-பா. ராஜசேகர்
சிப்பியில்
மழை விழுந்து
முத்தாக !
சேற்றிலே
மழை விழுந்து
தாமரையாய்!
நீ
பிறந்த இடம்
சகதி கண்டேன் !
நோய்களுக்குக்
காரணியாய்ச்
சாதனைகள்
பல கண்டேன் !
சோதனை
நீர் சூழும்
தலை நிமிர்ந்தாய்!
தலைக்கனமே
உன்னில் இல்லை
நீர் இறங்க
நீ இறங்கி!
உன்னழகில்
காதல் கொள்ளும்
நீர் தவழும்!
தாமரை இலை
நீர் படர
உலகறியும்
உன் குணமறியும்!
கண்ணகியும்
உனைக்கண்டு
கற்பு கொண்ட
கதையறியும் !
உன் குணப்பெருமை
உலகறிய
நானுரைப்பேன் !
மனிதா
பிறப்பாலே
ஒன்றுமில்லை
வாழ்ந்து நீ
பெருமை கொள்ளு !

Leave a Reply