அமெரிக்காவின் பல பகுதிகளில் இப்போது பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. ஒஹாயோ மாகாணத்தின் பனி படர்ந்த ஏரிக்கரையில், பறவைக் கூட்டம் ஒரே தாளகதியில் கீழிறங்குவதும் சிறகடித்து மேலேறிப் பறப்பதும் மிக ரம்மியமாக இருக்கிறது. இந்த வசீகரக் காட்சியை ஒஹாயோவிலிருந்து படமெடுத்து அனுப்பியிருக்கும் திலகா சுந்தருக்கு நம் நன்றிகள்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.