கவிஞர் இரா .இரவி

 

 

படத்திற்கு நன்றி:

http://foter.com/f/photo/3138264542/5719167fda/

 

பதிவாசிரியரைப் பற்றி

52 thoughts on “தமிழின் இமயம் திருவள்ளுவர்

  1. மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர்
    சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு !

    தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு ! கவிஞர் இரா .இரவி !

    தரணியில் முதல்மொழி நம் தமிழ்மொழி
    தரணி போற்றிடும் தன்னிகரில்லா மொழி!

    தமிழை அமுதென்றும் அமுதே தமிழென்றும்
    தன்னிகரில்லாக் கவிஞர்கள் பாடி உள்ளனர்!

    சொற்களின் சுரங்கம் நமது தமிழ்மொழி
    சொக்க வைக்கும் ஒலிப்பு தமிழ்மொழி !

    உலகமொழி ஆங்கிலத்திலும் பல சொற்கள்
    உள்ளன தமிழ்ச்சொற்கள் அறிந்திடுவீர் !

    பல்லாயிரம் வயதான மொழி பைந்தமிழ்
    பண்ணிசை முதலில் ஒலித்ததும் தமிழ்மொழியே!

    உலக மொழிகளின் மூத்தமொழி தமிழ்மொழி
    உலக மொழிகளின் தாய்மொழி தமிழ்மொழி !

    உலகம் முழுவதும் ஒலிக்கும் தமிழ்மொழி
    உணர்வினை ஊட்டிடும் உன்னதம் தமிழ்மொழி !

    உயிரெழுத்து மெய்எழுத்து உயிர்மெய் எழுத்தென
    ஒப்பற்ற எழுத்துக்களைக் கொண்டது தமிழ்மொழி !

    சங்கம் வைத்து வளர்த்த மொழி தமிழ்மொழி
    சங்கப்பாடல்கள் தந்த மொழி தமிழ்மொழி !

    இலக்கண இலக்கியம் உள்ளமொழி தமிழ்மொழி
    ஈடில்லாப் பெருமைகள் பெற்றமொழி தமிழ்மொழி !

    உலக அறிஞர்கள் போற்றியமொழி தமிழ்மொழி
    உலகிற்கு பண்பாடு பயிற்றுவித்த மொழி தமிழ்மொழி !

    செம்மொழி எம்மொழி சிறந்தமொழி தமிழ்மொழி
    செந்தமிழ் நாட்டின் தாய்மொழி தமிழ்மொழி !

    காப்பியங்கள் காவியங்கள் உள்ள மொழி தமிழ்மொழி
    கற்கண்டாய பேசி இனித்திடும் மொழி தமிழ்மொழி !

    பன்மொழி அறிஞன் பாரதி பாட்டில் பாடினான்
    பைந்தமிழ் மொழி போல இனியது இல்லை என்றான் !

    மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆராய்ந்தபின்
    மொழிந்தார் தமிழ்மொழியே முதல்மொழி என்று !

    முதல்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட
    மண்ணின் மைந்தர்கள் பெருமை கொள்வோம்!

    தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு
    தமிழே முதல் மொழியென்று கொட்டு முரசே !

  2. பொதிகைத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !

    தமிழுக்கு அமுதென்று பேர்! கவிஞர் இரா. இரவி !

    தமிழுக்கு அமுதென்று பேர்! என்று அன்றே
    தமிழை அமுதமென்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் !
    அமுதம் என்பது இறப்பு தராத அருமருந்து என்பர்
    ஆம் தமிழ் படித்தவருக்கும் இறப்பு இல்லை!
    பூத உடல் பூமியை விட்டு மறைந்த போதும்
    புகழுடல் தமிழறிஞர்களுக்கு நிலைத்து நிற்கும்!
    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திட்ட வள்ளுவன்
    இன்றும் நிலைத்து நிற்கிறான் உலகம் முழுவதும்.
    அவ்வை இன்று உலகில் இல்லை என்றாலும்
    அவள் பாடிய ஆத்திசூடி நிலைத்து நின்றது!
    ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தமிழ்
    அகிலத்தின் முதல்மொழி நம் தமிழ்மொழியன்றோ!
    முதுமை வராமல் காக்கும் அருமருந்து தமிழ்
    முத்தமிழ் அறிந்து கொண்டால் இளமை நிலைக்கும்!
    தொன்மை இலக்கியம் தொல்காப்பியம் மட்டுமல்ல
    தொல்காப்பியத்திற்கு முந்தைய அகத்தியமும் உண்டு!
    சில நூறு ஆண்டு வரலாறு மற்ற மொழிகளுக்கு
    பல நூற்றாண்டு வரலாறு தமிழுக்கு மட்டுமே!
    நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் மற்றமொழி
    நானிலம் தோன்றிய போதே தோன்றியது தமிழ்மொழி
    தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றார் புரட்சிக்கவிஞர்
    தமிழ் எங்கள் உயிருக்கு மேல் என்பேன் நான் !
    தமிழன்னையை அரியணை ஏற்றிட தரணி வாழ்
    தமிழர்கள் யாவரும் ஓரணியில் அணி திரள்வோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *