சல் தலைகள், அதாவது சுதந்திர தின வெளியீடு, முக்கிய அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் வெளியீடு, அல்லது முக்கிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பு பற்றிய செய்தியை பரவலாக்கும் வகையில் வெளியிடப்படும் அஞ்சல் தலைகள் ஆகியவை அஞ்சல் தலைகள் சேகரிப்போரின் கவனத்தை எப்போதுமே ஈர்க்கத் தவறுவதில்லை.

    asu4

    ​அஞ்சல் அட்டைகள் – இதே அருங்காட்சியகத்தில்

    உலகளாவிய அளவில் அஞ்சல் தலை சேகரிப்பு என்பது சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களாலும் விரும்பி மேற்கொள்ளப்படும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. தனி நபர் அஞ்சல் தலைகள் சேகரிப்பு என்பது ஒரு புறமிருக்க, அரசே அஞ்சல் தலைகள் சேகரிப்பிற்காக அருங்காட்சியகங்களை அமைத்து பராமரிப்பதும் உண்டு. அமெரிக்காவின் சில மாநிலங்களிலும். கனடா, சுவிட்சர்லாந்து, டென்மார்க், பாக்கிஸ்தான், எகிப்து, ஜெர்மனி, மோனாக்கோ, இந்தியா, ஜப்பான், ஹங்கேரி, ஃபின்லாந்து, இங்கிலாந்து மற்றும் சில நாடுகளிலும் அஞ்சல் தலைகளுக்கென்றே பிரத்தியேகமாக அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. இதேபோல சுவிட்சர்லாந்திற்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையில் இருக்கும் சிறிய நாடான லிக்ஸ்டஸ்டைன் நாட்டின் தலைநகர் வாடூஸிலும் ஒரு அஞ்சல் தலை அருங்காட்சியகம் இருக்கின்றது.

    asu3

    அருங்காட்சியக முகப்பு பகுதி

    இந்த அருங்காட்சியகம் வாடூஸ் நகரின் மையச் சாலையிலேயே அமைந்திருக்கின்றது. 1930ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியம் முழுமைப்படுத்தப்பட்டு 1936ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. லிக்ஸ்டஸ்டைன் தேசிய அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் இது தனித்து இயங்கும் ஒரு அருங்காட்சியகமாகவே அமைந்திருக்கின்றது.

    asu2

    ​அஞ்சல்தலை சேகரிப்புகள் வரிசையாக அலமாரியில்

    இந்த அருங்காட்சியகத்தின் முக்கிய நோக்கமாக லிக்ஸ்டஸ்டைன் நாட்டில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகளின் சேகரிப்புகளே நிறைந்துள்ளன. 1912ம் ஆண்டு தொடக்கம் லிக்ஸ்டஸ்டைன் அரசால் வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள் அனைத்தும் இங்கு சேகரித்து வரிசை வரிசையான காட்சிப் பலகைகளில் பொறுத்தி கண்ணாடிக் கதவுகள் பாதுகாப்பாப்புடன் அமைக்கப்பட்டுள்ளன. அஞ்சல் தலை சேகரிப்புகள் மட்டுமன்றி இங்கு வைக்கப்பட்டிருக்கும் அஞ்சல் தலை தயாரிப்பு பணிகளோடு தொடர்பு கொண்ட கருவிகளும் இங்கு வரும் பார்வையாளர்களுக்குக் கவனத்தை ஈர்க்கும் அம்சங்களாக அமைகின்றன.

    asu1

    ​அஞ்சல்தலைகளில் சில..

    இந்த அருங்காட்சியகத்தைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் http://www.postmuseum.li/ என்ற முகவரியில் முக்கிய தகவல்களைப் பெறலாம். நான் இந்த அருங்காட்சியகத்திற்கு இவ்வாண்டு மே மாதத்தில் ஒரு சனிக்கிழமையில் சென்றிருந்தேன். அருங்காட்சியகம் திறக்கும் நேரத்தை அறிந்து செல்வது ஏமாற்றத்தை தவிர்க்க உதவும். திங்கட்கிழமைகளில் இந்த அருங்காட்சியகம் திறப்பதில்லை.

    asu
    பழங்காலத்தில் கடிதம் கொண்டு வரும் குதிரை வண்டியின் ஓவியம்

    சுவிட்சர்லாந்து செல்பவர்கள் வாய்ப்பு கிடைத்து லிக்ஸ்டஸ்டைன் வந்தால் தவறாது இந்த அருங்காட்சியகம் சென்று வரவேண்டும். ஒரு தளத்தில் மட்டுமே சேகரிப்புகளும் கருவிகளும் இருந்தாலும் அஞ்சல் தலை தயாரிப்பு பற்றிய விரிவான விளக்கத்தை வழங்க இந்த அருங்காட்சியகம் தவறவில்லை.

    சரி.. இந்த அருங்காட்சியகத்திலிருந்து மற்றுமொரு அருங்காட்சியகத்திற்கு அடுத்த வாரம் அழைத்துச் செல்கிறேன். காத்திருக்கவும்!.

    Share