-பா.ராஜசேகர்

பச்சையிலே பட்டுடுத்திப்
பாறையிலே முகம் புதைத்து
நாணலாக இடையசைத்துத்
தவழ்ந்துவரும் மலைமகளே !                 falls

வான் பொழிந்த புன்னகையிலே
மலையரசி பெற்ற மலையருவி
வறட்சிகண்ட உயிரினங்கள்
மகிழ்ச்சிகொள்ள வந்த பேரழகே !

இளமை பொங்க இருகரையும்
மனமகிழ்ந்து ஓடி ஆடி
நீ ஆர்ப்பரித்துக் கொட்டும்
அழகுக்கு ஈடு இணை இல்லையடி!

இயற்கை தந்த இன்பத்திலே
உன் சிரிப்பொலியே
எமக்குப் பசுமைச் சொர்க்கமடி !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *