வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்  

நதியின் சில்லெனும் குளிர்மை தந்து
நதியின் மடியில் படியும் மணலாய்
பதிக்கும் எழுத்து வண்ணங்கள் உலகில்
மிதிக்கும் அநீதியை நிதமும் திடமாக
அதிமதுரமாய் உலகிற்கு அளவிலாப் பயனாய்
இதிகாச உயர்ச்சியில் இணைந்த விதமாய்
நதியாம் எழுத்தின் நீலக் குறிப்பு
துதிக்கும் ஒரு பளிங்கு நிலை.

நதியில் விழும் பிம்பமும்அல்ல
நதியில் விழும் இறகும் அல்ல
குதிக்கும் தமிழில்; குளித்து எழுந்து
பதிக்கும் நுண்ணிய தமிழ் முத்தம்.
உதிக்கும் எண்ண விதைகள் வரமேந்தி
மதித்துப் போற்றும் நம்பிக்கை நிறைத்து
நதியின் நீல நெளிவின் ஒக்கலையில்
முதிர் பாறையாய் அமர்வது எழுத்து.

உரைக்கும் எழுத்தாம் தமிழ் ஸ்பரிசம்
கரைக்கு வரும் அலையின் ஸ்பரிசம்.
நுரை நுரையாம் வெண்மைத் தமிழ்.
வரை வரையாகத் தினம் முத்திக்கிறது.
தரையில் எத்தனை எத்தனை இரசவாதம்.
இரையாக்குகிறது மனிதரின் பயனான நேரம்.
அரைக்கும் சந்தனமாய் மின்னும் ஒளிர்வாய்.
அரையிருள் முழுநிலவு என்று ஆகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *