-பா. ராஜசேகர்

சிப்பியில்
மழை விழுந்து
முத்தாக !

சேற்றிலே
மழை விழுந்து
தாமரையாய்!

நீ
பிறந்த இடம்
சகதி கண்டேன் !

நோய்களுக்குக்
காரணியாய்ச்
சாதனைகள்
பல கண்டேன் !

சோதனை
நீர் சூழும்
தலை நிமிர்ந்தாய்!

தலைக்கனமே
உன்னில் இல்லை
நீர் இறங்க
நீ இறங்கி!

உன்னழகில்
காதல் கொள்ளும்
நீர் தவழும்!

தாமரை இலை
நீர் படர
உலகறியும்
உன் குணமறியும்!

கண்ணகியும்
உனைக்கண்டு
கற்பு கொண்ட
கதையறியும் !

உன் குணப்பெருமை
உலகறிய
நானுரைப்பேன் !

மனிதா
பிறப்பாலே
ஒன்றுமில்லை
வாழ்ந்து நீ
பெருமை கொள்ளு !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *