Blog

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (292)

    -சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே

    அன்பான வணக்கங்கள். இம்மடலை வரைந்து கொண்டிருக்கும் இந்நாள் ஏப்பிரல் முதலாம் திகதி. ஆம் முட்டாள்கள் தினம் அல்லது ஏப்பிரல் பூல்ஸ் டே என்று அழைக்கப்படும் தினம். முட்டாள்களைக் கொண்டாடுவதா? என்ன இது மடமைத்தனம் என்று கூட எண்ணத் தோன்றுகிறது அல்லவா? இதில் பெரிய ஆச்சரியமென்று ஒன்றுமில்லை ஒரு வகையில் பார்த்தால் நாம் அனைவருமே சில நேரங்களில் ,சில வேளைகளில் முட்டாள்களாக நடந்திருக்கிறோம் அல்லது முட்டாள்களாக்கப்பட்டிருக்கிறோம் இல்லையா?எம்மை யார் முட்டாள்கள் ஆக்கியதாக எண்ணுகிறார்களோ அவர்களும் எதோ ஒரு வகையில் எப்போதாவது முட்டாளாக இருந்திருப்பார்கள் எனும் உண்மையை அவர்கள் மறந்து விடுகிறார்கள். அப்படிப் பார்த்தால் இந்தத்தினத்தின் விசேடம் என்ன என்கிறீர்களா?எமக்காக எம்மால் கொண்டாடப்படும் ஒரு தினம். இந்தத்தினத்திலே வாழ்வில் நாம் எமது செய்கைகளை அசைபோட்டு அவற்றில் எவை முட்டாள்தனமானவை என்பதை வடிகட்டித் தெரிந்து கொள்ள உதவும் ஒரு தினமே !

    தேர்தல் வருகிறது அரசியல்வாதிகள் மேடையிலே ஏறி பீரங்கி குண்டுமழையைப் பொழிவது போல பிரசாரப் பேச்சை முழக்கித் தள்ளுகிறார்கள். வாக்குறுதிகளை அடுக்கடுக்காய் அள்ளி வீசுகிறார்கள்.அவ்வாக்குறுதிகளின் மயக்கத்திலே அவர்களுக்கு வாக்களித்து விட்டு பின்பு அவர்கள் அரசுக் கட்டிலேறியதும் அவ்வாக்குறுதிகளை மறந்து தூக்கத்திலாழ்ந்து விடுவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். அப்படியானால் அவ்வாக்குறுதிகளை நம்பி வக்குகளை அள்ளிக் கொடுத்த எமக்குப் பெயர் ? முட்டாள்கள் தானே ! வேறுசில தேர்தல்களில் அரசியல்வாதிகளில் யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு வாக்குகளை அள்ளிக் கொடுக்கும்போது நாம் அதிமேதாவிகள் என்று எண்ணிக்கொள்கிறோம். ஆனால் அதே அரசியல்வாதிகள் எம்மைப் பார்த்து பாவம் முட்டாள்கள் என்று எண்ணிக்கொள்கிறார்கள்.

    அனைத்தையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் இவ்வுலகில் இரண்டே இரண்டுவகை மனிதர்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.ஒன்று ஏமாற்றுபவர்கள் அடுத்தது ஏமாற்றப்படுபவர்கள்.. ஏமாற்றப்படுபவர்களின் முட்டாள்தனம் ஏமாற்றுபவர்களுக்கு சாதகமாய் அதேநேரம் ஏமாற்றுபவர்கள் தாமும் ஒரு நாள் ஏமாற்றப்படுவோம் என்பதை மறந்து போவதும் முட்டாள்தனமே ! அனைத்தையும் அறிந்து விட்டோம் எமக்குத் தெரியாத விடயம் எதுவுமேயில்லை என்னும் எண்ணத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடுவோர் தாம் அறியாத விடயத்தை அறிந்ததாகக் காட்டிக்கொண்டு வாதம் செய்ய முற்படுவதில் உள்ள முட்டாள்தனம் அவருக்கு புலப்படாது ஆனால் அவரைச் சுற்றியுள்ளவர்களுக்குப் புலப்படும்.

    இன்று இங்கிலாந்து அரசியல்களத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இந்த ப்ரெக்ஸிட்எனும் விடயத்தை எடுத்துக் கொண்டால், ப்ரெக்ஸிட்டை ஆதரிப்போர் தமது எண்ணம் ஈடேறாமல் போகும் போது அதற்கு ஆதரவாக வாக்களித்த தம்மை அரசு முட்டாளாக்கத் தலைப்படுகிறது என்று ஆத்திரப்படுகிறார்கள். அதேநேரம் இந்த ப்ரெக்ஸிட்டுக்கு எதிராக வாக்களித்தோர் இதற்கான பிரசாரத்தின் போது ப்ரெக்ஸிட்டுக்கு ஆதரவாக பிராசாரம் செய்தோர் பல பொய்களின் அடிப்படையில் பிரசாரம் செய்தது தம்மை முட்டாளாக்கிய செயல் என்று ஆத்திரப்படுகிறார்கள். இங்கிலாந்தின் பிரதமரோ தன்னுடைய கட்சியைச் சார்ந்தவர்கள், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கொண்டு மக்களுடைய ஆணையை தான் நிறைவேற்ற முடியாமல் செய்து தன்னை முட்டாளாக்குகிறார்கள் என்று வெகுண்டெழுகிறார்.

    இவையனைத்துக்கும் மத்தியில் எந்தவிதமான சமரசத்துக்கும் இணங்காமல் வேற்றுமைகளை ஒதுக்கி தமக்கிடையில் இருக்கும் ஒற்றுமைகளின் அடிப்படையில் இணக்கம் காணத் தவறி கொள்ககளை மட்டும் குரங்குப்பிடியாகப் பிடித்துக் கொண்டு நடக்கும் அரசியல்வாதிகளின் மத்தியில் சிக்குண்டு பொதுமக்களின் பொருளாதார வாழ்வு முட்டாளாகி நிற்கிறது.

    உலகமயமாக்கல் எனும் பொருளாதார வழிமுறையில் நடைபோட்டு தமது பொருளாதார வளத்தை பெருக்கிக்கொண்ட மேலைத்தேச வர்த்தக உலகத்தின் வெற்றியால் பலவித அனுகூலங்களை பெற்றுக்கொண்ட சாதாரண மக்கள், அதன் ஒரு பக்க விளைவாக வெளிநாட்டு , அதாவது வளர்ந்துவரும் நாடுகளில் இருந்து வரும் குடியேற்றவாசிகளின் வரவினைக் கண்டு அதனை எதிர்க்கிறோம் எனும் போர்வையில் மீண்டும் தேசியவாதம் எனும் கோஷத்தினுள் தம்மைப் புதைத்துக் கொள்கிறார்கள். இங்கே அனைத்து மக்களும் ஒரே இனம், அனைத்து மதங்களும் சமமானவையே எனும் பொதுவுடமைக் கருத்துகள் முட்டாளாக்கப்பட்டு புத்தகங்களுக்குள் புதைக்கப்படுகின்றன.

    ஏனின்று ஜனநாயக அரசியல் என்று பேசப்படும் அரசியல் இனவெறியை தமது அடிப்படையாகக் கொண்டு அதற்கு தேசியவாதம் எனும் முலாம் பூசி தம்மை நாகரீக அரசியல்வாதிகளாக்கிக் கொள்பவர்கள் கைகளில் சிக்கி இருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம். ஆங்கிலத்தில்far right எனும் தீவிர வலதுசார்பு கொண்ட இனவாத தீவிரவாத அமைப்புகள் அரசியல் மேடையில் இன்றைய மேலைநாடுகளில் வேரூன்றிக் கொண்டு வருகின்றன என்பதை நன்கு அறியக்கூடியதாக உள்ளது.

    நாமும் வாழ வேண்டும் அதேபோல அடுத்தவருக்கும் வாழும் உரிமை இருக்கிறது எனும் உண்மை அப்பட்டமாகத் தெரிந்திருந்தும் தீவிரவாதக் கொள்கைகளினால் அதனை மறுத்துப் பேதலிக்கும் மனப்பான்மை இன்றைய மேலைநாடுகளில் மட்டுமில்லை எமது பின்புல நாடுகளிலும் இருக்கிறது என்பதே கசப்பான உண்மை. மக்களின் உணர்வுகளைத் தூண்டி விடுவது சுலபம் அப்படித் தூண்டிவிடப்பட்ட உணர்வுகள் பூதாகரமாகத் தலைவிரித்தாடும்போது அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்பது இயலாத காரியம் எனும் உண்மையை சாதாரணக் குடிமகன் முதல் அரசியல்வாதிகள் வரை உணர்ந்து கொள்ளாததினாலேயே இன்றைய உலகம் நிலைகுலைந்து கொண்டிருக்கிறது.

    அரசியலை விட்டு விடுவோம் சாதரணக் குடும்பங்களையே எடுத்துக் கொள்ளுவோமே !காதலைத் திரைப்படங்களில் பார்த்து கைதட்டி மகிழ்வோர் அது தமது குடும்பத்தினுள் நிகழும்போது அத்தனை ரசனையோடு ஏற்றுக் கொள்வார்களா ? என்ன. “புரிந்துணர்வுஎன்பதை முற்றாக இழந்து கொண்டு போகிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.இன்றைய சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் ஆகியவற்றில் காழ்ப்புணர்ச்சியுடனோ அன்றி விரசத்துடனோ அன்றி இனவாதவெறியுடனோ பகிரப்படும் விடயங்களைப் பார்க்கும் போது மனித மனங்களில் ஆழமாக வேரூன்றியிருக்கும் வெறுப்புணர்ச்சியை உணரக்கூடியதாக உள்ளது.அதேநேரம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட , விதிவிலக்கான பலர் இருக்கிறார்கள் என்பது உண்மையே ! அவர்கள் சிலர் அரசியலிலும் இருக்கிறார்கள் என்பதும் உண்மையே ! ஆனால் அத்தகையோர் எண்ணிக்கையில் பெரும்பான்மையாவதே இன்றைய காலத்தின் கட்டாயமாகிறது.

    இவற்றை எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய மனிதாபிமானமிக்க , பொது அறிவு அடிப்படை கொண்ட தன்னலமில்லாத தலைவர்களை , சமுதாய முன்னோடிகளை உருவாக்க வேண்டிய கடமை யார் கைகளில் உள்ளது ?

    முட்டாளின் மூளையிலே முன்னூறு பூ மலரும்

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    லண்டன் 01.04.2019

    Share
  • இந்த வார வல்லமையாளர் – 304

    விவேக்பாரதி

    மாறிக்கொண்டே வரும் இந்த துரித உணவுக் கலாச்சாராத்தில் உணவு என்பதும் நம் வாழ்க்கையில் ஆடம்பரப் பொருள்களுள் ஒன்று என்று ஆகிவிட்டது. பெருநகரங்களில் மட்டுமே கிடைக்கும் என நம்பப் படுகின்ற துரித உணவுகள், சமைக்கும் முறைகளில் நவீனமான கருவிகள் தேவைப்படும் எனப் பலர் கருதும் உணவுகளை ஒரு கிராமத்துச் சூழலில் சமைத்து வருகிறார் ஒருவர். அனைத்து வகையான உணவுகளையும் சிறிதளவு என்றில்லாமல் குறைந்தபட்சன் 50 நபர்கள் சாப்பிடும் அளவு சமைத்து குழந்தைகளுக்கான விடுதிகளிலும், கோவில்களிலும் ஆதரவற்றோருக்கு அளித்து வருகிறார்.

    இதிலே வியக்கத்தக்க செய்தி என்னவென்றால் அவர் சமைக்கும் முறைகளைக் காணொலிகளாக்கி யூடியூபில் வெளியிட்டு இளைஞர்கள் மத்தியில் அவர் டிரெண்டிங் ஆகி வருவது தான். “வில்லேஜ் ஃபுட் ஃபேக்ட் ரி” என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் யூடியூப் பக்கம் சுமார் 2 லட்சம் வாடிக்கையாளர்களையும் 200 க்கும் மேற்பட்ட காணொலிகளையும் கொண்டுள்ளது. அதிகப்படியான தகவல்க, ஆராவாரமான பேச்சுகள் என்பதெல்லாம் இல்லாமல் சிறிய எளிய முறையில் 8 முதல் 10 நிமிடங்களில் முடிந்துவிடும் காணொலிகளின் மூலமாக இத்தனை பெரிய ரசிக வட்டத்தை வில்லேஜ் ஃபுட் ஃபேக்ட ரி பிடித்திருக்கிறது எனலாம்.

    இதில், சமையல் செய்து வழிநடத்திச் செல்பவர் திரு. ஆறுமுகம் அவர்கள். பெரிய அளவில் உணவு சமைத்து ஆதரவற்றோருக்கு வழங்கும் அடிப்படையில் பிரம்மிக்க வைக்கும் நிறைய சாதனைகளை இவர் நிகழ்த்தியிருக்கிறார். அதில் சென்ற வாரம் இவர் செய்த நுங்கு சர்பத்தும் ஒரு உதாரணம்.

    சுமார் 1500 நுங்குகளைக் கொண்டு தன் ஊர் மக்களுக்கு அவர் செய்துன்கொடுத்த, நமக்குச் செய்து காட்டிய நுங்கு சர்பத் பார்க்கும்போதே கண்கள் வழியே மனத்துக்குக் குளிர்ச்சியைப் பரப்பியது. இதோ காணொலிக்கான சுட்டி,

    நம் பாரம்பரிய வகை உணவுகளையும் துரித உணவுகளுடன் சேர்த்துச் சமைத்துக் காட்டி இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்து, வாட்ஸாப், முகநூல், இன்ஸ்டாகிராம் மூலம் மிகவும் பிரபலமாகி இருக்கும் வில்லேஜ் ஃபுட் பேக்டரியைச் சேர்ந்த திரு. ஆறுமுகம் அவர்களை இந்த வாரத்தின் வல்லமையாளர் என்று அறிவிப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறோம். அவர்களது இந்தப் பணி தொடரவும் வல்லமை மின்னிதழ் குழுமம் வாழ்த்துகளை இங்கே பதிவு செய்கின்றது.

     

    Share
  • காலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 8  

    -மேகலா இராமமூர்த்தி

    இந்தியப் பெண்களுக்கு எட்டாக் கனியாக இருந்த கல்வியைக் கிட்டச்செய்த இருபதாம் நூற்றாண்டு அவர்களைப் பொறுத்தவரையில் போற்றத்தக்க நூற்றாண்டே. படிப்பறிவும் எழுத்தறிவும் பெண்களின் சிந்தனையைச் செப்பம் செய்தன; ஆதலால் பெண்களும் ஆண்களைப் போலவே அதிக அளவில் படைப்புக்களை உருவாக்கத் தொடங்கினர்.

    மரபுசார் கவிதைகளே கோலோச்சிவந்த நிலைமாறி, கட்டற்ற புதுக்கவிதை (free verse), கட்டுரை, சிறுகதை, புதினம் என்று இலக்கியம் பல்வேறு தளங்களில் பரந்து விரிந்து பயணிக்கத் தொடங்கியதும் இக் காலகட்டத்திலேயே.

    தமிழின் புதின இலக்கிய வரலாற்றைத் தொடங்கிவைத்த பெருமை முன்சீப் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரத்தைச் சாரும். எழுதுகோல் ஆண்களின் கைகளுக்கு மட்டுந்தான் வயப்படுமா என்ன? எம்மாலும் பழுதற எழுதமுடியும் என்று எழுதுகோல் பிடித்த வை. மு. கோதைநாயகி அம்மையார் புதினம் எழுதி ’முதல் பெண் புதின எழுத்தாளர்’ எனும் பெருமையைத் தமக்கு உரித்தாக்கிக் கொண்டார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த இவ் அம்மையார் முறையாகத் தமிழ்க்கல்வி பயிலவில்லை; எனினும் தமிழில் எழுதத்தெரிந்த தம் தோழி பட்டம்மாள் என்பவரின் உதவியுடன் கதைகள், நாடகங்கள் முதலியவற்றை எழுதிவந்தார். பின்னர், தாமே தமிழில் எழுதக் கற்றுக்கொண்டு ஆக்கங்களை உருவாக்கத் தொடங்கியிருக்கின்றார்.

    இவரது முதல் நாடக நூலான ‘இந்திர மோகனா’ 1924-இல் வெளிவந்தது. இந்து, சுதேசமித்திரன், நியூ இந்தியா உள்ளிட்ட பல பத்திரிகைகள் இந்நூலைப் பாராட்டி விமரிசனம் எழுதின. மேடைகளிலும் இந்நாடகம் அரங்கேறியிருக்கின்றது. முதல் நாடகமே பெருவெற்றி பெற்றதால், மேலும் எழுத வேண்டும் என்ற ஊக்கம் பிறந்தது கோதைநாயகி அம்மையாருக்கு. தொடர்ந்து, ‘அருணோதயம்’, ‘வத்சகுமார்’, ‘தயாநிதி’ முதலிய நாடகங்களை எழுதினார்.

    முதன்முதலாக ‘வைதேகி’ என்ற நாவலை எழுதினார். பெண் விடுதலை, நாட்டுப்பற்று, மதுவிலக்கு, கைம்பெண் மறுமணம் முதலியவற்றைத் தம் நாவல்கள் மூலம் அக்காலத்திலேயே வலியுறுத்திய முற்போக்குச் சிந்தனையாளராக வை.மு.கோ. அம்மையார் திகழ்ந்திருக்கின்றார் என்பது இன்றைய பெண்டிரும் அறிந்து பெருமிதம் கொள்ளவேண்டிய ஒன்றாகும். அவ்வமயம் தமிழகத்துக்கு வருகைபுரிந்த அண்ணல் காந்தியாரைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்ற கோதைநாயகி அம்மையார், அதன்பிறகு தம் அணிகலன்களைத் துறந்து கதராடை மட்டுமே அணிந்து எளிமையாய் வாழ்ந்திருக்கின்றார். கர்நாடக இசையிலும் சிறந்து விளங்கிய அம்மையார், பாடுவதில் திறமைமிக்க பிறபெண்களையும் ஊக்குவித்திருக்கின்றார். நாவல் ராணி, கதா மோகினி, ஏக அரசி என்றெல்லாம் பல பட்டங்களைப் பெற்ற பெருமைக்குரியவர் வை.மு. கோதைநாயகி அம்மையார்.

    சாவித்திரி அம்மையார், சரஸ்வதி அம்மையார் போன்றோர் இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்த அன்றைய சிறுகதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கின்றனர். இஃது அவர்களின் பன்மொழிப் புலமைக்குச் சான்று பகர்கின்றது.

    மைசூர் அரண்மனையில் இசையறிஞராக விளங்கிய நடராஜ ஐயர் என்பவரின் அருமை மகளார் விசாலாட்சி அம்மையார். தம் மகளைக் கல்வி கற்க வைத்த நடராஜ ஐயர் அவருக்குத் தமிழ், கன்னடம், சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற பன்மொழிப் புலமையும் கிடைக்கச் செய்தார். அக்கால வழக்கப்படி இள வயதிலேயே மணமுடிக்கப்பட்ட விசாலாட்சி அம்மையார் தீயூழின் விளைவாய் மிக விரைவிலேயே கணவனை இழந்து கைம்பெண்ணானார். அப்போது அவர் வயது வெறும் பதினான்கு மட்டுமே. அந்நிலையில் மீண்டும் தம் படிப்பினைத் தொடர விரும்பிய அவருக்கு வீட்டிலும் உறவினர்களிடமிருந்தும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. அதையும்மீறி அவர் மைசூர் மகாராணிக் கல்லூரியில் சேர்ந்து தம் பட்டப் படிப்பினை முடித்தார். கல்லூரியிலேயே பேராசிரியராகப் பணியாற்றக்கூடிய வாய்ப்புக் கிடைத்தும் அதை மறுத்துவிட்ட அவர், எழுதுவதில் இயல்பாகவே தமக்கிருந்த ஆர்வத்தின் அடிப்படையில் புதினம் ஒன்றை எழுதத் தொடங்க, ’எழுதுவது குடும்பப் பெண்களுக்கு அழகன்று’ என்று அதனைக் கண்டித்திருக்கின்றார் அவர் தந்தையார். அதைப் பொருட்படுத்தாத விசாலாட்சி அம்மையார் ’லலிதாங்கி’ என்ற புதினத்தை எழுதி அப்போது மிகப் பரவலான வாசகர் வட்டத்தைப் பெற்றிருந்த ‘லோகோபகாரி’ எனுமிதழில் அதனை 1902இல் வெளியிட்டார்.

    விற்பனையில் சாதனை படைத்து ’Best Seller’ஆக இரண்டாயிரம் படிகள் விற்றுத் தீர்ந்திருக்கின்றது அப்புதினம்! அதைத் தொடர்ந்து ‘ஜலஜாட்சி’ என்ற பெயரில் இரண்டாவது புதினத்தையும் எழுதினார் விசாலாட்சி அம்மையார். அப்புதினமும் வெகுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறவே, மகளின் எழுத்தாற்றலைத் தேற்றமாய் உணர்ந்தார் தந்தையார்; அதன்பிறகு மகளின் எழுத்துப்பணிகளுக்கு முட்டுக்கட்டை ஏதும் போடவில்லை அவர். அதுமட்டுமல்லாது, தம் மகளின் எழுத்துத்துறை வளர்ச்சிக்கு மைசூரைவிடச் சென்னை உகந்தது என்ற முடிவுக்கு வந்தவராய்ச் சென்னைக்குக் குடும்பத்தோடு குடிபெயர்ந்திருக்கின்றார்.

    தம் புதினங்களை வெளியிட்ட ‘லோகோபகாரி’ இதழிலும் சில காலம் துணை ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கின்றார் விசாலாட்சி அம்மையார். பின்னர் அவரே ’ஹிதகாரணி’ என்ற பெயரில் பத்திரிகை ஒன்றையும் தொடங்கி நடத்தியமையால், ’முதல் பெண் இதழாசிரியர்’ என்ற பெருமைக்கும் உரியவராகின்றார். இவ்விதழோடு ‘ஞான சந்திரிகா’ என்ற மற்றோர் இதழையும் இவர் நடத்தியிருக்கின்றார். இவருடைய இடையறா இலக்கியச்சேவையைப் பாராட்டிச் சிருங்கேரி மடம் ’பண்டித ரத்னா’ என்ற பட்டத்தை இவருக்கு வழங்கிச் சிறப்பித்திருக்கின்றது.

    அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு, வீட்டுக்குள்ளேயே கூட்டுப்புழுக்களாய் கைம்பெண்கள் முடக்கப்பட்ட அன்றைய நிலையில், அவ்வாறு முடங்கியிராது துணிச்சலாய் உயர்கல்வி கற்று, ஆண்களின் கட்டுப்பாட்டிலிருந்த எழுத்துத் துறையிலும் கம்பீரமாய்ப் புகுந்து சாதனை படைத்தும், தாமே இதழ்களைத் தொடங்கி நடாத்தியுமிருக்கும் விசாலாட்சி அம்மையாரின் செயல்கள் அசாதாரணமானவை என்று அழுத்திச் சொல்லலாம்.

    பிரபல தமிழ் எழுத்தாளரும், ’சிறுகதை ஆசான்’ என்றழைக்கப்படுபவருமான  கு. ப. ராஜகோபாலனின் சகோதரியான கு. ப. சேது அம்மாளும் அந்நாளில் சிறந்த எழுத்தாளராய் விளங்கினார். இரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளில் ஈடுபாடு கொண்டிருந்த கு. ப. ரா. தம் சகோதரியை, ’சாந்தி நிகேதனில்’ தாகூர் நிறுவியிருந்த ’விஸ்வபாரதி’ பல்கலைக்கழகத்தில் மேற்கல்வி பயிலச் செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கின்றார்; ஆனால் இவர்களின் தாயார் அதற்கு ஒத்துக்கொள்ளாததால் அந்த ஆசை நிராசையாகிவிட்டிருக்கின்றது.

    சகோதரர் கு. ப. ரா.வின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட சேது அம்மாள், தாமும் எழுதத் தொடங்கியிருக்கின்றார். அவருடைய முதல் சிறுகதையான ‘செவ்வாய் தோஷம்’ 1939-இல் ’காந்தி’ இதழில் வெளியானது. பின் அவரது சிறுகதைகள் பல தமிழ் இதழ்களில் வெளியாகத் தொடங்கின. 1940களில் சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் குழுவிலும் சேது அம்மாள் பணியாற்றியிருக்கின்றார் என்று அறிகின்றோம். மைதிலி, தனி வழியே, ஓட்டமும் நடையும், குரலும் பதிலும் உள்ளிட்ட 9 புதினங்களையும், தெய்வத்தின் பரிசு, உயிரின் அழைப்பு என 500 சிறுகதைகளையும், சமையற்கலை குறித்து இரு தொகுதிகள் அடங்கிய நூலையும், போதி மாதவன் எனும் பெயரில் புத்தரின் வரலாற்றையும் எழுதியிருக்கின்றார் சேது அம்மாள். 2002ஆம் ஆண்டு இவரது நூல்களைத் தமிழகஅரசு  நாட்டுடைமை ஆக்கியிருக்கின்றது. எழுத்தோடு நில்லாமல் அகில இந்திய வானொலியில் பலதரப்பட்ட தலைப்புக்களில் சொற்பொழிவுகளையும் வழங்கியிருக்கின்றார் பல்துறை வித்தகியான சேது அம்மாள்.

    ’சிறுகதை மன்னன்’ என்ற புகழுக்குச் சொந்தக்காரரான புதுமைப்பித்தனைத் தமிழ்கூறு நல்லுலகு நன்கறியும்; ஆனால் அவர் மனைவியான கமலா விருத்தாசலமும் (புதுமைப்பித்தனின் இயற்பெயர் விருத்தாசலம் என்பதாகும்) ஒரு நல்ல எழுத்தாளர் என்பதைப் பலரறியார். கிராம ஊழியன்’, `தினமணி’ போன்ற இதழ்களில் அவருடைய கதைகள் வெளிவந்தன. `காசுமாலை’ என்ற சிறுகதைத் தொகுப்பு 1971-ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது.

    1931-ஆம் ஆண்டில் புதுமைப்பித்தனை மணந்த கமலா அம்மையார், 1948-ஆம் ஆண்டில் அவர் மறையும்வரையில் அவரோடு சேர்ந்து வாழ்ந்த ஆண்டுகள் பத்துக்குள்தான் இருக்கும். புதுமைப்பித்தன் இடைவிடாமல் கமலாவுக்கு எழுதிய கடிதங்களில்தான் இருவரும் வாழ்ந்திருக்கின்றார்கள். அத்தகு துயர வாழ்வுக்கிடையிலும் கதைகள் எழுதித் தம் எழுத்துத் திறமையைப் பறைசாற்றியிருக்கும் கமலா அம்மையார் பாராட்டுக்குரியவரே!

    இத்தகு பெண் எழுத்தாளர்கள் மத்தியில் ’அத்தி பூத்தாற்போல்’ அரிதில் காணக்கிடைக்கின்றார் சித்தி ஜுனைதா பேகம் (ஆச்சிமா) எனும் இசுலாமியப் பெண் படைப்பாளி. காரைக்காலுக்கு அருகிலுள்ள நாகூரில் பிறந்த பேகம் அம்மையாரின் முதல் நாவலானகாதலா கடமையா?’வுக்கு மகாமகோபாத்தியாயரான உ.வே.சா. அவர்கள் முன்னுரை வழங்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பெண் உள்ளம் அல்லது கணவனின் கொடுமை, ஹலிமா அல்லது கற்பின் மாண்பு, மலைநாட்டு மன்னன், மகிழம்பு போன்ற பல புதினங்களை எழுதியிருக்கின்றார் இவ் அம்மையார். மிக அதிகமான ஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பெண்களுக்கு விதிக்கும் இசுலாமிய சமயத்தில் பிறந்து மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்த ஜுனைதா பேகம் அம்மையார், அரும் முயற்சியாலும் பயிற்சியாலும், தேர்ந்த எழுத்தாளராய் மிளிர்ந்தது பெருஞ் சாதனையே!

    [தொடரும்]   

    *****

    http://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1011-html-p1011223-23799

    http://www.thehindu.com/thehindu/mp/2002/10/10/stories/2002101000900200.htm

    http://web.archive.org/web/20080129164524/http://abedheen.googlepages.com/sithijunaitha.html

     

    Share
  • (Peer Reviewed) சித்தர் பாடல்கள் – வேதாத்திரி மகரிஷி பாடல்கள்: ஓர் ஒப்பீடு

    (Peer Reviewed) சித்தர் பாடல்கள் – வேதாத்திரி மகரிஷி பாடல்கள்: ஓர் ஒப்பீடு

    .பரமசிவன்
    முனைவர் பட்ட ஆய்வாளர்
    யோகமும் மனித மாண்பும் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம்
    தஞ்சாவூர்
    முனைவர் ரமேஷ்
    ஆய்வு நெறியாளர்
    விஷன் ஆராய்ச்சி மையம்
    ஆழியாறு
    பொள்ளாச்சி

    முன்னுரை:

    தமிழ்நாட்டில் சித்தர் பாடல்கள், மெய்ப்பொருள் நாட்டம் உடையோர்க்கு ஓர் உந்து சக்தியாக விளங்கி வந்துள்ளன. சித்தர் நூல்களில் உள்ள கவிதைகளின் உண்மைப் பொருளைத் தெளிவாகப் புரிந்துகொள்வதில் சிரமம் இருந்துகொண்டுதான் உள்ளது. வள்ளலார் அருளைப் பெற்ற அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள், சமீப காலத்தில் வாழ்ந்த மகான். அவர் ஞானக் களஞ்சியம் என்னும் கவிதைத் தொகுப்பினை அளித்துள்ளார்கள். அதில் மிக எளிமையான மெய்விளக்கமளிக்கும் ஞானப் பாடல்கள் உள்ளன. சித்தர் பாடல்களோடு வேதாத்திரி மகரிஷி அவர்களது பாடல்களை ஒப்பாய்வு செய்வதுவே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

    அறிவாற்றலால் உயர்ந்த நிலையில் வாழ்ந்த சித்தர்கள் பலர், தமிழ்நாட்டில் இருந்துள்ளார்கள். அவர்களில் ஒரு பகுதியினரைச் சித்தர்கள் எனக் குறிப்பிடுகின்றனர். சித்தர்கள் எழுதிய ஓலைச்சுவடிகள் இன்றும் உள்ளன. அவற்றில் வைத்தியம், ஜோதிடம், மந்திரம், ரசவாதம், கற்பசாதனைகள், மூச்சுப் பயிற்சிகள், இறவாமல் சமாதி நிலை அடைதல் போன்ற பல்வேறு உயர்ந்த விஷயங்கள் பேசப்பட்டுள்ளன. பொதுவாகப் பதினெண் சித்தர்கள் என்று குறிப்பிடுவது மரபு ஆயினும் நூல்களில் கூறப்பட்டுள்ளவர்களது பெயர்களை எல்லாம் தொகுத்துப் பார்த்தால் சுமார் 40-க்கு மேற்பட்டவர்கள் உள்ளதாகத் தெரிகிறது. சித்தர்கள் அனிமா, மகிமா, இலகிமா, சரிமா, பிராப்தி, வசித்துவம், பரகாமியம், ஈசத்துவம் என்றும் அட்டமா சித்திகளை பெற்றவர்கள் என்றும் கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டில் அவ்வப்போது மகான்கள் தோன்றி, சித்தர்களது கருத்துகளின் அடிப்படையில் மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கை முறையை கற்றுக் கொடுத்துள்ளனர். அருட்பெருஞ்சோதி வள்ளலார் அவர்களைத் தொடர்ந்து இன்று தமிழகமெங்கும் மக்கள் கடைப்பிடிக்கும் மனவளக்கலையை வழங்கியவர், வேதாத்திரி மகரிஷி அவர்கள். சென்னைக்கு அருகில் கூடுவாஞ்சேரியில் ஓர் எளிய நெசவாளர் குடும்பத்தில் 1911-ஆம் ஆண்டு பிறந்தார்கள். ஆன்மீகச் சாதனைகளை, அவர்களுக்கு வைத்தியம் கற்றுத் தந்த கிருஷ்ணராவ் பூபதி அவர்களிடம் ஆரம்பத்தில் கற்று, பின்னர் பரஞ்சோதி மகான் அவர்களிடமும் கற்றுச் சாதனை புரியும் காலத்தில், வள்ளலார் அவர்களது அருளும் கிட்டியது. திருவள்ளுவர், திருமூலர், தாயுமானவர், வள்ளலார் ஆகியோரது பாடல்களை வழிகாட்டுதலாகக் கொண்டு மனவளக்கலை என்னும் பெயரில் இக்கால மக்களுக்கு ஏற்ற வகையில் எளிய உடற்பயிற்சிகள், எளிய
    முறை காயகல்ப பயிற்சி, அகத்தவப் பயிற்சி, அகத்தாய்வுப் பயிற்சிகள், பிரம்ம ஞான
    விளக்கப் பயிற்சி எனக் கல்வியாக, பயிற்சிகளாக வடிவமைத்துள்ளார்கள். இவை அனைத்தையும் மக்களுக்குக் கொண்டு செல்ல, உலக சமுதாய சேவா சங்கம் என்ற அமைப்பினை 1958-ஆம் ஆண்டு ஆரம்பித்தார்கள் .

    சித்தர் பாடல்களும் வேதாத்திரி மகரிஷி பாடல்களும்:

    சித்தர்கள் தங்களது உடலை மிகவும் போற்றிப் பாதுகாத்தார்கள். கற்பசாதனைகளை மேற்கொண்டு நீண்ட காலம் வாழ்ந்தார்கள். யோகப் பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள்; மூலிகைகள், உபரசங்கள், உலோகங்கள், பாசனங்கள் இவற்றால் ஆன மருந்துகள் என்பனவற்றைத் துணையாகக் கொண்டு தாங்கள் விரும்பும் வரை பூமியில் வாழ்ந்த பின் சமாதி என்ற நிலையில் வாழ்வை நிறைவு செய்தார்கள். அவர்களது சமாதிகள் கோயில்களாக உள்ளன.

    உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
    திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவும் மாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
    உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே                                  – திருமந்திரம் 724

    வேதாத்திரி மகரிஷி அவர்களும் உடல் நலம் பேணுதலை முக்கியமாகக் கற்பித்து வந்தார். அவர்களுக்குச் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம் ஆகியவை தெரியும். தாம் கற்ற மருத்துவ அறிவைக் கொண்டு நோய் வராமல் தடுக்கவும் வந்த நோயைக் குணமாக்க உதவும் விதத்திலும் எளிய முறையிலான உடற்பயிற்சித் தொடர் ஒன்றினை வடிவமைத்தார்கள். அதனைப் பலரும் கற்றுப் பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் நமது உடலில் ரசம், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் என எழு தாதுக்கள் உள்ளன. ஏழாவது தாதுவாகிய விந்துவே உடலில் உயிர் இருந்து இயங்குவதற்கு அடிப்படை. அதனைப் போற்றிப் பாதுகாப்பதன் மூலம் நீண்ட காலம் வாழலாம், நோய்களை குணப்படுத்திக் கொள்ளலாம் என்ற கருத்தின் அடிப்படையில் சாதாரண மக்களும் கற்றுப் பயன்படுத்தும் வகையில் எளிய முறையில் காயகல்ப பயிற்சி ஒன்றினை உருவாக்கிக் கற்றுக் கொடுத்துள்ளார்.

    சுக்கிலத்தை மேலேற்றி மனதை வைத்துத்
    துரிய நிலை நின்று தவம் ஆற்றும் யோகம்
    சுக்கிலத்துத் தவம் குதத்துப் பயிற்சி கூட்டி
    தூக்கம், போகம், உணவு முன்னம் செய்ய
    சுக்கிலமே கெட்டியாம் ஆண்மை ஓங்கும்
    தொல்லை தரும் நோய் வகைபோம் இளமை காக்கும்
    சுக்கிலத் தோடுயிர் சிவ காந்தம் மிக்கும்
    சூட்சுமமாம் இக்கலையே காயகல்பம்                                 -ஞானக் களஞ்சியம் 518

    மேற்கண்ட பயிற்சி இன்று உலகம் முழுவதும் மனவளக்கலை மன்றங்களில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இலட்சக்கணக்கானோர் கற்றுப் பயன்பெற்று வருகின்றனர்.

    சித்தர்களின் வழி, அறிவுப் பூர்வமானது. அவர்கள் காலத்தில் நிலவிய பல்வேறு அடிப்படையற்ற மூட நம்பிக்கைகளை அவர்கள் சாடியுள்ளதை அவர்கள் பாடலில் காணலாம். குறிப்பாக, அறிவுக்குப் பொருந்தாத இறை வழிபாட்டினை அவர்கள் மாற்ற விரும்பியதைச் சிவவாக்கியரின் பிரபலமான பாடல்கள் உணர்த்தும்.

    என்னிலே இருந்ததொன்றை நானறிந்ததில்லையே
    என்னிலே இருந்ததொன்றை நானறிந்து கண்ட பின்
    என்னிலே இருந்ததொன்றை யாவர் காண வல்லீரோ
    என்னிலே இருந்து யானுணர்ந்து கொண்டேனே                         – ஞானக் கோவை

    என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் பாடியுள்ளார்.

    எங்கும் நிறைவாக இருக்கின்றார் கடவுளென்பீர்
    இங்கு நம் உடல் உள்ளத்துறைந்தும் இருப்பாரன்றோ
    அங்கங்கே போய்த் தேடி அலைவானேன் அவர்க்காக
    தங்க நம் உயிர்க்குயிராம் தவநிலையில் அவரே நாம்                -ஞானக் களஞ்சியம் 1168

    என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ளார் .

    சித்தர்கள் மனத்திற்கே மிகவும் முக்கியத்துவம் அளித்தார்கள். மனிதனின் உயர்வு
    அவரின் மனத்தின் உயர்வைப் பொறுத்தது தான் என்று உறுதியிட்டுக் கூறினார்கள்.

    மனமது செம்மையானால் மந்திரஞ்செபிக்க வேண்டா
    மனமது செம்மையானால் வாயுவை யுயர்த்த வேண்டா
    மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
    மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே

                                                                                      – அகஸ்தியர் ஞானம்-2 ஞானக் கோவை

    வேதாத்திரி மகரிஷி அவர்கள், தாம் வகுத்துள்ள பயிற்சிக்கு மனவளக்கலை என்றே
    பெயர் வைத்து உள்ளார்கள். அவர்கள் தமது பாடலில்

    மனம் புலன் உணர்வினில் மயங்கிட மாயை ஆம்
    மனம் உயிர் வெளியினில் மருவித் தோய்ந்திட
    மனம் விரிந்தறிவெறும் மாபதம் எய்திடும்
    மனம் அறிவாகிய மனிதனும் தெய்வமே                              ஞானமும் வாழ்வும் 301-303

    என மனத்தை உயர்த்துவதன் மூலமே மனிதன் தெய்வ நிலைக்கு உயர முடியும் என்று
    கூறியுள்ளார்.

    முடிவுரை:

    மேற்கண்ட கவிதைகள், ஓரளவு நேரடியாகப் பொருள் விளங்குபவையே. இவற்றைக் காணும்போது சித்தர்கள் பாடல்களில் கூறியுள்ள கருத்துகள் இக்காலத்திற்கு ஏற்ப வேதாத்திரி மகரிஷி அவர்களின் பாடல்களிலும் உள்ளது எனத் தெளிவு பெறலாம்.

    துணை நூல்கள்:

    1. சித்தர் பெரிய ஞானக் கோவையென விளங்கும் சித்தர் பாடல்கள் – பிரேமா பிரசுரம்
    -2014
    2. வேதாத்திரி மகரிஷி , ஞானமும் வாழ்வும் – வேதாத்திரி பதிப்பகம், 2004
    3. வேதாத்திரி மகரிஷி , ஞானக்களஞ்சியம் I & II வேதாத்திரி பதிப்பகம், 2000

    ==================================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review)

    சித்தர் பாடல்களோடு வேதாத்திரி மகரிஷி அவர்களின் பாடல்களை ஒப்பிட்டு எழுதப்பட்ட இக் கட்டுரை, சித்தர்கள் கூறிய உடல், மனம் ஆகிய சிந்தனைகளோடு வேதாத்திரி மகரிஷியின் சிந்தனைகள் எவ்வாறு பொருந்திச் செல்கின்றன என்பதை எடுத்துரைப்பதாக அமைகிறது. விரிவாகப் பலநிலைகளில் ஆராயப்பட வேண்டிய கருத்துகளை இக்கட்டுரை உள்ளடக்கி இருந்தாலும் பக்க வரையறைக்காக சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. இருவேறு காலங்களில் வாழ்ந்த மனிதர்களின் சிந்தனைகள் எவ்வாறு ஒத்துப் போகின்றன என்பதை எடுத்துரைக்கும் விதமாக எழுதப்பட்ட இக்கட்டுரை, ஆய்வுக் கட்டுரையாக விரியும் நிலையில் பயனுள்ளதாக அமையும். முடிவுரையில் ஆய்வின் முடிவுகள்  தொகுத்துச் சொல்லப்பட்டிருக்கலாம்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 27

    நாங்குநேரி வாசஶ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 27 – தவம் 

    குறள் 261:

    உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
    அற்றே தவத்திற் குரு

    மத்தவங்க தனக்கு செய்யுத துன்பத்த பொறுத்துக்கிடுததும் அவங்களுக்கு பதிலுக்கு துன்பம் செய்யாம இருக்குததும் தான் தவம்.

    குறள் 262:

    தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை
    அஃதிலார் மேற்கொள் வது

    தவ ஒழுக்கம் ஒடயவங்களால தான் தவம் செய்ய முடியும். அது இல்லாதவங்களால முடியாது.

    குறள் 263:

    துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
    மற்றை யவர்கள் தவம்

    துறவிங்களுக்கு சாப்பாடும் மத்ததும் குடுத்து ஒதவணும் னு நெனச்சி குடும்ப வாழ்க்கைல இருக்கவங்க தவம் செய்யுதத மறந்து இருக்காங்களோ?

    குறள் 264:

    ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்
    எண்ணின் தவத்தான் வரும்

    நெஞ்சுறுதியும் கட்டுப்பாடும் உள்ள தவம் ங்குத நோம்பு வலிமையா உள்ளவனால நெனைச்ச நேரம் எதிரிங்கதோக்கடிக்கவும் சேக்காளிங்கள ஒசத்தவும் முடியும்.

    குறள் 265:

    வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
    ஈண்டு முயலப் படும்

    உறுதியான நோம்பால நெனைச்சத நெனச்ச மாதிரி அடஞ்சுக்கிட முடியும்ங்கதால குடும்ப வாழ்க்கைலயும் அது  முனஞ்சி செய்யப்படுது.  

    குறள் 266:

    தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
    அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு

    தவம் செய்யுதவங்க மட்டுந்தான் தனக்குரிய கடமைய செய்யுதவங்க மத்தவங்க ஆச அலைகழிக்கதால வீணாப்போன காரியத்த தான் செய்வாங்க.  

    குறள் 267:

    சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
    சுடச்சுட நோற்கிற் பவர்க்கு

    புடம்போட்ட தங்கம் மினுங்குததுபோல தன்னய நோவடிச்சுக்கிட்டு ஒரு குறிக்கோள நினைச்சி நோம்பு இருக்குதவங்க எந்த துன்பம் வந்தாலும் ஒசந்து நிப்பாங்க.

    குறள் 268:

    தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
    மன்னுயி ரெல்லாந் தொழும்

    தன்னோட உசிருங்குத பற்றுதலும், தான் ங்குத அகம்பாவமும்இல்லாதவங்களோட பெருமய புரிஞ்சிக்கிட்டு  ஒலகத்து மத்த உசிருங்கல்லாம் கும்பிடும்.

    குறள் 269:

    கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்
    ஆற்றல் தலைப்பட் டவர்க்கு

    தவத்தால வலிமையடஞ்ச ஒருத்தனால எமனயும் செயிக்க முடியும்.

    குறள் 270:

    இலர்பல ராகிய காரணம் நோற்பார்
    சிலர்பலர் நோலா தவர்

    ஏதுமில்லாத ஏழங்க அதிகமா இருக்குததுக்கு காரணம் தவம் செய்யுதவங்க கொறைவாவும், செய்யாதவங்க நெறய பேரும் இருக்துதான்.

    Share
  • பெரு விபத்து நேர்ந்த ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையக் கதிரியக்கத் துடைப்பில் எதிர்ப்படும் பல்லடுக்குச் சவால்கள்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    [ கட்டுரை – 3 ]

    +++++++++

    1. https://youtu.be/3AMWU0_MIPQ
    2. https://www.iaea.org/newscenter/focus/fukushima
    3. https://phys.org/news/2017-09-multiple-fukushima-nuclear-cleanup.html
    4. http://afterfukushima.com/tableofcontents
    5. http://www.world-nuclear-news.org/Articles/IAEA-reviews-Fukushima-Daiichi-clean-up-work
    6. https://asia.nikkei.com/Economy/Seven-years-on-no-end-in-sight-for-Fukushima-s-long-recovery
    7. https://www.cnet.com/news/inside-fukushima-daiichi-nuclear-power-station-nuclear-reactor-meltdown/

    ++++++++++++++++++++++

    2018 இல் புகுஷிமா அணுமின் நிலையக் கதிரியக்கத் துடைப்பு வேலைகளில் சிக்கல்கள், சிரமங்கள், செலவுகள்

    2017 ஆண்டில் ஜப்பான் அரசு 2011 மார்ச்சு நேர்ந்த பூகம்பச் சுனாமிப் பேரிழப்பில் புகுஷிமாவின் நான்கு  அணுமின் நிலையங்களில்  பெருஞ்சேதம்  அடைந்து, சூடான யுரேனிய எரிசக்திக் கோல்கள், வெப்பத் தணிப்பு நீரின்றி சூடேறி உருகிக் கீழே கட்டிகளாய்த் திரண்டன.  பாதிக்கட்ட நான்கு அணுமின் உலையின்  சூட்டு  எரிக்கோகளுக்குத் தண்ணீர்  கொடுக்கத் தாமதமதம் ஆனதால் அவை உருகிப் பாறை ஆயின.  உருகிப் போன எரிக்கோள்களைக் கவசச் சாதனங்களில் வெளியே கொண்டு வந்து, பாதுகாப்பாய் கான்கிரீட்  கலன்களில் இட்டு  மூட 30 – 40 ஆண்டுகள் ஆகலாம்.

    Fukushima Reactor Cleanup

    பேரளவு உருகிப் போன மூன்று அணு உலையின் கதிரியக்க எரிக்கோள்கள் எண்ணிக்கை : 1573.  அவற்றைப் பாதுகாப்பாக கவசக் கலன் களில் வெளிக் கொணர்ந்து,  கான்கிரீட  சிலிண்டர் களில் அடைப்பதுதான் சிரமமான வேலை.  அந்த வேலைகளைச் செய்து முடித்து, அணு உலைகளை நிரந்தர நிறுத்த ஓய்வெடுக்க ஆகப் போகும் [Decommissioning] நிதிச் செலவு : 202 பில்லியன் டாலர் [2016 நாணய மதிப்பு].  இந்தச் செலவில், வீடிழந்தோர், பொருள் இழந்தோர், நிலமிழந்தோர், பாதிக்கப் பட்டோர் நட்ட ஈடுபாடுத்  தொகையும் சேர்ந்தது.  உருகிச் சிதைந்த கதிரியக்க எரிக்கோல்கள் நீக்கம் 2021 இல் துவங்கும்.  ஜப்பான்  நிதிவள ஆய்வு மையம்  செலவு 657.7 பில்லியன் டாலர் ஆகலாம் என்று மதிப்பீடு செய்கிறது.

    கதிரியக்கம் தீண்டிய  பேரளவு நிலமண்ணும், துடைப்பு நீர்க் கொள்ளளவு நீக்கமும்.

    புகுஷிமா அணு உலைப் பகுதியைச் சேர்ந்த நிலப் பரப்புகளில் கதிரியக்கம் தீண்டிய நிலமண் கொள்ளளவு : சுமார் 640,000 கியூபிக் மீட்டர்.   இவை 1 கியூபிக் மீட்டர் பெட்டிகளில் இடப்பட்டு இப்போது தற்காலிய  சேமிப்புத் தளத்தில்  வைக்கப்  பட்டுள்ளன.  இன்னும் 22 மில்லியன் கியூபிக் மீட்டர் நிலமண் கொள்ளளவு சுத்தீகரிக்கப் படவேண்டும்.

    டெக்கோ [TEPCO UTILITY OWNER] பேரளவு துடைப்பு கதிரியக்க  நீரைச் சுத்தீகரிக்கச் சேமித்து, நூற்றுக் கணக்கான உலோக டான்குகளில் வைத்துள்ளது.   அதன் கொள்ளளவு சுமார் : 800,000 டன்.   கதிரியக்கத் துடைப்பு நீரில் உள்ள ஸீசியம் போன்ற கதிரியக்க ஏக மூலகங்களை [Radio-Isotopes] இரசாயன வடிகட்டு முறைகளில் நீக்கி, கழுவு நீர் கடலில் சங்கமம் ஆகும்.  அவ்விதம் செய்யப் பல மாதங்கள் ஆகும்.  அந்த வேலைகளைச் செய்ய பணியாட்கள், சைனா, தென்கொரியா போன்ற நாடுகளில்  நூற்றுக் கணக்கில் எடுக்கப் படுகிறார்.

    +++++++++++++++++

    1. http://afterfukushima.com/tableofcontents
    2. http://afterfukushima.com/book-excerpt
    3. https://youtu.be/YBNFvZ6Vr2U
    4. https://youtu.be/HtwNyUZJgw8
    5. https://youtu.be/UFoVUNApOg8
    6. http://www.cornell.edu/video/five-years-after-fukushima-lessons-learned-nuclear-accidents
    7. https://youtu.be/_-dVCIUc25o
    8. https://youtu.be/kBmc8SQMBj8
    9. https://www.statista.com/topics/1087/nuclear-power/
    10. https://www.statista.com/statistics/238610/projected-world-electricity-generation-by-energy-source/
    11. https://youtu.be/ZjRXDp1ubps
    12. https://www.thinkingpower.ca/PDFs/NuclearPower/NP_3_2_Crawford.pdf

    முன்னுரை: 2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத்தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழிற்துறைகள் தகர்ந்து போயின.  சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 17,000 பேர் இன்னும் காணப்பட வில்லை.  சுமார் 80,000 பேர் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டுள்ளார். புகுஷிமா வின் நான்கு அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, பேரரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன.  அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன.  அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத்தாலும் தாக்கப்பட்டார்.  நான்கு  அணுமின் உலை களில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகா வாட் அணு மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.

    உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களை ஒரு தேவையான தீங்கு எரிசக்திக் கூடங்கள் என்று கருதியே இயக்கி வருகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான ஓர் எரிசக்தி தற்போதில்லை.  ஒரு மோட்டார் காரை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங் கள் தேவைப்படு கின்றன.  அதுபோல் ஓர் அணுமின்சக்தி நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருகின்றன.

    கட்டுரை ஆசிரியர்

    தற்போது முப்பதுக்கு மேற்பட்ட உலக நாடுகளில் 447 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபில் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) மின்சார ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.  அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டு களில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன.  2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்திருக்கிறது !  ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.

    உலக அணு மின்சக்தி இயக்கக் கண்காணிப்புக் கூட்டுப் பேரவை [ WANO -World Association of Nuclear Operators ] விதித்த மேம்பாடு நெறி முறைகள்

    2011 புகுஷிமா பெரு விபத்துக்குப் பிறகு, பாடங்கள் கற்று நான்கில் ஒரு தலையகமாக இருக்கும் இங்கிலாந்து லண்டன்  வானோ பேரவையில் வடிக்கப்பட்ட மேம்பாட்டு நெறிப்பாடுகள் கீழே தரப்பட்டுள்ளன.  அவை சிக்கலானவை, சிரமமானவை, சவாலானவை.  அவற்றை நிறைவேற்ற மிக்க நிதிச் செலவும், நேரச் செலவும் ஏற்படும். அவற்றுக்கு மெய் வருந்திய உழைப்பும், குறிப்பணியும் அவசியம் என்று, அவற்றை வெளியிட்ட வானோ ஆளுநர், பீட்டர் புரோசெஸ்கி சொல்கிறார்.

    1.  புகுஷிமா விபத்தில் கற்றுக் கொண்ட பாதுகாப்புப் பாடப் பணிகள் உலக முழுமையாக சுமார் 6000.
    2. அவற்றுள் முக்கியமானவை :  அபாய நிகழ்ச்சி காப்பு வினைகள்,  அபாய நிகழ்ச்சி உதவிகள், அபாய நிகழ்ச்சி பராமறிப்பு வினைகள், அபாய நிகழ்ச்சி அறிவிப்பு முறைகள், கதிரியக்க திரவம் சேமிப்புக் கலன்கள், பயிற்சி பெற்ற ஏராளமான பணியாளர், தோழ நாடுகள் முதல் உளவு, அடுத்த உளவு, முழு உளவு, ஆய்வு அறிக்கை வெளியீடு. வானோ உலக நாட்டு உளவு & அறிக்கை வெளியீடு.

    As of November 28, 2016 in 31 countries 450 nuclear power plant units with an installed electric net capacity of about 392 GW are in operation and 60 plants with an installed capacity of 60 GW are in 16 countries under construction.

    Country

    IN OPERATION

    UNDER CONSTRUCTION

    Number

    Electr. net output
    MW

    Number

    Electr. net output
    MW
    Argentina

    3

    1.632

    1

    25

    Armenia

    1

    375

    Belarus

    2

    2.218

    Belgium

    7

    5.913

    Brazil

    2

    1.884

    1

    1.245

    Bulgaria

    2

    1.926

    Canada

    19

    13.524

    China

    36

    31.402

    20

    20.500

    Czech Republic

    6

    3.930

    Finland

    4

    2.752

    1

    1.600

    France

    58

    63.130

    1

    1.630

    Germany

    8

    10.799

    Hungary

    4

    1.889

    India

    22

    6.225

    5

    2.990

    Iran

    1

    915

    Japan

    43

    40.290

    2

    2.650

    Korea, Republic

    25

    23.133

    3

    4.020

    Mexico

    2

    1.440

    Netherlands

    1

    482

    Pakistan

    4

    1.005

    3

    2.343

    Romania

    2

    1.300

    Russian Federation

    36

    26.557

    7

    5.468

    Slovakian Republic

    4

    1.814

    2

    880

    Slovenia

    1

    688

    South Africa

    2

    1.860

    Spain

    7

    7.121

    Sweden

    10

    9.651

    Switzerland

    5

    3.333

    Taiwan, China

    6

    5.052

    2

    2.600

    Ukraine

    15

    13.107

    2

    1.900

    United Arab Emirates

    4

    5.380

    United Kingdom

    15

    8.918

    USA

    99

    98.868

    4

    4.468

    Total

    450

    391.915

    60

    59.917

    Nuclear power plants world-wide, in operation and under construction, IAEA as of 27 November 2016

    அணுமின் உலைகள் எதிர்காலம் பற்றி அகில நாடுகளின் தீர்மானங்கள்

    புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடிப்பு நிகழ்ச்சிகளை நேரடியாகக் கண்டு பயந்து போன ஆயிரம் ஆயிரம் பொது மக்களின் வெறுப்பும், எதிர்ப்பும் வேறு.  அணுசக்தி உற்பத்தி மீது அகில நாட்டு அரசுகளின் ஆதரவும், முடிவும் வேறு !  பொது மக்கள் பல்லாண்டுகள் ஒரு மனதாய் அவற்றை எதிர்த்தாலும் இப்போது உலக நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் 440 அணுமின் நிலையங்கள் உடனே நிறுத்தம் அடையப் போவ தில்லை.  இப்போது (ஜூன் 14, 2011) கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகளின் எண்ணிக்கை : 60.  அடுத்துத் திட்டமிடப் பட்டவை : 155.  எதிர்கால எதிர்ப்பார்ப்பு அணுமின் உலைகள் : 338.  புகிஷிமா அணு உலை விபத்தில் கற்றுக் கொள்ளும் முதற்பாடம் : 1960 ஆண்டுகளில் டிசைன் செய்யப் பட்ட முதல் வகுப்புப் பிற்போக்கு அணுமின் உலைகள் விரைவில் நிச்சயம் மூடப்படும் நிரந்தரமாய்.  முப்பது வருடமாய் இயங்கி வரும் அணுமின் உலைகள் சில மீளாய்வு செய்யப் பட்டுப் பழைய சாதனங்கள் புதுப்பிக்கப் பட்டு ஆயுட் காலம் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் நீடிக்கப் படலாம் அல்லது அதற்கு நிதியின்றேல் நிரந்தரமாய் நிறுத்தம் அடையலாம்.

     

     

    1. https://youtu.be/CPeN7GhTpz4
    2. https://www.thegreenage.co.uk/cos/nuclear-power-in-france/
    3. https://youtu.be/4YgmCu7dfS4
    4. https://www.dw.com/en/france-sticking-with-nuclear-power/av-38397323
    5. https://www.businessinsider.com/countries-generating-the-most-nuclear-energy-2014-3
    6. https://www.youtube.com/watch?v=TZV2HRKNvao
    7. https://www.youtube.com/watch?v=HMrQJoN-Ks4
    8. https://www.youtube.com/watch?v=kr4mFLws3BM
    9. https://www.youtube.com/watch?v=YfulqRdDbsg
    10. https://www.youtube.com/watch?v=Hn-P3qnlB10

    ++++++++++++++++++++++++

    பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது.  அவை தேர்ந்தெடுக்கப்படும் எட்டுத் தளங்களில் நிறுவப்படும்.  அதை அறிவித்த பிரிட்டிஷ் அமைச்சர் : எரிசக்தி மந்திரி சார்லஸ் ஹென்றி.  எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களுதுக்கு நிதி ஒதுக்கு 160 பில்லியன் டாலர்.

    BBC News (June 23, 2011)

    Image result for nuclear power in france

    ஈரோப்பியன் கூட்டுறவு நாடுகளில் உள்ள 143 அணுமின் நிலையங்களில் பிரென்ச் அணுமின் நிலைய எண்ணிக்கை : 53 (40%).  அவற்றின் மின்சக்தி பரிமாற்றம் : 75% பங்கு.  பிரென்ச் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோஸி “பிரான்சில் உள்ள அணுமின் நிலையங்கள் அனைத்திலும் புகுஷிமா விபத்துக்களை முன்னிட்டு ஆழ்ந்த பாதுகாப்பு இயக்க உளவுகள் செய்யப் படும்.  ஆயினும் ஜெர்மனி, இத்தாலி, சுவிட்ஜர்லாந்து ஆகிய அண்டை நாட்டு அரசாங்கங்கள் போன்று பிரான்ஸ் இயங்கும் அணுமின் நிலையங்களை நிரந்தரமாய் மூடத் தடை விதிக்காது,” என்று அறிவித்தார்.

    BBC News (May 30, 2011)

    Image result for nuclear power in france

    பிரான்ஸ் நாட்டு அணுமின்சக்தி இயக்கத் திட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள்.

    2018 நவம்பர் அறிப்பின்படிக் கடந்த 50 ஆண்டுகளாக

    1. பிரான்ஸ் தேசம் தற்போது தேவையான மின்சக்தி உற்பத்தியில் 75% அணுசக்தி மூலமாக பாதுகாப்பு முறையில் வெற்றிகரமாகப் பெற்று வருகிறது.  2035 ஆண்டுக்குள் அது 50% ஆகக் குறைக்கப்படும்.  அதாவது பிரான்ஸில் 17 பழைய அணுமின்சக்தி நிலையங்கள் 2035 ஆண்டுக்குள் நிறுத்தப் படும்.
    2. உலகத்திலே பேரளவு மின்சக்தி ஏற்றுமதி தொடர்ந்து செய்யும் நாடுகளில் பிரான்ஸ் முன்னணியில் நிற்கிறது. காரணம் மலிவான நிதியில் மின்சக்தி உற்பத்தியை பிரான்ஸ் செய்ய முடிகிறது.  அதலால் ஆண்டுக்கு மூன்று பில்லியன் ஈரோ [ 3.4 பில்லியன் டாலர் : ] பிரான்சுக்கு வருமானம் வருகிறது.
    3. கடந்த 50 ஆண்டுகளாக பிரான்ஸ் அணுவியல் துறை நுணுக்க சாதனங்கள் விருத்தி செய்வதில் வெற்றி பெற்றுள்ளது.  குறிப்பாக அணுவியல் எரிக்கரு உற்பத்தி ஏற்றுமதியில் செல்வாக்கு அடைந்துள்ளது.
    4. அத்துடன் சுமார் 17% பங்கு மின்சக்தி அணுவியல் எரிக்கரு மீள் சுழற்சியில் [Recycled Nuclear Fuel] கிடைக்கிறது.

    +++++++++++++

    Related image

    French nuclear power reactors

    பிரான்ஸ் எரிசக்தி உற்பத்தி மூல எருக்கள் [Energy Sources] 

    2016 ஆண்டில் பிரான்சின் மின்சக்தி ஆற்றல் உற்பத்தி 556 TWh [ terra watt hours [Gross].

    1. அதில் அணுமின்சக்தியின் பங்கு : 72% [403 TWh].
    2. நீரழுத்த மின்னாற்றல் : 12%  [65 TWh],
    3. இயல்வாயு + நிலக்கரி வெப்ப மின்சக்தி 8% [45 TWh];
    4. சூரியக்கதிர் + காற்றாற்றல் :  5% [ 31 TWh ]
    5. அதாவது பிரான்ஸ் மொத்தத் தேவை மின்சக்தி : 442 TWh [6,600 KWh/cappit] : கி.வாட் ஹவர் / காப்பிட்டா.
    6. 2013 இல் வீட்டு மின்சார விலை அளவு : 8 சென்ட்/கிலோவாட் ஹவர்.  [cents/Kwh]

    French nuclear power reactors

    Class Reactor MWe net, each Commercial operation
    900 MWE BLAYAIS 1-4
    910
    12/81, 2/83, 11/83, 10/83
    BUGEY 2-3
    910
    3/79, 3/79
    BUGEY 4-5
    880
    7/79-1/80
    CHINON B 1-4
    905
    2/84, 8/84, 3/87, 4/88
    CRUAS 1-4
    915
    4/84, 4/85, 9/84, 2/85
    DAMPIERRE 1-4
    890
    9/80, 2/81, 5/81, 11/81
    FESSENHEIM 1-2
    880
    12/77, 3/78
    GRAVELINES B 1-4
    910
    11/80, 12/80, 6/81, 10/81
    GRAVELINES C 5-6
    910
    1/85, 10/85
    SAINT-LAURENT B 1-2
    915
    8/83, 8/83
    TRICASTIN 1-4
    915
    12/80, 12/80, 5/81, 11/81
    1300 MWE BELLEVILLE 1 & 2
    1310
    6/88, 1/89
    CATTENOM 1-4
    1300
    4/87, 2/88, 2/91, 1/92
    FLAMANVILLE 1-2
    1330
    12/86, 3/87
    GOLFECH 1-2
    1310
    2/91, 3/94
    NOGENT S/SEINE 1-2
    1310
    2/88, 5/89
    PALUEL 1-4
    1330
    12/85, 12/85, 2/86, 6/86
    PENLY 1-2
    1330
    12/90, 11/92
    SAINT-ALBAN 1-2
    1335
    5/86, 3/87
    N4 – 1450 MWE CHOOZ B 1-2
    1500
    12/96, 1999
    CIVAUX 1-2

    1495

    1999, 2000
    Total (58)
    63,130

    Differences in net power among almost identical reactors is usually due to differences in cold sources for cooling

    “இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”

    பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert)     


    “மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும்.  அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும் என்பது என் கருத்து.  அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

    ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

     

    ரஷ்யாவில் எரிசக்தி ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறைகள் இல்லாமல் தற்போது நிகழப் போவதில்லை.

    ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெதேவ் & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் கூட்டறிக்கை.

    நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமை யாக எழுதப்பட்டுள்ளன.  அணு உலை எரிகோல்களின் அபாய வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்தி ருக்கிறோம்.  எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் இயக்க முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல்களின் அபாய வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டைக் குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன.  அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைக்கப்பட்டு உள்ளது.  மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் போன்றவையும் அமைக்கப் பட்டுள்ளன.  செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.

    லியோனிட் போல்ஸோவ் (Director, Institute of Safe Development of Nuclear Power Industry)

    “விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார்.  முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து.  எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப் புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.

    விலாடிமிர் குபரேவ் (Vladimir Gubarev, Chernobyl Burial Drama Author)

     

     

     

    இயங்கி வரும் 440 அணுமின் உலைகளில் அபாய வெப்பத் தணிப்பு நீரனுப்பி ஏற்பாடுகள் ஒன்றுக்கு மேல் இரட்டிக்கப் படும் அல்லது மூன்றாக்கப் படும்  இரட்டை அல்லது மூவகை அபாய டீசல் எஞ்சின் மின்சாரப் பம்ப்பு இணைப்பு அமைப்போடு, ஈர்ப்பு விசையாலோ, அழுத்த வாயுவாலோ இயங்கும் ஓய்வுத் தணிப்பு ஏற்பாடுகள் (Passive Gravity or Compressed Air Coolant Injection Systems) சேர்க்கப் படும்.  அல்லது இரண்டுக்கு மேல் பெருக்கம் அடையும்.  சேமிப் பாகும் ஹைடிரஜன் வாயுவுக்கு அணு உலை உள்ளே மீள் இணைப்பிகள் சேர்க்கப் படும்.  அபாய வெப்பத் தணிப்பு நீரோட்ட இறுதியில் பேரளவு சேரும் கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்புத் தடாகமும், சுத்தீகரிப்பு ஏற்பாடும் (Contaminated Waste Water Treatment Facility) இணைக்கப் படும்.  தற்போது கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகள் தடைப் படாமல் தொடர்ந்து நிறுவப் படும்.  திட்டமிட்ட எதிர்கால அணுமின் உலைகள் மீளாய்வு செய்யப்பட்டுக் கட்டப் படலாம்.  அல்லது புறக்கணிக்கப் படலாம்.

    அணுமின் நிலைய ஐக்கிய நாட்டுக் கண்காணிப்புக் கழுகுகள் வற்புறுத்தும் புதிய பாதுகாப்பு விதிகள்

    21 நாடுகள் இணைந்த ஈரோப்பியன் அணுசக்திப் பாதுகாப்பு ஆணையகம் (European Nuclear Safety Regulatory Group -ENSRG) தனது அழுத்தமான உளவு விதியை வெளியிட்டுள்ளது.  அதன் விதிப்படி நிலநடுக்கம், வெள்ளம், பேரலை அடிப்பு, மூர்க்கர் தாக்குதல், விமான வீழ்ச்சிபோன்ற பயங்கர விளைவுகளைத் தூண்டும் அபாயச் சம்பவங்களையும், பாதிக்கபட்ட பொது மக்களின் புலப் பெயர்ச்சியையும் எப்படிக் கையாளுவது என்பது ஆழ்ந்து தீவிரமாய் ஆராயப்படும்.  புகுஷிமா அணுமின் உலை விபத்துகளை முன்வைத்து 2011 மே 31 ஆம் தேதி வரை உலக நாடுகள் அணுசக்தி நிலையங்கள் இயக்கத்தைப் பற்றிச் செய்துள்ள முடிவுகளைக் கீழே காணலாம் :

    புகுஷிமா அணுமின் உலை விபத்துச் சிக்கல்கள் போல் மீண்டும் நேராதிருக்க ஐக்கிய நாட்டுக் கண்காணிப்புக் கழுகுத் தலைவர், யுகியா அமானோ (Yukiya Amano, Head of UN Watchdog) அகில உலக அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்புகளை ஆழ்ந்து உளவி 18 மாதங்களுக்குள் முடிவுகளைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.  இந்த அறிவிப்பை முன்னிட்டு 150 உலக நாடுகள் வியன்னா அகில் நாட்டு அணுசக்திப் பேரவை (IAEA) நிறுவகத் தளத்தில் கூடப் போகின்றன. மேலும் அவர் கூறியது: புகுஷிமா அணுமின் உலைகளின் விபத்துகள் பொது மக்களைப் பேரளவில் பயமுறுத்தி உள்ளதால், அவருக்கு நேர்மையாய்ப் பதிலளிக்க வேண்டிய கடமையும் IAEA வுக்கு நேர்ந்திருக்கிறது.  அணுமின் நிலையங்களின் அபாயப் பாதுகாப்பு முறைகள் மீது பொது நபருக்கு நம்பிக்கை போய்விட்டது.  ஆதலால் IAEA அணுமின் நிலைய இயக்க அதிகாரிகளுக்குக் கடுகையான கண்காணிப்பு விதிகளை விடுத்து அவற்றை எல்லா அணுமின் நிலையங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளது.

     

    முடிவுரை:   பெரும்பான்மையான உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessary Evil) என்று கருதுகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரியவில்லை.  மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் உலகில் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருவதில் சிறிதேனும் ஐயமில்லை.

    (தொடரும்)

    ***************

    தகவல்:

    1.  Backgrounder on Earthquakes & Nuclear Power in Japan   (March 11, 2011)

    2. Japan Nuclear Industry is in Meltdown [Sep 28, 2002]

    3. Monju Fast Breeder Startup (Feb 10, 2010)

    4.  Nuclear {Power in Japan (March 30, 2011)

    5. Russia & India Report –  Lessons of Fukushima – Expert Opinions.  (March 28, 2011)

    6 Macleans Magazine – Japan Fearing the Fallout  (March 28, 2011)

    7. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)

    8.  Fukushima & Chernobyl Compared (April 11, 2011)

    9.  World Nuclear Association Report – Nuclear Power in Japan & Nuclear Safety and Seurity in the wake of Fukushima Accident (Updated in April 2011)

    10. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)

    11. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)

    12. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)

    13. World Nuclear Association Report : Fukushima Accident 2011 (May 30, 2011)

    14. World Nuclear Association Report : Policy Responses to the Fukushima Accident. (May 31, 2011)

    15 Wikipedea Report : http://en.wikipedia.org/wiki/Paks_Nuclear_Power_Plant(Hungarian Paks Atomic Plant Loss of Coolant Accident) (May 27, 2011)

    16. Wikipedea Report :  List of Civilian Nuclear Accidents (June 4, 2011)

    17. BBC News – Japan Nuclear Crisis : Fukushima Cold Shutdown for January 2012 (May 17, 2011)

    18. BBC News : Europe, French Nuclear Policy  (May 31, 2011)

    19 BBC News – Fukushima Lessons may take 10 years to Learn By : Richard Black (June 8, 2011)

    20. Environment News Service – Analysis: Japan Underestimated Fukushima Radiation Releases By Half – Author Charles Diggs (June 8, 2011)

    21. IAEA Briefing on Fukushima Nuclear Accident (June 2, 2011)

    22 Wikipedea http://en.wikipedia.org/wiki/List_of_nuclear_reactors (List of World Nuclear Reactors) (June 8, 2011)

    23 http://www.world-nuclear.org/info/reactors.html (World Nuclear Opeations) (June 14, 2011)

    24. Nuclear Watchdog wants new safety checks after Fukushima (June 20, 2011)

    25. BBC News : New UK Nuclear Plant Sites Named  (June 23, 2011)

    26. https://www.japantimes.co.jp/news/2018/03/09/national/fukushima-no-1-cleanup-continues-radioactive-water-rumors-also-prove-toxic/#.XI0k

    27.  https://www.theguardian.com/environment/2018/jun/03/was-fallout-from-fukushima-exaggerated

    28. https://www.iaea.org/newscenter/focus/fukushima/status-update  [March 14, 2019]

    29. https://www.fairewinds.org/fukushima-latest-updates  [January 18, 2019]

    30. http://www.world-nuclear.org/information-library/country-profiles/countries-a-f/france.aspx  [November 2018]

    31http://www.nuclearpowerdaily.com/reports/Glowing_results_for_nuclear_power_at_Frances_EDF_999.html  [February 15, 2019] 

    32. https://en.wikipedia.org/wiki/Nuclear_power_in_France  [March  10, 2019]

    33. http://www.cornell.edu/video/five-years-after-fukushima-lessons-learned-nuclear-accidents

    34.  https://www.japantimes.co.jp/news/2018/03/29/national/seven-years-radioactive-water-fukushima-plant-still-flowing-ocean-study-finds/#.XJaYFR-JK70  [February 21, 2018]

    35. https://www.statista.com/statistics/268154/number-of-planned-nuclear-reactors-in-various-countries/

    36. https://www.statista.com/topics/1087/nuclear-power/

    37. https://www.statista.com/statistics/238610/projected-world-electricity-generation-by-energy-source/

    38. https://www.iaea.org/newscenter/news/iaea-releases-country-nuclear-power-profiles-2017

    39. https://world-nuclear.org/getmedia/b392d1cd-f7d2-4d54-9355-9a65f71a3419/performance-report.pdf.aspx  [WANO 2018 REPORT]

    40. http://www.world-nuclear-news.org/RS-WANO-reports-on-post-Fukushima-improvements-27061803.html  [June 27, 2018]

    41. https://www.thinkingpower.ca/PDFs/NuclearPower/NP_3_2_Crawford.pdf [WANO – WORLD NUCLEAR POWER WATCH DOG]

    42. https://www.euronuclear.org/info/encyclopedia/n/nuclear-power-plant-world-wide.htm   [March 24, 2019]

    43. http://afterfukushima.com/tableofcontents  

    44. https://phys.org/news/2015-06-japan-fukushima-nuclear.html#nRlv  [June 12, 2015]

    45. https://phys.org/news/2017-09-multiple-fukushima-nuclear-cleanup.html [September 26, 2017]

    46. http://www.world-nuclear-news.org/Articles/IAEA-reviews-Fukushima-Daiichi-clean-up-work [November 14, 2018]

    47. https://physicsworld.com/a/what-next-for-fukushima/  [January 9, 2018]

    48.  https://en.wikipedia.org/wiki/Fukushima_disaster_cleanup  [January 15, 2019]

    49. https://asia.nikkei.com/Economy/Seven-years-on-no-end-in-sight-for-Fukushima-s-long-recovery  [March 11, 2019]

    50. . https://www.washingtonpost.com/world/asia_pacific/eight-years-after-fukushimas-meltdown-the-land-is-recovering-but-public-trust-has-not/2019/02/19/0bb29756-255d-11e9-b5b4-1d18dfb7b084_story.html?noredirect=on&utm_term=.bb53d39bdd10

    51. https://youtu.be/3AMWU0_MIPQ  [ IAEA  REPORT VIDEO] March 10, 2016

    Share
  • ஆசுகவி விருந்து

    -சியாமளா ராஜசேகர்

    சென்ற வாரம் ( 23:03:2019) பைந்தமிழ்ச் சோலையில் வேறெங்கும் சுவைத்தறியா விருந்து சுடச்சுட பரிமாறப் பட்டது. அவ்விருந்தின் சுவை என்றும் நெஞ்சத்தை விட்டு  அகலாது. அப்படி என்ன விருந்து என்கிறீர்களா ? செந்தமிழ் விருந்து ! தமிழிலக்கிய வரலாற்றில் முதன்முறையாக ஒரு சாதனை விருந்து …..ஆசுகவி விருந்து ! ஒருமணி நேரத்தில் 100 பாடல்கள் அந்தாதியில் . நேரலையாக …!! அந்த அற்புதப் படையலைப்  பரிமாறியவர்கள் யார் தெரியுமா ?? பைந்தமிழ்ச் சோலை நிறுவனரும் , பைந்தமிழ்ப் பேராசானுமாகிய மரபு மாமணி பாவலர்  மா. வரதராசன் அவர்களுடன் பன்முகத்திறன் கொண்ட பைந்தமிழ்செம்மல் , ஆசுகவி விவேக் பாரதியும் ! இருவரும் இணைந்து சிந்தைக்கினிய விருந்தளித்தனர். இதில் மற்றொரு சிறப்பும் உள்ளது.
    ஆசானுடன் மாணாக்கன் இணைந்து களமிறங்கியது …பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.

    இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து சோலைக் குயில்கள் அனைவருமே உற்சாகத்தில் மிதந்தனர். விருந்து சுவைக்கப் பசியோடு காத்திருந்தனர். இளங்கன்று பயமறியாதே! சோலையின் இளங்குயிலும் “பார்க்கத்தானே போறீங்க இந்தக் கவிஞர்களோட ஆட்டத்த!!!” என்று சவால் விட்டது. வெண்டளையானியன்ற தாழிசை அந்தாதியில் ” இறைமை ” யைப் பாடுபொருளாகக் கொண்டு சரியாக  இரவு ஒன்பது மணிக்கு விருந்து சமைக்க கவிஞர்கள் இருவரும் தயாராய் இருக்க , பைந்தமிழ்ச் செம்மல் அழகர்  சண்முகம் அவர்கள் “உலகம்” என்ற முதற்சொல்லைச் சரியாக இரவு 8.55 மணிக்குக் கொடுத்தார். கம்பராமாயணத்தின் முதற்பாடலின் முதற்சொல்லைக் கொடுத்துப் பச்சைக் கொடிகாட்ட கவித்தேர் தமிழன்னையின் ஆசியோடு புறப்பட்டது.

    “உலகம் முழுமைக்கும் ஒன்றாய் விளங்கும்
    தலைவன் திருப்பாதந் தான்பெறுதல் எக்காலம் ?” என்று விவேக் தொடங்க

    “பெறுதலைத் தானீக்கிப் பேரானந்த தத்தில்
    உறுதலை யான்பெற் றுருப்படுவ தெக்காலம் ?” என்று பாவலர் தொடர

    களைகட்டத் தொடங்கியது பைந்தமிழ்ச் சோலை . 30 நொடிகளுக்கொரு பாடல் சோலையில் மலர்ந்து மணம் பரப்பியது. அதன்  நறுமணத்தை நுகர நூற்றுக்கணக்கானோர் சோலையில் கூடினர். எல்லோர் விழிகளும் இமைகொட்டாமல் அலைபேசியையும் . கணினியையுமே மொய்த்துக் கொண்டிருந்தன. என்ன வேகம் ! என்ன வேகம் ! . இடைவெளியின்றித் துள்ளி வந்தன பாக்கள் இருவரிடமிருந்தும் ! ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை என்று மெய்ப்பித்துக் கொண்டிருந்தனர் குருவும் சீடனும் !! சோலைக் கவிஞர்கள் நுட்பமாய் ஆய்ந்துகொண்டிருந்தனர் அவசரத்தில் எங்கேனும் பிழை தென்படுகின்றதா என்று ! ஆனால் ஏமாற்றம்தான் மிச்சம் .

    நேரம் செல்லச் செல்ல ஆட்டத்தைக் கண்டுகளிக்க , விருந்தைச் சுவைக்க மேலும் பலர் கூடினர். சோலையே திருவிழாக் கோலம் பூண்டது. சுவைஞர்களின் விழி சோர்ந்தபோதும் சமைக்கும் கவிஞர்களின் விரல்கள் சற்றும் சோர்ந்திடவில்லை. .

    சொல்லழகும், பொருளழகும் …அடடா ! அந்தச் சொக்கனே சொக்கியிருப்பான் இவர்தம் பாக்களில் ! புயலெனச் சுழன்று நிமிடத்திற்கு இரண்டு பாக்கள் பறந்து வந்தாலும் சித்தர்களின் வாக்கினைப் போல் தெள்ளத் தெளிவாய்த், தெவிட்டாத் தெள்ளமுதாய் அமைந்திருந்தது சிறப்பு !! உலகம் என்ற சொல்லில் தொடங்கி அதே சொற்கொண்டு முடித்து மண்டலவந்தாதியாய் அமைந்தது மற்றுமோர் சிறப்பு.

    காட்டாக சில பாடல்கள் தருகிறேன் ….. நான் சுவைத்த அற்புத விருந்தை எல்லோரும் சுவைக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் ….!!! இப்பாடல்களில் அமைந்துள்ள எதுகை, மோனை அழகும், கவித்துவமும் நெக்குருகச் செய்யும். ,முழுதும் இவ்வாறே அமையப்பெற்றுள்ளது.  இருப்பினும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் .என்பதுபோல் மும்மூன்று பாக்கள் கொடுத்துள்ளேன்.

    1. மேலிருக்கும் நாயகனின் மேன்மை நினைத்திந்தத்
    தோலிருக்கும் பொய்ச்சிறையைத் தூரவிடல் எக்காலம்?….. விவேக் பாரதி

    விடலாய் வினைமிகுத்து மேதினியில் பற்றுகுத்துப்
    படலாய்ப் பரமனைப் பாவுதலு மெக்காலம்? ….. பாவலர்

    2. இட்டாரைத் தேடி இருட்குழிக்குள் வீழாமல்
    பட்டாங்கில் ஈசனைப் பாடுவது மெக்காலம்…. பாவலர்

    பாடும் மொழியனைத்தும் பாரா இறைகொடுத்த
    கூடல் எனச்சொல்லிக் கும்பிடுதல் எக்காலம்?….. விவேக் பாரதி

    3. நீக்கலும் யாவையும் நீக்கலாச் சோதியன்
    நோக்கினில் வீழ்ந்து நுரைத்திருப்ப தெக்காலம்?….. பாவலர்

    நுரையாய் விழிமறைக்கும் நூதனக் காமம்
    விரைந்தோட என்னுள்ளம் வீச்சுறுதல் எக்காலம்? ….. விவேக் பாரதி

    வாழ்வின் நிலையாமையையும் , இறையருளின் மேன்மையையும் மிகச் சிறப்பாய்க் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்தததைப் பலரும் பாராட்டினார்கள் . இந்தச் சாதனை தமிழிலக்கிய உலக வரலாற்றில் பதிவாகிப் பலருக்கும் உந்துசக்தியாய் அமையும். இந்த மின்னல் வேக விளையாட்டில் இருவருமே மாபெரும் வெற்றியாளர்கள் ! இதுகுறித்து பைந்தமிழ்ச்சோலை நிறுவுனர் பாவலர் மா வரதராசன்,

    பத்திரக்கிரியாரின் மெய்ஞானப்புலம்பலை அடியொற்றி, அதேயாப்பில் ஆனால் அந்தாதியாக இச்சாதனையை யாம் செய்துமுடித்தோம். எவ்விதமோவெனின், ஒன்றரை மணிநேரத்தில் நூறுபாடல்களென, நாற்பது நொடிக்குள் ஒரு பாடல் என்ற வேகத்தில், வெண்ட டையோடும், அந்தாதியோடும், பேரின்பப் பொருளினின்றும் சற்றும் விலகாமல், பொருண்மைச்சிறப்புடனும் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. எம் சோலையாலன்றி வேறியார்க்கும் இச்சாதனை வய்க்குமோ என்பது ஐயமே.! எல்லாம்வல்ல பரம்பொருளும் எந்தமிழ்த்தாயின் அருளுமே இதற்கு அணியமாயிற்றென்பது கண்கூடு” என்கிறார்.

    இந்த வெற்றிக் கூட்டணி தம் ஆட்டத்தை இன்றோடு நிறுத்தவில்லை . வாராவாரம் சனிக்கிழமைகளில் தொடரவிருக்கிறது.

    இப்படிப்பட்ட அற்புத விருந்தைச் சுவைக்க …..”பைந்தமிழ்ச் சோலைக்கு” வாருங்கள் !!

    Share
  • ராஜதுரோக தண்டனை குறித்த கல்வெட்டுகள்

    – சேஷாத்ரி ஸ்ரீதரன்


    உடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோயில் 

    ராஜதுரோக தண்டனை

    துரோகம் என்றால் நம்பிக்கை குலைய நடத்தல், நம்பினோர்க்கு இரண்டகம் செய்தல் எனப் பொருள்.  இது பல்வேறு வகைத்து. இராஜதுரோகம் என்பது அவற்றில் முகாமையானது. இது பற்றி சில கல்வெட்டுகள் அறியக் கிடக்கின்றன. பொதுவாகப் பகை மன்னன் சதிக்கு உடன்பட்டு அவனுக்கு உத்தாரமாக (supportive) தனது மன்னனை வேவுபார்த்தல், உளவு பார்த்தல், அவன் ஆள்கள் தங்க இடம் அளித்தல், உதவுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவது இராஜதுரோகம் ஆகும். இதற்கு பழங்காலத்தில் பிற குற்றங்களை விட கடுமையான தண்டனை தரப்பட்டது. இராஜதுரோகி ஆக அறிவிக்கப்பட்ட ஒருவர், அவர் சார்ந்தவர் நிலமும், வீடும், உடைமையும் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்பட்டு அப்பணம் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. பெரும்பாலும் இராஜ துரோகிகள் கூடா நட்பு, பதவி செல்வத்திற்கு ஆசைப்பட்டும் அவ்வாறு நடந்து கொண்டனர். குறிப்பாக, அதிகமாக வேளான் என்ற அரசகுடியாரும், பிராமணரும் இந்த தண்டனைக்கு ஆட்பட்டது தெரிகின்றது. நான்கு அகவை முதல் இலவச உண்டு உறைவிடமான வேதபாட சாலையில் கல்வி, சரஸ்வதி பண்டாரம் என்ற நூல் நிலையம், கோவிலில் வேலை அதற்கு நிவந்தமாக விளை நிலம், குடியிருக்க இலவச வீடு, கோயிலில் ஆதுர சாலைகள் இப்படி உயிர்த்துள்ள நாள் வரையில் வேறு எவருக்கும் கிட்டாத பல வசதிகளை மன்னரிடம் இருந்து மானியமாகப் பெற்ற போதும் சில பிராமணர்கள் குறுகிய நோக்கில் அரச அதிகாரிப் பதவிகளைப் பெறுவதற்காக இப்படி நரித்தனமாக நடந்துகொண்டது வரலாற்றில் பதிவாகி உள்ளது. அதைப் பதிந்தவரும் பிராமணரே. கீழே இதற்கு சான்றாக மூன்று கல்வெட்டுகளைப் பார்க்கலாம்.

    உடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோயில் கருவறை மேற்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராசராசனின் 2 ஆம் ஆண்டு கல்வெட்டு.

    “ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 2 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்……………………………………….. தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார், பெற்றாளும் இ……………………ராமத்தம் பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும் நம் ஆணைக்குரியவாறு கோட்டயூர் பிரம்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத் தந்தோம். தாங்களும், இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு நம் ஆணைக்குரியவாறு குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத்தலத்திடுக. இவை குருகாடிக்கிழான் எழுத்து என்று இப்பரிசுவர இ ஸ்ரீமுகத்தின் மேற்பட்ட மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும் இவன் மகனும் இவன்றாய் பெரிய நங்கைச்சாணியும் இம்மூவரிதும் ஆன நிலம் ஸ்ரீ வீரநாராயன சதுர்வேதி மங்கலத்து மிப்பிடாகை தேவமங்கலம் ஆன பட்டில நிலம் ஸ்ரீவீரநாராயண சதுர்வேதி மங்கலத்து சபையார் பக்கல் வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையான் நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழகஜமல்லப் பல்லவரையனேன். இந்நிலம் பழம்படி இரண்டே முக்காலே ஒருமாவும் அகமனை ஆறும் ஆக இந்நிலமும் இம்மனையும் நூற்றொருபத்தி ருகழஞ்சு பொன் குடுத்து விலைகொண் டிவ்வூர் திருவனந்தீஸ்வரத்து பட்டாரகர் கோயிலிலே இவ்வாட்டை மேஷநாயற்று நாயற்றுக்கிழமை பெற்ற புரட்டாசி ஞான்று சந்திராதித்தவர் ஆழ்வார் கோயில் முன்பு மூவாயிரத்தரு நூற்றுவனான நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நிச தம் படி நாழி நெல்லும் ஆட்டைவட்டம் ஒரு காகம் நிசதம் பதினைவர் பிராமணர் உண்பதற்கு ஆக பதினாறு இவறுள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வைத்தேன் அரையன் பரதன் ஆன வியாழகஜமல்ல பல்லவரையனேன். இதர்மம் ரஷிகின்ற மகாசபையார் ஸ்ரீபாதங்கள் என் தலை மேலன”

     பெருங்குறி பெருமக்கள் –   மதிப்புடைய வெகுமக்கள்; ஸ்ரீ முகம் – திருமுகம், அரசாணை;  பிரமாணிமார் – பிராமணர் மனைவியர்; பெற்றாளும் – தாயும், குடியோடு குடிபெறும் விலை – சாதாரண மக்கள் பெறும் விலை; பிடாகை – உள்அமைந்த சிறுகிராமம்; அகமனை – குடியிருக்கும் சொந்தமனை.

    விளக்கம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் உள்ள உடையார்குடியில் ஆனத்தீஸ்வரர் கோயில் கருவறை மேற்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராசராசனின் 2 ஆம் ஆண்டு ஆட்சியில் கி.பி.987 வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையானான நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழகஜமல்லப் பல்லவரையன்  6 சொந்த வீடுகளையும், இரண்டுவேலி 16 மா நிலத்தையும் 112 பொற்காசுகளுக்கு வாங்கி கோயிலுக்கு விட்டான். அதைக் கொண்டு வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து திருக்கோயிலில் தண்ணீர் சொரியும் மூவாயிரத்தரு நூற்றுவன் என்ற நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நிசதம் படி நாழி நெல்லும் ஆட்டை வட்டம் ஒரு காகம். அதே நேரம் நிசதம் 15 பிராமணர் உண்பதற்கும் ஆக பதினாறு 16 பிராமணர்களுக்கு, இவருள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வேண்டும் என்று கொடுத்தான் அரையன் பரதன் ஆன வியாழகஜமல்ல பல்லவரையன். இத்தர்மம் காக்கின்ற மகாசபையார் திருப்பாதங்கள் என் தலை மேலன என்று குறித்தான்.

    இவன் வாங்கிய 6 வீடும் நிலமும் இரண்டாம் ஆதித்தகரிகாலரை கி.பி. 965 ல் வஞ்சகமாகக் கொன்ற வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பிராமணர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சோமன், இவன் தம்பி இரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன். இவன் தம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழபிரமாதிராஜன். இவர்தம் தம்பி மலையனூரன் பஞ்சவன் பிரமாதிராஜன் ஆகிய நான்கு பேர்களும் சேர்ந்து இரண்டாம் ஆதித்த கரிகாலனை வஞ்சகமாக கொலை செய்த இராசதுரோகிகள் ஆவர். இவர்ளுக்கு தண்டனை வழங்கப்பட்ட செய்தி இராசராசனின் 2 ஆம் ஆண்டு ஆட்சியில் (கி.பி.987) பதிவாகி உள்ளது. தண்டனை வழங்கப்பட்டபோது இராசதுரோகிகள் நால்வரது பிள்ளைகள், மனைவியர், பெற்ற தாய், பேரப்பன்மார் இவர்களுக்கு பெண்கொடுத்த மாமனார்களும், தாயுடன் பிறந்த மாமன்மார்களும், இவருடன் பிறந்த பெண் மக்களும் இனி பிராமணர் அல்லாத வேற்றவர், வேற்று சாதியார். இவர் தம் பிள்ளைகளும் வேற்றுசாதியார் என சமூகம் கருத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இவர்களது உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆணைப்படி கோட்டையூர் பிரம்ம ஸ்ரீராஜன், புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டன் ஆகியோர் பொறுப்பில் விடப்பட்டது. இந்த இருவரும் இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு ஆணைப்படி குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத் கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்று குருகாடிக்கிழான் ஆணைஓலை தந்தான். ஏனென்றால் இந்த ஆணைஓலையில் மேற்படி குறித்த இராஜதுரொகிகளின் தம்பி மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும், இவன் மகனும், இவன் தாய் பெரிய நங்கைச் சாணியும் ஆகிய இம்மூவருடைய நிலம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பிடாகையான தேவமங்கலத்தில் அமைந்த பட்டில நிலம் தான் அந்த இரண்டுவேலி 16 மா நிலம் என்பது.

    இவர்களில் மற்றவர் உடைமைகள் எந்தெந்த ஊர்களில் இருந்தனவோஅங்கும் இதே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்பதுதெளிவு. இந்த கல்வெட்டு வியாழகஜமல்லப் பல்லவரையன்  தொடர்பானது என்பதால் இந்த அளவு செய்தி மட்டுமே கல்வெட்டில் அறியத் தரப்பட்டது. இது இராஜ துரோகிகளின் நேரடியான தண்டனைக் கல்வெட்டு அன்று. அதனால் இரண்டாம் ஆதித்ய சோழன் எங்கு? எவ்வாறு? எப்போது? எப்படிக் கொல்லப்பட்டான் என்ற செய்தி இக்கல்வெட்டில் இடம்பெறவில்லை. இப்படி இராஜதுரோக தண்டணைக்கு உள்ளானவருக்கு ஊரார் உதவிட, ஒத்துழைக்க முன்வரமாட்டார் மாறாக ஒத்துழைக்க அஞ்சுவார். இவர்கள் தம் தண்டனைக் குற்றம் யாது என்று பிறரால் அறியப்படாதவாறு வேற்றூர் சென்று அக்ஞாத வாசம் செய்தால் அன்றி ஊராரால் ஒதுக்கப்பட்டு வாழ்வதற்கே இடர்படுவர், மிடிமைப்படுவர் என்பதை உணரமுடிகின்றது. இதனால் ஒன்றும் அறியாத அப்பாவியான உறவினர் படும் துன்பம் தான் வேதனையானது.

    பார்வை நூல்: EP, IND Vol XXI, PP 165-170

    கொங்கின் கடத்தூர் பகுதியில் உள்ள திருமருதுடையார் கோயில் 17 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீவிக்கிரமசோழ தேவற்கு யாண்டு 29 தாவது விக்கிரம சோழத் திருபுவன சிங்க
    2. னேன் கடற்றூர் ஆளுடையார் திருமருதுடையார் எனக்கு பிரமேகம் தீற்தமையில் இந்நாயனா _ _ _
    3. ரை திருவோத்த சாமத்துக்கு நாள் ஒன்றுக்கு அரிசி குறுணிக்கு நான் நீர்வார்த்து விட்ட நிலமாவ
    4. ன (கரை)வழிநாட்டுக் கண்ணாடிப்பூத்தூர் வடகரையில் உதயாதிச்ச தேவர் துரோகியாய் வடகொங்(கு)
    5. ப் போனமையில் அவர்நிலம் ஆறுகலமும் எனக்கும் என் தம்பி சோழசிங்கதேவற்கும் இவ்விருவ
    6. ற் _ _ _ _ இது காணியாகத் திருவிள்ளம் செய்து திருமுகம் தந்(த)மையில் இதில் என்னொரு பாதி மன்றாட்டு வி
    7. கலமும் இந்நாயனாற்குத் திருவத்த சாமப்படிக்கு நீர்வாத்துக் குடுத்து இந்நில முக்கலத்துக்கும்  _ _ _
    8. வது வடகரையில் பூலுவப்பற்றி விதை ஆறுகலத்தில் என்னொருபாதி விதை முக்கல(த்துக்கெ)
    9. ல்லையாவது இக்கிழைக்கு வடக்கும் உதையாதித்த தேவர் நிலத்துக்கு மேக்கும் அதியமான் _ _ _
    10. சோழீஸ்வரமுடையார் தேவதானத்துக்கு கிழக்கும் அழகாண்டார் செய்க்குத்  தெற்கும் இந்நாள் _ _ _
    11. ட்ட நெல்விதை இரு கலமும் வீரசோழீஸ்வருமுடையார் தேவதானத்துக்கு வடக்கும் மே
    12. னத்துக்குக் கிழக்கும் அழகாண்டார் செய்க்கு மேற்கு இந்நிலத்துக்குப் பாய்கிற கவருக்கு தெற்
    13. ல்லைக்குட்டபட நெல் விதை(க்) கலமும்  முக்குறுணியில் நெல் விதை கலமும் ஆக நெ
    14. ல் விதை முக்கலமும் இறையிலி முற்றூட்டாக எனக்கும என் மக்கள் மக்களுக்கும் விலையொற்றி
    15. ன ஸீதனத்துக்குரித்தாவுதாக நாயனார் திருமகம் திருவிள்ளம் செய்(த)படியே ஆளுடை
    16. மருதுடையாற்கு கல்வெட்டிக் குடுத்தேன் விக்கிரம சோழதிரிபுவன சிங்க தேவனேன்  (தி)
    17. ருபுவன சிங்கதேவன் எழுத்து. இவை கோத்தப்பச் சோழன் எழுத்து. இது பன்மாஹேஸ்வர ரக்ஷை.

    முற்றூட்டு – முழு விளைச்சல்,  முழுவருவாய்; நாயனார் – மன்னர்.

    விளக்கம்: பண்டு கொங்கு வறண்ட பகுதிகளை உடைய பகுதி வட கொங்கு எனவும், வளமையான பகுதிகளை உடைய நாடு தென்கொங்கு எனவும் இரு பகுதிகளாக இருந்தது. அவற்றை இரு வேறு ஆட்சியாளர்கள் ஆண்டுள்ளனர். இக்கல்வெட்டு கடத்தூர் பகுதியில் உள்ள திருமருதுடையார் கோயிலில் மகாமண்டப நுழைவு வாயிலின் கிழக்கு சுவரில் வெட்டப்பட்டு உள்ளது. கொங்கு சோழன் மூன்றாம் விக்கிரம சோழனின் 29 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1302) விக்கிரம சோழ திரிபுவன சிங்கனான எனக்கு திருமருதுடை இறைவர் நோய் தீர்த்து வைத்ததால் இவ்இறைவர்க்கு சாமத்து பூசையின் போது குறுணி அரிசிந் தரத் தீர்மானித்து அதற்கான நிலத்தை நீர்வார்த்து தானமாகக் கொடுத்தேன். நான் தரும் நிலமானது முன்பு கரைவழி நாட்டு கண்ணாடிப்பூத்தூர் வடகரையில் வாழ்ந்திருந்த அரச அதிகாரப் பொறுப்பாளர் உதயாதிச்ச தேவர் அரச துரோகியாகி வடகொங்குப் போனமையால் (அவர் உடைமைகள், சொத்துக்கள், நிலங்கள் மன்னனால் பறிமுதல் செய்யப்பட்டு கோயில் பண்டாரத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. இச்செய்தி இக்கல்வெட்டில் பொறிக்கப்படவில்லை).  அவருடைய ஆறுகல நிலம் எனக்கும் என் தம்பி சோழசிங்க தேவர்க்கும் காணியாக்க மன்னன் ஆணயிட்டுத் திருஉள்ளம் தந்தபடியால் என் பங்கான மூன்று கல நிலத்தையும் அதில் விதைப்பதற்கான நெல் ஆறு கலத்தில் என் பங்கு மூன்று கலமும் இறைவர்க்குத் தந்தேன். இந்த மூன்று கல நிலம் வடக்கில் உதையாதித்த தேவர் நிலத்துக்கும், மேற்கில் அதியமான் நிலத்துக்கும், சோழீஸ்வரமுடையார் தேவதானத்துக்கு கிழக்கும்.  அழகாண்டார் செய்க்குத் தெற்கும் அமைந்துள்ளது.  நெல்விதை இரு கலமும் வீரசோழீஸ்வருமுடையார் தேவதானத்துக்கு வடக்கிலும், மேனத்துக்குக் கிழக்கிலும், அழகாண்டார் செய்க்கு மேற்கிலும் இந்நிலத்துக்குப் பாய்கிற கவருக்கு தெற்கெல்லைக்குட்டபட நெல் விதைக் கலமும் முக்குறுணியில் நெல் விதை ஒரு கலமும் ஆக நெல் விதை முக்கலமும் இறையிலி முற்றூட்டாக கொடுத்தேன். எனக்குப் பின் என் மக்கள் அவர்க்கு பின் அவரது மக்களுக்கும் (பேரர்களுக்கும்) விலையொற்றின சிதனத்துக்குரித்தாவதாக, இதாவது பரிசாவதாக என்று கூறி மன்னர் ஆணையிட்டு திருஉள்ளமும் செய்தபடியே ஆளுடைமருதுடையாக்கு கல்வெட்டிக் கொடுத்தேன் விக்கிரம சோழதிரிபுவன சிங்க தேவனாகிய நான். இது திரிபுவன சிங்கதேவன் எழுத்து. இவை கோத்தப்பச் சோழன் எழுத்து என்று கையொப்பமிட்டு கொடுத்தனர்.

    விக்கிரம சோழசிங்க தேவன் அரச குடியினர் என்பது புலனாகின்றது. இந்நிலத்தை அண்ணன் தம்பிமார் விலைகொடுத்து வாங்காமல் மன்னனிடம்இருந்து நேரடியாக மானியாமாகப் பெற்றுள்ளனர் இல்லாவிட்டால் காணியாக்குவதற்கு மன்னனின் ஆணையைப் பெற வேண்டிய தேவை வந்திருக்காது.  மன்னனுக்கு ஏதோ வகையில் உறவினராக இருத்தல் வேண்டும்.  விக்கிரம சோழதிரிபுவன சிங்கர் தம் பங்கான மூன்று கல நிலத்தையும் அதில் விதைக்க மூன்று கல விதை நெல்லையும் கோயிலுக்குக் காணியாகக் கொடுத்தார்.

    பார்வை நூல்:கொங்குநாட்டுக் கல்வெட்டுக்கள், கோயம்பத்தூர் மாவட்டம், 2001, பக்.131-132, மா.கணேசன் & இரா. ஜெகதீசன்

    திருப்பூர் தாராபுரம் வட்டம் பிரம்மியம் என்ற ஊரின் திருவலஞ்சுழி கோயில் கருவறை தெற்கு சுவர் 9  வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோஇராஜயிராஜ ஸ்ரீவீரசோழ தேவற்குத் திருவெழுத்திட்டுச் செல்லாநின்ற திருநல்லி யாண்டு அஞ்சாவதின் எதிராம் யாண்டு தென்கரை நாட்டு ப்ரஹ்மதேயம் ஸ்ரீ வீரசங்காத சதுர்வேதி மங்கலத்து ப்ரஹ்மணன் காமாக்கா
    2. ணிசோமாசி சோமாசி ராஜத்ரோஹம் பண்ணிப் போனமையில் அவன் பூமியானது பெருமாள் கொண்டருள பொருமாள் சாமந்தரில் பெரியாந் சோழனான வீரசோழ கங்கவன் பெருமாள் பண்டாரத்துக்கு
    3. நகரக்கல் துளை முப்பது பொன் வைச்சுப் பொன்னை குடுத்து நிலமறக் கொண்டு இவ்வூர்த் திருவலஞ்சுழி பரமேஸ்வரர்க்குத் திருப்பதியப்புறமாக வைச்ச நிலம் அன்னசு[ர]ப்போயிற் கிடக்காணியும், பள்ளப்போயிற் கிடகாணியு
    4. ம், பனையோடு செய்யிற் பாதியும், பெரிய செய்பனையோடு செய்யடைய அரைக் காணியும், அதிராத்தி வாக்காலில் வடக்கடையந் காணியும், கொங்க தோட்டத்தில் பாதியும், கோவிலார் தோட்டத்தில் பாதியு
    5. ம், வடவூரந் தோட்டத்திற் பாதியும், திருநாராயண விளாகத்திற் பாதியும், இன்நிலத்தால் வந்த வீடுகூறும் மடுகூறும் ஸ்வத்தியும் பரத்தியும் மற்றுமிப்பேர்பட்டிதும் இத்தேவர்க்குத் திருப்பதியப்புறமாவதாகவும் இ
    6. ன்னிலத்துக்கு அரையே யரைக்காப் பெயரை மாகாணிப் பங்குக்கு இறையிழிச்சு இவ்வூர் ஸபையார் பக்கற் குடுத்தப் பொன் நகரக்கல் துளை பத்து. இப்பொன் பத்துங்கைக் கொண்டு இறைவரி எச்சோறும் ஊர்ப்
    7. படுகுடிமையும் மற்றமெப்பேர்பட்டதும் இறுத்து முன்பு தேவதான முழுகற்படி உழுது ஊர் நஞ்சைமேல் வாரந்தேவர்க்குக் குடுக்கக்கடவோமானோம் ஸபையோம். இப்பரிசு இன்னிலந் திருப்பதியப்புற
    8. மாக சந்திராதித்தவற் செல்லக் கல்வெட்டிக் குடுத்தேன் வீரசோழ காங்கயனேன். இத்தம்மம் ரக்ஷிப்பான் ஸ்ரீபாதமென் தலைமேலின இத்தம்மம் அழிவுநினைப்பான் வழிஏழெச்சமறுவான். இது  பன்மாஹே
    9. ஸ்வர ரக்ஷை.

    திருவெழுத்திட்டு – முடிசூடி; பெருமாள் – மன்னன், சாமந்தர் – படைத்தலைவர் அமைச்சர்; நிலமற – ஒரு நிலம் கூட மிச்சமில்லாமல்; திருப்பதியப்புறம் – திருப்பாடல் பாடுதற்கு கொடையாக; இறையிழிச்சு – வரிநீங்கி; எச்சோறு பொது ஊழியர்க்கு பகலில் தரும் சொறு;  ஊர்ப்படுகுடிமை – ஊர்வரி;  வழிஏழெச்சமறுவான் – ஏழுதலைமுறை அற்றுப்போவான்.

    விளக்கம்: கொங்கு சோழன் இரண்டாம் வீரசோழனின் 6 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1106) தென்கரை நாட்டு பிரமதேயமாம் ஸ்ரீ வீரசங்காத சதுர்வேதி மங்கலத்து பிராமணன் காமாக்காணி சோமாசி சோமாசி இராஜதுரோகம் பண்ணிப் போனமையால் (இன்னது என்று குறிக்கவில்லை) அவனது நிலத்தையும் உடைமையையும் மன்னர் பறிமுதல் செய்தார். அதனை மன்னனின் படைத்தலைவர் சோழனான வீரசோழ காங்கவன் பெருமாள் பண்டாரத்துக்கு நகரக்கல் துளை முப்பது பொன் கொடுத்து நிலம் ஏதும் மிச்சம் விடாமல் பிராமணனின் 10 இடத்தில்அமைந்த நிலம், தோட்டம்,  வீடு ஆகியவற்றை வாங்கி அவற்றை திருவலஞ்சுழி பரமேசுவரர்க்குத் திருப்பதியப்புறமாகக் கொடுத்தான். அதோடு அரையே அரைக்கால் மாகாணிப் பங்குக்கு வரிநீக்கி திருவலஞ்சுழி சபையாரிடம் அவன் கொடுத்தப் பொன் நகரக்கல் துளை பத்து. இப்பரிசு திருப்பதியப்புறமாக சந்திராதித்தவர் வரை செல்லவதாக கல்வெட்டிக் கொடுத்தான் வீரசோழ காங்கயன். இத்தர்மம் காப்பான் திருப்பாதமென் தலைமேல் என்றும், இத்தர்மம் அழியநினைப்பான் ஏழுதலைமுறை அற்றுப்போவான் என்றும் சாவித்தான்.

    சோழனான வீரசோழ காங்கவன் பெருமாள் மன்னனுக்கு அமைச்சராய் படைத்தலைவராய் இருப்பது அவரது உறவினர் என்பதால் ஆகலாம். இதைப் பெயரைக் கொண்டு  அறியமுடிகின்றது. மேலுள்ள மூன்று  கல்வெட்டுகளிலும் பறிமுதல் செய்த இராஜதுரோகிகளின் நில, உடைமைகளை உள்ளூரார் எவருமே வாங்க முன் வராததால் அவற்றை அரசதிகார பொறுப்பில் உள்ளவர்களே வாங்கிக் கொண்டு  கோவிலுக்கு நன்கொடையாகத் தந்து விடுகின்றனர். ஏனெனில் உள்ளூரார்க்கு ஏற்பட்ட அச்சமும், அவரிடம் பெரிதாக பணமும் இல்லாமல் இருக்கலாம் என்ற இரண்டு காரணங்கள் தாம். அதேநேரம் வெளியூரார் வந்து வாங்கிப் போட்டு நிலத்தையும் வீட்டையும் பயன்படுத்த முடியாது ஏனென்றால் அவர்கள் அந்த ஊருக்கே குடிபெயர்ந்தாக வேண்டி நிலை.

    பார்வை நூல்: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை – 8, 2012, பக். 160-161.

    https://veludharan.blogspot.com/2017/09/sri-soundranayaki-samedha-sri.html

    Share
  • குறளின் கதிர்களாய்…(251)

    -செண்பக ஜெகதீசன்

    படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்

    மாண்பய னெய்த லரிது.

    -திருக்குறள் -606(மடியின்மை)

     

    புதுக் கவிதையில்…

    மண்ணாளும்

    மன்னரின் செல்வம்

    தானே வந்து கிடைத்தாலும்,

    சோம்பலுடையோர்

    அதனால் எவ்வித

    சிறப்புப் பயனும்

    அடைதல் அரிதாகும்…!

     

    குறும்பாவில்…

     

    அரசர் செல்வம் கிடைத்தாலும்,

    அதனால் மாண்புடை பயனெதுவும்

    பெறலரிது சோம்பலுடையார்க்கே…!

     

    மரபுக் கவிதையில்…

     

    மண்ணை யாளும் மன்னர்தம்

    மதிப்பு மிக்க செல்வமதும்

    எண்ணம் போலக் கிடைத்தாலும்

    எந்தச் செயலும் செய்யாத

    கண்ணிய மில்லா மடியுடையோன்,

    கிடைத்த வரிய பொருளாலே

    கண்ணிய மிக்க பயனெதுவும்

    கண்டிப் பாகப் பெறலரிதே…!

     

    லிமரைக்கூ..

     

    மன்னர்தம் செல்வத்துடன் உறவே

    தானேவந்து கிடைத்தாலும் சோம்பேறிக்கதனால்

    நற்பயனெதுவும் கிடைக்காது அறவே…!

     

    கிராமிய பாணியில்…

     

    சோம்பப்படாத சோம்பப்படாத

    வாழ்க்கயில சோம்பப்படாத,

    சொகுசுவந்து கெடச்சாலும்

    சோம்பேறியா மாறிப்புடாத..

     

    ராசாவூட்டுச் செல்வமும் ஒறவும்

    தானேவந்து சேந்தாலும்,

    ஒண்ணுஞ் செய்யா

    சோம்பேறிக்கு அதுனால

    நல்ல பயனா

    எதுவும் கெடைக்காதே..

     

    அதுனால

    சோம்பப்படாத சோம்பப்படாத

    வாழ்க்கயில சோம்பப்படாத,

    சொகுசுவந்து கெடச்சாலும்

    சோம்பேறியா மாறிப்புடாத…!

    Share
  • மௌனம் எதற்கு, சண்டை போடலாமே!

    -நிர்மலா ராகவன்

    நலம்.. நலமறிய ஆவல் – 152


    மௌனம் எதற்கு, சண்டை போடலாமே!

    மூன்று வயதுக் குழந்தைகள் அடிக்கடி தாயை அழைத்துப்பார்க்கும். அவள் வீட்டிலேயேதான் இருப்பாள். இருந்தாலும், அவர்களுக்கு என்னவோ பயம் – தனியாக விட்டுவிடுவார்களோ என்று.

    `நான் எப்பவும் உன்கூட இருப்பேன். பயப்படாதே!’ என்று சில முறை சொன்னால் ஆறுதலும், தாய்மீது நம்பிக்கையும் பிறக்கும். (தந்தை வேலை நிமித்தம் அல்லது நண்பர்களுடன் பொழுதைக் கழிக்க வீட்டைவிட்டு அடிக்கடி வெளியே போய்விடுவதால் இப்படியோர் அச்சம் பிறக்கிறதோ?)

    சிறு குழந்தைகளுக்கு மட்டுமில்லை, எந்த வயதிலும், எவர்மீதிலும் அவநம்பிக்கை எழலாம்.

    கதை

    காதலிக்கும்போது தன்னையே சுற்றிச் சுற்றி வந்து கைப்பிடித்த கணவன் திருமணத்திற்குப்பிறகு தான் ஒருத்தி இருப்பதையே மறந்தவன்போல் நடப்பது கண்டு ரேணுவுக்குத் துக்கம் பெருகியது. அழுகையுடன், பிற பெண்களிடம் முறையிடத்தான் அவளால் முடிந்தது.

    வீட்டிலேயே சில நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு சீட்டாட்டத்தில் தன்னையும் உறவுகளையும் மறந்துபோனான் வேணு. எப்போதாவது மனைவி அதைப்பற்றி முறையிட்டால், `உன் தொணதொணப்பு தாங்க முடியாதுதான் நண்பர்களை நாடுகிறேன்!’ என்ற ரீதியில் விவாதித்து பேச்சை முடிப்பான்.

    பெண் தன் கணவன் எப்போதும் தன்னருகில் இருந்தால்தான் அன்பு என்று நினைக்கிறாள். அவளுக்கு அந்த அருகாமை வேண்டியிருக்கிறது. ஆணுக்கோ, நீண்டகால நெருக்கம் மூச்சை அடைப்பதுபோல் இருக்குமாம்.

    நம்பிக்கை எழ

    வேலை, நண்பர்களுடன் உல்லாசம், தனக்கென ஒரு பொழுதுபோக்கு — இதெல்லாம் அவசியம் என்று ஆண்களுக்குத் தோன்றினாலும், குடும்பத்தினருக்கும் சிறிதளவாகிலும் நேரத்தை ஒதுக்கி, தன் வாழ்க்கையில் நடந்ததை அவ்வப்போது பகிர்ந்துகொண்டால்தான் உறவு பலக்கும்.

    ஒருவருக்கு நேர்ந்தது நல்லதோ, கெட்டதோ, அதைப் பகிர்ந்துகொண்டாலே போதும். இதனால் சில சமயம் சிறு சர்ச்சைகள் எழலாம். ஆனால், வெளிக்காட்டமுடியாத கோபத்துடன் மௌனம் சாதிப்பதைவிட சண்டையாவது போடலாமே! ஒருவர் மனம் மற்றவருக்குப் புரிய வேறு வழி ஏது!

    யாரைத்தான் நம்புவது!

    நம் நம்பிக்கையைப் பெற நல்லவர்கள்மாதிரி நடித்து, வலிய வந்து உதவி செய்பவர்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் யாரைத்தான் நம்புவது என்ற அவநம்பிக்கைதான் எவருக்கும் எழுகிறது.

    `நம்மிடமிருந்து ஏதோ காரியத்தைச் சாதித்துக்கொள்ளத்தான் இவர் நல்லவர்போல் நடிக்கிறார்!’ என்று முதலில் அவநம்பிக்கை ஏற்படும்.

    கதை

    சீனப்பெருநாளன்று, `அங் பௌ’ என்று, திருமணம் ஆகாதவர்களுக்கு உறவினர்களும், பெற்றோரின் நண்பர்களும் பணம் கொடுப்பது வழக்கம்.

    அப்படிக் கிடைத்த பணத்தை எப்படிப் பத்திரப்படுத்துவது என்று அந்த பத்து வயதுச் சிறுமிக்கு தெரியவில்லை.

    `நான் வைத்துக்கொள்கிறேன், கொடு!’ என்று வீட்டிலிருந்த பெரியவர் கைநீட்ட, கொடுத்தாள். ஆனால், அடுத்த சில நாட்கள், “என் காசை எடுத்தீர்களா?” என்று அடிக்கடி கேட்கத் தவறவில்லை!

    அவளுடைய அவநம்பிக்கை புரிந்து அவருக்குச் சிரிப்புதான் வந்தது. `என்னிடமே நிறைய பணம் இருக்கிறது. நான் ஏன் உன்னுடையதை எடுக்கப்போகிறேன்!’ என்று அலட்சியமாகக் கூற, அவளுக்கு அவரிடம் நம்பிக்கை பிறந்தது.

    பிறர் நமக்குத் தீங்கு இழைக்க மாட்டார்கள், மாறாக, அவர்கள்தாம் நம் நலனையே விழைபவர்கள் என்று தோன்றும்போதுதான் நம்பிக்கை எழ, அவர்களை ஏற்கிறோம்.

    நம்பிக்கை துரோகிகள்

    ராஜன் படித்து, பெரிய வேலையில் இருந்தார். எந்தவித தீயபழக்கத்தையும் விட்டுவைக்கவில்லை. அவருக்குக்கீழ் வேலை பார்ப்பவர்களைத் தன் வசம் இழுத்து, அவர்களையும் குடிபோதைக்கு அடிமையாக்க பெரும் பிரயத்தனம் செய்வார். மேலதிகாரியைப் பகைத்துக்கொள்ள முடியாது, அவர்களும் அவர் காட்டிய தீய வழிகளில் நடப்பார்கள். விலைமாதர்களை நண்பர்களுக்குப் பரிந்துரைக்கும் ராஜனைப்போல் ஒருவரை எந்தப் பெண்தான் ஏற்பாள்?

    அவரது குணத்தைப் புரிந்து, கணவன்மார்களை எச்சரித்த மனைவிகளிடம் மனக்குறையுடன், “என்னை நீங்கள் நம்பவில்லை என்று தெரியும்!” என்று பிரலாபிப்பார். தான் செய்துவருவது தவறு என்று அவர் கருதாததுதான் வியப்பு.

    நம்பிக்கையே ஆயுதமாக

    சந்தித்த உடனேயே அதிக நட்புடன், நைச்சியமாகப் பேசுகிறவர்களிடம் கவனமாக இருக்கவேண்டும்.

    `என்னை நம்பு!’

    `ஐயோ! என்மேல் உனக்கு நம்பிக்கை வரவில்லையே!’

    இளம்பெண்களை வசப்படுத்த முயற்சி செய்பவர்கள் அடிக்கடி பிரயோகிக்கும் வசனங்கள் இவை.

    அப்படி ஒருவர் வெளிப்படுத்தும் போலியான தன்னிரக்கத்தைப் பார்த்து இரங்கி, `அன்புக்கு ஏங்குகிறார். அவரை என்னால் திருத்த முடியும்!’ என்று இரக்க குணம் படைத்த பெண்கள் ஏமாறலாம்.

    ஆனால், கீழே இருப்பவர்கள் பிறரையும் கீழே இழுக்கத்தான் பார்ப்பார்கள். அவர்களைத் திருத்த முயல்வது துர்லபம். அப்படி ஒரு நிலையில் இருப்பதுதான் அவர்களுக்குப் பிடிக்கிறது என்றால், விட்டுத்தொலைக்க வேண்டியதுதான். `சவால்’ என்று நம்மையே வாட்டிக்கொள்வானேன்! அவர்களைவிட்டு விலகினால் ஆரோக்கியமான உறவுகள் அமைய வாய்ப்புண்டு.

    துஷ்டர் என்று கண்டும் தூர விலக முடியாதவர்கள்

    அது ஏன், சிலர் தகாத நட்பு என்று தெரிந்தாலும், அதிலிருந்து விலக முடியாது தவிக்கிறார்கள்?

    சிறு பிராயத்தில் பெற்றோரை நம்பி, அவர்களால் ஏமாற்றம் அடைந்தவர்களாக இருப்பார்கள்.

    கதை

    மனைவியை ஒதுக்கிவிட்டு, இளமையான இன்னொரு பெண்ணை மணந்தார் ஒரு சுயநலக்காரர். குழந்தைகளுடன் தம்பியின் வீட்டில் தஞ்சம் புக நேரிட்டது முதல் மனைவிக்கு. வேண்டாத இச்சுமையால் குழந்தைகளைக் கொடுமைப்படுத்தினார் அந்த உறவினர்.

    `இருக்கும் ஆதரவையும் பகைத்துக்கொண்டால், குடும்பத்துடன் எங்கு போவது!’ என்று தாய் கண்டும் காணாததுபோல் இருந்தாள். உடனுக்குடனே அவள் ஆதரவாக ஏதாவது குழந்தைகளிடம் சொல்லியிருந்தால் அவர்களுக்கு அவ்வளவு மனக்கிலேசம் ஏற்பட்டிருக்காது.

    ஆண் குழந்தைகள் முடிவெடுத்தது: எல்லா ஆண்களுமே அப்பாவைப்போல்தான்! கைவிட்டுவிடுவார்கள். நம்பமுடியாது.

    பெண்களின் முடிவு: ஆண்கள் அனைவரும் பெண்பித்தர்கள்! எந்த விதத்திலாவது பெண்களைக் கஷ்டப்படுத்துகிறவர்கள்.

    வளர்ந்ததும், பெண்கள் தந்தையைப் போன்றவரையே கணவனாக வரித்தார்கள். மகிழ்ச்சியாக இருப்பதைப்போல் காட்டிக்கொண்டார்கள். ஏனெனில், அவர்களுக்குத் தெரிந்த வாழ்க்கைமுறை அதுதான்.

    ஆண்பிள்ளைகளோ, `எனக்கு நல்ல நண்பர்களே கிடைக்க மாட்டார்கள்!’ என்று எண்ணியதுபோல், தம்மையும் அறியாது, தந்தையைப் போன்றவர்களையே உற்ற நண்பர்கள் என்று எண்ணி ஏமாந்தார்கள். அவர்களிடம் தந்தை தமக்கிழைத்த அநீதியைச் சொல்லிச் சொல்லி மாய்ந்தார்கள்.

    நம்பிக்கைக்கு உரியவராக இருக்க வேண்டியவரே துரோகம் செய்கிறார் என்று புரியும்போது, முதலில் அதிர்ச்சியும், பிறகு, `ஏமாந்துவிட்டோமே!’ என்ற ஆத்திரமும் எழுகின்றன.

    ஆத்திரம் தணியாமலே இருந்தால் நம் உடல்நிலைதான் கெடும். பாம்பு தன் சட்டையை உரிப்பதுபோல், பழையனவற்றை நம் நினைவிலிருந்து அகற்றிவிட்டு, அதிலிருந்து கற்ற பாடத்தை நினைவில் வைத்துக்கொண்டாலே போதும். அதே குணத்தைக்கொண்ட வேறொருவரைச் சந்திக்கும்போது, ஜாக்கிரதையாகப் பழக முடியுமே!

    Share
  • நூல் அறிமுகம் – அந்த ஆறு நாட்கள்!

    வல்லமை வாசகர்களுக்கு,

    ஆரூர்பாஸ்கரின் அன்பு வணக்கங்கள்!

    அந்த ஆறு நாட்கள்”  எனும் எனது மூன்றாவது புதினம் (நாவல்)  அமேசான் கிண்டிலில் இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியானது.  வெளியான நாள்முதல் வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த நூலை வல்லமை  வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி!

    நாவல் குறித்து நான் எழுதுவதைவிட, சிங்கப்பூர் எழுத்தாளர் திரு. சித்தூராஜ் பொன்ராஜ் (Sithuraj Ponraj) முகநூலில் எழுதிய வாசிப்பனுபவத்தை உங்களுடன் பகிர்வது சரியாக இருக்குமென நினைக்கிறேன்.

    “…Gripping tale என்பார்கள். தொடக்கத்திலிருந்தே வாசகனை அங்கும் இங்கும் அசையாதபடி கட்டிப் போடும் கதை. ஆரூர் பாஸ்கர் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தை 2017ல் அடித்து நொறுக்கிய மிக உக்கிரமான இர்மா புயலைச் சுற்றி அப்படிப்பட்ட ஒரு நாவலைப் பின்னியிருக்கிறார்.

    சகல வல்லமைகளும் வசதிகளும் பொருந்திய வல்லரசு இயற்கைக்கு முன்னால் எதுவும் செய்ய முடியாமல் நிற்கும் நிதர்சனத்தைப் பரணி என்ற மின்சாரக் கம்பெனியில் வேலை பார்க்கும் இந்திய ஊழியரின் கண்களின் வழியே காட்டியிருக்கிறார். அதே இயலாமையைக் காட்டும் விதத்தில் பரணியின் கையில் பணமிருந்தும் புயலுக்கு முந்திய நாள்களில் அவருக்குச் சேமித்து வைப்பதற்காக குடிநீர் வாங்குவதும் பெட்ரோல் வாங்குவதும்கூட சிரமமாக இருக்கிறது. வழக்கமாக மிகுந்த ஒழுங்கோடும், பரஸ்பர மரியாதையோடும் காரியங்களைச் செய்யும் அமெரிக்கர்களிடையே இந்த இயலாமை ஏற்படுத்தும் நுணுக்கமான மாறுதல்கள். ஆரூர் பாஸ்கர் அற்புதம் செய்து இருக்கிறார்.

    இயற்கை பேரிடர் போருக்கு ஒப்பானதுதான். இர்மா புயல் தாக்கத்தை மட்டும் சொல்லாமல் அது வரும் முன்பான நாள்களில் நாவலை பாஸ்கர் தொடங்கியது சிறப்பானது. போரும் பேரிடரும் வரும் முன்பு மனிதர்களிடையே ஏற்படும் வெற்று நம்பிக்கைகளையும், ஆயத்தங்களையும், மனப் போராட்டங்களையும் எடுத்துக் காட்ட இது உதவி இருக்கிறது. அது மட்டுமல்லாமல், இந்த விவரிப்புகளின் மூலமும், அமெரிக்காவை முன்னர் தாக்கிய புயல்களைப் பற்றி இடையிடையே சொல்லியும் பாஸ்கர் அமெரிக்க வாழ்வின் சவால்களை, அரசியலை, கறுப்பர்களுக்கு இழைத்த அநீதியை, அமெரிக்காவில் வேலை செய்யும் இந்தியர்களின் சந்தோஷங்களை, மன சஞ்சலங்களை, நட்பை ஒரு சேர அள்ளித் தந்திருக்கிறார். இதற்கு மிக உதவியாய் இருப்பவை நாவல் முழுவதும் பரவிக் கிடக்கும் தினசரி அமெரிக்க வாழ்வைப் பற்றிய மிக இயல்பான விவரங்கள். இதில் புயலால் அதிகம் பாதிப்படையக் கூடிய மின்சாரக் கட்டமைப்பு ஊழியரைக் கதாநாயகன் ஆக்கியிருப்பது புத்திசாலித்தனம் – அதிக தகவல்களைப் போகிற போக்கில் கொடுக்க முடிகிறது. புயலைப் படிக்கத் தொடங்கித் தற்கால அமெரிக்காவைப் பற்றி முழுமையாக படித்த அனுபவம். அழகான நடை. 

    வாசகர்களுடனான இது போன்ற உரையாடல்கள் உற்சாகமளிக்கின்றன. தொடர்ந்து வாசித்து ஆதரவளிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    *****

    புதின ஆசிரியரைப் பற்றி…

    அமெரிக்காவின் ஃப்ளாரிடா (Florida) மாகாணத்தில் வசிக்கும் திரு. ஆரூர்பாஸ்கர் மென்பொருள் துறையில் பணிபுரிகிறார்.  தனது சொந்த ஊரான ஆரூரை (திருவாரூர்) தனது பெயருடன் சேர்த்து ’ஆரூர் பாஸ்கர்’ எனும் புனைபெயரில் எழுதிவருகிறார்.

    “சிறகுகள் கல்வி அறக்கட்டளை” எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் இவர், கவிஞர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர்.

    இவருடைய நூல்கள்: என் ஜன்னல் வழிப்பார்வையில் (கவிதை), பங்களா கொட்டா, வனநாயகன் – மலேசிய நாட்கள், அந்த ஆறு நாட்கள் (புதினங்கள்).

    *****
    இணையதளம்: http://aarurbass.blogspot.com/
    முகநூல்: https://www.facebook.com/aarurbass
    மின்னஞ்சல்: aarurbass@gmail.com
    அமெசான் கிண்டில் முகவரி (இந்தியா):
    https://amzn.to/2UYBi4d
    அமெசான்
     கிண்டில் முகவரி (அமெரிக்கா):
    https://amzn.to/2K1IoEr

    Share
  • (Peer Reviewed) உரைக்கொள்கை உருவாக்கமும் பொருள்விளக்கப் பொருத்தப்பாடும் (திருக்குறள் – பொற்கோ உரையை முன்வைத்து)

    முனைவர் ப.சு. மூவேந்தன்
    உதவிப் பேராசிரியர்
    (தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
    தமிழாய்வுத் துறை, அரசு கலைக் கல்லூரி,
    திருத்தணி 631209
    திருவள்ளூர் மாவட்டம்.

    உரைக்கொள்கை உருவாக்கமும் பொருள்விளக்கப் பொருத்தப்பாடும்
    (திருக்குறள் – பொற்கோ உரையை முன்வைத்து)

    ஆய்வுச் சுருக்கம் (Abstract)

    தமிழ் இலக்கியப் பரப்பில் உரைகள் இன்றியமையாத இடத்தினை வகிக்கின்றன. உரைகள் பல்கிப் பெருகிய காலமும் இருந்ததை தமிழ் இலக்கிய வரலாறுகள் தெளிவுறுத்துகின்றன. மூல நூலாசிரியனுக்கும் கற்போனுக்கும் இடையே கால இடைவெளி ஏற்படும்போது மூல நூலாசிரியரின் கருத்தைத் தெளிவுபடுத்த ஆசிரியர்கள் தந்த விளக்கங்களே உரைகளாக அமைந்தன. அவ்வகையில் தமிழின் உரைகள் சிறப்புப் பெற்றனவாக அமைந்துள்ளன. தமிழ் இலக்கிய நூல்களில் பெருமளவினதான உரைகளைக் கொண்டது திருக்குறள் ஆகும். பேராசிரியர் பொற்கோ, திருக்குறள் விளக்கமாக உரைநூல் வகுத்துள்ளார். திருக்குறள் உரை விளக்கத்தில் பேராசிரியர் பொற்கோ ஆண்டுள்ள உரை நெறிகளை இக்கட்டுரை தெளிவுறுத்துகிறது.

    உரைகள் மூலநூற் கருத்தினை அறிவதற்குப் பெருந்துணை புரிகின்றன. எனினும் உரைகளில் உரையாசிரியரின் ஆளுமையே பெரிதும் நிற்கிறது. இதனால் மூல நூலாசிரியன் கருத்து இன்னது என்பது படிப்பாளர் அறிந்துகொள்ள வழியேலாத நிலை ஏற்படுகிறது. இதனால் ஒரு நூலுக்குப் பல உரைகள் எழும் நிலை ஏற்படுகிறது. பேராசிரியர் பொற்கோ, திருக்குறள் உரை விளக்கத்தின்வழி, இலக்கிய உரைக்கொள்கை வகுத்துள்ள திறத்தினையும், அதன்வழி உணர்த்தப்படும் பொருள்விளக்க நிலையினையும் இக்கட்டுரை புலப்படுத்துகிறது.

    அறிமுகம் (Introduction)

    உலக இலக்கியத்தின் வளமார்ந்த கூறுகள் யாவற்றையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் நூல்களில் திருக்குறள், தலைமைத் தன்மையுடையது. அதன் கருத்து வளமும் பொருளாழமும், சொற்சுருக்கமும் பயிலும்தொறும் புதுமையளிக்க வல்லவை. திருக்குறளின் பொருளமைதியில் மனம்கொண்ட சான்றோர்கள் தாம் திருக்குறளின்வழி கண்டுணர்ந்த விளக்கங்களை ஏனையோரும் நுகரும்பொருட்டு அதற்கு விளக்கங்கள் தரலாயினர். அவ்வாறு அவர்கள் உரைத்த விளக்கங்கள் பின்னாட்களில் பெருமளவிலான தடை விடைகளை உருவாக்கி, ஆய்வுப் போக்கிற்கு வழியமைத்துத் தந்தன. அவ்வகையில் தமிழ் உரைமரபில் திருக்குறள் தனித்துவம் மிக்கதாகத் திகழ்கிறது.

    இலக்கியநூல்களில் பெருமளவில் உரைவளம் பெற்ற நூல் திருக்குறள் ஒன்றே என்பது அதன் சிறப்பிற்குச் சான்றாக அமைந்துள்ளது. திருக்குறள் உரைகள் புதுப்பொருள் தரும் விதத்திலும் ஆய்வு நோக்கிலும், குறளின் இலக்கியக் கோட்பாடு, இலக்கண நோக்கு, மொழியியல், தத்துவம், அறிவியல், அரசியல், இலக்கிய நயம் முதலான கூறுகளை எடுத்துரைக்கும் விதத்திலும் அமைந்துள்ளன. திருக்குறள் உரைகளில் தமிழ்ப் பேராசிரியர்களின் திருக்குறள் உரைகள் தனித்துவம் மிக்கவையாகத் திகழ்கின்றன. அவை தமிழர்தம் பண்பாடு, மொழி, கலை, நாகரிகம், சொல்வளம், பொருள்வளம் ஆகியனவற்றை அடியொற்றியதாக அமைந்தன. அவ்வகையில் ஆய்வுப் போக்கில் அமைந்த ஒன்றாகத் திகழும் பேராசிரியர் பொற்கோவின் திருக்குறள் விளக்க உரைநெறிக் கொள்கை, இக்கட்டுரையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

    நூற்பதிப்பு

    பேராசிரியர் பொற்கோவின் திருக்குறள் உரைவிளக்கம், 2004இல் சென்னை பூம்பொழில் வெளியீடாக வெளிவந்துள்ளது. இதன் திருத்தப்பட்ட பதிப்பு 2010இல் வெளியாகியுள்ளது. தான் பயின்ற காலத்தில் மனங்கொண்ட பொருள்நிலையினையும், மாணவர்களுக்குப் பாடம் நடத்துங்கால் நிகழ்ந்த தடை விடைகளையும், தான் ஆய்வு செய்யுங்காலத்து உளங்கொண்ட கருத்தியல் விளக்கங்களையும் கருத்தில் கொண்டு பல்லாண்டுகள் உழைத்து ஆழ்ந்து சிந்தித்த பின்னரே குறளுரையினை நூல்வடிவில் கொண்டு வந்துள்ளார் என்பதனை நூலின் முகவுரை (ப. 8) தெளிவுறுத்துகிறது.

    உரையின் நோக்கம்

    திருக்குறள், பல பொதுமைக் கருத்துகளுக்கு இடமளிப்பது. இதன் காரணமாகவே அது உரையாசிரியரின் எண்ணத்திற்கும் கருதுகோளுக்கும் ஏற்ப நெகிழ்ந்து கொடுக்கும் வன்மையுடையதாய் விளங்குகின்றது. இதனால் உரையாசிரியர்கள் பலரும் தங்கள் கருத்தினைத் திருக்குறளில் புகுத்த முயல்வது இயல்பான ஒன்றாக உள்ளது. இதனால் திருவள்ளுவர் கருத்து இதுதான் என்று துணிந்து கூறுகின்றனர். இதில் உரையாசிரியர் பொற்கோவுக்கு உடன்பாடில்லை. மரபார்ந்த இலக்கணப் பயிற்சியும் மொழியியற் சிந்தனைத் திறனும் மிக்க அவர் தனது உரையின் நோக்கத்தினைப் பின்வருமாறு நூலின் முன்னுரையில் தெளிவுபடுத்துகின்றார்.

    ‘திருக்குறளைப் படிக்க வந்தவர்களிடம் ஊகமான கருத்துகளைச் சொல்லி அவற்றை நம்பவேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. சொல் விளையாட்டுகளில் ஈடுபட்டு நம்முடைய கருத்தைத் திருக்குறளில் திணிக்கக் கூடாது. இந்த உணர்வோடு மாணவர்களுக்குத் திருக்குறளைச் சொல்லிக் கொடுக்க நினைத்தால் எப்படிச் சொல்லிக் கொடுப்போமோ, அதைத்தான் இந்த உரைவிளக்கத்தில் முறையாகவும் சுருக்கமாகவும் பதிவு செய்திருக்கிறேன்.”  (முன்னுரை, ப. ix)

    திருக்குறள் உரைக்கொள்கை

                திருக்குறள் விளக்கத்தில் பொற்கோவின் உரைநெறியானது

    • திருக்குறளின் சிறப்பினை எடுத்துரைத்தல்
    • உரை மரபைப் பின்பற்றுதல்
    • பழமை போற்றுதல்
    • புதுமையைக் கொணர்தல்
    • உரைநெறி வகுத்தல்

    என்னும் நிலைகளில் அமைந்துள்ளது. இவற்றில் உரைநெறி வகுத்துள்ள பாங்கு மட்டும் இவ்விடத்தில் சுட்டிக் காட்டப்படுகிறது.

    உரைநெறி வகுத்தல்

    பேராசிரியர் பொற்கோ, ஒரு செறிவான வரையறையுடன் திருக்குறள் உரையை வகுத்துள்ளார். அவர் திருக்குறளின் ஒவ்வொரு குறளுக்கும் உரை வகுத்துள்ள உரைநெறி,

    • உரைத்தொடர் உருவாக்குதல்
    • உரைத்தொடர் விரிவாக்கம் செய்தல்
    • பொருள்விளக்கமும் குறிப்பும் தருதல்

    என்னும் மூன்று நிலைகளில் அமைந்துள்ளது. இம்மூன்று நிலைகளிலேயே 1330 குறள்களுக்கும் விளக்கம் தந்துள்ளார். இது பொற்கோ உரைவிளக்கத்தின் உரை நெறியாக அமைந்துள்ளது.

    உரைத்தொடர் உருவாக்குதல்

    ‘உரைத்தொடர்’ என்பதில் திருக்குறளின் செய்யுள் வடிவம் உரைநடைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமையும் முறையினைப் பொருள்விளக்கத்தின் தொடக்க நிலையாகக் குறிப்பிடுகின்றார் உரையாசிரியர்.

    இவ்வாறு குறளை உரைநடைப்படுத்தும் முறையினையும், உரைநடைப்படுத்திய விதத்தினையும், ‘செய்யுள் நடையில் உள்ள தொடர்கள் இயல்பாக ஆற்றொழுக்காக இல்லாமல் பல நேரங்களில் மாறி அமைந்திருக்கும், சில நேரங்களில் இயல்பாக அமைந்திருக்கும். செய்யுளில் உள்ள தொடர்களை இயல்பாக ஆற்றொழுக்கில் உரைநடை வரிசைப்படி மாற்றி அமைத்தால் செய்யுளின் பொருள் நமக்குப் புலப்படத் தொடங்கிவிடும்” என்று குறிப்பிடுகிறார். சான்றாக,

                கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்சம்

              நடுவொரீஇ யல்ல செயின்.                   –        (குறள். 116)

    என்னும் குறளினை, “தன்நெஞ்சம் நடுஒரீஇ அல்ல செயின் கெடுவல்யான் என்பது அறிக” என்று உரைத்தொடராக்குகின்றார். இவ்வாறு உரைத்தொடர் உருவாக்குவதன் வழியாகச் செய்யுளின் திரண்ட கருத்தினை உரைநடைப்படுத்துவது தெளிவாகிறது.

    உரைத்தொடர் விரிவாக்கம் செய்தல்

    குறளின் பொருள்விளக்க நிலையின் இரண்டாவது நிலையாக ‘உரைத்தொடர் விரி’ அமைந்துள்ளது. முதலில் குறளின் தொடர்களையும், சொற்களையும் கொண்டு உரைத் தொடராக்கிக் காட்டும் உரையாசிரியர், அதன் பின்னர் உரைத்தொடராக மாற்றும் போக்கும் தெளிவாகிறது. உரைத்தொடரின் பொருளை மேலும் பொருள் உணர்த்தும் நிலைக்கு இட்டுச் செல்வதாக இப்பகுதி அமைந்துள்ளது. சான்றாக,

                புறங்குன்றி கண்டனைய ரேனு மகங்குன்றி

              மூக்கிற் கரியா ருடைத்து.                       –           (குறள். 277)

    என்னும் குறளுக்கு, “இந்த உலகம் புறங்குன்றி கண்டனையரேனும் அகத்தில் குன்றி மூக்கினைப் போலக் கரியராய் உள்ள துறவிகளை உடையது” என்று உரைத்தொடர் விரிவாக்கம் செய்துள்ளார்.

    பொருள் விளக்கமும் குறிப்பும் தருதல்

    திருக்குறள் உரைவிளக்கத்தின் மூன்றாவது நிலையாகப் ‘பொருள் விளக்கமும் குறிப்பும்’ அமைந்துள்ளது. இப்பகுதியில் ஒவ்வொரு குறளுக்குமான பொருள் விளக்கமும் இலக்கணக் குறிப்புகளும் பாடபேதங்களும் பிற செய்திகளும் விரிவாக இடம் பெற்றுள்ளன.

    உரைத்தொடர், உரைத்தொடர் விரி, பொருள்விளக்கமும் குறிப்பும் ஆகியன விளக்குமுறையின் படிநிலைகளாக அமைந்துள்ளன. பொருள் விளக்க நிலையில் ஒவ்வொன்றாகச் சொல்லிச் செல்வதாக இப்படிநிலை வளர்ச்சி அமைந்துள்ளது. இப்பொருள் விளக்க நிலையில் தேவைப்படும் இடங்களில் நீண்ட விளக்கங்களைத் தந்துள்ளார். இவை ஆசிரியர் தம் மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் விதத்தினைக் காட்டுவதாக அமைந்துள்ளது. ஆசிரியர் மாணவர்களுக்குப் பாடம் நடத்துகையில் இலக்கியத்தில் இடம்பெறும் சொற்களையும், அதன் பொருளையும் அறிந்து கொள்ளும் விதத்தில் ஒவ்வொரு நிலையாக மாணவர்களைப் பொருளுணத்தும் நிலைக்கு இட்டுச் செல்வதை ஒத்ததாய் இப்பகுதி அமைந்துள்ளது.

    திருக்குறளின் உரைவிளக்க முறையினை இவ்வாறு அமைத்துள்ள தன்மை குறித்து, “இந்த உரைவிளக்கத்தில் ஒவ்வொரு குறளையும் உரைநடை வரிசையில் அமைத்துக் காட்டி வாசிப்பாளர்களுக்குத் திருக்குறளை நெருக்கமாக்கியிருக்கிறேன்; அடுத்த நிலையில் தேவையான சொற்களை மட்டும் இட்டு நிரப்பிப் பொருள் புலப்பாட்டுக்கு வழி வகுத்திருக்கிறேன்; மூன்றாவது நிலையில் தேவையான விளக்கங்களையும் குறிப்புரைகளையும் முறையாகச் சேர்த்திருக்கிறேன்” (ப. 8) என்று குறிப்பிடுவதன்வழி அறிய முடிகிறது.

    சொல் நிலையில் பொருள்விளக்கம் செய்தல்

    ஒரே குறளுக்கு இரண்டு, மூன்று பொருள்விளக்கங்கள் தரும் பகுதிகளும் பொற்கோ உரையில் உள்ளன. திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ள சொற்களின் பொருளுணர்த்தும் திறன் அவ்வாறு அமைந்திருப்பதும் அதற்கு ஒரு காரணமெனக் குறிப்பிடுகிறார்.

    இருபொருள் உரைத்தல்

                தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்

              கற்றனைத் தூறு மறிவு      –        (குறள். 396)

    என்னும் குறளுக்கு, “மணற்கேணி தோண்டத் தோண்ட நீர் சுரக்கும்; மாந்தர்களிடம் கற்க கற்க அறிவு ஊறும்” என்று ஒரு பொருளும், “தோண்டத் தோண்ட மணற்கேணியில் நீர் ஊறும்; அதுபோலக் கற்கக் கற்க மாந்தரிடம் அறிவு ஊறும்” என்று மற்றொரு பொருளும் உரைக்கின்றார். இதில் ஒரு பொருள் உவமை போன்றும், மற்றொரு பொருள் பொருள்போலவும் கொள்ளப்பட்டு இருபொருள் தரப்பட்டுள்ளது. இவ்வடிப்படையில் ஒரு குறளுக்கு மூன்று பொருளும் தந்துள்ள நிலையினைக் காண முடிகின்றது.

              “மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயிற்

              பலர்காணத் தோன்றன் மதி.”       –        (குறள். 1119)

    என்னும் குறளுக்கு, “இவள் பலர் காணத் தோன்றமாட்டாள். இவள் முகத்தை ஒத்து விளங்க நீ விரும்பினால் இனிமேல் பலர் காணத் தோன்றாதே என்பது ஒரு பொருள்; நீ இவள் முகத்தை ஒத்து விளங்குவது உண்மையானால் இனி நீ பலர் காணும் வண்ணம் பொதுவில் தோன்றாதே என்பது இன்னொரு பொருள்” என்று இருபொருள் உரைக்கின்றார்.

              “மாலைநோய் செய்தல் மணந்தா ரகலாத

              காலை யறிந்த திலேன்”     –        (குறள். 1226)

    என்னும் குறளில் இடம்பெறும் காலை என்னும் சொல் காலைப் பொழுது, நேரம், சமயம், காலம் என்னும் பலபொருள் கொண்டதாய் அமைந்துள்ளதனைக் கருத்தில் கொண்டு   இருபொருள் உரைக்கும் நிலைப்பாட்டினை மேற்கொள்வதனைக் காண முடிகிறது.

    “மாலைப் பொழுது இப்படி எனக்கு நோய் செய்யும் என்பதை நான் இப்போது தான் உணர்ந்துகொள்கிறேன். என் காதலர் என்னை விட்டுப் பிரியாதபொழுது நான் இதனை அறிந்ததில்லை. காதலர் உடன் இருந்தபொழுது மாலைப் பொழுதுக்குத் துன்பம் தருகின்ற வல்லமை உண்டு என்பது எனக்குத் தெரியாது. ஒவ்வொரு நாளும் வருகின்ற மாலைப் பொழுது இப்படித் துன்பம் தரும் என்பது தெரிந்திருந்தால் அவர் என்னை விட்டுப் பிரிய இடங்கொடுத்திருக்க மாட்டேன்” என்று ஒரு பொருளும், “இன்று காலையில்தான் அவர் என்னை விட்டுப் பிரிந்தார். காலையில் அவர் என்னோடு உடன் இருந்தார். மாலைப் பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை அவர் என்னோடு உடன் இருந்த காலைப் பொழுதில் நான் தெரிந்துகொள்ளவில்லை” என்று மற்றொரு பொருளும் உரைக்கின்றார்.

    உரை மறுப்பும் ஏற்பும்

    பொற்கோ, திருக்குறள் உரைத்திறன் வகுத்தலில் பிறர் உரைகளை மேற்கோளாகக் காட்டுதல், பிறரது உரைகளின் நயங்களை எடுத்துரைத்தல், பிற உரையாசிரியர்களின் கருத்தியல் பொருத்தப்பாட்டை மறுத்தல், அவர்களின் விளக்கமுறைத் தெளிவின்மையைக் காட்டுதல் என்பன போன்ற நிலைகளில் உரைவிளக்கப் பகுதிகள் அமைந்துள்ளன.

    பிறர் உரை மறுத்துத் தம் உரையை நிறுவுதல்

    பொற்கோ, திருக்குறள் மூல வடிவில் நுண்ணிய வாசிப்பும், ஏனையோர் உரைகளில் ஆழ்ந்த பயிற்சியும், அகலமான வாசிப்பும், தீவிரமான ஆய்வுப் போக்கும் கொண்டு விளங்குவதனை அவரது உரைக் குறிப்புகள் காட்டுகின்றன. அவ்வகையில் திருக்குறள் உரையாசிரியர்கள் பலரது கருத்துகளைக் கோடிட்டுக் காட்டியும், சிலரது உரைகளை ஒட்டியும் ஏற்றும் மறுத்தும் விளக்கம் செய்துள்ளார். இவ்வாறு அமையும் பகுதிகள் தனிநிலை ஆய்வுக்குரிய பொருண்மைகளைக் கொண்டு விளங்குகின்றமையான், ஆய்வின் விரிவஞ்சி இங்கு, பிற உரைகளை மறுத்துத் தம் உரையை நிறுவும் பாங்கு எடுத்துரைக்கப்படுகிறது.

    பிறர் உரையை மறுக்கும்போது மிக நயமாகவும் நாகரிகமாகவும் வெளிப்படுத்தும் பாங்கு அவரது உரைநயத்திற்குச் சான்றாக அமைகிறது. தம்முடைய மறுப்புகளில் எந்த உரையாசிரியர் பெயரையும் சுட்டாது அவர்களுடைய கருத்துகளையே தம் மறுப்புகளுக்கு உரியதாக்கிக் கொள்வது அவரது செவ்விய உரைநெறியாக உள்ளது.  இவ்வாறு அமையும் பகுதிகள் திருக்குறள் விளக்கத்தில் நீண்ட விவாதங்களுக்கு உரியனவாக அமைந்துள்ளமை கருதத்தக்கது.

              “அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லாற்

              பிறவாழி நீந்த லரிது.”                          –        (குறள். 8)

    என்னும் குறள் விளக்கத்தில், “துன்பக் கடலை நீந்திக் கரைசேருதல் அரிது என்று ஆசிரியர் தெளிவாகக் கூறுதலால் இறைவன் தாளாகிய புணை என்பது இவ்விடத்தில் பொருந்தாது. புணையைப் பிடித்துக்கொண்டு கரை சேருதலும் நீந்துதலும் வேறு வேறு என்பதைக் கருதுக” என்ற பிற உரையாசிரியர் கருத்தை மறுத்து, “பிறஆழி என்பதற்குப் பொருளும் இன்பமும் ஆகிய கடல் என்று பொருள் கூறுவதைவிட, அறத்துக்கு மாறாகிய மறச் செயல்களால் விளையும் துன்பக் கடல் என்று பொருள் செய்வதே பொருத்தம்” என்று விளக்கமும் தருகின்றார்.

                “இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான்

                 முயல்வாரு ளெல்லாந் தலை”       –        (குறள். 47)

    என்னும் குறளில் இடம்பெறும் முயல்வார் என்பதற்கு, “முயல்வார் என்பது வானப்பிரத்த நிலையில் மனைவியோடு காட்டில் இருந்து தவம் செய்வோரைக் குறித்தது என்று கூறுவாரும் உளர்” என்று பிறர் உரையைக் குறித்துப் பின்னர், “திருவள்ளுவர் துறந்தார் பெருமையை வியந்து வியந்து பாராட்டிப் போற்றியவர் என்பதை மறவாமல் இக்குறளுக்கு உரைகூறுதல் வேண்டும். எனவே, முயல்வார் என்பதற்கு அறஇயல்பு அல்லாத வேறு நெறிகளில் முயல்வார் என்று பொருள் கொள்ளுவதே பொருந்தும்”  என்று விளக்கம் தருகின்றார்.

              “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச்

                சான்றோ னெனக்கேட்ட தாய்.”   –        (குறள். 69)

    என்னும் குறளுக்கு “தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும் தன் மகனைக் கல்வி கேள்விகளான் நிறைந்தானென்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய். பெண்ணியல்பாற் றானாக அறியாமையின் கேட்ட தாய் என்றார்” என்று பொருளுரைப்பார் பரிமேலழகர். “பெண் இயல்பால் தானாக அறியாமையின் கேட்ட தாய் என்றார் என்று கூறும் விளக்கம் சிறப்புடைத்து ஆகாது” என்று பரிமேலழகர் உரையை மறுத்து, “சான்றோன் என்னும் சொல்லுக்குப் போர்வீரன் என்று பொருள்கொண்டால் தானாக அறியாமையின் கேட்ட தாய் என்று விளக்கம் கூறுவது பொருந்தும்” என்று விளக்கமும் தருகின்றார்.  இவ்விடத்தில் சான்றோன் என்பதற்கு கல்வி கேள்விகளில் சிறந்தவன் என்று பொருள்கொள்வதைவிட, மிகச் சிறந்த போர்வீரன் என்று கொள்வதே பொருத்தமானதாக அமைந்துள்ளது.

    இவ்வாறு அமைவதில் உரையாசிரியரின் பொருத்தப்பாடு அவரது உரைக்கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு ஏற்றதாக அமைந்திருப்பதனைக் காண முடிகிறது.

    புதுமை விளக்கம் தருதல்

                சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர்

              நிறைகாக்குங் காப்பே தலை.                –        (குறள். 57)

    என்னும் குறள் விளக்கத்தில் “ஆணாயினும் பெண்ணாயினும் வழிதவறிப் போக வேண்டும் என்று தாமே விரும்பினால் அவர்களை நெறிப்படுத்துவதற்காக அவர்களைச் சிறைவைப்பதாலும் காவல் காப்பதாலும் பயன் இல்லை. ஒழுக்கக் கேட்டினால் வருகின்ற தீமைகளை உணர்த்தி ஒரு பெண்ணின் மனத்தில் நிறைகுணத்தை உண்டாக்கி அதை அவளே காக்குமாறு செய்தல் தலையாய காப்பு என்றார். மகளிர்க்கே சொன்னார் எனினும் ஆடவர்க்கும் இது பொருந்தும்” என்று புதுவிளக்கம் தருகின்றார். இவ்விளக்கத்தின்வழி பெண்ணின் நிறை ஆண்களின் செயல்பாட்டினைப் பொறுத்தே அமைகிறது என்ற விளக்கமும் உணர்த்தப்படுகிறது. இதேபோன்று,

                கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்

              கொற்கத்தி னூற்றாந் துணை                –           (குறள். 414)

    என்னும் குறளுக்கு, “ஒருவன் கல்வி பெறவில்லை யென்றாலுங்கூட அவன் நூலறிவும் நுண்ணறிவும் உடையார்தம் வாய்ச்சொற்களைக் கேட்பானாகுக. ஏனென்றால் அந்தக் கேள்வி அவனுக்குச் சிந்தனையில் தளர்ச்சி நேருகின்ற பொழுதெல்லாம் ஊன்றுகோல் போல நின்று துணைபுரியும். நடக்கின்ற ஒருவனுக்குச் சோர்வின் காரணமாகக் கால் தடுமாறும் பொழுது கையில் இருக்கின்ற ஊன்றுகோல் உதவுவது போல, சிந்தனையோட்டத்தில் தளர்ச்சி ஏற்பட்டு ஒருவனுக்குத் தடுமாற்றம் ஏற்படும் பொழுது அவன் பெற்ற கேள்வி அறிவு அவனுக்கு உறுதுணையாக நிற்கும்” என்று விளக்கம் தருகின்றார்.

    இவ்வாறு அமையும் விளக்கங்கள், காலத்தின் பொருத்தப்பாட்டையும் பொதுமைச் சிந்தனையையும் வலியுறுத்தும் விதத்தில் அமைந்துள்ளன.

    காலத்தின் தேவைக்கேற்ற விளக்கம் தருதல்

    திருக்குறள், எல்லாக் காலத்திற்கும் ஏற்றதும் பொருத்தமானதுமாகும். அவ்வகையில் அதன் விளக்கமும் காலத்தின் தேவைக்கேற்ற விதத்தில் அமைதல் வேண்டும். இத்தகு நிலையில் பொற்கோ உரைவிளக்கமும் அமைந்துள்ளது. சான்றாக.

              ஒல்லும் வகையா னறவினை யோவாதே

              செல்லும்வா யெல்லாஞ் செயல்   –           (குறள். 33)

    என்னும் குறளுக்கு, “ஒருவன் தன்னால் முடிந்த வகையில் அறச் செயல்களை இடைவிடாமல் அவற்றுக்குத் தேவை ஏற்பட்ட பொழுதெல்லாம் செய்தல் வேண்டும். நல்வினை ஒன்று நடைபெற வேண்டுமானால் அந்தத் தேவையினைக் கண்டும் காணாததுபோல் இருந்து விடாமலும், அந்தச் சூழலில் இருந்து நழுவித் தப்பித்துக் கொள்ளாமலும் முடிந்த வகையில் அந்த நல்வினை நிகழப் பாடுபட வேண்டும். ஒரு நல்வினையை நிறைவேற்ற ஒருவன் மனத்தால் பாடுபடலாம்; சொல்லால் உதவலாம்; செயலால் உதவலாம்; இயன்ற வகையில் தன்னாலான பொருளை வழங்கியும் உதவலாம்; முடிந்தால் எல்லா வழியிலும் ஒருசேரவும் உதவலாம்; அப்படியெல்லாம் வினையாற்றி அறம் வளர்க்கப்பட்டால் தான் சமுதாயம் மகிழ்ச்சியாக வாழ முடியும். இது இல்லறத்தார்க்கும் பொருந்தும்; துறவறத்தார்க்கும் பொருந்தும்” என்று விளக்கம் தருகின்றார்.

    இவ்வாறு அமையும் உரைவிளக்கப் பகுதிகள் இக்காலச் சூழலுக்குப் பெரிதும் பொருந்த வருவதனை உணர முடிகிறது.

    இலக்கிய நயம் காணல்

              அலரெழ வாருயிர் நிற்கு மதனைப்

              பலரறியார் பாக்கியத் தால்                   –           (குறள். 1141)

    என்னும் குறள் விளக்கத்தில், “அலரால் பாதிக்கப்பட்ட தலைவன் கூறியது. களவு வெளிப்பட்டு அலராகும்போது ஏற்படுகின்ற மனநலிவு மற்ற துன்பங்களிலிருந்து வேறுபட்டது. இந்த மனநலிவு மனநலிவுக்கு உட்பட்டவர்க்கு மட்டுமே தெரியும். மற்றவர்க்குத் தெரியாது. இந்த நலிவு காதலர் உயிரைப் போக்காமல் இப்போது காத்து நிறுத்தியிருக்கிறது. காதலர் தம் நட்பு இந்த அலர் மூலம் உயிர்ப்போடு நெஞ்சில் எழுந்து நிற்றலால் உயிர் நீங்காது நிற்கிறது. இந்த உண்மை, காதலர்க்கு மட்டுமே தெரியும். மற்றவர்க்குத் தெரியாது. வெளியுலகிற்குத் தெரியாத நுட்பமான செய்திகள் இங்கே நயமாகச் சுட்டப்படுகின்றன”149 என்று திருக்குறளின் நுட்பத்தினை எடுத்துரைக்கின்றார்.

                காமமு நாணு முயிர்காவா தூங்குமென்

               னோனா வுடம்பி னகத்து              –           (குறள். 1163)

    என்னும் குறளின் சிறப்பினை, “உயிராகிய காத்தண்டில் ஒரு பக்கம் காமம் தொங்குகிறது. இந்தக் காத்தண்டு அவளுடைய மெல்லிய உடலுக்குத் துன்பம் தருவதாக இருக்கிறது. காமம், நாணம் ஆகிய இரண்டில் எதையும் விடமுடியாமல் அவள் தவிக்கிறாள். மிக நுட்பமாக உணர வேண்டிய இந்தச் செய்தியை இந்தக் குறள் ஒரு படம்போல ஆக்கிக் காட்சிப்படுத்திக் காட்டுகிறது” என்று நயம்பட எடுத்துரைக்கின்றார்.

              மாலையோ வல்லை மணந்தா ருயிருண்ணும்

              வேலைநீ வாழி பொழுது.            –           (குறள். 1221)

    என்னும் குறளின் பொருட்சிறப்பினை, “வேலை என்ற சொல் 1. வேலினை உடையாய், 2. வேலாக விளங்குகின்றாய் என இரண்டு பொருளையும் தரும். வேலை என்பதற்குக் கடல் என்றும் பொருள் கொள்ளலாம். பிரிந்திருக்கின்ற மகளிரின் உயிரை உண்ணுகின்ற கடலாக விளங்குகிறாய் என்றும் பொருள் கொள்ள இடமுண்டு. வேலை என்பதற்குக் காலம், சமயம் என்றும் பொருள் உண்டு. மாலைப்பொழுதே நீ மாலை நேரமல்ல; பிரிந்திருக்கின்ற மகளிரின் உயிரை உண்ணுகின்ற பொழுது என்றும் பொருள் கொள்ள இடமுண்டு.

    இத்துணைப் பொருள்களும் சந்திக்கின்ற முறையில் ஆசிரியர் இந்தத் தொடரை அமைத்திருப்பது இலக்கிய நோக்கில் உணர்ந்து உணர்ந்து பாராட்டத்தக்கது” என்றும்,

                ஒருநாள் ளெழுநாள்போற் செல்லுஞ்சேட் சென்றார்

               வருநாள்வைத் தேங்கு பவர்க்கு   –        (குறள். 1269)

    என்னும் குறள் விளக்கத்தில், “புற உலகுக்கும் அக உலகுக்கும் உள்ள உறவு நிலையை இந்தக் குறள் மிக அழகாக விளக்குகிறது. மிக இன்றியமையாத உளவியல் உண்மை ஒன்று போகிற போக்கில் எளிதாக எடுத்துப் பேசப்படுகிறது” என்றும்,

                உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங்

               கள்ளுக்கில் காமத்திற் குண்டு              –        (குறள். 1281)

    என்னும் குறள்விளக்கத்தில், “எனக்கும் என் தலைவனுக்கும் உள்ள உறவை இத்தகையது என்று சொல்லாமல் காம உணர்ச்சி பற்றிய ஒரு பொது உண்மையினைத் தலைவி தோழிக்கு இங்கே எடுத்துக் கூறியிருப்பது தமிழ் அகப்பொருள் நுட்பத்தின் ஒரு தனிச்சிறப்பு. உளவியல் நோக்கில் இந்தச் செய்தி மிக இன்றியமையாதது” என்றும்,

                ஊடற்கட் சென்றேன்மற் றோழி யதுமறந்து

              கூடற்கட் சென்றதென் னெஞ்சு.   –        (குறள். 1284)

    என்னும் குறள்விளக்கத்தில், “தனது நெஞ்சு தன்னைவிடத் தன் காதலருக்கு நெருக்கமாக இருக்கிறது என்பதைத் தலைவி உணர்த்தும் பாங்கு உளவியல் நுட்பமும் இலக்கிய நயமும் உடையதாகத் திகழ்கிறது” என்றும்,

                ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பம்

              கூடி முயங்கப் பெறின்               –        (குறள். 1330)

    என்னும் குறள்விளக்கத்தில், “ஊடல் என்பது மேலோட்டமாகப் பார்த்தால் எரிச்சல் உண்டாக்குகிற ஒன்றாக விலக்கத்தக்க ஒன்றாக சிறுபிள்ளைத்தனம் கொண்டதாக, பகட்டுத்தனம் உடையதாகத் தோன்றுகிறது. ஆனால், உளவியல் நோக்கில் தலைமக்கள் பார்வையில் நன்கு ஆராய்ந்து பார்த்தால் ஊடல் என்பது தனிச் சிறப்புக்கு உரிய ஒரு மன நிகழ்ச்சி என்பது விளங்குகின்றது. இது பண்பட்ட மனித சமுதாயத்துக்கு மட்டுமே உரியது. இதனால் தான் ஊடலை மெச்சிப் பேசுவதற்காகவே ஒரு அதிகாரத்தைத் திருவள்ளுவப் பெருந்தகை அமைத்திருக்கிறார்” என்று திருவள்ளுவரைப் புகழ்ந்துரைக்கின்றார்.

    இலக்கண நோக்கும் பொருளுணர்த்து முறையும்

    பொற்கோ உரைக்கொள்கையில் இலக்கண நோக்கும் மொழியியல் அணுகுமுறையும் சிறப்பிடம் பெற்றுள்ளன. இலக்கியத்தில் இடம்பெறும் சொற்களை இலக்கண நோக்கிலும் மொழியியல் நோக்கிலும் மனங்கொண்டு அவற்றிற்குரிய இலக்கணங்களைச் சுட்டிச் செல்வதும், அவ்விலக்கண அடிப்படையில் விளக்கம் தருவதையும் ஒரு மரபாகவே கொண்டுள்ளார்.

                 இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்

                குலனுடையான் கண்ணே உள     –           (குறள். 223)

    என்னும் குறள்விளக்கத்தில் இரு உரைகளைத் தருகின்றார். இவ்வாறு அமைவதற்கான காரணங்களை உரையின் இறுதியில், “உள என்ற பன்மை வினைமுற்று உரையாமை ஈதல் ஆகிய இரண்டையும் இருவேறு இயல்புகளாகுமாறு வற்புறுத்துகிறது. உள என்ற இந்த முற்று பன்மையில் இல்லாமல் ஒருமையில் இருந்திருந்தால் உரையாமை ஈதல் என்பதை ஒருதொடராக்கி எவ்வம் உரையாமல் ஈதல் என்று பொருள்கொள்ள இயலும். இங்கே உள என்ற பன்மை வினைமுற்றின் மூலம் இப்படிப்பட்ட உரைகளை நாம் உணரவேண்டி உள்ளது”  என்று குறிப்பிடுவதன்வழி தெளிவாகிறது.

    குறளின் தொடரமைப்பு விளங்கவில்லை எனல்

    சில குறள்களின் தொடரமைப்பு விளங்கவில்லை என்றும் அதற்கு வேறு விளக்கங்கள் கிடைத்தால் ஏற்கலாம் என்றும் குறிப்பிடுகிறார்.

                பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா

              ரிறைவ னடிசேரா தார்               –           (குறள். 10)

    என்னும் குறளின் தொடரமைப்பு குறித்து, “இந்தக் குறளின் தொடரமைப்பு சற்றே சிக்கல் வாய்ந்ததாக இருக்கிறது. நீந்துவர் என்பதற்கு உரிய எழுவாயை நாம் வலிந்து வருவிக்க வேண்டி உள்ளது” என்று கூறுகின்றார். இதே போன்று சில குறள்களின் (குறள். 25, 235) தொடரமைப்பும் சரியாகப் பொருள் விளங்கும் நிலையில் இல்லை என்று குறிப்பிடுகிறார்.

    பொருள்விளக்க இயலா நிலை கூறல்

    இயல்புடைய மூவர் (41) என்னும் சொல்லின் பொருளுக்கு இதுவரை வந்துள்ள விளக்கங்கள் தனக்கு நிறைவு தருவதாக இல்லை என்று கூறி, “இயல்புடைய மூவர் என்பதற்கு வேறு நல்ல விளக்கம் கிடைத்தால் ஏற்றுக்கொள்ளலாம்” என்று குறிப்பினைத் தந்துள்ளதனையும் காண முடிகிறது.

                அறத்தா றிதுவென வேண்டா சிவிகை

              பொறுத்தானோ டூர்ந்தா னிடை.  –           (குறள். 37)

    என்னும் குறள்விளக்கத்தில் “இந்தக் குறளுக்கு மேலும் விளக்கம் தேவைப்படுகிறது” என்று குறிப்பிடுகின்றார்.

    “சில சொல்லாட்சிகள், இலக்கண அமைப்பு முறைகள் திருவள்ளுவரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் திருவள்ளுவரின் சமகால நூல்களை வைத்துக் கொண்டு ஒப்பிட்டுப் பார்த்தால் மட்டுமே இது மாதிரியான குறள்களுக்கு விளக்கம் தர முடியும்” என்றும் கூறுவது உரைநெறிக்கு மொழியியல் அறிவு மிக இன்றியமையாதது என்பதனைச் சுட்டுவதாக அமைந்துள்ளது.

    இவ்வாறு குறித்துள்ள நிலைமையினைக் குறித்து, “வள்ளுவர் ஒரு குறிப்பிட்ட குறளில் என்ன சொன்னார் என்பதை எப்படித் தெரிந்துகொள்ளுவது? தெரிந்து கொள்ள முடியாமல் போனால் விளங்கவில்லை என்று சொன்னால் பிழை இல்லை. ஊகமாகக் கருத்துகளைச் சொல்லி அவற்றை நம்ப வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. சொல் விளையாட்டுகளில் ஈடுபட்டு நம்முடைய கருத்தைத் திருக்குறளில் திணிக்கக் கூடாது” (ப. 233 ) என்று விளக்கம் தருகின்றார்.

    இவ்வாறு திருக்குறள் உரைவிளக்கத்தில் பொற்கோ வகுத்துள்ள உரைக்கொள்கை நெறி தெளிவாகிறது.

    முடிவுரை

    பண்டைய உரை மரபினைப் பல இடங்களில் பின்பற்றியும், பல்வேறு புதுமை நெறிகளையும் கொண்டதாய்ப் பொற்கோவின் திருக்குறள் உரைவிளக்கம் அமைந்துள்ளது. ஓர் இலக்கியத்தில் அமையும் சொல், தொடர், சூழல், காலம், இடம் நோக்கியனவாகவே அதன் உரைவிளக்கம் அமைய வேண்டும் என்பதும்

    முடிவுகள் (Results of Findings)

    திருக்குறள் கருத்துகள் இன்றைக்கும் நமக்குத் தேவைப்படுகின்றன. ஆதலால், திருக்குறளுக்குப் புதுமை நோக்கிலும், காலத்தின் தேவைக்கேற்ற விதத்திலும் பொருள் கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. திருக்குறளில் இடம்பெற்றுள்ள சொல்வளமும், கருத்தியல் நிறைவும் இதனை நிரப்பும் நிலையினை உரையாசிரியர்கள் வெளிப்படுத்தி வருவது அதன் சிறப்புக்கு அணி செய்வதாக அமைந்துள்ளது. பண்டைக் கால மரபார்ந்த உரைகளுக்கும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் உரைக்கும் பலவகையான வேறுபாடுகள் உள்ளன. எச்சொல்லையும் அதன் சொல்லுணர்த்த நோக்கம், பொருள் விளக்க நிலை, இடப்பொருள், காலப்பொருள் நிலையில் பொருள்கொள்ள வேண்டிய நிலைப்பாடு உள்ளதனை இவர்கள் உரைகள் தெளிவாக்குகின்றன. திருக்குறள் உரைவிளக்கம் போன்றே ஏனைய செவ்வியல் இலக்கியங்களையும் நாம் மறுவாசிப்புக்கும், உரையாக்கத்திற்கும் உட்படுத்தும்போது பல புதுமையான விளக்கங்களைப் பெறலாம் என்பது இதன்வழி உணரவும் உணர்த்தவும் படுகிறது.

    இறுதி முடிவுகள் (Conclusions) :

    பண்டைய இலக்கியங்களை அதன் உரைவழியாகவே அணுகும் நிலை தற்காலத்தில் உள்ளது. மூல வடிவம் உணர்த்தும் பொருள்நிலையை மனங்கொள்வதற்கு மாற்றாக உரையாசிரியர் தரும் உரை முடிபுகளையே ஏற்கும் வழக்காறும் நாளும் பெருகி வருகிறது. அவ்வாறு உரையின் வழியாக மூலத்தை அணுகுவதால் மூல நூலாசிரியரின் உண்மைப் பொருள் விளக்கம் முற்றுப்பெறாத நிலை உள்ளதனைத் தற்கால உரை மற்றும் பதிப்புநிலை குறித்த ஆய்வுகள் வெளிக்கொணர்ந்து உள்ளன. அவ்வாறான ஒரு உரைப்புதுமை அணுகுமுறையில் திருக்குறளையும் ஏனைய இலக்கியங்களையும் அணுகுவதற்கான வழித்தடத்தை இவ்வாறான உரைவிளக்கங்கள் உருவாக்கித் தந்துள்ளன என்பது இதன் எடுப்பும் முடிப்புமாக அமைந்துள்ளது.

    துணைநின்ற நூல் (Reference Books)

    1. பொற்கோ, திருக்குறள் உரைவிளக்கம், (4 தொகுதிகள்), பூம்பொழில் வெளியீடு, சென்னை, திருத்தப்பட்ட பதிப்பு 2010

    =======================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தமிழில் தோன்றிய நூல்களிலேயே மிகுதியான உரையைக் கொண்ட நூல், திருக்குறள். திருக்குறளின் கருத்துகள், எக்காலத்திற்கும் ஏற்றதாய் விளங்குகின்றன. அதுபோல் எக்காலத்தும் உரையியற்ற உகந்த நூலாகவும் திருக்குறள் உள்ளது. பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணிபுரிந்து பொற்கோ அவர்கள், மாணவர்களுக்குப் பாடம் சொன்ன நிலையிலும், தாம் ஆழ்ந்து கற்ற நிலையிலும், ஆய்வு செய்த நிலையிலும், தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு திருக்குறளுக்கு உரையினை வரைந்துள்ளார். பொற்கோ திருக்குறளுக்கு உரை எழுதியதன் நோக்கம், திருக்குறளை விளக்கப் பொற்கோ கைகொண்ட உரைநெறிகள் ஆகியவற்றை முறையாக விளக்குகின்றது கட்டுரை.

    ஒரே குறளுக்கு இரு விளக்கம், மூன்று விளக்கம் அளித்தல், புதிய விளக்கம் அளித்தல், இன்னும் விளங்க வேண்டிய இடங்கள் உள, காலத்தின் தேவைக்கேற்ப விளக்கமளித்தல், இலக்கண, மொழியியல் அறிவோடு விளக்குதல், பொருள் விளக்க இயலாநிலை என்னும் பல நிலைகளில் பொற்கோவின் திருக்குறள் உரைவிளக்கம் அமைகின்ற நிலையைக் கட்டுரையாளர் விரிவாக விளக்கிச் செல்கின்றார். பன்னிரண்டு திருக்குறளைக் கொண்டு பொற்கோவின் உரைக்கொள்கையையும் உரைவிளக்கப் பொருத்தப்பாட்டினையும் கட்டுரையாளர் விளக்கியுள்ளார். கட்டுரையாளருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    =======================================================

    Share
  • EFFECTIVE STUDY ON TRANSFORMATION OF MODERN LIFE  IN TO BLISSFUL LIFE THROUGH YOGA

    EFFECTIVE STUDY ON TRANSFORMATION OF MODERN LIFE IN TO BLISSFUL LIFE THROUGH YOGA

    -J.S.SUBHASHINI and Dr.V.RAMADAS

     Ph.D. Research Scholar, Associate Professor

    Department of Yoga for Human Excellence, WCSC- Vision SKY Research Center, Temple of Consciousness, Aliyar, Pollachi- 642101, Tamil Nadu

     (Email ID: subhajanani2011@gmail.com, rammarine@yahoo.in)

    *****

    ABSTRACT

    “Modern life is moving faster than the speed of thoughts, or thoughtfulness” – Rebecca Solnit

                The given maxim is absolutely right because we live in a super-fast, crowded and busy period. We have been performing multiple tasks throughout our whole day for earning more money. However, we overlook that worthy well-being is much more important for our healthy life as air and water for the physique. In earlier days, life was not so hectic. It was quite humble and free. Human beings are healthy as they had to accomplish all the daily routine activities on their own. But now, in this technological world survival has become easy and comfortable but frantic because of the competitions. Nowadays, life has become costly, hard and unhealthy as everything like air, water, environment, food, etc., has become contaminated, infected and polluted. We should never forget that our healthiness is the only prosperity of our life. It is essential to earn money for fulfilling some basic needs. But it is also required to live a healthy and peaceful life which needs good well-being. Good health needs proper rest with sleep, cleanliness, healthy environment, fresh air and water, individual hygiene and daily physical activities. Maintaining good health is for better than shunting between hospitals and home. In this modern life, retaining good health is a good custom that must be practiced from childhood. Yoga is the best lifestyle modification, which aims to attain the unity of mind, body, and spirit through asanas (exercise), pranayama (breathing), and meditation. The health of people is more important for the betterment of the future world. Hence this article deals with the transformation of one’s vague modern life into blissful life through yoga.

    Key Words: Challenges of Modern Life -Yoga Practice – Good Health-Transformation – Blissful life. 

    Introduction

    Yoga is much more than contorting a human body into different poses. It’s a technique of life. If our mind, body, and soul aren’t where we want to be, yoga can help us to improve flexibility. It lows our stress and increases our confidence, contributing to a healthier lifestyle. It is the practice that leads us to combat stress, improve physical fitness and help manage chronic disorders like pain, anxiety, and insomnia.

    Most of the people know that good health is only maintained by physical fitness, but they fail to comprehend that good mental health is also equally important. Health is not simply an absence of disease; it extends beyond the physiological aptness to psychological calmness, emotional constancy, and cheerful expressions. Moreover, body, mind, and spirit are like the steering engine and gear of the car. The malfunctioning of even one can create an imbalance in our life and lead to ill health. Yoga is the simple technique of generating coherence among these three components. Yoga is an old-style discipline with roots in the Vedic insight that eradicates filths from the levels of mind. One can get spiritual elevation through the continuous practice of yoga encompassing of meditation, pranayama, diet, and asana. It also leads an individual on the path of healthy living with greater consciousness.

    Modern Life

                Modern technology is machinery oriented. It creates life easier and saves time comparing to the old fashion way. We travel in more comfort with a number of welfares. It includes easing people’s lives, saving people from the fatal endemic diseases by the new era of medicine and vaccines. On the other hand, different modern lifestyle patterns have negative effects on health physically, psychologically, and socially. One of these modern ways of living in the high consumption of fast foods with lack of physical activity. Modern lifestyle increases the risk of obesity and leading to diabetes, heart diseases cancers and so on. Another fact is the pollution caused by machines and transport causing respiratory diseases. These are the sources for creating more stress and depression. Today our health condition, fitness, and ailments are seriously influenced by our modern lifestyle. This covers many aspects of human behaviors like patterns of eating, drinking alcohol, smoking, drug intake, human reproduction, sexual behaviours, etc. The public relationships and communications are hindered by modern lifestyle. Social isolation occurs due to spending long time on computer and internet. These conflicts should be removed from human life to lead a happy life.

    Health and Wellness

                The two concepts “Health” and “Wellness” paves more to lead a better lifestyle with good excellence. Optimum “Health” includes high level mental, social, emotional, spiritual, and physical fitness within limits of one’s heredity and individual disabilities. “Wellness” is the combination of all parts of health and fitness in the form of mental, emotional, spiritual and physical that magnifies one’s potential to live and to work successfully. This makes a significant contribution to society. Regular physical activity leads to a healthy lifestyle which can ensure an improved feeling of wellness. Only healthy people make a healthy society and country.

    Healing Through Yoga

                 Human beings are the creation with three major components, body, mind and soul. These three need health, knowledge and inner peace. Healthiness is essential for physical, knowledge for psychological needs and inner peace for spiritual need. When all the three are sufficient, there is harmony.  This harmony is reached only by Yoga. Yoga is the most ancient method of art. It is practiced for uniting of body, mind, and soul. Yoga stimulates one’s mind, emotion, soul, and body to feel happy and relaxed. It gives energy, strength and perfect health too. Regular practice of yoga with Pranayama is very much beneficial in achieving a healthy body and peace of mind. Self-realization is the greatest achievement of yoga. It is attained through meditation. An individual realizes about himself and his surroundings through systematic yoga practice. It helps in widening self-confidence, awareness, consciousness, peace of mind, better health and overall well-being. In a nutshell, yoga works on every individual life to achieve a better, healthier and perfect way of life. 

    “Yoga means union – the union of body with consciousness and consciousness with the soul.
    Yoga cultivates the ways of maintaining a balanced attitude
    in day-to-day life and endows skill in the performance of one’s actions.”
    -B.K.S. Iyengar

    Yoga is a light, which once lit, will never dim.
    The better your practice, the brighter the flame
    .
                                                                                                                -B.K.S. Iyengar

    Inhale and God approaches you.
    Hold the inhalation, and God remains with you.
    Exhale and you approach God.
    Hold the exhalation, and surrender to God.
                                                                              
    -Krishnamacharya

    The above quotes given by eminent yoga experts reveal the benefits of yoga and pranayama.

    Merits of Yoga for Blissful Life

    • Expands Flexibility
    • Builds muscle forte
    • Perfects our posture
    • Protects and strengthens our bristle
    • Enhances our bone health
    • Increases our blood flow
    • Regulates all the glands
    • Helps us to focus well
    • Lowers blood sugar and blood pressure
    • Maintains our nervous system properly
    • Releases tension in our limbs
    • Helps us to have a deep sleep
    • Boosts the human immune system functionality
    • Gives peace of mind and happiness
    • Increase your self-esteem
    • Helps us to serve others

    Conclusion

                  To sum up, modern lifestyle affects our health physically, psychologically, and socially. The essence of yoga is to make our life as efficient and enjoyable as possible in all aspects. It unlocks life’s wonder and unleashes hidden energies. The miracle transformation leads towards a blissful life if the day starts with yoga. Thus, spiritual development of an individual can be attained this Vedic practice “Yoga”.

    References

    1. K.S. Iyengar, Light on Yoga, George Allen, and Unwin, 1966
    2. Gary Kraftsow, Yoga for Transformation: Ancient Teachings and Practices for Healing the Body, Mind, and Heart, 2002
    1. https://www.yogajournal.com/meditation/make-meditation-way-of-life
    2. https://www.yogajournal.com/lifestyle/count-yoga-38-ways-yoga-keeps-fit

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 26

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 26 – புலால் மறுத்தல்

     

    குறள் 251:

    தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
    எங்ஙனம் ஆளும் அருள்

    தன் ஒடம்ப வளக்குததுக்காக மத்த உசிரு குடியிருக்க ஒடம்ப தின்னுதவன் மனசுக்குள்ள இரக்கம் எப்டி இருக்கும்?

    குறள் 252:

     பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
    ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு

    பொருளுடையவரா இருக்குத சிறப்பு அத வச்சி காப்பாத்தாதவங்களுக்கு இல்ல. அருள் உடையவரா இருக்குத சிறப்பு மாமிசம் தின்னுதவங்களுக்கு இல்ல.

    குறள் 253:

    படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்
    உடல்சுவை யுண்டார் மனம்

    சண்ட போட ஏதுவா கொல செய்யுத ஆயுதத்த  வச்சிருக்கவனுக்கும், மத்த உசிரு குடியிருக்க ஒடம்ப ருசிச்சு சாப்பிடுதவனுக்கும் மனசுல இரக்க கொணம் இருக்காது.

    குறள் 254:

    அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
    பொருளல்ல தவ்வூன் தினல்

    ஒரு உசிர கொல்லாம இருக்குதது அருள்.  கொல்லுதது அருளில்லாத தன்ம. அதனால மாமிசம் சாப்பிடுதது அறம் ஆவாது. .

    குறள் 255:

    உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண
    அண்ணாத்தல் செய்யா தளறு

    மாமிசம் சாப்புடாதவங்களாலதான் பல உசிருங்க சாவம வாழுது.  சாப்பிடுதவன நரகம் முழுங்கிப் போடும். வெளிய விடாது.

    குறள் 256:

    தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்
    விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்

    மாமிசம் சாப்பிடுததுக்காக உசிர கொல்லுதவங்க ஒலகத்துல இல்லன்னா அத விக்குதவங்களும் இல்லாம போயிடுவாங்க.

    குறள் 257:

    உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
    புண்ண துணர்வார்ப் பெறின்

    மாமிசம் ங்குதது இன்னொரு உசிரோட உடற்புண் னு புரிஞ்சவங்க அத சாப்புடாம இருக்கணும். .

    குறள் 258:

    செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்
    உயிரின் தலைப்பிரிந்த ஊன்

    மாசுமருவில்லாத மனசு இருக்குதவங்க உசிரு போன ஒடம்பான மாமிசத்த சாப்பிட மாட்டாங்க.

    குறள் 259:

    அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத் துண்ணாமை நன்று

    நெய்யயும் மத்த பொருளயும் வச்சி ஆயிரம் யாகம் செய்யுதத விட சாப்பிடுததுக்காக ஒரு உசிர கொல்லாம இருக்கது நல்லது.

    குறள் 260:

    கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா உயிருந் தொழும்

    மாமிசம் சாப்பிடாம அதுக்காக மத்த உசிர கொல்லாம இருக்கவன ஒலகம் கையெடுத்து கும்பிடும்.

    Share
  • சைக்கிளும் வலியும்

    -சேஷாத்ரி பாஸ்கர்

    எனக்கு சைக்கிள் கற்று கொடுத்தவன் என்னை விட வயது ரெண்டு சின்னவன். அவன் எங்கு கற்று கொண்டான் என தெரியாது . மந்தவெளி பக்கம் ஒரு மைதானம் . சுமார் ஒரு வாரம் இருக்கும் . அவன் என்ன சொன்னளாலும் கேட்பேன். வாடகை நான் தான் தர வேண்டும். ஒரு மணி நேரத்தில் பெரும்பாலும் அவன்தான் ஒட்டுவான். கேள்வி கேட்க முடியாது. என்னை மதித்து யார் எனக்கு கற்று கொடுப்பார்? வாடகை வண்டியே தர மாட்டான். சுதர்சன் அவன் பெயர். முதுகில் குத்தி கொண்டே வருவான்.  வலி ஒரு பக்கம். இதில் அவஸ்தையில் எங்கே எதை கற்று கொள்வது. மற்றவர்க்கு ஒரு வாரம் என்றால் எனக்கு ஒரு மாதம். மர மண்டை அப்பவே! ‘நேர பார்’ என்பான்.  பெடல் செய்ய மறந்து விடுவேன். பெடல் செய்யும் போது பிரேக்கை பிடித்துக் கொள்வேன். வண்டி நகராத . அவனுக்கு குத்த வசதி. நல்ல அந்த மைதானம் அளவுக்கு முதுகும் இருக்கும். அசட்டுத்தனம். காந்தியே வந்தாலும் ரெண்டு போடுவார். நான் நின்ற இடத்தில சர்ரென வந்து ப்ரேக் போடுவான். அவ்வளவு எக்ஸ்பெர்டாம். நான் மயங்கி போய் நிற்பேன். அப்படி நடிக்கவாவது செய்யனும். என் பக்கம் வண்டி வந்தது . மணி என்ன எனக் கேட்டேன். நாலு ஆக பத்து நிமிஷம் என்றான். இன்னும் பத்து நிமிஷம்… .அதற்குள் நான் கற்று கொண்டு, முதுகில் வாங்கி கொண்டு. பேசாம குரங்கு பெடல் போதுமா? அடுத்த சுற்று ஆரம்பம். இந்த முறை பின்னால் வந்தவன் மறைந்து போனான். அது தெரியாத வரை எதோ ஓட்டினேன். அவன் இல்லை என்றவுடன். உடல் தளர்ந்தது. ஒரு நிமிஷத்தில் கைக்குள் வேர்வை. போ போ என்றான். குரல் கேட்டது. திரும்ப தைர்யம் இல்லை. வண்டியை போட்டுக் கொண்டு விழுந்தேன். ஹான்ட்ல் பார் வளைந்தது. அவனை காணோம். வண்டியைத் தள்ளி கொண்டு கடைக்குச் சென்றேன். இனி வண்டி தர மாட்டேன் என்றார். முட்டி வலியில் கை சதை பிய்ந்ததில் எதுவும் ஏறவில்லை. பைசா பாக்கிக்கு வீட்டுக்கு ஆள் அனுப்புவேன் என்றார். நான் சட்டை செய்யவில்லை. வீட்டுக்கு வந்து சைபால் தேடினேன். அதை திறப்பதற்குள் வலி ஆறிவிடும் போல் அவ்வளவு கெட்டி பாக்கிங். அப்பா குரல் கேட்டது. அய்யா ..வாசல்ல சைக்கிளில் காய் பை இருக்கு ..எடுத்துண்டு வா. சைக்கிளைப் பார்த்தேன். வலி மறைந்தது!

    Share