அண்ணாகண்ணன் யோசனைகள் – 49

இந்தியா இதுவரை காணாத மிகப் பெரிய ரெயில் விபத்து. இத்தகைய துன்பியல் நிகழ்வு எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க என்ன செய்யலாம்? மோதிய முனைகளில் உடல் நசுங்கி, உறுப்புகள் துண்டாகி இறந்தவர்கள் ஒரு புறம் என்றால், மோதிய வேகத்தில் ரயில் சுவர்களில் மோதுண்டு இறந்தவர்களும் பலர் இருக்கக் கூடும். இங்கே தான் எனக்கு ஒரு யோசனை.
மகிழுந்துகளில் இருப்பது போன்ற காற்றுப்பைகளைத் தொடர்வண்டிகளின் உள்சுவர்களிலும் கூரையிலும் ஒவ்வோர் இருக்கையின் முன்னும் பின்னும் உட்காரும் இடங்களிலும் வைக்கலாம். குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் சென்று மோதினால், உடனே இந்தக் காற்றுப் பைகள் விரியும்படி செய்ய வேண்டும். அப்போது பயணிகளுக்கு உயிர்ச்சேதம் ஏற்படாமல் காப்பாற்றலாம். குறைந்தபட்சம், உயிர்ப்பலியைப் பெருமளவில் குறைக்கலாம். இதனைப் பேருந்துகள், விமானங்கள் உள்பட இதர பயணிகள் வாகனங்களுக்கும் விரிவுபடுத்தலாம்.