வளைவுகளின் தியானம்
-கவிஜி
உள்ளூர
ஊரத் தொடங்கும்
எறும்புகளின்
பயணத்தில்
நான் சாலையாகிறேன்…
சுவாசிக்க மறந்த
இருபுறங்களின்
சுளீரில்
நான்
கவனமற்றுப்
பின்தொடர்கிறேன்…
நானும் யாவும்
தீர்வல்ல என்பதாகத்
தீர்க்கவல்ல தரிசனம்
நொடியில்
கடக்கிறது…
நான்
அற்புதங்களின் தேசம்
உருவாக்க
ஒன்றும் இல்லாமல்
போன திசைகளின்
வீழ்ச்சியாய்ப்
பூகோளம் வரைகிறேன்…
வளைவுகளில்
கடவுள் வந்து போகலாம்…
முதலில் வளைவுகள்
சொல்லித்தர
வேண்டி, யோசிக்கையில்
எறும்புகள்
ஓய்வெடுக்கின்றன…
வளைவுகளின் பொருள்
தெரியாத
தியானத்தோடு…!