-துஷ்யந்தி

இன்னும் இருக்கின்றோம்
உண்மை உணராதவர்களாய்!

உறவென்று நினைத்தவர்கள்
நம்மை –
பொருட்படுத்துவதே இல்லை                         relationship and breakups
வாசல்வரைவந்து  அவ்வப்போது
காலைவாரி விடுபவர்கள்!

புதிய உறவுகள் வந்து
பெரிதாய்க் கிழித்துவிடும்
என்றிருக்க,
பொய்களுக்குக் கூட
அவர்கள் முலாம்
பூசிவிட்டார்கள்!

ஏமாறுவது – எங்கள்
இரத்தத் துணிக்கையாய்!

உண்மைகள் ஏராளம்
கட்டுப் படுத்துகையில்-

மனிதாபிமானம் எமக்குள்
உன்னிப்பாய் இருக்கையில்-

இயற்கையைச் சிலநேரம்
மலைக்க வைக்கும் போது-

மாறிவிட்டேன்
மறந்துவிட்டேன்- என
உறவுகள் கொஞ்சம் தலைகாட்டும்!

மாங்காய்க் கொட்டைக்குள்
பத்திரமாய் அடங்கிக் கிடக்கும்
வித்தின் பருப்பு போல,
தேசியக் கடலுக்குள்
இணையப்படாத கிணறாக,
சின்னச் சுகங்களிலே
சந்தோஷம் கண்டுகொண்டு
இன்னும் இருக்கிறோம்
உண்மை உணராதவர்களாய்
உறவுகளில் விரிசல்களாய்!!

***

படத்திற்கு நன்றி: கவிதை வயல்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *