உயிர் காக்கும் மருந்துகள்..
பவள சங்கரி
நடுவண் அரசு உயிர்காக்கும் மருந்துகள் அனைத்தும் குறைந்த விலையில் மக்களை சென்றடையவேண்டும் என்ற நன்முயற்சியை ஏற்படுத்தியுள்ளது. இதயப் பிரச்சனைக்குரிய நிவாரணியான stent ஸ்டெண்ட், 29,600 ரூயாய் விலையில் மக்களுக்குக் கிடைக்கும் வகையில் செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. அபோட் மருந்து கம்பெனி தன்னுடைய இரண்டு உயர் மதிப்புடைய ஸ்டெண்ட் வகைகளை இதிலிருந்து விலக்கு அளிக்க கோரியுள்ளது. இதே நிறுவனம், தங்களுடைய காலாவதியான மருந்துகளைத் திரும்பப்பெற மறுத்துவருகின்றன. இந்த பன்னாட்டு நிறுவனம் நமது நாட்டில் விற்பனை செய்துகொண்டு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றுக்கொண்டு அரசின் நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைக்காமல் இருப்பது வருந்தத்தக்கது. 2 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த ஸ்டெண்ட் நமது பிரதமரின் முயற்சியால் ஏழைகளும் பயன்படும் வகையில் ரூ 29,600 க்கு விலை நிர்ணயித்துள்ளனர். இந்த விலையே இவர்களின் லாபத்தையும் கணக்கில்கொண்டே நிர்ணயித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.