நாளொரு பக்கம்: 5: 2017
-இன்னம்பூரான்
மார்ச் 30, 2017
“I speak to everyone in the same way, whether he is the garbage man or the president of the university.” -Albert Einstein, physicist, Nobel laureate (1879-1955)
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல; அவர் ஒரு ஆத்மஞானி. சமத்துவத்தை எளிய சொற்களில், அதுவும் தனது பண்பே அதுதான் என்பதையும் இரு வரிகளில் கூறிவிட்டார். அவரது பெளதிக அறிவாற்றல், ஆய்வுத் தீர்மானங்கள் ஆகியவை உலகளவில் புகழப்பட்டாலும், அவற்றை புரிந்து கொண்டவர்கள் சொற்பம்.
விளையும் பயிர் முளையிலே என்பதற்கேற்பப் பள்ளியில் முதல் மாணவன் மட்டுமல்ல; 15 வயதிற்குள் கணக்குப்புலியாக கருதப்பட்டார். காதல் பரவசத்தில் ஆழ்ந்திருந்த அவருக்கும், மனைவி மிலெவா மெரிக் அவர்களுக்கும் திருமணத்துக்கு முன் பிறந்த பெண்குழந்தையைப் பற்றி தகவல் இல்லை. இந்த மட்டும் அவருடைய சேகரத்திலிருந்து 1980களில் தெரிய வந்தது. இதைக் கூறுவதின் காரணம், அவரும் சராசரி மனிதனாகத்தான் வாழ்ந்து வந்தார்.
தனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்பதில் அவருக்கு ஐயமிருந்தது இல்லை. மிலெவாவுடன் இல்லறம் நீடிக்கவில்லை. விவாகரத்து; எல்ஸாவுடன் திருமணம். அப்போது மிலெவாவிடம், தனக்கு நோபல் கிடைத்தவுடன் அதில் ஒரு பங்கு அவளுக்குக் கொடுப்பதாக 1919இல் சொன்னார். 1922இல் அது கிடைத்தவுடன், தன் வாக்கைக் காப்பாற்றினார்.
ஆதவனின் அருள் அவருக்குக் கிட்டியது. 1919ஆம் வருட சூரிய கிரகணத்தை ஆராய்ந்த ஸர் ஆர்தர் எட்டிங்க்டன், ஐன்ஸ்டீனின் சிந்தனையில் எழுந்த விஞ்ஞானத் தீர்மானங்கள் இதனால் நிரூபிக்கப்பட்டது என்றார்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:
https://s-media-cache-ak0.pinimg.com/564x/a7/60/81/a76081eddcec91cf117063a6b7e0b5e2.jpg