எழுத ஆசை

பெருவை பார்த்தசாரதி

 

மையும் எழுதுகோலும்

மணமக்கள் ஆனாலன்புடனே

இரண்டும் இணைந்தால்தான்

எழுத்தென்பது பிறக்கும்

 

மனம் போன போக்கினிலே

மணிக்கணக்கில் எழுதாமல்

புவிக்குதவும் புதியசெய்திகளை

புத்திகொண்டு நானெழுதவேண்டும்

 

எப்படியும் எழுதுவேன்

என்பதை விடுத்து

இப்படியும் எழுதலாமெனஒரு

குறிக்கோளுடன் நானெழுதவேண்டும்

 

இளைஞருக்கு வழிகாட்ட

எழுச்சிமிகு சிந்தனையோடு

அவசரத்தில் எழுதாமல்நான்

அவனிக்குதவுமாறு நானெழுதவேண்டும்

 

இலக்கியங்கள் எடுத்துரைக்கும்

இலட்சிய மேற்கோள்காட்டி

இனியசெய்யுளாக எழுத்திலிட்டு

இராப்பகலாய் நானெழுதவேண்டும்

 

எழுத்திலே நான்பெரியவனேன

இறுமாப்பு இடம்பெறாமல்

எளியதமிழ் உரையுடனே

என்றும் நானெழுதவேண்டும்

 

அவனியில் புதையுண்ட

அருந்தமிழ்க் காப்பியத்தை

அகழ்வாராய்ந்து அர்த்தங்கள்பல

அரிதாய்க் கொண்டுவரவேணும்

 

வாய்மையும் நேர்மையும்

தூய்மையாய் இடம்பெற

எழுதுகோலும் மையுமிணைந்து

நல்லெண்ணம்தனை நானெழுதவேண்டும்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.