( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா )

 

 

அளவுடனே உணவுண்டால்

ஆரோக்கியம் அமைந்துவிடும்

அளவுமீறி ஆகிவிடின்

அனைத்துமே அழிந்துவிடும் !

 

வாழ்வதற்கும் பணந்தேவை

பணம்மட்டும் வாழ்வல்ல

பணமெண்ணி வாழ்ந்துவிடின்

பாழாகும் வாழ்க்கையது !

 

படிக்கவேணும் வாழ்க்கையிலே

பலவற்றை யாவருமே

பட்டம்மட்டும் வாழ்வல்ல

பண்பும்சேர்ந்து வரவேணும் !

 

கோவிலுக்குப் போகவேணும்

குறைசொல்லல் தவிர்க்கவேணும்

பாவம்பற்றி எண்ணாமல்

பலருக்கும் உதவவேணும் !

 

மூத்தோரை வாழ்க்கையிலே

முதலிடத்தில் வைக்கவேணும்

ஆத்திரத்தை அடக்கிவிடின்

அமைந்துவிடும் நல்லவாழ்வு !

 

பொய்யென்னும் வார்த்தையினை

பொசுக்கிவிட்டு வாழவேணும்

மெய்யாக வாழ்ந்துவிடின்

மேதினியே மகிழ்ந்துவிடும் !

 

முன்னோர்கள் மொழிந்தவற்றை

பொன்னாகக் கொள்ளவேணும்

எம்மாலே இயன்றவரை

எல்லோர்க்கும் உதவவேணும் !

 

யார்மனதும் நோகாமல்

நாமிருந்தால் நலன்பயக்கும்

ஊருலகம் பழிப்பவற்றை

ஒதுக்கிவிட்டால் உயர்வுவரும் !

 

அப்பாவை அம்மாவை

அழவிடுதல் முறையல்ல

அவராசி கிடைப்பதுவே

அனைவருக்கும் வாழ்வாகும் !

 

மனம்மகிழ வாழ்வதற்கு

வழிகள்பல இருக்கிறது

தேர்ந்தெடுத்து வாழுங்கள்

தினமுமே மகிழ்ந்திடலாம் !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *