சுரேஜமீ

என்னைப் பற்றி! என் இயற்பெயர் கல்யாணசுந்தரராஜன் காளீஸ்வரன். புனைப் பெயர் 'சுரேஜமீ' (என் அழைப்புப் பெயர் 'சு'ந்தர்; மனைவி பெயர் 'ரே'வதி; இரட்டை மகள்களின் பெயர்களான 'ஜ'னனி மற்றும் 'மீ'ரா வின் முதலெழுத்துக்கள் இணைக்கப் பட்டதுதான் புனைப்பெயர்). தொழிலால் ஒரு பட்டயக் கணக்காளன். மதுரையில் பிறந்து , முகவையில் வளர்ந்து, தலைநகர் ஏகி, தற்போது வளைகுடா நாட்டில், மஸ்கட்டில் வசித்து வருகிறேன். தமிழின் மீதும், தமிழினத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டு, சமூகத்தைச் சரியான பாதையில் நகர்த்த கவிதை, கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதுவதை சமுதாயப் பணியாகக் கருதுபவன். என்னுடைய வலைப்பூ http://kksr-aurosun.blogspot.com