-கவிஜி
காடு தேடும் பாதையைத்
தொலைத்த பாதங்களே
கண்டு பிடிகின்றன!
***
வளைந்து கொண்டே
சென்ற மனதில்
சட்டெனப் புகுந்த முடிதல்
ஒரு விபத்தின்
முகமாய் இருக்கிறது!
***
நிறங்களின் கதைகளில்
கருப்பு வெள்ளை
நாயகனும் வில்லனும்!
***
பலியாடுகளின் தேசத்தில்
ஒரு கத்தியாவது
உடைந்து கிடக்க, வேண்டும்
அய்யனார்
மீசை முறுக்காதவராக
இருக்கிறார்!

Leave a Reply