‘விண்ணோர் தொழும் திரு அண்ணாமலை’ என்ற பாடலை இசைஞானி இளையராஜா இயற்றி இசையமைத்துள்ளார். “ராஜாவின் ரமண மாலை” என்ற இசைத் தொகுப்பில் இருந்து இதைக் கற்றுக்கொண்டு நாகி நாராயணன் பாடுகிறார். இந்தத் திருக்கார்த்திகைத் திருநாளில், திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்ட இந்த நன்னாளில் இதை வெளியிடுகிறோம். கேட்டு மகிழுங்கள். திருக்கார்த்திகை தின நல்வாழ்த்துகள்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.