முகில் தினகரன்

அத்தியாயம்  – 16

     அன்று காலை பதினோரு மணியிருக்கும். தறியின் முன் நின்றபடி அறுந்து போன நூலை நாடாவிற்குள் நுழைத்து, வாயால் உறிஞ்சிக் கொண்டிருந்த சுந்தரிடம் வந்த ரைட்டர; கதிர;வேல், ‘உன்னைப் பார;க்க உன் தங்கச்சி வந்திருக்காப்பா!”

 

     ‘தேவியா?….எதுக்கு இந்த நேரத்துல?” குழப்பத்துடன் தறிக்கூடத்தை விட்டு வெளியே வந்தான்.

 

     ஆபீஸ் ரூமிற்கு முன் நின்று கொண்டிருந்த தேவி இவனைப் பார;த்ததும் கண் கலங்கினாள்.

 

     ‘என்ன தேவி?…என்ன பிரச்சினை?”

 

     ‘அண்ணா!…கொஞ்சம் என் கூட வர முடியுமா?”

 

     ‘எங்கேம்மா?”

 

     ‘ஆஸ்பத்திரிக்கு!”

 

     ‘என்னது?…ஆஸ்பத்திரிக்கா?…என்னம்மா..யாருக்கு என்னாச்சு?” படபடப்பாகிக் கேட்டான்.

 

     ‘அவருக்குத்தான்”

 

     ‘மாப்பிள்ளைக்கா?…என்னாச்சு?”

 

     ‘மொதல்ல என் கூடக் கிளம்பி வாண்ணே!”

 

     உள்ளே சென்று ரைட்டரிடம் சொல்லிக் கொண்டு, அவன் கொடுத்த அர;ச்சனைகளை சத்தமில்லாமல் பெற்றுக் கொண்டு, அதன் தாக்கம் சிறிதும் முகத்தில் தெரியாதபடி பாவத்தை மாற்றிக் கொண்டு தேவியுடன கிளம்பினான் சுந்தர;.

 

——

அந்தத் தனியார; மருத்துவமனை பளிங்கு மேடை போல் ‘பளிச்”சென்று படு சுத்தமாயிருந்தது.  கூட்டமும் கூட அவ்வளவாக இல்லை.

 

     தேவியுடன் வராண்டாவில் நடந்தவன், ‘ஏம்மா…நாலஞ்சு நாளாவே வாந்தி எடுத்திட்டிருக்கார;ன்னு சொல்றே!…ஏன் எனக்கு தகவலே சொல்லியனுப்பலை?”

 

     ‘அது…வந்து….சாதாரண அஜீரணக் கோளாறாத்தான் இருக்கும்னு நெனச்சோம்!…கடைசில இங்க வந்து எல்லா டெஸ்டும் எடுத்த பிற்பாடுதான் தெரிஞ்சுது…இது…வேறயாம்!” தேவியின் குரலில் லேசாய் கர..கரப்புத் தட்டியது.

 

‘வேறேன்னா?…என்னவாம்?” சுந்தர; சற்று அதட்டலாகவே கேட்டான்.

 

‘அது…அது…அப்புறம் சொல்றேண்ணா!” என்றவள் ‘டாக்டர;.மு.பே.ராமலிங்கம்‘ என்ற எழுத்துக்கள் பொருத்தப் பட்ட அறையின் முன் நின்று, மெல்லக் கதவைத் தட்டினாள்.

 

‘யெஸ்…கம் இன்!” உள்ளேயிருந்து கம்பீரமான குரல் வர,

 

இருவரும் உள்ளே நுழைந்தார;கள்.

 

‘டாக்டர;…இவரு என்னோட அண்ணன்…இவரோடது பொருந்துமான்னு டெஸ்ட் பண்ணிப் பாருங்க டாக்டர;.”

 

சுந்தரை மேலிருந்து கீழ் வரை பார;த்த டாக்டர;, ‘என்ன மிஸ்டர; உங்க சிஸ்டர; எல்லா விவரத்தையும் சொல்லிட்டாங்கல்ல?”

 

‘ஆம்” என்று சொல்லவும் முடியாமல் ‘இல்லை” என்று சொல்லவும் முடியாமல், திணறினான் அவன். ‘இங்க என்ன நடக்குது? இவ எதுக்கு என்னைய டெஸ்ட் பண்ணச் சொல்றா?” குழம்பினான்.

 

‘டாக்டர; அவரெல்லாம் ‘ஓ.கே!” சொல்லிட்டார;…நீங்க டெஸ்ட் பண்ணிடுங்க!” தேவி அவசரப்பட்டாள்.

 

சுந்தருக்கு தலையும் புரியவில்லை…வாலும் புரியவில்லை. ‘நான் எதுக்கு ஓ.கே! சொன்னேன்?…”

 

‘சரிம்மா…நீங்க ரெண்டு பேரும் வெளில வெய்ட் பண்ணுங்க!…நான் டியு+ட்டி டாக்டரை அனுப்பறேன்!”

 

தேவியும், சுந்தரும் அந்த அறையை விட்டு வெளியேறி வராண்டா சோபாவில் வந்தமர;ந்தனர;.

 

இன்னும் குழப்பத்திலிருந்து மீளாத சுந்தர;, மெல்லக் கேட்டான். ‘தேவி…இங்க என்ன நடக்குதுன்னே எனக்குப் புரியலை…எனக்கு என்ன டெஸ்ட் பண்ணனும்கறே?…நான் நல்லாத்தானே இருக்கேன்?”

 

எங்கே டெஸ்ட்…அது..இது..என்று ஆரம்பித்து அந்த வயிற்றுத் தழும்பிற்கான உண்மையான காரணத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து விடுவார;களோ…என்று அவன் உள்ளுர அஞ்சினான்.

 

‘அண்ணா…அது..வந்து…அவருக்கு வாந்தி தொடர;ந்து வந்ததுக்கு டெஸ்ட் பண்ணிணப்பத்தான் தெரிஞ்சது…அவருக்கு…அவருக்கு..”

 

‘சொல்லும்மா…அவருக்கு என்ன?”

 

‘கிட்னி ஃபெயிலியராம்!” சொல்லி விட்டு கதறினாள் தேவி.

 

ஆடிப் போனான் சுந்தர;.

 

‘கடவுளே…உன் விளையாட்டை என் வாழ்க்கையில் காட்டியது போதாதுன்னு…இப்ப என் தங்கை வாழ்க்கையிலும் காட்ட ஆரம்பிச்சிட்டியா?”

 

‘அதாண்ணா…அவருக்கு உன்னோட கிட்னியைத் தானம் தர;றதுக்காக…உன்னைய அழைச்சிட்டு வந்தேன்!…அது பொருந்துதான்னு பார;க்கறதுக்காகத்தான் உனக்கும் டெஸ்ட்”

 

சம்மட்டியால் யாரோ நடு மண்டையில் ஓங்கி அடித்தாற் போலிருந்தது சுந்தருக்கு. காலடியில் பு+மி நழுவிப் போய்க் கொண்டேயிருக்க,  தலை ‘விர;” ரென்று ராட்டினம் போல் சுழன்றது.

 

‘என்னம்மா…நீ என்ன சொல்றே?” குழறலாய்க் கேட்டான்.

 

‘ஏண்ணா…உன்னோட மாப்பிள்ளைக்காக நீ இது கூடச் செய்ய மாட்டியா?…அட…அவருக்காக இல்லாட்டியும்..உன் அன்புத் தங்கைக்காகவாது செய்வாய் இல்ல?”

 தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *