நவீன பஞ்சாங்க படனம்

இன்னம்பூரான்

10/11.04 2013

யுகாதி பண்டிகையை முன்னிட்டு உலக மாந்தர்கள் யாவருக்கும் வாழ்த்துக்கள்.

சுபிக்ஷமாக உங்கள் வாழ்க்கை அமையும். முயற்சியையும், பயிற்சியையும் கை விடேல்’

குடும்பமும், பரிவாரமும், சுற்றமும், சமுதாயமும் செழித்தோங்கும். மனித நேயமே துணை.

தனி நபர்களின் முன்னேற்றம், அவர்கள் கையில். ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்.

இறைவனை தொழு. தன் கையே தனக்கு உதவி என்பதை மறக்காதே.

முதுமையை பழிக்காதே. குழவியை விரட்டாதே. யாரையும் இகழாதே.

நேசம் ஒரு பிணைப்பு. அன்பு ஒரு பிடிப்பு. கனிவு ஒரு பண்பு.

ஒரு அசரீரி சொல்ல, கை எழுத, நானும் பஞ்சாங்க படனம் கேட்டுக்கொண்டேன்.

ஜய விஜயீ பவ!

அன்றொரு நாள் கல்கியின் பார்த்திபன் கனவு படித்தது, ‘விஜய’ வருஷத்தின் விஜயம் போது கண்ணில் தென்பட்டது

“…உறையூரில் அன்று அதிகாலையிலிருந்து அல்லோலகல்லோலமாயிருந்தது…வீட்டுக்கு வீடு தென்னங்குருத்துக்களினாலும் மாவிலைகளினாலும் செய்த தோரணங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. வீடுகளின் திண்ணைப் புறங்களிலெல்லாம், புதிய சுண்ணாம்பும் சிவப்புக் காவியும் மாறிமாறி அடித்திருந்தது. ஸ்திரீகள் அதிகாலையிலேயே எழுந்திருந்து, தெருவாசலைச் சுத்தம் செய்து, அழகான கோலங்கள் போட்டு, வாசலில் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்கள்…விடிய ஒரு சாமம் இருக்கும்போதே, அரண்மனையிலுள்ள பெரிய ரண பேரிகை முழங்கத் தொடங்கியது. அதனுடன் வேறு சில சத்தங்களும் கலந்து கேட்கத் தொடங்கின… இவ்வளவுடன், வழக்கத்துக்கு முன்னதாகவே துயில் நீங்கி எழுந்த பறவைகளின் கல கல சத்தமும் சேர்ந்து ஒலித்தது. சூரிய உதயத்துக்கு முன்னாலிருந்தே அரண்மனை வாசலில் போர் வீரர்கள் வந்து குவியத் தொடங் கினார்கள். படைத் தலைவர்கள் அவர்களை அணிவகுத்து நிற்கச் செய்தார்கள்…இந்த மாதிரி அணிவகுப்பு நடந்து கொண்டிருக்கையில் அடிக்கடி போர் வீரர்கள் “வீரவேல்” “வெற்றிவேல்” என்று முழங்கிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் அரண்மனை முன் வாசலில் கலகலப்பு ஏற்பட்டது. “மகாராஜா வருகிறார்!” “மகாராஜா வருகிறார்!” என்று ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அரண் மனைக் குள்ளேயிருந்து கட்டியக்காரர்கள் இருவர், “சோழ மண்டலாதிபதி பார்த்திப மகாராஜா வருகிறார்! பராக் பராக்!” என்று கூவிக் கொண்டு வெளியே வந்தார்கள். வீதியில் கூடியிருந்த அந்தணர்களும் முதியோர்களும் “ஜய விஜயீபவா!” என்று கோஷித்தார்கள்…”

சுபம். “ஜய விஜயீபவா!”

சித்திரத்துக்கு நன்றி: http://www.tamilnews.cc/admin/uploads/imagesCAZDWK5U.jpg

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on "யுகாதி ఉగాది, ಯುಗಾದಿ) गुढीपाडवा"

  1. தங்களுக்கும் என் மனமார்ந்த‌ யுகாதி நல்வாழ்த்துக்கள்.  தங்கள் அறிவுரைகள் அத்தனையும் ரத்தினங்கள். பகிர்விற்கு என் நெஞ்சார்ந்த நன்றி. ‘பார்த்திபன் கனவு’ படித்ததும், ஃப்ளாஷ்பேக் வந்து நினைவில் ஜிலேபி சுற்றியது. இந்த அற்புதமான நூல் படமாக எடுக்கப்பட்ட போது ஏன் பிரமிக்கத்தக்க வெற்றி பெறவில்லை என துல்லியமாக எனக்குச் சொன்னது (மெயின் சஸ்பென்ஸே சிவனடியார் யார் என்பது. படத்தில் ஆரம்பத்திலேயே அது உடைந்துவிடும்), 3ம் வகுப்பு தாண்டாத என் உறவுக்கார மூதாட்டி ஒருவர். அவரே,  பார்த்திபன் கனவை முதன் முதலில் எனக்கு சோறூட்டும் நேரத்துக் கதையாகச் சொன்னவர். பின்னரே இதை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.