கோபாலன்

images (2)

விரிந்து விளங்கும் வானம் போல் பரந்த மனம் கொள்ள வேண்டும்

உயர்ந்து நிற்கும் மலை போல உயரிய லட்சியத்துடன் வாழ வேண்டும்

ஓயாத கடல் அலைகள் போல் சோம்பலின்றி சுறுசுறுப்புடன் உழைக்க வேண்டும்

கண்ணுக்குத் தெரியாது உயிரூட்டும் காற்று போல் விளம்பரமின்றி உதவ வேண்டும்

நெருங்க முடியாத நெருப்பு போல் தீயவை அணுகாது தூய்மையாய் வாழவேண்டும்

உலகைத் தாங்கி நிற்கும் நிலம் போல் பொறுமையுடன் பொறுப்புகளைச் சுமக்கவேண்டும்

மலையிலே பிறந்து நிலத்திலே விரைந்து அமைதியாய் கடலில் கலக்கும் நதி போல்

பிறப்பு முதல் மூப்பு வரை ஆடி ஓடி வாழ்ந்து இறுதியில் அமைதியாய் இறைவனடி நாட

                                                                                            வேண்டும்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.