மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

உனது நாள் ஓடுது,
உன் மனது வாடுது,
நீ தேவை இல்லை என்பதால்!
வஞ்சியின்  கனிவு மொழிகள் எனது
நெஞ்சினில் ஊன்றிப் போனது!
காலை எழும் மங்கை
கழிப்பது தன் பொழுதை
வாழ்வு விரைவது அறியாமல் போனாள்.
தேவை யில்லை நீ யெனத்
தெரிய வில்லை அவள் விழிகளில்!
காதல் அடையாளம் எதுவும்
காண வில்லை நானும்! 

கண்ணீர்த் துளிகள் யாரை
எண்ணி அழுதிடும்?
நீ அவளை விரும்புவ துண்மை;
அவளும் உனக்குத் தேவையே!
தன் காதல் செத்த விட்ட
தென்றவள் விலகிப் போயினும்,
நம்ப வில்லை நீதான்!
ஆயினும் நீ நினைத்துக் கொள்வது,
அவள் உனைத் தேடுவதாய்! 

ஆயினும் அவள் கண்ணுக்குள்
நீயில்லை  தெரியுதா?
நீடித் திருந்த காதல் உணர்வு
ஓடிப் போனது புரியுதா?
வீட்டுக் குள்ளே நீ!
வெளியே செல்வது அவள்!
அவள் சொல்வது,
தனக் கொருவன் இருப்பதாய்!
உனது நாள் ஓடுது!
உன் மனது வாடுது!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *