விபத்தின் முகமாய் இருக்கிறது!

0

-கவிஜி

காடு தேடும் பாதையைத்
தொலைத்த பாதங்களே
கண்டு பிடிகின்றன!

***

வளைந்து கொண்டே
சென்ற மனதில்
சட்டெனப் புகுந்த முடிதல்
ஒரு விபத்தின்
முகமாய் இருக்கிறது!

***

நிறங்களின் கதைகளில்
கருப்பு வெள்ளை
நாயகனும் வில்லனும்!

***

பலியாடுகளின் தேசத்தில்
ஒரு கத்தியாவது 
உடைந்து கிடக்க, வேண்டும்
அய்யனார்
மீசை முறுக்காதவராக
இருக்கிறார்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *