சுரேஜமீ

நம்பிக்கை!

peak11111

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் – குறள்

உங்கள் குரல் இதனைத் திரும்பத் திரும்பச் சொன்னால், நிச்சயம் முடியாதது எதுவும் இல்லை! இதோ உங்களுக்காக, இன்போஸிஸ் நிறுவனத் தலைவர், திருவாளர். நாராயண மூர்த்தி அவர்கள் ஆற்றிய உரையை அப்படியேத் தமிழில் கவிதையாக விதைக்கிறேன்!

நம்பிக்கை மலர்கள் பூத்துக் குலுங்கட்டும்!

பத்ம விபூஷன் திரு. நாராயண் மூர்த்தி அவர்களின் உரை:

மாதத்தில் இருபத்திரெண்டு நாட்கள்;
அயல் நாட்டில்;
எட்டு நாட்கள் என் தாய் நாட்டில்;
இதுதான் எனது இன்றைய நிலை!

இத்தகைய சூழலில்
இந்த குவைத் கன்னட கூட்டா
அமைப்பின் நிகழ்ச்சியில்
“தொழில் முனைவோர்”
என்ற தலைப்பில் பேச
அழைத்திருக்கிறார்கள்!

நண்பர்களே; குறிப்பாக இளையோரே;
தொழில் முனைவோர் எப்படி
ஒரு சமுதாயத்தை மாற்ற முடியும்
என்பதை நாம் உணரவேண்டும்!
தனி நபர் வருமானத்தில்;
உலகத்தில் முதல் பத்து இடத்தில்
இருக்கும் குவைத்துக்கும் கூட
இது பொருந்தும்!!

தனது “முயற்சியை”,
குறிக்கோளை, தகுந்த முறையில்
செல்வம் தரும் வகையில் மாற்றி,
வேலை வாய்ப்பை உருவாக்கி,
ஏழ்மையை விரட்டுவோமேயானால்;
அதுதான், நம் வெற்றியின் அடையாளம்!

“முடியாதது” எதுவோ; அதை
“முடியும்” என மாற்றுவதே
உங்களின் முயற்சியின்
இலட்சியமாக இருக்க வேண்டும்!

ஒரு “முயற்சி” வெற்றி பெற
அடிப்படைத் தேவைகள் என்ன?

1. நீங்கள் கூறுவது எளிமையாக இருத்தல் அவசியம்;
கட்டுப்பாடுகள் அற்ற, தெளிவான வார்த்தைகளை
உபயோகிக்க வேண்டும்;

உங்கள் முயற்சி ஒரு நிறுவனத்தின்
2. உற்பத்தி செலவை குறைப்பதாகவோ;

3. உற்பத்தி சுழற்சியின் நேரத்தை குறைப்பதாகவோ;

4. சந்தையைப் பெருக்குவதாகவோ;

5. வாடிக்கையாளரை கவருவதாகவோ;

இருத்தல் அவசியம்!

இவை நான்குமோ;
இதில் ஏதேனும் ஒன்றோ
உங்கள் முயற்சியில்
இருந்தால்; நிச்சயம் ஒருநாள்
உங்கள் இலட்சியம் வெற்றியடையும்!

உலகில் தொண்ணூற்று ஒன்பது
சதவிகிதத்தினர்; மற்றவர்
முயற்சியை; மெருகூட்டி
வெற்றியடைவதால்; கால
ஓட்டத்தில்; அவர்களால்
நிலைக்க இயலவில்லை!

தன்னுடைய முயற்சி
வெற்றியடைந்ததால்;
General Motors; Microsoft;
Apple; Fed ex போன்ற
நிறுவனங்கள் நிலைத்து
நிற்கின்றன!

உலகின் மாற்றங்களை
உன்னிப்பாய் கவனியுங்கள்;
உலக அளவில் ஏற்பட்ட
நான்கு மாற்றங்கள் தான்;
நான் அன்று வெறும்
250 டாலரில் தொடங்கிய
நிறுவனம் இன்று
26 பில்லியன் டாலர்
நிறுவனமாக உயர்ந்து இருக்கிறது!

முதல் முயற்சி
தோல்வியில் முடிந்தால்
மூலையில் உட்கார்ந்து விடாமல்;
உங்கள் மூளையைத் தீட்டி
காரணம் அறியுங்கள்!

ஒன்று; நீங்கள் உங்கள் முயற்சியை
காலம் தாழ்த்த நேரலாம்!
இல்லையெனில்,
உங்களுக்கான சந்தை
வேறு நாட்டில் இருக்கலாம்!

வெற்றிக்கு இன்றியமையாத
அடுத்த தேவை;

தகுந்த நிபுணர்களை
தன்னகத்தே கொள்ளுதல்;
நிதி; மேலாண்மை;
உற்பத்தி; மனித வளம்
என்று ஒவ்வொரு துறைக்கும்;
ஏற்றவாறு; ஒருமித்த
கருத்துள்ள; நாளைய
இலட்சியத்திற்காக
இன்று தியாகம் செய்யத்
தயாரான; தகுதியான
நபர்களை உங்களுடன்
வைத்திருத்தல் அவசியம்!

இவை அனைத்தும்
இருந்தாலும்; நம்பத் தகுந்த
தலைமையாக தாங்கள்
இருத்தல் அவசியம்!

தலைமையைப் பற்றி
ஒன்று சொல்ல விளைகிறேன்!
அமெரிக்காவில்; பெருந்தொழில்
அதிபர்களிடையே;
நான் உரையாடும்போது
என்னிடம் சிறந்த தலைமைப் பண்பைப்
பற்றி பேசச் சொன்னார்கள்;

நான் சொன்னேன்;
நான் அறையில் நுழையும்போது;
என்னால்
ஒரு முகம் மலர்ந்த ஒரு
மகிழ்ச்சியை;
என்னை நம்பி வேலை
செய்யும் சக தொழிலாளர்களிடம்
ஏற்படுத்த முடிந்தால்;

அவர்களுக்கு என்னால்
வாழ்க்கைக்குத் தேவையான
உபரி வருமானத்தைக்
கொடுக்க முடிந்தால்;

நான் ஒரு நல்ல தலைமையாளன்!!
என்று.
இவை இருந்து விட்டால்;
இன்றைய காலத்தில்
உங்கள் முயற்சியை
செயல் படுத்த பணம்
உங்களை நாடி வரும்!

ஆதலால்; இளையோரே
தொழில் முனைவோரே;
இன்னல்களைப் பொருட்படுத்தாது
இலட்சியங்களை வென்றெடுக்க
உங்களுக்கு தேவை;

உங்கள் முயற்சி எதாவது ஒரு
மாற்றத்திற்கு வித்திட வேண்டும்!
அதற்கான சந்தை மற்றும் சகாக்கள்;
நல்ல தலைமைப் பண்பு;
உங்களிடம் இருத்தல் வேண்டும்!

வாருங்கள்; வெற்றி நம்
பக்கத்தில்!!!!!!
வரலாறு எழுதும் நம்
பக்கத்தை!!!!!

ஜெய் ஹிந்த்!!!

(Padma Vibooshan Sri.Narayan Murthy’s speech at a function organized by Kuwait Kannada Koota on 9th November, 2012)

தொடர்வோம் நம் நெடிய பயணத்தை………..

அன்புடன்
சுரேஜமீ

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *