நரேந்திர மோடியின் திருப்புமுனைப் பணிகள்

அண்ணாகண்ணன்

இந்தியாவின் தீர்க்க முடியாத சிக்கல்களாக, நெடுங்காலமாக நீடித்த பலவற்றைப் பிரதமர் நரேந்திர மோடி வெற்றிகரமாகத் தீர்த்துள்ளார்.

* காஷ்மீருக்குச் சிறப்புச் சலுகைகளை நீக்கி, யூனியன் பிரதேசமாக மாற்றியது
* பாபர் மசூதி வழக்கு முடிவு பெற்று, அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவிலை நிர்மாணித்தது
* பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு
* பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு
* முத்தலாக் தடைச் சட்டம்
* தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது அனேகமாக நிறுத்தப்பட்டது
* 12 கோடி வங்கிக் கணக்குகள் தொடக்கம். மானியங்கள், அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகின்றன
* பாஸ்டாக் வழியே சுங்கக் கட்டணம்
* யூபிஐ வழியே பணப் பரிமாற்றம்
* இந்திய ரூபாயில் இதர நாடுகளுடன் வர்த்தகம்
* ரூ.12 லட்சம் வரை வருவாய் உள்ளவர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு

இந்த இலக்குகளை எட்டுவதில் அவருக்கு ஏராளமான தடைகள் இருந்தன. கடும் விமர்சனங்களை அவர் எதிர்கொண்டார். ஆனால், துணிச்சலாக இவற்றை நிறைவேற்றினார். தொலைநோக்குடன் முடிவுகளை எடுத்தார். உலக அரங்கில் இந்தியாவின் புகழை உயர்த்தினார். எழுச்சி மிக்க புதிய இந்தியாவை மீண்டும் கட்டமைத்ததில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

துணிவும் தொலைநோக்கும் ஆளுமையும் உறுதியும் மிக்கவராக நரேந்திர மோடி திகழ்கிறார். இன்று 75ஆவது பிறந்தநாள் காணும் அவர் இன்னும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்.

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *