Author: இராஜ புஷ்பம்

  • விமர்சனமா விருட்சமா நீ

    செல்வி. அ. இராஜபுஷ்பம்

    நதியின் நடுவில்
    நீந்தினாலும் குற்றம்
    மூழ்கினாலும் குற்றம்
    என விமர்சிக்கும்
    உலகிற்கு பயந்து
    மூழ்கிடாதே நீந்திடு

    விமர்சனங்களால் வீழ்வதைவிட
    வீழ்வாய் என்றவர்களின்முன்
    நீ யாரென்று
    உலகிற்கு காட்டிடு
    விருட்சமாய் உதித்திடு
    நிமிர்ந்தே வென்றிடு…….

    Share