Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ’சகாதேவன் கட்டினான்,ய சோதை பிணைத்தனள்,
    சுகதேவர் சொல்லுற்ற(பாகவத) சேயோ, -அகமில்லா
    அன்பால் அடைபடும் ஆனந்தக் கண்ணன்,ஆ
    வின்பால் யசகாதே வர்’’….கிரேசி மோகன்….

    Share
  • எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராய விருதுகளுக்கு விண்ணப்பிக்கக் கால நீட்டிப்பு

     

           

    எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, பாரதியார் கவிதை விருது, அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது, ஜி.யு. போப் மொழிபெயர்ப்பு விருது, பெ.நா. அப்புசாமி அறிவியல் தமிழ் விருது / ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் தொழில்நுட்ப விருது, ஆனந்த குமாரசாமி கவின்கலை விருது / முத்துத்தாண்டவர் தமிழிசை விருது, பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது, சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது, தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது, அருணாசலக் கவிராயர் விருது மற்றும் பாரிவேந்தர் பைந்தமிழ் விருது ஆகியவை வழங்கப்படுகின்றன.

            இவ் விருதுகளுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் மே 31 என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. பலரது வேண்டுகோளுக்கிணங்க சூன் 15 வரை விண்ணப்பிப்பதற்கான காலம் நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, தகுதியுடையவர்கள் செயலர், தமிழ்ப்பேராயம், எண் 518, ஐந்தாம் தளம், பல்கலைக்கழக நிருவாகக் கட்டடம், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கழக நிறுவனம், காட்டாங்குளத்தூர் – 603 203 என்ற முகவரிக்குத் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 044 2741 7379 – ல் தொடர்புகொள்ளவும்.

    Share
  • உலக சூற்று சூழல் தினம்

     

    நம் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வை

    தேவை இல்லாத பிளாஸ்டிக் குப்பைகளை பிரித்து வை

    காய்கறி கழிவு களையும் பிரித்து தனியாக வை.

    வருடம் ஒரு முறை மனித கழிவை வெளியேற்ற வை

    இன்று தண்ணீரும், காற்றும் மாசு படுகின்றதே

    இதனால் மக்களின் உடல் நலம் பாதிக்கின்றதே

    கழிவு நீர் கலப்பதால் கடல்வாழ் இனங்கள் இறக்கின்றதே

    காற்று மாசு பாட்டால் நாட்டின் தலைககரமே தவிக்கின்றதே !

    சுற்றுப்புறம் தூய்மையாய் இருப்பதற்கு உதவுங்கள்

    தனிமனிதா, தூய்மையை அன்றாடம் கடை பிடியுங்கள்

    வீட்டின் சுத்தமே , நாட்டின் சுத்தம் என எண்ணுங்கள்

    குழந்தைகள், முதியோர்கள் நலனை கருத்தில்கொள்ளுங்கள் !

    அழகாக வீடு கட்டினால் மட்டும் போதாது

    அழகாக தோட்டம் அமைத்தால் மட்டும் போதாது

    வீட்டைச் சுற்றி குப்பைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்

    மக்களுக்கு மாசு கட்டுப்பாடின் மாண்பினை எடுத்துரையுங்கள் !

    வானத்தைப்போல் பரந்த மனமும் உயர்ந்த லட்சியம் கொள்

    கடல் அலைபோல் சுறுசுறுப்பினை கற்றுக்கொள் ,

    கண்ணுக்கு தெரியாத உயிரூட்டும் காற்றுபோல் உதவ கற்றுக்கொள்,

    உலகின் சுற்றுசுழலையும் பாதுகாக்க எண்ணம்கொள் !

    ரா.பார்த்தசாரதி

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180606 Yashoda -lr A4

    மாதவர், கேசவர், மாலவர், மோகினி
    மாதவர்(மாது அவர்) சபரீசன் மாதாவாம்: -ஆதலால்
    அன்னையென்(று) எண்ணி அணுகுவோரைக் காத்தருள்வான்
    தன்னையே கன்னையன் தந்து….கிரேசி மோகன்….!

    Share
  • அகநானூற்றில் இல்லற விழுமியங்கள்

    இரா. அமுதா

     

    முன்னுரை

     

              உலகில் இனத்தாலும் மொழியாலும் தனித்தன்மை உடையவரே தமிழர்; ஆவார். சங்ககாலம் தமிழரின் வரலாற்றில் தலைசிறந்த காலம். சங்ககால மக்களின் மாசற்ற வாழ்வினை வெளிப்படுத்தும் காலம். இக்காலத்தே தோன்றிய இலக்கியங்கள் கருத்துவளமும் கற்பனைச் சிறப்பும் பொருந்திய அழகான பாடல்களைப் பெற்று மிளர்வன. ஈராயிரம் ஆண்டுகட்க்கு முன்னே தமிழர் வாழ்ந்த வாழ்க்கையை விளக்குவன. தமிழ் மக்கள் பலமுறை பயின்று படித்துப் பயன்பெறும் வற்றாத செல்வங்கள் அவை. புறத்தே தோன்றும் காட்சிகளையும் அகத்தே தோன்றும் கருத்துகளையும் புனைத்து நிற்கும் அழகு ஓவியங்கள் அவை. சொல்வளமும் இனிமையான ஓசையும் கொண்டு மனித மனத்தை ஆராய்ந்து கூறுவதோடு பல்வேறு இல்லற, தனிமனித,சமுதாய விழுமியங்களை வெளிப்படுத்துவதில் சங்க நூல்கள் சிறப்புமிக்கதாயுள்ளன.

              சங்க இலக்கியங்கள் என்று கூறப்படும் பத்துப்பாட்டு;ம், எட்டுத் தொகையும் தமிழரின் பொற்கால இலக்கியங்களாகப் போற்றப் பெறுகின்றன. அவைகள் பண்டைத் தமிழர்தம் வாழ்வில் கொண்டிருந்த சிறந்த கொள்கைகளையும் எண்ணங்களையும் நமக்கு மானுட விழுமியங்களாக உணர்த்திவருகின்றன.

              தமிழர் தம் பண்பாட்டு வாழ்க்கைக்கு, பண்பட்ட வாழ்க்கைக்கு அடித்தளமாகத் திகழ்வது அகவாழ்க்கையே என்பதைச் சங்கப்பாக்கள் புலப்படுத்தி நிற்கின்றன. சங்க இலக்கியங்களில் பத்துப் பாட்டில் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய மூன்றும் எட்டுத் தொகையில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்தும் அகவாழக்கையைப் பற்றிக் கூறும் இலக்கியங்களாகும.; இவற்றில் அகநானூற்றில் கூறப்பட்டுள்ள அகவாழ்விற்கு அடித்தளமான இல்லறம் பற்றியும்,அவற்றுள் வெளிப்படும்  விழுமியங்கள் பற்றியும் ஆய்வதே இக்கட்டு;ரையின் நோக்கமாகும்.

    இல்லறம் –

              ஆண், பெண் இருவரும் மனம்ஒத்து, கருத்தொத்து இணைந்து வாழ்க்கை நடத்துவதோடு பல்வேறு அறங்களையும் ஆற்றுபவர்களாக இருப்பதே இல்லறத்தின் சிறப்பாகும். இல்வாழ்க்கை வாழ்பவன் பெற்றோர், மனைவி, மக்கள் ஆகிய மூவர்க்கும் மட்டுமின்றி துறவிகள், ஏழைகள், இறந்த முன்னோர்கள் ஆகியோர்க்கும் துணையாக இருந்தல் வேண்டும். பழிக்கு அஞ்சுபவனாகவும், பகுத்துண்ணும் வழக்கம் உடையவனாகவும் வாழ்தல் வேண்டும். அவனது வாழ்வில் அன்பும் அறமும் இருத்தல் வேண்டும். இவ்வாறு அறநெறியில் இல்லறத்தில் வாழவேண்டிய முறைப்படி வாழ்பவன் தெய்வத்துக்குச் சமமாகக் கருதப்படுவான். ஆதலால் நல்ல மனைவி, மக்களையும், சுற்றத்தினையும் பெற்று வாழும் ஆண்மகனுக்கு அமையும் வாழ்க்கைத் துணையாளும் குடும்பத்திற்கு ஏற்ற குணநலன்களோடு நற்பண்புகளையும், கற்பு என்னும் வலிமையையும் பெற்று வாழ்க் கூடியவளாக இருத்தல் அவசியம். சங்க இலக்கியங்களில் ஒன்றான அகநானூற்றில் இத்தகைய சிறப்புகளையும் மாண்புகளையும் கொண்ட தலைவன், தலைவியரை மையமாகக் கொண்ட பாடல்கள் புனையப்பட்டுள்ளன. ஆதலால் இந்நூலில் வெளிப்படுத்தப்படும் இல்லற விழுமியங்கள் காலத்தால் அழியாததாகவும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாகவும் இருப்பதில் ஐயமில்லை.

    இல்லற அறம் –

              சங்க காலத்தில் ஆற்றுதல், போற்றுதல், பண்பு, அன்பு, அறிவு, செறிவு, நிறைவு, முறை, பொறை முதலான இல்லற அறப்பண்புகள் வாழ்வியலில் மேற்கொள்ளப்பட்டன. பொதுவாக இன்னுரை பேசுதலும் இன்னாதன செய்யாதிருத்தலுமே சிறந்த அறமாகக் கருதப்பட்டது. இல்லறக்கடன் ஆற்றுதல் வேண்டி தலைவன் பொருள் தேடிச் செல்லலும் அவன் வரும்வரை தலைவி ஆற்றியிருந்து இல்லறக்கடன் ஆற்றுலும் அகநானூற்றில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் அறம்பல புரிவதற்கும் பிறர் கடைவாயில் சென்று நிற்காத நிலைமைக்கும் பொருள் இன்றியமையாதது என்பதனை

                       “அறன்கடைப் படாஅவாழ்க்கையும் என்றும்

                     பிறன்கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும்

                     பொருளின் ஆகும்”           (அகம் 155:1-3)   

      

              என்ற பாடல் விளக்குகிறது. இப்பாடல் இல்வாழ்வில் அறம் தவறாதிருத்தலையும் பொருளின் இன்றியமையாமையையும் விளக்கி இல்லற விழுமியங்களை வெளிப்படுத்துகிறது.

              இல்வாழ்வார்க்குரிய அறச் செயலின்றும் பிறழாமல் நடத்தலும், நெருங்கிய சுற்றத்தார்க்கு எய்திய துன்பங்கள் பலவற்றையும் நீக்கி அவர்களை நல்வாழ்க்கை வாழச் செய்தலும் வேண்டுமெனில் தலைவியாகிய நீ சிலகாலம் என் பிரிவை ஆற்றியிருத்தல் அவசியம் என்று தலைவன் கூறுவதை

                        “அறந்தலைப் பிரியாதுஒழுகலும் சிறந்த

                      கேளிர் கேடுபல ஊன்றலும் நாளும்

                      வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்” (அகம் 173:1-3)

             

              என்ற பாடல் விளக்குகிறது. நாம் துன்பத்தால் வாடி வருந்தினாலும் கவலையில்லை என்று சொல்லிய மனத்தின் தூய்மையை உணர்த்தும் இல்லற விழுமியம் போற்றத்தக்கது.

    விருந்தோம்பல் –

              இல்லறத்தில் மிக முக்கியமான பண்புகளில் ஒன்று விருந்தோம்பல். விருந்தோம்பும் பெருவாழ்க்கையினை மகளிர் விரும்பினர். போக்குவரத்து வசதிகளும்,காசு கொடுத்து அறுசுவை உணவு கொள்ளும் உணவுச் சாலைகளும் இல்லாத அக்காலத்தில் விருந்தோம்பற் பண்பு சிறந்த இல்லற அறமாக மேற்கொள்ளப்பட்டது. விருந்தோம்பலைத் தலைமக்களுக்குரிய சிறந்த கடமைகளுள் ஒன்றாகத் தொல்காப்பியர் கூறியுள்ளார்.

                        “விருந்து புறந்த ருதலும் சுற்றம் ஓம்பலும்

                      பிறவும் அன்ன கிழவோர் மாண்புகள்” (தொல் கற்பு-11)

              என்ற வரிகள் விருந்தோம்பலைத் தலைசிறந்த விழுமியமாக எடுத்துரைப்பதைக் காணலாம். பண்டைக் காலத்தில் வீடு தேடி வரும் புதியவர்களே விருந்தினர் எனப் போற்றப்பட்டனர். அவர்களை அகமும், முகமும் மலர இனிதே வரவேற்று விருந்தளித்தனர் என்பதை

                        “வறுங்கை வம்பலர்த் தாங்கும் பண்பிற்

                       செறிந்த சேரிச் செம்மன் மூதூர்“(அகம்:15:6-7)

     

     என்ற வரிகள் விளக்குகின்றன.

    இல்லற மகளிர்க்குரிய மாண்புகள்

              சங்க அக இலக்கியங்களின் வாயிலாக பெண்களின் பண்பாட்டை ஓரளவு உணர்ந்து கொள்ளலாம். ஒரு குடும்பம் வாழ்வதும், தாழ்வதும் பெண்ணால்தான் என்று அக்கால மக்கள் நம்பி வந்தனா.; அந்த நம்பிக்கை இன்றும் உண்டு. பெண்கள் புகுந்த வீட்டின் இயல்புக்கேற்ப நடந்து கொண்டு பிறந்த வீட்டைப் பற்றி எண்ணி இருப்பர். பிறந்த வீட்டின் உதவியை எதிர் பாராதும், உதவி கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ளாதும் வாழ்ந்து சிறப்பு எய்தினர். அவர்கள் வாழ்வில் அன்பும், அறமும், அறிவும் பின்னியதாகவே அமைந்திருந்தது.

              பொருள்வயின் பிரிய எண்ணிய தலைமகன் தலைவியின் இயல்புகளை எண்ணி செலவழுங்கிநிற்கும் இடத்தில்

                         “….. நன்மனைப்

                      பன்மாண் தங்கிய சாயல் இன்மொழி” (அகம் 193 : 11-12)

              என்று கூறி தலைவியை சிறப்பிக்கின்றான.; நாள்தொறும் விருந்தோம்பல் முதலான நல் அறங்கள் நிகழ்தற்கு இடமான நன்மையுடைய நமது இல்லத்திற்கு உரியவளாகிய கற்புடை மகளிர்க்;கு இன்றியமையாத பல்வேறு மாண்புகளும் பொருந்திய தலைவி என்று தலைவியின் சிறப்புகளைத் தலைவன் விழுமியங்களாக வெளிப்படுத்துகின்றான். இதே கருத்தை தொல்காப்பியம்.

                       “கற்பும் காமமும் நற்பால் ஒமுக்கமும்

                     மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்

                     விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்

                      பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்” (தொல் கற்பு-11)

    என்று தலைவியின் மாண்புகளை எடுத்துரைக்கிறது.

     இல்வாழ்வில் மழலை இன்பம் –

              அக்காலத்தில் மக்கட்பேற்றைப் பெறும்போதுதான் உண்மையான உh,,,யர்ந்;த நிறைவு பெற்ற மனித நிலையை ஒவ்வொருவரும் எய்தினர் என்ற கருத்தை உணர்த்துகின்ற பாடல்கள் பல அகநானூற்றில் இடம் பெற்றுள்ளன. அத்தகு மாண்புடைய மக்கட்பேற்றை அடைந்தவரின் விழு நிலையையும், அடையாதவரின் இழி நிலையையும் இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன.

              இல்வாழ்க்கையின் பயனாக மக்களைப் பெற்றவரையே மாண்புடையவராகத், தலைமைப்பேறு உடையவராகப் பண்புடையோர் கருதினா.; குழந்தைப் பேற்றின் காரணமாக இவ்வுலகத்திலும் புகழொடு விளங்குவார்கள். மறுமை உலக வாழ்வினையும் குற்றமின்றி எய்துவர் எனப் பலரும் கூறிய பழைய மொழிகள் எல்லாம் உண்மையாதலைக் காணலாம் என்பதனை

                       “இம்மை உலகத்து இசையொடும் விளங்கி

                      மறுமை உலகமும் மறுவின்று எய்துப

                      செறுநரும் விழையும் செயி;ர்தீர்;  காட்சிச்

                      சிறுவர்ப் பயத்த செம்மலோர் எனப்

                       பல்லோர் கூறிய பழமொழி  எல்லாம்,

                       வாயே ஆகுதல் வாய்த்தனம் – தோழி” (அகம்:66:1-6)

     

     என்ற பாடல் விளக்குகிறது.

    வறுமையில் செம்மை –

            கணவன் இல்லம் வறுமையுற்ற போதிலும் செல்வம மிகுந்த தம் தந்தை வீட்டை நாடிச் செல்லாத தலைவி சிறப்பிக்கப்படுகிறாள். தலைவனின் இல்லிலிருந்து வந்த தலைவியிடம் தலைவன் இல் குறித்து வினவும் தோழியிடம் தலைவி உயர்வாகக் கூறி கணவன் இல்லறத்தைச் சிறப்பிக்கிறாள்.  இல்லறப் பெண்கள் அழகாலும், குணத்தாலும் சிறந்ததோடு, அன்பு, தலைவன் மனமறிந்து வாழ்தல், புதல்வரைப் போற்றும் பாங்கு, இல்லறக் கடமை, தெய்வக்;கற்பு முதலானவற்றான் சிறப்புற்று விளங்கி இல்லறத்தைச் சிறப்பித்தனர்.

    தன்னலமற்ற பண்பு –

                            ‟விளைகவயலே! வருக இரவலர் ” (ஐங்.2:2)

              என்ற அடி தமிழர் அருள் நெறியை விளக்குவதாகும.; வயலில் தானியங்கள் விளைவது நமக்கு மட்டுமன்று இல்லாதவர்களுக்கு உதவுவதற்காகவே என்ற கருத்தைக் கொண்டதே இவ்வடி. இல்லறமே நல்லறம் என்ற கொள்கை தமிழரின் உயாந்த அருள் நெறியை உணர்த்துகிறது. இல்லறத்தில் வாழ்கின்றவர்கள் உழைத்து, உற்பத்தி செய்து பிறர்க்கு உதவும் தன்னலமற்ற பண்பு உடையவர்கள் என்பதனை அக நூல்கள் உயர்ந்த விழுமியமாகக் காட்டுகின்றன.

              தமிழர்கள் அகத்தையும்,புறத்தையும் இரு கண்களாகக் கண்டனர் அகம், புறம் என்னும் இரண்டும் ஒற்றுமை,வேற்றுமைகளைப் பெற்றிருப்பினும் புறத்தினும் அகமே சிறப்புடையதாகக் கருதப்பட்டது. புறத்திணைப் பொருளான வீரம் மக்களுள்  சிலர்க்N;க உரியது. ஆனால் அகத்திணைக்குப் பொருளான காமமோ ஆண் பெண் என்னும்  பிரிவுகளைக் கொண்ட உயர்திணை, அஃறிணை உயிர்களுக்கெல்லாம் பொதுவானதாகும். ஆண் பெண் இணைந்து வாழும் உயர்திணை வாழ்வினை இல்லறம் என சிறப்பிக்கின்றனர். இவ்வில்லறத்தில் தலைவனும் தலைவியும் இணைந்து அன்புநெறி பூண்டு விருந்தோம்பல், விட்டுக் கொடுத்தல், காத்திருத்தல், பகுத்துண்ணல் சுற்றத்தைக் காத்தல், கேட்டினை விலக்கல், ஈத்துவத்தல், புகழ்தேடல், முதலான உயரிய விழுமியங்களை வெளிப்படுத்த இல்லற மக்கள் கைக்கொள்ளும் ஒழுக்கங்களுக்கு இடப்படும் சிறப்புப் பெயரே பண்பு. பயன்தரும் பண்பின் இரட்டைக் குழந்தைகள் தான் அன்பும், அறமும். இவை வெளிப்படும் இடமே இல்லறம். இவ்வில்லறத்தின் வாயிலாக மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு விழுமியங்களை அகநானூற்றுப் பாடல்கள் வெளிப்படுத்தியிருத்தலை இக்கட்டு;ரை விளக்குகிறது.

    துணை நூற்பட்டியல-;

    1)       பொ.வே.சோமசுந்தரனார் உரை, அகநானூறு, கழக வெளியீடு, பதிப்பு-1970.

    2)       நச்சி;னார்க்கினியர் உரை, தொல்காப்பியம், கழக வெளியீடு, பதிப்பு-1966.

    3)    அ.தட்சி;ணாமூர்த்தி, சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உணர்வுகள்,                   மங்கயர்கரசி பதிப்பகம், பதிப்பு-2001.

    4) முனைவர்.ப.கோமதி முதலானோர், சங்க இலக்கியங்களில் மானுட   விழுமியங்கள், அ.இ.பதிப்பகம், பதிப்பு-2011 

     

    இரா.அமுதா,

    முனைவர் பட்ட ஆய்வாளர்,

    தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி,

    கோவை-10.

    Share
  • முகிலை இராசபாண்டியனின் தேரி மணல் நாவலில் கடற்கரைப் புனைவு

    -த. ஆதித்தன்

    விலங்குகளோடு காடுகளில் வாழ்ந்த மனிதன் தனது நாகரிக வளர்ச்சியின் விளைவாகத் தனக்கென ஓர் இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொண்டான்.  அதுவே மக்கள் நிலம் சார்ந்து சேர்ந்து வாழ்வதற்கு முன்னோடி எனலாம்.

    மனிதன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிவைப் பெருக்கிக் கொண்டதன் மூலம் பல முன்னேற்றங்களை அடைந்தான்.  நாகரிக வளர்ச்சியும் பெற்றான்.  அவன் நிலம் சார்ந்து அமைத்துக் கொண்ட வாழ்க்கை முறையும், வாழ்க்கை சூழலும் அன்று முதல் இன்று வரை இலக்கியங்களில் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

    மனிதன் நாகரிகம் அடைவதற்குப் பன்னெடுங்காலத்திற்கு முன்பே கூடிவாழும் இயல்புடையவனாய் இருந்துள்ளான்.  இக்கூடி வாழும் இயல்பினால் விளைந்த நன்மைகள் பல.  மக்களினம் பல கிளைகளாக வளர்ச்சி அடைவதற்கும் அது வழிவகுத்தது.  மனித இனம் பல்வேறு குழுக்களாகப் பிரிவதற்குப்  பேசும் மொழி, செய்யும் தொழில் போன்று  வாழும் இடமும் முக்கிய பங்காற்றுகிறது.  அதனை கருத்தில் கொண்டுதான் நம் முன்னோர் ஐவகை நிலப்பாகுப்பாட்டினை வகுத்துள்ளனர் போலும்.

    நிலப்பாகுபாடு:

    குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகை நிலப்பாகுபாட்டினை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர்.  இவற்றில் பாலை என்பது குறிஞ்சியும், முல்லையும் முறைமையில் திரிந்ததே என்பதால் பாலைக்கென தனிநிலம் இல்லை எனலாம்.  இதனை,

    “முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
    நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்
    பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” (சிலப்பதிகாரம், காடுகாண் காதை, அடி:64-66)

    என்று சிலப்பதிகாரமும் எடுத்துரைக்கிறது.

    தொல்காப்பியம்,

    “மயோன் மேய காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெருமணல் உலகமும்
    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
    சொல்லிய முறையால் சொல்லவும் படுமே” (தொல், அகத்தினை இயல், நூற்பா:951) என்று இந்நிலப்பாகுபாடுகளைப் பற்றிக் கூறுகிறது.  இவற்றுள் ‘வருணன் மேய பெருமணல் உலகமும்’ என்னும் அடி நெய்தல் நிலத்திற்குரிய கடவுள் வருணன் என்பதையும், பெருமணல் மிகுந்த கடற்கரை நிலம் நெய்தல் என்பதையும் கூறுகிறது.

    இலக்கியங்கள் வாழ்க்கையோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையதாகும்.  கடலும் கடல் சார்ந்த நிலமாகிய நெய்தல் நிலத்திற்கு ஏற்ற நிகழ்வுகளும் அவ்வகையில் இலக்கியங்களுள் இடம்பெற்றுள்ளன.  இந்தநெய்தல் நிலம் தொடர்பான பல வர்ணனைகளைச் சங்க இலக்கியப் பாடல்களிலும் காண முடியும். உதாரணமாக,

    “பெருநீர் அழுவத்து எந்தை தந்த
    கொழுமீன் உணங்கற் படுபுள் ஒப்பி,
    எக்கர்ப் புன்னை இன்நிழல் அசைஇ,
    செக்கர் ஞெண்டின் குண்டுஅளை கெண்டி,
    ஞாழல் ஓங்குசினைத் தொடுத்த கொடுங்கழித்
    தாழை வீழகயிற்று ஊசல் தூங்கி,
    கொண்டல் இடுமணல் குரவை முனையின்
    வெண்தலைப் புணரி ஆயமொடு ஆடி,
    மணிப்பூம் பைந்தழை தைஇ, அணித்தகப்
    பல் பூங்கானல் அல்கினம் வருதல்
    கவ்வை நல்அணங்கு உற்ற, இவ்வூர்
    கொடிது அறிபெண்டிர் சொற்கொண்டு, அன்னை
    கடிகொண் டனளே தோழி பெருந்துறை
    எல்லையும் இரவும் என்னாது கல்லென
    வலவன் ஆய்ந்த வண்பரி
    நிலவுமணல் கொட்கும்ஓர் தேர்உண்டு எனவே” (அகநானூறு, பாடல்: 20)

    என்னும் அகநாநூற்றுப் பாடலைக் காணலாம்.

    தோழி தலைவியிடம் கூறும் கூற்றாக இப்பாடல் அமைந்துள்ளது.  தலைவியோடு களவொழுக்கத்தில் ஈடுபட்ட தலைவன் ஒருநாள் பகலில் சிறைப்புறமாக வந்து நிற்கிறான்.  அதனைக் கண்ட தோழி அவன் வந்துள்ளதை அறியாததுபோல் காட்டிக் கொள்கிறாள்.  அலர் தூற்றும் ஊர் பெண்களின் சொல்லினைக் கேட்டுத் தாய் தலைவலியை வீட்டினுள் காவல்படுத்தியதைத் தலைவனுக்கு உணர்த்த விரும்புகிறாள்.  எனவே தலைவனுக்குக் கேட்கும் வகையில் தலைவியிடம் கூறுவது போல இப்பாடலின் செய்திளைத் தோழி கூறுகிறாள்.

    தந்தை கொண்டுவரும் கொழுப்பு நிறைந்த மீன்களை உலரவைத்து கருவாடாக்குவது உண்டு.  அவ்வாறு மாற்றுவதற்காக மீன்களை உலரவைத்துக் காயவைப்பர்.  அப்போது அதன்மீது வந்து விழுகின்ற பறவைகளை விரட்டுவதற்காகத் தோழியும் தலைவியும் கடற்கரை மணல் மேட்டில் உள்ள புன்னை மரங்களின் நிழல்களில் அமர்ந்திருப்பர்.  அதனைத் தலைவியிடம் நினைவு கூர்ந்த தோழி தொடர்ந்து அவளிடம் பின்வருமாறு கூறுகிறாள்.

    கடற்கரையில் சிவந்த நண்டின் ஆழமான வளைகளை அகழ்ந்து எடுத்தோம்.  உப்பங் கழிகளில் உள்ள தாழையின் விழுதுகளைக் கயிறாகப் பயன்படுத்தி ஞாழல் மரங்களின் உயர்ந்த கிளைகளில் ஊசல் ஆடினோம்.  காற்றுக் கொண்டு வந்து குவித்த மணலில் குரவைக் கூத்தாடினோம்.  இவையெல்லாம் வெறுப்பை உண்டாக்கினால் வெண்மையான மேற்பகுதியைக் கொண்ட அலைகள் வீசும் கடலில் தோழியருடன் விளையாடினோம்.  அழகிய மலர்களாலான பசிய தழையாடையை அழகுடன் உடுத்திக் கொண்டோம்.   பூக்கள் பல நிறைந்த கடற்கரைச் சோலையில் தலைவனைச் சந்தித்து வந்தோம்.

    இவ்வாறு தலைவனைச் சந்திப்பதைப் பற்றி, அவர் கூறுவதையும், பேய் பிடித்த பெண்கள் கூறுவனவற்றையும் நம்தாய் கேட்டு விட்டாள்.  அதனால் இரவு பகல் என்று இல்லாமல் குதிரைகள் பூட்டப்பட்ட கல் என்னும் ஓசையுடன் கடற்கரைக்கு வந்துச் செல்லும் தேரைப் பற்றி எண்ணியவளாய் நம்மை வீட்டு காவலில் வைத்துவிட்டாள்.   நாம் என்ன செய்ய முடியும் என்று தோழி கூறுவதாக பாடல் அமைந்துள்ளது.

    இப்பாடலில் கடற்கரைப் பற்றிய புனைவு மிக அழகுடன் அமைந்துள்ளது.  கடற்கரையில் மீன்களைக் கருவாடாக்குவதற்காகக்  காய வைப்பது, உப்பங்கழியும் அதன் அருகில் உள்ள தாழை, ஞாழல் மரம் போன்றவற்றைப் பற்றிய குறிப்பு போன்றவை மிக எதார்த்தமானவை ஆகும்.  கடற்கரையில் காணப்படும் மணல் மேட்டையும் இப்பாடலின் ஆசிரியர் உலோச்சனார் காட்சிப்படுத்த தவறவில்லை.

    “உவர் விளை உப்பின் உழாஅ உழவர்
    ஒழுகை உமணர் வருபதம் நோக்கி,
    கானல் இட்ட காவற் குப்பை,
    புலவுமீன் உணங்கல் படுபுள் ஓப்பி,
    மடநோக்கு ஆயமொடு உடன்உப்பு ஏறி,
    ‘எந்தை திமில் எண்ணும் தண்கடற் சேர்ப்ப!
    இனிதே தெய்யஎம் முனிபுஇல் நல்லூர்
    இனிவரின் தவறும் இல்லை எனையதூஉம்
    பிறர்பிறர் அறிதல் யாவது
    தமர்தமர் அறியாச் சேரியும் உடைத்தே”. (நற்றிணை, பாடல்:331)

    என்னும் நெய்தல் திணையில் அமைந்த நற்றிணைப் பாடலும் கடற்கரைப் பகுதி குறித்து எடுத்துரைக்கிறது.

    கடற்கரையில் உப்பளங்கள் காணப்படும்.  அதனை உழாது விளைவிக்கும் நெய்தல் நில மக்களால் உவர் நிலத்தில் விளைவிக்கும் உப்பு என்று கூறியுள்ளது அருமை.  அந்த உப்பை உப்பு வணிகர் வருகின்ற காலம் வரை கடற்கரையில் குவித்து வைத்திருப்பார்.

    அங்கு, புலால் மணம் பொருந்திய மீனை உப்பிட்டு கருவாடாக்குவதற்குக் காய வைத்திருப்பர்.  அவற்றைக் கொள்வதற்காக வந்துவிழும் பறவைகளை மடநோக்கு உடைய பெண்கள் தோழிகளோடு சேர்ந்து விரட்டுவர்.  அவர்கள் குவித்து வைத்துள்ள உப்புக் குவியல் மீதேறி எம் தந்தையின் படகு இது. உம் தந்தையின் படகு அது எனக் கடலுள் மீன்பிடிக்கச் சென்றிருக்கும் படகுகள் குறித்துக் கூறுவர் என்று கடற்கரை நிகழ்வுகளை மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியுள்ளது  இப்பாடல்.

    சங்க காலம்தொட்டு இன்று வரையிலும் இதேபோன்ற கடற்கரைப் புனைவுகள் பல இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன.  ஆய்வுக்கு எடுத்துள்ள தேரிமணல் நாவலிலும் கடற்கரை சார்ந்த நிகழ்வுகள் காணப்படுகின்றன.  இந்நாவலின் ஆசிரியர் முகிலை இராசபாண்டியன் சிறுகதை, கவிதை, நாவல், நாடகம், திறனாய்வு, உரை என இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் தடம் பதித்து வருபவர், அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ள அவரின் தேரிமணல் என்னும் நாவலில் இடம் பெற்றுள்ள கடற்கரைப் புனைவுகளே இங்கு எடுத்தாளப்படுகிறது.

    தேரிமணல் நாவலின் தொடக்கமே கடலில் ஆறு கலக்கும் கழி முகப்பகுதிதான்.  ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது அதனைக் கடலுள் பாயவிடாவிட்டால் அது பக்கத்தில் உள்ள ஊர்ப் பகுதிக்குள் புகுந்துவிடும்.  ஆற்றுத் தண்ணீரைக் கடலுக்குள் வெட்டி விடுவதைப் பொழி வெட்டுவது என்று கூறுவர்.  அந்தப் பொழிவெட்டும் பிரச்சினையில் இருந்துதான் செம்மீன் நாவல் தொடங்குகிறது.  இது குறித்து,

    “பொழி முகத்துக்குப் போன சின்னத்துரையும் மற்றவர்களும் எந்த இடத்தில் மணலை வெட்டினால் கழி வெள்ளம் கடலுக்குள் போகும் என்று பார்த்தார்கள். நேரம் இன்னும் விடியாமல் இருட்டாகவே இருந்தது.  கன்னியாகுமரியில் இருக்கும் லைட்ஹவுசின் வெளிச்சத்தில் கடல் மணல் ஓரளவு தெரிந்தது. பொழி வெட்டுவதற்கான இடத்தைப் பார்த்த சின்னத்துரை, கடலை எட்டிப் பார்த்தார்.  கடல் அடி அதிகமாக இருந்தது.

    “ஏண்ணே…! நாம பொழியை வெட்டி விட்டாலும் கடல் அடிச்சி ஏத்திடும் போல இருக்கே…” என்றான் பண்டாரக்குட்டி. “ஆமாடே…அடிச்சி ஏத்தும் போலத்தான் இருக்கு, ஆனா, கழி தெவங்கி நிக்கிறதால இழுத்துக்கிட்டு ஓடிவிடும்…நீ வெட்ட ஆரம்பி…” என்றார் சின்னத்துரை.

    பண்டாரக் குட்டியும் மற்றவர்களும் மண்வெட்டியால் வெட்டத் தொடங்கினார்கள். மணக்குடி ஊரின் நடுவில் இருந்தது அந்தக் கழி. கழிக்குக் கிழக்கே இருப்பதைக் கீழ மணக்குடி என்றும் மேற்கே இருப்பதை மேல மணக்குடி என்றும் சொல்வார்கள். பழையாறு என்னும் ஆறு, கடலில் சேரும் இடம்தான் அந்தக் கழிமுகப் பகுதி. பொழி ஓடிவிட்டால் கீழ மணக்குடிக் காரர்கள் மேல மணக்குடிக்கு நடந்து போக முடியாது;  வள்ளத்தில்தான் போக முடியும்,”(பக்கம் எண்: 22-23 தேரிமணல்) என்று  ஆசிரியர் குறிப்பிட்டள்ளார்.  இது வர்ணனைகள் இல்லாத காட்சிப்படுத்துதலாகவே அமைந்துள்ளது. கடற்கரையில் உள்ள கழிமுகத்தை வாசகனுக்கு அறிமுகம் செய்யும் வகையில் மட்டுமே இப்பகுதியானது உள்ளது.

    சீறிவரும் அலைகளுக்கு மத்தியில் கடலில் குளிப்பது சுகமானது.  அவ்வாறு கடலில் குளிப்பதைக் கண்முன்னே கொண்டுவரும் வகையில் நாவலில் காட்சிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.

    மண்டைக் காட்டுக் கோயில் திருவிழாவினை ஒட்டி விழாவிற்கு வரும் மக்கள் கடலில் குளிப்பது வழக்கம்.  அது தொடர்பான செய்திகளைக் குறிப்பிடும் போது மக்கள் கடலில் குளிப்பதுக் குறித்து,

    “ஒன்பது மணிக்கெல்லாம் கடலில் சிலர் குளித்துக் கொண்டிருந்தார்கள்.  சீறிவரும் அலையை எதிர்கொண்டு அவர்கள் நின்றார்கள்.  அலை அடிக்கும் நேரத்தில் அதன்மேல் தாவி அந்தப் பக்கம் விழுந்தார்கள், இப்படி ஒவ்வோர் அலையாக எதிர்கொண்டு தாவிக் குதித்ததால் கடலை ஜெயித்த பெருமிதம் அவர்களின் முகத்தில் தெரிந்தது. எதிர்த்துவரும் அலையில் கட்டுமரத்தைத் தள்ளிக் கொண்டு நின்றார்கள் சில மீனவர்கள்.  அலை அடி அதிகமாக இருந்ததால் அவர்கள் கட்டுமரத்தை முன்னே தள்ளிக்கொண்டு போகும் போதெல்லாம் அது திரும்பிக் கொண்டு நின்றது.

    பெரிய அலையின் வருகைக்காக அவர்கள் கொஞ்ச நேரம் பொறுமையாக நின்றார்கள்.  சின்னச் சின்ன அலைகள்தாம் தொடர்ந்து வந்தன.  அந்த அலைகளின் அடி வேகமாகத்தான் இருந்தது.  கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் அலைகள் அளவில் சிறியவையாய் இருந்தாலும் வேகத்தில் குறைவு இல்லை. சின்ன அலைகளில் தாவிக் குதித்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு மகிழ்ச்சி அதிகமாக இருந்தது.  திடீரென்று ஒரு பெரிய அளவில் அலை வந்தது.  அந்த அலையை எதிர்ப்பார்க்காததால் சின்ன அலையில் தாவியதைப் போலவே இந்த அலையிலும் தாவினார்கள்.

    கடல் அலையில், அதுவும் அரபிக்கடல் அலையில் குளிப்பதற்கு ஒரு லாவகம் வேண்டும்.  சின்ன அலை என்றால் மேலே தாவி அலையின் பின்பக்கம் பாயவேண்டும். மிகவும் சின்ன அலை என்றால் குதிக்க வேண்டும்.  பெரிய அலை என்றால் தரையோடு தரையாக மூச்சைப் பிடித்துக்கொண்டு படுத்துக் கொள்ளவேண்டும். மிகப் பெரிய அலை என்றால் குத்தவைத்திருப்பது போல் நன்றாக குனிந்து கொள்ளவேண்டும். பெரிய அலையின் போது குனிந்தாலும் படுத்தாலும் அலை நம்மைக் கடந்து போய் தரையில் அடிக்கும், பெரிய அலையின் மேல் தாவிக்குதித்தால் அது நம்மையும் சுருட்டிக் கொண்டு தரையில் அடிக்கும்.  சில சமயங்களில் சின்ன அலைகளின் மேல் தாவும்போது கூட, காலைப் பிடித்து இழுக்கும்.  வேகமாகப் பாய்ந்தால் தப்பிக் கொள்ளலாம் “(பக்கம் எண்.71-72, தேரிமணல்) என்கிறார்.

    இப்பகுதியைப் படிப்பவர்கள் கடலில் குளிப்பது எப்படி என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.  அந்த அளவிற்கு அனுபவித்து ரசனையோடு எழுதியுள்ளார் நாவலாசிரியர்.  இப்பகுதியில் கட்டுமரத்தைக்  கடற்கரையில் இருந்து கடலுள் இறக்குவதையும் காட்சிப்படுத்தியுள்ளார்.  இவை அனைத்தும் மிகவும் யதார்த்தமாக, நாம் நேரடியாக பார்ப்பது போன்று அமைந்துள்ளது.

    கடற்கரையில் சுழன்று அடிக்கும் காற்றால் மணல் சிறிய குன்றுபோல் உயர்ந்திருக்கும் அதனை மணல் தேரிகள் என்பர்.  அந்த மணல் தேரிகளை, “காற்றாடி மரங்கள் நிறைந்த அந்தப் பகுதியைத் தாண்டி விட்டால் மணல் தேரிகள், அந்த மணல் தேரிகளைக் கடந்து விட்டால் கடல்தான்.  மரங்களின் இடையே வந்த தங்கக்கண்ணை யாரும் பார்க்கவில்லை.  தேரிமணல் காட்டுக்கு வந்தாலும் யரும் பார்க்க முடியாது.  ஒரு பனை உயரத்திற்கு இருக்கும் அந்தத் தேரி மணலுக்கு இடையே நடந்து சென்றால் கூட யாருக்கும் தெரியாது.” (பக்கம் எண்: 35, தேரிமணல்) என்று நாவலில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.  இந்த மணல் தேரிகளைக் குறிக்கும் தேரிமணல் என்னும் சொல்தான் நாவலின் பெயராகவும் அமைந்துள்ளது.

    இத்தகைய கடற்கரைப் புனைவுகளைக் கொண்ட படைப்புகளில் காணப்படுகின்ற நெய்தல் சார்ந்த செய்திகளைத் தொகுத்து ஆராயும்போது அந்நிலம் சார்ந்த பதிவுகளையும் பண்பாட்டு வழக்காறுகளையும் குறித்தான புரிதல் மேலோங்கும் எனலாம்.

    *****

    கட்டுரையாளர் – இணைப் பேராசிரியர்
    அரிய கையெழுத்துச் சுவடித் துறை,
    தமிழ்ப் பல்கலைக்கழகம்,
    தஞ்சாவூர் – 613 010.

     

     

     

    Share
  • கூவம் தந்த செழுச்சி அல்லிக்கேணி

    சேசாத்திரி சிறீதரன்

     

    மயிலைமா வல்லிக் கேணியான்

    திவ்.இயற்.நான்மு.35

    குரவமே கமழும் குளிர் பொழிலூடு

    குயிலொடு மயில்கள் நின்று ஆல

    இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்

    திருவல்லிக்கேணிக் கண்டேனே (1073)

    தேன் அமர் சோலை மாட மா மயிலைத்

    திருவல்லிக்கேணிக் கண்டேனே (1075)

    – திருமங்கை ஆழ்வார்

    http://www.tamilvu.org/slet/l4210/l4210son.jsp?subid=3792

    குரவம் – common bottle flower

    குரவ மலர் மணம் வீசும் குளிர்ந்த பொழில்களும் கதிரவனின் ஒளிக்கதிர் படா இருண்ட சோலைகளில் குயிலும் மயிலும் திரிகின்ற மாட மாமயிலைத் திருவல்லிக்கேணி என அதன் இயல்பைப் புகழ்கிறார் திருமங்கை ஆழ்வார். மயிலையும் அல்லிக்கேணியும் அக்கால் ஒன்றுபட்ட பகுதியாகவே இருந்துள்ளன. மயிலை இன்னும் சிறப்புற்று இருந்ததாலேயே மயிலையின் திருவல்லிக்கேணி எனப்பட்டது போலும். இவ்விரு நிலத்தொகுதியும் செழுச்சியுற்றது (fertile) என்னவோ கூவம் ஆற்று ஓட்டத்தின் நீர்ப்பாய்ச்சனத்தினால் தான் என்பது யாவரும் உணரவேண்டிய உண்மை.

    திருவல்லிக்கேணி, வேங்கட கிருஷ்ணன் எனப் பெயரிய பார்த்தசாரதி பெருமாளின் கோவில் கொண்ட ஊர். இது ஆழ்வார்கள் பாடல் பெற்ற,108 வைணவ தலங்களுள் ஒன்று. இங்கத்து கோவிலின் கருவறை முற்றத்தில் உள்ள தந்திவர்மப் பல்லவனின் 12 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி.808) கல்வெட்டு இக்கோவில் 9 ஆம் நூற்றாண்டிலேயே இருந்ததற்கு சான்று. மேலும் கருவறை முதல் முற்றம் வரை உள்ள பாறை கருங்கல் வகை சார்ந்தது . கருவறையின் புறச்சுவர் மஞ்சள் நிறப் பாறை வகையினது என்பது இக்கோவில் பின்னீடு சோழர்களால் கட்டப்பட்டது என்பதற்கு சான்றாகிறது. இக்கோவில் அக்காலத்தே அந்த அளவிற்கே சிறிதாக இருந்துள்ளது.


    ​​

    1. வடக்கு கருவறைச் சுவர். ​(சோழர் காலம் வரை கோவில் இந்த அளவே இருந்துள்ளது)

    2. மேற்கு கருவறைச் சுவர்.

    3. தாயார் சன்னதியை ஒட்டிய தெற்கு கருவறைச் சுவர்.

    ​ஆனால் இக்கோவில் இன்று மிகக் கம்பீரமாக காட்சிப்படுவதற்கு காரணம் விசய நகர ஆட்சியின் போது அரங்கநாதர், இராமர், வரதர், நரசிம்மர், ஆண்டாள், ஆழ்வார்கள் என தனி சன்னதி அமைக்கப்பட்டு விரிவுற்றது. கோவிலின் பழைய அமைப்பு அக்கால் மறுசீரமைக்கப்பட்டது. அதற்கு சோழர் கால கல்வெட்டுகள் பல அடிக்கல்லாக தரையில் வைத்து பூசியிருப்பதே சான்று,

    பின்னர் இக்கோவிலில் மேற்கு புறத்தில் கசேந்திர வரதர் சன்னதி முதல் ஆண்டாள் சன்னதி வரை தூண் மண்டபம் கட்டப்பட்டு அதற்கு பண உதவி செய்த தெலுங்கு ஆண், பெண் கொடையாளிகளின் சிலைகள் செதுக்கப்பட்டு ஒவ்வொரு தூணிலும் நிறுத்தப்பட்டுள்ளன. அத்தூண்களைப் பார்த்தாலே அவற்றின் செலவுக்கு கணக்கு என்னவாக இருக்கும் என்று புரிந்துகொள்ள முடியும். அதே போல ஆண்டாள் சன்னதி முதல் சுவர் கண்ணாடி வரை தூண் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதற்கு உதவிய தெலுங்குப் பெண்ணின் சிலை ஒரு தூணிலே வடிக்கப்பட்டு அதன் மேல் தெலுங்கு கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் தெலுங்கரின் முயற்சியால் இக்கோவில் கம்பீரத்தோடு பிரம்மாண்ட தோற்றத்தையும் எய்தியது எனலாம். பெருமாளின் தென்புறச்சுவரில் நெடிய தெலுங்கு கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது. இந்நெடியக் கல்வெட்டு 1585 இல் பெனுகொண்டாவை தலைமை இடமாகக் கொண்டு ஸ்ரீ ரங்கராயர் ஆண்டுவந்த போது இராமராஜ வேங்கடபதிராஜுவின் தளவாய் திருமலைராயர் மாட நெல்லூர் செஞ்சம் கிராமம் தலையாறி கண்காணிப்பிலுள்ள , நீடு கிராமம் நிடாரம்பரம் கிராமம் ஆகிய இரு கிராமங்களை திருஅல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு தானமாகக் கொடுத்து அதைக்கொண்டு பெருமாளுக்கு என்னென்ன கைங்கரியம் செய்யவேண்டும் என்று ஒரு நெடிய பட்டியலே கொடுத்து அதில் ஒரு குறையும் இல்லாமல் நடந்தேற வேண்டும். அதற்கு இடர் செய்வார் கங்கை கரையில் பசுவையும் பிராமணரையும் கொன்ற பாவத்தை அடைவார் என்று பொறித்துள்ளார்.

    கோவிலுக்குள் சிறிதளவேனும் வெளிச்சமும் காற்றும் வரட்டும் என்று கருதித்தானோ என்னவோ தென்புறத்தில் மடைப்பள்ளிக்கும் தாயார் சன்னதி மண்டபத்திற்கு இடைப்பட்ட பகுதியில் பெரிதாக மண்டபம் ஏதும் கட்டாமல் விட்டுவிட்டதை உணர முடிகிறது.


    4. மேற்கு திசை சிலை மண்டபம்.

    5. ஆண்டாள் சன்னதிக்கு நேரே அமைந்த மண்டபம்.

    6. ஆண்டாள் சன்னதி மண்டபம் எழும்ப உதவிய பெண். தலைமேல் அவர் பற்றி தெலுங்கு கல்வெட்டு.
    ​​

    இப்படியாக விசயநகர – நாயக்கர் ஆட்சியின் போது இக்கோவில் 16 /17 ஆம் நூற்றாண்டுகளில் விரிந்து பெருமையுற்ற நிலையில் சத்திரபதி சிவாஜி தனது படை ஒளரங்கசிப்பின் தென்னக படையெடுப்பால் அழிந்து விடாமல் காக்கும் உத்தியாக தமிழகம் வந்தார். அப்போது வேலூர், செஞ்சி நாயக்கர் ஆட்சி ஒழிக்கப்பட்டு மராத்தியர் ஆட்சி நிறுவப்பட்டது. இவ்வாட்சி சிறு காலப் பொழுதே நிலைத்தாலும் பல சிவன் கோவில்களில் மராத்தியர் வெற்றி நினைவாக மண்டபங்கள் கட்டுவிக்கப்பட்டு அறப்பணிகள் நிறைவேறினர். மராத்தியரில் சிலர் மாத்துவ வைணவத்தை பின்பற்றுவோரும் உண்டல்லவா? ஆதலால் மராத்தியர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும் தமது முத்திரையை பதித்தனர். கோவிலினுள் கட்டுவதற்கு இடமே இல்லாமல் தெலுங்கர் தமது அறப்பணியை ​முடிந்துவிட்டதால் மனம் கலங்காத மராத்தியர் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து திருக்குளம் நோக்கி புடைப்பு சிற்பங்கள் கொண்ட நெடிய வரவேற்பு மண்டபத்தை கட்டுவித்தனர். அதில் ஒரு தூணில் ஒரு மராத்திய அதிகாரி தனது மனைவியுடன் ஒருங்கே நின்று பெருமாளை நோக்கி கைக் கூப்பி நிற்கிறார். அவர் தலையை மராத்திய தலைச் சிதவல் அணி செய்கிறது. அவரது சிலைக்கு கீழே மண்ணீ வர் என்று அவரது பெயர் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது.


    ​​

    7. வெளியில் அமைந்த மராத்தியர் கட்டிய வரவேற்பு மண்டபம்.

    8. மண்ணீவர் என பெயர் பொறித்த மராத்திய அதிகாரி மனைவியுடன் தொழுகிறார்.

    9. திருக்குளமும் அதில் மண்டபமும்.

    கல்வெட்டும் / விளக்கமும்:

    – – – நம்பியும் அருளாளனும் உள்ளிட்டோம் – – – / – – – டும் ஆக உரு இருபத்தாறுக்கும் எரிக்க கடவ திருநு – – / – – – கக் கடவோம் இவ்வுரு இருபத்தாறுங் கைக்கொண் – – – / – – -ரான நான தண்டிப்பிடிக்கோன் மக்களில் திருவா – – – / – – – ர்க்கு இரண்டும் எரிய இட்ட குத்துவிளக்கு இரண் – – –

    விளக்கம்: கோயிலில் காட்சி படுத்தியுள்ள, இரு ஓரங்களிலும் எழுத்தை இழந்த 12 – 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு இது. நுந்தா விளக்கு எரிக்கிறோம் என ஆடு (உரு) 26 ஐ பெற்றுக்கொண்ட பிராமணர், நான்காம் அதிகார நிலை நாடு கிழார் தண்டிப்பிடிக்கோன் பிள்ளைகளில் திருவா- – என்பவரிடம் இருந்து விளக்கு எரிக்க இரண்டு குத்துவிளக்கும் பெறப்பட்டன என்பது செய்தி .



    ஸ்வஸ்தி ஸ்ரீ த்ரிபுவனச் சக் – – – / ஸிங்க நாயற்று பூர்வ ப[ க்ஷ ] – – – / ண்ட சோழ மண்டலத்து புலியு – – -/ ஆளுடையர் திருவாந் யூருடை – – – / ளைகளில் கழுமலவூரர் பக் – – – / கொண்ட நற்புதுக் கா[சு] – – – -/கச் செலுத்தக் கடவோமாக – – –

    விளக்கம்: வலது ஓரம் எழுத்துகளை இழந்து தரையில் கிடந்து மிதிபட்டு தவிக்கும் 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு. கழுமலவூரரிடம் (சீர்காழி) இருந்து திருவான்மியூர் உலகாளுடைய பெருமானுக்கு அன்றாட பூசனைக்கு வேண்டியன செய்ய புதுக்காசுகளை பெற்றுக்கொண்டதைக் குறிக்கிறது.



    ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீபட்டர் திருவடிகளே சரண[ம்] ஸ்வஸ்தி ஸ்ரீ மன்மகாமண்டலேஸ்வர ஸ்ரீ வீர பிறுதாப சதாசிவ தேவமகாராயற்கு செல்லா நின்ற ஸம்வற்ஸரம் 1486 (1564) க்கு செ

    ல்லா நின்ற ரத்தாக்ஷி வருஷ மகரநாயற்றில் பூற்வபக்ஷத்தில் உத்திராடமும் ஆதித்யவாரமும் பெற்ற நாள் தெள்ளிய சிங்கப்பெருமாளிட தாஸன் நரசிங்கதாஸன் தேசாந்திரி பண்ணி — க்க — –

    யிங்கரியம் பள்ளிகொண்ட பெருமாள் மகாலக்ஷ்மியார் பூ[மி] தேவியார் நாரசிங்கப்பெருமாள் வராகனாராயணப் பெருமாள் சேஷன் திருப்பதிஷ்ட்டையும் கிஷ்ணன் யுஹ்மணிதேவி பல – – – [டா]ள் – – –

    மதன் அனுருத்திரன் ஸாத்திகை ஆழ்வார் திருப்பதிஷ்டையும் வேதவல்லினாச்சியாற்கு உற்சவ விக்கிறகமும் பள்ளிகொண்ட பெருமாள் கோயிலும் கிஷ்ணன் கோ{யி}[லும்] முன் – – –

    மண்டபமும் வேதவல்லி நாச்சியார் கோயிலும் முன் திருவாய்மொழி மண்டபமும் திருமடப்பள்ளியும் அடைய வளைஞ்சாந் திருமதிளும் திருவாபரணங்களும் யிந்த ஸறுவ

    கயிங்கரியமும் தேஸாந்திரி நரசிங்கயங்கார் கையிலே தெள்ளிய ஸிங்கப் பெருமாள் கொண்டருளினார். கிறாமம் புதுப்பாக்கம் வேப்பேரி வேஷாறுபாடி யிந்த [கிறாம]

    ங்களும் கொண்டருளினார் யிந்த ஸகளவித கயிங்க [ரியங்களும் சந்திராதித்தவரைய் தெள்ளியஸிங்கப் பெருமாள் கொண்டருளவும்.

    விளக்கம்: 1564 ல் விசயநகர வேந்தர் சதாசிவ ராயர் ஆட்சியின் போது தெள்ளிய சிங்கப்பெருமாளின் தாசன் என்று கூறிக்கொண்டு நரசிங்கையிங்கார் என்பவர் அரங்கநாதர், இலக்குமி, பூதேவி, நரசிம்மர், வராகர், சேஷ நாகம், கிருஷ்ணன், ஆழ்வார் போன்றோருக்கு சன்னதிகள் ஏற்படுத்தி பதிவித்தார் (பிரதிஷ்டை செய்தார்). நகையணியும், வேதவல்லித் தாயாருக்கு செப்புத் திருமேனியும் செய்வித்துக் கொடுத்தார். அரங்கநாதர், கிருஷ்ணன் சன்னதிக்கு முன் மண்டபம் கட்டுவித்தார். வேதவல்லி தாயாருக்கு தனி சன்னதியும், மடைப்பள்ளியும், முன் திருவாய்மொழி மண்டபமும், வளைந்த மதிலும் கட்டி கொடுக்க இவை அனைத்தையும் தெள்ளிய சிங்க பெருமாள் ஏற்றுக்கொண்டார்.

    அதோடு வேப்பேரி, வியாசர்பாடி அவற்றுக்கு இடைப்பட்ட புதுப்பாக்கம் (இக்கால் பட்டாளம் ஆக இருக்க வேண்டும்) ஆகிய கிராமங்களை தெள்ளிய சிங்க பெருமாள் நரசிங்கய்யங்காரிடம் இருந்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்று வேண்டுகிறார்.

    வேப்பேரி தினத்தந்திக்கும் வியாசர்பாடி அம்பேதுக்கர் கல்லூரிக்கும் 5- 6 கிலோ மீட்டர் நீளத் தொலைவு இடைவெளி, தினத் தந்தி முதல் தென்னக இரயில்வே பொது மேலாளர் அலுவலகம் வரை 2.5 – 3 கிலோ மீட்டர் தொலைவு அகலம் உள்ளது. இத்தனைப் பெருங்கொடையை அளிக்க வேண்டுமெனில் நரசிங்கயங்கார் பெரிய ஆட்சி அதிகாரப் பொறுப்பில் இருந்தவராய் இருக்க வேண்டும்.என்று எண்ணத் தோன்றுகிறது. இதே போன்ற தெளிவான செய்தி உள்ள கல்வெட்டுகளின் அடிப்படையில் ஆழ்வார்கள், ஆண்டாள் போன்றோருக்கு எப்போது தனி சன்னதிகள் ஏற்படுத்தப்பட்டு மக்கள் வணங்கி வரலாயினர் என்பதை உறுதிப்படுத்தலாம். அதோடு கோவில்களில் வாகனங்களில் தெய்வத்தை ஏற்றி ஊர் உலா வரும் திருவிழா எப்போது தொடங்கியது என்பதையும் அறிந்து கொள்ளலாம். அதே போல் சிவன் கோவில்களில் 63 நாயன்மார்கள் எப்போது சிலையாக பதிவிக்கப்பட்டனர் என்பதையும் உறுதிப்படுத்தலாம். இவை தாம் உண்மையான தொல்லியல் நோக்கிலான கோவில் கட்டட ஆராய்ச்சி.

    ஆற்று மேடுகளில் கோவில் இயக்கம் உருப்பெறவும் கால்கொள்ளவும் பெரிதும் துணைநின்றவர் ஆட்சியில் முதல் அதிகார நிலையில் இருந்த பல்லவ வேந்தர்கள் ஆவர். மேலைச் சாளுக்கியர், இராட்டிரகூடர் எழுச்சியால் பின்னாளில் இவர்கள் இரண்டாம் அதிகார மன்னர் நிலைக்கும், மூன்றாம் அதிகார அதியரைசர் நிலைக்கும் தாழ்ந்து போனார்கள். இவர்கள் இக்கால் எந்த சாதியில் கலந்து கரைந்து போயிருப்பார்கள் என்ற ஆவல் அனைவர் உள்ளத்திலும் எழுவது இயல்பே. இதற்கு சான்றாக ஒரு 19 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு உள்ளது.

    சென்னைபுரி / ஸ்ரீ அருணாச்சலேசுவர / ர் கோயில் – வீடு – / மயிலை நல்லப்பா / முதலியார் புத்திரராகிய / ஜஷ்டீ சு முத்துசாமி / முதலியார் தற்மம் தொ / ண்ட மண்டலத்தா/ ரில் – வைசிய குலம் / துளுவவேளாளம் / பு. பல்லவராய கோ / த்திரம் – போதாய[ன] / சூத்திரம் -சாலிவா / கன – வருஷம் / 1764

    விளக்கம் : தொண்டை மண்டலம் மூன்றாம் வருணம் துளுவ வேளாள சாதியில் பல்லவ கோத்திரத்தில் பிறந்த மயிலைவாழ் நல்லப்ப முதலியார் மகன் ஜஸ்டிசு முத்துசாமி முதலியார் சென்னை அருணாசலேசுவரர் கோயிலுக்கு வீடு ஒன்றை தானமாகக் கொடுத்தார்.

    மேற்சொன்ன நான்கு கல்வெட்டுகளும் “சென்னை மாநகர்க் கல்வெட்டுகள்” நூலில் உள்ளன. மேற்கோள் உதவி கோவை திரு. சுந்தரம்.

    தொண்டை மண்டல கல்வெட்டில் குறிக்கப் பெறும் மூன்றாம் அதிகார நிலை அதியரைசர்கள் அரையன், ராயன் என்றும், நான்காம் அதிகார நிலை கிழார்கோன்கள் நாடுகிழான் என்றும் குறிக்கப்படுகின்றனர் . அரையன், கிழான் யாவரும் பெரு நிலக்கிழார்களே. ஆகவே தொண்டை மண்டலத்தில் 16 /17 ஆம் நூற்றாண்டில் சாதி உருவான காலத்தில் இவர்கள் துளுவ வேளாளர்களாக தம்மை அறிவித்துக் கொண்டுள்ளனர். மேலும் 17ஆம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சியிலும், 19 ஆம் நூற்றாண்டு வெள்ளையர் ஆட்சியிலும் இந்த துளுவ வேளாளர்கள் பல கோவில்களை கட்டுவித்ததும், மறுசீரமைத்ததும், பல கொடைகளை நல்கியதும் கல்வெட்டில் காணக் கிடைக்கின்றன என்பது இவர்கள் முன்னோரான அரையன், கிழவன் போன்றோர் செய்தது போலவே அறப்பணியை தொடர் ந்து இவர்கள் வெள்ளையர் ஆட்சி வரை செய்து வந்துள்ளனர் எனக் கொள்ள முடிகிறது. அந்த வகையில் பார்த்தால் கல்வெட்டுகளில் சிவாச்சாரி பிராமணர்களுக்கு இணையாக அல்லது அடுத்ததாக கல்வெட்டுகளில் அதிகம் இடம்பெறும் மக்கள் வேளாள மக்களாகவே உள்ளனர். தமிழ் மொழிக் காப்பு, பண்பாடு நாகரிகக் காப்பு, சமய அறங்காப்பு ஆகியவற்றில் தமக்கு நிகரில்லாத முதலிடம் பெற்ற இந்த வேளாள மக்கள் இக்கல்வெட்டுகள் உள்ள காலம் வரை அவரின் பங்களிப்பு நினைத்து போற்றலுக்கு உரியதாகிறது.

    கோவில் ஆடு மாடுகளை வளர்த்து அன்றாடம் விளக்கு எரிக்க நெய் தரும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மன்றாடி, கோணார் போன்ற இடையர் கல்வெட்டில் மூன்றாம் இடம் பிடிக்கின்ற சாதியார் ஆவார். .

    கலிங்கத்தை வெற்றிகொண்ட பல்லவன் கருணாகரத் தொண்டைமானை அவன் மனைவி தான் வழங்கிய திருநந்தா விளக்கு கல்வெட்டில் அவனை வேளாண் என்று குறிப்பிடுகிறாள், “ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு நாற்பத்துமூந்று ஜயங்கொண்ட சோழமண்டலத்து எயிற்கோட்டத்து திருவத்தி / யூராழ்[வா]ர்க்கு சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழவள நாட்டு திருநறையூர் நாட்டு வண்டாழஞ்சேரி உடையான் வேளாண் கருணாகரநாந தொண்டைமானார் / தேவியார் அழகிய மணவாளனி மண்டையாழ்வார் வைத்த திருநுந்தா விளக்கு.

    நூல்: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள், 2011, தொகுதி 2, எண் :5, பக் – 10, காஞ்சி வரதர் (அருளாள பெருமாள்) கோயில்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    பகவான் உவாச்….!
    ————————————————-
    ”கும்பிடுதல் ஏனெதற்கு! காண்டீபா, கொடியுச்சி
    எம்பிடும் ஆஞ்சனேயர் ஏளிவிட்டார் -நம்பிடு,
    ஆறறிவு கொண்டவனே அஞ்சறிவு ‘’ஆ’’வைப்போல்:
    போரறிவு கொள்மகனே பாண்டு’’….கிரேசி மோகன்….!

    Share
  • இனிய சந்திப்பு!

    அன்புடையீர்,

     

    ’’டப்ளின் சரண்யாபரத்வாஜ் இல்லம் வந்தார் , தன் தந்தையுடன்…..தன் மகன் பூணலுக்கு அழைக்க…..இந்த கி.வா.ஜி.(WoRd Punningil Expert) எனக்கு ஒரு மினியேச்சர் சாக்லேட் கிருஷ்ணாவை தந்து சாக்லேட் மாலை அணிவித்தார்,ஃஅப்கோர்ஸ் என் மனைவிக்கு ஒரு புடவை…மொமெண்டோவாக தனக்கே உரிய கிவாஜி பாணியில் மொமெண்டோவாக, எழுதி பரிசளித்தார் இந்த லண்டன் சகோதரி….படம் பார்க்க…..என்ன தவம் செய்தேனோ இவள் அன்புக்கு பாத்திரமாக…..!இவள் தந்த சாக்லேட் கிருஷ்ணா பொம்மையும்,மொமெண்டோவும் என் இல்லத்தை அழகு படுத்துகிறது….இவள் மகன் ‘’அத்வைத்’’ பூனலுக்கு அடியேன் விசிஷ்டாவைதி ஒரு வெண்பா எழுதினேன் அதை பத்திரிகையில் போட்டுள்ளார் இந்த கிவாஜி(கிவாஜாவின் ரசிகை)…வெண்பா ஸ்கேன் செய்து அடுத்த மெயிலில்….மிக்க நன்றி கிவாச(ச ஃபார் சரண்யா…சரண்யா எழுத ஆரம்பித்தால் கிரேஸ(மறுபடியும் ஸ ஃபார் ஸரண்யா) ஆகிவிடுவார்….ஈவரது எழுத்தில் PUN FUN இரண்டும் உண்டு…..மீண்டும் நன்றியுடன் கிரே(ஸ)ஸி மோகன்…..!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180603 Radha Krishna -lr – A4

    “கீதை உரைக்கின்றார் ராதை உருப்பட,
    காதலென்று எண்ணினாள் கன்னியவள்,-மாதுவிடம்,
    கிஸ்ஸல்ல தாயே குவித்தூதல் பாரதம்:
    அஸ்வத்தா ஆனை ஹதம்’’….!கிரேசி மோகன்….!

    KRISHNA FOR TODAY…..!
    ——————————————-

    டீயே மதுரம் சொன்னது ‘’கல்கி’’(கண்ணனின் பத்தாவது அவதாரம்)….என்ன பொருத்தம்….!
    ——————————————————————————————————————————————————————-

    “கீதை உரைக்கின்றார் ராதை உருப்பட,
    காதலென்று எண்ணினாள் கன்னியவள்,-மாதுக்(கு)
    அதரம் காட்டி அடியேகேள் டீ.ஏ(T.A)
    மதுர(ம்)என்.(N) எஸ்.(S)கிருஷ்ணனின் மாது….!கிரேசி மோகன்….!

    Share
  • படக்கவிதைப் போட்டி 163-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. கோபி சங்கரின் கேமரா வண்ணத்தில் உருவான படமிது. ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து, இதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. ஒளிப்பதிவாளர், தேர்வாளர் இருவரும் என் நன்றிக்கு உரியோர்.

    மழலையைத் தொட்டுமகிழும் இன்பத்துக்கு இணையான இன்பம் மன்பதையில் யாங்கணுமே இல்லை எனலாம். அதன் குதலை மொழிகளோ பெற்றோர்க்குக் குழலினும் யாழினும் இனிமை பயப்பவை.

    ”மழலையர் இல்லாத மன்னுலகம்,
    பூக்கள் இல்லாத சோலை!
    கதிரவன் இல்லாத காலை!”

    நேசக் கரங்களில் நிமிர்ந்து நிற்கும் இம்மழலையைப் பாசத்தோடு வாழ்த்த வருகின்றார்கள் கவிஞர்கள்!

    ”நஞ்சையும் அமுதாக்கிவிடும் பிஞ்சு மழலை; கெஞ்சினாலும் கிட்டாத வரமாய்க் கிடைத்த மழலையிடம் தஞ்சமடைவது சுகம்!” என்று குழந்தையின் வடிவில் காட்சிதரும் தெய்வத்தின் மாட்சியைப் போற்றுகிறார் திரு. ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி.

    தெய்வதரிசனம்!!

    கொஞ்சும்பிஞ்சின் குமிழ்நகையில்
    நெஞ்சம் அமிழ்ந்துநெகிழ்கிறது!!
    வெஞ்சாமரமாய் வீசிடும் கரம்பட்டு
    பஞ்சாமிருதருசியாய் இனிக்கிறது!!
    அஞ்சாப்புப்படிச்ச நெனப்புலகிடந்து
    கஞ்சாடையால கலங்குது மனசு!
    வஞ்சிரம்போல வந்திங்குதித்திட்ட
    வஞ்சிக்கொடிதான்இனியெம்வாழ்வு!
    மிஞ்சி மிஞ்சிப்பணமிருந்தாலும்
    இஞ்சு இஞ்சா மகிழ்ச்சி தருஞ்சொத்து
    நஞ்சைக்கூடஅமுதமாக்கும் மருந்து –
    மஞ்சக்கிழங்காப்பிறந்த சிசு தானே!!
    கெஞ்சினாலும் கிட்டாத வரமெதுனா
    தஞ்சம்மழலையிடம்அடைவதொன்றே!
    எஞ்சியுள்ள எதிர்காலப்பலன் எதுனா
    சஞ்சீவியாய் சிறப்பாய் வளர்ப்பதுவே!
    ஆஞ்சு அறிஞ்சு உயர்ந்திருந்தாலும்
    சாஞ்சுபோனது உலகில் இல்லறம்!
    தேஞ்சு போன இகபர சுகங்களுக்குள்
    மீஞ்சிருப்பது பிள்ளைப்பேறுமட்டும்!
    ஈஞ்ச இலைகள் சித்திரை மாதத்தில்
    காஞ்சு சருகாய் விழுவது இயற்கை!!
    பாஞ்சு விழுகிற மழைத்துளிகளாக
    ஓஞ்சவர்களுக்குஉயிரோ குழந்தை!!

    *****

    பிஞ்சுக்காலால் நெஞ்சில் உதைத்துப் பரவசப்படுத்தும் வஞ்சிக்கொடியை அன்பைக் குழைத்துக் கொஞ்சி வாழ்த்துகிறார் திரு. ரா.பார்த்தசாரதி.

    பெண் பிள்ளை

    பெண் மனம் மகிழ பெண்ணைப் பெற்றாள்
    ஆண் மனம் மகிழ் ஆணைப் பெற்றாள்
    ஏனோ உலகில் பாசத்தைப் பிள்ளைகளிடம் வைத்தான்
    பெண்ணும், ஆணும் சமம் என உலகில் உணரவைத்தான்!
    மகளின் பாசம் என்றும் தந்தையிடத்திலே
    மகனின் பாசம் என்றும் தாயினிடத்திலே
    இதுவே இன்றைய பாசவலையாய்த் தொடர்கிறது
    தாய்தந்தையின் நேசக்கரங்கள் உதவுகிறது!
    மகளே, உன் பிஞ்சுக் கால்களால் என்னை உதைக்கின்றாய்
    என் நெஞ்சத்தையும், இதயத்தையும் நெகிழச்செய்கின்றாய்
    உன் பிஞ்சுக் கால்கள் என் மார்பில் நடனமாடுதே
    என் உள்ளம் மகிழ்ந்து திளைக்குதே!
    களைப்புடன் நான் வரும்போது உன் கண் என்னைத் தேடுதே
    உன்னை தூக்கச் சொல்லி என் கைகளை அழைக்கின்றதே
    உன் கைகள் சாமரம் வீசி, என் களைப்பினை நீக்குதே
    உன் கருவிழிக் கண்கள் என்னை அடிமையாக்குதே!
    உன்னை உயரே தூக்கும்போது சிரித்து என்மேல் உமிழ்கின்றாய்
    அதனை உமிழ்நீரை அமிர்தமாய் என்மேல் தெளிக்கின்றாய்
    உன் தண்டைக் கால்களை என் முகத்தின் மேல் பதிக்கின்றாய்
    என் வஞ்சிக் கொடியே, உன் பிஞ்சுக் காலால் மகிழ்வூட்டுகின்றாய்!
    பெண் மகள் என்றும் செல்ல மகள் ஆவாள்
    திருவிழாக் காலங்களில் மஹாலக்ஷ்மியாய் உலா வருவாள்
    தந்தைக்கு என்றும் தாதியாய் இருந்திடுவாள்
    தரணியிலே மகளே என்றும் போற்றப்படுவாள்!

    ***** 

    ”மண்ணில் கால்புதைய நீ ஓடும்போது அங்கே தெரிவது ஓவியமா? காவியமா? தாளால் (கால்) எனை உதைக்கும் கவிதையுனைக் கண்டபின்பு, தாளில் கவிவடிக்கும் எனதாசை போனதே!” என்று நெஞ்சு நெகிழ்கின்றார் திருமிகு. டி.திலகவதி.

    உன் வாய்மொழி
    வார்த்தைகள்…
    என்ன..
    புதுவித அகராதியா..?
    அர்த்தங்கள்
    இல்லையென்ற போதும்
    அதை ரசிக்காமல்
    இருக்க முடியவில்லை….
    இனி
    என் கண்ணீரைத்
    துடைக்கக்
    கைக்குட்டை
    தேவையில்லை…
    உன்
    கைகளே போதும்…
    அமைதி எனும்
    அற்புதத்தீவைக்
    கண்களில் கொண்டு அவதரித்தாயா…!
    உன்னை அணுகும்
    ஒவ்வொரு முறையும்
    வாஞ்சையுடன்
    பிடிபடுகிறது..
    என் மனம்…
    தொட்டுப் பேச
    வார்த்தைகள்
    இல்லை…
    விட்டு விலக
    மனமும் இல்லை…
    உன் ஈறுகள்
    பதித்து ஈரமாக…
    ஏங்குது என் கன்னம்…
    உன் இதழ் பதித்து
    நீ பேச
    தவிக்குது என் இதயம்…
    மண்ணில் கால்
    புதைய நீ ஓட…
    அங்கே..
    தெரிவது என்ன
    காவியம் பேசும்
    ஓவியமா..?
    ஒரே ஒரு முறை
    தான்..
    உன்னைத் தொட்டு
    தூக்கி இருப்பேன்…
    பிறகு ஏன்..?
    என் கரங்கள்
    கவி எழுதத்
    தயங்குகிறது…
    ஓ….
    நான் எழுதும்
    கவியை விட
    அரத்தமுள்ள கவிதையாய்
    உன்னைக்
    கண்டு கொண்டதா
    என் கரங்கள்…!!!

    *****

    ”கண்ணே உன் கனிமழலை கேட்டபின் காட்டுக்குயிலும் பாட்டை மறந்தது! பெண்ணைப் பெற்ற ஆண்களுக்கு மூன்று தாயடி! கொடுத்துவைத்தோர் எனைப்போல அவனியில் யாரடி?” என்று பெருமிதம் கொள்கிறார் திரு. பழ.செல்வமாணிக்கம்.

    தந்தையின் பெருமிதம்

    ஆண்டவன் அருளாலே நான் பெற்ற அஞ்சுகமே!
    அப்பா என்றழைத்து ஏற்றம் தந்தவளே!
    உன்னைச் சுமக்கையிலே சிந்தை மகிழுதடி!
    அன்னை சுமந்ததற்கு உள்ளம் நன்றி சொல்லுதடி!
    மகளாய் நீ பிறந்த பின்னே வாழ்க்கையின் அர்த்தம் புரிந்ததடி!
    நீ எட்டி உதைக்கையிலே கர்வம் தொலையுதடி!
    நீ முத்தம் தருகையிலே ஆயுள் கூடுதடி!
    உன் மழலை கேட்ட பின்,
    குயில் கூவ மறந்ததடி!
    உன்னைத் தழுவி மகிழ்ந்த பின்னே,
    மலரும் முள்ளாய்த் தோன்றுதடி!
    நீ நாக்கைக் காட்டையிலே
    உன் அன்னையின் தோற்றமடி!
    உன் மனதின் ஆசையெல்லாம்
    நிறைவேற்றும் உன் அன்புத் தந்தையடி!
    நான் துவண்டு விழும் போது
    உன் மடியே என் சொர்க்கமடி!
    என்னருகில் நீ இருந்தால்!
    மரணமும் மகிழ்ச்சியடி!
    பெண்ணைப் பெற்ற ஆண்களுக்கு மூன்று தாயடி!
    கொடுத்து வைத்தோர் எனைப் போல அவனியிலே யாரடி!
    எனைப் பெற்ற தாய் முதலானாள்!
    என் பெண்ணைப் பெற்ற மனையாளும் தாயானாள்!
    நான் பெற்ற என் பெண்ணே அன்பில், நீ மூன்றில் முதலானாய்!

    *****

    ”என் இரும்பெனும் இதயத்தை உன் மருந்துச் சிரிப்பால் நெகிழ்த்திய மலரே! நான் எத்தனை வெற்றிகள் பெறினும், பத்தரை மாற்றுத் தங்கமே உன்னிடம் மொத்தமாய்த் தோற்பதே இனிமை” என்று சந்தக் கவியில் சிந்தை தொடுகின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

    அரும்பு மலரே.. அருமை மகளே..

    அரும்பு மலரே.. அருமை மகளே..
    கரும்புச் சுவையே..கனிவாய் மொழியே.. நான்
    விரும்பும் தமிழே.. விண்ணுறை மதியே.. என்
    இரும்பினை யொத்த இதய மதனை.. நீ
    மருந்தெனும் சிரிப்பால் இளக்கி விட்டாயே…!

    தென்கடல் முத்தே.. தெவிட்டாத அமுதே
    கண்ணே மணியே.. கனவுப் பூவே.. என்
    விந்தை உலகே.. வியத்தகு அழகே.. நான்
    முன்னர்ச் செய்த தவப்பயன் விளைவோ..
    பொன்னே யுந்தன் தந்தை யானது…!

    இதந்தரும் தென்றலே.. இனித்திடும் கவிதையே..
    இதயத் துடிப்பே.. எந்தன் உயிரே.. நான்
    எத்தனை எத்தனை வெற்றிகள் பெறினும்..
    பத்தரை மாற்றுத் தங்கமே உன்னிடம்..
    மொத்தமாய் பணிந்து தோற்பதே இனிமை…!

    *****

    பேசும் பொற்சித்திரமாம் கனிமழலையைப் பாராட்டிக் கற்கண்டுக் கவிவடித்த கவிஞர் குழாம் வாழியவே!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    பெண்ணினத்தால் இம் மண்ணுலகம் சிறக்கும்…!

    திறத்தாலே உயர்வுற்று தாய்நாட்டுப் பற்றுடனே
    ……….தோன்றிய பெண்களால் நம்நாட்டுக்குப் பெருமை..!
    இறத்தலுக்கு அஞ்சா தாங்கிலேய ஆதிக்கத்திற்கு
    ……….எதிராக ஆயுதமேந்திப் போராடியவருமதில் உண்டு..!
    மறத்தியர்போல் வாழ்ந்த மறக்க முடியாதவரதில்
    ……….மங்கை வீர வேலுநாச்சியும் அஞ்சலையம்மாளும்..!
    அறத்தின் செல்வியெனச் சுதந்திரப் போராட்டத்தில்
    ……….ஆயிரமாயிரம் வீராங்கனைகள் இவர் போலுண்டு..!

    பெருமதிப்புக் கொண்டே அக்காலத்தில் கருத்துடன்
    ……….பெண்ணைக் கண்ணாகக் கருதியே காப்பாற்றினர்..!
    கருவிலேயே பெண்சிசுவை அழிக்கின்ற அடாத
    ……….காரியத்தைக் காணுகின்ற கொடுமை நிகழ்கிறது..!
    அருகிவரும் பாலினமாக இன்று பெண்ணினமே
    ……….சுருங்கிவிடுமோ என்கிற அச்சமும் எழுகின்றது..!
    அருங்கலம்போல் கிடைக்கின்ற அரிய உயிரை
    ……….அரும்புமுன் அழிப்பது கொடும்பாவச் செயலன்றோ..!

    பெண்ணாய்ப் பிறந்தாலே முழுதும் துன்பமெனப்
    ……….பெரிதே கவலையுறும் தாய்மார்கள் திருந்தவேணும்..!
    அண்டத்தில் பிறவி ஆணாயினும் பெண்ணாயினும்
    ……….அதிலரியது பெண்ணென்பதை அறிய வேண்டும்..!
    பெண்டாட்டி தாய்மகள் சகோதரியெனும் பலவாறு
    ……….பிறவியெடுக்கும் பிறப்புக்குப் பெண்ணே மூலமெனும்..
    கண்ணோட்டம் வந்துவிட்டால் கண்ணீர் அகலும்
    ……….காலமாற்றமும் இதற்கு நிச்சயமாய் உதவிசெய்யும்..!

    அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது; அதனினும் அரிது பெண் மகவாய்ப் பிறப்பது என்பதை இவ் வையம் அறிய வேணும். பெண்ணவள் அன்னையாய் மாறி உயிர்க்குலத்தை வளர்க்காவிட்டால் மண்ணுலகில் மன்னுயிர்கள் ஏது?

    மறத்தோடு நம் மண் காத்த வீரமங்கையரை மறக்கவியலுமோ? பெண் குழந்தைகளை அருளின்றிக் கருவிலே கொல்லாமல், திருவெனக் காப்போம்! என நன்மொழி பகரும் இக்கவிதையின் படைப்பாளி பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வாஸ்து ஹோமம், சத்ரு சம்ஹார ஆறுமுகஹோமம் நடைபெற்றது

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞனகுரு” டாக்டர் ஸ்ரீ முரளித ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 04.06.2018 திங்கட்க் கிழமை காலை 10.00 மணியளவில் வாஸ்து நாளை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் பிரத்யோகமாக பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாஸ்து பகவான் சன்னதியில் வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும் ஷஷ்டி திதியை முன்னிட்டு சத்ரு சம்ஹார ஆறுமுக ஹோமமும் நடைபெற்றது. மேலும் இதில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பஞ்சபூதங்களுக்கும், அஷ்டதிக்பாலகர்களுக்கும், வாஸ்து பகவானுக்கும், கார்த்திகை குமரனுக்கும் மஹா அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

    இந்த யாகங்களிலும் பூஜைகளிலும் பங்கேற்ற பக்தர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருட் பிரசாதம் வழங்கி ஆசிர்வதித்தார். இதனை தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. மேலும் நாளை 05.06.2018, 06.06.2018 நடைபெற உள்ள மங்கள சண்டி யாகத்தின் பூர்வாங்க பூஜைகள் இன்று நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    முலைகனத் தாயை அலைக்கழிய விட்டு
    கொலைகுண பூதனை கொங்கை -மலைசுவைத்தாய்
    அந்நஞ்சைப் பாம்பின்மேல் ஆடி ஜெரித்தவன்பால்
    நன்நெஞ்சே நிற்பாய் நினைந்து….கிரேசி மோகன்…..!

    Share
  • அன்னையர் தினம்

    உன்னை ஈன்ற அன்னையைப் போற்று
    தன்னுயிர் போகும் ஆபத்து எனினும்
    உன்னுயிர் காத்தல் முக்கியமென்றெண்ணி
    எண்ணற்ற வேண்டுதல்கள் ,எத்தனை பத்தியங்கள்
    கண்மூடித் தூங்குகையிலும் கருத்தினிலே கருவிருக்கும்
    உண்ணும் உணவினிலும் உன்மேலதான் கவனமெல்லாம்.
    புரண்டு படுக்கையிலும் , பொறுப்பெல்லாம் கருவின்மேல்.
    வறண்ட மனதினிலே ,வண்ண மலர்ச்சோலையாக
    திரண்ட குழந்தைதான் திகட்டாத இன்பமன்றோ.
    மனைவி எனும் நிலைமாறி , அன்னையெனும் நிலைபெறுதல்
    நினைவினிலே சுகமளிக்கும்,நெஞ்சமெலாம் நிறைந்திருக்கும்.
    உதிரத்தைப் பாலாக்கி உனக்குக் கொடுக்கையிலும்
    உதிர்க்கும் வார்த்தைகளின் உன்னத மழலையிலும்
    தொட்டிலிலிட்டு தாலாட்டு இசைப் பதிலும்
    வட்டிலில் சோறுவைத்து வான் நிலா காட்டுவதிலும் ,
    மடியினில் சுமந்த பிள்ளை ,மண்மீது தவழ்கையிலும்
    அடிமேல் அடியெடுத்து ஆடி ஆடி நடக்கையிலும்
    பள்ளிப் பருவத்தில் பாடம் சொல்லிக்கொடுப்பதிலும்
    துள்ளி விளையாடுகையில் அள்ளி அணைப்பதிலும்,
    ஒவ்வொரு கட்டத்திலும் , உன் ஒவ்வொரு அசைவினிலும்
    ஒவ்வொரு முன்னேற்றத்தையும் , உவகையுடன் ரசிப்பதிலும்
    உற்றாரும் ,மற்றோரும் பாராட்டும்போதேல்லாம்
    சற்றே பெருமையுடன் , சந்தோஷப் படுவதிலும்.
    சுணக்கமும் இல்லாமல் , சுமையாகக் கருதாமல்
    தனக்கென்று வாழாமல் உனக்கென்று வாழ்வதிலும்
    பாசத்தின் பொருளாக , தியாகத்தின் உருவாக
    நேசத்தைப் பொழிகின்ற , அன்னையைப் போற்று.

    விண்ணகத் தேவர்கள் , தங்கள் பிரதிநிதியாய்
    மண்ணகத்தே படைத்த மாண்புக்கு அன்னையை
    என்ன துன்பம் வரினும் , என்ன விலை கொடுத்தும்
    கண் எனக் காப்பதுன் கடமைஎன்றுணர்ந்துகொள் .

    எத்தனை பிறவிகள் எடுத்தாலும் , எண்ணற்ற செல்வம் கொடுத்தாலும்
    அத்தனையும் போதாது , அன்னையின் கடன் தீர்க்க.
    வித்தகனாய் விளங்குவதில் பெருமையில்லை , அன்னைக்கு
    முத்தனைய பிள்ளையாய் வாழ்வதே பெருமையன்றோ.

    சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

    Share