சாந்தி மாரியப்பன்

தொடர்ந்த வாசிப்பினால்

ஓரம் கிழிந்த புத்தகங்கள்

மேலும் கிழிக்கப்பட்டன

பொட்டலம் கட்டப்படவென..

இதயத்தின் அருகிலோ அல்லது

ஏதோ ஓர் மூலையிலோ,

மாறுபடவும் கூடும்,

அதன் முக்கியத்துவமும் இருப்பிடமும்

உள்ளடக்கத்தினைப் பொறுத்து..

கடலையோ வைரமோ

அல்லது

சுமக்க நேரிட்ட எண்ணக் குவியல்களோ;

ஏதோவொன்றின்

உபயோகம் தீர்ந்த பின்

கசக்கி வீசப்பட்டாலும்

மேலும்

உபயோகப் படவெனக் காத்திருக்கின்றன,

கோணியும் பசியும்

சுமந்தலையும்

இருகால் மற்றும் நாற்கால் உயிர்களுக்காய்,

குப்பையென அவதாரமெடுத்து..

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on "மற்றுமோர் அவதாரம்"

  1. கசக்கி வீசப்பட்டாலும், 
    காத்திருக்கும் பயன்பாட்டைக்
    கச்சிதமாய்ச் சொன்ன
    நாஞ்சில்(ஊர்?) சாந்திக்கு
    நல்வாழ்த்துக்கள்…!     
              -செண்பக ஜெகதீசன்…
                 (vsnjag@yahoo.com)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.