திருப்பாவை – 6 | புள்ளும் சிலம்பினகாண்

0
Andal rangamannar

திருப்பாவை 6

புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

திருப்பாவை – 6 | புள்ளும் சிலம்பினகாண் | ஸ்வேதா குரலில்

மார்கழியின் குளிரை நாம் அறிவோம். திருப்பாவையில் ஆண்டாள், இரண்டு இடங்களில் குளிர் பற்றிப் பேசுகிறார். 6ஆவது பாடலில் அரியென்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் என்கிறார். 27ஆவது பாடலில் கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் என்கிறார். இரண்டுமே உள்ளம் குளிர்தலைப் பற்றியது. இதோ, செல்வி ஸ்வேதாவின் குரலில் திருப்பாவையின் 6ஆவது பாடல் புள்ளும் சிலம்பினகாண். கேட்டு உள்ளம் குளிருங்கள், இணைந்து பாடுங்கள்.

திருப்பாவை – 6 | புள்ளும் சிலம்பினகாண் | சேகர் முத்துராமன் குரலில்

சேகர் முத்துராமன் குரலில் திருப்பாவையின் 6ஆவது பாடல் புள்ளும் சிலம்பினகாண். ராகம் – சங்கராபரணம். வாயினால் பாடி, மனத்தினால் சிந்தியுங்கள்.

 

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.