-துஷ்யந்தி
இன்னும் இருக்கின்றோம்
உண்மை உணராதவர்களாய்!
உறவென்று நினைத்தவர்கள்
நம்மை –
பொருட்படுத்துவதே இல்லை 
வாசல்வரைவந்து அவ்வப்போது
காலைவாரி விடுபவர்கள்!
புதிய உறவுகள் வந்து
பெரிதாய்க் கிழித்துவிடும்
என்றிருக்க,
பொய்களுக்குக் கூட
அவர்கள் முலாம்
பூசிவிட்டார்கள்!
ஏமாறுவது – எங்கள்
இரத்தத் துணிக்கையாய்!
உண்மைகள் ஏராளம்
கட்டுப் படுத்துகையில்-
மனிதாபிமானம் எமக்குள்
உன்னிப்பாய் இருக்கையில்-
இயற்கையைச் சிலநேரம்
மலைக்க வைக்கும் போது-
மாறிவிட்டேன்
மறந்துவிட்டேன்- என
உறவுகள் கொஞ்சம் தலைகாட்டும்!
மாங்காய்க் கொட்டைக்குள்
பத்திரமாய் அடங்கிக் கிடக்கும்
வித்தின் பருப்பு போல,
தேசியக் கடலுக்குள்
இணையப்படாத கிணறாக,
சின்னச் சுகங்களிலே
சந்தோஷம் கண்டுகொண்டு
இன்னும் இருக்கிறோம்
உண்மை உணராதவர்களாய்
உறவுகளில் விரிசல்களாய்!!
***
படத்திற்கு நன்றி: கவிதை வயல்

Leave a Reply