பாபாவை நினைப்பாய் மனமே!
-பி.எஸ்.டி. பிரசாத்
மனமே! மனமே! மனமே!
பாபாவை நினைப்பாய்!
தினமே! தினமே! தினமே!
நினைத்தாலே சுகமே!
சாயினாதன் சன்னதி!
வேண்டி நின்றால் நிம்மதி! (மனமே!)
ஆண்டி என்று சொன்னவர்க்கே அரசனானவன்! – தனை
அண்டி வந்த அடியார்க்குத் தெய்வமானவன்!
கன்றைக் காக்கும் தாய்ப்பசு
போலக் காக்கும் ஈசனாம்!
கோடி கோடி பக்தரின்
அன்பைக் கொண்ட நேசனாம்! (சாயினாதன் சன்னதி!)
சீரடியில் அடிவைத்தால் கோடி புண்ணியம்! – பாபா
ஈரடியைப் பணிந்தோர்க்கு ஏது சஞ்சலம்?
பாபா பாதம் சரணமே!
சேர்ந்தால் இல்லை துன்பமே!
வெற்றி மேலும் மேலுமே!
சேரும் நாளும் நாளுமே! (சாயினாதன் சன்னதி!)