திருப்பாவை – 5 | மாயனை மன்னு

திருப்பாவை – 5
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசுஆகும் செப்பேலோர் எம்பாவாய்.
திருப்பாவை – 5 | மாயனை மன்னு | லட்சுமிப்பிரியா குரலில்
ஆயர் குலத்தினில் தோன்றிய எனச் சொல்லாமல், தோன்றும் அணிவிளக்கை என ஆண்டாள் ஏன் சொன்னார்? கண்ணன் மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டே இருப்பான் என்பதன்றோ, இதன் உட்பொருள். தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, நம் செய்பிழை யாவும் தீயினில் தூசாகும் என அறுதியிட்டுக் கூறுகிறார் ஆண்டாள். திருப்பாவையின் ஐந்தாவது பாடல் ‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை’, செல்வி லட்சுமிப்பிரியாவின் குரலில் கேளுங்கள்.
திருப்பாவை – 5 | மாயனை மன்னு | ஸ்வேதா குரலில்
ஒரு தீபத்திலிருந்து ஏராளமான தீபங்களை ஏற்றுவது போல், ஆண்டாளின் பாடல்களைப் பாடும் ஒவ்வொருவரும் அந்த ஜோதியை முன்னெடுத்துச் செல்கிறார்கள். வண்ண ஒளியை எண்ணங்களில் ஏற்றுகிறார்கள். இதோ செல்வி ஸ்வேதா, ஆண்டாளின் கைவிளக்கை ஏந்திப் பாடுகிறார். ‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை…’
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
ஓவியத்திற்கு நன்றி: SIRI DRAWS