சிறுகை அளாவிய கூழ் (19)
இவள் பாரதி
எல்லாவித
அழுத்தங்களிலிருந்தும்
விடுபட
போதுமானதாயிருக்கிறது
உன் புன்னகை
—————————
உனதசைவின்
ஒவ்வொரு கணத்தையும்
சேகரிக்க முயன்று
கைக்கொள்ளாமல்
கவிதையில் பத்திரப்படுத்திவிட்டு
மீண்டும் சேகரிக்கிறேன்
அள்ளக்குறையாத
அட்சயப்பாத்திரமாய்
அசைவுகளால் நிரப்புகிறாய்
வழிந்தோடி நிரம்பி
மூழ்கடிக்கிறது என்னை
மீளத்துணியாமல் மிதக்கிறேன்