நாகினி

 

நாளும் விடியல் நலமாக்கும் ஆண்டவன்
ஆளும் உலகத்தில் அமைதி கெடுத்திடும்
கோளும் மறையாதக் கோடு!

கோடு கிழித்திங்கு கொள்கை மறக்காமல்
ஏடு படிப்பித்த ஏற்றமிகு போதனையை
நாடு எனவோதும் நாடு!

நாடு ஒருமை நலம்பெற வேண்டியே
காடு மலைச்சுற்றி கற்பித்தோர் பட்டபெரும்
பாடு தனையுணர்ந்துப் பார்!

பார்முழுதும் போற்றிடும் பண்பான தேசத்தில்
ஊர்முழுக்க சாதியும் ஊனமிகு கோள்களும்
ஆர்ப்பரிக்கும் தீங்கை அகற்று!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *