–பி.தமிழ் முகில்.

thmizmukil

தகதகவென  ஜொலிக்கும்

தங்கக் கிரீடம் சுமந்து

சூரியப் பெண்ணவள்

வான் சோலையில் உலவ

எதிர்பட்ட  மேகக்  காதலனை

கண்டதும் மெல்ல

நாணமதுவும் ஆட்கொண்டு விட

தன்  சூரியக் காதலியை

மேகக் காதலன்

ஆரத்  தழுவிக்  கொள்ள – அவளோ

வெட்கத்துடன் சிறு  கீற்றாய்

புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு

மெல்ல  தன்  முகம் மூடிக் கொள்ள

ஆங்கே  அரங்கேறுகிறது

அந்திப் பொழுதிலோர்

நிலை மாறாக்  காதல் !

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on "நிலை மாறாக் காதல் !"

  1. நிலவைத்தான் இதுவரை பெண்ணாக பாவித்து கவிதைகள் வந்துள்ளன. எனக்கு தெரிந்து இந்தக் கவிதையில் தான் முதன்முதலாக சூரியனை பெண்ணாக பாவித்து கவிஞர் எழுதியுள்ளார்.

    முரன்பாடுகளை உண்டாக்குவதுதான் மாற்றம். அந்த வகையில் இது வித்தியாசமான கவிதை.பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.