மீ.விசுவநாதன்

 
கோடிகோடி பணத்தாலே – வீடு
கோவிலாகக் கட்டி விட்டேன்
நாடியோடி வருவதற்கு – என்
நட்பின்கை நீட்டி வைத்தேன்

அள்ளியள்ளித் தருவதற்கு – பெரும்
அன்னதானக் கூடம் செய்தேன்
வெள்ளிநிலா வெளிச்சத்தில் – கவி
விளக்கங்கள் அறிந்து கொண்டேன்

சித்திரங்கள் பலசெய்து – சுவர்
சிரித்திடவே அழகு பார்த்தேன்
மத்தளங்கள் மேளத்துடன் – இசை
மன்மதனைப் பாட ழைத்தேன்

சோலையென மரஞ்செடியால் – வீடு
சுந்தரமாய் ஆக்கி வைத்து
மாலையிள வெயிலிலே – எனை
மறந்துதினம் கவிதை செய்தேன்

ஓதுகின்ற வேதத்தால் – என்
உள்ளொளியைக் கூட்டி வைக்க
போதுமான காலத்தை – என்
புத்தியிலே ஏற்றி வைத்தேன்

இத்தனையும் செய்தவுடன் – ஒரு
இறுமாப்பு உள்ளே வந்து
மொத்தமாக ஆணவமாய் – என்
முகத்திரையைக் கிழிக்க திர்ந்தேன்.

(20.04.2017 09.23 am)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *